News Update :
Powered by Blogger.

பெட்ரோல் விலையையும் ரூ. 5 அதிகரிக்க ஆலோசனை Petrol Price rs 5 to increase consultation

Penulis : Tamil on Wednesday 28 August 2013 | 22:08

Wednesday 28 August 2013

எண்ணை நிறுவனங்களுக்கு கடும் இழப்பு: பெட்ரோல் விலையையும் ரூ. 5 அதிகரிக்க ஆலோசனை Heavy loss of oil companies Petrol Price rs 5 to increase consultation 

 

சிரியா மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற சூழ்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்த படி உள்ளது. நேற்று முன்தினம் ஒரு பேரல் கச்சா எண்ணை 116.27 டாலராக இருந்தது. நேற்று அது 118.04 டாலராக உயர்ந்தது. இதற்கிடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

இத்தகைய காரணங்களால் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு அதிகரித்தப்படி உள்ளது. தற்போது எண்ணை நிறுவனங்கள் டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.10.22, மண் எண்ணையில் லிட்டருக்கு ரூ.33.54, சமையல் கியாஸ் விற்பனையில் சிலிண்டருக்கு ரூ.412 இழப்பை சந்தித்து வருகின்றன.

அந்த வகையில் தினமும் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ரூ.389 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்தா விட்டால், இந்த ஆண்டு எண்ணை நிறுவனங்களின் மொத்த இழப்பு ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட டீசல் விலையை ரூ.5 முதல் ரூ.6 வரை உயர்த்த ஆலோசனை நடந்து வருகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 6-ந்தேதி பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் டீசல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல் விலையையும் உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி வருகிறது. செப்டம்பர் முதல் 2 வாரங்களில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தாவிட்டால் எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு மீட்க முடியாத அளவுக்கு போய் விடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே பெட்ரோல் விலையையும் லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்தலாமா என்று மத்திய அரசின் பல்வேறு அமைச்சக அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து விட்டன.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால், அது அத்தியாவசியப் பொருட்களின் விலையில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு கருதுகிறது. எனவே ஒரே நேரத்தில் ஒரேயடியாக பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாய் உயர்த்த மத்திய அரசிடம் தயக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஓரளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

comments | | Read More...

ஆட்டோக்களுக்கு புதிய கட்டண அட்டை நாளை முதல் வழங்கப்படுகிறது running 70 thousand autos new charge card

சென்னையில் ஓடும் 70 ஆயிரம் ஆட்டோக்களுக்கு புதிய கட்டண அட்டை நாளை முதல் வழங்கப்படுகிறது running 70 thousand autos new charge card 

 

சென்னையில் சுமார் 70 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
குறைந்தபட்சமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.25 கட்டணமும், அதன் பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 வீதம் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஆட்டோ கட்டணத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆட்டோக்களில் பயணிக்கும் பயணிக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்த உள்ளன. ஜி.பி.எஸ். கருவியுடன் டிஜிட்டல் மீட்டர் அரசு சார்பில் ஒவ்வொரு ஆட்டோவிற்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
தற்போதுள்ள மீட்டரை திருத்தம் செய்ய 45 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15–ந்தேதிக்குள் சென்னையில் உள்ள அனைத்து ஆட்டோக்களிலும் புதிய கட்டணம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இதற்கிடையில் புதிய ஆட்டோ கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. தற்போதைய மீட்டரில் புதிய கட்டணம் திருத்தம் செய்யும் வரை அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக புதிய கட்டணம் விவரங்கள் அடங்கிய அட்டை அச்சிடப்பட்டுள்ளது.
இதில் ஏற்கனவே உள்ள பழைய கட்டணம், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டணங்கள் கிலோ மீட்டர் வீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அட்டை நாளை அல்லது நாளை மறுநாள் முதல் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக வழங்கப்படுகிறது.
அங்கீகாரம் பெற்ற ஆட்டோக்களுக்கு மட்டும் இந்த கட்டண அட்டை கொடுக்கப்படும். இந்த கட்டண அட்டை ஆட்டோ டிரைவரிடம் கொடுக்கப்படமாட்டாது. உரிமையாளர்களிடம் மட்டுமே வழங்கப்படும்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:–
புதிய ஆட்டோ கட்டணம் கடந்த 25–ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் இடையே எவ்வித பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்பதற்காக புதிய கட்டண விவரம் அடங்கிய அட்டை வழங்கப்பட உள்ளது.
இந்த அட்டையில் ஆட்டோ உரிமையாளர் போட்டோ ஒட்டப்படும், அவரிடம் மட்டுமே அட்டை வினியோகம் செய்யப்படும். வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று கையெழுத்திட்டு பெற வேண்டும்.
கட்டண அட்டையை பயணிகள் பார்வைக்கு தெரியும் வகையில் தொங்க விடவோ, ஒட்டவோ செய்ய வேண்டும். கட்டண அட்டை தயாராகி விட்டது. நாளை (வியாழக்கிழமை) அல்லது வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும்.
பழைய மீட்டரில் உள்ள கட்டணமும் இந்த அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது. பழைய கட்டணப்படி கிலோ மீட்டருக்கு எவ்வளவு வருகிறதோ அதன் அடிப்படையில் புதிய கட்டணம் வசூலிக்கப்படும். அதனால் தான் அட்டையில் இரண்டு கட்டணமும் கொடுக்கப்பட்டுள்ளது.
பழைய கட்டணத்தை விட புதிய கட்டணம் கூடுதலாக இருக்கும். நாம் எத்தனை கிலோ மீட்டர் பயணம் செய்கிறோம் என்பதை அருகில் உள்ள புதிய கட்ட ணத்தோடு ஒப்பிட்டு வழங்க வேண்டும்.
ஆட்டோக்களின் உரிமையாளர்களிடம் மட்டுமே கட்டண அட்டை கொடுப்பதால் அவர்களுக்கு அதன் முழு விவரங்கள் தெரிய வரும். டிரைவர்கள் தவறு செய்வதற்கு வாய்ப்பு தரக் கூடாது என்பதற்காக இதை நாங்கள் கண்டிப்பாக கடைபிடிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger