News Update :
Powered by Blogger.

என்னை அடித்து துன்புறுத்துகிறார்: கணவர் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி போலீசில் புகார்

Penulis : karthik on Thursday 13 September 2012 | 22:16

Thursday 13 September 2012

என்னை அடித்து துன்புறுத்துகிறார்: கணவர் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி போலீசில் புகார்என்னை அடித்து துன்புறுத்துகிறார்: கணவர் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி போலீசில் புகார்

முன்னாள் உலக அழகி யுக்தா முகி. இவர் 1999-ம் ஆண்டு தனது 20-வது வயதில் உலக அழகி பட்டத்தை பெற்றார். இதைத் தொடர்ந்து பல்வேறு இந்தி படங்களில் நடித்தார். யுக்தா முகிக்கும், அமெரிக்காவை சேர்ந்த தொழில் அதிபர் பிரின்ஸ் டுலிக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு கன்வால் முகி என்ற குழந்தையும் உள்ளது.
 
இந்த நிலையில் யுக்தா முகி தனது கணவர் மீது மும்பை போலீசில் புகார் செய்து உள்ளார். புகாரில், கணவர் தன்னை அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்து இருக்கிறார். இந்த புகாரை தொடர்ந்து அவரது கணவர் மீது தண்டிக்க இயலாத குற்றத்தின் கீழ் அம்போலி போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து இருப்பதால், எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்தல், கைது செய்தல் போன்ற நடவடிக்கைகள் கோர்ட்டு அனுமதி அல்லது உத்தரவின்றி போலீசார் செய்ய முடியாது.
 
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், யுக்தா முகி கடந்த 2 மாதத்துக்கு முன்பு அவரது கணவர் மீது புகார் கொடுத்தார். இந்த வழக்கில் தண்டனைக்குரிய நடவடிக்கைக்காக அவர் கோர்ட்டை அணுகலாம் என்றார். முன்னாள் உலக அழகி ஒருவர் கணவர் மீது போலீசில் புகார் கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
comments | | Read More...

20 ஓவர் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் முதலிடம்: யுவராஜ்சிங்குக்கு 15-வது இடம்

20 ஓவர் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் முதலிடம்: யுவராஜ்சிங்குக்கு 15-வது இடம் 20 ஓவர் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் முதலிடம்: யுவராஜ்சிங்குக்கு 15-வது இடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் சர்வதேச போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிய�® �ல் 55 பந்துகளில் 91 ரன்கள் குவித்த நியூசிலாந்தின் பிரன்டன் மெக்கல்லம், பேட்டிங் வரிசையில் 793 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (744 புள்ளி) 2-வது இடத்திலும், இந்தியாவின் சுரேஷ் ரெய்னா (742 புள்ளி) 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (738 புள்ளி) 4-வது இடத்திலும் உள்ளனர்.
 
புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து, நியூசிலாந்துடனான ஆட்டத்தில் 26 பந்துகளில் 34 ரன்கள் விளாசிய யுவராஜ்சிங் மீண்டும் தரவரிசைக்கு திரும்பியுள்ளார். அவருக்கு 15-வது இடம் கிடைத்துள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் மோர்கன் 9-வது இடத்திற்கு சர ிந்துள்ளார்.
 
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதால் இங்கிலாந்தின் ஸ்வானை 2-வது இடத்த ிற்கு தள்ளிட்டு நம்பர் ஒன் அரியணையில் ஏறியுள்ளார். டாப்-20 பவுலர்களில் இந்தியர்கள் யாரும் இடம்பெறவில்லை. 


/

comments | | Read More...

20 ஓவர் உலககோப்பையில் இந்திய அணிக்கு புதிய சீருடை இல்லை: பிசிசிஐ

20 ஓவர் உலககோப்பையில் இந்திய அணிக்கு புதிய சீருடை இல்லை: பிசிசிஐ 20 ஓவர் உலககோப்பையில் இந்திய அணிக்கு புதிய சீருடை இல்லை: பிசிசிஐ

இலங்கையில் நடக்க உள்ள 20 ஓவர் உலககோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய சீருடை கடந்த மாதம் 16-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் டெஸ் ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு தனித்தனி சீரூடைகள் இருப்பதுபோல் இனிமேல் 20 ஓவர் போட்டிகளில் இந்திய வீரர்கள் இந்த புதிய சீருடையை அணிந்து ஆடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த புதிய சீருடையின் இடது தோள்பட்டைக்கு கீழே இந்தியாவின் தேசியக் கொடியிலுள்ள மூன்று வண்ணங்களும் இடம் பெற்றிருந்தன. புதிய சீருடையை வரவேற்றுப் பேசிய இந்திய கேப்டன் மகேந்திரசிங் டோனி, 'இது ஒரு நல்ல துவக்கம். மக்கள் டி.வி.யில் சேனலை மாற்றும்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை தனித்தனியே அடையாளம் கண்டுகொள்வது போல இனிமேல் 20 ஓவர் போட்டிகளையும் அடையாளம் காணலாம்' என்றார். அவ்விழாவில் பேசிய சேவாக், 'இதயத்திற்கு அருகில் தேசியக்கொடியை பொறித்திருப்பது நல்ல சிந்தனை. அதன்மூலம் நாட்டிற்காக ஆடுகிறோம் என்ற எண்ணம் மேலோங்கும். வீரர்கள் சிறப்பாக ஆட அது உந்துதலாக இருக்கும்' என்றார்.

இந்நிலையில் நடக்க இருக்கும் 20 ஓவர் உலககோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் புதிய சீருடையை அணிந்து விளையாடப் போவதில்லை என பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய அணியின் விளம்பரதாரரான நைக் நிறுவனத்தை தொடர்புகொண்டு, பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

இதனால் கடந்த ஆண்டு 50 ஓவர் உலககோப்பையை வென்றபோது அணிந்த, அதே சீருடையையே வர இருக்கும் 20 ஓவர் உலககோப்பை தொடரிலும் இந்திய வீரர்கள் அணிய உள்ளனர்.


/

comments | | Read More...

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்ப இடைக்காலத் தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்ப இடைக்காலத் தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்ப இடைக்காலத் தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்ப இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று கருத்துத் தெரிவித்�® �ுள்ளது.

கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், யுரேனியம் நிரப்ப அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்தà � கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபெமடுத்தது. கடந்த திங்கள்கிழமையன்று கடற்கரையில் ஒன்று கூடி முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் பெரும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். இதையடுத்து இன்று கடல் நீரில் நின்று போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது உச்சநீதிமன்றம். அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், யுரேனியம் எரிபொருள் நிரப்பி மின்சாரம் உற்பத்தி செய்ய இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் யுரேனியம் நிரப்ப தடை விதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் , யுரேனியம் நிரப்ப இடைக்கால தடைவிதிக்க முடியாது என்றும் வரும் 20-ந் தேதி யன்று மனு மீது விசாரணை நடைபெறும் என்றும் கூறியுள்ளனர்.


/

comments | | Read More...

மனைவிகளிடம் அடி-உதை வாங்கிய ஜேம்ஸ் பாண்ட்



மனைவிகளிடம் அடி-உதை வாங்கிய ஜேம்ஸ் பாண்ட் மனைவிகளிடம் அடி-உதை வாங்கிய ஜேம்ஸ் பாண்ட்

ஆங்கில சினிமா படங்களில் ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றவையாகும். இந்த ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் ஏற�¯ �று நடித்தவர்களில் ஒருவர் ரோஜர் மூர். சினிமா படத்தில் தான் அவர் துப்பறியும் வீரதீரர் வேடம் ஏற்றார். உண்மையான வாழ்க்கையில் அவர் தனது மனைவிகளிடம் அடி-உதை வாங்கி இருக்கிறார்.
தற்போது 84 வயதாகும் அவர் இந்த ருசிகர தகவலை ஒரு பே�® �்டியில் விளக்கி இருக்கிறார். அவருடைய முன்னாள் முதல் மனைவி டூர்ன்வான் என்பவர் ரோஜர் மூரை கையால் குத்து விடுவதுடன் நகத்தால் கீறி விடுவாராம். ஒரு முறை டீ கோப்பையாலும் தாக்கி இருக்கிறார். அடுத்து 2-வது மனைவியான டாரோதி ஸ்குரீஸ் எம்பவரும் ரோஜர் மூர் தன்னிடம் நம்பிக்கைக்குரியவராக இல்லை என கருதி வன்முறையில் ஈடுபட்டு இருக்கிறார். கணவரின் தலையில் கித்தார் இசைக்கருவியை க ொண்டு தாக்கியுள்ளார். 


/

comments | | Read More...

ஆண்களின் விந்து பெண்களைப் படுத்தும் பாடு...!! ஆண்களின் விந்து பெண்களைப் படுத்தும் பாடு...!!

ஆண்களின் விந்து பெண்களைப் படுத்தும் பாடு...!! ஆண்களின் விந்து பெண்களைப் படுத்தும் பாடு...!!

உறவின்போது கிடைப்பது இருபாலினருக்கும் நல்ல சுகம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. அதேசமயம், ஆணிடமிருந்து பெண்ளுக்குள் பாயும் வி்ந்தனுக்களால் அந்தப் பெண்கள் படும் பாடு இருக்கே.. கேட்டால் திகிலடித்துப் போய் விடுவீர்கள். அந்த அளவுக்கு பெரும் கஷ்டங்களைக் கொடுக்கிறதாம் ஆணின் விந்தனுக்கள்.

ஒரே ஒரு விந்தனு போதுமாம், பெண்களை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்க வைக்க. பெண்களின் புத்திர பாக்கியம், உடல் ரீதியாசெய்கைகள், சாப்பிடும் தன்மை, தூக்கம் உள்ளிட்டவற்றை கடுமையாக பாதிக்க இந்த விந்தனுக்களில் உள்ள ஒரு புரோட்டின் காரணமாக அமைகிறதாம்.

செக்ஸ் உறவானது ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி இன்பத்தை வாரிக் கொடுக்கும் வள்ளல் என்பதுதான் நமக்கெல்லாம் தெரிந்த விஷயமாக உள்ளது. ஆனால் அந்த செக்ஸானது பெண்களுக்குப் பல பாதிப்புகளையும் கொண்டு வருகிறதாம் கூடவே.

ஒரு ஆணின் விந்தனுவில் உள்ள குறிப்பிட்ட புரதமானது, பெண்களின் தூக்க முறையை குழப்பியடித்து விடுமாம். அவர்களின் சாப்பிடும் தன்மையை காலி செய்து விடுகிறதாம். மலட்டுத்தன்மைக்கும் கூட இது வித்திடுகிறதாம்.

இதுகுறித்து பழங்களில் அமருமே ஈ.. அதை வைத்து ஒரு ஆய்வை நடத்தியுள்ளனர் விஞ்ஞானிகள். அதில் கிடைத்த முடிவுகள் மனிதர்களுக்கும் பொருந்தும் என்கிறார்கள் அவர்கள்.

உடலுறவின்போது பெண்ணின் உடலுக்குள் செல்லும் ஆணின் விந்தனுவில் உள்ள புரதமானது என்னவெல்லாம் செய்கிறது, எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதுதான் இந்த ஆய்வின் மையக் கருத்தாகும். இந்த ஆய்வை கிழக்கு அங்கிலியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

அப்போது ஆணின் விந்தனுவில் உள்ள ஒரு குறிப்பிட்ட புரதமானது, பெண்களின் உடலில் பல்வேறு சைட் எபக்ட்களை உருவாக்குவதாக கண்டறிந்துள்ளனர். மேலும் பெண்களின் உடலில் பல்வேறு வகையான பிரச்சினைகளையும் இது ஏற்படுத்துகிறதாம்.

கருத்தரிப்பதில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு இந்த விந்தனு புரதம்தான் காரணமாம். மேலும் சரியாக தூக்கம் வராமல் தவிப்பது, சாப்பிடுவதில் பிரச்சினைகள், நோய் எதிர்ப்புத் தன்மை (இளமை.ப்ளக்போட்ஸ்.கொம்) குறைபாடு, உடலில் நீர்ச்சத்து குறைபாடு, செக்ஸ் ரீதியான சில குழப்பங்களுக்கும் இந்த புரதம்தான் காரணமாம்.

இப்படி பல குழப்பங்களை ஏற்படுத்தும் அந்த புரதத்திற்கு செக்ஸ் பெப்டைட் என்று பெயர். பெண்களின் ஜீன் வரிசையில் இந்தப் புரதங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதே இதற்குக் காரணமாம்.

செக்ஸின்போது இன்பத்தை மட்டுமே ஆண்கள் பெண்களுக்குத் தருவதில்லை. மாறாக துன்பத்தையும் போனஸாக தருகிறார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தான்.
comments | | Read More...

உடல் ரீதியான உறவுகளை விட உள்ளங்களின் கூடல்தான் உண்மையான காதல்


 காதலன் காதலியாக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாக இருந்தாலும் சரி, செக்ஸ் மட்டுமே அவர்களுடைய அந்தரங்கமாக இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதையும் தாண்டி பல அருமையான விஷயங்களும் உள்ளன. அவையும் கூட ஒருவர் மீதான இன்னொருவரின் அன்பை அதிகமாக்க, வலுவாக்க உதவும்.. அது என்னவென்று பார்ப்போமா...

 
உறவு வலுப்பட உடல் ரீதியான உறவு மட்டும் உதவாது. மாறாக, மனங்களின் பிணைப்பும் அவசியம். மன ரீதியான பிணைப்பு அதிகமாகும்போதுதான் உடல் ரீதியான பிணைப்புகளும் வலுப்பெறுகிறது.
காதலனாகட்டும் அல்லது காதலியாகட்டும், கணவனாகட்டும் இல்லை மனைவியாகட்டும், இருவரில் ஒருவர் இன்னலில் இருக்கும்போது ஆதரவுக் கரம் நீட்டும்போது கிடைக்கும் சுகமே அலாதியானது.
சில நேரங்களில் மனைவிக்கு உடல் நலமில்லாமல் போயிருக்கும். அந்த நேரத்தில் ஒரு கணவர் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மனைவிக்கு ஏகமாக இருக்கும்.  
 
உடல் நலக்குறைவின்போதுதான் கணவர்களிடம் மனைவியர் நிறைய எதிர்பார்ப்பார்கள். அதை சரியாக புரிந்து, உணர்ந்து, தெரிந்து நடந்து கொள்ளும்போதுதான் கணவர் மீது மனைவிக்கு அன்பும், ஆசையும், பற்றும், காதலும் அதிகரிக்கும். இது கணவன் மனைவி என்றில்லை, காதலன் காதலிக்கும் கூட இது பொருந்தும்.
 
வெறுமனே காதல் பாஷையில் பேசிக் கொள்வது, உறவில் மூழ்கித் திளைப்பது, பணம், பொருளைப் பரிசாக கொடுத்து அசத்துவது மட்டும் தாம்பத்யம் அல்ல, மாறாக ஒருவர் மனதை ஒருவர் அறிந்தும், புரிந்தும் சரிவர நடந்து கொள்வதுதான் உண்மையான தாம்பத்யம்.
 
மனைவி அல்லது காதலிக்குக் காய்ச்சல் அடிக்கிறதா.. உடனே லீவு போட்டு கூடவே உட்கார்ந்து கவனிக்கும்போது அந்தக் கணவர் அல்லது காதலர் மீது பொங்கும் பாசத்திற்கு அளவே இருக்காது. மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொடுத்து சாப்பிட வைப்பது, இதமாக தலை கோதி விடுவது, காய்ச்சலைக் குறைக்க அவ்வப்போது டெம்பரேச்சரைப் பார்த்து அதற்கேற்றார் போல ஈரத் துணியால் நெற்றியில் ஒற்றி விடுவது, ஆறுதலாக நாலு வார்த்தை பேசுவது, அழகாக கதை சொல்லி தூங்க வைப்பது, தட்டிக் கொடுத்து ஆறுதல் தருவது, நெற்றியிலும், கன்னத்திலும் இதமாக முத்தமிடுவது... இத்யாதி.. இத்யாதிகளைச் செய்யும்போது அந்த கணவன் அல்லது காதலனுக்கு ஏற்படும் நிம்மதியும், திருப்தியும் சொல்லில் வடிக்க முடியாததாக இருக்கும்.
 
அதை விட அந்தப் பாசம் நிறைந்த பொறுப்புணர்ச்சியை பெறும் மனைவி அல்லது காதலிக்குக் கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது.மனைவி அல்லது காதலிக்கு உடல் நலம் குன்றி, வாந்தி எடுத்து அவஸ்தைப்படும்போது அதைத் தாங்கிப் பிடித்து ஆதரவாக மடியில் சாய்த்துக் கொள்ளும் கணவன் அல்லது காதலன், தாய்-தந்தைக்குச் சமமான இடத்தைப் பெறுகிறான். அந்தப் பெண்ணிந் மனதில் ஆழமான இடத்தையும் பெறுவான்.
 
கணவன் அல்லது காதலனை நம்பி வந்து விட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் கணவன் அல்லது காதலனே தாயுமாகிறான், தந்தையுமாகிறான். அப்படிப்பட்ட சூழலில், தாயினும் சாலப் பரிந்து...அதாவது ஒரு தாய் காட்டும் அன்பை விட பல மடங்கு அன்பு காட்ட வேண்டிய கடமை கணவர் அல்லது காதலனுக்கு உண்டு. அந்தக் கடமையிலிருந்து அவர்கள் தவறும்போது அந்தப் பெண்ணின் மனம் துடிக்கும் துடிப்பு வெளியில் யாருக்கும் தெரியாது. ஆனால் வேதனையின் வெப்பத்தை உணரும்போது உயிர்கள் துடித்துப் போகும், உணர்வுகள் தவித்துப் போகும்.
 
உங்கள் மனைவி அல்லது காதலியை காமத்துடன் மட்டும் பார்க்காதீ்ர்கள். உங்கள் அன்பான அரவணைப்பையும், பரிவையும், பாசத்தையும் காட்டி அவரை சந்தோஷத்தில் திளைக்க விடுங்கள். கூட இருந்து பார்க்க முடியவில்லையா..அடிக்கடி போன் செய்து, நான் இருக்கிறேன் செல்லம்மா, உன் கூடவே இருக்கிறேன், உன் பக்கத்திலேயே இருக்கிறேன், உன்னுடனேயே இருக்கிறேன், என் நினைவெல்லாம் உன்னுடன்தான், கவலைப்படாதே, தைரியமாக இரு, எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை ஊட்டுங்கள், அதிலேயே அவர் பாதி குணமடைந்து விடுவார்.
 
அன்பும், ஆதரவும், பாசமும், பரிவும், அரவணைப்பும்தான் உண்மையான காதல். காமத்திற்கு இங்கு கடைசி இடம்தான். உடல் ரீதியான உறவுகளை விட உள்ளங்களின் கூடல்தான் உண்மையான காதல், உண்மையான அன்பு, உண்மையான தாம்பத்தியமாக இருக்க முடியும்.என்ன புரிஞ்சுதா...!
comments | | Read More...

புகழின் உச்சத்தில் இருக்கும்போதே சச்சின் ஓய்வு பெறவேண்டும்: இம்ரான் கான்



புகழின் உச்சத்தில் இருக்கும்போதே சச்சின் ஓய்வு பெறவேண்டும்: இம்ரான் கான் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே சச்சின் ஓய்வு பெறவேண்டும்: இம்ரான் கான்

சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் தொடர்ந்து மூன்று முறை போல்டாகி ஏமாற்றம் அளித்த ார். வயதாகி விட்டதால் மாஸ்டர் பேட்ஸ்மேனான சச்சினால் முன்புபோல் விளையாட இயலவில்லை எனவும், களத்தில் அவரது கால் அசைவுகள் சரியாக இல்லாததால்தான் அவர் மோசமான முறையில் போல்டாகிறார் எனவும் கிரிக்கெட் வல்லுனர்கள் விமர்சித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் சச்சினின் மோசமான பார்ம் குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், 'சச்சின் ஒரு சிறந்த வீரர். ஆனால் அவரது இடத்தில் நான் இருந்திருந்தால் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வுபெற விரும்புவேன். தேர்வாளர்களின் கருணையால் அணியில் இடம்பெறுவதை நான் விரும்பியிருக்க மாட்டேன். சாதனைகள் அடிப்படையில் சச்சிà ��் ஒரு ஜாம்பவான். எனினும் புகழின் உச்சத்தில் இருக்கும்போது ஓய்வுபெற்றால் மக்கள் அவரை மறக்கமாட்டார்கள்' என்றார்.
 
மேலும், 'சச்சினின் ஆட்டத்தை 23 வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கும் இந்திய மக்களின் உணர்ச�¯ �சியை என்னால் உணர முடிகிறது. சச்சின் இல்லாத கிரிக்கெட்டை அவர்களால் நினைக்கக் கூட முடியாது. கிரிக்கெட்டுக்கு சச்சின் சேர்த்துள்ள பெருமை பற்றியும் எனக்கு தெரியும். ஆனால் தனது ஓய்வை முடிவு செய்வது அவரது சொந்த விருப்பம்' எனவும் இம்ரான் கான் கூறினார்.


/

comments | | Read More...

விடுபட்ட வேலைவாய்ப்பு பதிவுமூப்பை புதுப்பிக்க அடுத்த மாதம் 18-ந் தேதி வரை காலஅவகாசம்



விடுபட்ட வேலைவாய்ப்பு பதிவுமூப்பை புதுப்பிக்க அடுத்த மாதம் 18-ந் தேதி வரை காலஅவகாசம் விடுபட்ட வேலைவாய்ப்பு பதிவுமூப்பை புதுப்பிக்க அடுத்த மாதம் 18-ந் தேதி வரை காலஅவகாசம்

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு அலுவலகமும், சென்னை, மதுரையில் மாநில செயல் மற்றும் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. பட்டப் படிப்பு வரையிலான கல்வித்தகுதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், முதுகலை படி ப்பு, பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ்., பி.எல். போன்ற தொழிற்படிப்புகளுக்கான கல்வித்தகுதியை தங்கள் மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவுசெய்ய வேண்டும்.
 
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து வைத்துள்ள பதிவுதாரர்கள் தங்கள் பதிவுமூப்பை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சீனியாரிட்டி காலாவதியாகி விடும். இதுபோன்று பதிவுமூப்பை புதுப்பிக்காமல் விடுபட்டுபோனவர்கள் பயன்பெறும் வகையில் அவ்வப்போது சலுகை அளிக்கப்படுவது உண்டு.
 
அந்த வகையில், கடந்த 2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் பதிவுமூப்பை புதுப்பிக்கத் தவறியவர்கள் அதை புதுப்பித்துக்கொள்ள அரசு சலுகை அளித்தது. அதன்படி, கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ந் தேதி வரை இந்த சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது ஆன்லைனில் புதுப்பிக்கும் முறை அமலில் இருந்தாலும் இதுபோன்று சலுகையை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்க�¯ நேரில் வந்துதான் பெற முடியும்.
 
ஆனால், இந்த முறை இத்தகைய விடுபட்டுபோன பதிவுமூப்பையும் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வராமல் ஆன்லைனிலேயே புதுப்பித்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகத் திற்கு நேரில் சென்றும் புதுப்பிக்கலாம்.
 
சென்னையில் உள்ள மாவட்ட பொது வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகம், ஊனமுற்றோருக்கான வேலைவாய்ப்பு அலுவலகம், மாநில தொழில் மற்றும் செயல்முறை வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகிய அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் சேர்த்து இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுதாரர்கள் விடுபட்டு போன தங்கள் பதிவை புதுப்பித்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.   







/

comments | | Read More...

கூடங்குளம் : 3 ஆயிரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்- விமானம், கப்பல் மூலம் கண்காணிப்பு



கூடங்குளம் : 3 ஆயிரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்- விமானம், கப்பல் மூலம் கண்காணிப்பு கூடங்குளம் : 3 ஆயிரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்- விமானம், கப்பல் மூலம் கண்காணிப்பு

கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்புவதை உடனே கைவிட வலியுறுத்தி இடிந்தகரையில் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கூடங்குளம் கடற்கரையில் நடந்த தடியடி மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்து இடிந்தகரை தேவாலயத்தில் அணு உலை எதிர்ப்பாளர்கள் நடத்திய 48 மணி நேர உண்ணா�® �ிரதம் நேற்று முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து புதிய போராட்டமாக இன்று முற்பகலில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆண்கள் கடலுக்குள் சற்று தொலைவிலும் பெண்கள் à ��ரைக்கு அருகில் உள்ள பகுதிகளிலும் கை கோர்த்து மனித சங்கிலியாக நின்று கொண்டிருக்கின்றனர். குழந்தைகள் லைப் ஜாக்கெட் அணிந்தபடி கடலுக்குள் இறங்கியுள்ளனர். அனைத்து தரப்பு மக்களும் உற்சாகமாக இந்த போராட்டத்தில் இறங்கியிருப்பதால் அனேகமாக இது தினசரி போராட்டமாக உருவெடுக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. அனைவரும் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதை உடனே நிறுத்த வலியுறுத்தà �¿ முழக்கமிட்டு வருகின்றனர்.

விமானம், கப்பல் மூலம் கண்காணிப்பு

கடலுக்குள் இறங்கி மீனவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கடற்படைக்குச் சொந்தமான கண்காணிப்பு விமானம் தாழப் பறந்து மீனவர்களை கண்காணித்து வருகிறது. இதேபோல் கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றும் கூடங்குளம் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருக்கிறது. கூடங்குளம் à ��ணு உலை மத்திய அரசுக்கு சொந்தமானது என்பதால் பாதுகாப்பு கருதி கடற்படை விமானமும், கப்பலும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மெசேஜ் அனுப்பிய உதயகுமார்

இன்றைய போராட்டத்தில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்தும் அவர் தலைமறைவாகவே இருந்து போராட்டத்தை ஒருங்கிணைத்து வருவதாக தெரிகிறது. இதனிடையே தாமே போராட்டத்துக்கு தலைமை ஏற்று வருகிறேன்.. அதனால் போரட ்டத்தை உறுதியோடு முன்னெடுப்போம் என்று மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிகிறது.



/

comments | | Read More...

ஓல்டு ஜோக்ஸ் 2

ஓல்டு ஜோக்ஸ் 2

நீங்க கல்யாணத்தை ரொம்ப சிக்கனமா நடத்துங்க.. வேணாங்கலை! அதுக்காக ஜானவாசத்துல காருக்குப் பதிலா நீங்க என்னை உப்பு மூட்டை தூக்கிண்டு போறது கொஞ்சம் கூட நல்லாயில்லே!

                             எம்.பூங்கோதை.

டாக்டர்! ஜில்லுன்னு ஏதாவது சாப்பிட்டா பல்லு கூசுது டாக்டர்!
என்னசெய்யலாம் டாக்டர்?
 சுடவெச்சு சாப்பிடுங்க!
                       நாணி.

இங்கபார்! நீ பணக்காரியா இருக்கலாம்!அதுக்காக நாம லவ் பண்ற இடத்துக்கெல்லாம் கூடவே ஒரு வேலைக்காரியை கூட்டிகிட்டு வர்றது நல்லா இல்லே!
                         கடலூர் சார்லி.

எங்க தாத்தா சாமியாரா போயிட்டாருடா!
இந்த வயசில சாமியாரா போயி என்னத்தை பண்ன போறாருடா!
                          நிலா.

டாக்டர்! எனக்கு அடிக்கடி முன்கோபம் வருது!
எவ்வளவு நாளா இப்படி?
எவ்வளவு நாளா இருந்தால் உனக்கென்னடா முண்டம்?
                             சந்தியூர் வி. கோவிந்தன்.

அந்த டாக்டருக்கு நிமிஷத்துக்கு நூறு 'கால்' வந்துகிட்டு இருக்கும்!
கால்ராசியான டாக்டருன்னு சொல்லு!
                          ஷைலு

என்னது e.n.t ஸ்பெஷலிஸ்ட் கேள்விப்பட்டிருக்கேன். இந்த டாக்டர் e.n.d ஸ்பெஷலிஸ்டா?
ஆமாங்க அவர் கிட்ட போனா முடிவு நிச்சயம்!
                        வாணியம்பாடி ராஜ்குமார்.

நான் அப்பவே படிச்சு படிச்சு சொன்னேன் டாக்டர் கேட்கலை!
 என்னாச்சு?
தான் செய்யப்போற முதல் ஆபரேசன்ங்கிறதாலே வார்டுக்குள்ளேயே ஹோமம் நடத்தினாரு.புகையில மூச்சடைச்சு பேஷண்ட் காலி!
                             ஆர்.சிவகுமார்.

ரிஷப வாகனம் பார்த்தியா?
இல்லையே!
ரிஷபவாகனம் பார்க்காதவங்க அடுத்த ஜென்மத்துல கழுதையா பொறப்பாங்களாம் தெரியுமா?
அப்ப போன ஜென்மத்துல நீ ரிஷப வாகனம் பார்க்கலீயா?
                         பாஸ்கி.

உன்னுடைய முதலாளி கடிதங்களை நடந்துகிட்டே டிக்டேட் செய்வாரா?
ஐயையோ! அவர் அப்படி நடக்க ஆரம்பிச்சால் அவருடைய மடியில் இருந்து நான் கீழே விழுந்துவிடுவேனே!
                         கே.பி.ஜவஹர் குமார்.
ராமசாமிங்கிற உன் பேரை ஏன் ரங்கசாமின்னு மாத்திகிட்டே?
என் பேருல தலைவர் கோபமா இருக்கிறதா சொன்னாங்களே!
                         மேல்குந்தை வாசு.

சார் பிளேன்ல முதல் முதலா நாடகம் நடக்குது!எல்லோரும் சிரிச்சிகிட்டு இருக்காங்க! நீங்க மட்டும் சீரியஸா இருக்கீங்களே!
விஷயம் தெரிஞ்சா நீங்களும் சிரிப்பை நிறுத்திடுவீங்க!
 என்ன விஷயம்?
ஹீரோ வேஷத்துல நடிச்சிகிட்டு இருக்கறது நம்ம பைலட்!
                              நாணி.

நேத்து நான் மூணு போஸ்ட் மார்ட்டம் பண்ணினேன் டாக்டர்!
சும்மா ரீல் விடாதே! நான் நேத்து ரெண்டு ஆபரேசன் தான் பண்ணேன்!
                     வாணியம்பாடி ராஜ்குமார்.

உங்களுக்கு ஒரே ஸன்னா?
நாம எல்லோருக்கும் ஒரே ஸன் தான் காலையில் வந்து மாலையில மறையும்!
                       பாஸ்கி

ஏண்டி முனியம்மா! உனக்கு என் புருஷன் குங்குமம் வாங்கித் தந்தாராமே?
 அதெல்லாம் ஆறுமாசத்துக்கு முன்னாடி இப்ப குங்குமபூ பால் வரைக்கும் வந்தாச்சு!
                                ஆர்.சிவகுமார்.

சொன்னதெல்லாம் கேக்கற நாய் ஒண்ணு வளர்த்தியே இப்ப எங்கேடி அது காணோம்!
எனக்குத்தான் இப்ப கல்யாணம் ஆயிடுச்சே அதனால அதை வித்துட்டேன்!
                            தஞ்சை தாமு.

ஏன் தினமும் லேட்டா வர்றீங்க?
ஒண்ணுமி.ல்.லேடி!
யார் அந்த லேடின்னுதான் கேக்கறேன்!
                         இளங்கம்பன்.

ஏண்டி வேலைக்காரியை திடீர்னு நிறுத்திட்டே?
அவ நம்ம பையன்கிட்ட ஒரு மாதிரியா பழகறா?
அடிப்பாவி! அப்பனுக்கே துரோகம் பண்ண துணிஞ்சுட்டானா உன் பையன்?
                           க.சு.

டிபன் பாக்ஸில வெச்சிருந்த ஸ்பூன் எங்கேடா?
அதுக்குள்ளே வச்சிருந்த எல்லாத்தையும் மிச்சமில்லாம சாப்பிடனும்னு நீதானேம்மா சொன்னே!
                    எஸ்.சேகர்.

ஐயையோ என்னது உங்க வயத்துல பல்லு முளைச்சிருக்கு!
பயப்பட ஒன்னுமில்லே! அவசரத்துல சாப்பிடும்போது பல்செட்டை சேத்து முழுங்கிட்டேன்!
                            நாணி.

ஏன்யா! நீ எல் போர்டு சரி! எதுக்குயா ரெண்டு போர்டு வண்டியிலே மாட்டியிருக்கே!
 ஒண்ணு எனக்கு! பின்னாலே உட்கார்ந்திருக்காரே அவருக்கு ஓன்னு! இவர் இப்பத்தான் வண்டியில உக்கார கத்துக்கிறாரு!
                                  நாணி.

நம்ம ஏரியா ஆஸ்பத்திரியிலே குண்டு வெடிச்சுதாமே எப்படி?
 டாக்டர் வழக்கம் போல பேஷண்ட் ஒருத்தரோட கிட்னியை திருடி பீரோவிலே வெச்சிருக்காரு! அப்புறம்தான் தெரிஞ்சிருக்கு அது 'பெல்ட்பாம்'னு!
                              பாஸ்கி.
இந்த கேஸ்ல நீங்க வாதியா? பிரதி வாதியா?
 பயங்கரவாதி எடு! பத்தாயிரம் ரூபாயை!
                     கோவி. கோவன்.

நம்ம இன்ஸ்பெக்டருக்கு என்னை சுத்தமா பிடிக்கலை!
 என்ன ஆச்சு!
தப்பிச்சு போன கடத்தல் காரனோட கார் நம்பரை சொன்னா முன்பக்க நம்பரை ஏன் நோட் பண்ணலைங்கிறாரு!
                      பாஸ்கி.

கேடி ரவியை கைதுபண்ணி ஒரு நாளாவது லாக்கப்புல போடனும்னு பாக்கறேன் முடியலை!
 ஏன் தப்பிச்சிடறானா?
சேச்சே போனா ஆயிரம் ரெண்டாயிரம்னு கொடுத்திடறான்!
                             நிலா.

அவர்தான் 'மியாவ்'ங்கிற பேர்ல கதை எழுதறவர்!
ஓ! 'பூனை' பெயரா?
                       ராஜாசிங் ஜெயக்குமார்.

நன்றி! ஆனந்தவிகடன்,
 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger