News Update :
Powered by Blogger.

கலகலப்பு - பாகம் 2!

Penulis : karthik on Thursday 17 May 2012 | 08:16

Thursday 17 May 2012


ஒரு கல் ஒரு கண்ணாடி' ப டத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வெளியான முழுநீள நகைச்சுவைப் படம் 'கலகலப்பு'.

'உள்ளத்தை அள்ளித்தா', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'வின்னர்' போன்ற முழுநீள காமெடி படங்கள் மட்டுமல்லாமல் சுந்தர்.சி படம் என்றாலே காமெடி காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.

'கலகலப்பு' படத்தில் சுந்தர்.சி உடன் முதன் முறையாக இணைந்தார் சந்தானம். நகைச்சுவை நாயகர்களாக விமல், மிர்ச்சி சிவா, கிளாமரான கதாபாத்திரங்களில் அஞ்சலி, ஓவியா, இவர்களுடன் இணைந்து � ��ந்தானத்தின் காமெடி இருப்பதால், இப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையே வெளியானது.

'ஜாலியாக வாங்க... ஜாலியாக போங்க' என்ற கலகலப்பாக வெளியான படம் மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.

இது குறித்து தனஞ்செயன் " கலகலப்பு படத்தின் தியேட்டர்கள் எண்ணிக்கை 18ம் தேதி முதல் அதிகரிகப்பட இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

'கலகலப்பு' படத்தின் இரண்டாம பாகத்தினை அதே படக்குழுவினரை கொண்டு உருவாக்கலாமா என்று யோசித்து வருகிறோம். " என்று தெரிவித்து இருக்கிறார்.


comments | | Read More...

சென்னை சூப்பர் சொதப்பல் ஆட்டம்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அபார வெற்றி


ஐபிஎல் 5 தொடரின் இன்றைய முதல் போட்டியில் 121 ரன்களை சேஸ் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி துவக்கம் முதலே பொறுப்பான � �ட்டத்தை வெளிப்படுத்தி, 16.3 ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. கேப்டன் கில்கிறிஸ்ட் சிறப்பாக ஆடி 64 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஐபிஎல் 5 தொடரில் இன்று தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில� �� பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் துவக்கம் முதலே சொதப்பலாக பேட்டிங் செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய முரளி விஜய் 2 பவுண்டரிகளை அடித்து 10 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மற்றொரு துவக்க வீரரான மைக்கேல் ஹஸ்ஸி 7 ரன்களில் பிரவீண் குமார் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா வந்த வேகத்தில் 2 சிக்ஸ் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் 17 ரன்களில் எடுத்த ரெய்னா அவுட்டானார். கேப்டன் டோணி 6 ரன்களில் ஏமா� �்றினார்.

சற்றுநேரம் நிலைத்து நின்று ஆடிய ஜடேஜா 13 ரன்கள் எடுத்து நிதின் சைனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பிறகு அல்பி மார்கல், பிராவோ ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்த� ��ர். ஆனால் 14 ரன்கள் எடுத்த மார்கல், பிரவீண் குமாரிடம் கேட்சாகி வெளியேறினார். 3 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 48 ரன்களை சேர்த்து அரைசதத்தை நெருங்கிய பிராவோ, ஹாரீஸ் பந்தில் அவுட்டானார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்களை இழந்து 120 ரன்கள் எடுத்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பிரவீண் குமார், அசார் மக� �ூது, அவானா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.

121 ரன்கள் எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற எளிய இலக்கை சேஸ் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டன் கில்கிறிஸ்ட், மன்தீப் சிங் ஜோடி சிறப்பான துவக்கத்தை அளித்தது. ஆனா� �் மன்தீப் சிங் 5 பவுண்டரிகள் அடித்து 24 ரன்களை எடுத்த நிலையில், மார்க்கலின் பந்தில் போல்டானார். அடுத்து வந்த நிதின் சைனி 1 ரன் எடுத்து பிராவோ பந்தில் அவுட்டானார். சற்றுநேரம் நிலைத்து நின்று ஆடிய டேவிட் ஹஸ்ஸ் 9 ரன்கள் எடுத்து பிராவோவின் பந்தில் அவுட்டானார்.

விக்கெட்கள் ஒருபுறம் சரிய, துவக்க வீரரும் கேப்டனுமான கில்கிறிஸ்ட் மறுபுறம் நின்று பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்து வந்தார். அவருக்கு சித்தார்த் ஒத்துழைப்பு கொடுத்து ஆட ினார். 14வது ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரிகள் உட்பட 22 ரன்களை சேர்த்த கில்கிறிஸ்ட் அரைசதம் கடந்து, அதிரடியை தொடர்ந்தார். 15வது ஓவரில் 11 ரன்கள் எடுத்த சித்தார்த், டோணியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த கேப்டன் கில் கிறிஸ்ட் 46 பந்துகளில் 2 சிக்ஸ், 9 பவுண்டரிகள் அடித்து 64 ரன்களை குவித்தார். கடைசி கட்டத்தில் அசார் மகமூது உதவியுடன் கிங்ஸ் லெவன� �� பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.



comments | | Read More...

துப்பாக்கியில் நான் நடிக்கவே இல்லை!-சரத் மறுப்பு


நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் துப்பாக்கியில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அதை விஜய்யே இயக்குகிறார் என்கிற ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி வருகின்றன கடந்த சில தினங்களாக.

ஆனால் இதெல்லாம், பத்திரிகை / இணையதளங்களைப் பார்த்துதான் தானே தெரிந்து கொண்டதாகக் கூறியுள்ளார் சம்பந்தப்பட்ட நடிகரான சரத்குமார்.

இதுகுறித்து சரத்குமார் கூறுகையில்,

 "எனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு இப்போதுதான் சென்னை திரும்பினேன். உடனே ஏகப்பட்ட போன்கால்கள், துப்பாக்கியில் நடிப்பது குறித்து.

கடந்த சில தினங்களாக வெளியான செய்திகளைப் பார்த்துதான் துப்பாக்கியில் நான் முக்கிய வேடத்தில் நடிப்பதே தெரிந்தது! இதில் எந்த உண்மையும் இல்லை. தவறான செய்தி. குறைந்தபட்சம் விசாரிக்காமல் கூட வெளியிட்டுவிடுவதா?

மல்டி ஹீரோ சப்ஜெக்டில் நடிப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் இன்றைய தேதிக்கு தமிழில் ரஜினி சாருடன் கோச்சடையான், மலையாளத்தில் சில படங்கள், கன்னடத்தில் படங்கள் என நான் ரொம்ப பிஸி. விரைவில் சினேகாவும் நானும் நடித்த விடியல் படம் வெளியாகவிருக்கிறது," என்றார்.


comments | | Read More...

தமிழ் ஈழம் மலர உலக தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்: சீமான் பேட்டி


நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 
ஈழப்போர் முடிந்து 3 ஆண்டுகளாகிறது. மே 17-ந் தேதியான இதே நாளன்று 50 ஆயிரம் பேர் இறந்தனர். மொத்தத்தில் ஈழத்தில் 1 1/2 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இன்னும் முள் வேலிக்குள் தமிழர்கள் அடைபட்டிருப்பது வேதனை தருகிறது. 

இந்த வேதனைகள் ஒருபோதும் அழியாது. ஈழத்தில் பலியானவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் மே மாதம் அஞ்சலி செலுத்தி வருகிறோம். தமிழினப் படுகொலை நடந்து முடிந்த 3-வது ஆண்டு நினைவு நாளான நாளை(18-ந் தேதி) தமிழின படுகொலைக்கு நியாயம் கோரும் வகையில் கோவையில் நாம் தமிழர்கட்சி மாபெரும் பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் நடத்துகிறது. 

கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலை அருகே கூடி அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு சிவானந்தா காலனியை அடைவோம். அங்கு பொதுக்கூட்டம் நடைபெறும். நாம் தமிழர் கட்சி 2010-ம் ஆண்டு மே 18-ந் தேதி தொடங்கப்பட்டது. நாளை 3-ம் ஆண்டு தொடங்குகிறது. 

ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததால் எந்த பிரயோஜனமும் இல்லை. தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வாகும். ஈழம் பெற உலகில் உள்ள 12 கோடி தமிழர்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

மேற்கண்டவாறு சீமான் கூறினார்.





















comments | | Read More...

அன்னாஹசாரே கார் மீது கல்வீச்சு

பிரபல சமூக சேவகரும், ஊழலை ஒழிக்க போராடி வருபவருமான காந்தியவாதி அன்னாஹசாரே நேற்று மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். 

முன்னதாக அவர் கூட்டத்துக்கு வந்தபோது அவர் கார் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இது தொடர்பாக நாக்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த 15 பேரை கைது செய்தனர். 

அன்னாஹசா ரே ஆதரவாளர்கள் வினியோகித்த நோட்டீசில் ராகுல்காந்தியை விமர்சித்திருந்ததால் கல்வீசியதாக அவர்கள் போலீசாரிடம் கூறினார்கள்.






comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger