News Update :
Powered by Blogger.

கடுமையான மின்பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க மின்சாரவாரியம் முடிவு

Penulis : karthik on Thursday 4 October 2012 | 21:19

Thursday 4 October 2012




கடுமையான மின்பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க மின்சாரவாரியம் முடிவு கடுமையான மின்பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க மின்சாரவாரியம் முடிவு
மின்சார வாரியத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
 
தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தில் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் மூலம் 1,905 மெகாவாட், புனல் மின்நிலையங்கள் மூலம் 370 மெகாவாட், எரிவாயு மின்நிலையங்கள் மூலம் 150 மெகாவாட், தனியார் மின்நிறுவனங்கள் மூலம் 740 மெகாவாட் பெறப்படுகிறது.
 
மத்திய அரசின் தேசிய அனல்மின் கழகம் மூலம் 850 மெகாவாட், தேசிய அணுமின்கழகம் மூலம் 375 மெகாவாட், நெய்வேலி அனல் மின்நிலையம் மூலம் 850 மெகாவாட், தமிழகம் மற்றும் பிறமாநிலங்களிலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. இதன் மூலம் 5,740 மெகாவாட் மின்சாரம் தற்போது கிடைத்து வருகிறது.  
 
காற்றாலைகள் மூலம் சராசரியாக 2,400 மெகாவாட் உட்பட 8,140 மெகாவாட் மின்சாரம் தான் தற்போது கிடைக்கிறது. ஆனால் நமக்கு சராசரியாக 12 ஆயிரம் மெகாவாட் தேவைப்படுகிறது. இதனால் 3,860 மெகாவாட் வரை பற்றாக்குறை ஏற்படுகிறது. காற்றாலைகளில் உறுதியாக 3 ஆயிரம் மெகாவாட் வரை கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையும் உள்ளது.
 
காற்று வீசும் காலமும் ஓரிரு நாட்களில் முடிவடைய இருப்பதால் நிலைமை மேலும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் 10 மணி நேரத்திற்கு மேல் மின்தடை செய்யப்படுகிறது. 
 
அணைக்கட்டு மற்றும் நீர்நிலைகள் மூலம் கடந்த ஆண்டு ஜுன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவ மழை பெய்த காலகட்டத்தில் 214 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் தற்போது நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனதால் ஜுன் முதல் செப்டம்பர் வரை 85 கோடி யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
 
இதனால் 129 கோடி யூனிட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டதன் மூலம் சராசரியாக 60 சதவீதம் மின்சாரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.   மின்பற்றாக்குறைக்கு மத்திய தொகுப்பிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு குறைவு உட்பட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் தமிழகத்தில் தனிநபர் மின் நுகர்வு 8 சதவிதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
 
அதேபோல் தமிழகத்தில் வழக்கமாக அதிகபட்சமாக மின்நுகர்வு நேரம் மாலை 6 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை இருந்தது. தற்போது அந்த நேரம் மாற்றப்பட்டு இரவு 11 மணிக்கு மேல் அதிகம் மின்நுகர்வு செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் 2,500 மெகாவாட் வரை மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.  
 
தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையை போக்க 2012-2013-ம் ஆண்டில் தமிழக அரசு 3020 கோடியே 25 லட்சம் ரூபாய் மானிய அளித்துள்ளது. அத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உடனடித் தேவைக்காக தற்போது முன்பணமாக 1,000 கோடி ரூபாயை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு வழங்கி உள்ளது.
 
தென்மேற்கு பருவ மழைக்கும், வடகிழக்கு பருவ மழைக்கும் இடைப்பட்ட இரண்டு முதல் மூன்று வாரத்திற்கு மின்சார நிலைமையை சமாளிக்க அதாவது செப்டம்பர் கடைசி வாரத்திலிருந்து அக்டோபர் முதல் இரண்டு வாரங்களுக்கு தேவையான மின்சாரத்தை சமாளிக்க போர்க்கால நடவடிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்து வருகிறது.  
 
நிலைமையை வெளிமாநிலங்களிலிருந்து 10,300 மில்லியன் யூனிட் வாங்க கடந்த மே மாதம் ஒப்புதல் கேட்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ஒப்புதல் கோரப்பட்டது. இதனை பரிசீலித்த ஆணையம் 2012 மே மாதத்திலிருந்து வரும் 2013 மே மாதம் வரை 4 ஆயிரம் மில்லியன் யூனிட் வரை மின்சாரம் வாங்க அனுமதி அளித்தது. இதில் 500 மில்லியன் யூனிட் மின்சாரம் பெறப்பட்டுள்ளது.
 
மீதம் உள்ள 3,500 மில்லியன் யூனிட் அதாவது 600 மெகாவாட் மின்சாரத்தை நடப்பு மாதமான 2012 அக்டோபர் மாதத்திலிருந்து 2013 மே மாதம் வரை எட்டு மாதத்திற்கு யூனிட் ரூ.4.13 முதல் ரூ.5 வரை கட்டணத்தில் வாங்கி கொள்ள அனுமதித்துள்ளது. ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது.
 
இவ்வாறு மின்துறை அதிகாரிகள் கூறினர்.   
 
 
/

comments | | Read More...

ஒசாமாவின் செக்ஸ் அடிமையாக ப்ரீடா பின்டோவா?- கொதிக்கும் ஒரிஜினல் அடிமை!


ஒசாமாவின் செக்ஸ் அடிமையாக ப்ரீடா பின்டோவா?- கொதிக்கும் ஒரிஜினல் அடிமை! ஒசாமாவின் செக்ஸ் அடிமையாக ப்ரீடா பின்டோவா?- கொதிக்கும் ஒரிஜினல் அடிமை!
ஒசாமா பின் லேடனின் செக்ஸ் அடிமையாக நடிக்க ஸ்லம்டாக் மில்லியனேர் புகழ் ப்ரீடா பின்டோவை அணுகியிருக்கிறார்களாம். இது ஒசாமாவின் ஒரிஜினல் செக்ஸ் அடிமையான கோலா பூப்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னைப் போல கறுப்பினப் பெண்ணைத்தான் அந்த வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என அவர் கடுப்புடன் கூறியுள்ளார்.

ஒசாமாவுக்கும் தனக்குமான செக்ஸ் தொடர்புகளை டயரி ஆப் தி லாஸ்ட் கேர்ள் எனும் பெயரில் எழுதியிருந்தார் கோலா பூப். விற்பனையில் சக்கைப் போடு போடும் புத்தகம் இது.

இந்தப் புத்தகத்தின் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து ஒசாசா பின்லேடன்ஸ் செக்ஸ் ஸ்லேவ் எனும் தலைப்பில் படம் தயாரிக்க லயன்கேட் ஸ்டுடியோஸ் திட்டமிட்டுள்ளது.

இதில் ஒசாமாவின் செக்ஸ் பார்ட்னர் வேடத்தில் நடிக்க நவோமி காம்பெல் அல்லது கெர்ரி வாஷிங்டனை சிபாரிசு செய்திருந்தார் கோலா பூப். காரணம் இவர்களால்தான் தன்னை மாதிரியே ஒரிஜினலாக நடிக்க முடியும் என அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் லயன்கேட் ஸ்டுடியோஸ் இதனை நிராகரித்துவிட்டது. இருவரும் மிகவும் வயதானவர்களாகத் தெரிவதால், ஒசாமாவின் காதலி வேடத்தில் நடிக்க ப்ரீடா பின்டோவை அணுகியுள்ளதாம்.

ஒசாமா வேடத்தில் அட்ரீன் பரோடி நடிக்கிறார்.

இந்தப் படம் குறித்து கோலா பூப் அளித்துள்ள பேட்டியில், 1996-லிருந்து ஒசாமாவுடனான எனது காதல் தொடர்புகளை தொகுத்து நான் எழுதிய புத்தகத்தை படமாகத் தயாரிக்க லயன்கேட் உள்பட மூன்று நிறுவனங்கள் முன்வந்தன.

கடைசியில் லயன்கேட் தயாரிக்க முடிவானது. ஆனால் எனக்கு அதிர்ச்சி தரும் வகையில், படத்தின் ஹீரோயினாக அதாவது எனது கேரக்டரில் நடிக்க இந்திய நடிகை ப்ரீடா பின்டோவை ஒப்புந்தம் செய்துள்ளனர்.

சாக்லேட் நிறமும், ஆப்ரிக்க ஸ்டைல் முடியும் கொண்டவள் நான். என் வேடத்தில் நடிக்க அந்தப் பெண் எப்படி பொருத்தமாக இருப்பாள் என்று தெரியவில்லை. கறுப்பு நிறத்தவர்கள் மீது மேற்கத்திய மக்களுக்கு உள்ள வெறுப்பையே இது இன்னும் காட்டுவதாக உள்ளது. இது ஒரு அவமானம்தான். அவர்களுக்கு, கறுப்பின பெண்கள் அழகானவர்கள் இல்லை என்ற நினைப்பு.

இளவரசர் சார்லஸ் ஒரு கமீலா பார்க்கரை பிக்கப் பண்ணதையோ, பில் கிளிண்டன் ஒரு மோனிகா லெவின்ஸ்கியை வைத்திருந்ததையோ ஈஸியாக எடுத்துக் கொள்ளும் அவர்களால், பின்லேடன் செக்ஸ் வைத்துக் கொள்ளத் தேர்ந்தெடுத்தது என்னைத்தான் என்பதை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை (என்னா ஒரு பெருமை!!).

பொதுவாக கறுப்பினப் பெண்களை தடித்த வேலைக்காரிகளைப் போலவோ, விபச்சாரிகளாகவோ, செக்ஸ் அல்லது போதை அடிமைகளாகக் காட்டுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்.

இந்தப் படம் தயாராவது தெரிந்து, எனது வேடத்தில் நடிக்க நவோமி கேம்பெலின் பிரதிநிதி என்னைத் தொடர்பு கொண்டபோது மிகவும் மகிழ்ந்தேன். ஆனால் தயாரிப்பாளர்களின் எண்ணம் வேறாக உள்ளது, என்றார்.

இதே கோலா பூப் எழுதியுள்ள இன்னொரு புத்தகமான தி செக்ஸ் பார்ட் ஆப் தி பைபில் படத்தில் ப்ரீடா பின்டோ அல்லது ஜெஸிகா ஆல்பாவை நடிக்க வைக்க முயற்சிக்கிறதாம் இன்னொரு ஹாலிவுட் ஸ்டுடியோ!



/

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger