News Update :
Powered by Blogger.

பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து டீசல், சமையல் கியாஸ் விலையும் உயருகிறது: மத்திய அரசு முடிவு

Penulis : karthik on Tuesday 24 July 2012 | 21:38

Tuesday 24 July 2012





பெட்ரோல் விலை நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து உயர்த்தப்பட்டு உள்ளது. லிட்டருக்கு 70 காசு முதல் 91 காசு வரை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் விலை நிர்ணய உரிமை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதால், ச� ��்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
 
ஆனால், டீசல், சமையல் கியாஸ் போன்ற மற்ற பெட்ரோலிய பொருட்களின� � விலை நிர்ணயம் தொடர்ந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.
 
இந்தநிலையில், பெட்ரோல் விலையைத் தொடர்ந்து டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையையும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பெட்ரோலிய அ மைச்சக உயர் அதிகாரி ஒருவர் இந்த தகவலை நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது:-
 
டீசல், சமையல் கியாஸ் மட்டுமின்றி, மண்எண்ணெயின் விலையையும் உயர்த்துவதில் முழுமையான கருத்து ஒற்றுமை ஏற்பட்� ��ு உள்ளது. ஆனால், இந்த விலை உயர்வு எப்போது இருக்கும்? எந்த அளவுக்கு விலை உயர்வு இருக்கும் என்பது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
 
ஆகஸ்டு 7-ந் தேதி அன்று துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, அத� ��்கு முன்பாக விலை உயர்வை அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு கருதுகிறது. துணை ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததும், பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கூட இருக்கிறது. பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது விலை உயர்வை அறிவித்தால் ஆளும் காங்கிரசுக்கு தர்மசங்கடம் ஏற்படும். எனவே விலை உயர்வு எப்போது என்பதை பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்து அறிவிப்பார். இவ்வாறு அந்த அதிகாரி க� ��றினார்.
 
அவர் மேலும் கூறும்போது,
 
சில்லரை வர்த்தகத்த� �ல் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதி மறுப்பு போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளை விட, தற்போது உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம், டீசல், மண் எண்ணெய் மற்றும் சமையல் கியாசுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்துவதுதான் என்றார்.
 
பேட்டியின்போது அவர் மேலும் கூறியதாவது:-
 
கச்சா எண்ணெய் விலை அதிகரித்தும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து இறக்குமதி செலவு அதிகரித்த போதிலும் கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதிக்குப்பிறகு பெட்ரோல் தவிர மற ்ற பொருட்களின் விலை உயர்த்தப்படவில்லை. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.11.26-ம், மண்எண்ணெய்க்கு ரூ.28,56-ம், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.319-ம் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே விலையை உயர்த்தாவிட்டால் இந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படும்.
 
பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயத்துக்காக பிரணாப் முகர்ஜி தலைமையில் மத்திய மந்திரிகளைக் கொண்ட உயர் அதிகார குழு அமைக்கப்பட்டு இருந்தது. ஜனாதிபதி தேர்தலையொட்டி அந்த பதவியில் இருந்து பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்தபின் அந்த குழு இன்னும் மாற்றியமைக்கப்பட வில்லை.
 
எனவே, விலை உயர்வு குறித்த அறிக்கையை மத்திய மந்திரிசபையின் பொருளாதார விவகார குழுவிற்கு அனுப்பி வைக்க பெட்ரோலிய துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன் பரிந்துரைப்படி, விலை உயர்வு குறித்து பிரதமர் மன்மோ கன்சிங் இறுதி முடிவை எடுப்பார்.
 
இவ்வாறு அவர் கூறினார்.   










comments | | Read More...

அமெரிக்காவில் அழகை மெருகேற்றினார்: புதுப்பொலிவில் அமலாபால்





நடிகை அமலாபால் அமெரிக்காவில் இரண்டு வாரம் இடங்களை சுற்றி பார்த்துவிட்டு திரும்பியுள்ளார். முன்பைவிட இப்போது பொலிவு அவரிடம் தெரிகிறது.

சமீபத்தில் ரிலீசான வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி படங்கள் ஹிட்டாகி அமலாபால் மார்க்கெட்டை உயர்த்தி உள்ளது. அடுத்து ஜெயம் ரவியை வைத்து சமுத்திரக்கனி இயக்கும் நிமிர்ந்து நில் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

அமெரிக்கா சென்று வந்தது குறித்து அமலாபால் கூறியதாவது:-

வட அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்க பேரவையின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். குடும்பத்தினருடன் இடங்களை சுற்றி பார்த்தேன். உறவினர் வீடுகளுக்கும் சென்றேன்.

புது மேக்கப்பில் எனது தோற்றத்தையும் மாற்றியுள்ளேன். சிகை அலங்கார நிபுணரிடம் சென்று எனது கூந்தலை அழகுபடுத்தியுள்ளேன்.

இவ்வாறு அமலாபால கூறினார்.







comments | | Read More...

'கரீனாவை திருமணம் செய்தாலும் ரூ 1000 கோடி சொத்துகளின் காப்பாளர் சயீப் அலிகான்!'





கரீனா கபூரைத் திருமணம் செய்து கொண்டாலும், ரூ 1000 கோடி வக்ப� �� வாரிய சொத்துகளுக்கு காப்பாளராக சயீப் அலிகான் பொறுப்பேற்க எந்த தடையும் இல்லை என்றும், எந்த மதத்தைச் சேர்ந்தவரை வேண்டுமானாலும் அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் மத்தியப் பிரதேச வக்பு வாரியம் அறிவித்துள்ளது.

படோடி சமஸ்தானத்தின் நவாபாக இருந்தவர் மன்சூர் அலிகான். அவர் கடந்த ஆண்டு மறைந்த பிறகு, அவர் மகன் சயீப் அலி கான் நவாபாக தொடர்கிறார்.

இந்த குடும்பத்துக்கு போபாலில் மட்டும் 2000 ஏக்கரில் சொத்துகள் உள்ளன. தவிர வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரூ 1000 கோடி சொத்துகளுக்கு மன்சூர் அலிகானின் மகள் சபா சுல்தான் பாதுகாவலராக (முத்தவல்லி) உள்ளார்.

அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலக நேர்ந்தால், அப்போது சயீப் அலிகான்தான் முத்தவல்லியாக பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அவர் இஸ்லாமியர் அல்லாத கரீனாவை திருமணம் செய்� �தால், அவருக்கு அந்த பொறுப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதனை எழுப்பியவர் சயீபின் அத்தை மகன் பைஜ் பின் ஜங்.

ஆனால் இந்தக் கேள்வி தேவையற்றது என மத்தியப் பிரதேச வக்பு வாரிய தலைவர் குப்ரான் ஆசாம் தெரிவித்துள்ளார்.







comments | | Read More...

ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் முறை அறிமுகம்





கிரிக்கெட் போட்டியில் ஆடுகள நடுவரின் முடிவில் சந்தேகம் ஏற்பட்டால் அதனை எதிர்த்து போட்டியில் ஆடும் அணிகள் அப்பீல் செய்யலாம். அதனை 3-வது நடுவர் தொழ� �ல்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்து முடிவை அறிவிப்பார்.
 
இதேபோல் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆக்கி ஆட்டத்தில் ஆடுகள நடுவர்கள் தவறாக தீர்ப்பு வழங்கினால் அதனை எதிர்த்து விளையாடும் அணிகள் அப்பீல் செய்யலாம். வீடியோ பதிவ ை பார்த்து போட்டி நடுவர் முடிவை அறிவிப்பார்.
 
இரு அணிகளும் தலா ஒருமுறை அப்பீல் செய்யலாம். செய்யப்படும் அப்பீல் சாதகமாக அமையும் அணி மீண்டும் அப்பீல் செய்ய முடியும். பாதகமாக அமைந்தால் மீண்டும் அப்பீல் செய்ய முடியாத� ��.
 
பெனால்டி ஸ்டிரோக், பெனால்டி கார்னர், கோல் எல்லைக்கு வெளியில் இருந்து அடிக்கப்படும் பந்துகள் ஆகியவை உள்ள சந்தேகங்களுக்கு மட்டுமே அப்பீல் செய்ய முடியும்.  







comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger