News Update :
Powered by Blogger.

'மே-1' பில்லா -2 கண்டிப்பாக ரிலீஸ் - யுவன்!

Penulis : karthik on Friday 20 April 2012 | 23:22

Friday 20 April 2012




அஜித் நடிப்பில் சக்ரி டொலட்டி இயக்கிகொண்டிருக்கும் படம் பில்லா-2. இந்த படத்தின் முன்னோட்டம் சில நாட� �களுக்கு முன் ரிலீஸானது. ரிலீஸான ஒரு வாரத்திலேயே ஐந்து லட்சம் பார்வையாளர்களை தாண்டியதி. சில டெக்னிக்கல் கோளாறு காரணமாக அந்த முன்னோட்டத்தை எடுத்துவிட்டார்கள்.


இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுனில் கெதர்பல் நேற்று தனது சமூக இணையதளத்தில் "இன்று இரவு அல்லது நாளை முதல் பில்லா-3 படத்தின் டிரெய்லர் சின்னத்திரையில் ஒளிபரப் பப்படும். சில பிரச்சினைகள் காரணமாக இணையதளத்தில் வெளியிடுவதில் தாமதமாக வெளியிடுகிறோம்" என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ட்விட்டரில் " நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பில்லா-2 படத்தின் இசை தல பிறந்த நாளன்று வெளியிடப்படுகிறது. படத்தில் ம� �த்தம் ஆறு பாடல்கள் உள்ளன" என்று கூறியுள்ளார்.

இது போன்ற நிகழ்ச்சிகளில் தலை காண்பிப்பதில் தல விருப்பம் கொள்ளமாட்டார். இருந்தாலும் பொருத்திருந்து பார்ப்போம் என்பதே ரசிகர்களின் நிலை. எனவே மே-1 பில்லா-2 படத்தின் பாடல் ரிலீஸ்.



comments | | Read More...

மீண்டு உள்ளே வா...: கனிமொழியிடம் மீண்டும் விசாரணை




கலைஞர் தொலைக் காட்சிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து ரூ.233 கோடி கடன் பெறப்பட்டது. ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீடு பெறுவதற்காகவே ஸ்வான் டெலிகாம் நிறுவனம், இந்த அளவு பணத்தை கலைஞர் டி.வி.க்கு கொடுத்ததாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன.

ஆனால் ரூ.233 கோடி பணம், கடனாகப் பெற்றது என்றும், அந்த கடன் திருப்பிக் கொடுக்கப்ப� ��்டு விட்டது என்றும் கலைஞர் தொலைக்காட்சி விளக்கம் அளித்தது.

கலைஞர் தொலைக் காட்சியில் கனிமொழி எம்.பி.க்கு 20 சதவீத பங்குகள் உள்ளன. எனவே ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் இடையே நடந்த பண பரிமாற்றம் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தினர்.

சி.பி.ஐ. வழக்கில் கைதான கனிமொழி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு பிறகு ஜாமீனில் விடுதலையானார். இந்த நிலையில் தற்போது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கனிமொழியிடம் விசாரணை நடத்த தயாராகி வருகிறார்கள். ரூ.233 கோடி பணம் எப்படி, எந்த அடிப்படையில் கை மாறியது என்ற விசாரணையை அமலாக்கப்பிரிவு ஏற்கனவே நடத்தி விட்டது.

வங்கி கணக்குகளும் சரிபார்க்கப்பட்டன. இது தொடர்பாக விளக்கம் அளிக்க வருமாறு கனிமொழி எம்.பிக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. வருகிற 26-ந் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி உரிய ஆவணங்களைக் கொடுக்க வேண்டும் என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் 26-ந் தேதி கனிமொழி கண்டிப்பாக அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றில்லை. அவரது பிரதிநிதி ஆஜரானால் கூட போதுமானது. அமலாக்கப்பிரிவின் சம்மனை ஏற்று கனிமொழி தனது வங்கி கணக்குகள், கலைஞர் டி.வி.யின் வங்கிக் கணக்குகள் மற்றும் கடன் பணபரிமாற்றத்துக்கான வங்கி கணக்கு விவரங்களை அமலாக்கப்பிரிவிடம் தாக்கல் செய்வார். அதன் அடிப்படையில் கனிமொயிடம் அமலாக்கப்பிரிவு விசாரணையை தொடங்கும்.

தற்போது பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்து வருவதால் கனிமொழி அதில் பங்கேற்று வருகிறார். எனவே அடுத்த மாதம் (மே) 3-வது வாரம் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பிறகு கனிமொழியிடம் அமலாக்கப்பரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்குவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

கனிமொழி தவிர கலைஞர் டி.வி. முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளளது. இதற்கிடையே சட்ட விரோத பணப் பரிமாற்றம் � ��டுப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் அமலாக்கப்பிரிவு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

அந்த சட்டத்தின் 4-வது பிரிவின் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. கலைஞர் டி.வி. பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு தற்போது தான் முதன்முதலாக வழக்கு பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்




இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் 6.9 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம்.  பப்புவாயில் உள்ள மனோக்வாரியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  நிலநடுக்கத்தில் வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
 
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் விவரம் குறித்த உடனடி தகவல் எதுவும் இல ்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.






comments | | Read More...

தமிழீழத் தனி நாடு- கோத்தபாய விமர்சனத்துக்கு கருணாநிதி பதில்




தி.மு.க.தலைவர் கருணாநிதி நேற்று நிருப� �்களுக்கு பேட்டி அளித்தபோது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:-
 
கேள்வி:- நீங்கள் தனித் தமிழ் ஈழம் பற்றி சொல்லிய கருத்துக்களுக்கு மாறாக இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபயே ராஜபக்சே, தனித் தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்லியிருக்கிறாரே?
 
பதில்:- தனித் தமிழ் ஈழம் கேட்கின்ற போராட்டத்தில் பயங்கரவாதமோ, தீவிரவாதமோ தலையிடக்கூடாது என்கிற கருத்து உடையவன் நான். என்னைத் தலைவராகக் கொண்ட தி.மு.க.வும் அதே கருத்தைத்தான் கொண்டது.நாங்கள் பயங்கரவாதத்துக்கு தயாராக இல்லை.
 
கேள்வி:- தனித் தமிழ் ஈழம் கேட்பது என்பது இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று அவர் சொல்லியிருக்கிறார ே?
 
பதில்:- தமிழ் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எதிராக இலங்கையில் சிங்களவர்களால் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட கொடுமைகளும், எதிர்காலத்தில் நடத்தப்படுமென்று எதிர்பார்க்கின்ற கொடுமைகளும் நடைபெறக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்று கேட்கிறோம்.
 
கேள்வி:- தமிழ்நாட்டில� �தான் தமிழர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எனவே, இலங்கை விவகாரத்தில் தலையிடாமல், இந்தியாவில் தனித் தமிழ்நாடு வேண்டும் என்று கேளுங்கள் என்று கோத்தபயே சொல்லியிருக்கிறாரே?
 
பதில்: இந்தியாவில் இருக்கின்ற மத்திய அரசு, இலங்கையில் இருக்கிற அரசைப்போல தமிழர்களைக் கொடுமைப்படுத்தவில்லை. தமிழர்கள் இங்கே நிம்மதியாகத்தான் இருக்கிறார்கள். ஆகவ ே, எங்களுக்கு இந்திய அரசை விட்டுப்பிரிந்துபோக வேண்டிய அவசியம் இப்போது இல்லை.
 
இவ்வாறு கருணாநிதி பதில் அளித்தார்.
 
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. திருவொற்றியூர் மா.வெ.நாராயணசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தி.மு.க.தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
 
அறிவார்ந்த சிறந்த தொழிற்சங்கவாதியும், திருவொற்றியூர் தொகுதியின் முன்னாள் தி.மு.க.சட்டமன்ற உறுப்பினருமான மா.வெ.நா.என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மா.வெ.நாராயணசாமி மறைந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
 
'மிசா' கொடுமைக்கு ஆளாகி காராக்கிரகத்தில் அடைபட்டு சித்ரவதைகளுக்கு ஆளான போதிலும், கொண்ட கொள்கையி� ��் உறுதியோடு இருந்து அரும்பணியாற்றியவர் அவர். திருவொற்றியூர் பகுதியிலே உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் தொழிற்சங்க தலைவராக பல ஆண்டு காலம் இருந்து, தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக பெரிதும் பாடுபட்ட, மா.வெ.நாராயணசாமியின் மறைவுக்காக அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இவ்வாறு கருணாநிதி கூறி உள்ளார்.   



comments | | Read More...

மீனவர்கள் கொலை வழக்கு: இத்தாலிக்கு ஆதரவளிக்கும் மத்திய அரசு




கேரள மாநிலம் கொல்லம் கட� ��்பகுதியில் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி மீன்பிடித்து கொண்டிருந்த விசைப்படகு மீது, அந்த வழியாக வந்த இத்தாலி கப்பல் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழக மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக இத்தாலி கப்பல் வீரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர ்.
 
இந்நிலையில் இத்தாலி கப்பல் வீரர்கள் இருவரையும் விடுவிப்பதற்காக இத்தாலி அரசு இந்திய உச்ச நீதிமன்றத்தை நாடியது. கப்பல் வீரர்கள் மீதான குற்றவியல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் இத்தாலி அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டது. இவ்வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இ
 
தற்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, 'மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு இந்திய கடல் பகுதியில் நடைபெறவில்லை. எனவே இவ்வழக்கை கேரள அரசு விசாரிக்க முடியாது' எனக் கூறியுள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக மத்திய அரசு இத்தாலியர்களுக்கு ஆதரவான பதிலைக் கூறி, இந்தியர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. மத்திய அரசின் இந்த பதில் துரதிருஷ்டவசமானது என உச்ச நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.
 
முதலில் இவ்வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் கப்பல் வீரர்கள் மீதான குற்றவியல் வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்தது.  எனவே கப்பல் வீரர்கள் மீதான குற்றவியல் வழக்கை தள்ளுபடி செய்வதற்காக, இத்தாலி அரசு தனது ராஜ தந்திரங்கள் மூலம் இந்திய அரசைக் கவர்ந்ததுடன், உச்ச நீதிமன்றத்தை நாடியது.  இத்தாலி அரசின் ரா ஜ தந்திரங்களுக்கு இந்திய அரசு பணிந்துள்ளது.



comments | | Read More...

மு.க.அழகிரிக்கு சொந்தமான 'தயா' சைபர் பார்க்கில் ஆக்கிரமிப்பு பகுதி எவ்வளவு?: மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை




மதுரை மாட்டுத்தாவணியில் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் குடும்பத்திற்கு சொந்தமான 'தயா' சைபர் பார்க் உள்ளது. இந்த கட்டிடம் அமைந்துள்ள சில பகுதிகள் புறம்போக்கு நிலத்தில் உள்ளதாகவும், முன்பகுதியில் சுமார் 8 செ� �்டு இடம் மதுரை மாநககராட்சிக்கு சொந்தமானது என்றும், இந்த இடத்தை ஆக்கிரமித்து 'தயா' சைபர் பார்க் க� ��்டிடம் கட்டப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது.

இதுதொடர்பாக வருவாய் துறையினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கலெக்டர் சகாயம் உத்தரவிட்டதன்பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தனர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் மாநகராட்சி அதிகாரிக� �ும் சர்வே செய்ததில் கட்டிடத்தில் முன்பகுதியில் சுமார் 8 சென்ட் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்றும், சில பகுதிகள் புறம்போக்கு நிலம் என்பதும் தெரியவந்தது.

மேலும் 'தயா' சைபர் பார்க் கட்டிடத்திற்கு மாநக ராட்சியிடம் வரைபட அனுமதி பெறாதத ும் கண்டு பிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மாநகராட்சி ஆக்கிரமிப்பு இடம் தொடர்பாக மு.க.அழகிரி குடும்பத்தினருக்கு நோட்டீசு அனுப்பியது. ஆனால் உரிய பதில் அளிக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று மாநகராட்சி சார்பில் 'தயா' சைபர் பார்க் ஆக்கிரமிப்பு இடத்தில் மாநகராட்சி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இதில் இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என கமிஷனர் அறிவித்துள்ளதாக எழுதப்பட்டுள்ளது.



comments | | Read More...

நெட்டில் 'செக்ஸைத்' தேடியவர்களில் பாக். நம்பர் 1-இந்தியாவுக்கு 2வது இடம்!




2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்கள் தொடர்பான ஆய்வுகளின்படி,கூகுள் இணையத்தளத்தின் மூலம் செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது.

இணையத்தளத்தில் 'செக்ஸ்' குறித்து அதிகம் தேடுதலை மேற்கொண்ட நாடுகளின் பட்டிய� ��ில் பாகிஸ்தான் முதலிடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன. வியட்நாம் மூன்றாமிடத்திலும் எகிப்து நான்காமிடத்திலும் இந்தோனேஷியா ஐந்தாமிடத்திலும் உள்ளதாக 'கூகுள் ட்ரென்ட்ஸ்' ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த பட்டியலில் அல்ஜீரியா, மொராக்கோ, மலேசியா, போலந்த� �, துருக்கி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

தொடர்ந்து முதலிடம்

2011 ம் ஆண்டு மட்டுமல்லாது கூகுள் தேடல் தளத்தில் இதுவரைக்காலமும் அதிக செக்ஸ் தேடலை மேற்கொண்டோர் உள்ள நாடுகளின் பட்டியலிலும் பாகிஸ்தான் தான் முதலிடத்தில் உள்ளது. இதில் இந்தியாவை 3 ஆம் இடத்திற்கு தள்ளிவிட்டு வியட்நாம் இரண்டாமிடத்தில் உள்ளது.

20 மில்லியன் இணைத்தள பாவனையாளர்களைக் கொண்டுள்ள நிலையில் அந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவரும் நிலையில், அனைத்து வருடங்களுக்குமான உலகளாவிய 'செக்ஸ் தேடல் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளது' என பாகிஸ்தானின் த எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ரம்ஜான் மாதத்தில் லீவ்

கடந்த 2011 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை பிப்ரவரி, ஆகஸ்ட் மாதம் தவிர்ந்த ஏனைய சகல மாதங்களிலும், செக்ஸ் என்ற வார்த்தையை தேடியவர்களை அதிகம் கொண்ட உலகின் முதல் 10 நகரங்களின் பட்டியலில் பாகிஸ்தானின் லாகூர் நகரம் இடம்பெற்றுள்ளது. பிப்ரவரி, ஆகஸ்ட் ( ரம்ஜான் மாதம் ) மாதங்களுக்கான பட்டியலில் எந்தவொரு பாகிஸ்தான் நகரமும் இடம்பெறவில்லை என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

8 இந்திய நகரங்கள்

செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட 10 நகரங்களில் 8 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. உலகளவில் இந்தியாவின் லக்னோ முதலிடத்தையும் கொல்கத்தா இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன. சென்னை உலகளவில் 7 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.பாகிஸ்தானின் லாகூரும் வியட்ந� �மின் ஹனோயும் முதல் 10 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவை சாராத நகரங்களாகும்.



comments | | Read More...

உலகை திரும்பி பார்க்க வைத்த 'அக்னி 5'; உலகை மிரள வைக்க வரும் 'ஏ-6'




அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துவிட்ட நிலையில், அடுத்தபடியாக வரப் போவது 'ஏ-6' என்று பெயரிடப்பட்டுள்ள ஏவுகணை. இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் பல அணு குண்டுகளை ஏந்திக் கொண்டு 10,000 கி.மீ. வரை சென்று ஒரே நேர த்தில் பல இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.

17.5 மீட்டர் உயரம் கொண்ட அக்னி 5 ஏவுகணை திட எரிபொருளால் இயக்கக் கூடியதாகும். இதனால், இதை மிக எளிதாக ராணுவ வாகனங்களில் எந்த இடத்துக்கும் கொண்டு சென்று ஏவ முடியும்.< /div>

சுமார் 1.5 டன் (1,500 கிலோ) எடை கொண்ட அணு குண்டையோ அல்லது வேறு ஆயுதங்களையோ இந்த ஏவுகணையால் ஏந்திக் கொண்டு 5,000 கி.மீ. வரை பயணிக்க முடியும்.

'இன்டர் காண்டினென்டல் பேலிஸ்டிக் மிஸைல்' (Inter-Continental Ballistic Missile-ICBM) எனப்படும் இந்த ஏவுகணை, ஏவப்பட்டவுடன் முதலில் பூமியிலிருந்து 40 கி.மீ. உயரத்தை அடையும். அத்தோடு அதன் முதல் ஸ்டேஜ் ராக்கெட் தனியே கழன்றுவிடும்.

இதையடுத்து அதன் இரண்டாவது ராக்கெட் செயல்பட்டு அதை மேலும் 150 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லும். இதன� �� பின்னர் அதன் 3வது ராக்கெட் இயங்கி அதை மேலும் 800 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லும்.

இந்த உயரத்தை அடைந்த பின்னர் ஏவுகணையில் உள்ள கம்ப்யூட்டர்கள், செயற்கைக் கோள் மற்றும் ரேடியோ சிக்னல்கள் உதவியோடு, அதை தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தை நோக்கித் திருப்பும்.

இதையடுத்து அடுத்த 18 நிமிடங்களில் இந்த ஏவுகணை 5,000 கி.மீ. தூரத்தைக் கடந்து குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கும்.

3வது கட்ட ராக்கெட் செயல்பட ஆரம்பிக்கும்போது இந்த ஏவுகணையின் வேகம் ஒலியை விட 24 மடங்கு அதிகமானதாக இருக்கும். அதாவது, போர் விமானங்களை விட சுமார் 30 மடங்கு அதிக வேகத்தில் பய� �ிக்கும்.

இந்த ஏவுகணையால் பாகிஸ்தான், சீனாவின் எந்தப் பகுதியையும், கிழக்கு ஐரோப்பாவைய� �ம், வடக்கு-கிழக்கு ஆப்பிரிக்காவைத் தாக்க முடியும்.

நிகோபார் தீவுகளில் இருந்து இதை ஏவினால் ஆஸ்திரேலியாவைக் கூட தாக்கலாம்.

திபெத் பகுதியில் இந்தியாவுக்கு எதிராக ஏவுகணைகளை சீனா நிறுத்தி வைத்துள்ள நிலையில், இந்த அக்னி 5, சீனாவுக்கு எதிரான மிகப் பெரிய தற்காப்பாக இருக்கும்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் மட்டும் தான் இந்த வரை ஐசிபிஎம் ஏவுகணைகள் உள்ளன. இப்போது இந்தத் திறனைப் பெற்றுள்ள 5வது நாடு இந்தியாவாகும்.

இந்தியா முதலில் தயாரித்த அக்னி-1 ஏவுகணை 700 கி.மீ. தூரத்தைக் கடக்க வல்லதாக இருந்தது. இதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த ஆராய்ச்சிகளை நடத்தி அதன் தூரம் 5,000 வரை நீடிக்கப்பட்டுள்ளது (அக்னி-5 உண்மையில் 8,000 கி.மீ. தூரத்தை கடக்க வல்லது என்கிறது சீனா).

அக்னி ரகத்தைச் சேர்ந்த முந்தைய ஏவுகணைகளுக்கும் அக்னி- 5 ஏவுகணைக்கும் இடையே மிக மிக முக்கியமான வித்தியாசம் உண்டு. அது re-entry technology எனப்படும் பூமிக்கு வெளியே போய்விட்டு திரு� �்ப உள்ளே நுழையும் தொழில்நுட்பம்.

மற்ற ஏவுகணைகள் செலுத்தியவுடனே எதிரி நாட்டு திசை நோக்கி பயணித்து குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும். அவை 'க்ரூயிஸ்' (cruise missiles) ரக ஏவுகணைகள். ஆனால், அக்னி-5 பேலிஸ்டிக் மிஸைல் ரகத்தைச் சேர்ந்தது. அதாவது, ஏவப்பட்டவுடன் பூமிக்கு மேலே பல நூறு கிலோ மீட்டர்கள் பயணித்துவிட்டு, பின்னர் வானிலியிருந்து பூமி நோக்கித் திரும்பி, எதிரி நாட்டு இலக்கை நோக்கி பாயும் ஏவுகணை இது.

இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஏகப்பட்ட சிக்கல்கள். ஆனால், இந்த தொழில்நுட்ப உதவியை வெளிநாடுகளில் இருந்து பெற சர்வதேச சட்டமான Missile Technology Control Regime தடுக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்றாலும், ரீ-எண்ட்ரி தொழில்நுட்பத்தை பிற நாடுகளிடமிருந்து இந்தியாவால் பெற முடியவில்லை.

இதனால் அந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவே உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அதை செய்தும் காட்டிவிட்டனர் நமது DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவின் விஞ்ஞானிகள்.

இந்த ஏவுகணைத் தயாரிப்புக்கான பல தொழில்நுட்பங்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவிடமிருந்து வந்துள்ளதை மறுக்க முடியாது. அக்னி ஏவுகணையின் திட எரிபொருள் ராக்கெட்டுகள், செயற்கைக் கோள்களை ஏவ இஸ்ரோ தயாரித்த எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி. ராக்கெட்களின் அடிப்படையில் அமைந்தவை தான் என்கிறது குளோபல் செக்யூரிட்டி என்ற சர்வதேச பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சி மையம்.

இப்போது உருவாக்கப்பட்டுள்ள அக்னி-5 ஒரே ஒரு அணு அல்லது வேறு குண்டை ஏந்திச் செல்ல வல்லது. அடுத்தகட்டமாக ஒரே ஏவுகணையில் பல குண்டுகளை ஏந்திச் செல்லும் தொழில்நுட்பத்தை (Multiple independently targetable reentry vehicle-MIRVed) இந்தியா உருவாக்கி வருவதாகத் தெரிகிறது. 'A6' என்று கோட் நேம் இடப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஏவுகணையின் தூரமும் 6,000 முதல் 10,000 கி.மீயாக இருக்கும் எ� �்று கருதப்படுகிறது. இந்த ஏவுகணைக்கு 'சூர்யா' எனப் பெயரும் சூட்டப்பட்டுவிட்டது என்கிறார்கள்.

அடுத்த கட்டமாக இந்த ஏவுகணையை நீர் மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் செலுத்தக்கூடியாதவும் (Submarine-launched ballistic missile) மேம்படுத்தும் திட்டத்திலும் டிஆர்டிஓ உள்ளதாகத் தெரிகிறது.

இப்போது இந்தியாவிடம் தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் பிருத்வி குறைந்த தூர ஏவுகணை, தரையிலிருந்தும் கப்பல்களில் இருந்தும் கப்பல்களைத் தாக்கும் திரிசூல் , தரையிலிருந்து விமானத்தையோ அல்லது விமானத்திலிருந்து விமானத்தையே தாக்கும் ஆகாஷ், இரவு-பகல் என எந்த நேரத்திலுந் கவச வாகனங்களைத் தாக்க உதவும் நாக் ஆகிய ஏவுகணைகளும், நீண்ட தூரம் சென்று தாக்கும் அக்னி வரிசையில் 1,2,3,4,5 ஆகிய ஏவுகணைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி-5 ஏவுகணையை மேலும் கூர்மையாக்க மேலும் 5 முதல் 6 சோதனைகள் வரை தேவைப்படும் என்று தெரிகிறது. இதனால் வரும் காலங்களில் அடிக்கடி அக்னி-5 சோதனைகள் நடக்கலாம்.



comments | | Read More...

எண்ணெய் நிறுவனங்கள் மிரட்டலுக்கு பணிந்தது மத்திய அரசு




சர்வதேச சந்தையில் கச்ச� � எண்ணெய் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளன.
 
ஆனால் பெட்ரோலியம் பொருட்களின் விலையை உயர்த்துவதற்கு மத்திய அரசு தயங்கி வருகிறது. பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தினால் அது மக்களை கடுமையாக பாதிப்பதோடு பணவீக்கத்தையும் அதிகரிக்க செய்துவிடும� �� என அஞ்சப்படுகிறது.  
 
கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படாததால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பை சந்தித்துள்ளது. இனியும் இழப்பை தாங்க இயலாது என்பதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 8 உயர்த்தப்போவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
 
இந்த விலை உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் மத்திய-மாநில அரசுகள் வரிகளை குறைத்துக் கொள்ளட்டும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் கூறின. இதனால் பெட்ரோல்-டீசல் விலை உயர்வில் என்ன முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது.  
 
இந்த நிலையில் பெட்ரோல்-டீசல் மீது விதிக்கப்படும் வரிகளை குறைக்கலாமா? எ� �்று மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கோவா மாநில அரசு பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைத்தது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 11 குறைந்தது.
 
இதேபோன்று வரி குறைப்பில் ஈடுபடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ. 15 சுங்க வரி வசூல� ��க்கிறது. மாநில அரசுகள் ரூ. 4 முதல் ரூ. 9 வரை விற்பனை வரி வசூலிக்கின்றன.
 
டீசலை பொறுத்தவரை மத்திய அரசு ரூ. 5 சுங்க வரி வசூலிக்கிறது. மொத்தத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய- மாநில அரசுகள் ரூ. 27 வரை வரிகளாக வசூல் செய்கின்றன.  
 
முதல் கட்டமாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் மீதான வரி குறைப்பை ச� ��ய்யும்படி மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. அதே சமயத்தில் மத்திய அரசும் பெட்ரோலியம் பொருட்களின் மீது சுங்க வரி விதிப்பை குறைக்கும்.
 
இந்த நடவடிக்கைக்கு பிறகு காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வரி குறைப்பு செய்ய மத்திய அரசு கேட்டுக்கொள்ளும். இதன் தொடர்ச்சியாக மற்ற மாநிலங்களிலும் பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
இந்த நடவடிக்கைகளால் பெட்ரோல்-டீசல் விலைகள் கணிசமாக குறையும். எண்ணெய் நிறுவனங்களின் இழப்பும் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஒருவேளை விலையை உயர்த்த நேரிட்டாலும் அது மக்களையோ எண்ணெய் நிறுவனங்களையோ பாதிக்காது. மாறாக மத்திய-மாநில அரசுகளுக்கு வரி வருவாயில் மட்டுமே இழப்பு ஏற்படும்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger