News Update :
Powered by Blogger.

ஒலிம்பிக் குத்துச் சண்டை: விகாஷ் கிருஷ்ணன் வெற்றி திரும்ப பெறப்பட்டது!

Penulis : karthik on Friday 3 August 2012 | 23:05

Friday 3 August 2012





லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச் சண்டையில் 69 கிலோ எடைப் பிரிவில் தகுதிச் சுற்றில் இந்தியாவின் விக� ��ஷ் கிருஷ்ணன் வெற்றி பெற்றதை சர்வதேச குத்துச் சண்டை சங்கம் திரும்பப் பெற்றதால் இந்தியாவின் பதக்க கனவு பறிபோனது.

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் 69 கிலோ எடைப் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், அமெரிக்காவின் எர்ரால் ஸ்பென்சுடன் � �ோதினார்.

இப்போட்டியில் அமெரிக்க வீரரை 13-11 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி விகாஸ் கிருஷ்ணன் காலிறுதிக்கு தகுதிபெற்றார். 2011-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றவரான விகாஸ், செவாய்க்கிழமை நடக்க உள்ள காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் ஆண்ட்ரே சாம்கொவோவுடன் மோதுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் விகாஷ் கிருஷ்ணன் பெற்ற வெற்றியை திரும்பப் பெறுவதாக சர்வதேச குத்துச் சண்டை சங்கம் அறிவித்திருக்கிறது. மேலும் அமெரிக்காவின் எர்ரால் வென்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பதக்க வாய்ப்புகளில் ஒன்று பறிபோய்விட்டது.







comments | | Read More...

அரசு இசைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை





கலை பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கலை பண்பாட்டுத் துறையின் கீழ், திருச்சி, திருவண்ணாமலை, நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், சேலம், கடலூர், விழுப்புரம், கரூர், பெரம்பலூர், காஞ்சீபுரம், புதுக்கோட்டை, சீர்காழி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, ஈரோடு, ராமநாதபுரம் ஆகிய 17 இடங்களில் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கூடங்கள் இயங்கி வருகின்றன.

இந்தப் பள்ளிக்கூடங்களில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மி� �ுதங்கம் ஆகிய துறைகளில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு, 996 மாணவ, மாணவிகள் இசை பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ரூ.200-ல் இரு� �்து ரூ.400 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டசபையில் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, கலை பண்பாட்டுத் துறை ஆணையரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துருவை அரசு கவனத்துடன் பரிசீலித்தது.

அதையடுத்து கலை பண்பாட்டுத் துறையின் கீழ் 17 இடங்களில் இயங்கும் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் 996 மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்த தற்போது மாதந்தோறும் வழங்கப்� ��டும் கல்வி உதவித் தொகையை 2012-2013-ம் ஆண்டுமுதல் ரூ.200-ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தி 10 மாதங்களுக்கு வழங்க உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.







comments | | Read More...

ஒலிம்பிக்கின் 7-வது நாளில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள்





ஒலிம்பிக்கில் இந்திய வீரர்-வீராங்கனைகள் இன்று (வெள்ளிக்கிழமை) பங்கேற்கும் ஆட்டங்கள் (இந்திய நேரப்படி) விவரம் வருமாறு:

நீச்சல்:
ஆண்கள் 1,500 மீட்டர் பிரீஸ்டைல் தகுதி சுற்று, உலால்மத் ககன், நேரம்: பிற்பகல் 2.54 மணி

ஆக்கி:
ஆண்கள் லீக் சுற்றில் இந்தியா-ஜெர்மனி, நேரம்: மாலை 6.15 மணி

குத்துச்சண்டை:
ஆண்கள் வெல்டர் வெயிட் பிரிவில் விகாஷ் கிருஷ்ணன்(இந்தியா)-எர்ரோல் ஸ்பென்ஸ் (அமெரிக்கா), நேரம்: அதிக� �லை 2 மணி.

துப்பாக்கி சுடுதல்:
ஆண்கள் 50 மீட்டர் ரைபிள் (புரோன்), ககன் நரங், ஜாய்தீப் கர்மாகர், தகுதி சுற்று பகல் 1.30 மணி, இறுதிப்போட்டி மாலை 4.30 மணி,
ஆண்கள் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல், விஜய்குமார், தகுதி சுற்று பிற்பகல் 3 மணி,
இறுதிப்போட்டி இரவு 7 மணி.

தடகளம்:
ஆண்கள் குண்டு எறிதல்:
ஓம்பிரகாஷ் சிங், தகுதி சுற்று ப ிற்பகல் 2.30 மணி, இறுதிப்போட்டி நள்ளிரவு 1 மணி.
பெண்கள் வட்டு எறிதல் தகுதி சுற்று: கிருஷ்ணபூனியா, சீமா அன்டில், நள்ளிரவு 11.40 மணி .
பெண்கள் டிரிபிள் ஜம்ப் தகுதி சுற்று: மயூக்கா ஜானி, அதிகாலை 2.55 மணி







comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger