News Update :
Powered by Blogger.

தேனிலவு சுற்றுலா திட்டம்: புதுமண ஜோடிக்கு வாய்ப்பு honey moon tour to mars

Penulis : Tamil on Wednesday 27 February 2013 | 23:44

Wednesday 27 February 2013

செவ்வாய் கிரகத்துக்கு புதுமண ஜோடி தேனிலவு செல்லும் சுற்றுலா திட்டத்தை தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.

விண்ணில் சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய கிரகம் செவ்வாய் (மார்ஸ்) இது சூரியனில் இருந்து 4-வது இடத்தில் பூமிக்கு அடுத்ததாக காணப்படுகிறது.

பூமிக்கு சந்திரன் துணைக்கோள் இருப்பதுபோல செவ்வாய் கிரகத்துக்கு போபோஸ், டெயிமோஸ் என்ற 2 துணைக் கோள்கள் உள்ளன. தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பி உள்ளது.

இதுபோல் பல்வேறு உலக நாடுகளும் செவ்வாய் கிரகத்தை பற்றியே ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. பூமியைப்போல செவ்வாய் கிரகத்திலும் மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான தண்ணீர் அதிக அளவு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியில் காணப்படுவது போலவே செவ்வாயிலும் பருவ நிலை சுழற்சி நிகழ்கின்றது. மலைகள், பள்ளத்தாக்குகள், கால்வாய்கள், எரிமலைகள், பாலைவனங்கள் உள்ளன.

தற்போது செவ்வாயின் சுற்றுப் பாதையில் அமெரிக்காவின் 3 விண்கலங்கள் சுற்றி வருகின்றன. வருங்காலத்தில் அங்கு மனிதன் குடியேற முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் டிட்டோ என்ற விண்வெளி சுற்றுலா நிறுவனம் எதிர்காலத்தில் விண்வெளிக்கு மனிதன் சுற்றுலா செல்லும் திட்டத்தை ஏற்கனவே அறிவித்தது. இதற்கான ஒப்பந்தத்தை நாசாவுடன் இணைந்து செய்துள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் இது தொடங்கும் என்று அறிவித்தது.

தற்போது செவ்வாய் கிரகத்தில் தேனிலவு பயணம் செல்லும் திட்டத்தையும் அது அறிவித்துள்ளது. இதில் திருமணமான தம்பதி பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மொத்தம் 501 நாட்கள் பயணம். இதற்கான செலவு ரூ. 5,400 கோடி என்றும் இன்னும் 5 வருடத்தில் இந்த திட்டம் தொடங்கும் என்றும் அதன் அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கு தேர்வு செய்யப்படும் தம்பதிக்கு விண்வெளிப்பயணம் பற்றிய பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு செவ்வாய் கிரகத்துக்கு பயணம் தொடங்கும்.
comments | | Read More...

மணி அடிச்சா சோறு நகைச்சுவை

Penulis : Tamil on Sunday 24 February 2013 | 00:41

Sunday 24 February 2013

துப்புரவு பணியாளர்களை புதிதாக நியமிக்க வேண்டும் மன்னா!
-
ஏன்...பழைய பணியாளர்கள் சரியாக துப்புறதில்லையா..?
-
>சி.அரசன்
-
--------------------------------------------
-
என்ன சொல்றீங்க, இருபது வருஷமா சைக்கிளில் போயும்
உடம்பு குறையலையா..?
-
ஆமாங்க டாக்டர்...நான் கேரியர்ல உட்கார்ந்துக்குவேன்...!
-
>ஜே.தனலட்சுமி
-
-------------------------------------------
-
ஜெயிலில் மணியடிச்சா சோறுன்னு தலைவரிடம் சொன்னது
தப்பா போச்சு..!
-
ஏன் என்ன செய்யறார்?
-
ஜெயிலுக்குப் போகும்போது, கையில் ஒரு மணியை கொண்டு
போறார்...!
-
எஸ்.சக்திகனி

comments | | Read More...

பிரபாகரன் மகனை பிணைக்கைதியாக வைத்து சுட்டு கொன்ற ராணுவம்: சானல் 4 திடுக்கிடும் தகவல் prabhakaran son shot killed srilanka army channel 4 release

Penulis : Tamil on Monday 18 February 2013 | 22:11

Monday 18 February 2013



இலங்கையில் விடுதலை புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இறுதிகட்ட போர் நடந்தது. அதில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். அவரது மனைவி, மூத்த மகன் மற்றும் மகள் மற்றும் இளைய மகன் பாலசந்திரன் ஆகிய அனைவரும் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டனர்.

மேலும், இறுதிகட்ட போரின் போது, 1 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் குண்டுவீசி கொல்லப்பட்டனர். பிடித்து செல்லப்பட்ட விடுதலைப் புலிகள் கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டனர்.

இலங்கை ராணுவத்தின் கொடூர தாண்டவங்களை தொகுத்து இங்கிலாந்தின் ‘சானல் 4’ என்ற டி.வி. ஆவணப்படமாக தயாரித்து வெளியிட்டது. இது உலகம் முழுவதும் மக்களை பதைபதைப்பில் ஆழ்த்தியது. இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை அந்நாட்டு அரசு ஏற்க மறுத்தது. ‘கிராபிக்ஸ்’ செய்து மிகைப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியது.

இறுதிகட்ட போர் முடிவின்போது பிரபாகரனின் இளைய மகன் 12 வயது பாலசந்திரன் சுட்டுகொல்லப்பட்ட படம் வெளியாகி இருந்தது. ஆனால் அவன் எப்படி இறந்தான் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், அவனை பிணைக் கைதியாக பிடித்து சென்ற சிங்கள ராணுவம் ஈவு இரக்கமின்றி 5 தடவை மார்பில் துப்பாக்கியில் சுட்டு கொன்றது தெரிய வந்துள்ளது. அதற்கான போட்டோக்களை ஆதாரத்துடன் ‘சானல் 4’ டி.வி. நேற்று வெளியிட்டது.

பிணைக் கைதியாகும் முன்பு பாலச்சந்திரனுக்கு 5 விடுதலைப்புலிகள் காவலாக இருந்துள்ளனர். பாலச்சந்திரனுடன் சேர்ந்து அவர்களையும் இலங்கை ராணுவம் பிடித்து சென்றுள்ளது. பின்னர் விடுதலைப்புலிகள் 5 பேரின் கைகளை கட்டி தலையில் சுட்டு கொடூரமாக கொன்றுள்ளனர்.

பின்னர் பாலசந்திரனை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் மணல் மூட்டைகளுக்கு நடுவில் உட்கார வைத்தனர். சட்டை கூட அணியாமல் லுங்கியை போர்த்திய நிலையில் காயங்களுடன் பரிதாபமாக அமர்ந்திருக்கும் பாலசந்திரனுக்கு சாப்பிட பிஸ்கட் வாங்கி கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்டு கொண்டிருக்கும் பாலசந்திரனை ராணுவ வீரர்கள் டிஜிட்டல் காமிராவில் போட்டோ எடுத்துள்ளனர்.

அதன் பின்னர் 2 மணி நேரம் கழித்து பாலசந்திரனை கொடூரமாக சுட்டு கொன்றுள்ளனர். அதையும் அதே டிஜிட்டல் காமிராவில் படம் பிடித்துள்ளனர். பிணமாக கிடக்கும் பாலசந்திரனின் மார்பில் 3 துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளன. அவனை 2 அடி தூரத்தில் இருந்தே சுட்டு கொலை செய்யப்பட்டிருப்பார் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
prabhakaran son shot killed srilanka army channel 4 release

அதே நேரத்தில் அவரின் பாதுகாவலர்கள் அவரது கண் முன்னாலே சுட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த போட்டோக்களை வெளியிட்டுள்ள ‘சானல் 4’ பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன் கொடூரமாக சொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், ‘நோ வார் ஷோன்’ என்ற பெயரில் விரைவில் புதிய ஆவணபடம் ஒன்றையும் சானல் 4 வெளியிட உள்ளது. ஏற்கனவே, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது அமெரிக்கா கொண்டு வந்த போர்க்குற்றம் சம்பந்தப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இலங்கை அரசு சிக்கலில் உள்ளது.

இந்த நிலையில் சானல் 4 தற்போது வெளியிட்டுள்ள பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரனின் போட்டோக்கள் மற்றும் வெளியாக இருக்கும் சானல் 4 ஆவணப்படம் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் அதிபர் ராஜபக்சேவும் அவரது தம்பியும் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சேவும் கடும் நெருக்கடிக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger