News Update :
Powered by Blogger.

பீகார் சட்டசபையில் எதிரொலித்த சென்னை என்கவுன்டர்!

Penulis : karthik on Friday 24 February 2012 | 04:18

Friday 24 February 2012

 
 
 
சென்னையில் பீகாரைச் சேர்ந்த 4 வங்கிக் கொள்ளையர்கள் உட்பட 5 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு தமிழக அரசை பீகார் மாநில அரசு கோரியுள்ளது.
 
பீகார் மாநில சட்டப்பேரவையில் சென்னை என்கவுன்டர் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்குப் பதிலளித்த பீகார் மாநில கால்நடைத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், "இந்த விவகாரத்தை மாநில அரசு மிகவும் சீரியசாக எடுத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு தமிழக் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளோம்" என்றார்.
 
"போலீஸுடனான மோதலில் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழக அரசு விசாரணை விசாரணை நடத்த வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
 
சுட்டுக்கொல்லப்பட்டோரில் கொள்ளைக் கும்பல் தலைவன் வினோத்குமார் உட்பட 4 பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள். ஒருவன் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவன்.
 
சென்னை பெருங்குடி மற்றும் கீழ்கட்டளை ஆகிய இடங்களில் வங்கிகளில் ரூ35 லட்சத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
 
இது தொடர்பாக கொள்ளைக் கும்பல் தலைவன் வினோத்குமார் படத்தை சென்னை காவல்துறை வெளியிட்ட 10 மணி நேரத்தில் கொள்ளை கும்பல் கூண்டோடு சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.




comments | | Read More...

மீண்டும் விஜய்யின் துப்பாக்கி !

 
 
 
விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. தமிழகம், ஆந்திரா என எங்கும் பெப்சி பிரச்சினை தலைவிரித்தாடுவதால், மும்பையிலேயே முழுப் படப்பிடிப்பையும் நடத்த முடிவு செய்துள்ளார் இயக்குநர் முருகதாஸ்.
 
பெப்சி பிரச்சினை காரணமாக துப்பாக்கி படத்தை இடையில் நிறுத்திவிட்ட முருகதாஸ், ஒரு குறும்படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.
 
இது விஜய்க்கு கவலையளித்தது. படப்பிடிப்பு இல்லாததால் அவரும் கூப்பிட்ட விழாக்கள், சலூன் திறப்பு என அனைத்துக்கும் போய் வந்தார்.
 
இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் முருகதாஸ். கதைப்படி விஜய் மும்பையில் போலீஸ் அதிகாரி. எனவே மொத்தப் படத்தையும் மும்பையிலேயே முடித்துவிடத் திட்டமிட்டுள்ளனர்.
 
பெப்சி தொழிலாளர் பிரச்சினையும் அங்கு வராது என்பதால் இந்த முடிவு என்கிறார்கள். ஆனால் சில தினங்களுக்கு முன் அஜீத்தின் பில்லா 2 படப்பிடிப்பு மும்பையில் நடந்தபோது பெப்சிக்காரர்கள் பிரச்சினை செய்தது குறிப்பிடத்தக்கது.
 
இன்னொரு பக்கம், பெப்சி - தயாரிப்பாளர் தகராறு இன்னும் முடிவுக்கு வராததால் அனைத்து படப்பிடிப்புகளும் நின்றுபோய், கோடம்பாக்கமே ஸ்தம்பித்துள்ள நிலையில், விஜய் படத்தின் ஷூட்டிங்கை நடத்துவது முணுமுணுப்பைக் கிளப்பியுள்ளது.



comments | | Read More...

இலங்கைக்கு எதிரான தீர்மானம்! உத்தேச நகல் வெளியீடு!!

 
 
இலங்கைக்கு எதிரான ஜெனீவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் உத்தேசிக்கப்பட்டுள்ள நகல் யோசனைத் திட்டம் வெளியாகியுள்ளது.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையே இலங்கைக்கு எதிரான தீர்மானமானத்தை நிறைவேற்ற இம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் சர்வதேச பிரகடனங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியமானது.
 
குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்டம், அகதிகள் தொடர்பான சட்டம், மனித உரிமைச் சட்டம் பேன்றன கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
 
இலங்கையின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகள் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு உதவியாக அமையும்.
 
எனினும், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகள் வரவேற்கப்பட வேண்டியவை.
 
சட்டவிரோத படுகொலைகள் தொடர்பில் விசாரணை நடத்துதல், வடக்கில் இராணுவ மயப்படுத்தலை தடுத்தல், காணிப் பிரச்சினை தொடர்பில் சுயாதீனமான பொறிமுறைமை ஒன்றை அமைத்து தீர்வு காணல், சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல், அதிகாரப் பகிர்வின் மூலமான அரசியல் தீர்வுத் திட்டம், கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல் போன்றவற்றை குறிப்பிடலாம்.
 
எனினும், பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உரிய கவனம் செலுத்தத் தவறியுள்ளது.
 
குறிப்பாக சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தப்படவில்லை.
 
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்படக் கூடிய வகையில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
 
1. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டும். பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் காத்திரமான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்க வேண்டும்.
 
2. சர்வதேச சட்ட மீறல்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்தல் ஆகியன தொடர்பில் அடுத்த அமர்வுகளின் போது இலங்கை அரசாங்கம் விரிவான திட்டத்தை முன்வைக்க வேண்டும்.
 
3. மனித உரிமை மேம்பாடு தொடர்பில் இலங்கைக்கு ஆலோசனை வழங்குதல்.
 
ஆகிய முக்கிய காரணிகள் இந்த நகல் யோசனைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
உறுப்பு நாடுகளுக்கு இந்த நகல் யோசனைத் திட்டத்தை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
comments | | Read More...

திரிஷாவின் அழகிய படங்கள்

 

திரிஷாவின் அழகிய படங்கள்

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger