News Update :
Powered by Blogger.

ஷேவாக் நீக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா பயம் இல்லாமல் ஆடியது: கவாஸ்கர் கருத்து

Penulis : karthik on Friday 28 September 2012 | 23:26

Friday 28 September 2012

ஷேவாக் நீக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா பயம் இல்லாமல் ஆடியது: கவாஸ்கர் கருத்து
ஷேவாக் நீக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா பயம் இல்லாமல் ஆடியது: கவாஸ்கர் கருத்து

கொழும்பு, செப்.29-

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஷேவாக் நீக்கப்பட்டார். டோனியின் இந்த முடிவை முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

காம்பீர் சிறந்த தொடக்க வீரர். அவரும், ஷேவாக்கும் இணைந்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி வருவது அனைவருக்கும் தெரியும். இந்த இருவரையும் பிரிப்பது என்ற முடிவு சரியானது அல்ல.

ஷேவாக் எதிர் அணிக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடிய அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். 6 அல்லது 7 ஓவர் அவர் களத்தில் இருந்தாலே ஆட்டத்தின் போக்கு மாறி விடும். ஷேவாக் ஒரு ஓவருக்கு 6 ரன்னுக்கு மேல் எடுக்க கூடியவர். அவர் இல்லாததால் ஆஸ்திரேலியா எந்தவித பயமும் இல்லாமல் விளையாடி எளிதில் வெற்றி பெற்றது.

2011 உலக கோப்பைக்கு பிறகு பியூஸ்சாவ்லா இந்திய அணியில் எந்தவித முத்திரையும் பதிக்கவில்லை. இதனால் அவர் எப்படி தேர்வு பெற்றார் என்பதே ஆச்சரியமாக உள்ளது. அவர் இடத்தில் அமித்மிஸ்ரா அல்லது ராகுல்சர்மாவை தேர்வு செய்து இருக்கலாம்.

இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
comments | | Read More...

கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்க வந்த 3 ஜப்பானியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்க வந்த 3 ஜப்பானியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்க வந்த 3 ஜப்பானியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

சென்னை, செப்.29-

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு பெண் உள்பட 3 பேர் சென்னை விமான நிலையத்திற்கு கடந்த புதன்கிழமை இரவு கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் வந்தனர்.

நாகாய் ஷின்சுகே (45), உன்டோஸ் யோகோ (49), வடரிடா மாகுலா (61) என்ற அந்த 3 பேரும் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க இடிந்தகரைக்கு செல்வதற்காக வந்துள்ளதாக மத்திய உளவுத்துறை மூலம் விமான நிலைய குடியுரிமை பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து அந்த 3 பேரிடமும் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் வந்த ஒரு மணி நேரத்திற்குள் இரவு 7 மணி அளவில் வேறு விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஏற்கனவே ஜெர்மன் நாட்டை சேர்ந்த சொன்டெக் ரெய்னர் ஹெர்மான் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் தொடர்புள்ளவராக கண்டுபிடிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

comments | | Read More...

புதுவையில் பலத்த மழை: மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன


புதுவையில் பலத்த மழை: மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன புதுவையில் பலத்த மழை: மரங்கள் மின் கம்பங்கள் சாய்ந்தன

புதுச்சேரி, செப்.28-

புதுவை மாநிலத்தில் நேற்று காலை லேசாக வெயில் அடித்தது. பின்னர் மாலையில் வானம் மேகம் மூட்டமாக காணப்பட்டது. அதைத்தொடர்டந்து மாலை 4 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் இரவு 7 மணி வரை இந்த மழை நீடித்தது.

பாகூரில் நேற்று மாலை 4.30 மணியில் இருந்து இரவு 7 மணி வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்தது. பலத்த காற்று வீசியதால் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இந்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது.  இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

வில்லியனூரில் திடீரென்று நேற்று மாலை 3 மணியில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. சுமார் 6 மணி வரை இந்த மழை நீடித்தது. அப்போது மின்னலுடன் பயங்கர இடி இடித்தது. இதனால் பல இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் கீழே விழுந்து விட்டன.

இதே போல் ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம், மங்கலம், அரியூர் உள்பட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் புகுந்தது. மேலும் குடிசைகளில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள். பலத்த காற்று வீசியதால் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டு இருந்தது.

நெட்டப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. கரிக்கலாம்பாக்கம் மெயின் ரோட்டில் ஒரு மரம் ரோட்டின் நடுவே விழுந்தது. அப்போது அந்த மரத்தின் கீழ் மழைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் மீது அந்த மரம் விழுந்ததால் அந்த மோட்டார் சைக்கிள் பலத்த சேதம் அடைந்தது.
ரோட்டில் நடுவே மரம் விழுந்ததால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அப்பகுதி மக்கள் ரோட்டில் நடுவே விழுந்து இருந்த அந்த மரத்தை அப்புறப்படுத்தினார்கள். அதன்பிறகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

மேலும் கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி எதிரே மின்சார கம்பம் ஒன்று அடியோடு சரிந்து ரோட்டில் விழுந்தது. அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உடனடியாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.
திருக்கனூர், திருபுவனை திருக்கனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலையில் மழை பெய்தது. ரோடுகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்தது.

இதே போல் திருபுவனையில் நேற்று மாலை திடீரென்று மழை பெய்தது. மேலும் திருவாண்டார் கோவில், மதகடிப்பட்டு, சன்னியாசிகுப்பம், நல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த மழை பெய்தது.

comments | | Read More...

கோவையில் கல்லூரி பேராசிரியர் தூக்கு போட்டு சாவு



கோவையில் கல்லூரி பேராசிரியர் தூக்கு போட்டு சாவு கோவையில் கல்லூரி பேராசிரியர் தூக்கு போட்டு சாவு

குனியமுத்தூர், செப். 28-

குடி குடியை கெடுக்கும் என்பார்கள். அது குனியமுத்தூரில் நடந்த கல்லூரி பேராசிரியரின் தற்கொலையால் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. குனியமுத்தூர் சொர்ணாம்பிகா கார்டன் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 38). இவரது மனைவி சற்குணா (34). 2 பேரும் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினர். இவர்களுக்கு தர்ஷினி (6) என்ற மகள் உள்ளார். செல்லத்துரை குடிப்பழக்கம் உடையவர். கல்லூரிக�¯ �கு செல்லும்போது மது குடிப்பதில்லை. ஆனால் வீட்டில் இருக்கும்போது மது குடிப்பது வழக்கம். ஒரு சில நாட்களில் அதிகமாகவும் மது குடிப்பாராம். மது குடித்தால் வீட்டில் தனது அறையில் படுத்துக் கொள்வார்.

கடந்த சில நாட்களாக செல்லத்துரை கல்லூரிக்கு செல்லவில்லை. அந்த நாட்களில் அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இன்று அவரது மகள் தர்ஷினிக்கு  பிறந்த நாளாகும். இதற்காக தர்ஷினிக்கு ஆடை எடுக்க சற்குணா முடிவு செய்தார்.

நேற்று காலை செல்லத்துரை வீட்டில் இருந்தார். சற்குணா கல்லூரிக்கு சென்றார். கல்லூரி முடிந்ததும் தனது மகளுடன் கடைகளுக்கு சென்று பிறந்த நாள் ஆடை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். இரவு 9 மணி அளவில் அவர் அங்கு வந்தார். செல்லத்துரையின் அறை கதவு சாத்தி இருந்தது. எப்போதும் அந்த அறைக்கதவை அப்படித்தான் போட்டிருப்பார் என்பதால் சற்குணா பெரிதுபடுத்தவில்லை. ஆனால் வெகு நேரமாà �• எந்த சத்தமும் இல்லாததால் கூப்பிட்டு பார்த்தார். அப்போது எந்த பதிலும் செல்லத்துரையிடம் இருந்து வரவில்லை.

எனவே சந்தேகம் அடைந்த சற்குணா அந்த அறையின் கதவை திறந்து பார்த்தார். அப்போது அங்கு அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மின் விசிறியில் செல்லத்துரை தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு சத்தம் போட்டார். இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர்.

இது தொடர்பாக குனியமுத்தூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.

மின் விசிறியில் சேலையால் செல்லத்துரை தூக்கு போட்டுள்ளார். அவரது உடல் பாரம் தாங்காமல் சேலை அறுந்து கீழே செல்லத்துரை விழுந்து கிடந்தார். அவரது உடல் வீங்கி இருந்தது. எனவே அவர் நேற்று காலையே தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குடிப்பழக்கத்தை தவிர செல்லத்துரைக்கு வேறு எந்த பிரச்சினையும் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் கல்லூரி பேராசிரியரான செல்லத்துரையை தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு அவருக்கு என்ன மனக்கஷ்டம் நேர்ந்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

comments | | Read More...

சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசளிப்பு விழா: விக்கிரமன்,பொன்னீலன் ரூ.2 1/2 லட்சம் பரிசு பெற்றனர்


சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசளிப்பு விழா: விக்கிரமன்,பொன்னீலன் ரூ.2 1/2 லட்சம் பரிசு பெற்றனர் சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசளிப்பு விழா: விக்கிரமன்,பொன்னீலன் ரூ.2 1/2 லட்சம் பரிசு பெற்றனர்

சென்னை, செப்.29-

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசளிப்பு விழாவில், தினத்தந்தி சார்பில், ரூ.2 1/2 லட்சம் இலக்கியப்பரிசு விக்கிரமன், பொன்னீலன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கல்யாணி மதிவாணன் இந்த பரிசுகளை வழங்கினார். தினத்தந்தி நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவாக, ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளையொட்டி, இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது.

இதன்படி, மூத்த தமிழறிஞருக்கு ரூ.1 1/2 லட்சமும், சிறந்த இலக்கிய நூலுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான இலக்கியப் பரிசளிப்பு விழாவும், சி.பா.ஆதித்தனாரின் 108-வது பிறந்தநாள் விழாவும், தினத்தந்தி சார்பில் நேற்று மாலை 6 மணிக்கு சென்னை, ராணி சீதை மன்றத்தில் நடந்தது.

விழா மேடையில் சி.பா.ஆதித்தனார் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழாவுக்கு, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கல்யாணி மதிவாணன் தலைமை தாங்கினார்.

மாலைமலர் நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் வரவேற்று பேசினார். அதைத் தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கல்யாணி மதிவாணன் தலைமை உரையாற்றினார்.

பின்னர், இந்த ஆண்டுக்கான சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது விக்கிரமனுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கல்யாணி மதிவாணன் பொன்னாடை அணிவித்து ரூ.1 1/2 லட்சத்துக்கான காசோலையையும், விருதையும் வழங்கினார்.

இந்த ஆண்டுக்கான சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசை, எழுத்தாளர் பொன்னீலன் பெற்றார். பொன்னீலனின் மறுபக்கம் என்ற நூலுக்கு இந்த பரிசு கிடைத்தது. எழுத்தாளர் பொன்னீலனுக்கு பொன்னாடை அணிவித்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும், விருதையும் துணை வேந்தர் டாக்டர் கல்யாணி மதிவாணன் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து விழாவுக்கு தலைமை தாங்கிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கல்யாணி மதிவாணனுக்கு மாலைமலர் நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

பின்னர் விக்கிரமன், பொன்னீலன் ஆகியோர் ஏற்புரையாற்றினார்கள். விழாவுக்கு வந்திருந்த அனைவரையும், மாலைமலர் நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் வரவேற்று பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இன்றைய விழாவுக்குத் தலைமை தாங்கும் டாக்டர் கல்யாணி மதிவாணன், புகழ்மிக்க பாரம்பரியத்தில் இருந்து வந்தவர். இவருடைய தந்தையார் குத்தாலிங்கம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆவார்.

தந்தை துணைவேந்தராக இருந்த அதே பல்கலைக்கழகத்தில், அவருடைய புதல்வியாரும் துணை வேந்தராகப் பதவி வகிப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களாக இதுவரை 15 பேர் பதவி வகித்துள்ளனர். இவர்களில் முதலாவது பெண் துணைவேந்தர் என்ற பெருமைக்கு உரியவர் டாக்டர் கல்யாணி மதிவாணன்.

சிறந்த துணை வேந்தர் என்ற விருதை இவருக்கு செஞ்சிலுவை சங்கமும், 2012-ம் ஆண்டின் சிறந்த பெண்மணி என்ற விருதை சர்வதேச பெண்கள் சங்கமும் வழங்கியுள்ளன. மற்றும் ஏராளமான விருதுகளும், பரிசுகளும் பெற்றவர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பெரும் புகழோடு விளங்கும் அவர், நம் விழாவுக்குத் தலைமை தாங்கி, விருதுகளை வழங்க வருகை தந்திருப்பது நமக்கெல்லாம் பெருமை அளிப்பதாகும்.

இந்த ஆண்டு மூத்த தமிழறிஞர் விருதைப் பெறுகிறவர் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியருமான விக்கிரமன். 1961-ம் ஆண்டில் அமுதசுரபியின் ஆசிரியர் பொறுப்பை ஏற்ற அவர் தொடர்ந்து 52 ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அப்போது இவர் உருவாக்கிய எழுத்தாளர்கள் பலர். நாவல், சிறுகதை, கட்டுரை, பயண இலக்கியம், இலக்கிய ஆராய்ச்சி இப்படி பல்வேறு துறைகளில் 64 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

அவற்றில் 37 புத்தகங்கள், சரித்திர நாவல்கள். அவற்றில் சோழ இளவரசன் கனவு என்ற நாவல், தமிழக அரசின் பரிசு பெற்றது. தமிழக அரசின் கலைமாமணி மற்றும் தஞ்சை பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதுகளைப் பெற்றவர்.

அவருக்கு மூத்த தமிழறிஞர் விருதை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆண்டு இலக்கியப் பரிசைப் பெறும் பொன்னீலன், ஏற்கனவே சிறந்த நாவல்களையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதி புகழ் பெற்றவர்.

சாகித்ய அகாடமி பரிசைப் பெற்றவர். இப்போது நம் பரிசைப் பெறும் மறுபக்கம் என்ற அவரது நாவல், ஒரு அபூர்வமான கலைப்படைப்பு. இந்த நாவலை உருவாக்க அவர் பல ஆண்டுகள் உழைத்திருக்கிறார். பல இடங்களுக்குச் சென்று ஆய்வுகள் நடத்தி இருக்கிறார்.

அறிஞர் பெருமக்களுடன் விவாதம் செய்து இருக்கிறார். அதனால்தான் இந்த நாவல் உலகத் தரத்துக்கு உயர்ந்து நிற்கிறது. அவருக்கு, இலக்கியப் பரிசு ரூ.1 லட்சத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் பேசினார்.

 விழா நிகழ்ச்சிகளை, தினத்தந்தியின் பொது மேலாளர் டி.ஆர்.பீம்சிங் தொகுத்து வழங்கினார். விழா முடிவில், தினத்தந்தியின் பொது மேலாளர் (நிர்வாகம்) ஆர்.சந்திரன் நன்றி கூறினார்.

விழாவில், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம.கோபாலன், கவிஞர் வைரமுத்து, பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் வானதி சீனிவாசன், ஹெலன் டேவிட்சன் எம்.பி., காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் மயிலை பெரியசாமி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சா.கணேசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், பொருளாளர் திருப்�® �ூர் அல்தாப், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் பி.எல்.தேனப்பன், தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் நற்பணி மன்ற மாநில தலைவர் சவுந்தர் முருகன், பொதுச் செயலாளர் கடலூர் ஜெயச்சந்திரன், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், எம்.ஜெயபால்.

தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவை தலைவர் டி.ராஜ்குமார், காங்கிரஸ் பிரமுகர் இதயதுல்லா, மூத்த வக்கீல் காந்தி, சிறுபான்மை சமூக புரட்சி இயக்க நிறுவன தலைவர் கா.லியாகத் அலிகான், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், எவர்வின் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் புருஷோத்தமன், தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் நிறுவன தலைவர் ஆர்.எஸ்.முத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிலைய செயலாளர் வக்கீல் மூ.பழனிமுத்து, தமிழ்நாடு சி.பா.ஆதித்தனார் சமூக நல சேவை இயக்க தலைவர் பி.சி.பச்சைக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

comments | | Read More...

பாகிஸ்தானில் பலத்த மழைக்கு 400 பேர் பலி: 45 லட்சம் பேர் பாதிப்பு



பாகிஸ்தானில் பலத்த மழைக்கு 400 பேர் பலி: 45 லட்சம் பேர் பாதிப்பு பாகிஸ்தானில் பலத்த மழைக்கு 400 பேர் பலி: 45 லட்சம் பேர் பாதிப்பு

கராச்சி, செப். 29-

பாகிஸ்தானில் கடந்த 2 வாரங்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. பலுசிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்களில் இடைவிடாது மழை பெய்கிறது. இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழைக்கு இதுவரை 400 பேர் பலியாகி உள்ளனர். 45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

2 லட்சம் பேர் முற்றிலும் வீடுகளை இழந்து உள்ளனர். அவர்கள் ஆங்காங்கே அரசு அமைத்துள்ள முகாம்களில் தங்க வைக்கபட்டு உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலைமை மோசமாகி வருகிறது.

2010-ம் ஆண்டு பெய்த பலத்த மழைக்கு 1800 பேர் பலியானார்கள். அதே போன்ற நிலை இப்போதும் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மழையால் ஏற்பட்ட பாதிப்புக்கு சர்வதேச நாடுகள் பல உதவ முன் வந்துள்ளன. ஆனால் பாகிஸ்தான் அதை ஏற்க மறுத்து விட்டது.

comments | | Read More...

அமெரிக்க தூதரகத்தை தாக்கிய வழக்கு: கைது செய்யப்பட்ட 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன்



அமெரிக்க தூதரகத்தை தாக்கிய வழக்கு: கைது செய்யப்பட்ட 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன் அமெரிக்க தூதரகத்தை தாக்கிய வழக்கு: கைது செய்யப்பட்ட 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை, செப்.29-

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட படத்தில், நபிகள் நாயகத்தை அவமதிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதை கண்டித்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பு கடந்த 14-ந் தேதி சிலர் போராட்டம் நடத்தினர்.

அப்போது, அமெரிக்க தூதரகத்தின் கண்ணாடிகள், கேமராக்கள் அடித்து உடைக்கப்பட்டது. இதுகுறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 15-ந் தேதி பலரை கைது செய்தனர்.

200-க்கும் மேற்பட்டவர்களை தேடி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, மேற்கு தாம்பரத்தை சேர்ந்த அப்துல்ரஹீம், அன்சாரி, யாக்கூப், ரஹமத்துல்லா, சேக்மொய்தீன், ஜமால் ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பொன்.கலையரசன்,மனுதாரர்கள் அப்துல்ரஹீம் உட்பட 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன். இந்த 6 பேரும் மதுரையில் தங்கியிருந்து, அங்குள் செசன்சு கோர்ட்டில் 10 நாட்களுக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என்று உத்தரவிட்டார்.

comments | | Read More...

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.36 லட்சம் மோசடி ஒருவர் கைது


ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.36 லட்சம் மோசடி ஒருவர் கைது ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.36 லட்சம் மோசடி ஒருவர் கைது

காஞ்சீபுரம், செப்.29-
 ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.   வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த இலுப்பை தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 47).  இவர் அரக்கோணம் அம்மனூர் டெலிபோன் எக்சேஞ்சில் டெலிபோன் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை சேர்ந்த நெப்�® �ோலியன் என்பவரை அணுகி இந்திய ரெயில்வே துறையில் டீசல் என்ஜின் டிரைவர் பதவி மற்றும் கேட்மேன் பதவி வாங்கி தருவதாக கூறினார்.  மேலும் என்ஜின் டிரைவர் வேலைக்கு ரூ.6 லட்சமும், கேட்மேன் வேலைக்கு ரூ.4 லட்சமும் பணம் கொடுக்க வேண்டும் என்று குமரேசன் நிபந்தனை விதித்தார்.  இதை நம்பிய நெப்போலியன், அவரது மனைவி உள்பட 4 பேர் என்ஜின் டிரைவர் பதவிக்காக தலா ரூ.6 லட்சம் வீதம் ரூ.24 லட்சமும், க ேட்மேன் பதவிக்காக வேறு 3 பேர்கள் தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.12 லட்சமும் என்று மொத்தம் ரூ.36 லட்சத்தை குமரேசனிடம் கொடுத்தனர்.  பணத்தை பெற்றுக் கொண்ட அவர் பணி உத்தரவுகளை வழங்கினார். அதன் பின்னர் அந்த பணி உத்தரவு போலியானது என்பது தெரிய வந்தது.   இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மனோகரனிடம் புகார் செய்தனர்.  அவரது உத்தரவின்பேரில், மாவட்ட குà ��்றப்பிரிவு துணை சூப்பிரண்டு ரமேஷ்பாபு மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் என்.ராமதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் குமரேசன் ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் பணத்தை பலரிடம் பெற்று, அவர்களை மோசடி செய்து ஏமாற்றியது தெரியவந்தது.  இதையடுத்து குமரேசனை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து செங்கல்பட்டு குற்றவியலà � கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

comments | | Read More...

தீவிரவாதிகள் பிடியில் இருந்த துறைமுக நகரை கென்யா ராணுவம் மீட்டது

தீவிரவாதிகள் பிடியில் இருந்த துறைமுக நகரை கென்யா ராணுவம் மீட்டது தீவிரவாதிகள் பிடியில் இருந்த துறைமுக நகரை கென்யா ராணுவம் மீட்டது

நைரேபி, செப்.29-

சோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் அல் ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு செயல்படுகிறது. இவர்கள் அங்குள்ள கிஸ்மாயு என்ற துறைமுக நகரை பிடித்து வைத்திருந்தனர்.

இந்த நகரை கென்யா மற்றும் சோமாலியா ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தி மீட்டார்கள். இதை கென்யா ராணுவ செய்தி தொடர்பாளர் கிரூஸ் ஒகுனா நேற்று அதிகாரபூர்வமாக தெரிவித்தார். இதுவே தீவிரவாதிகளின் கடைசி புகலிடமாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

comments | | Read More...

அமெரிக்க அதிபர் தேர்தல்: கருத்து கணிப்பில் ஒபாமா தொடர்ந்து முன்னிலை

அமெரிக்க அதிபர் தேர்தல்: கருத்து கணிப்பில் ஒபாமா தொடர்ந்து முன்னிலை அமெரிக்க அதிபர் தேர்தல்: கருத்து கணிப்பில் ஒபாமா தொடர்ந்து முன்னிலை

வாஷிங்டன்,செப்.29-


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நவம்பர் 6-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தற்போதைய ஜனாதிபதி ஒபாமாவும், எதிர்க்கட்சி சார்பில் மிட் ரோம்னியும் இருக்கிறார்கள். இதுவரையில் நடைபெற்ற முந்தைய கருத்து கணிப்புகளில் ஒபாமாவுக்கு கூடுதல் ஆதரவு இருந்தது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 40 நாட்களே இருக்கின்றன.

இந்நிலையில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்று இணையதளம் மூலம் புதிய கருத்து கணிப்பை நடத்தி அதன் முடிவை நேற்று வெளியிட்டது. மொத்தம் 1,194 பேர் கலந்து கொண்டு ஓட்டளித்தனர். அதில் ஒபாமாவுக்கு 49 சதவீதம் ஓட்டுகளும், மிட் ரோம்னிக்கு 42 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன.  

comments | | Read More...

நிதின் கட்காரி தொடர்ந்து 2 வது முறையாக பாரதீய ஜனதா தலைவர் ஆகிறார்

நிதின் கட்காரி தொடர்ந்து 2 வது முறையாக பாரதீய ஜனதா தலைவர் ஆகிறார் நிதின் கட்காரி தொடர்ந்து 2 வது முறையாக பாரதீய ஜனதா தலைவர் ஆகிறார்

சூரஜ்கண்ட்,செப்.29-


கடந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து இரண்டு முறையாக தோல்வி கண்டது. அதைத் தொடர்ந்து மராட்டிய மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவராக இருந்து வந்த நிதின் கட்காரி, ஆர்.ஆர்.எஸ். அமைப்பின் தீவிர ஆதரவுடன் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு வந்தார்.

அவரது தலைமையில் கட்சி கோவா, பீகார், பஞ்சாப் மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பா.ஜனதா வெற்றி கண்டது. அதே நேரத்தில் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தது. உத்தரகாண்ட் மாநிலத்திலும் ஆட்சியைப் பறிகொடுத்தது. கர்நாடகத்தில் பாரதீய ஜனதா கட்சிக்குள் உட்பூசல்கள் தொடர்கின்றன.

இந்நிலையில் நிதின் கட்காரியின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் முடிகிறது. அவரது தலைமையில் கட்சியின் நிலை மேம்பட்டுள்ளதாக கட்சிக்குள் கருத்து நிலவுகிறது. இருப்பினும் அவர் கட்சியில் செய்ய எண்ணியுள்ள பணிகள் இன்னும் முடிவு அடையவில்லை என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது வரவுள்ள குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநில சட்டசபை தேர்தல், பாராளுமன்றத்தேர்தல் ஆகியவற்றை கà ��்சி நிதின் கட்காரி தலைமையில்தான் சந்திக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது.

இந்நிலையில், அரியானா மாநிலம், சூரஜ்கண்டில் கட்சியின் இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் நடந்து வந்தது. நேற்று இந்தக் கூட்டத்தின் முடிவில், ஒருவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக தலைவர் பதவி வகிக்க ஏற்றவகையில் முறைப்படி சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்டத்திருத்த தீர்மானத்தை கட்சியின் முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் கொண்டு வந்தார். அதை மற்றொரு முன்னாள் தலைவர�® �ன வெங்கையா நாயுடு வழிமொழிந்தார். அதைத் தொடர்ந்து சட்டத்திருத்தம் நிறைவேறியது.

இதன்மூலம் நிதின் கட்காரி தொடர்ந்து இரண்டாவது முறையாக கட்சி தலைவர் பதவியை வகிக்க இருந்த தடை அகன்று விட்டது.  

comments | | Read More...

3 மாதத்திற்குள் முதலீட்டாளருக்கு ரூ.24 ஆயிரம் கோடியை திரும்ப வழங்குவோம்: சகாரா உறுதி

3 மாதத்திற்குள் முதலீட்டாளருக்கு ரூ.24 ஆயிரம் கோடியை திரும்ப வழங்குவோம்: சகாரா உறுதி 3 மாதத்திற்குள் முதலீட்டாளருக்கு ரூ.24 ஆயிரம் கோடியை திரும்ப வழங்குவோம்: சகாரா உறுதி

புதுடெல்லி,செப்.29-


சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேசன், சகாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட ரூ.24 ஆயிரம் கோடியை, முதலீட்டாளருக்கு திரும்ப வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சகாரா நிறுவனம் 3 மாதத்திற்குள் தனது முதலீட்டாளர்களுக்கு ரூ.24 ஆயிரம் கோடியை திரும்ப வழங்க வேண்டும் என் றும் இதனை பார்வையிட ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.அகர்வால் என்பவரையும் நியமித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சகாரா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியன், நாங்கள் முதலீட்டாளருக்கு உரிய காலத்தில் பணத்தை திரும்ப வழங்குவோம். இதில் பின்வாங்கும் கேள்விக்கே இடமில்லை' என்று கூறினார். பின்னர் வழக்கு விசாரணையை அக்டோபர் 19&ந் தேதிக்கு நீதிபத�® ¿ தள்ளி வைத்தார்.  

comments | | Read More...

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது

புதுடெல்லி, செப்.29-


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இறங்குமுகமாக உள்ளது.

அதைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைகிறது. இதற்கான அறிவிப்பை ஓரிரு நாட்களில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

comments | | Read More...

கோவையில் 3 பெண்களிடம் நகை பறிப்பு: சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநில வாலிபர் 2 பேர் சிக்கினர்


கோவையில் 3 பெண்களிடம் நகை பறிப்பு: சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநில வாலிபர் 2 பேர் சிக்கினர் கோவையில் 3 பெண்களிடம் நகை பறிப்பு: சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநில வாலிபர் 2 பேர் சிக்கினர்

கோவை, செப். 28-
 கோவை மாநகரம் முழுவதையும் நேற்று ஒரு சிவப்பு நிற மோட்டார் சைக்கிள் பரபரப்பாக்கியது. காரணம் அந்த சிறப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம மனிதர்கள் பீளமேடு பகுதியில் 3 பெண்களிடம் 18 பவுன் நகை பறித்து சென்றனர். மர்ம மனிதர்கள் சிவப்பு நிற டீசர்ட் அணிந்திருந்ததாகவும் காதில் கடுக்கன் அணிந்திருந்ததாகவும் நீளமான தலைமுடி வைத்திருந்ததாகவும் நகையை பà ��ிகொடுத்த பெண்கள் கூறினார்கள். இதைத் தொடர்ந்து மாநகரம் முழுவதும் போலீசாரை கமிஷனர் விஸ்வநாதன் உஷார்படுத்தினார். அதன்படி துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில் போலீசார் நகை பறித்து சென்ற மர்ம மனிதர்கள் 2 பேரையும் பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினர். சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த அனைவரையும் தடுத்து நிறுத்தி அதிரடி விசாரணை நடத்தினார்கள். ஆனால் நேற்று �® �ரவு வரை கொள்ளையர்கள் போலீஸ் பிடியில் சிக்கவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் 2 பேர் சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த மர்ம மனிதர்கள் நிற்காமல் சைக்கிளில் தப்பினர். இதைத் தொடர்ந்து சுற்று வட்டார பகுதியில் நின்ற போலீசார் அனைவரும் உஷார்படுத்தப்பட்டனர். இந்த நேரத்தில் மோ�® �்டார் சைக்கிளில் தப்பிய 2 மர்ம மனிதர்களும் சிங்காநல்லூருக்கு வந்தனர். அங்கு நின்ற போலீசார் அவர்களை மறித்தனர். அப்போதும் அந்த நபர்கள் நிற்காமல் தப்பிச்செல்ல முயன்றனர். அங்கு நின்ற போலீஸ் ஏட்டு அந்த 2 நபர்களையும் பிடிக்க முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிளோடு 2 மர்ம மனிதர்களும் தடுமாறி கீழே விழுந்தனர். அதன் பின்னரும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடினர். அவ ர்களை துரத்திச்சென்று போலீசார் பிடித்தனர். அவர்கள் 2 பேரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சச்சின்குமார் (20), ஜெயராம் (24) என்பது தெரிய வந்தது. இவர்களில் ஒருவன் காதில் கடுக்கன் அணிந்திருந்தான். எனவே பெண்களிடம் நகை பறித்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது 2 பேரும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள லாட்ஜ ில் தங்கி இருப்பதும், நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் என்பதும் தெரியவந்தது. வடமாநிலத்தில் இருண்டு இரண்டிரண்டு பேராக இங்கு வந்து நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஒவ்வொரு நேரமும் வேறு வேறு நபர்கள் இங்கு வந்து மோட்டார் சைக்கிளில் சென்று கைவரிசை காட்டி விட்டு மோட்டார் சைக்கிளை ஏதாவது ஒரு ஸ்டேன்டில் நிறுத்தி விட்டு சொந்த ஊருக்கு செல்வதை வழக்க மாக வைத்துள்ளனர். ஆனால் இந்த முறை 2 பேர் போலீசில் சிக்கிக்கொண்டனர். அவர்களிடம் நேற்று பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது நகை பறித்தை அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும், அதில் ஒரு நகை கவரிங் என்பதால் அந்த நகையை தூக்கி எரிந்துவிட்டோம் என்றும் அவர்கள் கூறியதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் கூறியது உண்மை தானா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை ந�® �ந்து வருகிறது.

comments | | Read More...

முதல் மனைவிக்கு தெரியாமல் 2 திருமணம் செய்தவர் கைது

முதல் மனைவிக்கு தெரியாமல் 2 திருமணம் செய்தவர் கைது முதல் மனைவிக்கு தெரியாமல் 2 திருமணம் செய்தவர் கைது

வில்லிவாக்கம், செப். 28-
 சென்னை அயனாவரம் கோபாலபிள்ளை நகரைச் சேர்ந்தவர் அன்வர்பாஷா (வயது29). இவர் அண்ணா நகரில் ஒரு கால்சென்டரில் வேலை பார்த்து வந்தார். இவர், தன்னுடன் பணிபுரிந்த பீமா(24) என்ற பெண்ணை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் 2010-ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது பெண்ணின் வீட்டார் 10 பவுன் நகையும், பணமும் வரதட்சணையாக கொடுத்தனர். சில மாதங்கள் கழித்à ��ு கூடுதலாக வரதட்சணை கேட்டு, பீமாவை அன்வர் பாஷா கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். ஆனால், இருவரும் முறைப்படி விவாகரத்து செய்து கொள்ளவில்லை.  இந்நிலையில் அயனாவரத்தைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணை அன்வர் பாஷா காதலித்தார். இவரை திருமணம் செய்து கொள்வதற்காக தனது பெயரை மன்மதன் விஜய் என்று மாற்றிக்கொண்டார்.  கடந்த 10-ந்தேத�® ¿ ரம்யாவும், மன்மதன் விஜய் என்ற அன்வர்பாஷாவும் திருப்பதி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த விஷயத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிந்து கொண்ட பீமா, அயனாவரம் போலீசில் புகார் செய்தார்.  தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி ஒதுக்கி வைத்து விட்டு, தனது கணவர் அன்வர்பாஷா இன்னொரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்று தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.    சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். புகார் மனுவில் பீமா குறிப்பிட்டு இருப்பது உண்மைதான் என்று விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அன்வர் பாஷாவை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தார்.

comments | | Read More...

How To Avoid Feeling Shy In Bed?



How To Avoid Feeling Shy In Bed? How To Avoid Feeling Shy In Bed?
How Avoid Feeling Shy In Bed

காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை. என்ன வேண்டுமோ தவறாமல் கேட்டுப் பெற வேண்டும். அந்த நேரத்தில் வெட்கப்பட்டால வேலைக்கு ஆகாது. இது பெண்களுக்கு சில நேரங்களில் புரிவதில்லை. அநியாயத்திற்கு வெட்கப்பட்டு இறுக்கமாக இருப்பார்கள். இதனால் நஷ்டம் அவர்களுக்�® �ுத்தான் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

சரி வெட்கப்படுவதை விட்டுட்டு கொஞ்ச நேரம் இந்தப் பக்கம் வாங்க, வெட்கத்தை ஓரம் கட்டும் வழியைப் பார்ப்போம்.

பொதுவாக படுக்கை அறையில் ஆண்களுக்கு எப்பவுமே வெட்கம் வருவதே இல்லை. அநியாயத்திற்கு சுதந்திரமாக இருப்பார்கள். பல நேரங்களில் ஆண்களின் இந்த திறந்த மனோபாவம்தான் பெண்களை வெட்கப்பட வைக்கும். பல பேர் முதலிரவு என்றாலே ம�¯ �ற்றும் துறந்த இரவு என்று நினைத்து பால் சொம்புடன் வரும் மனைவியை பயமுறுத்துவது போல காட்சி தருவார்கள். அந்த நிமிடமே அந்தப் பெண்ணுக்கு கணவர் மீது ஒருவிதமான பயம் வந்து விடுமாம். எனவே அப்படிப்பட்ட துறவு நிலையை ஆண்கள் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லதாம்.

பெண்களைப் பொறுத்தவரை வெட்கத்தை துறக்க வேண்டும் என்றால் அது ஆண்களின் கையில்தான் உள்ளது. தனது துணை வெட்கப்படாமல் இருகà ��கும் வகையில், இயல்பாக பேசி அவர்களை சகஜ நிலைக்குக் கொண்டு வர வேண்டும். ரிலாக்ஸ்டாக இருக்குமாறு அவர்களை இயல்புப்படுத்த வேண்டும். அதற்கேற்ற வகையில் முரட்டுத்தனமாக செயல்படுவதை விட்டு விட்டு மென்மையாக அணுக வேண்டும்.

நான்தானே உன்னுடன் இருக்கிறேன், என்னை முழுமையாக நம்பலாம் என்று நயமாக பேசி அவர்களை சகஜமாக்க வேண்டும். எடுத்ததுமே செக்ஸ் குறித்துப் பேசாமல் வேறு சில டா பிக்குகளுக்குள் நுழைந்து மெதுவாக செக்ஸ் பக்கம் போக வேண்டும்.

காமம் பாவம் அல்ல, அசிங்கம் அல்ல, அதில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் அறுவறுப்பானது அல்ல, உடலுக்கும், மனதுக்கும் இன்பம் பயக்கக் கூடியதே என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். கிட்டத்தட்ட நீங்கள் ஒரு செக்ஸ் கல்வியாளர் போல மாறி விட வேண்டும் இந்த இடத்தில்.

ஆரம்பத்திலிருந்தே அவரது போக்குக்கு நீங் கள் மாறி அவர் வழியிலேயே போக வேண்டும். அப்போதுதான் உங்களது துணை இயல்பு நிலைக்கு வருவார், உங்களிடம் முழுமையாக சரணடைய முன்வருவார்.

செக்ஸ் விளையாட்டுக்கள் சிலவற்றை சில பெண்கள் விரும்ப மாட்டார்கள். குறிப்பாக ஓரல் செக்ஸில் பல பெண்களுக்கு நாட்டம் இருக்காது. எனவே அதை நீங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. அதேசமயம், அதனால் ஏற்படும் இன்பங�¯ �களை நீங்கள் பக்குவமாக கூறி அதை ஏற்கும் வகையில் செய்வது உங்களது சாமர்த்தியம்.

எதைச் செய்தாலும் உங்களை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு செய்யாதீர்கள். மாறாக, துணையின் விருப்பத்தையும் அறிந்து, அவரது மூடையும் புரிந்து, அவரது சாய்ஸையும் தெரிந்து பின்னர் ஈடுபடும்போது முழுமையான இன்பம் கிடைக்கும்.

எனவே மனைவியின் சேலையைக் கழற்றுவதில் வேகம் காட்டாமல் அவரைச் சுற்றியி ருக்கும் வெட்கம் என்ற வேலியைக் கழற்றுவதில்தான் உங்களது சாமர்த்தியும், சக்ஸஸும் அடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!


comments | | Read More...

விடுதலை புலிகள் மீதான தடை நீட்டிப்பு: தீர்ப்பாயம் முன்பு வைகோ ஆஜர்



விடுதலை புலிகள் மீதான தடை நீட்டிப்பு: தீர்ப்பாயம் முன்பு வைகோ ஆஜர் விடுதலை புலிகள் மீதான தடை நீட்டிப்பு: தீர்ப்பாயம் முன்பு வைகோ ஆஜர்

சென்னை, செப். 28-

இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிக்கப்படுவதை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தீர்ப்பாயத்தில் முறையிட்டார்.

ஆனாலும், விடுலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து வைகோ சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையில் தீர்ப்பாயம் சென்னையில் கூடுவதாகவும், ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் அதில் நேரில் ஆஜராகி தங்கள் ஆட்சேபங்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையில் தீர்ப்பாய கூட்டம் சென்னை எம்.ஆர்.பி.நகரில் இமேஜ் அரங்கத்தில் இன்று தொடங்கியது. இன்று காலை வைகோ நேரில் ஆஜர் ஆனார்.

comments | | Read More...

அரியானா எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


அரியானா எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அரியானா எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, செப். 2-

அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அம்மாநில ஜான்கிட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் அரசில் சேர்ந்தனர். இவர்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று, ஜான்கிட் காங்கிரஸ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

5 பேரும் காங்கிரஸ் அரசில் சேருவதற்கு தற்காலிகமாக அனுமதி மறுத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனு மீது இன்று விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்தது. மேலும் 5 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்வது பற்றி சபாநாயகர் 3 மாதத்திற்குள் முடிவு எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

comments | | Read More...

கார் பஞ்சராகி போக்குவரத்து நெரிசல்: பயணிகள் முற்றுகையால் ஸ்ரேயா தவிப்பு


கார் பஞ்சராகி போக்குவரத்து நெரிசல்: பயணிகள் முற்றுகையால் ஸ்ரேயா தவிப்பு கார் பஞ்சராகி போக்குவரத்து நெரிசல்: பயணிகள் முற்றுகையால் ஸ்ரேயா தவிப்பு

ஸ்ரேயாவின் சந்திரா படம் தமிழ், கன்னடத்தில் தயாராகிறது. தெலுங்கு, இந்திப்படங்களிலும் நடிக்கிறார். இதற்காக மும்பையிலேயே அதிக நாட்கள் தங்கி இருக்கிறார். அங்கு கார் பஞ்சராகி பயணிகள் முற்றுகையில் சிக்கி போலீசார் வந்து ஸ்ரேயாவை மீட்ட சம்பவம் நடந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்த தோழிகளை அழைத்து வருவதற்காக ஸ்ரேயா மும்பை விமான நிலையத்துக்கு சென்ற ார். அவரே காரை ஓட்டிப்போனார். தோழிகளை ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு திரும்பியபோது முக்கிய சாலையில் கார் பஞ்சராகி நின்றது.

இதனால் கார் பின்னால் வாகனங்கள் நகர முடியாமல் நின்றன. தவித்து போன ஸ்ரேயா உடனடியாக அவரது தந்தைக்கு செல்போனில் தகவல் சொன்னார். அவர் வருவதற்கு முன்னால் நெரிசலில் சிக்கிய வாகனங்களில் இருந்த பயணிகள் இறங்கி வந்து ஸ்ரேயாவை முற்றுகையிட்டனர். à ��ிலர் ஆட்டோகிராப் கேட்டனர். இன்னும் சிலர் ஆவேசமாக திட்டி தீர்த்தனர்.

அப்போது தந்தை போலீசாரை அழைத்துக் கொண்டு அங்கே வந்தார். ஸ்ரேயாவை கூட்டத்தினர் மத்தியில் இருந்து போலீசார் மீட்டனர். என் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் இது என்று வேதனைப்பட்டார் ஸ்ரேயா.

comments | | Read More...

ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்: இந்திய அணியில் ஷேவாக் இடம் பெறுவாரா?


ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்: இந்திய அணியில் ஷேவாக் இடம் பெறுவாரா? ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்: இந்திய அணியில் ஷேவாக் இடம் பெறுவாரா?

கொழும்பு, செப். 28-

இலங்கையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. நேற்று சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் தொடங்கியது. இதில் ஒரு ஆட்டத்தில் இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதின. 20 ஓவரில் இரு அணிகளும் 174 ரன்கள் எடுத்து சமநிலையில் இருந்ததால் சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய இலங்கை 1 விக்கெட் இழப்புக்கு 13 ரன்களும், நியூசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 7 ரன்களும் எடுத்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இ பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த  வெஸ்ட்இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 164 ரன்களே எடுத்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எப் பிரிவில் இன்று நடக்கும் முதல் சூப்பர் 8 ஆட்டத்தில் பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. எப் பிரிவில் நடக்கும் மற்றொரு போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. இந்திய அணி சூப்பர் 8 போட்டிகளில் 2 ஆட்டங்களில் வெற்றி பெறுவது அவசியம். எனவே இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதுவது சவாலாக இருக்கும். இதனால் இன்றைய போட்டியில் வீரர்களை தேர்வு செய்வதில் கேப்டன் டோனி தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6 பேட்ஸ்மேன்கள், 5 பவுலர்கள் என்ற பார்முலா பலனை கொடுத்தது. இதனால் இன்றைய போட்டியிலும் இதே பார்முலாவை டோனி கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளார். இதுபற்றி டோனி கூறுகையில், இன்றைய போட்டியில் இந்திய அணி 5 பவுலர்களுடன் களம் இறங்கவே அதிக வாய்ப்பு உள்ளது.

ஆனால் ஆடும் லெவன் அணியில் யார்-யார் இடம் பெறுவார் என்பது எனக்கு இன்னும் தெரியாது. இப்போது ஆடப்போவது புது ஆடுகளம், அதை ஆய்வு செய்துவிட்டு அதற்கு ஏற்ப போட்டிக்கு முன்பு முடிவு செய்வோம் என்றார்.

டோனியின் முடிவுப்படி ஷேவாக் அல்லது யுவராஜ்சிங் ஆகியோரில் ஒருவர் நீக்கப்படுவார். இன்றைய போட்டிக்கு அதிரடி பேட்ஸ்மேன் அவசியம் தேவை. கடந்த போட்டியில் ஷேவாக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதன்பிறகு  நடந்த பயிற்சியில் அவர் கலந்து கொண்டார். இதனால் இன்றைய போட்டியில் ஷேவாக் அணியில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது. பவுலர்களை பொறுத்த வரை ஜாகீர்கான் பந்து வீச்சு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் எடுபடவில்லை.

இங்கிலாந்து போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது. அவர் இன்று மீண்டும் இடம் பெற்றால் தமிழக வீரர் பாலாஜி நீக்கப்படுவார். கொழும்பில் அவ்வப்போது மழை பெய்து ஆட்டத்தை மிரட்டி வருகிறது. இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

comments | | Read More...

Couples Love Cowboy Girl Position


Couples Love Cowboy Girl Position Couples Love Cowboy Girl Position
Couples Love Cowboy Girl Position

செக்ஸ் பொசிஷன்களுக்கு ஒரு எல்லையே இல்லை. ஏகப்பட்ட பொசிஷன்கள் கொட்டிக் கிடக்கிறது. அத்தனையையும் டிரை செய்தவர்கள் என்று யாரையுமே கூற முடியாது. காரணம் பெரும்பாலானவர்களும் அதில் சிலவற்றோடு நின்று விடுகிறார்கள். சிலர் மட்டுமே ஒவ்வொரு முறையும் புதà ��து புதிதாக முயற்சிக்கிறார்கள். அதுதான் நல்லதும் கூட. இல்லாவிட்டால் செக்ஸ் சீக்கிரமே போரடித்துப் போய் விடக் கூடும்.

எத்தனையோ பொசிஷன்கள் இருந்தாலும் அனைவராலும் விரும்பப்படும் பொசிஷன்கள் எது என்று பார்த்தால் இந்த கெளபாய் பொசிஷும், மிஷனரியும்தான்.

கெளபாய் என்றால் ஆண்கள் மீது பெண்கள் ஏறி உறவில் ஈடுபடுவது. மிஷனரி என்பது இயல்பானது, அதாவது பெண்கள் மீது ஆண்கள் ஏறி உறவில் ஈடுபடுவது. மிஷனரிதான் பெரும்பாலும் அனைவரும் தவறாமல் செய்யும் ஒரு உறவு பொசிஷன்.

இதில் கெளபாய் பொசிஷன் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமானது. ஒருமுறை இந்த பொசிஷனை அவர்கள் அனுபவித்து விட்டால் அதன் பிறகு விட மாட்டார்கள், அடிக்கி அந்த பொசிஷனை அவர்கள் அனுபவிக்க விரும்புவார்கள். அப்படி ஒரு ஜில்லாக்கியான பொசிஷன்தான் இந்த கெளபாய்.

கெளபாய் பொசிஷனில் உறவு கà ��ள்ளும்போது ஆணின் வேலையை பெண் செய்கிறார். ஆண் மீது ஏறி அமர்ந்து கொண்டு அவர் ஒரு ஆண் செய்வது போன்று உறவி்ல் ஈடுபடுவார். ஆண்கள் கீழே படுத்தபடி உறவை அனுபவிப்பார்கள். அத்தோடு அவர்களது வேலை முடிந்து விடும். ஆனால் பெண்கள்தான் இந்த உறவின் போக்கை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவார்கள்.

கெளபாய் பொசிஷினில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஆண் மீது ஏறி அமர்ந்து கொண்டு அவரது முகத்த ை பார்த்தபடி உறவு கொள்வது. இன்னொன்று ரிவர்ஸ்... அதாவது ஆணின் முகத்திற்கு முதுகைக் காட்டிக் கொண்டு திரும்பி உட்கார்ந்து கொண்டு உறவு கொள்வது. இரண்டிலும் சம அளவிலான இன்பம் பெண்ணுக்குக் கிடைக்கும். இன்னும் சொல்வதானால், மிஷனரியில் ஆண்களுக்கு அதிகம் இன்பம் கிடைக்கும் என்றால் கெளபாயில் ஆணை விட பெண்ணுக்குத்தான் அதிக இன்பம் கிடைக்கும்.

கெளபாய் பொசிஷனை பெண்கள் விரும்பà ��வதற்குக் காரணம், அவர்களுக்குத் தேவையான இன்பத்தை அவர்களே இதில் முடிவு செய்ய முடியும். எந்த அளவுக்கு ஆழமாக உறவு கொள்ள வேண்டும் என்பதையும் அவர்களே முடிவு செய்யலாம். தங்களது தேவைக்கேற்ப வேகத்தைக் கூட்டவும், குறைக்கவும் அவர்களே தீர்மானிக்கலாம். மேலும் தனது துணையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ஒரு கர்வமும் அவர்களுக்குக் கிடைக்கும்.

மேலும் கஷ்டப்படாமல் ஆர�¯ �கஸத்தை அடையவும் இந்த கெளபாய் பொசிஷன் உதவுகிறது என்பதாலும், கூடுதல் இன்பம் தருகிறது என்பதாலும் பெண்களுக்கு இந்த பொசிஷன் மிகவும் பி்டிக்கும்.

அதிலும் ரிவர்ஸ் பொசிஷன் பெண்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதாக அமைகிறதாம். காரணம், இதில் பெண்கள் மிகவும் ஆழமாக உறவில் ஈடுபட முடியுமாம்.

இருப்பினும் பல பெண்கள் இந்த கெளபாய் பொசிஷனில் ஈடுபட வெட்கப்படுவார்கள். என்னங ்க இது உங்க மேல போய் நானா, போங்க என்று விலகி ஓடுவார்கள். ஆனால் வெட்கப்பட்டால் வேலைக்கு ஆகாது என்பதை அவர்களுக்கு ஆண்கள்தான் புரிய வைத்து தெளிய வைத்து ஈடுபடுத்த வேண்டும்...!


comments | | Read More...

நடிகர் ரிச்சர்ட் திருமண நிச்சயதார்த்தம்: அஜீத்,ஷாலினி பங்கேற்பு


நடிகர் ரிச்சர்ட் திருமண நிச்சயதார்த்தம்: அஜீத்,ஷாலினி பங்கேற்பு நடிகர் ரிச்சர்ட் திருமண நிச்சயதார்த்தம்: அஜீத்,ஷாலினி பங்கேற்பு

நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட். இவர் கிரிவலம், நாளை, யுகா, வைரம், தமிழகம், பெண் சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது ஏன் இப்படி மயக்கினாய், ரெண்டாவது படம், கூத்து போன்ற படங்களில் நடித்து வருகிறார். ரிச்சர்ட்டுக்கும் கவிஞர் கண்ணதாசனின் பேத்தி சத்திய லட்சுமிக்கும் திருமணம் முடிவாகியுள்ளது.

சத்தியலட்சுமி பொன்மாலை பொழுது என்ற படத்தின் தயாரிப்பாளர் ஆவார். ரிச்சர்ட் சத்தியலட்சுமி திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. காலை 10.30 மணி முதல் பகல் 1 மணிவரை நிச்சயதார்த்த சடங்குகள் நடந்தன.

இதில் நடிகர் அஜீத் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனவ்ஷ்காவுடன் கலந்து கொண்டார். அஜீத் பட்டு வேட்டி சட்டையும் ஷால ினி பட்டுப்புடவையும் அணிந்து இருந்தனர். மேலும் மணமகள், மணமகன் பெற்றோர், உறவினர்களும் கலந்து கொண்டார்கள். திருமணத்தை வருகிற ஜனவரி மாதம் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

comments | | Read More...

அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு: விக்கிரமராஜா தலைமையில் டெல்லியில் நூதன ஆர்ப்பாட்டம்



அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு: விக்கிரமராஜா தலைமையில் டெல்லியில் நூதன ஆர்ப்பாட்டம் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு: விக்கிரமராஜா தலைமையில் டெல்லியில் நூதன ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி, செப். 28-
 சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வணிகர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதையொட்டி அகில இந்திய வணிகர் சம்மேளன நிர்வாகிகளின் அவசர கூட்டம் தேசிய தலைவர் பார்ட்டியா தலைமையில் டெல்லியில் நடந்தது. இதில் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலை வர் ஏ.எம். விக்கிரமராஜா, மாநில பொதுச் செயலாளர் கே.மோகன், மற்றும் டெல்லி, உ.பி., சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், அரியானா, குஜராத், ஒரிசா, உள்பட பல்வேறு மாநில வணிக தலைவர்கள் பங்கேற்றனர். பின்னர் அனைத்து மாநில தலைவர்கள் ஒன்று திரண்டு டெல்லி ஜந்தர்மந்தரில் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கைகளில் விலங்கிட்டு வாயில் கறுப்பு துணி கட்டி நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு பேரமைப் பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.பொதுச் செயலாளர் மோகன், டெல்லி பிரதிநிதி சிவக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய தலைவர் ஏ.பி.பரதன், பங்கேற்று பேசினார். கூட்டத்தில் நாடு தழுவிய அளவில் அடுத்து நடைபெறும் போராட்டங்களை தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் அறிவித்தார். * அக்டோபர் 1 முதல் 15-ந்தேதிவரை முதல்-அமைச் சர், கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்களை சந்தித்து முறையிடுவது. * அக்டோபர் 2-ந் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து காந்தி சிலை முன்பு அமர்ந்து பிரார்த்தனை செய்வது. * அக்டோபர் 23-ந்தேதி உருவ பொம்மை எரிப்பது. * நவம்பர் மாதம் முழுவதும் தர்ணா, ஊர்வலம், பொதுக் கூட்டம் நடத்துவது.  * பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது டெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடத்துவது உள்பட பல்வேறு தீà ��்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

comments | | Read More...

அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு: விக்கிரமராஜா தலைமையில் டெல்லியில் நூதன ஆர்ப்பாட்டம்

அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு: விக்கிரமராஜா தலைமையில் டெல்லியில் நூதன ஆர்ப்பாட்டம் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு: விக்கிரமராஜா தலைமையில் டெல்லியில் நூதன ஆர்ப்பாட்டம்
அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு: விக்கிரமராஜா தலைமையில் டெல்லியில் நூதன ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி, செப். 28-
 சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வணிகர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதையொட்டி அகில இந்திய வணிகர் சம்மேளன நிர்வாகிகளின் அவசர கூட்டம் தேசிய தலைவர் பார்ட்டியா தலைமையில் டெல்லியில் நடந்தது. இதில் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலை வர் ஏ.எம். விக்கிரமராஜா, மாநில பொதுச் செயலாளர் கே.மோகன், மற்றும் டெல்லி, உ.பி., சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், அரியானா, குஜராத், ஒரிசா, உள்பட பல்வேறு மாநில வணிக தலைவர்கள் பங்கேற்றனர். பின்னர் அனைத்து மாநில தலைவர்கள் ஒன்று திரண்டு டெல்லி ஜந்தர்மந்தரில் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கைகளில் விலங்கிட்டு வாயில் கறுப்பு துணி கட்டி நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு பேரமைப் பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.பொதுச் செயலாளர் மோகன், டெல்லி பிரதிநிதி சிவக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய தலைவர் ஏ.பி.பரதன், பங்கேற்று பேசினார். கூட்டத்தில் நாடு தழுவிய அளவில் அடுத்து நடைபெறும் போராட்டங்களை தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் அறிவித்தார். * அக்டோபர் 1 முதல் 15-ந்தேதிவரை முதல்-அமைச் சர், கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்களை சந்தித்து முறையிடுவது. * அக்டோபர் 2-ந் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து காந்தி சிலை முன்பு அமர்ந்து பிரார்த்தனை செய்வது. * அக்டோபர் 23-ந்தேதி உருவ பொம்மை எரிப்பது. * நவம்பர் மாதம் முழுவதும் தர்ணா, ஊர்வலம், பொதுக் கூட்டம் நடத்துவது.  * பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது டெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடத்துவது உள்பட பல்வேறு தீ� ��்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
comments | | Read More...

நடிகை ஸ்வேதா மேனனுக்கு பெண் குழந்தை பிறந்தது: சினிமாவுக்காக பிரசவத்தை நேரடியாக படம் பிடித்தனர்


நடிகை ஸ்வேதா மேனனுக்கு பெண் குழந்தை பிறந்தது: சினிமாவுக்காக பிரசவத்தை நேரடியாக படம் பிடித்தனர் நடிகை ஸ்வேதா மேனனுக்கு பெண் குழந்தை பிறந்தது: சினிமாவுக்காக பிரசவத்தை நேரடியாக படம் பிடித்தனர்

கேரளாவின் பிரபல சினிமா டைரக்டர் பிளஸ்சி. இவர் களிமண் என்ற சினிமா தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு பெண் திருமணமாகி கருவுற்ற காலம் முதல் பிரசவமாகும் வரை உள்ள நிகழ்வுகளை இயற்கையாக படமாக்க முடிவு செய்தார்.

அதற்காக கருவுற்ற பெண்ணை தேடிக் கொண்டிருந்தபோது நடிகை ஸ்வேதா மேனன் திருமணமாகி கருவுற்றிருப்பது தெரிய வந்தது. உடனே அவர் ஸ்வேதா மேனனையும், à ��வரது கணவர் ஸ்ரீவல்சனையும் சந்தித்து பேசினார்.

தனது சினிமா பற்றியும் அதில் ஸ்வேதா மேனனை கர்ப்பிணியாக நடிக்க வைக்கவும் பிரசவத்தை நேரடியாக படம் பிடிக்கவும் ஆசைப்படுகிறேன் என்று கூறினார். அதற்கு கணவனும்-மனைவியும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் சம்மதம் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கியது. கர்ப்ப காலத்தில் நடைபெறும் அனைத்து �® �ம்பிரதாய சடங்குகளும் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் ஸ்வேதா மேனன் கடந்த வாரம் மும்பையில் உள்ள நானாவதி ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அவரது பிரசவத்துக்காக தனி அறை தயாரானது. அங்கு 3 கேமராக்கள் பொருத்தப்பட்டன.

சுகப்பிரசவத்துக்கு வழி இல்லாமல் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் அதற்கும் ஏற்பாடுகள் தயாரானது. நேற்று மாலை 5 மணி அளவில் ஸ்வேதா மேனனà ��க்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. உடனே டைரக்டர் பிளஸ்சி, கேமரா மேன் ஜேக்கப், உதவி கேமிரா மேன் பாலு மற்றும் டாக்டர்கள், நர்சுகள் பிரசவ அறைக்கு சென்றனர்.

20 நிமிடம் பிரசவ வலியால் துடித்த ஸ்வேதா மேனனுக்கு 5.27 மணிக்கு சுகப்பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. உத்ராடம் நட்சத்திரத்தில் குழந்தை பிறந்துள்ளது. பிரசவ காட்சிகள் அனைத்தையும் படப்பிடிப்பு குழுவினர் படம ாக்கினர்.

பிரசவம் முடிந்ததும் நடிகை ஸ்வேதா மேனன் நிருபர்களிடம் கூறும் போது பிரசவ காலம் என்பது பெண்களுக்கு இனிமையான காலம். இது பெண்களுக்கு மட்டும் சொந்தமல்ல. இதில் பெரும் பங்கு ஆண்களுக்கும் உண்டு. அதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளவே இதற்கு சம்மதித்தேன். இந்த படத்தில் நடித்தது மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது என்றார்.

comments | | Read More...

கருணாநிதி தலைமையில் 3 ந்தேதி டெசோ கூட்டம்


கருணாநிதி தலைமையில் 3 ந்தேதி டெசோ கூட்டம் கருணாநிதி தலைமையில் 3 ந்தேதி டெசோ கூட்டம்

சென்னை, செப். 28-

தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் வருகிற அக்டோபர் 3-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் டெசோ கூட்டம் நடைபெறும். இதில் டெசோ உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

comments | | Read More...

நித்யானந்தாவால் என் உயிருக்கு ஆபத்து: பெண் சீடர் ஆர்த்திராவ் பரபரப்பு புகார்


நித்யானந்தாவால் என் உயிருக்கு ஆபத்து: பெண் சீடர் ஆர்த்திராவ் பரபரப்பு புகார் நித்யானந்தாவால் என் உயிருக்கு ஆபத்து: பெண் சீடர் ஆர்த்திராவ் பரபரப்பு புகார்

சென்னை, செப். 28-

சென்னை தேனாம்பேட்டை போபஸ் ரோடு, 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஆர்த்திராவ். இவர் அமெரிக்காவில் கணவருடன் வசித்தபோது அடிக்கடி அங்குள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு சென்றார். அப்போது நித்யானந்தாவின் சீடர் ஆனார்.

பெங்களூர் வந்து பிடரி ஆசிரமத்தில் நித்யானந்தாவுடன் தங்கி இருந்தார். அப்போது நித்யானந்தா தன்னை கற்பழித்து விட்டதாக ஆர்த்தி ராவ் பரபரப்பு புகார் கூறினார். இந்த வழக்கிலும், நித்யானந்தா மீதான ஆபாச வீடியோ வழக்கிலும் ஆர்த்திராவ் முக்கிய சாட்சியாக உள்ளார்.

நித்யானந்தா பற்றி ஆபாச வீடியோ வெளியிட்ட அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பனுக்கு ஆர்த்திராவ் உதவி செய்ததாகவும் கூறப்பட்டது. தற்போது ஆர்த்திராவ் சென்னையில் இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று மதியம் ஆர்த்திராவ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 26-ந்தேதி மாலை 4 மணி அளவில் நாங்கள் வசிக்கும் வீட்டு காம்பவுண்டில் தந்தையின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது ஒரு மனிதன் காரின் அருகில் வந்து சந்தேகப்படும் வகையில் ஏதோ செய்து கொண்டு இருந்தார். இதை கவனித்த எனது தாய் அவரிடம் வந்து என்ன செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர் வேறு ஒருவரை பார்க்க வந்தேன் என்று கூறியவாறு செல்போனில் பேசிக்கொண்டே சென்று விட்டார். அதன் பிறகு அன்று இரவு 7 1/2 மணிக்கு ஒருவர் வந்து விட்டு காலிங்பெல்லை அழுத்தினார்.

அம்மா கதவை திறந்து விசாரித்தபோது, செந்தில் இருக்கிறாரா? என்று கேட்டிருக்கிறார். அப்படி யாரும் இல்லையே என்று அம்மா சொன்னதால் தெரியாமல் வந்து விட்டேன் என்று அந்த நபர் சென்று விட்டார். பின்னர் 1/2 மணி நேரம் கழித்து இரவு 8 மணிக்கு மீண்டும் ஒருவர் வந்து காலிங்பெல்லை அழுத்தி சுஜாதா இருக்கிறாரா? என்று கேட்டார். அப்படி யாரும் இல்லை என்று சொன்னதும் தெரியாமல் வந்து விட்டேன் என்று கூறி போய் விட்டார்.

இவர்கள் நடமாட்டம் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனது குடும்பத்துக்கு இவர்களால் ஆபத்து நேருமோ என அஞ்சுகிறோம். நித்யானந்தா வழக்கில் நான் முக்கிய சாட்சியாக இருக்கிறேன். நித்யானந்தா தவிர வேறு யாரும் எனக்கு எதிரிகள் கிடையாது. அவர்தான் ஆட்களை அனுப்பி இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
எங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஆர்த்திராவ் கூறினார்.

ஆர்த்திராவ் மீது நித்யானந்தாவும் ஒரு வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அதில் லெனின் கருப்பனுடன் சேர்ந்து என்னை ஆபாச படம் எடுத்து கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் லெனின் கருப்பன் சரண் அடைந்தார். ஆர்த்திராவ் முன்ஜாமீன் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

comments | | Read More...

சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை


சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை

ஓசூர், செப். 28-

இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை திடீரென்று பலத்த மழை கொட்டத் தொடங்கியது. பலத்த சூறைக் காற்றுடன் இடி,மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழையால் இடைப்பாடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரிய மரங்கள் வேருடன் சாய்ந்தன .மேலும் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த திடீர் மழையால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்

மாவட்ட உழவர் சங்க பிரதிநிதி பில்லுக்குறிச்சி நடேசன் கூறியதாவது:-

வறண்டு கிடந்த இப்பகுதிக்கு இந்த மழை ஓர் அரிய பரிசாக இருந்தது. என்றாலும் தொடர்ந்து பல நாட்கள் மழை பெய்தால் மட்டுமே மிகவும் வறண்டு போன இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த மழையால் விவசாயப் பணிகள் மேற்கொள்ள ஏதுவான சூழ்நிலை உருவாகும். இவ்வாறு அவர் கருத்து தெரிவித்தார். நாமக்கல்லில் நேற்று மாலை இடி-மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு நாமக்கல்லில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி பகுதியில் நீண்ட காலமாக மழை பொழியவில்லை. அத்துடன் பருவ மழையும் பொய்த்து விட்டதால், பொதுமக்கள் தண்ணீருக்காக மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். விவசாய தொழிலும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்கள் வற்றிப் போய்விட்டன.

இந்த நிலை நீடித்தால், தண்ணீர் பிரச்சினை மிகப்பெரிய அளவில் பொதுமக்களை பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை முதல் ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியில், மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல, இடி, மின்னலுடன் பலத்த மழை பொழிய ஆரம்பித்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. தாழ்வான பகுதிகளிலிருந்து மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவு 11 மணி வரை தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருந்தது.

இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள் இவ்வாறே தொடர்ந்து நாள்தோறும் மழை பொழிய வேண்டும், தண்ணீர் பிரச்சினை தீர வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டனர்.

comments | | Read More...

மரணம் அடைந்த அடைக்கலராஜ் உடலுக்கு வைகோ அஞ்சலி


மரணம் அடைந்த அடைக்கலராஜ் உடலுக்கு வைகோ அஞ்சலி மரணம் அடைந்த அடைக்கலராஜ் உடலுக்கு வைகோ அஞ்சலி

திருச்சி, செப். 28-

திருச்சி பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. எல்.அடைக்கலராஜ். நேற்று திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் திருச்சி கிராப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

இன்று காலை முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கிய ராஜீடன் சென்று அஞ்சலி செலுத்தினர். அடைக்கலராஜின் மனைவி ராணி, அவரது மகன்கள் ஜோசப் விண் சென்ட், வி.வி.எஸ்.வின் சென்ட், பிரான்சிஸ் வின் சென்ட் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அடைக்கலராஜ் உடலுக்கு அனைத்து கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நடிகர் ரஜினிகாந்த் போன் மூலம் அடைக்கலராஜின் மருமகன் பாஸ்டினிடம் துக்கம் விசாரித்தார். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

நேற்று இரவு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அடைக்கல ராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, மாநகர செயலாளர் அன்பழகன் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.

இன்று 4.30 மணிக்கு அடைக்கலராஜின் உடல் மேலப்புதூர் தூய மரியன்னை ஆலயத்தில் திருப்பலி செய்யப்பட்டு பிறகு ஊர்வலமாக மேலப்புதூர் ஆர்.சி. கல்லறைக்கு கொண்டு செல்லப்டுகிறது. அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

comments | | Read More...

தடையை மீறி நாளை பேரணி: தெலுங்கானா தலைவர்கள் முன் எச்சரிக்கையாக கைது



தடையை மீறி நாளை பேரணி: தெலுங்கானா தலைவர்கள் முன் எச்சரிக்கையாக கைது தடையை மீறி நாளை பேரணி: தெலுங்கானா தலைவர்கள் முன் எச்சரிக்கையாக கைது

நகரி, செப். 28-

தனி தெலுங்கானா கோரி ஐதராபாத்தில் வருகிற 30-ந்தேதி மாபெரும் பேரணி நடத்த தெலுங்கானா போராட்டக்குழு அறிவித்து உள்ளது. இந்த தெலுங்கானா பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. பேரணியின்போது வன்முறை ஏற்பட கூடும் என உளவு துறை எச்சரித்ததையடுத்து போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஆனால் திட்ட மிட்டப்படி பேரணி நடக்கும் என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து ஐதராபாத் உள்பட பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேரணியை முறியடிக்க துணை ராணுவப் படையும் வரவழைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா பேரணியின் ஒத்திகையாக நேற்று உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஐதராபாத்தில் ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களை பல்கலைக்கழக வாசலிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போலீசார் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி மாணவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இந்த மோதலில் மாணவர்கள் உள்பட ஏராளமான போலீசார் காயம் அடைந்தனர். இந்த நிலையில் 30-ந் தேதி பேரணிக்கு அனுமதி தர வேண்டும் என்று தெலுங்கானா பகுதி தலைவர்கள் கவர்னர் நரசிம்மரை சந்தித்து மனு கொடுத்தனர்.

ஆனால் வன்முறை அபாயத்தை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் பேரணிக்கு ஆதரவு திரட்டி வரும் தெலுங்கானா பகுதி மாவட்ட தலைவர்களை போலீசார் முன் எச்சரிக்கையாக கைது செய்து வருகிறார்கள்.

மாவட்டத்துக்கு 150 பேர் வீதம் 10 மாவட்டங்களிலும் இதுவரை 1500 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஐதராத்தில் உள்ள தலைமைச் செயலகம், சட்ட மன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

comments | | Read More...

கியாஸ் சிலிண்டர் கட்டுப்பாட்டுக்கு 93 சதவீத மக்கள் கடும் எதிர்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்


கியாஸ் சிலிண்டர் கட்டுப்பாட்டுக்கு 93 சதவீத மக்கள் கடும் எதிர்ப்பு: கருத்து கணிப்பில் தகவல் கியாஸ் சிலிண்டர் கட்டுப்பாட்டுக்கு 93 சதவீத மக்கள் கடும் எதிர்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்

புதுடெல்லி, செப்.28-

மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை பற்றி தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஆமதாபாத், லக்னோ ஆகிய 6 நகரங்களில் வசிப்பவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

சமையல் கியாஸ் சிலிண்டர் கட்டுப்பாட்டை ஏற்கிறீர்களா என்ற கேள்விக்கு 93 சதவீதம் பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அது போல டீசல் விலை உயர்வை 87 சதவீதம் பேர் எதிர்த்தனர்.

நாட்டில் இப்போது எந்த பிரச்சினை கவலை தருவதாக உள்ளது என்ற கேள்விக்கு 57 சதவீதம் பேர் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தை குறிப்பிட்டனர். நிலக்கரி சுரங்க ஊழலுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கே காரணம் என்று 66 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் காங்கிரஸ் கட்சியினர் அதிக லாபம் அடைந்துள்ளதாக 49 சதவீதம் பேர் கூறுயுள்ளனர். கூட்டணி கட்சிகளால் மத்திய அரசு கவிழும் என்று 14 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசில் இருந்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலகி இருப்பது சரியான நடவடிக்கை என்று 67 சதவீதம் பேர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மத்திய அரசை பாதிக்கும் விஷயமாக விலைவாசி உயர்வு இருப்பதாக 51 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.

சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீடு நாட்டில் உள்ள சிறு வியாபாரிகளை அழித்து விடும் என்று 53 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளால் பிரதமரால் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க இயலாது என்று 67 சதவீத மக்கள் கருத்து தெரி வித்துள்ளனர்.

comments | | Read More...

நாகர்கோவில்: பிரபல ரவுடி பார் ஊழியரை கொன்றது கூலிப்படை


நாகர்கோவில்: பிரபல ரவுடி பார் ஊழியரை கொன்றது கூலிப்படை நாகர்கோவில்: பிரபல ரவுடி பார் ஊழியரை கொன்றது கூலிப்படை

என்.ஜி.ஓ. காலனி, செப். 28-

நாகர்கோவில் பணிக்கன் குடியிருப்பை சேர்ந்தவர் பிரபல ரவுடி சந்திரமோகன் (வயது 44). இவர் கடந்த ஓராண்டாக தெங்கம்புதூரில் டாஸ்மாக் பார் எடுத்து நடத்தி வந்தார். நேற்று இரவு 7.30 மணிக்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் பாருக்குள் அத்துமீறி நுழைந்தது. அங்கிருந்த சந்திரமோகனிடம் நீதானே சந்திரமோகன்? என கேட்ட அந்த கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தலை, மார்பு என உடல் முழுவதும் பல இடங்களில் சரமாரியாக வெட்டியது. இதை பார்த்த பார் ஊழியர்களான ராமர், மது ஆகியோர் கும்பலை தடுக்க முயன்றனர். இதில் ராமருக்கு தலையில் 4 அரிவாள் வெட்டு விழுந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். மதுவுக்கு கையில் வெட்டு விழுந்தது. பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்திரமோகனை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்à ��ட்ட சந்திரமோகன் வழியிலேயே இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். கொலையாளிகளை பிடிக்க கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சந்திரமோகன் 1992-ம் ஆண்டு சென்னையில் நடந்த  குமரியை சேர்ந்த மற்றொரு பிரபல ரவுடியான தங்கபாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார். இதையடுத்து 1993-ம் ஆண்டு சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் 94-ம் ஆண்டு தென்தாமரைகுளத்தில் நடந்த இரட்டைக்கொலை, 96-ல் குமரியை கலக்கிய பிரபல ரவுடி லிங்கம் கொலை, 2001-ல் சொத்தவிளை பீச்சில் வைத்து ப�® �னிசாமி என்பவர் கொலை ஆகிய வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதில் பழனிசாமி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார்.

இதுதவிர சென்னை, ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி வழக்கு உள்பட மொத்தம் 14 வழக்குகள் சந்திரமோகன் மீது பதிவு செய்யப்பட்டது. அனைத்து வழக்குகளும் முடிந்த பின் சமீப காலமாக ஒதுங்கியிருந்த சந்திரமோகன் கடந்த ஓராண்டாக குளத்தில் மீன் பிடிக்க குத்தகைக்கு எடுத்தும் மற்றும் டாஸ்மாக் பார் ஏலம் எடுத்தும் நடத்தி வந்தார். இதற்கிடையே, கடந்த உள்ளாட்சி தேர்தலில் தனது மனைவி கிருபாவதியை காங்கிரஸ் கட்சி சார்பில் புத்தளம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு நிறுத்தினார். எனினும் கிருபாவதி தோல்வியடைந்தார். தற்போது, பழிக்குப்பழியாக சந்திரமோகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம்? என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் சந்திரமோகனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து போலீசார் பட்டியல் எடுத்து விசாரித்தனர். இதில் சந்திரமோகனால் கொலை செய்யப்பட்ட  ஒருவரின் மகன் சமீபகாலமாக அடிக்கடி சுசீந்திரம் பகுதிக்கு வந்து சென்றது தெரியவந்துள்ளது. அவர் எதற்காக இங்கு வந்து சென்றார்? பழிக ்குப்பழி வாங்கும் நோக்கில் கூலிப்படையை ஏவி சந்திரமோகனை கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் சந்திரமோகனால் பாதிக்கப்பட்ட மற்ற ரவுடிகள் தற்போது எங்கு இருக்கிறார்கள்? அவர்கள் தான் இந்த கொலையை செய்தார்களா? அல்லது உள்ளாட்சி தேர்தல் விரோதத்தில் இந்த கொலை நடந்ததா? என்ற ரீதியிலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரமோகன் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் ரோட்டோரத்தில் அமர்ந்து  மது அருந்திய ஒருவரை அடித்து உதைத்ததாக கூறப்படு�® �ிறது. காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோதும், இது தொடர்பாக போலீசில் புகார் செய்யாமல் இருந்துள்ளார். இந்த தகராறில் சந்திரமோகன் கொலை செய்யப்பட்டாரா? எனவும் விசாரணை நடக்கிறது.

கும்பல் வெட்டியதில் காயமடைந்த பணிக்கன்குடியிருப்பை சேர்ந்து மது (44) ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொலையாளி களை கண்டால் அடையாளம் தெரியும் என கூறியதாக தெரிகிறது. எனவே அவர் கொடுக்கும் தகவல்களை வைத்து கொலையாளிகளின் படங்களை வரைந்து, அதை வைத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

comments | | Read More...

செவ்வாய் கிரகத்தில் நீரோடை: கியூரியாசிட்டி கண்டுபிடித்தது




செவ்வாய் கிரகத்தில் நீரோடை: கியூரியாசிட்டி கண்டுபிடித்தது செவ்வாய் கிரகத்தில் நீரோடை: கியூரியாசிட்டி கண்டுபிடித்தது

நியூயார்க், செப். 28-
 செவ்வாய் கிரகத்தில் நீரோடை இருப்பதை கியூரியா சிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா மையம் கியூரியாசிட்டி என்ற ஆய்வு விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. அது கடந்த ஆகஸ்டு 6-ந் தேதி வெற்றிகரமாக அங்கு தரை இறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.  �® �ெவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை போட்டோ எடுத்து அனுப்பியது. மேலும், அங்குள்ள மலையின் பாறையை படம் எடுத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது எற்கனவே நடந்த ஆய்வில் தெரிய வந்தது.  தற்போது அங்கு மிகப் பெரிய அளவில் நீரோடை சரளை கல் படுகை இருப்பதை கியூரியா சிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது. இவை காலே கிராடர் எரிமலையின் வட பகுதியில் உள்ளது. அ தன் மூலம் இங்கு நீரோடை மற்றும் சிற்றாறுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதை கேத்தாக் என நாசா விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்த சரளை கற்களின் பாறைகள் உருண்டை வடிவத்தில் உள்ளன. காற்றின் மூலம் அடித்து வரப்பட்டால் இது போன்று உருவம் கிடைக்காது. நீரோட்டத்தின் வேகத்தை பொறுத்து வடிவம் மாறியிருக்கலாம் என கருதப்படுகிறது.  மேலும், அந்த பாறைகளின் வடிவத்தின் அடிப்படையில் நீரோ�® �ை மற்றும் சிற்றாறுகளில் வினாடிக்கு 3 அடி தண்ணீர் ஓடியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வுக் கூடத்தின் இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது இன்னும் 2 ஆண்டுகள் செவ்வாய் கிரகத்தில் தங்கி ஆய்வு மேற்கொள்ளும். எனவே, செவ்வாய் கிரகத்தில் இருந்து இன்னும் பல அதிசய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

comments | | Read More...

2 பெண் குழந்தைகள் குளத்தில் வீசி கொலை: தப்பி ஓடிய தந்தை கைது



2 பெண் குழந்தைகள் குளத்தில் வீசி கொலை: தப்பி ஓடிய தந்தை கைது 2 பெண் குழந்தைகள் குளத்தில் வீசி கொலை: தப்பி ஓடிய தந்தை கைது

கொழிஞ்சாம்பாறை, செப். 28-

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அத்திக்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். கூலி தொழிலாளி. இவரது மனைவி அம்பிலி. இவர்களது மகள்கள் ஆபித்ராவேணி (வயது 6), கிருஷ்ணவேணி (2 1/2). ஆபித்ராவேணி அத்திக்காடு அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட அம்பிலி அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தைகளும் அவருடனேயே தங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் ஆஸ்பத்திரிக்கு சென்ற சுரேந்திரன் மனைவியுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் மகள்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு புறப்பட்டார். செல்லும் வழியில் திடீரென்று 2 குழந்தைகளையும் அங்குள்ள ராமசாமி கோவில் குளத்தில் வீசி விட்டார்.

பின்னர் தனது நண்பருடன் செல்போனில் தொடர்பு கொண்டு எனது 2 மகள்களையும் கோவில் குளத்தில் வீசி கொன்று விட்டேன். தற்போது குருவாயூரில் இருக்கிறேன் என்று கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதற்கிடையே கோவில் குளத்தில் 2 குழந்தைகள் பிணம் மிதப்பதை பார்த்த பொதுமக்கள் அத்திக்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து 2 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு அத்திக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் சுரேந்திரனை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது குருவாயூரில் இருப்பது உறுதியானது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சுரேந்திரனை கைது செய்தனர்.

விசாரணையில் குடும்பத்தகராறில் குழந்தைகளை குளத்தில் வீசி கொன்று விட்டதாக கூறியிருக்கிறார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

comments | | Read More...

மது விலக்கை வலியுறுத்தி சென்னையில் 1 ந்தேதி ஒப்பாரி போராட்டம்: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

மது விலக்கை வலியுறுத்தி சென்னையில் 1 ந்தேதி ஒப்பாரி போராட்டம்: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு மது விலக்கை வலியுறுத்தி சென்னையில் 1 ந்தேதி ஒப்பாரி போராட்டம்: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
மது விலக்கை வலியுறுத்தி சென்னையில் 1 ந்தேதி ஒப்பாரி போராட்டம்: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

சென்னை, செப். 28-
 பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் மதுவினால் ஏற்படும் பாதிப்புகளும், சீரழிவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தை வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என அனைவரும் விரும்பும் நேரத்தில் இந்த கொடிய மது பழக்கம் நமது மாநிலத்தை அழிவுப்பாதையில் அழைத்து செல்கிறது. இந்தியா� ��ிலேயே சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறும் மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் தொடர்ந்து பெற்று வருகிறது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதுதான் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரிப்பதற்கும் மதுவே மூல காரணமாக திகழ்கிறது. பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற அவ்வை பாட்டியின் அறிவுரையை மறந்து விட்டு, மது அருந� �துவதற்காக பள்ளிக்கூடத்து பலகைகளை மாணவர்கள் உடைத்து விற்பனை செய்யும் அளவுக்கு மோசமான சூழலை மது அரக்கன் ஏற்படுத்தி இருக்கிறான். மது பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள் விபத்தில் சிக்கியும், உடல் நலம் கெட்டும் உயிரிழப்பது அதிகரித்து வருவதால், இந்தியாவிலேயே தமிழகத்திலும், புதுவையிலும் தான் அதிக எண்ணிக்கையில் கணவனை இழந்த இளம் கைம்பெண்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  இவ்வாறு மதுவினால் ஏற்படும் சமூக, கலாச்சார சீரழிவுகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. சமுதாயத்தைக் கெடுக்கும் மதுவை தடை செய்ய வேண்டும் என்று மகாத்மா காந்தியடிகள், பெரியார், காமராஜர், அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் தலைவர்களின் அறிவுரைகளை எல்லாம் மதிக்காத தமிழக அரசு மதுவை கொடுத்து மக்களைக் கெடுக்கும் பாவத்தை செய்து வருகிற� �ு. தமிழகத்தில் மக்களை காக்க மதுவிலக்கை நடைமுறைபடுத்துங்கள் என்று கோரி கடந்த 23 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்திவரும் போதிலும் அதற்கெல்லாம் திராவிடக் கட்சிகளின் அரசுகள் செவி சாய்க்கவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது பற்றிய அறிவிப்பை மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதியன்று வெளியிட வேண்டும் எ� �்று வலியுறுத்தி, வரும் அக்டோபர் 1-ந்தேதி காலை 10 மணிக்கு காந்தியடிகளின் சிலை முன் கணவனை இழந்த கைம்பெண்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தப்படும். சென்னை நினைவரங்கம் அருகில் எனது (டாக்டர் ராமதாஸ்) தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான கைம் பெண்கள் பங்கேற்று, அங்கு அமைக்கப்படும் காந்தி சிலை முன் அமர்ந்து, தமிழகத்தில் முழு மது விலக்கை ஏற்படுத்த வே� ��்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒப்பாரி வைப்பார்கள். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
comments | | Read More...

தமிழ்க்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள் - 27-09-2012



 Sonia Aggarwal signs 'Palakkad Madhavan'
The pretty Sonia Aggarwal has signed on the dotted line
 Jai's next film titled 'Tirumanam Ennun Nikkah'
Actor Jai who was last seen in Engeyum Eppodhum, is
 Malayalam actor Suresh Gopi in Shanakar's 'I'
Shankar's 'I' is progressing at brisk pace. The movie starring
 Janani Iyer says that there is nothing wrong in suffixing caste names
Telugu and Malayalam actresses who act in Tamil films have
 Cheran to introduce Karthik's second son
It's no news now that actor Karthik's elder son Gautham
 Vedhika views about Bala
Paradesi" heroine Vedhika has experienced Bala's nature and has a
 Jayam Raja to debut in Bollywood with Ramana remake
It was reported in this column that Jayam Raja is
 Anushka gets Rs 65 Lakhs as salary to act in Biryani
The work connected with Biryani which has Karthi in the
 UP govt suspends senior cop who got shoes laces tied by constable
The Uttar Pradesh government has suspended an Additional Superintendent of
 60-yr-old arrested for shooting live-in partner in Goa
A 60-year-old man has been arrested for allegedly killing his
 Man arrested for murdering his lover's husband
The Mumbai crime branch on Tuesday arrested a 31-year-old man
 24 age girl sets herself afire after constant teasing by male classmates, die
Unable to bear the continuous teasing by six male classmates
 Girl kills self after parents scold for talking on phone; boyfriend commits suicide too-Tuticorin
Two college students, both relatives, committed suicide at a village
 Kudankulam protest: Villagers to bury themselves in neck-deep sand
Villagers around the Kudankulam nuclear plant in Tamil Nadu are
 Ajit Pawar resignation: NCP legislators' meeting today
A crucial meeting of the NCP Legislature Party will be
 Girl found dead in house of Bengal minister
A 14-year-old girl allegedly committed suicide at the residence of

 உடைக்கப்பட்ட அண்ணா 'ஆர்ச்' 4 மாதங்களில் சரி செய்யப்பட்டு விடும் - ஜெயலலிதா நேரில் பார்வையிட்டு உறுதி
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணாபவள விழா வளைவு சீரமைக்கும் பணி தொடங்கியது. 4
 சென்னை பங்குச்சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் பொங்கல் அன்று தொடக்கம்
சென்னை பங்குச்சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் பொங்கல் அன்று தொடங்கப்படுகிறது. 29-ந் தேதி (சனிக்கிழமை)
 சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து பெண் பலி - உயிருக்கு போராடிய கணவர்-மகனும் பலி
சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து பெண் பலியான விபத்தில், உடல் கருகி உயிருக்கு
 பாதாள சாக்கடை சுத்தம் செய்த இன்ஜினியர், ஊழியர் பலி
சென்னை திருவிக நகரில் அதிகாலையில் பாதாள சாக்கடை அடைப்பு நீக்க முயன்றபோது விஷவாயு
 பெண்களுக்கான உள்ளாடைகள் பிரிவில் ஆண்கள் பணியாற்ற தடை
ஜவுளிக்கடைகளில் பெண்களுக்கான உள்ளாடைகள் பிரிவில் பெண் ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். ஆண்கள்
 பஸ் மீது ரயில் மோதி 9 இன்ஜி. மாணவர் பலி
பீகாரில் இன்ஜினியரிங் கல்லூரி பஸ் மீது ரயில் மோதியதில் 9 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
 ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து 24 பேர் பரிதாப பலி
ஆற்றுக்குள் பயணிகள் பஸ் கவிழ்ந்து 24 பயணிகள் பலியானார்கள். 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
 கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுடன் கடற்கரை மணலில் புதைந்து வைகோ போராட்டம்
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர் போராட்டம்
 ராத்திரியில் ராகம் போடும் ஜி.வி.பிரகாஷ்!.
ஜி.வி.பிரகாஷ் இசைய அமைக்கும் 25வது படம், "தாண்டவம்! இதன் பாடல்கள், நல்ல வரவேற்பை
 சென்னையில் சூறாவளியுடன் பலத்த மழை - 3 பேர் பலி
சென்னையில் நேற்று பெய்த பலத்த திடீர் மழைக்கு, மெரினா கடற்கரையில் சுண்டல் விற்கும்
 எய்ட்ஸ் விழிப்புணர்வு ஐ.நா நல்லெண்ண தூதராக ஐஸ்வர்யா ராய் நியமனம்
எய்ட்ஸ், ஹெச்ஐவி வைரஸ் பரவுவதை தடுக்க ஐ.நா சபையால் ஏற்படுத்தப்பட்ட ஐ.நா எய்ட்ஸ்
 பாக். பெண் அமைச்சருடன் அதிபர் சர்தாரியின் மகன் கள்ளக்காதல்?
2 மகள்களுக்கு தாயான, பாகிஸ்தான் பெண் அமைச்சருக்கும், அதிபர் சர்தாரியின் மகன் பிலாவல்
 தாண்டவம் படத்திற்கு தடையா?
தாண்டவம் படம் வெளியிடுவதை தடை செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.சென்னை
 மின் கட்டணம் மீண்டும் உயர்கிறது?
மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்துவது குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிசீலித்து

 வீட்டுக்கடன் வட்டி குறைய வாய்ப்பு
தேசிய வீட்டு வசதி வங்கி (என்.எச்.பீ) முக்கிய கடனிற்கான வட்டியை 10.5 சதவீதத்திலிருந்து
 சென்செக்ஸ் 62 புள்ளிகள் சரிவு
நாட்டின் பங்கு வியாபாரம் புதன்கிழமை அன்று மந்தமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின்





comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger