News Update :
Powered by Blogger.

ஏழாம் அறிவு படத்தில் தமிழீழ மக்களுக்காய் சமர்பணமான ஒரு பாடல்!(Video in)

Penulis : karthik on Sunday 9 October 2011 | 22:52

Sunday 9 October 2011

 

ஹரிஸ் ஜெயராஜ் தற்போது இசையமைத்திருக்கும் ஏழாம் அறிவு படத்தின் பாடல்களில் ஒரு பாடலை இலங்கைத் தமிழர்களுக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.அப்படத்தில் இடம்பெற்றுள்ள இன்னும் என்ன தோழா என்ற பாடலையே இலங்கைத் தமிழர்களுக்கு சமர்ப்பிப்பதாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.அந்த படத்தின் பாடல் .

comments | | Read More...

ஆணுறுப்பின் தோல் உரியவில்லை! மருத்துவ ஆலோசனைகள்!

 
 
Sent: Monday, October 10, 2011 7:58 AM
Subject: ஆணுறுப்பின் தோல் உரியவில்லை! மருத்துவ ஆலோசனைகள்!
 
 

என் ஆண் உறுப்பு செக்ஸ்இல் இருக்கும்போது கூட தோல் உரியாமல் அப்படியே இருக்கிறது அதேபோல நான் என் உறுப்பு மொட்டையும் (penis glans) கூட பார்த்ததில்லை, மேல் தோல் ரொம்ப டைட் ஆக இருக்கிறது, இதற்கு என்ன தீர்வு? என உங்களுக்குள்ளேயே யாருக்கும் சொல்லிக் கொள்ள முடியாத பிரச்சினைக்கு தீர்வைத் தேடித் திரிபவர்களா நீங்கள் இதே உங்கள் பிரச்சினைக்கான தீர்வு.

உங்களுக்கு இருக்கும் பிரச்சனைக்கு ஆங்கிலத்தில் பைமாசிஸ் ( Phimosis) என்று சொல்லுவார்கள். இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு, ஆண்குறியின் மொட்டை தோல் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூடிக்கொண்டு இருக்கும்.
தோலை உங்களால் பின்னோக்கி இழுத்து மொட்டை முழுமையாக தலைகாட்ட வைக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
ஒரு சாதாரணமான ஆண்குறி விரைப்படைந்தால், தோல் அதுவாகவே பின்னோக்கி நகர்ந்து மொட்டு வெளியே தலை காட்ட வழி வகுக்கும். அல்லது, நீங்கள் தோலை பின்னால் இழுத்து விட்டால், மொட்டு வெளியே முழுமையாக தெரிந்து விடும்.
ஒரு ஆண் குழந்தை பிறக்கும்போது, இயற்கையிலேயே தோல் ஆண்குறி மொட்டை மூடியபடி தான் இருக்கும். அந்தப் பையன் டீன் ஏஜ் பருவத்தை அடையும்போது, அவனுடைய தோல் பின்னோக்கி தளர்ந்து விடும். அதிக பட்சமாக பதினெட்டு வயதுக்குள் தோல் (Foreskin) தளர்ந்து, ஆண் குறியின் மொட்டை முழுமையாக வெளியே தெரியுமாறு செய்யும்.

பிரச்சனையின் காரணங்கள்:

1. வித்தியாசமான சுய இன்ப நிலை: உதாரணமாக, தலைக் குப்புறப் படுத்து, தலையணையில் ஆண் குறியைத் தேய்த்தல்.

2. பிறவியிலேயே ஏற்படும் பிரச்சனை ( Congenital Phimosis).

3. ஆண் குறித் தோலை கையால், வேகமாக இழுத்ததால் ஏற்படும் காயம்.

4. ஆண் குறி மொட்டு வீங்கி இருத்தல் ( balanitis).

5. நீரிழிவு நோயால் ஏற்படும் நோய்.

6. சுகாதாரமின்மை.

இந்தப் பிரச்சனைக்கு முடிவு:

இது ஒரு சாதாரணமான பிரச்சனைதான், எளிதாக தீர்த்து விடலாம்.
comments | | Read More...

தயாநிதிமாறன், கலாநிதிமாறன் வீடுகளில் சிபிஐ சோதனை! சன்டிவி அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள்!

 
 
 
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கலாநிதி மாறன் வீட்டிலும், சன் டிவி அலுவலகத்திலும் டெல்லியிலிருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தயாநிதி மாறனின் சென்னை போட்கிளப், டெல்லி, ஹைதிராபாத் இல்லங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரருடைய சகோதரர் கலாநிதி மாறன் மீதும் வழக்குகள் பதிவு செய்துள்ள சி.பி.ஐ., அவர்களுடைய அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுடைய வீடுகளிலும் சோதனை நடத்தி வருகிறது.



comments | | Read More...

oru paisa tamilan - ayyothidhasapandithar


comments | | Read More...

'பணக்கார' சுயேட்சை- வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தபோது கைது

 
 
மதுரை அருகே வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்த சுயேட்சை வேட்பாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
 
மதுரை மாவட்டம் திருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டில் எஸ்.ஐ. கமர்நிஷா, தனிப்பிரிவு ஏட்டு காளியப்பன் தலைமையில் பறக்கும் படை போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
 
அப்போது பொக்கம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் இளம்பரிதி மற்றும் அவரது ஆதரவாளர்களான பொன்மலை, பாலாஜி, சீனிவாசன் ஆகியோர் திருமங்கலம், பொக்கம்பட்டியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
 
இது குறித்து எஸ்.ஐ. கமர்நிஷா, தனிப்பிரிவு ஏட்டு காளியப்பன் தலைமையிலான பறக்கும் படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
இதனையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த போலீசார் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்த சுயேட்சை வேட்பாளர் இளம்பரிதி மற்றும் அவரது ஆதரவாளர்களான பொன்மலை, பாலாஜி, சீனிவாசன் ஆகியோரை போலீசார் கையும், களவுமாகப் பிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ. 21,500 பறிமுதல் செய்யப்பட்டது.



comments | | Read More...

அணு உலை மூலம் தமிழர்களைக் கொலல்த் துடிக்கும் காங்

 
 
தமிழர்கள் மீது அணு உலையைத் திணிக்க காங்கிரஸ் அரசு துடிக்கின்றது என்று தமிழர் களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
 
காலை நடந்த பேச்சுவார்த்தையின்போது உயர்மட்டக்குழு என்றும், கூடங்குளத்தில் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்படும் என்றும், மக்கள் தான் முக்கியம் என்றும் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் மாலையில் வல்லுநர் குழு என்றும், அணு உலைப் பணிகளை உரிய காலத்தில் தொடங்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் பல்டிக்கு மேல் பல்டி அடித்துள்ளார்.
 
உலகநாடுகள் பங்கேற்ற காமன்வெல்த் போட்டிகளுக்கான அரங்குகளும், கட்டிடங்களும் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே இடிந்து விழுந்தது குறித்து உலகமே விழுந்து விழுந்து சிரித்தது. இதனால் இந்தியா தலை குனிந்து நின்றது.
 
இதற்குக் காரணமான கல்மாடி போன்ற மலைவிழுங்கிகளை அமைச்சரவையிலேயே வைத்திருந்த மன்மோகன்சிங் இன்று கூடங்குளம் அணு உலையால் எந்த ஆபத்தும் இல்லை என்று அடித்துச் சத்தியம் செய்கிறார். அவர் மூக்கின் கீழேயே நடந்த உலக மகா ஊழல்களை உணராத உத்தமராக அவர் உள்ளார்.
 
அலைக்கற்றை ஊழலில் ரூ. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடிகளை விழுங்கி எமகாதகர்கள் ஏப்பம் விட்டது உலகத்திற்கே கேட்டது. ஆனால் அருகிலிருந்த தனக்கு தெரியவே தெரியாது என்று சத்தியம் செய்கிறார். இந்த மகா உத்தமர் தான் இப்போது, கூடங்குளம் பற்றி அடுத்த சத்தியம் செய்கிறார்.
 
கூடங்குளம் என்பது ஊழல் உலை மட்டுமல்ல. ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்கும் உலை வைக்கும் அணு உலை அது.
 
முதல் அணு உலையைக் கட்டும்போது எச்.சி.எல். என்ற நிறுவனம் ஒதுக்கீட்டுத் தொகையை 46 விழுக்காட்டுக்குத் தான் டெண்டர் கோரி ஒப்பந்தம் எடுத்தது.
 
கடல் மணலைக் கலந்து கட்டிடம் கட்டுகிறார்கள் என்று அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் புகார் அளித்தார். இப்படியெல்லாம் கண்ணெதிரேயே தில்லு முல்லு செய்து கட்டிய அணு உலை வரைபடத்திலும், விளம்பரத்திலும் வேண்டுமானால் பாதுகாப்பானதாக இருக்கலாம். நடைமுறையில் அதுவும் ஒரு காமன்வெல்த் கலக்கல் கட்டிடம் தான்.
 
ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அழித்தொழிக்க நினைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாடை கட்டுவோம்.
 
ஈழத் தமிழர் மீது தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை அள்ளிப்போட்டுக் கொன்ற இதே அரசு இன்று தமிழ்நாட்டுத் தமிழர்களை அழித்தொழிக்கும் ஆயுதத்தை நம் நடுவில் நிறுவுகிறது.
 
வெடித்த பின்னர் வேதனைகளைக் கொட்டக் கூட நாம் இருக்கமாட்டோம். நம்மைக் கொல்லத் துடிக்கும் இன எதிரிகளை இந்தத் தேர்தலிலும் அடையாளம் காண்போம். எங்கெங்கு காங்கிரஸ் கட்சி நிற்கிறதோ அங்கெல்லாம் அக்கட்சியை வேரடி மண்ணோடு சாய்ப்போம்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் அரிமாவளவன் தெரிவித்துள்ளார்.



comments | | Read More...

ரஜினிகாந்த்-ஷாருக்கான் சந்திப்பு !

 
 
 
நடிகர் ரஜினி காந்த்தை இந்தி நடிகர் ஷாருக்கான் இன்று காலை சந்தித்தார்.
ரஜினிகாந்த் நீண்ட நாள் ஓய்வுக்கு பிறகு மும்பை சென்று ஷாருக்கானின் Ôரா ஒன்Õ இந்தி படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினி தோன்றுவார். ஷாருக்கான் கேட்டதால், இதில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டார். எனவே இதற்காக ரஜினியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்புவதாக ஷாருக்கான் தெரிவித்தார். இதற்காக ரஜினியிடம் நேரம் ஒதுக்க கேட்டிருந்தார்.
இதையடுத்து மும்பையில் இருந்து புறப்பட்டு இன்று காலை 10.30 மணிக்கு ஜெட்ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்தார் ஷாருக்கான். பின்னர் ரஜினியை வ¦ட்டில் சந்தித்தார். வாசலுக்கு வந்து ஷாருக்கானை ரஜினி வரவேற்றார். பின்னர் இருவரும் தனிஅறையில் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அதன் பிறகு ஷாருக்கான் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.



comments | | Read More...

ஜெ.வுக்கு பேக்ஸில் சென்ற திமுக பிரமுகரின் பேச்சு

 
 
வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் மகேஸ்வரியும், அதிமுகவில் சித்ராவும் நிற்கின்றனர்.
 
திமுகவில் தேர்தல் பொறுப்பாளராக மா.செ காந்தி பொறுப்பேற்றுள்ளார். அதிமுகவில் அமைச்சர் முகமதுஜான் பொறுப்பு.
 
தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் முகமதுஜான், ''மணல் கொள்ளையன் காந்தியின் ஆதரவாளரை தோற்கடிக்க வேண்டும். ரவுடி செய்த திமுகவினரை கைது செய்து உள்ளே தள்ள வேண்டும். 5 ஆண்டுகளில் இவர்கள் போடாத ஆட்டமில்லை. இந்த நகருக்கு என்று எதுவும் செய்யவில்லை'' என போகும்மிடங்களில் எல்லாம் பேசி வருகிறார்.
 
 
இதற்கு பதிலடி தரும் திமுக மா.செ காந்தி, ''இன்று அமைச்சராகவுள்ள முகமதுஜான் திமுக ஆட்சியின் போது, அதிமுகவினர் கூட்டம் நடத்த, போராட்டம் நடத்த என்னிடம் தான் வந்து பணம் வாங்கி சென்றார். பலமுறை எழுதி தந்துவிட்டு பணம் வாங்கி சென்றுள்ளார்.
 
நாங்கள் மணல் விற்பனை செய்தோம். அப்போது ஒரு லோடு 4000க்கு விற்றோம். இன்று ஒரு லோட் மணல் 12 ஆயிரமாக விற்கிறது.
 
இந்த மணல் கொள்ளை பணம் யார்க்கு செல்கிறது என்பது எனக்கு தெரியும். நாங்கள் சிறைக்கு செல்ல தயங்கியவர்கள் அல்ல.
 
ஆனால் அதற்கு உடந்தையாக உள்ள உன்னையும் சேர்த்து தான் அழைத்து செல்வோம். எங்களை எதிர்த்தால் உன்னை பற்றி நான் நிறைய பேச வேண்டி வரும் ஜாக்கிரதை'' என்கிறார்.
 
திமுக மா.செ வின் இந்த பேச்சை அமைச்சர் முகமதுஜானின் எதிர்ப்பு கோஷ்டியினர் ஜெ வுக்கு பேக்ஸ் அனுப்பி வைத்து கட்சி துரோகி முகமது ஜான் பதவியை பறிக்க வேண்டும் என கேட்டு வருகின்றனர்.



comments | | Read More...

வடக்கில் அரச அதிகாரிகளை மிரட்டும் பொலிஸாருக்காக மன்னிப்புக் கேட்கிறார் டக்ளஸ்!- சரா எம்.பி.


நிர்வாக சேவை அதிகாரிகளைக் கிள்ளுக்கீரையாக உதாசீனப்படுத்தி மிரட்டுகின்ற பொலிஸாருக்காக மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கின்றார் அமைச்சர் டக்ளஸ். இதுதான் இன்றைய வடமாகாண சிவில் நிர்வாகத்தின் இலட்சணம்.இவர்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார் நேற்று மாலை புன்னாலைக் கட்டுவன் ஈவினையில் இடம்பெற்ற உதவி வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்

நேற்று முன்தினம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பிரதிப் பொலிஸ்மா அதிபரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் உதவி அரச அதிபர்களையும், பிரதேச செயலாளர்களையும் அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகளான இவர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொது மக்களை எப்படி இவர்கள் பாதுகாப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பினார் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன். நேற்று மாலை புன்னாலைக்கட்டுவன், ஈவினைப் பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவர் து.லோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து பேசிய சரவணபவன் எம்.பி. மேலும் கூறியதாவது:

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் பின் மக்கள் முன் செல்லும் துணிவில்லாத அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், அரசும் இணைந்து உருவாக்கிய மாயைதான் கிறீஸ் பூதங்கள். மக்கள் மத்தியில் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்கிய இவர்கள், மீண்டும் மக்கள் முன் செல்லும் ஓர் உபாயமாகவே இன்று விழிப்புக்குழுவை உருவாக்க முனைகின்றனர். இந்த விழிப்புக்குழுக்கள் அரசுக்கு வக்காலத்து வாங்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலேயே அமைக்கப்படுகின்றன.

முன்னாள் இராணுவ அதிகாரியான ஆளுநரின் நேரடிக் கண்காணிப்பிலேயே இவை இயங்கவுள்ளன. அங்கே ஜனநாயகத்தையும் சிவில் நிர்வாகத்தையும் எதிர்பார்க்க முடியாது. இவர்கள் விரைவில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலை மையமாகக் கொண்டே இந்த விழிப்புக்குழுக்களை அமைக்கத் தயாராகி வருகின்றனர். இந்த விடயத்தில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும். பிரதேச செயலாளர்களும் உதவி அரச அதிபர்களும் உண்மையான மக்கள் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படாத இந்த விழிப்புக்குழுக்களை நாம் நிராகரிக்க வேண்டும் என்றும் சரவணபவன் கூறினார்.

இந்த நிகழ்வின்போது புன்னாலைக்கட்டுவன், ஈவினை கிராமத்தில் வலது குறைந்தவர்களுக்கும் வயோதிபர்களுக்கும் சக்கர நாற்காலிகளையும் வறுமை நிலையில் உள்ள பெண்மணி ஒருவருக்குத் தையல் இயந்திரம் ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன். இந்த நிகழ்வில் வலி. தெற்கு பிரதேச சபைத் தலைவர் தி.பிரகாஷ், தமிழரசுக் கட்சி மானிப்பாய் இணைச் செயலாளர் பா.கஜதீபன் மற்றும் செல்வரட்ணம், அரசரட்ணம் ஆகியோரும் உரையாற்றினர்.

comments | | Read More...

சவூதி அரேபியாவில் 8 பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு கொடூர தண்டனை!

 

எகிப்து நாட்டு செக்யூரிட்டி கார்டு ஒருவரை கொ‌ன்றதாக 8 வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சவூதி அரேபியாவில் தலையை துண்டித்து கொடூர தண்டனை விதிக்கப்பட்டது. சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அரசுக்குச் சொந்தமான தானிய சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கின் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றிய எகிப்து நாட்டைச் சேர்ந்த ஹூசைன் சையீத் முகமது அப்துல்காலித் என்பவர் கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்க முயன்றவர்களை தடுத்த போது இவர் கொலைசெய்யப்பட்டதாக தெரியவந்தது.

இது தொடர்பாக வங்கதேச நா‌ட்டைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்கு கோர்டில் உறுதி செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குற்றவாளிகளான வங்கதேச நாட்டைச் சேர்ந்த எட்டு பேருக்கும், கடந்த வெள்ளியன்று அந்நாட்டு சட்டத்தினைபடி தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைவிதிக்கப்பட்டது. மேலும் மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு துவங்கி இதுவரை 58 பேருக்கு இது போன்று கொடூர தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கொடூர தண்டனைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

comments | | Read More...

ரம்பாவின் 8 மாதக் குழந்தை லான்யாவுக்கு 50 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக கொடுத்த மாமனார்


நடிகை ரம்பாவின் மகள் லான்யாவுக்கு அவரது அண்ணன் வாசு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவர்-ஜாக்குவார் காரை பரிசாகக் கொடுத்து அசத்தியிருக்கிறாராம்.

ரம்பாவுக்கு என்ன அவ்வளவு பெரிய புள்ளையா இருக்கு என்று நினைக்க வேண்டாம். லான்யா 8 மாதக் குழந்தை.

ஈழத் தமிழர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்து கனடாவில் செட்டிலான ரம்பாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

அதற்கு லான்யா என்று பெயர் வைத்துள்ளார். சமஸ்கிருதத்தில் லான்யா என்றால் தேவதை என்று பொருளாம்.

குழந்தை நல்லபடியாக பிறந்தால் திருப்பதி கோவிலுக்கு வருவதாக வேண்டிக் கொண்ட ரம்பா, லான்யாவுடன் இந்தியாவுக்கு வந்தார்.

திருப்பதி உள்பட பல கோவில்களுக்கு சென்று குட்டி தேவதையைத் தந்த இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.

ஏற்கனவே குளிருக்குப் பெயர்போன கனடாவில் குளிர்காலம் முடியும் வரை இந்தியாவில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளார்.

அவரது கொலுக், மொலுக் மகளைப் பார்க்க பல திரை நட்சத்திரங்கள் ரம்பா வீட்டுக்கு வந்து செல்கிறார்களாம்.

இந்நிலையில் ரம்பாவின் அண்ணனும், தயாரிப்பாளருமான வாசு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவர்-ஜாக்குவார் காரை 8 மாதக் குழந்தை லான்யாவுக்கு பரிசாகக் கொடுத்துள்ளாராம்.

comments | | Read More...

எத்தனை கோடிக்கும் மயங்காத சூப்பர்ஸ்ராரும் உலகநாயகனும்

 

கோடி, கோடியாய் பணம் கொடுக்க விளம்பர நிறுவனங்கள் தயாராக இருந்தும் விளம்பரஙகளில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

முன்பெல்லாம் விளம்பரப் படங்களில் மாடல்கள் தான் நடிப்பார்கள். அந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது திரை நட்சத்திரங்கள் தான் விளம்பர உலகை ஆண்டு வருகின்றனர்.

பிரபலமான திரை நடச்த்திரங்களை வைத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தினால் அது மக்கள் மத்தியில் சீக்கிரம் பிரபலமாகும் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கின்றனர்.

அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஆமீர் கான், நம்ம விஜய், தல அஜீத், சூர்யா, கார்த்தி, அனுஷ்கா, ஸ்னேகா, தமன்னா, த்ரிஷா, மாதவன், மனோரமா ஆச்சி, சுகன்யா, சுஹாசினி என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே விளம்பரப் படங்களில் நடித்து வருகிறது.

திரையுலகில் அதுவும் ரசிகர்களின் மனதில் எப்பொழுதும் உயர்வான இடத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன்.

அவர்கள் இருவரையும் எப்படியாவது விளம்பரப் படங்களில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று எத்தனையோ பேர் முயற்சி செய்துள்ளனர். கோடி, கோடியாய் தருகிறோம் என்றெல்லாம் கூறினார்கள்.

இதற்கெல்லாம் மயங்கிவிடுபவர்களா அவர்கள். என்ன தான் குட்டிகர்ணம் போட்டாலும் விளம்பரப் படங்களில் நடிக்க மாட்டோமே என்று உறுதியாக இருக்கிறார்கள்.

என்ன சொன்னாலும் மசிய மாட்டேன் என்கிறார்களே என்று விளம்பரதாரர்கள் கையைப் பிசைகிறார்களாம்!

comments | | Read More...

மருத்துவமனையை வாங்க பேரம் பேசி வருகிறார் நித்தியானந்தா

 
 
 
திருவண்ணாமலை நகரை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் வெளிநாட்டு நிதி உதவியுடன் நடத்தப்படும் ரங்கம்மாள் மருத்துவமனை உள்ளது.
 
இந்த மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெரும் வசதி உள்ளது. வெளிநோயாளிகள் பிரிவு, அவசர பிரிவு என செயல்படும் இம்மருத்துவமனையை ரஞ்சிதா புகழ் நித்யானந்தா சொந்தமாக வாங்க விலை பேசிவருவதாக கூறப்படுகிறது.
 
 
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தா, அவரது சொந்த ஊரான திருவண்ணாமலையில் புதியதாக மருத்துவமனை துவங்க ஆலோசனை நடத்தினார். இதற்காக வெளிநாடுகளில் நிதி பெறவும் முயற்சி செய்துகொண்டிருந்தார்.
 
அப்போதுதான் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானது. இதிலிருந்து தப்பினால் போதும் என அத்திட்டத்தை அப்போதுகைவிட்டிருந்தார்.
 
தற்போது அவர் மருத்துவமனையை வாங்க நேற்றும் இன்றும் திருவண்ணாமலையில் தங்கி நேரிடையாக பேரம் வருகிறார் என்று கூறப்படுகிறது.
 
 
 
 


comments | | Read More...

ராஜபக்சேயின் ஆலோசகர் சுட்டுக்கொலை

 
 
 
இலங்கையில் நடந்து வரும் உள்ளாட்சி தேர்தலில், அதிபர் ராஜபக்சேயின் ஆலோசகர் உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் எம்.பி. ஒருவர் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
 
 
இலங்கை முழுவதும் இருந்து 420 உறுப்பினர்களை 4 ஆண்டுகளுக்கு தேர்ந்து எடுக்கும் உள்ளாட்சி தேர்தல், கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இந்த தேர்தலில் அதிபர் ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுந்திரா கட்சி, கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
 
 
 
 
நேற்று வடக்கு கொழும்பு அருகே உள்ள கோதிகா வத்தா என்ற இடத்தில் உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்றது.
 
இதையொட்டி அதிபர் ராஜபக்சேயின் ஆலோசகரும், அவரது கட்சியின் முன்னாள் வக்கீலுமான பரதா லக்ஷ்மன் பிரேம சந்திரா அங்கு சென்றார்.
 
அப்போது அதிபர் கட்சி தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
 
இதைத்தொடர்ந்து எதிர் கட்சி தொண்டர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
 
இதில் குண்டு பாய்ந்து ராஜபக்சேயின் ஆலோசகர் இறந்தார். அவரது மெய்காப்பாளர், மற்றும் 2 தொண்டர்களும் உயிர் இழந்தனர்.
 
 
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் டுமிந்தா சில்வாவின் தலையில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் ஆபத்தான நிலையில், கொழும்பு ஆஸ்பத்திரியில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவரைத்தவிர மேலும் 9 பேர் காயம் அடைந்தனர்.
 
 
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவை போலீசார் அமல் படுத்தினார்கள். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
 
 
நேற்று நடந்த ஊராட்சி தேர்தலில், இன்று ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
 
 
கடந்த ஆண்டு இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிபர் ராஜபக்சேயின் கட்சி பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. இந்த தேர்தலுக்கு பின் ஒரு ஆண்டு கழித்து உள்ளாட்சி தேர்தல் நடந்து இருக்கிறது.
 
 
இந்த ஒரு ஆண்டு காலத்தில் அதிபர் ராஜபக்சேயின் செல்வாக்கு உயர்ந்ததா? சரிந்ததா? என்பதை இந்த தேர்தல் வெளிப்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.



comments | | Read More...

ரஜினியை சந்திப்பேன் - சென்னையில் ஷாருக் கான்

 
 
சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியைப் பார்க்க இந்தி நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக் கான் சென்னை வந்தார். ரா ஒன் படத்தில் ஒரு காட்சியில் நடித்துக் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்தையும் தான் பார்க்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.
 
சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
 
இப்போட்டியைப் பார்ப்பதற்காக ஷாருக் கான் இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை சூழ்ந்த செய்தியாளர்கள் சென்னை விஜயம் குறித்துக் கேட்டபோது, சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியைப் பார்க்க வந்துள்ளேன்.
 
ரா ஒன் தமிழ்ப் பதிப்பின் டிரெய்லர் வெளியீடு நடைபெறவுள்ளது. அதிலும் பங்கேற்கவுள்ளேன் என்றார்.
 
ரஜினிகாந்த்தைப் பார்ப்பீர்களா என்ற கேள்விக்கு ரஜினியையும் சந்திப்பேன் என்றார் ஷாருக்.



comments | | Read More...

a movie from mobile clips

comments | | Read More...

MOBILE CAMARA MIS USE IN KERALA 2

comments | | Read More...

adil

comments | | Read More...

Deshi Teenager Grl..call.02-8853053(NishA)

comments | | Read More...

போலி கடன் அட்டை மோசடி வழக்கில் 13 இந்தியர்கள்


நியூயார்க்: அமெரிக்காவில், போலி கடன் அட்டைகள் (கிரெடிட் கார்டு) மூலம், 13 மில்லியன் டாலர் மோசடி செய்த 111 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 13 பேர் இந்திய வம்சாவளியினர். அமெரிக்காவில், அடையாள அட்டை மற்றும் கடன் அட்டைகளின் விவரங்களைத் திருடி, அவற்றின் அடிப்படையில் போலி அட்டைகள் மூலம் கடந்த 16 மாதங்களில் மொத்தம் 13 மில்லியன் டாலர் (ஐந்து கோடியே 85 லட்ச ரூபாய்) அளவிற்கு பண மோசடி செய்த கும்பல்களைச் சேர்ந்த சிலரை, நியூயார்க் போலீசார் கைது செய்துள்ளனர்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger