News Update :
Powered by Blogger.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு: ஜெயலலிதா அறிவிப்பு

Penulis : karthik on Friday 14 September 2012 | 23:51

Friday 14 September 2012

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு: ஜெயலலிதா அறிவிப்பு கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு: ஜெயலலிதா அறிவிப்பு
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, செப்.15-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1974-ஆம் ஆண்டு கருணாநிதியின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவினை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்ததன் காரணமாக, ராமேஸ்வரம் பகுதியைச் சார்ந்த தமிழக மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவதும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், மேற்கு வங்க மாநிலம் "பெருபாரி" வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினைச் சுட்டிக்காட்டி, கச்சத்தீவினை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்த ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தில் நான் 2008-ம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற ம� �றையில் வழக்கு தொடர்ந்தேன்.

இது மட்டுமல்லாமல், கடந்த 2011 ஆம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றவுடன், இந்த வழக்கிற்கு வலு சேர்க்கும் விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை தன்னை ஒரு வாதியாக சேர்த்துக் கொள்ளும்படி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் இயற்ற நடவடிக்கை எடுத்தேன� ��.

இந்தத் தீர்மானத்தினையடுத்து, தமிழ்நாடு அரசின் வருவாய் துறையும் மேற்படி வழக்கில் தன்னை ஒரு வாதியாக இணைத்துக் கொண்டது. என்னால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை நாடாளு மன்ற இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் "பெருபாரி" வழக்கில் தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டி, இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பி� �்கு முற்றிலும் முரணான வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், கச்சத்தீவை தாரை வார்க்கும் ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டது செல்லத்தக்கதல்ல என்று எடுத்துரைத்து இருக்கிறேன்.

தற்போது தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல் குறையாத இன்றைய நிலையில், அது குறித்து 14.9.2012 அன்று எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர், கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன் வளத்துறை செயலாளர், அரசு தலைமை வழக்குரைஞர், அரசு கூடுதல் தலைமை வ ழக்குரைஞர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துவிட்ட ஒப்பந்தங்கள் செல்லத்தக்க தல்ல என தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை உச்ச நீதிமன்றம் உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி ஒரு மனுவினை தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்படும் என்பதைத் தெரிவ� �த்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
comments | | Read More...

குடியாத்தம் அருகே வீட்டில் வெடிகுண்டு வெடித்து விவசாயி பலி: 4 பேர் படுகாயம்

குடியாத்தம் அருகே வீட்டில் வெடிகுண்டு வெடித்து விவசாயி பலி: 4 பேர் படுகாயம் குடியாத்தம் அருகே வீட்டில் வெடிகுண்டு வெடித்து விவசாயி பலி: 4 பேர் படுகாயம்
குடியாத்தம் அருகே வீட்டில் வெடிகுண்டு வெடித்து விவசாயி பலி: 4 பேர் படுகாயம்

குடியாத்தம், செப்.15-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் பரதராமி அடுத்த பொம்மனாங்குளத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது43). விவசாயி. இவருக்கு முனியம்மாள் (38) என்ற மனைவியும், லோகேஸ்வரி (16), கோட்டீஸ்வரி (13), பரமேஸ்வரி (12), என்ற மகள்களும், ரங்கநாதன் (8) என்ற மகனும் உள்ளனர்.

குமரேசனின் வீடு மலையடிவாரத்தை ஓட்டியவாறு உள்ள நிலத்தில் உள்ளது. அந்த பகுதியில் உள்ள பலரது வீடுகள் ஆங்காங்கே வெகு தூர இடைவெளியில் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7.30 மணி அளவில் குமரேசன் வீட்டில் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. இந்த வெடிச்சத்தம் பல கிலோமீட்டர் தூரம் வரை கேட்டுள்ளது.

வெடிச்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து கிராம மக்கள் விரைந்து சென்று பார்த்த போது குமரேசனின் மாடி வீடு இடிந்து தரைமட்டமாகி கிடந்தது. இடிபாட்டுக்குள் குமரேசன் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது மனைவி முனியம்மாள், மகள்கள், லோகேஸ்வரி, கோட்டீஸ்வரி, மகன் ரங்கநாதன் ஆகியோர் படுகாயங்களுடன் கிடந்தனர்.

பின்னர் அவர்களை கிராம மக்கள் மீட்டு 108 ஆம்புலன் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முனியம்மாள் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். வெடிவிபத்து நடந்த போது குமரேசனது மகள் பரமேஸ்வரி வீட்டிற்கு வெளியே இருந்ததால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

மலையடிவாரத்தையட்டி குமரேசன் நிலம் உள்ளதால் அடிக்கடி அந்த நிலத்தில் காட்டுப்பன்றிகள் மட்டும் காட்டு விலங்குகள் நுழைந்து பயிர்களை நாசம் செய்து வந்தன. அதனை தடுக்க குமரேசன் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்ததாகவும், அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் வீடு இடிந்து பலியானதாகவும் தெரியவந்துள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. கணேசமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
comments | | Read More...

பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார்: போலீசார் விசாரணை



பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார்: போலீசார் விசாரணை பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார்: போலீசார் விசாரணை பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார்: போலீசார் விசாரணை

மருத்துவரும், நடிகருமான 'பவர் ஸ்டார்' சீனிவாசன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் நடத்தி, அதில் அவரே நடித்தும் வருகிறார். இவர் நடித்த 'லத்திகா' படம் இவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தது. இதன்பிறகு, சந்தானம் தயாரித்து நடிக்கும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் இன்னொரு நாயகனாகவும், சங்கர் இயக்கும் 'ஐ' படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் குரோம்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் என்பவர் சீனிவாசன் மீது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், தனக்கு சீனிவாசன் 10 கோடி கடன் தருவதாகக் கூறி, சொத்து ஆவணங்களையும், ஆவண சரிபார்ப்பு மற்றும் இதர பணிகளுக்காக ரூ.65 லட்சமும் கேட்டார். அனைத்தையும் வாங்கிக் கொண்டு இதுவரை எனக்கு கடன் வழங்கவில்லை. கொடுத்த பணத்தையும் �® �ிருப்பி தரவில்லை என கூறியுள்ளார்.

எனவே, சீனிவாசனை கீழ்ப்பாக்கம் போலீசார் அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் மேலும் 2 வடமாநிலத்தவர்களிடம் இதுபோல் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

comments | | Read More...

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஒலிம்பிக் தங்க மங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து


சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஒலிம்பிக் தங்க மங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஒலிம்பிக் தங்க மங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து

சீன மாஸ்டர்ஸ் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகள் சாங்சோவ் நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் பங்கேற்கவில்லை. à ��ளம் வீராங்கனை பி.வி.சிந்து இப்போட்டியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
 
இன்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 24-ம் இடத்தில் உள்ள பி.வி.சிந்து, லண்டன் ஒ லிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற சீன வீராங்கனை லீ சுவேருயி என்பவரை எதிர்கொண்டார்.
 
பரபரப்பான இப்போட்டியில் சிந்து, 21-19, 9-21, 21-16 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அவரது வாழ்நாளில் மி�® �ச்சிறந்த வெற்றி இதுவாகும்.


/

comments | | Read More...

நாகர்கோவில் அருகே 4 வயது மகளை கொன்று இளம்பெண் தீக்குளித்து தற்கொலை


நாகர்கோவில் அருகே 4 வயது மகளை கொன்று இளம்பெண் தீக்குளித்து தற்கொலை நாகர்கோவில் அருகே 4 வயது மகளை கொன்று இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

நாகர்கோவில் அருகே உள்ள வில்லுக்குறி, திருவிடைக்கோட்டையைச் சேர்ந்தவர் தாணப்பன். இவரது மகள் ஷீபா (வயது 28). இவருக்கும் செந்தில்குமார் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன் பின்பு ஷீபா அதே பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் அபர்ணா என்ற பெண் குழந்தை உள்ளது.

பெயிண்டர் வேலை பார்த்த அய்யப்பன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டு வேலைக்கு சென்றார். எனவே ஷீபா தனது மகளுடன் திருவிடைகோட்டில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஷீபா நேற்று மாலையில் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

யாருடனும் பேசாமல் மகளை மட்டும் வீட்டுக்குள் அழைத்துச் சென்று நள்ளிரவு ஒரு மணி அளவில் ஷீபாவின் வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. அதோடு ஷீபாவின் அலறல் சத்தம் அவரது குழந்தையின் அழுகையும் அக்கம் பக்கத்தாருக்கு கேட்டது. அவர்கள் வெளியே ஓடி வந்து பார்த்தபோது ஷீபாவ�® �ன் வீட்டு பின்புறத்தில் தீ கொழுந்துவிட்டு எரிவதை கண்டனர்.

உடனே அவர்கள் தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அங்கிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் இரணியல் இன்ஸ்பெக் டர் ஸ்ரீதரன் மற்றும் போலீசாரும் அங்கு வந்தனர்.

அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஷீபாவும் அவரது 4 வயது மகள் அபர்ணாவும் தீயில் கருகி கரிக்கட்டையாக இறந்து கிடந்தனர். போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்பு ஷீபா-அபர்ணா சாவுக்கு காரணம் என்ன? என்று விசாரித்தனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

இளமையிலேயே ஷீபா மிக அழகாக இருப்பார். இதனால் அவரிடம் பேசவும் பழகவும் அப்பகுதி வாலிபர்கள் பலரும் விரும்பினர். இதில் உறவினர் ஒருவருடன் ஷீபாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது ஷீபாவின் தந்தைக்கு தெரிய வந்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர் தற்கொலையும் செய்து �® �ொண்டார்.

அதன் பின்பு ஷீபா அவரது தாய் சிவக்குமாரி பராமரிப்பில் இருந்தார். அப்போதுதான் ஷீபாவுக்கும் செந்தில்குமார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் வாழ்க்கையை தொடங்கியதுமே செந்தில்குமாருக்கு ஷீபாவின் முந்தைய காதல் விவகாரம் தெரிய வந்தது. அதற்குள் இருவருக்கு ம் ஒரு மகன் பிறந்தான். என்றாலும் செந்தில்குமார் ஷீபாவை விவாகரத்து செய்து விட்டார்.

அதன் பின்பு மகனுடன் மீண்டும் தாய் வீட்டில் ஷீபா குடியேறினார். அப்போதுதான் அவருக்கு பக்கத்து வீட்டில் வசித்த அய்யப்பனுடன் பழக்கம் ஏற்பட்டது. இளமையில் தனிமையை அனுபவித்த ஷீபா அய்யப்பனை திருமணம் செய்ய விரும்பினார். இதையடுத்து அவர்களுக்கு ஷீபாவின் தாய் பதிவு த�® �ருமணம் செய்து வைத்தார்.

முதல் கணவர் மூலம் பிறந்த மகன், ஷீபாவின் தாயார் பராமரிப்பில் வளர்ந்தார். அதன் பின்பு ஷீபாவும் அய்யப்பனும் அதே பகுதியில் தனிக்குடித்தனம் சென்றனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந ்தை பிறந்தது. குழந்தை பிறந்த மறு ஆண்டே அய்யப்பனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. எனவே அவர் மனைவி, மகளை பிரிந்து வெளிநாடு சென்றார். இதனால் ஷீபா மீண்டும் தனிமையில் தள்ளப்பட்டார்.

கணவன் இல்லாமல் தனியாக வசித்த ஷீபாவிடம் அக்கம் பக்கத்து வாலிபர்கள் அடிக்கடி பேசி வந்தனர். இதைப்பார்த்த சிலர் ஷீபாவையும், அந்த வாலிபர்களையும் தொடர்புபடுத்தி நடத்தையில் சந ்தேகப்பட்டனர். இதுபற்றி ஷீபாவின் தாய் சிவக்குமாரியிடமும் புகார் கூறினர்.

ஏற்கனவே மகளால் பல பிரச்சினைகளை சந்தித்த சிவக்குமாரி மகளின் நடத்தையை ஊரார் குறைக்கூறியதால் நேற்று முன்தினம் மகளை சந்தித்து இதுபற்றி கேட்டார். அதன் பின்புதான் ஷீபா இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளார் என்று தெரிய வந்தது.

ஷீபா தற்கொலை செய்வதற்கு முன்பு மகள் அபர்ணாவை விஷம் கொடுத்து கொன்றிருப்பதும் தெரிய வந்தது. அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு விஷ மருந்துகள் இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றி உள்ளனர். மேலும் ஷீபா எழுதி வைத்த கடிதம் ஒன்றையும் எடுத்தனர்.

அதில், ஷீபா தனது தற்கொலைக்கான காரணம் பற்றி பக்கம் பக்கமாக எழுதி உள்ளார். அதில், தனது நடத்தையில் ஊரார் சந்தேகப்பட்டதால் தற்கொலை முடிவை எடுத்ததாக கூறி உள்ளார். இந்த சம்பவம் குறித்து தக்கலை ஆர்.டி.ஓ. மோகன சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.


/

comments | | Read More...

கூடங்குளம் மக்கள் மீது விமானம் தாக்குதல்:ஒருவர் பலி


கூடங்குளம் மக்கள் மீது விமானம் தாக்குதல்:ஒருவர் பலி கூடங்குளம் மக்கள் மீது விமானம் தாக்குதல்:ஒருவர் பலி

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதை உடனே நிறுத்த வலியுறுத்தி இடிந்தகரை உள்ளிட்ட கிராம மீனவர்கள் நேற்று கடலில் à ��ின்று போராட்டம் நடத்தியபோது, கடற்படை விமானம் போராட்டக்காரர்களை அச்சுறுத்துவது போல தாழ்வாகப் பறந்ததால் பீதியடைந்த 5 போராட்டக்காரர்கள் நிலை தடுமாறி கடலில் விழுந்தனர். அதில் ஒருவர் பலியானார்.

மத்திய பிரதேசத்தில் அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க 15 நாட்களாக கழுத்தளவு நீரில் நின்று விவசாயிகள் நடத்திய போராட்ட முறை இப்பொழுது கூடங்குளத்தில் எதிரொலித்து வருகிறது.

நேற்று முதல் இடிந்தகரையில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக கிராம மக்கள் கடலில் à ��ின்றபடி போராடி வருகின்றனர். இன்று 2வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது.

நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கடலோரக் காவல் படையின் சிறிய ரக விமானம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது படு தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தது. இது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டும் தொனியில் இருந்தது. மத்தியப் பà ��ரதேசத்தில் நடந்த போராட்டத்தின்போது கூட இப்படி நடந்து கொள்ளவில்லை மத்திய பாதுகாப்புப் படை. ஆனால் நேற்று நடந்ததைப் பார்த்த பொதுமக்கள், இது சிங்களப் படையினர், ஈழத் தமிழர்கள் மீது ஏவிய அடக்கà ��முறையை நினைவூட்டுவதாக உள்ளதாக குமுறல் வெளியிட்டனர்.

இந்த நிலையில் இந்தியக் கடலோரக் காவல் படையின் அச்சுறுத்தலால் ஒரு அப்பாவி போராட்டக்காரர் உயிரிழந்துள்ள செய்தி தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மக்கள் பலரும் இப்போராத்தில் கலந்து கொண்ட போது சிலர் தூண்டில் பாலத்தில் நின்றபடி போராட்டத்தை பார்த்தனர். அப்போது பல முறை கடலோரக் காவல்படை விமானம் மிகத் தாழ்வாக பறந்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தி குழந்தைகைகளை பயமுறுத்தியது. விமானம் மிகமிக தாழ்வாக பறக்கும் போ�® �ு பாலத்தில் இருந்து கைக்கு எட்டும் தூரத்தில் விமானம் இருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

அந்த சமயத்தில் தான் பாலத்தில் இருந்து சகாயராஜ் என்பவர் உள்ளிட்ட 5 பேர் கீழே விழுந்துள்ளனர். அதில் சகாயராஜ் தலையில் படுகாயமடைந்தது. இதையடுத்து 5 பேரையும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சகாயராஜ் உயிரிழந்தார். அவருக்குத் திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர்.

இந்த செய்தியை கேட்ட தமிழர்கள் மிகவும் கொதித்து போயுள்ளனர். காரணம், இதுவரை 550 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கப்பல் படையால் கொல்லபட்ட போது பாதுகாப்புக்கு வராத இந் திய கடலோர காவல் படை , இப்போது தங்கள் வாழ்வாதாரத்திற்கு போராட்டும் மக்களை குறிவைத்து வானில் பல நூறுமுறை பறந்து செல்கிறது. எவ்வளவு முறையிட்டும் இந்திய அரசு மக்களை காக்க இது போல விமானம் மூலம் கண்காணிக்கவில்லை . இன்று மட்டும் ஏன் இந்த விமானம் பலமுறை சுற்றிச் சுற்றி வட்டமிட்டது என�¯ �ற கேள்வியை எழுப்புகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.


/

comments | | Read More...

கூடங்குளம் போராட்ட மக்கள் மீது விமானம் தாக்குதல்: வைகோ கண்டனம்



கூடங்குளம் போராட்ட மக்கள் மீது விமானம் தாக்குதல்: வைகோ கண்டனம் கூடங்குளம் போராட்ட மக்கள் மீது விமானம் தாக்குதல்: வைகோ கண்டனம்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெ�® �ியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
தென்தமிழ்நாட்டைப் பேரழிவுக்கு ஆளாக்கும் அபாயம் நிறைந்த, கூடங்குளம் அணு உலையை அகற்ற வேண்டும்; இயக்கக்கூடாது; யுரேனியம் எரிபொருள் நிரப்பக் கூடாது என்று, இந்தியாவில் எங்கும் நடைபெறாதவிதத்தில், அமைதி வழி அறப்போராட்டத்தை, ஓராண்டுக்கு மேலாக இடிந்தகரையில், அனைத்து சமுதாய மக்களும், மதங்களைக் கடந்து நடத்தி வருகின்றனர். 

தங்களது, கடல் வாழ் உயிர் ஆதார வாழ்க்கை அழிந்து போகும் என்று மீனவ மக்கள், குறிப்பாக தாய்மார்கள் வீரமும், தியாகமும் செறிந்த உன்னதமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

செப் 9 ஆம் தேதி அணு உலை முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்தபோதிலும், அணு உலைக்கு அருகில் செல்லாமல், 1/2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால், கடற்கரையில், சாத்வீகப் போராட்டம் நடத்தினர். 

ஆனால், 10 ஆம் தேதி, காலையில், காவல்துறையினர் தடியடியும், கண்ணீர்ப் புகைப் பிரயோகமும் செய்தனர். இதில், குழந்தைகள், பெண்கள், உட்படப் பலர் படுகாயம் உற்றனர். காவல்துறையினர், கூடங்குளத்துக்கு உள்ளே நுழைந்து, வீடுவீடாகப் புகுந்து, அங்குள்ள மக்களை, ஈவு இரக்கம் இல்லாமல் தாக்கினர். 

மணப்பாட்டில், காவல்துறையினர் சுட்டதில், அந்தோணி ஜான் என்ற மீனவர் கொல்லப்பட்டார். இடிந்தகரை, கூத்தன்குழி மீனவ மக்கள், கடலுக்குள் இறங்கி, கழுத்து அளவு தண்ணீரில் அறப்போராட்டம் நடத்தியது, உலகத்தில் எங்குமே நடைபெறாத மகத்தான போராட்டம் ஆகும்.

கூடங்குளம், இடிந்தகரை வட்டாரத்தில், இந்திய விமானப்படையின் சிறிய ரக போர் விமானங்கள் தாழ்வாகப் பறப்பதையும், கடற்படை ரோந்துப் படகுகள், அப்பகுதி கடலில் சுற்றுவதையும் குறித்து, நான் ஏற்கனவே கண்டன அறிக்கை விடுத்து இருந்தேன். 

சிங்களக் கடற்படை, நமது தமிழக மீனவர்கள், 570 பேரைச் சுட்டுக் கொன்றது. அதனை எந்தக் கட்டத்திலும் தடுக்க முடியாத இந்தியக் கடற்படை, சிங்களக் கடற்படையோடு கூட்டுச் சதி செய்கிறது. இந்தச் சூழ்நிலையில், இடிந்தகரை கடற்கரையில், கடல் நீருக்குள் இறங்கி அறப்போர் நடத்திய மீனவர்களை அச்சுறுத்தவும், தாக்க�® �ும் முனைந்து, இந்திய விமானப்படையின் சிறிய ரக போர்விமானம், தாழப் பறந்து இருக்கின்றது. 

அதில், இடிந்தகரையைச் சேர்ந்த சகாயம் என்ற மீனவர், தலை உடைந்து, படுகாயம் அடைந்து உள்ளார். இந்திய விமானப்படை, ஒரு சமர்க்களத்தில் எதிரி நாட்டு மக்களைக் தாக்கிக் கொல்வதைப் போல, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றது. 

இந்தத் தாக்குதல், இந்திய ஒருமைப்பாட்டின் சவப்பெட்டியின் மீது அடிக்கப்பட்ட ஆணி ஆகும். இந்தக் கொடூரத் தாக்குதலுக்குக் காரணமான இந்திய விமானப்படையினர் மீது, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். இந்திய ராணுவ அமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். 

காங்கிரஸ் தலைமை தாங்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக, தமிழக மக்கள் கிளர்ந்து எழுவார்கள். அதற்காக மக்கள் சக்தியை, முழு மூச்சாகத் திரட்டுவோம் என எச்சரிக்கிறேன். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


/

comments | | Read More...

இனி வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே ரூ.386.50 7வது சிலிண்டர் ரூ.733.50


இனி வருடத்துக்கு ஒரு வீட்டுக்கு இப்போதைய விலையான ரூ.386.50க்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வாங்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கேஸ் சிலிண்டரின் விலையும் ரூ.733.50 ஆக இருக்கும். இந்தக் �® �ட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக் கூட்டத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதே போல சமையல் கேசுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. கேஸ் விலையை மத்திய அரசு உயர்த்தாவிட்டாலும், அதன் சப்ளை யில் மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது.

இப்போது 14.2 கிலோ எடை கொண்ட சமையல் ஒரு கேஸ் சிலிண்டரின் உண்மையான விலை ரூ.733.50 ஆகும். ஆனால�¯ , ஒவ்வொரு கேஸ் சிலிண்டருக்கும் மத்திய அரசு ரூ.347 ரூபாய் மானியமாக வழங்குகிறது. இதனால் நமக்கு சிலிண்டர் ரூ.386.50க்கு விற்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் இந்த மானியத்தை ஒரு வருடத்துக்கு முதல் 6 சிலிண்டர்களுக்கு மட்டுமே வழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மேல் வாங்கப்படும் சிலிண்டர்களுக்கு மà ��்கள் உண்மையான விலையைத் தர வேண்டும்.

இதனால் இனி வருடத்துக்கு ஒரு வீட்டுக்கு இப்போதைய விலையான ரூ.386.50க்கு 6 கேஸ் சிலிண்டர்க ள் மட்டுமே வழங்கப்படும். இதையடுத்து வாங்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கேஸ் சிலிண்டரின் விலையும் ரூ.733.50 ஆக இருக்கும்.

இந்தக் கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருகிறது.

சந்தை விலையான ரூ.733.50 கொடுத்து ஆண்டுக்கு எத்தனை சிலிண்டர்கள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். இதற்கு உச்ச வரம்போ, கட்டுப்பாடோ நிர்ணயிக்கப்படவில்லை.

இந்தக் கட்டுப்பாட்டால் வருடத்துக்கு 6 சிலிண்டர்களுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு பாதிப்பு இருக்காது. ஆனால் அதற்கு மேல் பயன்படுத்துபவர்கள் கிட்டத்தட்ட இரு மடங்கு விலை க�¯ �டுத்துதான் ஒவ்வொரு கூடுதல் சிலிண்டரையும் வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.


/

comments | | Read More...

ஆந்திராவில் தோப்புக்கரணம் தண்டனைக்கு மாணவன் பலி

ஆந்திராவில் தோப்புக்கரணம் தண்டனைக்கு மாணவன் பலி: பள்ளிக்கூடம் சூறை ஆந்திராவில் தோப்புக்கரணம் தண்டனைக்கு மாணவன் பலி: பள்ளிக்கூடம் சூறை
ஆந்திராவில் தோப்புக்கரணம் தண்டனைக்கு மாணவன் பலி: பள்ளிக்கூடம் சூறை

நகரி, செப். 14- ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் ராயல் எம்பஸ்வி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முகம்மது சித்திக் ஹ§சைன் என்பவரின் மகன் முகம்மது இஸ்மாயில், 10-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் ஏற்கனவே ஒரு விபத்தில் சிக்கி கால் முறிவு ஏற்பட்டவன். இவனது மூட்டில் அறுவை சிகிச்சை செய்து பிளேட் பொருத்தப்பட்டு இருந்தது. கடந்த 4-ந்தேதி வகுப் பறையில் இஸ்டாயில் குறும் புத்தனம் செய்துள்ளான். வகுப்பு ஆசிரியையான மதினாபேகம் அவனுக்கு 100 முறை தோப்புக்கர்ணம் போடுமாறு தண்டனை அளித்துள்ளார். 40 தோப்புக்கரணம் போட்ட நிலையில் அவன் வகுப்பிலேயே மயங்கி விழுந்தான. இதையடுத்து அவன் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் அவன் நேற்று இறந்தான். தோப்புக்கரணம் போடச்சொல்லி தண்டனை கொடுத்ததால், கால் மூட்டில் பொருத்தப்பட்டிருந்த பிளேட் உடைந்து, செப்டிக் ஆனதால், மாணவன் இஸ்மாயில் இறந்ததாக அவனது பெற்றோர் குற்றம்சாட்டினார். பின்னர் பெற்றோரும், உறவினர்களும் திரண்டு சென்று பள்ளிக்கூடத்தை சூறையாடினர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை சதானாம் செய்து அனுப்பி வைத்தனர்.  இதுபற்றி துணை போலீஸ் கமிஷனர் அகுன்அகர்வால் கூறியதாவது:- மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், வகுப்பு ஆசிரியை மதினாபேகம் மீது 304-ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவனின் மரணத்துக் கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே தெரியவரும். உடல் ரீதியிலான தண்டனை காரணமாக மாணவன் இறந்ததாக தெரியவந்தால், ஆசிரியை கைது செய்யப்படுவார். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல குண்டூர் மாவட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில் 2 மாணவர்கள் தலைமை ஆசிரியரால் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மாணவர்கள் 2 பேர் சீருடை அணியாமல் பள்ளிக்கு வந்தனர். அவர்களை தனது அறைக்கு அழைத்த தலைமை ஆசிரியர், மின்சார ஒயரால் அவர்களை அடித்துள்ளார். இதில் உடலில் காயம் ஏற்பட்ட அந்த மாணவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். 
comments | | Read More...

உலக அழகி யுக்தா முகி புகார்

கொடுமைப்படுத்துவதாக கணவர் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி புகார் கொடுமைப்படுத்துவதாக கணவர் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி புகார்
கொடுமைப்படுத்துவதாக கணவர் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி புகார்



முன்னாள் உலக அழகியும், நடிகையுமான யுக்தா முகி தனது கணவர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.கடந்த 1999ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் யுக்தா முகி. அதன் பிறகு அவர் சில இந்தி படங்களில் நடித்தார்.

தமி்ழில் அஜீத் குமார், ஜோதிகா நடித்த பூவெல்லாம் உன் வாசம் படத்தில் யுக்தா முகி, யுக்தா முகி என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். பின்னர் பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பிரின்ஸ் டுலியை கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி மணந்தார். அதன் பிறகு திரையுலகில் இருந்து தள்ளியே இருக்கிறார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் யுக்தா முகி தனது கணவர் மீது போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதில், பிரின்ஸ் டுலி தன்னை அவ்வப்போது அடித்து கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அவரது புகாரின்பேரில் டுலி மீது தண்டிக்க இயலாத குற்றத்தின் கீழ் அம்போலி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தால் நீதிமன்ற உத்தரவின்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவோ, கைது செய்யவோ முடியாது.முன்னாள் உலக அழகியான யுக்தா முகி தனது கணவர் மீது புகார் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
comments | | Read More...

டீசல் விலை உயர்வு: ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்ந்தது

டீசல் விலை உயர்வு: ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்ந்தது டீசல் விலை உயர்வு: ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்ந்தது
டீசல் விலை உயர்வு: ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்ந்தது

சென்னை, செப். 14-

டீசல் விலையை மத்திய அரசு வரலாறு காணாத வகையில் உயர்த்தியுள்ளது. இதுவரை ரூ.43.91க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல் விலை தற்போது ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.48.91க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உயர்த்தப்பட்ட டீசல் விலையில் தமிழக அரசு விற்பனை வரியாக ரூ.1.20 வசூலிக்கிறது. இவற்றுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.6.20 விலை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வால் அத்யாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது.

டீசல் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தவுடன் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உடனடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது. 2 கிலோமீட்டர் அல்லது 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் செய்தால் ரூ.60 வரை செலுத்த வேண்டியது உள்ளது.

சென்னையில் 70 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவற்றில் 10 ஆயிரம் ஆட்டோக்கள் டீசலில் ஓடக்கூடியவை. மீதமுள்ள ஆட்டோக்கள் பெட்ரோலில் ஓடக்கூடியது. பெட்ரோல் விலை உயர்வு செய்யாத நிலையில் கூட பெட்ரோல் ஆட்டோ டிரைவர்களும் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். சென்னையில் மாநகர பஸ் போக்குவரத்து இல்லாத இடங்களில் ஷேர் ஆட்டோ என்ற பெயரில் பெரிய அளவிலான ஆட்டோக்கள் அதிகளவு ஓடுகின்றன.

மாநகர பஸ்களின் வருவாயை தடுக்கக்கூடிய இந்த ஆட்டோக்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புற்றீசல் போல் ஓடுகின்றன. இந்த வகை ஆட்டோக்களை சென்னை வாசிகள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். பஸ்சுக்காக காத்து நிற்பதற்குள் அடுத்தடுத்து வரும் இந்தவகை ஆட்டோக்களில் ஏறி பயணம் செய்வதையே பெரிதும் விரும்புகிறார்கள். இந்த ஷேர் ஆட்டோக்களில் ஒருவர் பயணம் செய்ய குறைந்த பட்சம் ரூ.10 ஆக இருந்தது. டீசல் விலை உயர்வுக்கு பிறகு ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதிகபட்சமாக ரூ.10 முதல் ரூ.20 வரை ஷேர் ஆட்டோக்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது அன்றாட போக்குவரத்து செலவிற்காக கூடுதல் தொகை செலவிட நேரிடுகிறது. இந்த திடீர் கூடுதல் செலவு சாதாரண, நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது.

தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய பெண்கள், இளைஞர்கள் ஷேர் ஆட்டோக்களை அதிகம் பயன்படுத்துவார்கள். இந்த திடீர் கட்டண உயர்வு தங்களுக்கு கூடுதல் செலவினமாகும் என்று மனம் குமுறுகிறார்கள். டீசல் விலை உயர்ந்தவுடன் ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்த தனியார் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் முடிவு செய்துள்ளனர். ரூ.20 முதல் ரூ.30 வரை கட்டண உயர்த்தபடும் என்று கே.பி.என் பஸ் நிர்வாக இயக்குனர் கே.பி.நடராஜன் தெரிவித்தார் அவர் மேலும் கூறியதாவது:-

ஏற்கனவே மோட்டார் தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. இத்தொழிலில் ஈடுபட்ட பலர் தொடர்ந்து செய்யமுடியாமல் வெளியேறி விட்டனர். மத்திய அரசு அடிக்கடி டீசல் விலையை உயர்த்தி வருவதால் பஸ் கட்டணத்தையும் நாங்கள் உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம். இந்த சுமை பொதுமக்கள் தலையில்தான் விழுகிறது. மாநில அரசு வரி, டோல்கேட் கட்டணம் அதிகம் வசூலிப்பதால் இத்தொழிலில் லாபகரமாக நடத்த முடியவில்லை. தற்போது டீசல் விலையை உயர்த்தியதன் விளைவாக ஆம்னி பஸ்கள் கட்டணம் குறைந்தது ரூ.20 முதல் ரூ.30 வரை உயர வாய்ப்பு உள்ளது. 31 இருக்கைகள் கொண்ட ஆம்னி பஸ்களில் 20 இருக்கைகளை மட்டுமே கணக்கிட்டு கட்டணம் உயர்த்தினால் வண்டிகளை இயக்க முடியும்.

டீசல் விலை உயர்வால் எனது நிறுவனத்தில் மட்டும் ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் கூடுதலாக செலவாகிறது. ஆன்-லைன் மூலம் புக்கிங் வசதி எங்கள் நிறுவனத்தில் இருப்பதால் கட்டண உயர்வை கணக்கிட்டு அவற்றை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய ஓரிரு நாட்கள் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger