News Update :
Powered by Blogger.

நண்பன் – திரை விமர்சனம்

Penulis : karthik on Thursday 12 January 2012 | 22:25

Thursday 12 January 2012

நடிப்பு: விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா
இயக்கம்: ஷங்கர்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பு: ஜெமினி நிறுவனம்
நண்பன் படம் சொல்ல வந்ததெல்லாம் உங்களுக்குப் பிடித்தமான துறையைத்
தேர்ந்தெடுத்து படியுங்கள். அதில நிச்சயமா ஜெயிப்பீங்க என்பதுதான்.
வாழ்க்கையின் மிகப்பெரிய தத்துவத்தை மூன்று மணிநேரத்தில் சொல்லிவிட்டுப்
போகிறது நண்பன்.
ஏற்கனவே வெளிவந்த 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த்
நடிப்பில் ஷங்கர் இயக்கும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பாப்பு
இருந்தது அதை அதிகமாகவே நிறைவேற்றியிருக்கிறது நண்பன்.
என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களான ஜீவா, ஸ்ரீகாந்த் உடன் கல்லூரியில்
வந்து சேர்ந்து படிக்கிறார் விஜய். மூன்றுபேரும் நல்ல
நண்பர்களாகிவிடுகிறார்கள். கல்லூரியில் படித்து முடித்து ஜீவா,
ஸ்ரீகாந்த் இருவரும் நன்றாக செட்டில் ஆகிவிடுகிறார்கள். ஆனால் நண்பன்
விஜய் பற்றி எந்த தகவலும் இல்லை. சில வருடங்கள் கழித்து நண்பனை (விஜய்)
தேடி அவனது ஊருக்குப் போகிறார்கள். அங்கு போய் பார்த்தால், அங்கு
அவனுக்கு பதிலாக வேறு ஆள் (எஸ்.ஜெ.சூர்யா) இருக்கிறார். அதன் பிறகு என்ன
நடக்கிறது என்பது கதை.
படம் முடிந்து வெளியே வந்தாலும் நம் நினைவுக்கு வருவது நாம் பார்த்தது
விஜய் படம்தானா என்ற எண்ணம்தான்? இதற்கு முன்பு விஜய் நடித்த படங்களில்
எல்லாம் விஜய் அறிமுகமாகும்போதே தாரை தப்பட்டை முழங்கும். பூ மழை
பொழியும். இப்படித்தான் இருக்கும் விஜய்யின் அறிமுகக்காட்சிகள். இந்த
படத்தில் அப்படி எதுவும் இல்லை.பஞ்ச் வசனங்கள் இல்லை. படத்தில்நடித்த
எல்லோருமே ஒரு கேரக்டராகத்தான் வந்து போகிறார்கள். பஞ்சவன் பாரிவேந்தனாக
வரும் விஜய்யை பார்த்தவுடனே நமக்குப் பிடித்துப் போகிறது. கல்லூரியில்
சொல்லித் தருவதெல்லாம் வாழ்க்கைக்குத் தேவையான அறிவு சார்ந்த விஷயம்
அல்ல… எல்லாம் வேலை பார்ப்பதற்கு தேவையான ஜஸ்ட் படிப்புதான்… என்கிற
ரீதியில் இருக்கிறது இவர் வந்து பேசுகிற காட்சிகள் எல்லாம். விஜய் பேசும்
வசனங்கள் ஒவ்வொன்றிலும்இன்றைய இளைய சமுதாயத்திற்கு இருக்கிறது ஆயிரம்
மெசேஜ்.
நண்பன் வந்துவிட்டான் என்ற செய்தி கேட்டு கிளம்பிய விமானத்தையே திருப்பி
தரை இறங்கச் செய்து விடும் ஸ்ரீகாந்த் அலட்டலில் ஆரம்பிக்கிற படம்
முழுக்க முழுக்க சிரிப்பு மழைதான். சிரிப்பு மட்டுமல்ல சிந்திக்கவும்
வேண்டிய மெசேஜ்கள் வந்து போகின்றன ஃப்ரேம் பை ஃப்ரேம். தனக்குப்
பிடிக்காவிட்டாலும் அப்பாவுக்காக இஞ்சினியரிங் படித்துவிட்டு பின்பு தன்
அப்பாவிடம் தனக்குப் பிடித்த போட்டோகிராபியை படிக்க ஆசைப்படுகிறேன் என்று
சொல்லும்காட்சிகள் செம டச்சிங்.
ஜீவா, ஒரு அரியர்ஸ்ம் வைத்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் ஊரு உலகத்தில
உள்ள சாமி படங்களை எல்லாம் வாங்கி வைத்து பூஜை செய்கிற கேரக்டர். பின்பு,
ஜீவா திருந்திவிட்ட பின்னர், அவரிடம் கேள்வித் தாளைஜெராக்ஸ் செய்து விஜய்
கொடுக்கும் போது, அதை வாங்கி கசச்கி எறிந்துவிட்டு சொல்லும்வசனமும், ஜீவா
கேம்பஸ் இன்டர்வியூவில் கேள்வி கேட்பவர்களிடம் பேசும் வசனங்களுக்கும் செம
க்ளாப்ஸ் போடலாம்.
கொஞ்சம் நடிப்பதற்கு வாய்ப்பு உள்ள கேரக்டரில் நடித்திருக்கிறார்
இலியானா. ஒரு பாடலுக்கு கிளாமராக ஆட்டமும் போடுகிறார்.
சைலன்ஸர் கேரக்டரில் வரும் சத்யனுக்கு இது நிஜமாகவே மிகவும் பிரமாண்டமான
கேரக்டர்தான். இவர் இதுவரை நடித்த படங்களில் நல்லா நடிச்ச படமும்
இதுதான். இவருக்கு பெயர்வாங்கித் தரப்போகும் படமும் இதுவாகத்தான்
இருக்கும்.
வைரஸ் என்னும் பெயருடன் வலம் வரும் சத்யராஜ் இன்றைய கல்லூரிகளின்
சிடுசிடு மூஞ்சு டீன்களை நினைவுக்குக் கொண்டு வருகிறார். சில நிமிடங்களே
வந்து செல்லும் எஸ்.ஜெ. சூர்யா படத்தில் ஒரு டர்னிங் பாய்ன்ட்.அவரது
அப்பாவின் அஸ்தி சொம்பை எடுத்து வைத்து கொண்டு ஜீவா, ஸ்ரீகாந்த் இருவரும்
போக்கு காட்டுவது செம ரகளையான காமெடி.
படத்தில் காமெடி ரொம்ப ரொம்ப அதிகம். அதுவும் குலுங்கி குலுங்கி
சிரிக்கிற அளவுக்கு இருக்கின்றன காமெடிகள். ஜீவாவின் அம்மா சப்பாத்தி
போடும் போது செய்கிற மேனரிஸம் இருக்கிறதே… தியேட்டரே செம அலப்பறையாகிறது
அந்த காட்சிக்கு. இதற்காகவே ரீப்பிட்டடு ஆடியன்ஸ் நிச்சயம்.
ஹரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஒரு தடவை கேட்கலாம். பின்னணி இசையில்
மிரட்டியிருக்கிறார் ஹரிஸ்.
சொந்த கதையை படமாக எடுப்பது என்றால் எப்படி வேண்டுமானாலும்எடுத்துத்
தள்ளிவிடலாம். ஆனால் அதுவே இன்னொருவரது கதை என்றால்,அதுவும் ஏற்கனவே
வெளிவந்த படத்தை படமாக எடுப்பது என்றால் கரணம் தப்பினால் மரணம் என்கிற
ரீதியில்தான் எடுக்கவேண்டி இருக்கும். அதையெல்லாம் கவனமாக பார்த்து
பார்த்து செய்திருக்கிறார் ஷங்கர். நல்ல வேளை இந்த படம் ஷங்கர்
இயக்கத்தில் இருந்து வெளிவந்தது. வேறு ரீமேக் மன்னர்கள் கையில்
சிக்கியிருந்தால் ஒருவேளை சின்னாபின்னமாகியிருந்தாலும் ஆகியிருக்கலாம்.
இந்த படம் ஷங்கர் டீமிற்கு நிச்சயம் மிகப்பெரிய வெற்றிப்படம்தான்.
புதுமைகள்: முதன் முதலாக சங்கர்ரீமேக் படம் செய்வது, விஜய், சத்யராஜ்,
ஜீவா, ஸ்ரீகாந்த் என்று முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிப்பது, போன்ற
விசயங்களைவிட இந்த அப்ரோச் தமிழுக்கு மிகவும் புதிது.
சாதகம்: அறிவுறை சொல்வது போல் சற்றே தெரிந்தாலும் சரி, படத்தில் துள்ளல்
சற்றே குறைந்தாலும் சரி, இது அட்வைஸ் வகையறா படம் என்று முத்திரை
குத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி நிறைய நல்ல படங்கள்
ஒதுக்கப்பட்டிருக்கின்றன. என்னதான் ஹிந்தியின் ஏற்கனவே வந்த படம்
என்றாலும் அதே மிக்ஸிக் தமிழிலும் கொடுத்திருப்பது மிக நன்று. படம்
முழுக்க இளமை, கலர் ஃபுல், துள்ளலுடன் இருந்தாலும், படம் முழுக்க‌ நாம்
உணர முடியாத ஒரு மென் சோகம் இழையோடிக்கொண்டிருக்கும். அந்தஇழைதான்
படத்தின் உயிர் நாடி. அது மிகைப்படாமல் பார்த்துக்கொண்டது இயக்குனரின்
திறமை.
நடிகர்கள்: நடிகர்கள் எல்லோரும் ஏற்கனவே பட்டைதீட்டப்பட்டவர்கள்.
சத்யராஜ், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் என்று எல்லோரும் அசத்துகிறார்கள்.
முக்கியமாக சத்யன். ஒரு சில காட்சிகளே வந்தாலும் எஸ்ஜே சூர்யா
கைதட்டல்களை வாங்கிக்கொள்கிறார்
comments | | Read More...

சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம், தார்மீக எண்ணங்கள் அழிவு! Part 3

இன்டர்நெட் மூலம் அழகி தேவை என வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால்
அனுப்பி வைக்கும் புரோக்கர்கள் : விசாரணையில் பாலாஜியும்,
கிருஷ்ணமூர்த்தியும் புரோக்கர்கள் எனவும், இன்டர்நெட் மூலம்
வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு, அழகி தேவை என வாடிக்கையாளர்கள்
கேட்டுக்கொண்டால் அழகிகளை அனுப்பி வைப்பார். ஒரு அழகியை அழைத்து சென்றால்
5 நாட்கள் வரை அவர்களை இஷ்டப்படி அனுபவிக்கலாம். இதற்கு கட்டணமாகரூ.50
ஆயிரம் செலுத்த வேண்டும். 5 நாட்களுக்கும் அவர்களை எங்கு வேண்டும்
என்றாலும் அழைத்து போகலாம், என்ற உத்தரவாதம் கொடுத்த பின்னரே அழகிகளை
அனுப்பி வைத்துள்ளனர். இந்தப் பெண்களை அழைத்துச் செல்ல இடம் இல்லாத
வாடிக்கையாளர்கள் நேரடியாக இந்த சொகுசு பங்களாவுக்கு வந்தால்
போதுமாம்.அங்கு அவர்களுக்கு பிடித்த அழகிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் விரும்பும் உடை, தேவையான சேவை, அதற்கான ஊதிய பங்கீடு :
அங்கு வாடிக்கையாளர்கள் மனம் நோகாதபடி, அவர்களின் தேவை அறிந்து அழகிகள்
நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு பிடித்த உடை அணிந்து கொள்வார்கள்.
குறிப்பிட்ட நேரத்திற்கு மகிழ்வித்து ஒத்துழைப்பார்கள். இதற்காக ஏதாவது
கல்லூரிகள் கூட நடத்தப் படுகின்றனவோ என்னமோ? வாடிக்கையாளர்கள் கொடுக்கும்
ரூ.50 ஆயிரத்தில் புரோக்கர்கள் ரூ.25 ஆயிரத்தை எடுத்துக்கொள்வார்கள்.
மீதி ரூ.25 ஆயிரம் இந்தப் பெண்களுக்கு. அழகிகள் கைது செய்யப்பட்ட
அறையில் இருந்து 11 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. 2 கார்களும் பறிமுதல்
செய்யப்பட்டன.
comments | | Read More...

சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம், தார்மீக எண்ணங்கள் அழிவு! Part 2

குடும்ப பெண்கள் சீரழியும் போக்கு – பணத்திற்கு ஆசை ஆடம்பர வாழ்க்கை :
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்
குடும்ப பெண்கள் பலர், வீடுகளை விபச்சார விடுதிகளாக பயன்படுத்தி பணம்
சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பெண்கள் பலரும்
ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு இத்தகைய கலாச்சார சீரழிவில் ஈடுபடுவதால்
உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக போலீசார் எச்சரித்துள்ளனர் [13] .
சிக்கனமாக இருக்கச் சொல்லும் கணவரின் பேச்சைக் கேட்காமல், அக்கம்
பக்கத்தவர்களைப் பார்த்து தாமும் அதைப்போல செய்யவேண்டும் என்று
ஆசைப்பட்டு வாழ்க்கையை பலி கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை சென்னை போன்ற
பெருநகரங்களில் அதிகரித்து வருகிறது. ஆடம்பர வாழ்க்கை, கைகளில் கரன்சி,
விதவிதமான உடைகள், கூடவே உல்லாசம் என சைத்தான்கள் ஓதும் வேதத்தை கேட்டு
படுகுழியில் விழுகின்றனர் குடும்பப் பெண்கள்.
வாழ்க்கை பறிபோகும் : பணத்திற்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு
வாழ்க்கையை தொலைப்பதோடு உயிரை இழக்கும் சூழலும் ஏற்படுகிறது. இதற்கு
உதாரணமே சென்னை எம்.ஜி.ஆர் நகர். ஆவடி திருமுல்லைவாயலில் [14] நடைபெற்ற
பெண்களின்கொலைகள். இந்த இரண்டு கொலைகளுமே கணவர், குழந்தைகளோடு குடும்பம்
நடத்தும் பெண்கள் சறுக்கியதாலேயே உயிரிழந்துள்ளனர். பணத்திற்கு
ஆசைப்பட்டு தனது வீட்டை விபசார விடுதியாக மாற்றியதே திருமுல்லைவாயில்
யாஸ்மினுக்குஎமனாக மாறிவிட்டது.
போலீஸ் அதிரடி நடவடிக்கை : இந்த இரண்டு கொலைகளுக்குப் பின்னர் போலீசார்
அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடந்த இரண்டு நாட்களாககுடும்பப் பெண்களை
விபச்சாரத்தில் ஈடுபடுத்துபவர்களை கைது செய்து வருகின்றனர். பெரம்பூர்
ஜமாலியா எஸ்.பி.ஓ.ஏ. காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும்
மீனா என்ற 37 வயது பெண், ஆன்லைன் மூலம் குடும்ப பெண்களை விபசாரத்தில்
ஈடுபடுத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து மாறு வேடத்தில் வாடிக்கையாளர் போல
சென்ற விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் மீனாவையும் அங்கிருந்த இரண்டு
குடும்பப் பெண்களையும் கைது செய்துள்ளனர்.பின்னர் அந்த பெண்களை போலீசார்
காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்கள் திருந்த என்ன
செய்வார்கள்?
வீட்டை உல்லாச விடுதியாக்கினார் : மீனா கேரளாவைச் சேர்ந்தவர். இவரது
கணவர் பாபு ஆந்திராக்காரர். மாதம் ரூ.20 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு
குடியிருந்து வரும் மீனா, இதுபோன்று குடும்ப பெண்களை வரவழைத்து வீட்டை
உல்லாச விடுதியாக மாற்றியதும் தெரிய வந்தது. இதற்காக தான் வாடகைக்கு
இருந்த வீட்டை உள்வாடகைக்கு விட்டு அவர் பணம் சம்பாதித்துள்ளதாக போலீசார்
தெரிவித்தனர். இதேபோல அசோக் பில்லர் அருகே விபச்சாரம் செய்ததனம் என்ற
பெண் கைது செய்யப்பட்டார். ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில்
ஆயுர்வேதிக் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் செய்வதாக விளம்பரம் செய்து, பெண்களை
விபசாரத்தில் ஈடுபடுத்திய கேரளாவைச் சேர்ந்த திலீப், சபின் ஆகிய 2 பேர்
கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த 3 அழகிகள் மீட்கப்பட்டனர்.
கலாச்சார சீரழிவு – காரணம் ஏன், தீர்வு என்ன – சொல்வதில்லையே? :
சென்னையில், வீட்டில் வைத்து விபசாரத்தில் ஈடுபடுவது நூதன கலாச்சாரமாக
மாறியுள்ளது. எனவே அடுக்குமாடி குடியிருப்புகளில்வசித்து வருபவர்கள்,
பக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறது. யார்-யார் வந்து செல்கிறார்கள்
என்பதையும் ஓரளவுக்கு கண்காணிக்க வேண்டும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
இண்டர்நெட் மூலமாக இளைஞர்களை கவர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும்,
பங்களாக்களிலும் விபசாரத்தில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மற்றும்
குடும்ப பெண்கள் தங்களது குடும்பத்தினருக்கு தெரிந்தும், தெரியாமலும்
ஆடம்பரவாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகின்றனர்.
இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை
ஆணையர் திரிபாதி எச்சரித்துள்ளார். மேலும், இதுபோன்ற தவறான
நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
என்னத்தான் கலாச்சார சீரழிவு என்று காரணம் சொன்னாமல், கலாச்சாரத்தைக்
காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதில்லையே?
சென்னைக்கு அடுத்து கோவை : கோவை அருகே சொகுசு பங்களாவில் விபசாரம் செய்த
டி.வி. நடிகை உள்பட 6 பெண்களையும் 2 புரோக்கர்களையும் போலீசார் கைது
செய்தனர் [15] . கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள சொகுசு
பங்களாக்களில் விபசாரம் அதிக அளவில் நடப்பதாக தொடர்ந்து புகார்கள்
வருகின்றன. குறிப்பாகசென்னையிலிருந்து சிவி, சினிமா துணை நடிகைகள் பலர்
இந்தப் பங்களாக்கு வந்து போவதாக தகவல் கிடைத்தது. எனவே போலீசார் தீவிர
கண்காணிப்பில் ஈடுபட்டனர். கோவில்பாளையத்தை அடுத்த கோட்டைபாளையம்
வி.ஜே.நகரில் உள்ள ஒரு சொகுசு பங்களாவுக்கு இரவு நேரத்தில் விலை உயர்ந்த
கார்கள் வந்து செல்வதாக தகவல் கிடைத்தது. இந்த நிலையில் இந்த
பங்களாவுக்கு விலை உயர்ந்த 3 கார்கள் சென்றன. உடனே போலீசார் அதிரடியாக
பங்களாவுக்குள் நுழைந்தனர். அங்குள்ள ஒவ்வொரு அறையிலும் அழகிகளும்,
வாடிக்கையாளர்களும் இருந்தனர். இதையடுத்து அங்கு இருந்த அழகிகள் 5
பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை விசாரணை செய்த போது சென்னையை
சேர்ந்த டி.வி.நடிகை ஸ்ரீலட்சுமி (வயது 21), கர்நாடக மாநிலத்தை சேர்ந்த
டான்சர்கள் சிந்து (20), ஷீபா (21), கேரளாவை சேர்ந்த காயத்திரிமற்றும்
ஆந்திராவை சேர்ந்த கவிதா (21) என தெரியவந்தது. மற்றொரு அறையில் இருந்த
வேலைக்கார பெண் லட்சுமி (41), புரோக்கர்கள் பாலாஜி (38) மற்றும் கிருஷ்ண
மூர்த்தி (47) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
comments | | Read More...

மனிதர்கள் மடியலாம்… மண் மடியக்கூடாது! – ‘தேன் கூடு’ சொல்லும் ஈழத்தின் வீரப்போர் கதை!

ஈழத்தின் வீரப் போர் கதையை முதல் முறையாக ஒரு படத்தில் பதிவு
செய்துள்ளனர் தமிழ்ப் படைப்பாளிகள்.
இத் திரைப்படத்தில் நாயகனாக கனடா வாழ் ஈழத்தமிழரும் கனடாவில்
எடுக்கப்பட்ட முழு நீளத் தமிழ்த்திரைப்படமான '1999′ நாயகருமான சுதன்
மகாலிங்கம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் நாயகியாக நவீனா என்பவர்
நடித்துள்ளார்.
படத்தின் இயக்குநர் இகோர் இதற்கு முன் தமிழில் ஆர்யாவை வைத்து
கலாபக்காதலன் படத்தைக் கொடுத்தவர்.
தேன்கூடு படத்தினை இலெமூரியா சர்வதேச திரைப்பட நிறுவனம் தயாரிக்க பிளசிங்
எண்டர்டெய்னர்ஸ் பிரபாதிஷ் சாமுவேல் வழங்குகிறார்.
1984-ல் இலங்கை திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள தென்னமரவாடிஎன்ற பசுமை
நிறைந்த தமிழ் கிராமம் சிங்கள வெறியர்களால் சூறையாடப்படுகிறது. அந்த
கிராம அழிவிலிருந்து ஒரு ஈழ விருட்சம் வீரமாய் துளிர்விடுகிறது. அதன்
போராட்டக் கதை 2009 முள்ளிவாய்க்கால் வரை தொடர்கிறது. முடிவே வரலாறு…..
இல்லை அது முடியாத வரலாறு, என்பதுதான் படத்தின் அடிநாதம்.
இலங்கை வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்ட ஒரு தமிழீழக் கிராமத்தை தேன்கூடு
திரைப்படத்தில் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்களாம்.
தமிழீழ மக்கள் மண்ணை விட்டுதான் போகிறார்கள்.. மண் அவர்களை
விட்டுப்போகாது.. ஆண்ட தமிழினம் மீண்டும் ஆளும்…மனிதர்கள் மடியலாம்.. மண்
மடியாது! இதை தேன்கூடு உணர்த்தும் என்கிறார்கள் லெமூரியா படக்குழுவினர்.
பிப்ரவரியில் உலகமெங்கும் வெளிவருகிறது 'தேன் கூடு' .
comments | | Read More...

ஒரிசாவில் ஓடும் பஸ்சில் மாணவி கற்பழித்து கொலை

ஒரிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள ராணிபூர் கிராமத்தை சேர்ந்த மாணவி
ஒருவர்பத்ராக் நகரில் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
தினமும் அவர் ராணிப்பூரில் இருந்து பத்ராக் நகருக்கு தனியார் பஸ் ஒன்றில்
சென்று வருவது வழக்கம்.
நேற்று மாலை அந்த மாணவி கல்லூரி முடிந்து அந்த பஸ்சில், வீட்டுக்கு
திரும்பிக் கொண்டிருந்தார். ஓடும் பஸ்சில் ஒரு கும்பல் அந்த மாணவியை
மிரட்டி கற்பழித்தது. இரவு வரை அந்த பஸ்சுக்குள் மாணவி
கற்பழிக்கப்பட்டார்.
பஸ் கண்டக்டரும் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டார். இதில் மாணவி மயங்கி
விழுந்தார். அந்த மாணவியை 2 வாலிபர்கள் பத்ராக் நகரில் உள்ள
மருத்துவமனைக்கு மயங்கியில் நிலையில் தூக்கி வந்தனர். மாணவியை பரிசோதித்த
டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினார்.
இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தஅந்த 2 வாலிபர்களும் ஆஸ்பத்திரியில்
இருந்து தப்பி ஓடி விட்டனர். அதன் பிறகே அந்த மாணவி கற்பழித்து
கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இது பற்றி தகவல் பரவியதும், அந்தமாணவியின் பெற்றோர் சாலை மறியலில்
ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அதிரடி வேட்டை நடத்தி பஸ் டிரைவர்,
கண்டக்டரை கைது செய்தனர். மாணவியை கற்பழித்து கொன்ற கும்பலை பிடிக்க
தேடுதல் வேட்டைநடந்து வருகிறது.
comments | | Read More...

இறந்த தலிபான் தீவிரவாதிகளின் உடல்மீது சிறுநீர் கழிக்கும் அமெரிக்க வீரர்கள். விசாரணைக்கு அமெரிக்கா உத்தரவு.

தலிபான் தீவிரவாதிகளின் உடல்கள் மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் சிறுநீர்
கழிப்பது போன்ற காட்சி யூ-டியூபில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி விசாரணை நடத்த அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சுட்டு
வீழ்த்தப்பட்ட தலிபான் தீவிரவாதிகளின் உடல்கள் கீழே கிடக்கின்றன.
அவற்றின் மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் சிறுநீர் கழிப்பது போன்ற வீடியோ
காட்சி யூ-டியூபில் வெளியாகியுள்ளது. இது அமெரிக்காவிலும் ஆப்கன்,
பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை
கண்டித்து அமெரிக்க இஸ்லாமிய நல்லுறவு கவுன்சில் அமெரிக்க பாதுகாப்பு
அமைச்சர் லியோன் பெனட்டாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. போர் விதிமுறைகளை
மீறும் வகையில் அமெரிக்க வீரர்கள் செயல்பட்டிருப்பது
அநாகரிகமாக,கண்டிக்கத்தக்க வகையில் உள்ளதாக கடிதத்தில் கவுன்சில்
கூறியுள்ளது.
இதுபற்றி பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி மற்றும் கடற்படை செய்தி
தொடர்பாளர் ஸ்டீவர்ட் அப்டன் கூறியதாவது: காட்சியை யார் வீடியோ எடுத்தது,
யார் இணையதளத்தில் வெளியிட்டது என்பது தெரியவில்லை. போர் விதிமுறைகளில்
மிகவும் கண்ணியம், நேர்மையை பின்பற்றும் நாடு அமெரிக்கா. அதை மீறுபவர்கள்
மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இணையதளத்தில் வெளியான
காட்சி உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாரபட்சமின்றி அமெரிக்க வீரர்கள்
மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். வீடியோ
காட்சி மற்றும் அதில் ஈடுபட்டதாக கூறப்படும் அமெரிக்க வீரர்கள் தொடர்பாக
அமெரிக்க கடற்படையின் கிரிமினல் புலனாய்வு பிரிவு விசாரணை நடத்த
உத்தரவிடப்பட்டுள்ளது.
comments | | Read More...

குஷ்பு... நதியா... நான்..!

தமிழ்த்திரையுலகில் சில வருடங்களுக்கு முன்பு கனவுக்கன்னியாக வலம்
வந்தவர் சிம்ரன். இவரின் உடுக்கை இடுப்பு நடனத்துக்கு தமிழ் ரசிகர்கள்
கிறங்கித்தான் போனார்கள். அதன் பிறகு தன் காதலரைக் கரம் பிடித்து மும்பை
சென்றவர், ஓரிரு வருடங்களிலேயே சென்னை திரும்பினார். ஆனால், அப்போது கதவு
திறந்தது சின்னத்திரை உலகம்தான். இப்போதுஜெயா டிவியில் "ஜாக்பாட்'
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
"ஜாக்பாட்' நிகழ்ச்சியை நீங்கள்தொகுத்து வழங்க கேட்டபோது, தமிழ் நன்றாகப்
பேச முடியும்னு நம்பிக்கை இருந்ததா?
எனக்கு பேஸிக்கான தமிழ் தெரியும். ஆனால் "ஜாக்பாட்' நிகழ்ச்சியைப்
பொருத்தவரை கேள்விகள் எல்லாம் சுத்தமான தமிழ் உச்சரிப்பில்
இருக்கணும்.அப்போதான் நிகழ்ச்சி பார்ப்பதற்கும், நான் பேசுவதை
கேட்பதற்கும் நல்லாருக்கும். அதனால் உச்சரிப்புகள் சரியாக வருவதற்காக
கொஞ்சம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். மற்றபடி நிகழ்ச்சி தொகுத்து
வழங்குவதிலோ அல்லது பேசுவதிலோ எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.
குஷ்பு இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது காஸ்ட்யூம்களுக்கு அதிக
முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.. நீங்கள் எப்படி?
இந்த கேம் ஷோ பொருத்தவரை ரிச்சான காஸ்ட்யூம்தான் தேவைப்படுகிறது.
ஏனென்றால், நான்முன்பே சொன்னது போல இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரை
பெண்கள்தான் விரும்பிப் பார்க்கிறார்கள். சாதாரண காஸ்ட்யூமில் வந்தால்
ஒரு அட்ராக்ஷனாக இருக்காது. அது மட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியைச் சின்ன
ஆர்ட்டிஸ்ட் யாரும் தொகுத்து வழங்கவில்லை. முதலில் குஷ்பு மேடம்
பண்ணாங்க, அடுத்து நதியா மேடம்.. இப்போ நான்! அதனாலதான் இந்த
நிகழ்ச்சிக்கு காஸ்ட்யூம்க்கு முக்கியத்துவம்நிறைய கொடுக்கிறோம்.
சின்னத்திரை எப்படி இருக்கு?
சின்னத்திரையைப் பொருத்தவரை இப்போ மிகப் பெரிய அளவில்
வளர்ச்சியடைந்திருக்கிறது. தகவல் தொடர்புலயும் சரி, பொழுதுபோக்கிலும்
சரி.. தமிழ்நாட்டில் டிவி அசுர வளர்ச்சியடைஞ்சிருக்குன்னு சொல்லலாம்.
முன்னாடி ஒரு சேனல், ரெண்டு சேனல்தான் இருந்தது. ஆனால் இப்பொழுது
அப்படியில்லை ஏகப்பட்ட சேனல்கள் வந்துவிட்டது. ஒவ்வொரு சேனலிலும்
வித்தியாசமான நிகழ்ச்சிகள் நிறைய வந்து கொண்டிருக்கிறது. இன்றைய
சூழ்நிலைûயில் சினிமாவைத் தாண்டி டிவி வளர்ந்திருக்கிறது.சில சமயங்களில்
டிவியில் நல்ல புரோகிராம் இருந்தால், படத்திற்கு டிக்கெட்
எடுத்திருந்தால் கூடப் போகாமல் டிவி பார்க்கிறாங்க. அப்படி ஆகிடுச்சு.
அந்தளவிற்கு டிவி முன்னேற்றம் அடைஞ்சிருக்கு.
சினிமா நாயகிகள் நிறைய பேர் சின்னத்திரை நாயகிகள் ஆகிட்டாங்க.. நீங்க
எப்போ சீரியல் நாயகி ஆகப்போறீங்க?
இப்போதைக்கு எனக்கு சீரியலில் நடிக்கும் ஐடியா கிடையாது. 2008-ல் ஒரு
தொடரில் நடித்திருந்தேன். அதுவும் டெலிவிஷன் சினிமா மாதிரியானது. அதாவது
டெலிபிலிம் மாதிரி. அந்த புரொகிராம் ஜெயா டிவியில் ஒளிபரப்பானது. அதில்
ஒரு மாதத்திற்கு ஒரு கதை என்று 12 மாதத்திற்கு 12 கதை வந்தது.
அந்தநிகழ்ச்சியின் பெயரே "சிம்ரன் திரை' என்று வைத்திருந்தார்கள்.
அப்படித்தான் நடித்திருந்தேன். மற்றபடி வருடக் கணக்கில் ஒரே தொடரில்
நடிக்க இப்போதைக்கு எனக்கு ஐடியா இல்லை.
சிலிம்ரனை இப்போ காணோமே?
சமீபத்தில் தான் எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. அதுதான்
நான்வெயிட் போட்டதற்குக் காரணம். டிவி நிகழ்ச்சிகளுக்கு
இப்படியிருந்தால்தான் நல்லது. நான் என்ன இனி பெரிய திரையில் நாயகியாகவா
நடிக்கப் போறேன்?
comments | | Read More...

நக்கீரன் கோபாலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்: மன்னிப்பு வெளியிடவும் உத்தரவு!

முதல்வர் ஜெயலலிதா குறித்து செய்தி வெளியிட்டது தொடர்பாக நக்கீரன்
ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மீது பல்வேறு
பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தான் கைதாவதைத்
தவிர்க்க அவர் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று கோபாலுக்கும்
மற்றவர்களுக்கும் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
முன்னதாக நக்கீரன் வெளியிட்ட செய்திக்கு எதிராக கோபால், காமராஜ் ஆகியோர்
மீது முதல்வர் ஜெயலலிதா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
அதில், எனவே என்னைப் பற்றி செய்தி எழுத, வெளியிட, விற்பனை செய்ய நக்கீரன்
பத்திரிகைக்கு தடை விதிக்க வேண்டும். கோர்ட்டு உத்தரவை மதிக்காமல்
வேண்டும் என்றே அவமதித்ததற்காக நக்கீரன் கோபால், காமராஜ் ஆகியோரை
நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று
கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய
முதல் டிவிஷன் பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது நக்கீரன்
தரப்பு வழக்கறிஞர் பி.டி. பெருமாள், முதல்வரைப் பற்றி வெளியான செய்தியை
திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும், அதற்கான
மன்னிப்பு அறிவிப்பை பத்திரிகையின் முக்கிய பகுதியில் வெளியிடுவதாகவும்
தெரிவித்தார்.
அதற்கு முதல்வர் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன்,
முதல்வரைப் பற்றி நக்கீரன் பத்திரிகை முதல் பக்கத்தில் தான் செய்தி
வெளியிட்டது. எனவே மன்னிப்பையும் முதல் பக்கத்தில்தான் வெளியிடவேண்டும்
என்றார்.
அப்போது தலைமை நீதிபதி குறுக்கிட்டு, இந்த மன்னிப்பை வரும் நக்கீரன்
இதழில் முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றார்.
உடனே நக்கீரன் தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே வரும் இதழுக்கான அச்சடிக்கும்
பணி முடிந்து விட்டது என்றார்.
குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மின்சார இணைப்பு இல்லை என்றீர்கள். எப்படி
அச்சடித்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு
இருந்தாலும் அதை மாற்றி விட்டு, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதை முதல்
பக்கத்தில் பிரசுரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதற்கிடையே முதல்வர் ஜெயலலிதா பற்றி செய்தி வெளியிட்டது தொடர்பாக
நக்கீரன் கோபால், காமராஜ் ஆகியோர் மீது ஜாம்பஜார் போலீசார் வழக்குகள்
பதிவு செய்துள்ளனர். இதில்கைதாவதைத் தவிர்க்க,தனக்கு முன் ஜாமீன் வழங்க
வேண்டும் என்று நக்கீரன் கோபால் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்
முன் ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் இன்று
விசாரணைக்கு வந்தது.இரு தரப்பு வாதங்களைகேட்ட நீதிபதி, நக்கீரன்
கோபாலுக்கு நிபந்தனையின் பேரில் முன் ஜாமீன் வழங்கினார். அவர் 4
வாரத்துக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு
ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Tags: நக்கீரன் கோபால் , nakkeeran gopal
comments | | Read More...

ஜாதிவெறி பிடித்த ஜெயலலிதாவின் அறிக்கை

பிராமண சமுதாயத்தில் இருந்து வந்த முதல்வர் , மாட்டுக்கறி உண்பாரா ? என்ற
தவறான எண்ணத்தை மக்கள் மனதில் நக்கீரன் செய்தி உருவாக்கிவிட்டது , என
கூறியுள்ளார் ஜெயலலிதா.
நக்கீரன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாகஅந்த பத்திரிகையின்
ஆசிரியர் கோபால் , இணை ஆசிரியர் காமராஜ் மீது முதல்வர் ஜெயலலிதா ,
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சென்னைஉயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேற்று தாக்கல் செய்த மனுவில் , "
என்னைப் பற்றி வெளியிடும் செய்திகள் தவறு என்று தெரிந்தே தொடர்ந்து தவறான
மற்றும் அவதூறான தகவல்களை நக்கீரன் கோபாலும் , காமராஜும் வெளியிட்டு
வருகின்றனர். பத்திரிகை விற்பனைக்காக கீழ்த்தரமாக செயல்படுகின்றனர்.
இதுபோன்ற 21 அவதூறு செய்திகளை 2003-ம் ஆண்டு அவர்கள் தொடர்ந்து
வெளியிட்டதால் , அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய வேண்டியதாகிவிட்டது.
என்னைப் பற்றி செய்தி வெளியிடுவதற்கு நிரந்தர தடையும் , அவதூறு
விளைவித்ததற்காக நிவாரணமும் கேட்டு அந்த வழக்கை தாக்கல் செய்திருந்தேன்.
அந்த வழக்கிலும் நக்கீரன் கோபாலும் , காமராஜும்தான் பிரதிவாதிகள். எனது
வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக இடைக்கால
உத்தரவு பிறப்பித்து , என்னைப்பற்றி அவதூறு செய்தி எழுதக்கூடாது என்று
கூறியது.
இதை எதிர்த்து டிவிஷன் பெஞ்ச் நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீட்டு
மனுதாக்கல் செய்தனர். அந்த நீதிமன்றம் , சில நிபந்தனைகளை விதித்து 6.4.06
அன்று உத்தரவுகளை பிறப்பித்தது.
36 மணி நேரத்துக்குள்...
அந்த உத்தரவில் , ' ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியகட்டுரையை
வெளியிட வேண்டும் என்றால் அந்த கட்டுரை பற்றிய சம்பந்தப்பட்ட கேள்விகள்
அல்லது அந்த கட்டுரையின் சாராம்சத்தை அவருக்கு பேக்ஸ் எண் மூலம் அனுப்பி
வைக்க வேண்டும். இதற்கு ஜெயலலிதா பதிலளிக்கலாம். அவரிடம் இருந்து 36 மணி
நேரத்துக்குள் பதில் கிடைக்கவில்லை என்றால் நக்கீரனில் அந்த கட்டுரையை
வெளியிடலாம் ' என்று கூறப்பட்டுள்ளது.
கொள்கை பரப்புச் செயலாளர்
இந்த நிலையில் என்னைப் பற்றி கடந்த 7-ந் தேதி வெளியிட்ட நக்கீரன்
பத்திரிகை மற்றும் போஸ்டரில் , ' மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான் '
என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. நான் அ.தி.மு.க.வில் கொள்கை
பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டபோது , அதற்கு கே.ஏ.கிருஷ்ணசாமி ,
எஸ்.டி.சோமசுந்தரம் , பொன்னையன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததாக அந்த
கட்டுரையில்கூறப்பட்டுள்ளது.
அவர்கள் எனது நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும் , அந்த
செய்தியை பொன்னையன் வன்மையாக மறுத்து பத்திரிகைகளில் செய்தி
வெளியிட்டுள்ளார்.
எம்ஜிஆரும் நானும் மாட்டுக்கறிசாப்பிட்டதில்லை
எம்.ஜி.ஆரும் , நானும் எந்த நேரத்திலும் மாட்டுக்கறி சாப்பிட்டதில்லை.
எம்.ஜி.ஆர். அவர் வாழ்நாள் முழுவதும் ஒருநாள் கூட அதை உட்கொண்டதில்லை.
நானும் இதுவரை மாட்டுக்கறியை தொடவில்லை. இந்த நிலையில் இப்படி ஒரு
முற்றிலும் பொய்யான , உண்மைக்கு மாறான கட்டுரையை வெளியிட்டது , குற்ற
உள்நோக்கம் கொண்டது.
இந்த கட்டுரை பொய் என்பதும் அதுஎன்னை அவதூறு செய்யும் என்பதும்
அவர்களுக்குத் தெரியும். அதோடு , கடந்த 6.4.06 அன்று உயர்நீதிமன்றம்
பிறப்பித்த உத்தரவையும் மீறி வெளியிடப்பட்ட செய்தி இதுவாகும்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி , இந்த செய்தியை வெளியிடுவதற்கு முன்பு எனது
கருத்தை கேட்டிருக்க வேண்டும். அவர்களிடம் இருந்து எனக்கு அப்படி
எந்தவொரு நோட்டீசும் வரவில்லை.
தண்டிப்பது அவசியம்
எனவே இது நீதிமன்ற உத்தரவை மீறிவெளியிடப்பட்ட செய்தி என்பதால் , அவர்கள்
2 பேரும் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு உள்ளாகிறார்கள். அவர்கள்
கோர்ட்டையும் அவமதிப்பு செய்துள்ளதால் அந்த குற்றத்தின் கீழ் அவர்களை
தண்டிப்பது அவசியமாகும்.
அந்த அவதூறான செய்தி , எனது நற்பெயருக்கும் , மதிப்புக்கும்மட்டுமல்ல ,
எனது தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும் விதமாக அமைந்துவிட்டது.
மாட்டுக்கறியை சமைத்து எம்.ஜி.ஆருக்கு பரிமாறினேன் என்பதோடு , நானும் அதை
சாப்பிட்டேன் என்று வந்துள்ள இந்த செய்தி , உண்மைக்கு புறம்பானது.
பிராமண சமுதாயத்திலிருந்து வந்த முதல்வர்...
இந்த செய்தி , பிராமண சமுதாயத்தில் இருந்து வந்த முதல்வர் , மாட்டுக்கறி
உண்பாரா ? என்ற தவறான எண்ணத்தை மக்கள் மனதில் உருவாக்கிவிட்டது. ஆகவே ,
கோபாலும் , காமராஜும் எனது தனிப்பட்ட வாழ்க்கையின் குணநலன்களை
கொச்சைப்படுத்திவிட்டனர்.
அரசியல் அமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தனிமனித சுதந்திரம்
மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் விதமாக குற்ற உள்நோக்கத்துடன்
இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர். இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட
அனுமதித்தால் நான் கடுமையாக பாதிக்கப்படுவேன்.
இன்று விசாரணை
ஆகவே , இதுபோன்ற எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய செய்திகளை எழுதவோ ,
வெளியிடவோ , விற்கவோ கூடாது என்று நக்கீரன் பத்திரிகைக்கு தடை விதித்து
உத்தரவிட வேண்டும். நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே , தெரிந்தே அவமதித்த
குற்றத்துக்காக இவர்களை தண்டிக்க வேண்டும் ," என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை இன்று (12-ந் தேதி) உயர்நீதிமன்றத்தில்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
comments | | Read More...

விஜயகாந்த் வாயை மட்டுமல்ல....-நேரு விளாசல்

தே.மு. தி.க. , வின் மேட்டூர் எம்.எல்.ஏ. , மேல் வழக்கு போட்டு ,
அக்கட்சியையே அடக்கி விட்டனர். அவர்களும் அடங்கி விட்டனர். தே.மு. தி.க.
, தலைவர் விஜயகாந்த் வாயை மட்டுமல்ல , அனைத்தையும் மூடிக் கொண்டுள்ளார்
என்று பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சியில் நடந்த கூட்டத்தில்தான் நேரு இப்படிப்பேசினார். அத்தோடு
நிற்கவில்லை நேரு , மேற்கு வங்கத்தில் காங்கிரஸை எட்டி உதைத்த மம்தாவைப்
போல தமிழகத்திலும் திமுக காங்கிரஸை எட்டி உதைக்க வேண்டும் , மேற்கு
வங்கத்தில் தேர்தல் வந்ததைப் போல தமிழகத்திலும் வரும் என்றும் அவர்
பேசியுள்ளார்.
திருச்சி மாநகர திமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு
நேரு பேசினார். தனது பேச்சில் காங்கிரஸை மறைமுகமாகவும் , விஜயகாந்த்தை
படு பச்சையாகவும்விமர்சித்தார். அவரது பேச்சிலிருந்து சில...
தமிழ்ப் புத்தாண்டு
தி.மு.க. , வினர் , தைத் திங்கள் முதல்நாளை தமிழ் புத்தாண்டாக சிறப்பாக
கொண்டாட வேண்டும். தங்களின் வீடுகளில் கோலமிடும் போது தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள் என்று எழுதியும் , முடிந்தால் புத்தாடை அணிந்தும் ,
வீடுகளில் கட்சிக் கொடியேற்றியும் தமிழ்ப்புத்தாண்டை கொண்டாட வேண்டும்
என்றார் நேரு.
காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் காங்கிரசை கூட்டணியிலிருந்து வெளியேறச் சொல்லி மம்தா
அறிவித்தார். இதையடுத்து , காங்கிரஸ் சிறிது இறங்கி வந்தபோதும் , மம்தா
அதெல்லாம் முடியாது என்று கூறி , காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு
எதிராக களம்காண தயாராகி விட்டார். அதுபோல் , இங்கும் வெகுவிரைவில்
நடக்கும். அதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும் என்று ஒரே நேரத்தில்
ஜெயலலிதா அரசு கவிழும் என்றும் , காங்கிரஸை திமுக உதறும் என்றும் அவர்
சூசகமாக பேசினார்.
அடுத்து விஜயகாந்த்
நம்முடைய போதாத காலம் அ.தி. மு.க. , வுடன் விஜயகாந்த் கூட்டு சேர்ந்தார்.
அவருடைய தயவில் ஜெயித்த அ.தி.மு.க. , அக்கட்சியை எட்டி உதைத்து விட்டது.
தே.மு. தி.க. , வின் மேட்டூர் எம்.எல்.ஏ. , மேல் வழக்கு போட்டு ,
அக்கட்சியையே அடக்கி விட்டனர். அவர்களும் அடங்கி விட்டனர். தே.மு. தி.க.
, தலைவர் விஜயகாந்த் வாயை மட்டுமல்ல , அனைத்தையும் மூடிக் கொண்டுள்ளார்
என்று நேரு பேசியபோது குறிப்பாக கடைசி வார்த்தையை அவர் சொன்னபோது
கூட்டத்தில் அமோக கைத்தட்டல்.
தோற்றது ஏன் ?
திருச்சியில் திமுக தோற்றதற்குஎன்ன காரணம் என்பது குறித்து அவர்
கூறுகையில் , கடந்த எம்.பி. , தேர்தலில் ஸ்ரீரங்கம் சட்டசபையில் மட்டும்
தோற்று , திருச்சி எம்.பி. , தொகுதியை இழந்தோம். அதுமட்டும் நடக்காமல்
போயிருந்தால் , ஜெயலலிதா இங்கு வந்திருக்கமாட்டார். அ.தி.மு.க. , வும்
ஆட்சிக்கு வந்திருக்காது.
தமிழகத்தில் புதிதாக ஓட்டுரிமைபெற்ற , 30 லட்சம் இளம் வாக்காளர்களிடம்
நம்மைப் பற்றிஅவதூறு பரப்பப்பட்டது. அதற்கு உரிய பதில் கூற நாம்
தவறிவிட்டோம். ஆகையால் , மாற்றத்தை எதிர்பார்த்த , அந்த இளம்
வாக்காளர்கள் மாற்றி ஓட்டு போட்டு விட்டனர் என்று காரணம் கூறினார் நேரு.
comments | | Read More...

முல்லைப் பெரியாறும்: அஞ்சலியின் தமிழ் பற்றும்!

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள டேம் 999
படத்தில் நடித்த வினய்யுடன் , தமிழில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்
நடிகை அஞ்சலி.
' உன்னாலே உன்னாலே ' படம் மூலம் தமிழில்அறிமுகமான வினய் , சமீபத்தில்
நடித்த படம் கேரள இயக்குனரால் எடுக்கப்பட்ட ' டேம் 999 '. அணையை
உடைக்காவிட்டால் 35 லட்சம் பேர் இறந்துவிடுவார்கள் என்ற பொய்யான
பிரச்சாரத்தை கேரள அரசின் உதவியுடன் செய்தது இந்த படம். ஆனால்
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்தப் படம் இரண்டு வாரங்கள் கூட
தாக்குப்பிடிக்கவில்லை.
' டேம் 999 ' படத்துக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால்
அப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் நடித்த வினய் , விமலா
ராமன் மீதும் ரசிகர்கள் ஆத்திரத்தில்உள்ளனர்.
இந்த நிலையில் வினய்யை வைத்து தயாராகும் புதுப்படமொன்றில் அவருக்கு
ஜோடியாக நடிக்க அஞ்சலியிடம் கேட்டுள்ளனர். ஆனால் வினய்யுடன் நடிப்பதால்
தமிழ் ரசிகர்கள் என் மீது ஆத்திரப்பட வாய்ப்புள்ளது. எனவே எனக்கு இந்த
வாய்ப்பே வேண்டாம் என்று கூறிவிட்டாராம்அஞ்சலி!
அஞ்சலிக்கு தெரிந்தது கூட , வினய்யை வைத்து படமெடுக்க முயலும்
தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் தெரியவில்லையே!
இதே அஞ்சலி இலங்கை பிரச்சனையில் கூட தமிழர்கள் தாக்கப்படுவதை எதிர்த்து
தைரியமாக குரல் கொடுத்த ஒரே நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழை
தாய்மொழியாக கொள்ளாவிட்டாலும்,அவரை வாழவைக்கும் தமிழ்மொழி மீதும்
தமிழர்கள் மீதும் பற்றும் பாசமும் வைத்திருக்கும் அஞ்சலிக்கு நமது விழியே
பேசு வலைத்தள வாசகர்கள் சார்பாக நன்றிகள்....தெரிவித்துகொள்கிறேன்.
comments | | Read More...

மகரஜோதிக்குப் பிறகுதமிழர்களை தாக்க மலையாளிகள் சதி-உளவுப் பிரிவு

மகரஜோதி முடிந்ததும் தமிழர்களைமிகப் பெரிய அளவில் தாக்கி
விரட்டியடிக்கும் சதித் திட்டம் கேரளாவில் இருப்பதாகவும் , இதுகுறித்து
கேரள அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்றும்
மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கைத் தகவல் அனுப்பியுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
இந்த எச்சரிக்கை குறித்து கேரளாவைச் சேர்ந்த ஒரு நாளிதழ் செய்தி
வெளியிட்டுள்ளது. அதேசமயம் , கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டால் அதற்கான
பதிலடிஉடனடியாக தமிழகத்திலும் தரப்படும் சூழல் உள்ளதாகவும் மத்திய உளவுப்
பிரிவு எச்சரித்துள்ளது.
மத்திய உளவுப் பிரிவு தகவல் உண்மையாக இருக்கக் கூடும் என்றே
நம்பப்படுகிறது. காரணம் , சபரிமலைக்குப் போய் விட்டுத் திரும்பும் தமிழக
பக்தர்களும் கூட இப்படித்தான் முனுமுனுக்கின்றனர்.
தற்போது தமிழகத்திலிருந்து வரும் பக்தர்களால் பெருமளவில் வியாபாரம்
நடக்கிறது. இதை கெடுத்துக் கொள்ள மலையாளிகள் குறிப்பாக வியாபாரிகள்
விரும்பவில்லை. ஏற்கனவே பக்தர்கள் வரவு வெகுவாக குறைந்திருப்பதால்
வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வந்தவரை லாபம்
பார்ப்பதில் அவர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இப்போது கூட கேரளாவுக்குப் போய் விட்டுத் திரும்பும் எந்த ஒரு
தமிழ்நாட்டுக்காரரும் மலையாளிகளிடம் திட்டு வாங்காமல் வர முடிவதில்லை.
அந்தஅளவுக்கு தொடர்ந்து கேவலமாக பேசுவதும் , திட்டுவதும் ,
வம்பிழுப்பதும் , அடிப்பதும் , தாக்குவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
மகரஜோதி முடியட்டும் என்று அங்குள்ளவர்கள் தங்களிடம் எச்சரிக்கை
தொணிக்கும் வகையில்கூறுவதாகவும் தமிழக பக்தர்கள் கூறுகிறார்கள். இதை
வைத்துப் பார்க்கும்போது மிகப் பெரியஅளவிலான தாக்குதலுக்கு அவர்கள்
தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதைத்தான் மத்திய உளவுத்துறையின்
எச்சரிக்கையும் பிரதிபலிக்கிறது.
அதேசமயம் , கேரளாவில் தமிழர்கள் மீது பெரும் தாக்குதல் நடந்தால் அதற்கு
விரைவான , உடனடியான பதிலடியாக தமிழகத்தில் மலையாளிகளும் தாக்கப்படுவர்
என்றும் மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஏற்கனவே கேரளாவில் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில்
மலையாளிகளின் வர்த்தக நிறுவனங்கள் மீது மட்டும் தமிழக மக்களில் சிலர்
தாக்குதல் நடத்தினர். ஆனால் எந்த ஒரு மலையாளியும் தாக்கப்படவில்லை.
மகரஜோதிக்குப் பிறகு தமிழர்கள்பெருமளவில் கேரளாவில் தாக்கப்பட்டால் ,
தமிழகத்திலும்மலையாளிகள் பெருமளவில் தாக்கப்படுவர் என்று உளவுத்துறை
தகவல் கூறுகிறாம்.
இந்த தாக்குதல் எண்ணம் இருபக்கமும் இருப்பதால் மகர ஜோதிக்குப் பிறகு என்ன
நடக்குமோ என்ற அச்சம் இரு பக்க மக்களிடமும் எழுந்துள்ளது. விபரீதம்
நடக்கும் முன்பு கேரள அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும் என்று தமிழகம் எதிர்பார்க்கிறது. தமிழர்கள் கேரளாவில்
தாக்கப்பட்டால் அது மிகப் பெரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும்
கூறப்படுகிறது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger