News Update :
Powered by Blogger.

தனி ஈழம் வேண்டும் என்று எந்தத் தமிழரும் கூறவில்லை: சிபிஎம்

Penulis : karthik on Thursday 26 April 2012 | 21:45

Thursday 26 April 2012




தனி ஈழம் வேண்டும் என்று இலங்கையில் எந்தத் தமிழரும் கூறவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பும அதைக் கூறவில்லை. பிற தமிழ்க் கட்சி� ��ளும் அதை வலியுறுத்தவில்லை. மார்கிச்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமுதாயத்தினரும் சம அதிகாரத்துடன் வாழ தீர்வு காணப்பட வேண்டும் என்பதே கொள்கையாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் இடம் பெற்றிருந்தார். இலங்கை சென்ற இந்தக் குழு ஆளும் கட்சியின் பிரதிநிதிகளை மட்டுமின்றி பல்வேறு தமிழக அமைப்புகள் க ுழுக்களின் பிரதிநிதிகளையும் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து உரையாடியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால், குறிப்பாக இறுதிக்கட்ட போரின் போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு, முழுநிவாரணம், முகாம்களில் தங்கியுள்ளவர்களை மீள்குடியமர்த்துதல், தமிழர்கள் பகுதியிலிருந்து இராணுவத்தை முற்றாக விலக்கி கொள்வது ஆ� ��ியவை தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அமைப்புகளின் உடனடி கோரிக்கையாக உள்ளது.

மேலும், இலங்கை அரசு அமைத்த கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

சுற்றுப் பயணம் முடித்து, சென்னையில் பேட்டியளித்த டி.கே.ரங்கராஜன் இலங்கைத் தமிழர் அமைப்புகளும், பொதுமக்களும் தனி ஈழம் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை. மாறாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பரவல் அடிப்படையில் அரசியல் தீர்வையே வலியுறுத்துகின்றன என்று குறிப்பிட்டார்.

திமுக தலைவர் கருணாநிதி முரசொலி ஏட்டில் எழுதியுள்ள கடிதத்தில் தனி ஈழம் வேண்டுமென்று இலங்கையில் வலியுறுத்தவில்லை என்று கூறியுள்ளதற்காக டி.கே.ரங்கராஜனை விமர்சித்துள்ளார். இலங்கையில் பல்வேறு தரப்பினரும் கூறியுள்ள கருத்தைத்தான் டி.கே.ரங்கராஜன் எடுத்துரைத� �துள்ளார்.

தனி ஈழத்திற்குக் குறைவான எதற்கும் இலங்கைத் தமிழர்கள் எதற்கும் சம்மதிக்க மாட்டார்கள் என்ற கருணாநிதியின் கருத்து குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளேயே தீர்வு காண்பதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப ்பின் நிலைப்பாடு என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இலங்கை சென்ற இந்திய எம்.பிக்கள் குழுவிடமும் இதே கருத்தையே தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கருத்தரங்கில் உரையாற்றுகையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்பதையே வலியுறுத்தினார். இப்போதும் கூட அவர் தனி ஈழத்திற்கு� ��் குறைவான எதையும் ஏற்கமாட்டோம் என்று கூறவில்லை. மாறாக, தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்றுதான் வலியுறுத்தியுள்ளார்.

தமிழர் தேசிய கூட்டமைப்புதான் அதிகாரப்பரவல் குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்டகாலம் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைத்திட வேண்டும். அவர்கள் அனைத்து நிலைகளிலும் சம உரிமையுடன், இலங்கையில் வாழ வேண்டும். நிலம் உள்ளிட்ட அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழர் பகுதியிலிருந்து ராணுவம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைப்பதும் அதற்காக இலங்கை அரசை நிர்ப்பந்திப்பதும் இந்திய அரசு உரிய முறையில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்துவதும் தான் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவுவதாக அமையும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
< div class="MsoNormal">
எந்த ஒரு பிரச்சனையிலும் சம்பந்தப்பட்ட மக்கள் மற்றும் பிரதிநிதிகளின் கருத்தோட்டம் என்ன என்பதே முதன்மையானது. மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிகபட்ச சுயாட்சி, அர்த்தபூர்வமான அதிகாரப்பரவல் என்பதையே முன்பின் முரணின்றி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது.

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி 1991-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைப் பிரச்னையில் முரணற்ற வகையில் நிலையெடுத்து வந்துள்ளதை சுட்டிக்காட்டி, விடுதலைப் புலிகளின் தனிஈழம் என்ற கோரிக்கையில் உள்ள சிரமங்களை ஒப்புக்கொண்டு உரையாற்றினார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகி� �ோம்.

இலங்கை தமிழர்கள் முன் இப்போதுள்ள முக்கிய பிரச்னை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நிவாரணம், மறுவாழ்வு, அதிகாரப்பரவல் என்பதை ஒன்றுபட்ட முறையில் அழுத்தமாக முன்வைப்பதே இலங்கைத்தமிழ் மக்களுக்கு உதவுவதாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது என்று கூறியுள்ளார்.




comments | | Read More...

சச்சினை ராஜ்ய சபா உறுப்பினராக்கும் அரசின் பரிந்துரையை ஏற்பு




சச்சினை ராஜ்யசபா உறுப்பினராக்க� �ம் அரசின் பரிந்துரையை ஏற்று குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார். இதன் மூலம் ராஜ்ய சபா உறுப்பினராகும் முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக, கடந்த வியாழனன்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து இப்பதவியை ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தார் என்பது குற� ��பிடத்தக்கது.
 
இதை தொடர்ந்து இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது கிடைப்பதற்கான வாய்ப்பு நெருங்கி வருவதாக வல்லுனர்கள் தெரிவிக்கிறனர். ஏற்கனவே மகாராஷ்டிரா அரசு இவ்விருதுக்கு சச்சினை பரிந்துரைத்திருந்தது குறிபிடத்தக்கது.



comments | | Read More...

2012-04-26



தமிழ் ஈழம் காணாமல் இந்த உலகத்தை விட்டுப் போக மாட்டேன்! – கருணாநிதி சென்னை: நான் முன்பு சொன்னதுபோல் எனக்கு இன்னும் எத்தனை ஆண்டுகளோ தெரியாது. ஆன ால் ஈழத்தின் எழுச்சியை உருவாக்காமல், உங்களை ம� 
வண்டியோட்டிகள் கற்க வேண்டிய முதல் பாடம் சுயபாதுகாப்புடன் கூடிய வண்டியோட்டம். அதாகப்பட்டது சாலையில் உள்ள மற்ற வண்டியோட்டிகள், ப ாதசாரிகள் ஆகியோர் இடியட்ஸ், சும்பன்கள் என்ற உணர்வுடன் அவர்க 
http://www.youtube.com/watch?v=cZdl0nHdnW8&feature=shareதமிழ் ஈழம் அடையும் வரை ஓய மாட்டேன் ' என்றும் 'தமிழ் ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி திடீர் என அறிவித்து இருப்பது தமிழ் உ� 
‘டெசோ’வா… அப்படீன்னா? திமுக தலைவர் கருணாநித� �, திராவிடர் கழக தலைவர் கி வீரமணி, பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட  மூத்த தமிழ் தலைவர்கள் இப்போது அடிக்கடி உச்சரிக்கும் பெயர் டெசோ. டெசோவா… அ� 


http://kaamakkathai.blogspot.com/




comments | | Read More...

2012-04-26



அனைவருக்கும் மதிய வணக்கங்கள்                முதலில் உங்களுக்கு வயதாகி விட்டதான்னு பார்ப்போம்.இது ஒரு காமெடி பதிவு தான் சென்று பாருங்க என்ன காமெடின்னு தெரியும்.அடுத்து விஜய் TV சூர்யா� 
Only a few decades ago, unfermented soybean foods were considered unfit to eat – even in Asia.  These days, people all over the world have been fooled into thinking that unfermented soy foods like soymilk and soy protein are somehow "health foods".  If they only knew the real truth! The soybean did not serve as a food until the discovery of fermentation techniques, some time during the Chou Dynasty. The first soy foods were fermented products like tempeh, natto, miso and soy  
நான் குண்டா இருக்கேன்னு தோற்றத்தை கிண்டல் பண்றாங்களே..! – அஜீத் வருத்தம் என் நடிப்பு, முயற்சியைப் பாராட்ட மனமில்லாதவர்கள், என் தோற்றத்தையும் உடல் அமைப்பையும் கிண்டல் செய்கிறார்கள். 15 ஆபரே� 
சங்கமித்ரா மரணம்.... எமக்கு அறிவும், உணர்வும் ஊட்டிய பெருந்தகையே... உமக்கு எமது வீரவணக்கம். 


http://kaamakkathai.blogspot.com/




comments | | Read More...

2012-04-26



++++++++++++++++++++++++++++++++++++++++Doubt: ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானா?Doubts: கேள்வி பதில் பகுதி ஆறுநீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஆறு!Question & answer sessionகேள்வி பதில் வகுப்பு-------------------------------------------------------email No.23சுனிதா நர்த்தக� 
கூகுள் குரோம் மற்றும் மொஸில்லா வின் பயர்பாக்ஸ் பிரவுசர்களின் புதிய பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சில மாதங்களாகவே நடைபெற்று வரும் பிரவுசர் வெளியிடும் போட்டியில் இது ஒரு சிறப்பான நிலை என 
இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் அரசியலில் குதித்தார். அவரை ராஜ்ய சபா எம்.பி.,யாக்க மத்திய அரசு செய்த பரிந்துரையை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஏற்றார். ச ச்சினுடன் பாலிவுட� 
அதிகபடியான சுமை கொடுத்து ஒருவரை மலைஏறச்சொன்னால் மிகவும் சிரமப்பட� �டு மலையேறுவார். ஆனால் அவருக்கே கொஞ்சமாக சுமைகொடுத்து ஏற சொன்னால் விறுவிறு என்று ஏறிவிடுவார்.அதுபோல நமது கம்யூட்டர் ஆன்� 
இ ந்தியாவின் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான (ராஜ்ய சபா) நியமன உறுப்பினராக இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இன்று இந்தியப் பிரதமர� 


http://kaamakkathai.blogspot.com/




comments | | Read More...

மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட ஒடிசா எம்.எல்.ஏ. விடுதலை



ஒடிசா மாநில பிஜு ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். இவரை விடுவிக்க வேண்டுமானால் சிறையில் இருக்கும் 29 � �ாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். இவர்களில் 25 பேரை விடுவிக்க மாநில அரசு சம்மதித்தது. மீதம் உள்ள 4 பேரை விடுவிக்க எதிர்ப்பு கிளம்பியதால் கடத்தல் நாடகம் முடிவுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. 

இதற்கிடையே எம்.எல்.ஏ. கடத்தப்பட்டு நேற்றுடன் ஒரு மாதம் ஆ� ��தால் அவரை மேலும் பணைய கைதியாக வைத்திருக்க மாவோயிஸ்டுகள் விரும்ப வில்லை. இதனால் அவரை மக்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி முடிவு செய்யப் போவதாக மாவோயிஸ்டுகள் அறிவித்தனர். அதன்படி மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டில் உள்ள கிராம நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவை ஆஜர்படுத்தினர். 

அப்போது அவர் அரசும், தனது கட்சி பிரதிநிதிகளும் தன்னை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறை கூறினார். தொடர்ந்து மக்களுக்கு பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார். 

இதையடுத்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும், பிஜு ஜனதா தளம் கட்ச ியில் இருந்தும் விலக வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர். இதை ஹிகாகா எம்.எல்.ஏ. ஏற்றுக் கொண்டார். இதை அவர் உறுதி மொழியாக எழுதிக் கொடுத்தார். அதன் பிறகு அவரை விடுதலை செய்வதாக மக்கள் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. 

இந்த தகவல் மாவோயிஸ்டுகளின் வக்கீல் நிகர்ரஞ்சன் பட்நாயக் மூலம் அரசுக்கும், எம்.எல்.ஏ. குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு அரசிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே காலை 10 மணிக்கு முன்னரே எம்.எல்.ஏ. விடுதலை செய்யப்பட்டார். 

காட்டுப் பகுதியில் தங்கள் பி� �ியில் இருந்த எம்.எல்.ஏ.வை அதிகாலையில் மாவோயிஸ்டுகள் கோரபுட் மாவட்டத்தில் நாராயண்பட்டினம் கிராமத்துக்கு அழைத்து வந்து கிராம மக்களிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து கிராம மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் எம்.எல்.ஏ.வை அவரது சொந்த கிராமத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எம்.எல்.ஏ.வின் மனைவி மற்றும் முதல்- மந்திரி நவீன் பட்நாயக் முன்னிலையில் முறைப்படி ஒப்ப டைக்கப்பட்டார். இதன் மூலம் கடந்த ஒரு மாதமாக ஒடிசாவில் நிலவி வந்த கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தது.





comments | | Read More...

சிம்பு போஸ்டர் பின்னணி என்ன?




சிம்பு நடித்த ஒரு படம் கூட இப்போதைக்கு ரிலீஸ் இல்லைஎன்றாலும் சென்னையில் எங்கு திரும்பினாலும் சிம்புவின் போஸ்டர்தான் தென்படுகிறது. இந்த நேரத்தில் எதற்காக என ஆச்சர்யப்படுபவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் அது ஸ்ரீதர் என்ற படத்தில் நட்புக்காக ஒரு பாடலை பாடியிருக்கிறாராம். அதற்கு நன்றி தெரிவித்துதான் வைக்கப்பட்ட போஸ்டர்கள் என்று.
இதே போல், மதில் மேல் பூனை என்ற படத்தில் ஒரு பாடலை சிம்பு பாடினால் நன்றாக இருக்குமே என்று நினைத்த அந்த படக்குழு. எப்படியோ சிம்புவை அணுகி பாட வைத்துவிட்டனராம். சிம்புவோட கால்ஷஈட்டை இவங்க ரெண்டு கம்பெனி மட ்டும் எப்படி சுலபமா பிடிச்சதுன்னு கிர்ரடித்துப் போயிருக்கிறதாம் கோடம்பாக்கம்.



comments | | Read More...

புடவை மாற்றும் காட்சியை வெளியிட்டதால் ஆண்ட்ரியா கோபம்!!




புடவை மாற்றும் காட்சியை வெளியிட்டதால் நடிகை ஆண்ட்ரியா கோபத்தில் இருக்கிறாராம். தற்போது திருப்பங்கள் என்ற படத்தில் நட� ��த்து வரும் ஆண்ட்ரியா, அந்த படத்தில் புடவை மாற்றும் காட்சியொன்றில் நடித்திருந்தாராம். அந்த ஸ்டில்களை பப்ளிசிட்டிக்காக பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களுக்கு அனுப்பியிருக்கிறார் இயக்குனர். ஸ்டில்கள் வெளியான சிறிது நேரத்திலேயே டைரக்டரை போனில் அழைத்து தாறுமாறாக திட்டித் தீ ர்த்திருக்கிறார் ஆண்ட்ரியா. என் இமேஜே உங்களால் போய்விட்டது, என்று கோபத்துடன் கூறிய ஆண்ட்ரியா, எல்லா போட்டோவையும் வாபஸ் வாங்குங்க என்று ருத்ர தாண்டவமே ஆடி விட்டாராம்.



comments | | Read More...

"என் தோற்றத்தை கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!'' - அஜீத்




என் நடிப்பு, முயற்சியைப் பாராட்ட ம� ��மில்லாதவர்கள், என் தோற்றத்தையும் உடல் அமைப்பையும் கிண்டல் செய்கிறார்கள். 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு நான் நடப்பதே பெரிய விஷயம், என்கிறார் அஜீத் குமார்.

சமீபத்தில் அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள்...

செல்ப் புரமோஷன் கிடையாது...

"நான் 'மங்காத்தா'வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முட ிவு பண்ணிட்டேன். அது 'பில்லா-2'-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல்லை!''

மனதை பாதித்த விமர்சனம்...

''படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக்கேன்னு பெர்சனல� �� கமென்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு காலையும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை நினைச்சு நான் சந்தோஷப்படுறேன்.

நான் நல்ல டான்ஸரா இல்லாம இருக்கலாம். ஆனா, அதுக்காக முயற்சி பண்றேன். இவ்வளவு சிகிச்சைகளுக்குப் பிறகும் ஹெலிகாப்டர்ல இருந்து குதிக்கிறேன்... சண்டை போடுறேன். ஆனா, தொடர்ந்து என் பெர்சனல் தோற்றத்தை சிலர் கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!''

நெகடிவ் விமர்சனங்கள் குறித்து...

''என்கிட்டயே நிறையப் பேர் சொல்லியிருக்காங்க... பொறந்தா அஜீத்குமாராப் பொறக்கணும்னு. அஜீத்குமாருக்கு என்னல்லாம் கஷ்டம் இருக்குனு, அஜீத்குமாரா வாழ்ந்து பார்த்தால்தான் � �ெரியும். சச்சின் டெண்டுல்கர் இப்படி ஆடணும்னு சொல்றது ரொம்ப ஈஸி. ஆனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சுமந்துக்கிட்டு விளையாடுற சச்சின் டெண்டுல்கருக்குத்தான் அது எவ்வளவு கஷ்டம்னு தெரியும்.

கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு கருத்து சொல்றது ஈஸி. களத்துல இறங்கி நின்னாதான், அது எவ்வளவு கஷ்டம்னு புரியும். 30 வயசுல நம்மால எல்லாம் முடியும்னு தோணும். இப்போ 40 வ யசுக்கு மேல நம்மளை மீறி ஒரு சக்தி இருக்கு... அதுதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும்னு தோணுது. என்னை விமர்சிக்கிற எல்லாருக்கும் அந்தப் பக்குவம் கிடைக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன்!''

ரசிகர்களுக்கு...

''இத்தனை ஆண்டுகளில் ரசிகர்கள் பலம் கூடிக் கொண்டே இருப்பது கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன்னால், அது முழுமையாகாது. உண்மையைச் சொல்றேன்... தினமும ் காலையில் கடவுளை வேண்டும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன். நாளைக்கு இல்லாமலும் போவேன். ஆனா, ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்வைஸ்னு தப்பா நினைக்கா தீங்க. உங்க தன்மானத்தை யாருக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க.< o:p>

உங்க வேலையை 100 சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஆனா, அந்த ரூட் ரொம்பக் கஷ்டம். படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்... வாழு... வாழவிடு!''

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



comments | | Read More...

சசிகலா கணவர் நடராஜன் மீது தொடர்ந்த வழக்கு வாபஸ்




சசிகலா கணவர் நடராஜன் மீது தாம் கொடுத்த புகாரை தஞ்சாவூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார ஆட்சி அலுவலர் ரங்கராஜன் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார்.

எம். நடராஜன், அவரது சகோதரர் சுவாமிநாதன் ஆகியோர் மீது கடந்த மாதம் தஞ்சாவூர் அன்பு நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார ஆட்சி அலுவலர் ரங்கராஜன் நிலஅபகரிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று தஞ்சாவூர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை ரங்கராஜன் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நடராஜன் மற்றும் அவரது சகோதரர் சுவாமிநாதன் ஆகியோர் மீது தவறுதலாக வழக்கு தொடர்ந்து விட்டேன் என்று கூறியுள்லார்.

மேலும் அந்த வழக்கில் குறிப்பிட்டபடி நிலஅபகரிப்பு ஏதும் நடக்கவில்லை எனவும், சம்பந்தப்பட்ட நிலத்தை சுவாமிநாதன் விலைக்கு வாங்கி முறைப்படி பதிவு செய்திருப்பதாகவும் தெ ரிந்த கொண்டதால் வழக்கைத் திரும்பப் பெறுவதாகவும் அதில் ரங்கராஜன்குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நடராஜன் மீதான வழக்குகளில் ஒன்று குறைந்திருக்கிறது.



comments | | Read More...

அஜீத்தின் அசத்தல் ஹெலிகாப்டர் சண்டை - குவிந்த பாராட்டு!




பில்லா 2 பட� ��்தின் டிரைலருக்கு பெரும் வரவேற்பு இணையத்தில். பல லட்சம் பேர் பார்த்த வீடியோவாக மாறியுள்ளது இந்த ட்ரைலர்.

வெளியான சில மணி நேரங்களில் 4 லட்சம் பேர் பார்த்துவிட்டார்கள்.

இந்த வீடியோவில் ரசிகர்களை உறைய வைத்தது அஜீத்தின் மயிர்க்கூச்செரியும் சண்டைக் காட்சிகள்.

மிக உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில், கயிறு கூட கட்டிக் கொள்ளாமல் திறந்த கதவருகே நின்றபடி அஜீத் போடும் சண்டைக் காட்சி அது.

நானும் எத்தனையோ படங்களுக்கு ஸ்டன்ட் அமைத்துள்ளேன். ஆனால் இந்த அளவு ரிஸ்க் எடுத்த முன்னணி நடிகரை பார்த்ததில்லை. மைனஸ் டிகிரி குளிரில், உயரப் பறக்கும் ஹெலிகாப்டரிலிரு� �்து குதித்த அஜீத், ஒரு கையால் ஹெலிகாப்டரின் கம்பியைப் பிடித்து தொங்கியபடி சண்டை போட்டது என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது. சினிமா வரலாற்றிலேயே எந்த நடிகரும் எடுக்காத ரிஸ்க் இது என அவருக்கு ஸ்டன்ட் அமைத்துக் கொடுத்த இயக்குநர் கீசா காம்பக்தீ வியப்பு தெரிவித்துள்ளார்.

ஏகத்துக்கும் ஏத்தி விடறாங்களே...!



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger