News Update :
Powered by Blogger.

கேப்டனாம்... என்ன கேப்டன்? : விஜயகாந்தை விளாசிய அன்புமணி

Penulis : karthik on Monday 26 March 2012 | 11:58

Monday 26 March 2012

 
 
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தம்மை கேப்டன் என்று அழைத்துக் கொள்கிறார்... அவர் எந்த விளையாட்டுக்கு கேப்டனாக இருந்தார்? அல்லது ராணுவத்துக்கு கேப்டனாக இருந்தாரா? என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சேலத்தில் நடைபெற்ற பா.ம.க. மாணவர் சங்க மாவட்ட மாநாட்டில் அன்புமணி பேசியதாவது:
 
தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களைத் தீட்டி, அதை செயல்படுத்தும் வல்லமை படைத்த ஒரே கட்சி பா.ம.க. மட்டுமே. தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சிகள், ஆட்சி செய்து முடித்து விட்ட பிறகு மீண்டும் அடுத்த தேர்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கும். ஆனால், பா.ம.க. -வுக்கு, அடுத்த தேர்தல் முக்கியம் இல்லை. அடுத்த தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம் .
 
விஷன் 2023/
 
தமிழகத்தை, 45 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் செய்த சாதனைகள் என்ன? சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதா, 2023 தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு, 15 ஆயிரம் லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டுமாம். தமிழகம் தற்போது, 1 லட்சத்து 19 கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளது. தமிழகத்தில் வசிக்கும், 7.25 கோடி மக்களில் ஒருவரின் மீது, 17 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. இந்த நிலையில், தொலைநோக்கு திட்டத்துக்கான நிதியை எப்படி திரட்ட முடியும் ? தற்போது தமிழக அரசுக்கு வருமானம் என்பது டாஸ்மாக் மட்டுமே, இதை வைத்து கொண்டு இந்த நிதியை திரட்ட முடியுமா.
 
கேப்டனா?
 
தமிழகத்தில், மது, சினிமா போன்ற தேவையற்ற கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற திட்டத்தில் பாமக உறுதியாக உள்ளது. தி.மு.க. - அ.தி.மு.க. தே.மு.தி.க. போன்ற அனைத்து கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். சினிமா பார்ப்பது தவறு அல்ல. ஆனால், அதை கலாசாரமாகக் கருதி கடைபிடிக்கக் கூடாது. தமிழகத்தில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என, சினிமாக்காரர்கள் தான்அதிகம் உள்ளனர்.
 
கேப்டன் என்கின்றனர், அவர் என்ன புட்பால் கேப்டனா, அல்லது வாலிபால் கேப்டனா, அல்லது ராணுவக் கேப்டனா, நான் கூட இந்த விளையாட்டுக்கு எல்லாம் கேப்டனாக செயல்பட்டுள்ளேன்.
 
பாமக, ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்தே, பூரண மதுவிலக்கை அமுதல் படுத்துவோம் என்பதுதான் என்றார் அவர்.



comments | | Read More...

நிர்வாண கோலத்தில் சிக்கிய கல்லூரி ஜோடிகள்

 
 
 
நாகர்கோவிலில் இருந்து சொத்தவிளை செல்லும் சாலையில் ஏராளமான முந்திரி தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் ஆள் இல்லாத நேரங்களில் சில இளம் ஜோடிகள் அத்துமீறி நுழைவதாகவும், அவர்கள் ஆபாச சேட்டைகளில் ஈடுபடுவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வந்தது.
 
இது அப்பகுதி மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தோட்டங்கள் புகுந்து சில்மிஷத்தில் ஈடுபடுபவர்களை பிடித்து போலீசில் ஒப்படைக்க முடிவு செய்தனர். சம்பவத்தன்று இப்பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றிற்கு ஆண்களும், பெண்களும் வேலைக்குச் சென்றனர். அப்போது தோப்பில் உள்ள ஒரு மரத்தில் பேண்ட் சட்டையும், சுடிதாரும் தொங்கியது.
 
இதைப்பார்த்த மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் நேராக ஊருக்குள் சென்று மக்களை திரட்டி வந்தனர். பின்னர் பொதுமக்கள் ஏராளமானோர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 2 வாலிபர்களும், 2 இளம்பெண்களும் அரைகுறை ஆடையுடன் நின்றனர். மக்களை பார்த்த வாலிபர்களும், இளம்பெண்களும் ஓட்டம் பிடித்தனர். எனினும் பொதுமக்கள் அவர்களை மடக்கிப்பிடித்தனர்.
 
அவர்களிடம் விசாரித்தபோது இளம்பெண்கள் இருவரும் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், நாகர்கோவில் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருவதும், வாலிபர்கள் இருவரும் அதே கல்லூரியில் படித்து வருவரும் தெரியவந்தது. இவர்கள் இதுபோல பலமுறை இங்கு வந்து உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசில் ஒப்படைக்க பொதுமக்கள் முடிவு செய்தனர்.
 
அப்போது பிடிபட்ட 4 பேரும் ''நாங்கள் தெரியாமல் தவறு செய்து விட்டோம், இனிமேல் இதுபோன்ற தவறை செய்யமாட்டோம்'' என கண்ணீர் விட்டனர். மேலும் போலீஸ் நிலையம் சென்றால் தங்கள் படிப்பு பாழாகி விடும் என கூறி கதறி அழுதனர். கடைசியில் அவர்களை எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.



comments | | Read More...

ஆசிய பெண்கள் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கம்

 
 
 
ஆசிய பெண்கள் குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் மேரி கோம், சரிதா தேவி ஆகியோர் இறுதிப் போட்டிகளில் வெற்றிப் பெற்று தங்கப்பதக்கங்களை வென்றனர்.
 
மங்கோலியா நாட்டின் தலைநகர் உல்டான்பாடர் நகரில் பெண்களுக்கான 6வது ஆசிய குத்துச் சண்டை தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா, சீனா, மங்கோலியா உட்பட மொத்தம் 19 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர்.
 
இதில் நேற்று நடைபெற்ற 51 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம், சீனா வீராங்கனை ரென் கென்கன் ஆகியோர் மோதினர். இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற உலக சாம்பியனான ரென் கென்கன் கடும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் போட்டியின் முடிவில் 14-8 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவின் மேரி கோம் வெற்றிப் பெற்று, தங்கப்பதக்கம் வென்றார்.
 
அதேபோல 60 கிலோ எடைப் பிரிவிற்கான இறுதிப் போட்டியில் இந்தியாவின் சரிதா தேவி, தஜிகிஸ்தானின் கோரிவா மவ்சூனா ஆகியோர் மோதினர். இதில் சரிதா தேவி 16-9 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.
 
ஆனால் இந்திய வீராங்கனைகளான பிங்கி ஜங்ரா(48 கிலோ) சோனியா லதர்(54 கிலோ), மோனிகா சான்(69 கிலோ), பூஜா ராணி(75 கிலோ) ஆகியோர் இறுதிப் போட்டிகளில் தோல்வியை தழுவி, வெள்ளிப் பதக்கங்களை பெற்றனர்.



comments | | Read More...

செலீனா ஜெட்லிக்கு இரட்டக் குழந்தையாமங்கோ!

 
 

பாலிவுட் கவர்ச்சி நடிகை செலீனா ஜெட்லிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. இரண்டுமே ஆண் குழந்தைகள். அந்தக் குழந்தைகளுக்கு வின்ஸ்டன் மற்றும் விராஜ் என பெயர் சூட்டியுள்ளனர் செலீனாவும், அவரது கணழர் பீட்டர் ஹாக்கும்.


இரண்டு குட்டிக் குழந்தைகளும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கின்றனவாம். சொர்க்கத்திலிருந்து வந்த தேவதைகள் போல அழகாக இருக்கிறார்களாம். ஹாக் கூறியுள்ளார்.



30 வயதான செலீனாவும், அவரது கணவர் ஹாக்கும் குழந்தைகளுடன் சில நாட்களை செலவிடப் போகிறார்களாம். ஹாக், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபர். துபாயில் வசித்து வருகிறார். மிஸ் இந்தியா பட்டம் வென்றவரான செலீனா, கட்த ஜனவரி மாதம் தனது காதலைச் சொல்லி, ஜூலையில் கல்யாணம் செய்து கொண்டார்.


ஆஸ்திரேலியாவில் உள்ள ஆயிரம் காலத்துப் பழமையான புத்த ஆலயத்தில் வைத்து இவர்களது கல்யாணம் நடந்தது. தற்போது துபாயில் கணவருடன் உள்ள செலீனா விரைவில் குழந்தைகளுடன் மும்பை வரவுள்ளாராம்.
comments | | Read More...

2011 விளையாட்டு நிகழ்வுகள்

 
 


cricket
ஐனவரி 6

வரலாற்றின் மிகச் சிறந்த ஒருநாள் சர்வதேச கிரிக்கட் அணியில் இலங்கை அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முரளிதரன் இணைந்தார்.

ஐனவரி 7
இலங்கை அணியின் பந்துவீச்சாளர் அஐந்த மென்டிஸ் திருமண பந்தத்தில் இணைந்தார்.
23 வருடங்களின் பின்பு ஆஷஸ் கிண்ண தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
ஐனவரி 10
சர்வதேச கிரிக்கட் போட்டியிலிருந்து மகாய நிடினி ஓய்வு பெற்றார்.
ஐனவரி 14
இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சினுக்கு கலாநிதிப் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
ஐனவரி 21
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உலக கிண்ண போட்டிகளுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்தார்.
ஐனவரி 22
ஒருநாள் போட்டி அணித் தலைவர் பதவியில் இருந்து ஸ்மித் விலகுவதாக அறிவித்தார்.
பெப்ரவரி 05
சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது.
பெப்ரவரி 14
கிரிக்கெட் சரித்திரத்தில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலக சாதனை படைத்த முத்தையா முரளிதரன் சுயசரிதையை வெளியிட்டார்.
பெப்ரவரி 15
உலக கால்பந்து பிரபலங்களில் ஒருவரான ரொனால்டோ சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பெப்ரவரி 17
10-வது உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் டாக்காவில் இன்று துவக்க விழாவுடன் கோலாகலமாக ஆரம்பமானது.
பெப்ரவரி 22
2012 ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி அரங்கம் திறக்கப்பட்டது.
மார்ச் 02
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 15 வது போட்டியாக பெங்களூருவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது.
மார்ச் 04
உலகின் முன்னிலை டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான செரீனா வில்லியம்ஸின் நுரையீரலில் குருதிக்கட்டியொன்று கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் அவசர சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டார்.
மார்ச் 07
இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சுக் குறித்து அவுஸ்திரேலிய நடுவர் டெரல் ஹெயார் மீண்டும் குற்றச்சாட்டு
மார்ச் 08
உலகக் கிண்ண போட்டியில் யுவராஜ் சிங் உலக சாதனை படைத்தார். அயர்லாந்துக்கு எதிராக அபாரமாகப் பந்துவீசிய யுவராஜ் சிங் 31 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் இடது கை சுழற்பந்து வீச்சாளராக மிகச் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து சாதனை படைத்தார்.
கால்பந்தாட்டப் போட்டியொன்றில் மத்தியஸ்தர் ஒருவர் 36 தடவை சிவப்பு அட்டைகளை காட்டிய சம்பவம் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்றுள்ளது. இதுவொரு புதிய உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது.
மார்ச் 18
ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் இந்த உலகக் கிண்ண போட்டிகளுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.
மார்ச் 25
இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் 18 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்தார்.
ஏப்ரல் 02
10வது உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சம்பியனாகியது.
ஏப்ரல் 08
ஒரே நாளில் 70 லட்சம் ரசிகர்களை இணைந்து கொண்ட கால்பந்தாட்ட நட்சத்திரமான மெஸ்ஸி
ஏப்ரல் 12
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 15 சிக்ஸர்களை விளாசி அவுஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் உலக சாதனை படைத்தார்.
ஏப்ரல் 18
இலங்கையணியின் புதிய தலைவராக டில்ஷான் தெரிவு செய்யப்பட்டார்.
ஏப்ரல் 22
உலகின் பிரபலமான 100 பேர் பட்டியலை 'டைம்' வார இதழ் வெளியிட்டு இருந்தது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் கப்டன் மகேந்திர சிங் டோனியும் இணைந்து கொண்டார்.
ஏப்ரல் 23
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
மே 12
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனைக்கு சொந்தக்காரரானர் லஷித் மாலிங்க.
மே 15
19 ஆவது தடவையாக இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை கைப்பற்றி மன்செஸ்டர் யுனைடெட் கழகம் புதிய சாதனை.
மே 22
ரியல் மாட்ரிட் அணியின் அதிரடி வீரர் ரொனால்டோ லீக் கால்பந்து போட்டியில் கோல் அடிப்பதில் புதிய சாதனை படைத்தார்.
மே 25
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கட் வீரர் டெரி ஜென்னர் உடல்நலக்குறைவால் காலமானார்.
ஜூன் 05
லண்டனை சேர்ந்த மோ பரா ஐரோப்பிய 10 ஆயிரம் மீற்றர் போட்டியில் 26 நிமிடம் 46.57 வினாடிகளில் ஓடி புதிய சாதனை படைத்தார்.
ஜூன் 13
கனடா கிராண்ட் பிறீஸ் கார்பந்தயம்: பிரிட்டன் வீரர் ஜென்சன் சாதனை படைத்தார்.
ஜூன் 30
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் (ஐ.சி.சி.) 3 மாத காலத்திற்கு போட்டி தடை விதிக்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியோடு இலங்கையின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான ஜெயசூர்யா கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஜூலை 13
13 ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி சம்பியனானது.
ஜூலை 30
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது பயிற்சி போட்டியின் போது ராகுல் டிராவிட் 2 கேட்ச் பிடித்தார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் மொத்தம் 400 கேட்ச் பிடித்து சாதனை படைத்தார்.
ஆகஸ்ட் 09
பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் போட்டியில் ஸிம்பாப்வே அணி 130 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. சுமார் 6 வருடங்களின் பின்னர் ஸிம்பாப்வே அணி பங்குபற்றிய முதலாவது டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 13
ஐ.சி.சி விருதுகளில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதினையும் மக்கள் தெரிவு விருதினையும் இலங்கை அணி வீரர் குமார் சங்ககார பெற்றுக் கொண்டுள்ளார்.
செப்டம்பர் 24
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் தனது புத்தகத்தில் சச்சின், டிராவிட் உள்ளிட்டோர் குறித்து விமர்சித்திருந்தார். இதனால் பல சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
அக்டோபர் 10
ஜப்பான் கிராண்ட்பிரிக்ஸ் 'பார்முலா-1' கார்பந்தயத்தில் மூன்றாவது இடம் பிடித்த "ஆர்.பி.ஆர். ரெனால்டு' அணியின் செபாஸ்டியன் வெட்டல், உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டு, புதிய சாதனை படைத்தார்.
அக்டோபர் 23
2011ம் ஆண்டுக்கான ரக்பி உலக கிண்ணத்தை நியூலாந்து கைப்பற்றியது.
அக்டோபர் 24
மலேசியாவில் நடந்த பைக் ரேஸ் விபத்தில் இத்தாலி வீரர் சைமன் செல்லி பரிதாபமாக இறந்தார்.
நவம்பர் 08
முன்னாள் உலக குத்துச் சண்டை வீரர் ஜோ பிரேசியர் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.
நவம்பர் 15
சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் தனது 22வது ஆண்டை இன்று நிறைவு செய்தார் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்.
டிசம்பர் 05
டேவிஸ் கோப்பைக்கான இறுதி போட்டியில் நடாலின் அதிரடி ஆட்டத்தால் ஸ்பெயின் 3-1 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
சர்வதேச கோல்ப் போட்டிகளில் பங்கேற்ற முன்னணி வீரரான டைகர் உட்ஸ்(Tiger Woods) இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹொக்கி தொடரில் பெல்ஜியம் அணி 4-3 என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
டிசம்பர் 18
உலக சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரின் இறுதிப்போட்டியில் சீனாவில் வாங் யான் சாம்பியன் பட்டம் வென்றார்.




comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger