News Update :
Powered by Blogger.

பாட்னா குண்டுவெடிப்பு: டெல்லி விமான நிலையத்தில் இன்று தீவிரவாதி பிடிபட்டான் patna bomb blast terrorist arrested delhi airport

Penulis : Tamil on Thursday 31 October 2013 | 03:30

Thursday 31 October 2013

பாட்னா குண்டுவெடிப்பு: டெல்லி விமான நிலையத்தில் இன்று தீவிரவாதி பிடிபட்டான் patna bomb blast terrorist arrested delhi airport

பாட்னா, அக். 31–

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் பலியானார்கள். 82 பேர் காயம் அடைந்தனர். பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசார கூட்டத்தை சீர்குலைக்க இந்த குண்டுவெடிப்புகளை இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் திட்டமிட்டு நடத்தி இருப்பது தெரியவந்தது.

தெக்சீன் அக்தர் என்ற தீவிரவாதி உத்தரவின் பேரில் நடந்த இந்த நாசவேலையில் 6 தீவிரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்தது. குண்டு வெடிப்பு நடந்த உடனே இம்தியாஸ் அன்சாரி, தவ்சீம், தாரிக் அன்சாரி ஆகிய 3 பேர் பிடிப்பட்டனர்.

இதில் அன்சாரி குண்டு காயம் காரணமாக உயிரிழந்தான். இதற்கிடையே இம்தி யாஸ் கொடுத்த தகவலின் பேரில் 4–வது குற்றவாளி உஜ்ஜர் அகமது நேற்று கைது செய்யப்பட்டான்.

இந்த நிலையில் இன்று டெல்லி விமான நிலையத்தில் முகம்மது அப்சல் என்பவனை போலீசார் கைது செய்தனர். இவன் நேற்று கைதான உஜ்ஜர் அகமதுவின் உறவினர் ஆவார்.

விமான நிலையத்தில் தன் மனைவியை பார்க்க வந்த போது முகம்மது அப்சல் சிக்கியது தெரிய வந்துள்ளது. இவனுக்கும் பாட்னா குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

முகம்மது அப்சலை தேசிய விசாரணைக் குழுவினர் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள். முகம்மது அப்சல் பிடிபட்டதன் மூலம் பாட்னா நாசவேலை தொடர்பாக சிக்கி இருக்கும் தீவிரவாதிகள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

முக்கிய குற்றவாளியான தெசீன் அக்தரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

...

shared via

comments | | Read More...

ரஜினி பொண்ணை நான் தேடிப்போகல - தனுஷ் dhanush

Penulis : Tamil on Wednesday 30 October 2013 | 22:23

Wednesday 30 October 2013

ரஜினி பொண்ணை நான் தேடிப்போகல; அதுவாத்தான் வந்தது’ : பரபரப்பை கிளப்பிய தனுஷ் !

dhanushஇந்த பீடிக்கு அந்த லேடி கேட்குதா” என்று கமெண்ட் அடிக்கும் அளவுக்கு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தவர் நடிகர் தனுஷ்:
அப்படிப்பட்ட தனுஷ் தான் சமீபத்தில் ஒரு டிவி பேட்டியில் “நான் நல்ல புருஷன் இல்லை, ஆனால் என் குழந்தைக்கு ஒரு நல்ல தந்தையாக இருக்க முயற்சிக்கிறேன்” என்று மனம் திறந்து கூறியிருக்கிறார்.
comments | | Read More...

தி.மு.க. ஆட்சியில் தேவர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது: மு.க.ஸ்டாலின் பேட்டி Stalin says Thevar festival celebrated DMK rule

தி.மு.க. ஆட்சியில் தேவர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது: மு.க.ஸ்டாலின் பேட்டி Stalin says Thevar festival celebrated DMK rule

கமுதி, அக்.30–

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நடைபெற்றது. தி.மு.க. சார்பில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் 12.25 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:–

பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் அனைத்து சமூக மக்களால் போற்றப்பட கூடியவர். தி.மு.க. ஆட்சி காலத்தில் கல்லூரிகளுக்கு பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் பெயர் சூட்டி பெருமை சேர்த்தோம்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் பசும்பொன்னில் அனையா விளக்கு அமைக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் தேவர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அவர் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு தேவையற்றது. தேர்தலுக்காக இங்கு நாங்கள் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

...

shared via

comments | | Read More...

திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன், பாத்திமாபாபு, நிர்மலா பெரியசாமியும் அதிமுகவில் இணைந்தனர் DMK former minister nirmala periasamy fathima babu join ADMK

Penulis : Tamil on Monday 28 October 2013 | 21:44

Monday 28 October 2013

திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன், பாத்திமாபாபு, நிர்மலா பெரியசாமியும் அதிமுகவில் இணைந்தனர் DMK former minister nirmala periasamy fathima babu join ADMK

சென்னை, அக். 28–

அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதாவை இன்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன்; அந்தமான் மாநில ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் பி.ஆர். கணேசன் ஆகியோர் தனித்தனியே நேரில் சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்தனர். அப்போது, கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பரிதி. இளம்வழுதி உடன் இருந்தார்.

திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி–2 தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருச்சி கே. சௌந்தரராசன், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகர மன்றத் தலைவர் ஐ.ஆபிதாசேக் தனது கணவர் ஷேக் அப்துல்காதருடன் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அப்போது, தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் உடன் இருந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் கா. கோவிந்தராஜ பெருமாள், நேரில் சந்தித்து தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அப்போது, கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் என். சின்னத்துரை உடன் இருந்தார்.

நிகழ்ச்சி தொகுப்பாளரும், செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி, தஞ்சாவூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் விஜயகுமார், கடலூர் மாவட்ட காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் தலைவர் கடலூர் இரா. ராஜேந்திரன், ஈரோடு மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த எஸ்.கே. நரேந்திரன் ஆகியோர் தனித்தனியே நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

...

shared via

comments | | Read More...

நடிகர் சிரஞ்சீவி வெள்ள நீரில் தவறி விழுந்தார் Actor chiranjeevi falls into flood waters

நடிகர் சிரஞ்சீவி வெள்ள நீரில் தவறி விழுந்தார் Actor chiranjeevi falls into flood waters

ஐதராபாத், அக். 29-

ஆந்திராவில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் அடைமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு 53 பேர் பலியாகினர்.

16 மாவட்டங்களில் உள்ள பல லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

வெள்ள நிவாரண பணிகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக நடிகரும் மத்திய மந்திரியுமான சிரஞ்சீவி நேற்று கிழக்கு கோதவரி மாவட்டத்துக்கு சென்றார்.

காக்கிநாடா அருகேயுள்ள ஆஞ்சநேயா நகரை பார்வையிடுவதற்காக படகில் ஏறப்போன சிரஞ்சீவி கால் நழுவி வெள்ள நீரில் விழுந்தார். பதற்றமடைந்த அவரது பாதுகாவலர்கள் நீரில் குதித்து அவரை பாதுகாப்பாக கரையேற்றினார்கள்.

அங்கிருந்து நேராக அனபர்தி தொகுதி எம்.எல்.ஏ. சேஷா ரெட்டியின் வீட்டிற்கு சென்ற சிரஞ்சீவி சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்றார்.

...

shared via

comments | | Read More...

சவுதியில் தடையை மீறி கார் ஓட்டிய பெண்களுக்கு 300 ரியால் அபராதம் 300 Riyals fined on women for driving cars amidst ban

Penulis : Tamil on Sunday 27 October 2013 | 20:42

Sunday 27 October 2013

சவுதியில் தடையை மீறி கார் ஓட்டிய பெண்களுக்கு 300 ரியால் அபராதம் 300 Riyals fined on women for driving cars amidst ban

ரியாத், அக். 28-

சவுதி அரேபியாவின் சாலைகளில் பெண்கள் கார்களையோ இதர வாகனங்களையோ ஓட்டிச் செல்ல கூடாது என மதவாதிகள் தடை செய்துள்ளனர்.

இந்த தடையை மீறும் பெண்கள் போலீசார் மற்றும் மததலைவர்களால் தண்டிக்கப்பட நேரிடும் எனவும் அவர்கள் எச்சரித்தனர். கார்களை ஓட்டுவதால் பெண்களின் கருப்பை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் பயமுறுத்தினர்.

இந்த தடை அங்குள்ள பெண்ணியக்க வாதிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மதவாதிகளின் மிரட்டல்களுக்கு வலு சேர்க்கும் விதமாக அந்நாட்டில்  பெண்களுக்கு ஓட்டுனர் உரிமங்களும் வழங்கப்பட்டதில்லை.

இந்நிலையில், இந்த தடையை உடைத்தெறியும் விதமாக நேற்று கடை மற்றும் அலுவலங்களுக்கு கார்களை ஓட்டிச் சென்ற சுமார் 60 பெண்கள் தாங்கள் கார் ஓட்டிச் சென்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ஓட்டுனர் உரிமங்களை வைத்துள்ள இவர்களில் பெரும்பாலான பெண்கள் மதவாதிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு தங்களது பெண்ணுரிமையை நிலைநாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் ரியாத்தில் கார் ஓட்டிச் சென்ற 6 பெண்களையும், நாட்டின் இதர பகுதிகளில் கார் ஓட்டிய மேலும் 10 பெண்களையும் கைது செய்த போலீசார் அவர்களுக்கு தலா 300 ரியால் (இந்திய மதிப்புக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதித்தனர்.

சவுதி அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என அபராதம் விதிக்கப்பட்ட பெண்களிடமும் அவர்களது தந்தை அல்லது கணவரிடமும் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

உலகிலேயே பெண்கள் கார் ஓட்டக்கூடாது என தடை செய்துள்ள ஒரே நாடு சவுதி அரேபியா தான் என்பது குறிப்பிடத் தக்கது.

...

shared via

comments | | Read More...

நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி: பாட்னா பொதுக்கூட்டத்தில் மோடி குற்றச்சாட்டு Narendra Modi takes potshots at Nitish

நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி: பாட்னா பொதுக்கூட்டத்தில் மோடி குற்றச்சாட்டு Narendra Modi takes potshots at Nitish

பாட்னா, அக். 27-

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று முதல் முறையாக பீகார் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் குறித்து மோடி கூறியதாவது:-

உனது நண்பர் பாரதீய ஜனதாவை விட்டு ஏன் சென்றார் என்று மக்கள் என்னை கேட்கிறார்கள். குரு ஜெயப்பிரகாஷ் நாராயணன், சமூக சீர்திருத்தவாதி ராம் மனோகர் லோஹியாவை யார் முதுகில் குத்துகிறார்களோ, அவர்கள்தான் நீண்ட கால நண்பர்களாகிய பாரதீய ஜனதாவை விட்டு எளிதில் செல்ல முடியும்.

முதல் மந்திரி நிதிஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி. அவர் பீகார் மக்களை காட்டிக்கொடுத்து விட்டார். இவர்கள் காங்கிரசுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

1999-ம் ஆண்டு அதிகப்படியான எம்.எல்.ஏ.-க்கள் எங்களுக்கு இருந்தும் நிதிஷ்குமார் தலைமையை ஏற்க எங்களது கட்சி முதலமைச்சர் பதவியையே தியாகம் செய்தது. அப்போது நிதிஷ் குமாரின் தலைமையை பாரதீய ஜனதா ஏற்றது.

பீகார் மக்களின் நலனுக்காவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்காகவும் பல்வேறு தியாகங்களை செய்து ஐக்கிய ஜனதா தளத்துடன் பாரதீய ஜனதா இணைந்தே செயல்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

...

shared via

comments | | Read More...

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் 7.3 ரிக்டர் ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு 7.3 Magnitude quake rocks japan

Penulis : Tamil on Friday 25 October 2013 | 17:34

Friday 25 October 2013

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் 7.3 ரிக்டர் ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு 7.3 Magnitude quake rocks japan

டோக்கியோ, அக். 26-

ஜப்பான் தலைநகர் டோக்கியோ இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் குலுங்கியது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.10 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட போது பெரும்பாலான மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். வீடுகள் திடீரென்று அதிர்ந்ததால் பீதியடைந்த மக்கள் தூக்கக் கலக்கத்துடன் அலறியபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் டோக்கியோ நகரில் இருந்து 480 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹொன்ஷுவில் முழுமையாக உணரப்பட்டது. அப்பகுதியில் உள்ள கட்டிடங்களின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. ஹொன்ஷு பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலோரம் உள்ள இதர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

கடந்த 2011ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவை 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் அதனை தொடர்ந்து சுனாமியும் தாக்கியதில் சுமார் 19 ஆயிரம் பேர் பலியானது நினைவிருக்கலாம்.

இன்றைய நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

...

shared via

comments | | Read More...

இந்திரா காந்தி படுகொலை ஏன்? அகாலி தளம் தலைவரின் கருத்தால் சர்ச்சை Indira Gandhi why murder Akali Dal leader comment dispute

Penulis : Tamil on Thursday 24 October 2013 | 16:39

Thursday 24 October 2013

இந்திரா காந்தி படுகொலை ஏன்? அகாலி தளம் தலைவரின் கருத்தால் சர்ச்சை Indira Gandhi why murder Akali Dal leader comment dispute

புதுடெல்லி, அக். 24-

ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, "என் பாட்டி இந்திரா காந்தி மற்றும் தந்தை ராஜீவ் காந்தி ஆகியோர் வகுப்புவாதம் மற்றும் வெறுப்பு அரசியலால் படுகொலை செய்யப்பட்டனர். அதேபோல் நானும் கொல்லப்படலாம். அதற்காக கவலைப்பட மாட்டேன்" என்று உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.

அரசு செய்த சாதனைகளைக் கூறி வாக்கு கேட்க முடியாததால், ராகுல் காந்தி தனது பாட்டியின் மரணத்தை நினைவுபடுத்தி வாக்கு சேகரிக்க முயற்சிப்பதாக பா.ஜனதா விமர்சனம் செய்துள்ளது.

இந்நிலையில், இந்திரா காந்தி படுகொலையை மீண்டும் நினைவுபடுத்தி வரும் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அகாலி தளம் தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பஞ்சாப் முதல்வர் பாதலின் மருமகளான ஹர்சம்ரத் இதுபற்றி கூறுகையில், "மற்றவர்களின் மகன்களையும், கணவன்களையும் கொலை செய்யும்போது இந்திரா காந்தி என்ன செய்துகொண்டிருந்தார்? சீக்கியர்கள் வழிபடும் இடத்தை (பொற்கோவில்) தகர்த்து அங்குள்ளவர்களை கொலை செய்ய உத்தரவிட்டபோது என்ன நினைத்தார்? அவருக்கு தண்டனை இல்லாமல் போகுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

"அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏன் அந்த தலைவிதி ஏற்பட்டது? என்பதற்கான காரணங்களை வெளிக்கொண்டு வர ராகுல்காந்தி கொஞ்சம் ஆழமாக சென்றிருக்கிறார். நீங்கள் செய்த செயல்களுக்கான விலையை கொடுத்துள்ளீர்கள்" என்றும் ஹர்சிம்ரத் கூறியுள்ளார்.

இந்திரா காந்தி கொலை தொடர்பாக ஹர்சிம்ரத்தின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

...

shared via

comments | | Read More...

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு Mettur dam water open for Cauvery Delta Irrigation

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு Mettur dam water open for Cauvery Delta Irrigation

மேட்டூர், அக். 24–

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. தற்போது மழை இல்லாததால் அங்கு பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்து உள்ளது.

இதனால் மீண்டும் இன்று காலை 9 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 350 கன அடியாக இருந்தது. அணையின் நீர் மட்டம் 84.41 அடியாக உள்ளது.

...

shared via

comments | | Read More...

உ.பி. கோட்டையில் தங்க வேட்டை: மத்திய மந்திரி மீது ஐக்கிய ஜனதா தளம் போலீசில் புகார் JDU complaint against Union Min over gold hunt in UP

Penulis : Tamil on Wednesday 23 October 2013 | 08:58

Wednesday 23 October 2013

உ.பி. கோட்டையில் தங்க வேட்டை: மத்திய மந்திரி மீது ஐக்கிய ஜனதா தளம் போலீசில் புகார் JDU complaint against Union Min over gold hunt in UP

புதுடெல்லி, அக். 23-

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 19-ம் நூற்றாண்டை சேர்ந்த ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங் கோட்டை உள்ளது. இந்த கோட்டையில் 1000 டன் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி சாமியார் ஷோபம் சர்க்கார் கனவு கண்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் மற்றும் சோனியாவிற்கும் அவர் கடிதம் எழுதினார்.

இதையடுத்து மத்திய தொல்லியல் துறை அந்த கோட்டையின் சுற்றுப்புறப்பகுதியில் தோண்டி தங்க வேட்டை நடத்தி வருகிறது. இதை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தங்க வேட்டையை தொல்லியல் துறை நடத்த மத்திய விவசாய மற்றும் உணவுத்துறை இணை அமைச்சர் சரன் தாஸ் நடவடிக்கை எடுத்ததாக ஐக்கிய ஜனதா தளம் இன்று போலீசில் புகார் அளித்துள்ளது.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

தங்கக்குவியல் இருப்பதாக ஒரு சாமியார் கண்ட கனவின் மீது மத்திய அமைச்சர் மகந்தா, தனது அதிகாரத்தை பயன்படுத்தி தொல்லியல் துறையை தேடுதல் வேட்டை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளார். அடிப்படையற்ற ஒரு கோரிக்கையை மத்திய அமைச்சர் நிராகரித்து இருக்க வேண்டும். அதைவிட்டு பொதுமக்களின் பணத்தை வீணடித்து தொல்லியல் துறை தேட நடவடிக்கை எடுத்துள்ளார். இவரது இந்த நடவடிக்கை நாட்டில் மேலும் மூடநம்பிக்கையை பரப்புவதாக உள்ளது. எனவே அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய மகந்த் ஒரு குற்றவாளி.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய மந்திரி மகந்தா மற்றும் சாமியார் சர்க்கார் சார்பாக பேசி வரும் பாபா ஓம் ஆவாஸ்தி ஆகியோர் மீது குற்றவழக்கு பதியவேண்டும் என்றும் ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

...

shared via

comments | | Read More...

அரசியல் கட்சி தொடங்க திட்டமா? நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை Actor Vijay refutes floating political party

Penulis : Tamil on Tuesday 22 October 2013 | 21:54

Tuesday 22 October 2013

அரசியல் கட்சி தொடங்க திட்டமா? நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை Actor Vijay refutes floating political party

சென்னை, அக்.23-

நடிகர் விஜய் புதுக்கட்சி தொடங்க திட்டமிட்டு வருவதாகவும், இதுதொடர்பாக தனக்கு நெருக்கமான சிலருடன் அவர் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாகவும் பிரபல தமிழ் பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்தி விஜய்யின் தீவிர ரசிகர்களிடையே ஆனந்தத்தையும் கட்சி சார்பற்ற நிலையில் அவரது நடிப்பை மட்டுமே கண்டு ரசிக்கும் நடுநிலையாளர்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வகையில் அவர் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், சமீபத்தில் நான் கேரளாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து, அரசியல் சம்பந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. இதைப் படித்துவிட்டு ரசிகர்களும், பொது மக்களும், மீடியா நண்பர்களும் குழப்பம் அடைந்துள்ளார்கள்.

கடந்த 2 மாதங்களாக ஐதராபாத்தில் நடக்கும் ஜில்லா படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன். கேரளாவுக்கு நான் செல்லவில்லை. அப்படி இருக்கும்போது, இப்படியொரு தவறான செய்தியின் காரணமாக ரசிகர்கள் மட்டுமின்றி, நானும் குழப்பம் அடைந்துள்ளேன்.

இனி வருடத்துக்கு 2 படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு, பகலென்று பார்க்காமல் உழைத்து வருகிறேன். எனது வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், பக்க பலமாகவும் இருப்பது பத்திரிகை நண்பர்கள்தான்.

ஆகவே, பத்திரிகை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து உண்மையில்லாத செய்திகளை வெளியிட்டு ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று விஜய் கூறியுள்ளார்.

...

shared via

comments | | Read More...

நியூயார்க்கில் போலீசாக பணியாற்றும் இந்தியருக்கு இந்திய அமெரிக்க கூட்டமைப்பு நடத்திய பாராட்டு விழா Kerala born NYPD cop felicitated

Penulis : Tamil on Monday 21 October 2013 | 18:34

Monday 21 October 2013

நியூயார்க்கில் போலீசாக பணியாற்றும் இந்தியருக்கு இந்திய அமெரிக்க கூட்டமைப்பு நடத்திய பாராட்டு விழா Kerala born NYPD cop felicitated

நியூயார்க், அக்.22-

இந்தியாவின் கேரள மாநிலம், குமிளி நகரில் பிறந்து, படித்து, வளர்ந்தவர் ஸ்டான்லி ஜார்ஜ். பெற்றோருடன் 1983ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குடியேறிய ஸ்டான்லி ஜார்ஜ் அங்குள்ள பருச் கல்லூரியில் படித்து, பட்டம் பெற்று நியூயார்க் போலீஸ் துறையில் கணக்காளராக பணியில் சேர்ந்தார்.

பின்னர், போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் அதற்கான பயிற்சி கல்லூரியில் 1992ம் ஆண்டு சேர்ந்து தேர்ச்சியும் பெற்றார்.

2000-ம் ஆண்டு சார்ஜண்ட் ஆக பதவி உயர்வு பெற்று பின்னர் 2007-ம் ஆண்டு போலீஸ் நிலையத்திலேயே பெரிய பதவியான கேப்டன் என்ற நிலையை அடைந்தார்.

இதற்கிடையில், தீவிரவாத தடுப்பு பிரிவிலும் தனது திறமையை பலமுறை நிரூபித்துள்ள இவர் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவழியினருக்கு பல வகைகளில் உதவியும் செய்து வந்துள்ளார்.

7 ஆண்டுகளாக நியூயார்க் நகர போலீஸ் துறையில் கேப்டனாக பணியாற்றிய ஸ்டான்லி ஜார்ஜுக்கு அமெரிக்காவில் வாழும் இந்தியர் கூட்டமைப்பு நியூயார்க் நகரில் பாராட்டு விழா நடத்தி கவுரவித்தது.

முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் இவருக்கு ஏற்கனவே நினைவு பரிசு வழங்கி கவுரவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

...

shared via

comments | | Read More...

டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. போட்டி வேட்பாளரை தேர்வு செய்ய விஜயகாந்த் பயணம் DMDK in the Assembly elections in Delhi Vijayakanth to select candidate to contest trip

Penulis : Tamil on Sunday 20 October 2013 | 22:59

Sunday 20 October 2013

டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. போட்டி வேட்பாளரை தேர்வு செய்ய விஜயகாந்த் பயணம் DMDK in the Assembly elections in Delhi Vijayakanth to select candidate to contest trip

சென்னை, அக். 21–

டெல்லி பிரதேச தே.மு. தி.க. நிர்வாகிகள் கூட்டம் அவைத்தலைவர் கணேஷ் தலைமையில் நடந்தது.

கூட்டம் முடிந்ததும் கணேஷ் கூறியதாவது:–

டெல்லியில் வாழும் தமிழர்களில் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும். ரேஷன் அட்டை வழங்க வேண்டும்.

அடிப்படைவசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27–ந் தேதி ஜந்தர்மந்தரில் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிட முடிவு செய்துள்ளது. அதற்காக விருப்பமனு பெறப்பட்டு வருகிறது.

இதுவரை 22 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். 27–ந் தேதி டெல்லி வரும் விஜயகாந்த் வேட்பாளர்களை தேர்வு செய்கிறார். அன்றைய தினமே போட்டியிடும் வேட்பாளர் பெயரை விஜயகாந்த் அறிவிப்பார்.

இவ்வாறு கணேஷ் கூறினார்.

கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் தட்சிணா மூர்த்தி, பொருளாளர் தாணப்பன், மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

27–ந் தேதி டெல்லி செல்லும் விஜயகாந்துக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

...

shared via

comments | | Read More...

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு: சென்னையில் 3 இடங்களில் ரெயில் மறியல் 140 பேர் கைது commonwealth conference india participate oppose chennai 3 place siege 140 people arrested

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு: சென்னையில் 3 இடங்களில் ரெயில் மறியல் 140 பேர் கைது commonwealth conference india participate oppose chennai 3 place siege 140 people arrested

தாம்பரம், அக். 20–

இலங்கையில் நடைபெறும் காமல்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழகம், ஒருங்கிணைந்த அம்பேத்கர் இயக்கம் சார்பில் இன்று சென்னையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு பெரியார் திராவிடர் கழக காஞ்சி மாவட்ட அமைப்பாளர் கண்ணதாசன் தலைமையில் பெண்கள் உள்பட 50 பேர் தாம்பரத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் ரெயிலை மறித்து நின்றபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.

ஒருங்கிணைந்த அம்பேத்கர் மன்ற காஞ்சி மாவட்ட பொருளாளர் கோபிநாத் தலைமையில் 40 பேர் இன்று காலை 11 மணியளவில் குரோம் பேட்டையில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை குரோம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

பெரியார் திராவிடர் கழக மாநில தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் 50 பேர் காலை 11.15 மணியளவில் பல்லாவரத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பல்லாவரம் போலீசார் கைது செய்தனர்.

...

shared via

comments | | Read More...

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு mettur dam water opening low

Penulis : Tamil on Saturday 19 October 2013 | 15:56

Saturday 19 October 2013

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு mettur dam water opening low

மேட்டூர், அக். 19–

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15 ஆயிரம் கன அடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கனஅடி குறைக்கப்பட்டு நேற்று இரவு முதல் 13 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல கால்வாய் பாசனத்துக்காக 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 80.69 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 235 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மொத்தம் 13 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

...

shared via

comments | | Read More...

விவசாயிகள் பயனடைய கறிக்கோழி வளர்ப்பு கூலி உயர்வு: ஜெயலலிதா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு Broiler production wage hike to benefit farmers

Penulis : Tamil on Friday 18 October 2013 | 22:48

Friday 18 October 2013

விவசாயிகள் பயனடைய கறிக்கோழி வளர்ப்பு கூலி உயர்வு: ஜெயலலிதா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு Broiler production wage hike to benefit farmers

சென்னை, அக் 19–

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டிலுள்ள கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், கறிக்கோழி நிறுவன உரிமையாளர்களால் தங்களுக்கு வழங்கப்படும் வளர்ப்புக் கூலியை உயர்த்துதல், வருடத்திற்கு ஐந்து முறை கோழிக் குஞ்சுகள் வழங்குதல், வளர்ப்புக் கூலி கணக்கிடும் முறைகளைச் சீராக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டி தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி கடந்த 21.9.2013 அன்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்கள், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் தமிழகத்திலுள்ள கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் மேற்கண்ட தொழில்முறை பிரச்சனைகள் குறித்து கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கும் கறிக்கோழி நிறுவன உரிமையாளர் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, கறிக்கோழி வளர்ப்புக் கூலியாக தற்போது வழங்கப்பட்டு வரும் கூலியிலிருந்து 15 சதவீதம் உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டுமென்றும், ஜனவரி 2014 முதல் மேலும் 5 சதவீதம் உயர்த்தி மொத்தமாக 20 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் கறிக்கோழி பராமரிப்பில் ஏற்படும் இதர பிரச்சனைகள் மற்றும் வளர்ப்பு கூலி கணக்கிடும் முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் சுமூக தீர்வு காணப்பட்டது.

கறிக்கோழிப் பண்ணை தொழிலில் நிலவி வந்த வளர்ப்புக் கூலி மற்றும் இதர பிரச்சனைகளுக்கு 40 ஆண்டு கால கறிக்கோழி பண்ணைத் தொழில் வரலாற்றிலேயே முதன் முறையாக அரசின் நேரடி நடவடிக்கை மூலம் ஏழை எளிய கிராம விவசாயிகள் உரிய பலன் பெறும் வகையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் வழி காட்டுதல்கள் மற்றும் ஆணைகளின்படி கறிக்கோழி நிறுவன உரிமையாளர்கள் மற்றும் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடத்தப்பட்டு ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உடன் படிக்கையின்படி, கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சுமார் 14,120 கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளும் சுமார் 1,50,000 விவசாயத் தொழிலாளர்களும் உயர்த்தப்பட்ட வளர்ப்பு கூலியும் இதர பலன்களும் பெற்று பயனடைவார்கள்.

கறிக்கோழி பண்ணை தொழில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தக்க வழிகாட்டுதலும் ஆணையும் வழங்கியமைக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் கறிக்கோழி நிறுவன உரிமையாளர் சங்க பிரதிநிதி ஆகியோர் சந்தித்து தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள்.

அப்போது, நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் உள்ள பிரச்சனைகளுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மட்டும் தான் இதில் தலையிட்டு சுமூக தீர்வு கண்டுள்ளது என்று தெரிவித்து தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொண்டார்கள்.

அப்போது, முதல்–அமைச்சர் ஜெயலலிதா கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் மென்மேலும் வளர்ச்சி பெற்று, எல்லா நலமும் வளமும் பெற்று சிறப்படைய வேண்டும் என்று வாழ்த்தினார்கள்.

கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் சின்னய்யா, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர் முனைவர் விஜயகுமார், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் டாக்டர் பழனிச்சாமி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

...

shared via

comments | | Read More...

உ.பி.யில் புதையல் தோண்டும் பணியை கோர்ட் கண்காணிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு A sadhu dream of buried gold now reaches the Supreme Court

உ.பி.யில் புதையல் தோண்டும் பணியை கோர்ட் கண்காணிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு A sadhu dream of buried gold now reaches the Supreme Court

உன்னாவ், அக். 18-

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் தாண்டியா கிராமத்தில் உள்ள 19-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராம் பக்ஸ் சிங்கின் அரண்மனை உள்ளது. அந்த அரண்மனையில் 1000 டன் தங்கத்தை புதைத்து வைத்திருப்பதாக மன்னர் ராம் பக்ஸ் சிங் தன் கனவில் வந்து கூறினார் என்று அப்பகுதி சாது சோபன் சர்க்கார் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த இடத்தில் புதையல் இருக்கிறதா? என்பதை கண்டறிவதற்காக தொல்பொருள் துறை ஆய்வுக்குழுவை மத்திய அரசு அனுப்பியது. அந்தக் குழுவினர் இன்று அரண்மனை வளாகத்தை தோண்ட ஆரம்பித்தனர்.

இந்த பணி முடிவடைய சுமார் ஒரு மாதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அரண்மனை வளாகத்திற்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இதற்கிடையே, தங்கப்புதையலுக்கான தோண்டும் பணி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், அரண்மனை வளாகத்தில் தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றில் சில தங்கம் காணாமல் போகலாம். எனவே, புதையல் தோண்டும் பணியை கோர்ட் மேற்பார்வையிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

...

shared via

comments | | Read More...

ஆஸ்திரேலியா வனப்பகுதியில் காட்டுத்தீ: ஒருவர் பலி 1000 வீடுகள் எரிந்து நாசம் Forest wildfires in Australia man dead 1000 house fire

ஆஸ்திரேலியா வனப்பகுதியில் காட்டுத்தீ: ஒருவர் பலி 1000 வீடுகள் எரிந்து நாசம் Forest wildfires in Australia man dead 1000 house fire

மெல்போர்ன், அக். 18–

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வனப்பகுதி உள்ளது. அங்கு சுமார் 15 இடங்களில் காட்டுத்தீ பிடித்துள்ளது. காற்று வேகமாக வீசுவதால் தீ 'மளமள' வென பரவி கொளுந்துவிட்டு எரிகிறது.

இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள லேக் முன்மோர்க், சிட்னி, புளுமவுன்டெய்ன்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீயணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுள்ளன. அவை வானில் பறந்து தண்ணீரை பீய்ச்சி வருகின்றன. இருந்தும் முற்றிலும் தீயை அணைக்க முடியவில்லை.

இந்த காட்டு தீயில் சிக்கி 62 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். தனது வீட்டை பாதுகாக்க முயன்ற போது தீயில் சிக்கி உடல் கருகினார்.

இந்த தீ விபத்தில் வனப் பகுதிக்கு அருகேயுள்ள 1000–க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாயின. காட்டு தீயினால் ஏற்பட்ட புகை மற்றும் சாம்பல் அதன் அருகேயுள்ள சிட்னி நகர மேகங்களில் படிந்துள்ளது. இதனால் அந்த நகரம் மேக மூட்டத்துடன் காட்சியளிக்கிறது.

...

shared via

comments | | Read More...

சரோஜினி வரதப்பன் மறைவு: ஜெயலலிதா இரங்கல் Sarojini Varadappan died Jayalalithaa condoled

Penulis : Tamil on Thursday 17 October 2013 | 08:36

Thursday 17 October 2013

சரோஜினி வரதப்பன் மறைவு: ஜெயலலிதா இரங்கல் Sarojini Varadappan died Jayalalithaa condoled

Tamil NewsToday,

சென்னை, அக். 17-

சமூக சேவகி சரோஜினி வரதப்பன் மறைவு தொடர்பாக, முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

பிரபல சமூக சேவகியும், தமிழக முன்னாள் முதலமைச்சர் எம். பக்தவத்சலத்தின் மகளுமான சரோஜினி வரதப்பன் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி தனது 92 வது அகவையில் இன்று (17.10.2013) இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

இந்திய மகளிர் சங்கத்தின் தலைவராகவும், மயிலாப்பூர் அகடமியின் தலைவராகவும் திறம்படப் பணியாற்றியவர் சரோஜினி வரதப்பன். 35 ஆண்டுகளுக்கு மேல் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினராக இருந்த சரோஜினி வரதப்பன், அதன் தலைவர் பதவியையும் சிறிது காலம் வகித்துள்ளார்.

கர்நாடக சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சென்னை நகர ஷெரீப் ஆக பணியாற்றியவர். வயதான காலத்திலும் சமூக சேவை ஒன்றையே முழுமூச்சாகக் கொண்டு செயல்பட்டவர். மத்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளுக்குச் சொந்தக்காரர்.  

அனைவரிடத்திலும் எளிமையாகவும், இனிமையாகவும் பழகக்கூடிய சரோஜினி வரதப்பன் மறைவு ஈடு செய்ய முடியாதது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

...
Show commentsOpen link

comments | | Read More...

ராவண தேசம் படத்தின் ஷூட்டிங் நடுக்கடலில் tamil movie ravana desam

Penulis : Tamil on Wednesday 16 October 2013 | 20:56

Wednesday 16 October 2013

நடுக்கடலில் 90 நாட்கள் ஷூட்டிங் !
by கதிர்
சிரிப்பு Archives | TamilswayYesterday,

ராவண தேசம்  படத்தின் ஷூட்டிங் நடுக்கடலில் 90 நாட்கள் நடந்தது. இது பற்றி இயக்குனர் அஜெய் கூறியதாவது:இலங்கையிலிருந்து தப்பி வந்த அகதிகள் பல்வேறு நாடுகளுக்கு கடல் மார்க்கமாக புறப்பட்டனர்:

அவர்களின் பயண அனுபவம் திகிலானது. இந்த பயணத்தின்போது ஏராளமானவர்கள் அலைகடலில் சிக்கி இறந்தார்கள். புதிய வாழ்க்கையை நோக்கி அவர்கள் தொடங்கிய இக்கடல் பயணத்தில் சந்தித்த இன்னல்கள் எப்படி அவர்களை வாட்டியது என்பதை படம் சொல்லும்.

நான் இயக்கி நடித்திருக்கிறேன். ஹீரோயின் ஜெனிபர். மற்றும் சந்தோஷ், கவுடல்யா, பாரதிராவ், சிரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

வி.கே.ராம்ராஜ் ஒளிப்பதிவு. ஆர்.சிவன் இசை. லக்ஷ்மிகாந்த் தயாரிப்பு. தரை மீது ஷூட்டிங் நடந்துவதுபோல் கடல் மீது ஷூட்டிங் நடத்துவது எளிதான காரியமல்ல என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். 90 நாட்கள் நடுக்கடலில் இதன் ஷூட்டிங் நடந்தது.இவ்வாறு அஜெய் கூறினார்.

The post நடுக்கடலில் 90 நாட்கள் ஷூட்டிங் ! appeared first on Tamilsway.

Show commentsOpen link

comments | | Read More...

எப்படினாலும் கப்பலை விடுவிப்போம் After a investigation the U.S. will release the ship g.k.vasan interview

முழுமையான விசாரணைக்கு பிறகு அமெரிக்கா கப்பலை விடுவிப்போம்: ஜி.கே.வாசன் பேட்டி      After a thorough investigation the U.S. will release the ship g.k.vasan interview


மத்திய மந்திரி ஜி.கே.வாசன் டெல்லி செல்ல விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–ஆயுதங்களுடன் பிடிப்பட்ட அமெரிக்க கப்பலில் வந்தவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.விசாரணை முடியும் வரை கப்பலை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது. மத்திய அரசு ஒரு குழுவாகவும், மாநில அரசு ஒரு குழுவாகவும் முழுமையான விசாரணை நடத்துகிறது. விசாரணைக்கு பிறகுதான் அமெரிக்க கப்பலை விடுவிக்க முடியும்.தமிழக மீனவர்கள் 38 பேரை இலங்கை சிறைப்படுத்தியுள்ளது கண்டனத்துக் குரியது. இதற்கு நிரந்திர தீர்வை காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

comments | | Read More...

அமெரிக்க ஆயுத கப்பல் பிடிபட்டது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: பாரதீய ஜனதா கோரிக்கை U.S. weapons ship seizure

Penulis : Tamil on Tuesday 15 October 2013 | 20:16

Tuesday 15 October 2013

அமெரிக்க ஆயுத கப்பல் பிடிபட்டது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: பாரதீய ஜனதா கோரிக்கை U.S. weapons ship seizure
Tamil NewsToday, 10:41

புதுடெல்லி, அக்.16-

அமெரிக்க ஆயுத கப்பல் பிடிபட்டது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கேட்டுக்கொண்டு உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தூத்துக்குடி அருகே கடந்த வெள்ளிக்கிழமை இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த 'சீ மேன் கார்டு' என்று அமெரிக்க கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்து உள்ளனர். ஆயுதங்களுடன் அந்த கப்பல் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

அந்த கப்பலின் சட்டரீதியான அங்கீகாரம் பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. அதில் இங்கிலாந்து, எஸ்டோனியா, உக்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் இந்தியர்களும் இருக்கிறார்கள். அந்த கப்பலுக்கு முறையான உரிமம் உள்ளதா? இந்திய எல்லைக்குள் நுழைய அனுமதி பெற்றுள்ளதா? என்பது பற்றியும் தெளிவாக தெரியவில்லை.

அந்த கப்பல் எப்போது கொச்சி துறைமுகத்துக்கு வந்தது என்பது பற்றியும் தெரியவில்லை. தனியார் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமானது என்று கூறப்படும் அந்த கப்பல் ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் வந்து உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளை முறைப்படி கையாளும் செயல்திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? என்பது தெரிய வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடற்படையினரும், கடலோர காவல்படையினரும் விசாரணை நடத்தி வருவதாக தெரியவந்து உள்ளது.

மும்பை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, இந்திய கடல் பகுதியின் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. கொச்சியில் முறைப்படியான சோதனை நடத்தப்பட்ட பின்னர் தான் அந்த கப்பல் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டதா? அந்த கப்பல் அடுத்து போய்ச் சேரவேண்டிய இடம் எது? அங்கு ஏன் போய்ச் சேரவில்லை? அவர்கள் தூத்துக்குடியில் எரிபொருள் வாங்க வேண்டிய அவசியம் என்ன? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

இவற்றுக்கெல்லாம் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் நேச்சல் சாந்து கூறுகையில்; அந்த கப்பல் கடற்கொள்ளையை தடுக்கும் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமானது என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருப்பதாகவும், அந்த கப்பல் ஆயுத விற்பனையில் ஈடுபடும் கப்பலாக இருக்கும் என தான் கருதவில்லை என்றும் கூறினார்.

விசாரணைக்கு பின்னர்தான் அந்த கப்பலை பற்றிய முழு விவரமும் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.
...
Show commentsOpen link

comments | | Read More...

வாழ்நாள் சாதனையாளர் விருது எனக்கெதற்கு – கமல் விளக்கம் !! Life achivement award to kamalahasan

Penulis : Tamil on Monday 14 October 2013 | 09:17

Monday 14 October 2013

வாழ்நாள் சாதனையாளர் விருது எனக்கெதற்கு – கமல் விளக்கம் !!

மும்பையில் நடைபெற உள்ள  சர்வதேசத் திரைப்படவிழாவின் போது நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள்சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, ஓய்வுபெற்ற நடிகர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவந்த இந்த விருது தற்போது திரைக்களத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கமல்ஹாசனுக்கு வழங்கப்படுவது பற்றி செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில், "

இந்த விருதுக்கு நான் தகுதியானவனா என்பது தெரியாது" என்று கூறினார். தொடர்ந்து,"இந்த விருதுக்கு என்னைப் பரிந்துரை செய்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

இது எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். இன்னும் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி விடுவதாகவும் இருக்கும். ஆயினும் வயதான நடிகர்களுக்கு கொடுக்கும் இந்த விருதை வயது குறைந்த கமலஹாசனுக்கு கொடுக்கலாமா என்று பேசுபவர்களுக்கு நான் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் கொஞ்சம் பொறுத்து இருங்கள் இந்த விருதை வேண்டாம் என்று மறுக்கவும் வேறு வயதான நடிகர்களுக்கு கொடுங்கள் என்று பரிந்துரை செய்யவும் நான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்" என்றும் கமல் கூறினார். இனி அதிக இந்திப் படங்களில் நடிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

The post

comments | | Read More...

ஜெயலலிதா முயற்சியால் பாய்லின் புயலில் சிக்கி தவித்த 18 மீனவர்கள் மீட்பு 18 fishermen recovery jayalalitha from Phailin storm

ஜெயலலிதா முயற்சியால் பாய்லின் புயலில் சிக்கி தவித்த 18 மீனவர்கள் மீட்பு 18 fishermen recovery jayalalitha from Phailin storm

சென்னை, அக். 14–

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் தூத்தூர், ஏழுதேசம் சின்னத் துறை, இரையுமன்துறை, மேல்பிடாலம் மற்றும் கோடிமுனை பகுதிகளைச் சேர்ந்த 18 தமிழக மீனவர்கள், அவர்களது இரண்டு மீன்பிடி விசைப் படகுகளில் கடந்த 22–09–2013 முதல் ஒடிசா மாநில கடற்பகுதியிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

வங்கக் கடலில் உருவான பாய்லின் புயல், ஒடிசா மாநிலம் பாரதீப் மற்றும் கோபால் பகுதியில் கரையை கடக்கவிருப்பதை அறிந்த மீனவர்கள் தங்களது இரு படகுகளுடன் 12–10–2013 அன்று கரை திரும்ப முயன்றுள்ளனர்.

மேற்படி கடும் புயலின் காரணமாக கடலின் சீற்றம் மற்றும் கடல் அலை அதிக உயரத்திற்கு எழுந்ததாலும், இவற்றுடன் பெருமழை பெய்ததாலும், மீன்பிடி விசைப் படகுகளில் கரை திரும்புவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு நடுக்கடலில் தத்தளித்த வண்ணம் இருந்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் இவர்களது படகிலிருந்த எரிபொருள் முழுவதும் தீர்ந்துவிட, தங்களையும் தங்களது படகுகளையும் காப்பாற்றிட கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உறவினர்களுக்கு கைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேற்படி தகவல் முதல்– அமைச்சர் ஜெயலலிதா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே முதல்– அமைச்சர் ஜெயலலிதா துரித நடவடிக்கை மேற்கொண்டு தலைமை செயலர், கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலர் ஆகியோருக்கு இந்திய கடலோர காவற்படை, கப்பற்படை மற்றும் ஒடிசா மாநில உயர் அதிகாரிகளுடன் உடனடியாக தொடர்பு கொண்டு புயலில் சிக்கித் தவிக்கும் 18 மீனவர்களை பத்திரமாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர் கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் உயர் அதிகாரிகள் சென்னையிலுள்ள இந்திய கடலோர காவற்படை மற்றும் கப்பற்படை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் உடனடியாக தொடர்பு கொண்டு நடுக்கடலில் புயலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

மேலும் ஒடிசா மாநில சிறப்பு மீட்பு பணி ஆணையரையும், ஒடிசா மாநில மீன்வளத்துறை உயர் அலுவலர்களையும் தொடர்பு கொண்டு மீனவர்களை உடனடியாக மீட்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கடலோர காவற்படை, கொல்கத்தாவிலுள்ள கடலோர காவற்படையினரை தொடர்பு கொண்டு நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்கவும் உடனடியாக மீட்கவும் நடவடிக்கை மேற்கொண்டது.

ஒடிசா மாநிலம் கோபால்பூர் அருகே கரையை கடந்த பாய்லின் புயலின் சீற்றத்தில் மேற்படி மீனவர்களது படகு சேதமுற்று, அப்படகிலிருந்த 18 மீனவர்களும் ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஜகசன்பூர் மாவட்டத்தின் கடலோர குக்கிராமமான இராமத்துரா எனும் இடத்திற்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர்.

இக்குக்கிராமமானது புயலின் தாக்கத்தால் தொலை தொடர்பு, போக்குவரத்து மற்றும் மின்சாரம் ஆகியவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்ததால், கரைசேர்ந்த மீனவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி, உணவு மற்றும் குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

இவ்விவரம் உடனடியாக ஒடிசா மாநில நிர்வாகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, மாவட்ட நிர்வாகமும் கடலோர காவற்படையும் இணைந்து மருத்துவ வசதிகளுடனான மீட்புகுழு அக்கிராமத்திற்கு விரைந்து சென்று 18 மீனவர்களுக்கும் அனைத்துவிதமான மருத்துவ உதவிகளை அளித்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் உடைகளை வழங்கி அவர்களை பத்திரமாக மீட்டு மாவட்டத்தின் தலைமை இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் தமிழகத்தைச் சேர்ந்த 18 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

...

shared via

comments | | Read More...

சோனியாவும் பிரதமரும் என் அரசியல் குரு: ராகுல் காந்தி Sonia Gandhi and Prime Minister of my political guru Rahul Gandhi

Penulis : Tamil on Thursday 10 October 2013 | 09:11

Thursday 10 October 2013

சோனியாவும் பிரதமரும் என் அரசியல் குரு: ராகுல் காந்தி Sonia Gandhi and Prime Minister of my political guru Rahul Gandhi
Tamil NewsToday, 23:35

சண்டிகர், அக். 10-

பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, இன்று பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது:-

தண்டனை பெறும் எம்.பி. எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தற்கு சரியான நேரத்தில்தான் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். உணமையைப் பேசுவதற்கு நேரம் காலம் எல்லாம் பார்க்க முடியாது.

பெண்களுக்கு அதிகாரம் தருவது நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமாகும். உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின பங்களிப்பு தேவை.

சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் எனக்கு அரசியல் குருவாக உள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பெரும் பங்காற்றியுள்ளார்.

போதைப் பழக்கத்தால் பஞ்சாப் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
...
Show commentsOpen link

comments | | Read More...

புத்தூர் ஆபரேசன்: படுகாயம் அடைந்த ஆய்வாளர் லட்சுமணனுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆறுதல் CM Jayalalithaa Consoling injured inspector in hospital

Penulis : Tamil on Wednesday 9 October 2013 | 17:13

Wednesday 9 October 2013

புத்தூர் ஆபரேசன்: படுகாயம் அடைந்த ஆய்வாளர் லட்சுமணனுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆறுதல் CM Jayalalithaa Consoling injured inspector in hospital

Tamil NewsToday,

சென்னை, அக். 9-

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோர் ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்தனர். அவர்களை கைது செய்ய தனிப்படையினர் புத்தூர் விரைந்து 5.10.2013 அன்று மேற்படி தலைமறைவு எதிரிகள் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். காவல் துறையினரின் தீவிர முயற்சியின் பலனாக எதிரிகள் பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது, சிறப்புப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் லட்சுமணன் எதிரிகளால் கொடூரமான ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்பட்டதையடுத்து அவர் உடனடியாக சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சென்னை, சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் லட்சுமணனின் துணிச்சலைப் பாராட்டி தமிழக அரசின் சார்பாக ரொக்கப் பரிசாக 15 லட்சம் ரூபாயும், அவருடைய மருத்துவச் செலவு அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்வதோடு, ஒரு படி பதவி உயர்வும் அளிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா 8.10.2013 அன்று அறிவித்தார்.

இந்நிலையில், சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை, சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் லட்சுமணனை இன்று முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டார்.

மேலும், ஆய்வாளர் லட்சுமணனின் வீரதீரச் செயலைப் பாராட்டி, தமிழக மக்களின் நன்றியை தெரிவிக்கும் வகையில், 15 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படுகிறது என்று தெரிவித்து அதற்கான காசோலையினை அவரது மனைவி மதுபென் அவர்களிடம் வழங்கினார்.

மருத்துவமனையில் லட்சுமணனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்ததோடு இயல்பு நிலைக்கு விரைந்து திரும்பிடத் தேவையான அனைத்து சிறப்பு சிகிச்சைகளையும் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

...
Show commentsOpen link

comments | | Read More...

ஓட்டு போட்டதும் வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு Vote up to the voters must provide slip Supreme court action

Penulis : Tamil on Tuesday 8 October 2013 | 23:54

Tuesday 8 October 2013

ஓட்டு போட்டதும் வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு Vote up to the voters must provide slip Supreme court action

Tamil NewsYesterday,

புதுடெல்லி, அக்.9-

மின்னணு வாக்கு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் சந்தேகம் இருந்து வந்தது. இது தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கில் அவர், "ஒரு வாக்காளர் தான் விரும்பிய வேட்பாளருக்குத்தான் தனது ஓட்டு மிகச்சரியாக பதிவு ஆகி உள்ளது என்பதை அறிந்து உறுதி செய்து கொள்ளும் வசதியாக வி.வி.பி.ஏ.டி. என்னும் ஒப்புகைச்சீட்டு வழங்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறி இருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன் ககோய் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. விசாரணையின்போது, ஏற்கனவே வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையை நாகலாந்து மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது அமல்படுத்தியதாகவும், அது வெற்றிகரமாகவும், திருப்திகரமாகவும் அமைந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.

நிர்வாக காரணங்களையும், நிதி ஒதுக்கீடு காரணங்களையும் சுட்டிக்காட்டிய தேர்தல் கமிஷன், இந்த ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையினை படிப்படியாக அறிமுகம் செய்யலாம் என கூறியது. நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கு 13 லட்சம் வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் தேவைப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்தது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலின்போது, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்கு எந்திரத்துடன் வி.வி.பி.ஏ.டி. சாதனத்தை பொருத்துவதற்கு உத்தேசமாக ரூ.1,500 கோடி செலவாகும் என தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டில் கூறியது. 13 லட்சம் எந்திரங்களை தயாரித்து அளிக்கிற தகுதி பாரத மின்னணு நிறுவனம் (பிஇஎல்) மற்றும் இந்திய மின்னணு கழகத்துக்கு (இசிஐஎல்) உண்டு என்று சுப்பிரமணிய சாமி தெரிவித்தார்.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தலைமை நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன் ககோய் ஆகியோர் தங்களது தீர்ப்பினை வழங்கினர். தீர்ப்பில், அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் பயன்படுத்துவதற்கு வசதியாக ஓட்டு போட்டதும் வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையினை (ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்ததும் வருவது போன்று) படிப்படியாக அறிமுகம் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் பொருத்துவதற்கு தேவையான நிதி உதவியை தேர்தல் கமிஷனுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். இந்த முறையை அமல்படுத்துவதின்மூலம், சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை உறுதிப்படுத்த முடியும் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒவ்வொரு வாக்காளரும் மின்னணு வாக்கு எந்திரத்தில் ஓட்டுப்பதிவு செய்த சில வினாடி களில், அத்துடன் பொருத்தப்படுகிற வி.வி.பி.ஏ.டி. எந்திரம் மூலம் ஒப்புகைச்சீட்டு கிடைத்துவிடும்.

அதைப் பார்த்து அவர் தான் விரும்பிய வேட்பாளருக்குத்தான் தனது ஓட்டு பதிவாகி உள்ளது என உறுதி செய்துகொள்ள முடியும் என்பதோடு, மின்னணு வாக்கு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து அரசியல் கட்சிகள் குறை கூறுவதற்கும் வழியில்லாமல் போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டுப்பதிவு செய்த வாக்காளர் இந்த ஒப்புகைச்சீட்டை கையில் எடுத்துக்கொண்டு வர முடியாது, வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்படுகிற பெட்டியில் போட்டு விட்டு வந்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link

comments | | Read More...

தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: பொதுநல வழக்கு Sri Lankan Tamil refugees Should provide Indian citizenship living in Tamil Nadu

தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: பொதுநல வழக்கு Sri Lankan Tamil refugees Should provide Indian citizenship living in Tamil Nadu

Tamil NewsYesterday, 05:30

சென்னை, அக்.9-

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் பி.அருள்மொழிமாறன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

இந்திய பாராளுமன்றத்தில், 1983-ம் ஆண்டு சட்டவிரோத குடியேற்ற சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சட்டம் முழுவதும் சட்டவிரோதமானது. எனவே அந்த சட்டத்தை ரத்து செய்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டு 12-7-2005 அன்று தீர்ப்பளித்துள்ளது.

பூடான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு குடியேறிய 'சக்காஷ்' என்ற இனத்தை சேர்ந்த 65 ஆயிரம் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேசிய மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சக்காஷ் இன மக்களுக்கு குடியுரிமை வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு லட்சம் இலங்கை தமிழ் அகதிகள் வாழ்கின்றனர். அதில் 70 ஆயிரம் பேர் 115 அகதிகள் முகாம்களிலும், 35 ஆயிரம் பேர் வெளியிலும் வசிக்கின்றனர். இவர்களும், சக்காஷ் இன மக்களை போல், 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் வாழ்கின்றனர்.

ஓரு மனிதனின் ஆயுள்காலம் சுமார் 60 அல்லது 70 ஆண்டுகள் ஆகும். அதில், 30 ஆண்டுகளுக்கு மேல் குடியுரிமை இல்லாமல் வாழ்வது என்பது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மனித தன்மைக்கு எதிரானது.

தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் இலங்கை தமிழ் அகதிகள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
...
Show commentsOpen link

comments | | Read More...

2013 ம் ஆண்டிற்கான இயற்பியல் துறை நோபல் பரிசு: பிரிட்டன், பெல்ஜியம் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது Peter Higgs Francois Englert win 2013 Nobel physics prize

2013 ம் ஆண்டிற்கான இயற்பியல் துறை நோபல் பரிசு: பிரிட்டன், பெல்ஜியம் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது Peter Higgs Francois Englert win 2013 Nobel physics prize

Tamil NewsYesterday,

ஸ்டாக்ஹோம், அக். 8-

உலகின் மிகப்பெரிய பரிசான நோபல் பரிசு சமூக, அறிவியல் சேவைகளில் ஈடுபட்டோருக்காக ஆண்டுதோறும் நார்வே, சுவீடன் நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவத்துறைக்கான நோபல் பரிசுக்கு நேற்று அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஜேம்ஸ் ராத்மேன், ராண்டி ஷேக்மேன் மற்றும் ஜெர்மனியின் தாமஸ் சுடாப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது.

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டன. இதில் பெல்ஜியத்தின் இயற்பியல் விஞ்ஞானி பிராங்காய்ஸ் எங்லெர்டும், பிரிட்டன் விஞ்ஞானி பீட்டர் ஹிக்சும் இப்பரிசை கூட்டாக பெறுகின்றனர் என்று ராயல் சுவீடிஸ் அறிவியல் அகாடமி அறிவித்துள்ளது.

இந்த இரு விஞ்ஞானிகளும்  இணை அணுத் துகள்கள் நிறையின் தோற்றம் குறித்த தத்துவார்த்த கண்டுபிடிப்புகளுகாக இது வழங்கப்படுகிறது.

...
Show commentsOpen link

comments | | Read More...

ஷங்கரின் முதல்வன் படத்தில் ரஜினிகாந்த் muthalvan Part 2 with rajinikanth

ஷங்கரின் முதல்வன் படத்தில் ரஜினிகாந்த்

by admin
TamilSpyToday,

ஷங்கரின் முதல்வன் படத்தில் ரஜினிகாந்த் அல்லது விஜய் நடித்திருக்க வேண்டியது என்று இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் முதல்வன்.

அந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கே.வி. ஆனந்த். ஒளிப்பதிவாளரான அவர் தற்போது இயக்குனராக உள்ளார்.

கனா கண்டேன் படத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்த அவர் தற்போது தனுஷை வைத்து அனேகன் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அவர் முதல்வன் படம் குறித்து ட்விட்டரில் சுவாரய்ஸமான தகவலை அளித்துள்ளார்.

சன் டிவியில் முதல்வன் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த படத்தின் படப்பிடிப்புக்கு செல்லும்போது எல்லாம் போருக்கு செல்வது போன்று இருந்தது.

மவுண்ட் ரோட்டில், பேருந்து மேல் இருந்து, மக்கள் கூட்டத்தில் ஷூட்டிங் எடுத்தோம் என்று கே. வி. ஆனந்த் தெரிவித்துள்ளார்.

அழகான ராட்சசி முதல்வன் படத்தில் ஷங்கர், சுஜாதா, ஏ.ஆர். ரஹ்மான், வி.டி. விஜயன், தோட்டா தரணி, கனல் கண்ணன் என்று ஒரு பிராமதமான டீம் இருந்தை மறக்கவே முடியாது.

அழகான ராட்சசியே பாடலை 15 நாட்களிலும், முதல்வனே பாடலை 6 நாட்களிலும் படமாக்கினோம் என்றார் ஆனந்த்.

அனைத்து உதவி இயக்குனர்கள் மற்றும் எனது உதவியாளர்களுக்கு ஹேட்ஸ் ஆஃப் என்று தெரிவித்துள்ளார் ஆனந்த்.

ரஜினி, விஜய் அர்ஜுன் கதாபாத்திரத்தில் ரஜினி சார் அல்லது விஜய் நடித்திருக்க வேண்டியது.

ஆனால் அவர்கள் ஏனோ சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Show commentsOpen link

comments | | Read More...

ஷிண்டேயின் உத்தரவை குப்பை தொட்டியில் வீசுங்கள்: பா.ஜ.க. முதல் மந்திரிகளுக்கு வெங்கையா வேண்டுகோள் Throw Shindes directive in dustbin BJP tells its CMs

Penulis : Tamil on Monday 7 October 2013 | 21:53

Monday 7 October 2013

ஷிண்டேயின் உத்தரவை குப்பை தொட்டியில் வீசுங்கள்: பா.ஜ.க. முதல் மந்திரிகளுக்கு வெங்கையா வேண்டுகோள் Throw Shindes directive in dustbin BJP tells its CMs

Tamil NewsYesterday,

பெங்களூரு, அக். 7-

தீவிரவாதம் என்கிற பெயரில் உரிமைகளை மீறி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது சட்ட அமலாக்க பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் மத்திய அரசுக்கு வந்துகொண்டிருக்கின்றன. அதையடுத்து முஸ்லிம் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநில முதலமைச்சர்களுக்கு உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே சமீபத்தில் கடிதம் எழுதினார்.

அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் ஷிண்டே இந்த கடிதத்தை எழுதியுள்ளார் என்று எதிர்கட்சிகள் கூறின. இதுகுறித்து பாரதிய ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீங்கள் ஒரு நாட்டுக்கு உள்துறை மந்திரியாக இருக்கிறீர்களா? அல்லது ஒரு சமுதாயத்துக்கு உள்துறை மந்திரியாக இருக்கிறீர்களா?. இது பொறுப்பற்றதாகும். இது இந்திய அரசின் முட்டாள்தனமான செயலாகும்.

ஷிண்டேயின் இந்த உத்தரவானது அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரானது. இந்த உத்தரவானது எந்த ஒரு அப்பாவியும் கைது செய்யப்படக்கூடாது என்று தான் இருந்து இருக்க வேண்டும்.

ஒரு சாரரை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கையை ஷிண்டே எடுத்திருப்பது வெட்கக்கேடானது. அவரின் இந்த உத்தரவை குப்பை தொட்டியில் வீசியெறிய பாரதிய ஜனதா முதல் மந்திரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 
...
Show commentsOpen link

comments | | Read More...

இந்தியாவில் மின்சாரத் தட்டுப்பாடு அதிகமாக உள்ளபோது பங்களாதேஷ்க்கு தாராளம்! Very worst goverment

Penulis : Tamil on Saturday 5 October 2013 | 23:30

Saturday 5 October 2013

இந்தியாவில் மின்சாரத் தட்டுப்பாடு அதிகமாக உள்ளபோது பங்களாதேஷ்க்கு தாராளம்!

by veni
is Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday,

கூட்டு மின் திட்டங்கள் பற்றி மன்மோகன்-ஹசீனா நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது.

சமீபத்தில் ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளிடையே எரிசக்தி திட்டங்களை தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி நட்புறவு நாடான வங்காளதேசத்துடன் மின் திட்டங்களை தொடங்க இந்தியா முடிவு செய்தது. மேற்கு வங்கத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் வங்காளதேசத்துக்கு வழங்குவது மற்றும் 1300 மெகாவாட் அனல் மின் திட்டத்தை வங்காளதேசத்தில் தொடங்குவது என இரு கூட்டு திட்டங்களை இன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.

அப்போது பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:-

நமது இரு நாடுகளுடைய வளர்ச்சிக்காக இன்று புதிய கூட்டு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இதன் மூலம் இரு நாடுகளின் விதிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகிறது.

இன்று எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் இந்தியா-வங்காளதேசம் இடையே உறவை மேலும் வலுப்படுத்தும். இரு நாட்டு உறவுகளில் ஒரு புதிய பரிமாணத்தை இது கொண்டுவரும். நாடுகளின் நட்புறவிற்கு இது ஒரு மைல் கல்லாக விளங்கும்.

தெற்கு ஆசியாவின் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்கள், பகிர்ந்தளிக்கப்பட்ட வளர்ச்சியின் மேம்பாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கும். வங்காளதேச மேம்பாட்டிற்காக இந்தியா தொடர்ந்து உதவும்.

தனக்கு போகத்தான் தானம் என்று ஒரு முதுமொழி  உண்டு. ஆனால் இந்த விடயத்தில் மொத்தமாக இந்தியாவிற்குத் திண்டாட்டம… பங்களாதேஷ்க்கு கொண்டாட்டம்!!

The post இந்தியாவில் மின்சாரத் தட்டுப்பாடு அதிகமாக உள்ளபோது பங்களாதேஷ்க்கு தாராளம்! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

comments | | Read More...

நிர்வாண பெண்ணுடன் டண்டணக்கா டான்ஸ் ஆடிய கர்நாடக பாஜக தலைவர்கள்

நிர்வாண பெண்ணுடன் டண்டணக்கா டான்ஸ் ஆடிய கர்நாடக பாஜக தலைவர்கள்

by abtamil

பாஜகவின் பிதார் மாவட்ட செயலாளர் பாபுவல்லி மற்றும் ஷிவராஜ் குடேரே ஆகிய இருவர்களும் நிர்வாணமான ஒரு பெண்ணுடன் டண்டணக்க டான்ஸ் ஆடிய காட்சிகள் இன்று கன்னட தொலைக்காட்சிகளில் பரபரப்பாக ஒளிபரப்பானது.
ஆனால் அதை இருவருமே மறுத்துள்ளார்கள், இது மார்ஃபிங் செய்யப்பட்ட காட்சி என்று தெரிவித்துள்ளார்கள் மேலும் இது அவர்கள் அரசியல் இமேஜை ஒழிக்க செய்யப்பட்ட சதி என்றும் கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் இது பாக்கிஸ்தானி முஜ்ரா வீடியோக்களில் Pakistani Mujra video என்று தெரிய வந்துள்ளது, அந்த வீடியோவில் இருந்த இருவர்களையும் பார்க்க கர்நாடக பாஜக மாவட்ட தலைவர்கள் போல இருந்ததால் கன்னட சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பின. உண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க abtamil செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் லைக் போட்டு இணைந்து கொள்ளுங்கள்.

டிவி9 கன்னடா உட்பட பல சேனல்களும் ரவுண்டு கட்டி ஒளிபரப்பிய இதன் வீடியோக்களை தற்போது நீக்கியுள்ளார்கள்.

ஏற்கனவே கர்நாடக சட்டமன்றத்தில் பாஜக அமைச்சரும், எம்.எல்.ஏ க்களும் தங்கள் ஸ்மார் போன்களில் சபை நடந்து கொண்டிருந்த போது "சீன்" படம் பார்த்தது படம் பிடிக்கப்பட்டு டிவியில் ஒளிபரப்பப்பட்டு பாஜக எம்.எல்.ஏக்களின் மானம் காற்றில் பறந்தது. abtamil ஃபேஸ்புக் பக்கத்தில் லைக் போட்டு இணைந்து கொள்ளுங்கள்.

கர்நாடக பாஜகவுக்கு இந்த கிளுகிளுப்பு சமாச்சாரங்கள் புதிது அல்ல என்பதால் இப்படி ஒரு வீடியோ கிடைத்த உடனே அதன் உண்மை தன்மைகளை முழுவதும் ஆராயாமல் டிவி சேனல்களில் ஒன்று ஒளிபரப்ப எங்கே தங்களுக்கும் டி ஆர் பி ரேட்டிங் போய்விடுமோ மற்ற சேனல்களும் வீடியோவை போட்டு நாறடித்துவிட்டனர்.

Show commentsOpen link

comments | | Read More...

கழிவறை பற்றிய நரேந்திர மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி congress reply for modi statement

Penulis : Tamil on Thursday 3 October 2013 | 12:28

Thursday 3 October 2013

கழிவறை பற்றிய நரேந்திர மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி

by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday,

நரேந்திர மோடியின் கழிவறை பற்றிய பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்து உள்ளது.

நரேந்திர மோடி பேச்சு

குஜராத் முதல்–மந்திரியும், பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள தியாகராஜா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ''என்னை எல்லோரும் இந்துத்வா தலைவர் என்ற கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில் நான் எத்தகைய சிந்தனை கொண்டவன் என்பதை இப்போது சொல்கிறேன். முதலில் கழிவறை கட்டவேண்டும். அதன்பிறகுதான் சாமி கும்பிட கோவில் கட்ட வேண்டும்'' என்று அவர் கூறினார். இந்தியாவில் ஒவ்வொரு கிராமத்திலும் கோவில் இருப்பதாகவும், ஆனால் நல்ல கழிவறை வசதி இல்லை என்றும், இந்த நிலை மாறவேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார்.

காங்கிரஸ் விமர்சனம்

கழிவறை வசதி பற்றிய நரேந்திர மோடியின் இந்த பேச்சை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து இருக்கிறது.

இதுபற்றி அக்கட்சியைச் சேர்ந்த மத்திய மந்திரி ராஜீவ் சுக்லா கூறியதாவது:–

நரேந்திர மோடி இந்துத்வா தலைவர் அல்ல. இந்துக்களுக்காக எதுவும் செய்யவும் இல்லை. ஆனால் இந்துக்களை தவறாக வழிநடத்தி அவர்களுடைய வாக்குகளை பெறும் நோக்கத்தில் அவர் இந்துத்வா தலைவராக முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

பா.ஜனதாவுக்கு கேள்வி

மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் முன்பு ஒருமுறை பேசும் போது, கிராமங்களில் கோவில்கள் கட்டுவதை விட முதலில் கழிவறைகள்தான் கட்ட வேண்டும் என்று கூறினார். அப்போது அதை வன்மையாக கண்டித்த பாரதீய ஜனதா, அவர் தனது பேச்சுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரியது. ஆனால் இப்போது நரேந்திர மோடி பேசி இருப்பது பற்றி பாரதீய ஜனதா வாயை திறக்காமல் மவுனமாக இருப்பது ஏன்?

இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறினார்.

இதேபோல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்கும், நரேந்திர மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

The post கழிவறை பற்றிய நரேந்திர மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

comments | | Read More...

மகிந்த ராஜபக்சவின் பகல் கனவு rajapakshe day dream

மகிந்த ராஜபக்சவின் பகல் கனவு – தமிழக நாளேட்டில் தலையங்கம் !!
by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today,

இலங்கையில் தமிழர்கள் அமைதியாகவும், சிங்களவர்களுடன் ஒற்றுமையாகவும் வாழ்ந்துவிடக் கூடாது என்பதிலும், அமைதி தொடரக் கூடாது என்பதிலும் அதிபர் ராஜபக்ச தீர்மானமாக இருக்கிறார் என்று தோன்றுகிறது.

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. விக்னேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாண அரசு அமைய இருக்கிறது.

இந்தவேளையில், அந்த அரசுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதும், அதிக உரிமைகளுடன் விக்னேஸ்வரன் தலைமையிலான அரசு இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டு செயல்பட உதவுவதும்தானே, அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் எல்லோரும் எதிர்பார்க்கும் பண்பு.

ஒரு தேசத்தின் அதிபர், தமிழர்களும் எனது நாட்டவர்களே என்று உலக அரங்கில் கிளிப்பிள்ளை போலத் திரும்பத் திரும்பச் சொல்லும் ராஜபக்ச, நேர் விரோதமாக நடந்து கொள்வதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.

வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று அதிபர் ராஜபக்ச அறிவித்திருப்பது, இலங்கை அரசு நிரந்தர அமைதி திரும்புவதில் அக்கறை காட்டவில்லை என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.

இராணுவத்தை இங்கேயிருந்து வெளியேற்றி நான் எங்கே கொண்டு போய் முகாமிடச் சொல்வது?" என்கிற அதிபர் ராஜபக்சவின் கேள்வியில் அதிகார தோரணையும், எதேச்சதிகாரப் போக்கும்தான் காணப்படுகிறதே தவிர, ஜனநாயகப் பண்பும், ஓர் அதிபருக்கே உரித்தான பெருந்தன்மையும் இருப்பதாகத் தெரியவில்லை.

2009ல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது முதல், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் இராணுவம் குவிக்கப்பட்டது.

தெருவுக்குத் தெரு துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்களின் தொடர்ந்த கண்காணிப்பும், சாதாரண உடையில் நடமாட்டமும் அதிகமாகக் காணப்படுவதால், அந்தப் பகுதிகளில் மக்கள் சகஜநிலைக்குத் திரும்ப முடியாமல் இருக்கிறது என்றும், அச்ச உணர்வுடன்தான் வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

சமீபத்தில் நடந்த வடக்கு மாகாணத் தேர்தலின் போது கூட, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் வீடு புகுந்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்புச் செய்தியானது.

மறைமுகமான அச்சுறுத்தலிலும், மக்களை அச்ச உணர்வுடன் வைத்திருப்பதிலும் இராணுவத்தின் பங்கு கணிசமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதன் விளைவாகத்தான், அதிபர் ராஜபக்சவின் கட்சி ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டு, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் பெருவாரியான வெற்றியை அளித்திருக்கிறார்கள்.

இதுகூடவா அதிபர் ராஜபக்சவுக்குப் புரியவில்லை.

இராணுவத்தை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து அகற்றுவது அடுத்த கட்டமாக இருந்தாலும், முதல் கட்டமாக வீரர்களை இராணுவ முகாம்களில் ஒதுங்கச் செய்து, மக்கள் பயமில்லாமல் சராசரி வாழ்க்கை வாழ வழி வகுக்காமல் போனால், பிறகு தேர்தல் நடந்து வடக்கு மாகாண அரசு அமைந்தால் என்ன? அமையாமல் போனால்தான் என்ன?

இராணுவத்தைக்கூட முகாம்களுக்குத் திருப்பி அனுப்பத் தயாராக இல்லாத ராஜபக்ச அரசு, உறுதி அளித்தபடி அதிகாரப் பகிர்வை ஏற்றுக்கொள்ளும் என்று எப்படி நம்புவது?

அதிகாரமே இல்லாமல் பெயருக்குப் பதவி என்றால் விக்னேஸ்வரனின் அமைச்சரவையால் என்ன பயன் இருந்துவிடப் போகிறது?

தேர்தல் நடந்ததற்கே அர்த்தமில்லாமல் போய்விடுமே..

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற அதிபர் ராஜபக்ச நினைத்திருந்தால் ஒருநாள் தங்கியிருந்து இந்தியப் பிரதமரை சந்தித்திருக்க முடியும்.

பிரதமர் மன்மோகன் சிங் நியூயோர்க் சென்றடையும் தினத்தில், கொழும்பு திரும்பும் வகையில் தனது பயண ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, தான் தங்கியிருக்கும் நாள்களில் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்.

அதாவது, எனது வசதிக்கு நீங்கள் வந்து சந்தியுங்கள் என்று கூறாமல் கூறியிருக்கிறார் என்றால், அவர் எந்த அளவுக்கு இந்தியப் பிரதமரை மதிக்கிறார் என்பது தெரிகிறது.

ஏறத்தாழ 15,000 இராணுவ வீரர்கள் வடக்கு மாகாண வீதிகளில் உலவும் போது எப்படி அமைதியும், நிம்மதியும் திரும்பும்?

முன்னாள் இராணுவ அதிகாரியான வடக்கு மாகாண ஆளுநர் மாற்றப்பட்டு, விக்னேஸ்வரன் அரசுடன் இணக்கமாகப் பணியாற்றும் ஆளுநர் நியமிக்கப்படாமல் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு திறமையாகவும், சுமுகமாகவும் செயல்பட முடியும்?

இலங்கையில் அமைதி திரும்ப வேண்டுமானால், வடக்கு மாகாண அரசு முழு அதிகாரத்துடன் செயல்பட வேண்டும். இராணுவத்தாலும் அடக்குமுறையாலும் நிரந்தர அமைதியும், தீர்வும் ஏற்படும் என்று அதிபர் ராஜபக்ச நினைத்தால் அது பகல் கனவாகத்தான் இருக்கும்!

The post மகிந்த ராஜபக்சவின் பகல் கனவு – தமிழக நாளேட்டில் தலையங்கம் !! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

comments | | Read More...

அறம் செய்வோம் ... உதவி செய்யுங்கள் ...


அறம் செய்வோம் ...  உதவி செய்யுங்கள் ...

கோயம்புத்தூர் கிருஷ்ணா காலனியை சேர்ந்த சுதா ( வயது 28 )என்ற  பெண்ணுக்கு இரண்டு சிறுநீரகமும் பழுது அடைந்து விட்டது. 

அவளுக்கு சிறுநீரகம் தர ஒருவர் ஒப்புக்கொண்டிருக்கிரார், அதற்க்கான செலவுகள் சுமார் பத்து லட்சம் போல ஆகுமாம் .

எத்தனையோ நண்பர்கள் எவ்வளவோ செலவு செய்கிறோம்.. ஒவ்வொருவரும் ஒரு நூறு ரூபாய் அனுப்பினால் கூட அவள் உயிர் பிழைப்பாள். உங்களால் முடிந்தவர்கள் அவள் அக்கவுண்டுக்கு சிறு தொகை அனுப்பி உதவுங்கள்..

நன்றி உள்ளங்களே.. எல்லோரும் வேண்டுங்கள் .. மனிதனே தெய்வம்.. அவனை விட உதவ தெய்வம் யாருமில்லை.  நம்மால் முடியும் .

Name : D.Sudha

Her account no : 170901000005513

Bank : Indian Overseas Bank ( Rathinapuri branch, Coimbatore )

IFSC code : IOBA0001709 Contact : Aasaithambi (HUsband),

Ph: 9894135368 Mr. Aasai thambi H/O Sudha, 28, Krishnaraj Colony, Siddha Thottam, Ganapathy, Coimbatore - 6410066

Hospital Name: Sthyam Kidney care center

Hospital Phone: 0422 2400401

அறம்  செய்வோம் .. கடவுளாய் உணர்வோம்

comments | | Read More...

காலனி ஆட்சியின் போது விஷவாயு செலுத்தி இந்தியர்களை கொல்ல நினைத்த விண்ஸ்டன் சர்ச்சில்: திடுக்கிடும் தகவல் Churchil wanted kill Indians using M Gas

Penulis : Tamil on Wednesday 2 October 2013 | 17:48

Wednesday 2 October 2013

காலனி ஆட்சியின் போது விஷவாயு செலுத்தி இந்தியர்களை கொல்ல நினைத்த விண்ஸ்டன் சர்ச்சில்: திடுக்கிடும் தகவல் Churchil wanted kill Indians using M Gas

Tamil NewsYesterday, 05:30

லண்டன், அக்.3-

இந்தியாவில் பிரிட்டிஷாரின் காலனி ஆட்சி நடைபெற்ற போது அதை எதிர்த்து போராடிய வட இந்திய மாலைவாழ் மக்களை இங்கிலாந்து முன்னாள் பிரதமர் விண்ஸ்டன் சர்ச்சில் விஷவாயு செலுத்தி கொல்ல நினைத்த திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அப்போது ஆட்சியை கவனித்து வந்த உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதிய விண்ஸ்டன் சர்ச்சில், வடமேற்கு இந்தியாவில் வாழும் பழங்குடியினர் நமது ஆட்சிக்கு எதிராக மிகவும் வேகத்தோடு போராடி வருகிறார்கள்.

அவர்களால் நமக்கு தொல்லையாகி விட்டது. விஷவாயுவை செலுத்தி அவர்களை அழித்துவிட வேண்டும் என்று குறிப்பிட்டதாக பிரபல வரலாற்று நாவலாசிரியர் கைல்ஸ் மில்டன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் வெளியுறவு துறை செயலாளராக சர்ச்சில் பதவி வகித்த போது 1918ம் ஆண்டு இவ்வகையிலான 50 ஆயிரம் விஷவாயு குண்டுகளை பிரிட்டிஷ் விமானப் படையினர் ரஷ்யாவின் போல்ஷெவிக்ஸ் பகுதியில் செம்படை ராணுவ முகாம்களின் மீது வீசியதாகவும் மில்டன் குறிப்பிடுகிறார்.

இங்கிலாந்தின் பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்னரே சர்ச்சைக்குரிய இந்த கடிதத்தை சர்ச்சில் எழுதியதாக குறிப்பிடும் மில்டன், பிரிட்டைனின் சிறப்புக்குரிய தலைவராக அறியப்படும் விண்ஸ்டன் சர்ச்சில் தொடர்பாக இதுபோன்ற தகவல்களை நீங்கள் வெளியிடுவதால் அவரது இமேஜூக்கு பாதகம் ஏற்படாதா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் விண்ஸ்டன் சர்ச்சில் பெரிய பிரிட்டைன் தலைவர் தான். ஆனால் அவரது நடத்தையின் மற்றொரு பக்கமும் உள்ளது.

பெரிய அளவில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதை அவர் ஆதரித்து வந்தது உண்மை என்று கூறினார்.
...
Show commentsOpen link

comments | | Read More...

கிளிநொச்சி – கொழும்பு ரயிலில் முதலாவது அதிர்ச்சிக் கொள்ளை! Srilanka train news

கிளிநொச்சி – கொழும்பு ரயிலில் முதலாவது அதிர்ச்சிக் கொள்ளை!
by abtamil
Tamil newsToday,

கொழும்பு – கிளிநொச்சி இரு வழிப் போக்குவரத்தில் கடந்த மாதம் முதல் ஈடுபட்டு வருகின்ற இரவு ரயிலில் முதலாவது அதிர்ச்சிக் கொள்ளை நேற்று இடம்பெற்று உள்ளது.

கிளிநொச்சி ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி ரயில் பயணித்துக் கொண்டிருந்தபோது 150000 ரூபாய் ரொக்கப் பணம், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன.

பொகவந்தலாவையை சேர்ந்த நால்வரே பாதிக்கப்பட்டவர்கள். ரயிலில் இவர்களுடன் கதைத்து வேறு இருவர் நெருக்கமாயினர். நால்வருக்கும் குடிக்க மென்பானம் கொடுத்து இருக்கின்றனர். இதை குடித்த பிற்பாடு நால்வரும் மயக்க நிலைக்கு தள்ளப்பட்டு தூங்கிப் போனார்கள்.

இவர்களின் உடைமையில் இருந்த பணம், நகை ஆகியவற்றை கொள்ளை அடித்துக் கொண்டு இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

பொலிஸார் கொள்ளையர்கள் இருவரையும் கண்டு பிடிக்க புலனாய்வுகளை முடுக்கி விட்டு உள்ளார்கள்.

Show commentsOpen link

comments | | Read More...

இந்தியாவுல முடியலேன்னா அமெரிக்காவுல ரிலீஸ் பண்ணுவேன் – மீண்டும் ஆரம்பிக்கிறார் கமலஹாசன் ! Hamalakasan

Penulis : Tamil on Tuesday 1 October 2013 | 15:18

Tuesday 1 October 2013

இந்தியாவுல முடியலேன்னா அமெரிக்காவுல ரிலீஸ் பண்ணுவேன் – மீண்டும் ஆரம்பிக்கிறார் கமலஹாசன் !!
by admin
Tamil culture, செய்திகள் ...Today, 18m

தியேட்டரில் ரிலீஸாகும் ஒருநாளைக்கு முன்பாகவே டி.டி.ஹெச்சுகளில் ரிலீஸ் செய்யப்போனதால் கமலின் 'விஸ்வரூபம்' படத்துக்கு வந்த சிக்கல் எல்லோரும் அறிந்தது தான்.

டி.டி.ஹெச்சுகளில் ரிலீஸ் செய்தால் 'விஸ்வரூபம்' படத்துக்கு தியேட்டர்கள் தர மாட்டோம் என்று கமலுக்கு எதிராக கொடி பிடித்தனர் தியேட்டர் உரிமையாளர்கள். இதனால் வேறு வழியின்றி தனது டி.டி.ஹெச் பிஸினசையே கிடப்பில் போட்டு விஸ்வரூபத்தை தியேட்டர்களில் மட்டும் ரிலீஸ் செய்தார் கமல்.

தற்போது 'விஸ்வரூபம் – 2 படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் கமல் மீண்டும் இந்தப் படத்தில் தனது டி.டி.ஹெச் பிஸினசை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார்.

இந்தியாவில் உள்ள டி.டி.ஹெச்சுகளில் எனது படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றால் அமெரிக்காவில் உள்ள டி.டி.ஹெச்சுகளில் ரிலீஸ் செய்வேன் என்று திட்டவட்டமாகக் கூறுகிறார் கமல்.

வீட்டில் உட்கார்ந்து கொண்டே டிவிகளில் புதிய படங்களைப் பார்ப்பது தான் எதிர்காலத்தில் டெக்னாலஜியாக இருக்கப் போகிறது. ஆனால் எல்லா ரசிகர்களும் வீட்டில் உட்கார்ந்து படம் பார்ப்பதில்லை. சில படங்களை விருப்பப்பட்டால் தியேட்டர்களில் வந்துதான் பார்க்கிறார்கள். அப்படி இருக்கும் போது இங்கு டி.டி.ஹெச்சில் படம் ரிலீஸாவதையே எல்லோரும் எதிர்க்கிறார்கள்.

ஆனால் நான் மீண்டும் எனது விஸ்வரூபம் -2 படத்தை தியேட்டர்களில் ரிலீஸாகும் முன்பே இந்தியாவில் உள்ள டி.டி.ஹெச்சுகளில் ரிலீஸ் செய்ய முயற்சிப்பேன். அதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அமெரிக்காவில் உள்ள டி.டி.ஹெச்சுகளில் தான் என் படத்தை ரிலீஸ் செய்வேன்" என்கிறார் கமல்.

The post இந்தியாவுல முடியலேன்னா அமெரிக்காவுல ரிலீஸ் பண்ணுவேன் – மீண்டும் ஆரம்பிக்கிறார் கமலஹாசன் !! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

comments | | Read More...

சென்னையில் கை, கால்களை முடக்கும் மர்ம காய்ச்சல் mystery fever spread in chennai area

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே கொசு பெருக்கம் அதிகரித்து வருகிறது. மழைநீர் கால்வாய், ஆற்று பாலங்கள், மடைகள் போன்றவற்றை தூர்வாரும் பணியை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது.
மழைக்காலத்தில் கொசுக்களால் உண்டாகும் நோய் தடுப்பு பணிகளையும் சுகாதாரத்துறை செய்து வருகிறது.
ஆனாலும், சென்னையில் ஒரு சில பகுதிகளில் டெங்கு, எலி காய்ச்சல் அதிகமாக உள்ளது. குறிப்பாக தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், புளியந்தோப்பு, பட்டாளம், சூளை, கொடுங்கையூர், மூலக்கடை, கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர் போன்ற இடங்களில் கொசு உற்பத்தி பெருகி வருகிறது. இதனால் அப்பகுதிகளில் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger