News Update :
Powered by Blogger.

புலனாய்வு பத்திரிகைகளின் இன்னொரு பக்கம்.

Penulis : karthik on Wednesday 5 October 2011 | 23:50

Wednesday 5 October 2011

 
பரபரப்புக்கு பெயர் போனவை புலனாய்வுபத்திரிகைகள்.தலைப்பு எப்போதும் வாங்க வைக்கிற மாதிரிதான் வைக்க வேண்டும்.தமிழில்அநேகமாக துக்ளக்தான் முன்னோடி என்று நினைக்கிறேன்.ஒரு கட்ட்த்தில் தராசு பரபரப்பாகஇருந்த்து.நக்கீரன் கோபால் தராசு பத்திரிகையில் பணியாற்றியவர்.
புலனாய்வுபத்திரிகை நிருபர் என்றால் பேர்தான் பெத்த பேரு! அப்போது உள்ளுர் பத்திரிகைஒன்றும்,தொழில் சார்ந்த இதழ் ஒன்றும் ஆக இரண்டு இதழ்களில் பங்கேற்ற அனுபவம் எனக்குஉண்டு.தேர்தலுக்காக ஒரு வெளியீடு கொண்டு வர முடிவு செய்தோம்.மாவட்டம் முழுக்கஅலைந்து சுற்றிய அனுபவம் உண்டு.
வேட்பாளர்களை பார்க்க வேண்டுமானால் இரவு பதினோருமணி.இல்லாவிட்டால் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்கும்.அங்கே போக வேண்டும்.காலையில்கிளம்பினால் வீடு வந்து சேர இரவு பன்னிரண்டு மணி ஆகும்.உடல் முழுக்க வலியில்படுக்கையில் விழுந்தால் காலையில் யாராவது எழுப்பினால்தான் உண்டு.
இரண்டு கட்சிகள்பிரிந்துவிட்ட்து என்பார்கள்.ஒரு கட்டுரை எழுதி முடித்தால் சேர்ந்துவிட்டிருக்கும்.உடனுக்குடன் ஆறிப்போய்விடும்.இப்போது பெரும்பாலும் வாரம் இரண்டுஎன்று ஆகிவிட்ட்து.அச்சுக்கு போக வேண்டும்,உடனே கட்டுரை வேண்டும்.அதுவும்முன்பெல்லாம் அவசரமாக்க் கிளம்பி சென்னை செல்ல வேண்டும்.
வலம்புரிஜான் ஒருபுலனாய்வு பத்திரிகை ஆரம்பித்தார்.நான் ஒரு கட்டுரை அனுப்பினேன்.வெகு காலம்பார்த்துவிட்டு அரசாங்கம் செய்யாமல் கிராம மக்களே பல கிலோமீட்டருக்கு சாலை அமைத்தசெய்தி அது.புகைப்படங்கள் இணைக்கவில்லை."இரண்டு நாட்களுக்குள்புகைப்படம் வேண்டும்.நேரில் எடுத்து வாருங்கள் பணம் தந்துவிடுகிறேன்" என்றுகடிதம் அனுப்பியிருந்தார்.
கடிதம் தபாலில்கிடைக்க தாமதமாகிவிட்ட்து.போட்டோ எடுக்கப் போகலாம் என்று கிளம்பியபோது இதழ்கடைகளில் விற்பனையில் இருந்த்து.நான் அனுப்பிய கட்டுரைக்கு படம் வரைந்து வெளியிட்டுவிட்டார்.கொஞ்சம்தாமதம் கூட கஷ்டம்.பேருந்துகளில் கொடுத்துவிட்டு போன் செய்துசொல்லவேண்டும்.இணையத்தில் செயல்படுகிற வசதி அப்போது இல்லை.
முக்கியமானஆட்களை செய்தி சம்பந்தமாக பார்க்கப் போனால் வீட்டுக்குள் இருந்தாலும் ஆள் இல்லைஎன்று சொல்வார்கள்.அலைச்சல் மட்டும் மிச்சமிருக்கும்.மழை,வெயில் எல்லாம் பார்க்கமுடியாது.நல்ல நாள் கெட்ட நாள் இல்லை.சம்பளமும் சொல்லிக்கொள்கிற மாதிரிஇல்லை.காட்டுக்கு போக வேண்டுமென்றாலும் போய்த்தான் ஆக வேண்டும்.
இன்னொரு விஷயம்தெரிந்த சங்கதிதான்.மிரட்டல்,வழக்கு,ஆட்டோ இதெல்லாம் சாதாரணம்.உச்சபட்சமாககொலைகளையும் தமிழ் பத்திரிகை உலகம் சந்தித்த நிகழ்வுகள் உண்டு.தராசு அலுவலகத்தில்நடந்த கொலைகள் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.சில நேரங்களில் ஒளிந்துவாழ்ந்தவர்கள் உண்டு.
புலனாய்வுபத்திரிகைகள் வெளிக்கொண்டுவந்த ஊழல்கள் அதிகம்.உண்மைகள் நிறைய! கிரிமினல்களைஅடையாளம் காட்டி நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்திருக்கின்றன.ஊழல்வாதிகள்,கிரிமினல்கள்கோபத்துக்கு ஆளானாலும் எத்தனையோ நன்மைகள் சமூகத்துக்கு கிடைக்கவே செய்தன.
comments | | Read More...

ரஜினி, கமல் புதிர்

 




இதே மாதிரி கெட்டப்பில் ரஜினி எந்த படத்தில் வருவார் ? கமல் எந்த படத்தில் வருவார் ?
comments | | Read More...

ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்

 
 
 
கம்ப்யூட்டர் உலகில் பல அரிய சாதனைகளைப் படைத்த ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ் (வயது56) மரணமடைந்தார். புற்று‌நோயால்அவதிப்பட்டு வந்த அவர் நியூயார்க் நகரில் மரணமடைந்தார். அறிவாளிகளும் சாதனையாளர்களும் நீண்ட காலம் உயிர் வாழ்வதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இவருடைய மரணம் அமைந்துள்ளது.
1980ல் இவரால் உருவாக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் இன்றைய நவீன கணினி தொழில்நுட்ப புரட்சியில் முக்கிய இடம் வகித்து வருகிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் இதை தனது 21வது வயதில் உருவாக்கினார். 1980ல் இவர் உருவாக்கி ஆப்பிள் கம்ப்யூட்டர் மிக வெற்றிகரமாக விளங்கியது. 2011ல் இதன் விற்பனை 4 லட்சத்தைத் தாண்டியது. இது ஒரு உலக சாதனையாகும்.
 
எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் கணினி தொழில் நுட்பத்தை மாற்றிய பெருமை இவருக்கே உரியது. சாதாரணமான கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக உருவாகிய ஆப்பிள் நிறுவனத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஐ பாடு மற்றும் ஐ டியூன்ஸ், ஐபோன் உருவாக்கியவர் இவரே. 2003ல் ஐ பாடு உருவாக்கபட்ட பிறகு இசை உலகில் ஒரு மாற்றமே ஏற்பட்டது. சுமார் 20 கோடி பேர் இதில் பதிவு செய்து ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட பாடல்களை பதிவிறக்கம் செய்து ரசித்து வருகின்றனர்.
 
புதிய வரலாற்றைப் படைத்தது: 2007ல் ஐ‌ போனை இவர் உருவாக்கினார். ஸ்மார்ட் போன் உருவாக இது ஒரு முன்னோடியாக விளங்கியது. 2011ல் உருவாக்கப்பட்ட ஐ டியூன்ஸ் சேவை மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டை ‌கையடக்க வடிவில் கொண்டு வரும் வகையில் இவர் உருவாக்கிய ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம், கணினி யுகத்தில் புதிய வரலாற்றைப் படைத்தது. கடந்த ஆண்டு வரை பிரபலமாக இருந்த டேப்லட் பிசி என்ற கம்ப்யூட்டரை, ஐ பேடு பின்னுக்குத் தள்ளி, 2010 இறுதியில் ஒன்றரை கோடி விற்பனையானது.
 
இவர் கடந்த ஆகஸ்ட் வரை அதன் ‌தலைவராகவும் இருந்தார். இவருடைய மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, பில்கேட்ஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
ஒபாமா: அமெரிக்காவில் புதிய படைப்புகளை உருவாக்கி உலகில் சாதனை படைத்தவர்களில் ஸ்டீவ் ஜாப்ஸூம் ஒருவர் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தை துவங்கி இந்த உலகிற்கு மகத்தான சேவை செய்து நம்‌மை விட்டு பிரிந்துவிட்டார். மனித வரலாற்றில் அரிய சாதனை ப‌டைத்துள்ளார். மிகவும் அசாதாரணமான ஒரு மனிதரை இந்த உலகம் இழந்துவிட்டது என்றார்
:
பில்கேட்ஸ் : ஸ்டீவ் ஜாப்ஸூடன் இணைந்து பணியாற்றி அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன், நவீன கணினி புரட்சியினை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸை, இந்த உலகம் இழந்துவிட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அ‌வரை முதன்முதலாக சந்தி‌த்தேன் அன்று முதல் இருவரும் நல்ல நண்பர்களாகினோம். ஒரு நல்ல நண்ப‌ரை இழந்துவிட்டேன். இவ்வாறு பில்கேட்ஸ் கூறினார்..
 
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்: கம்ப்யூட்டர் உலகில் புரட்சியை ஏற்படுத்தி,உலகையே மாற்றி அமைத்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அவரை இந்த கம்ப்யூட்டர் உலகம் இழந்துவிட்டது என சமூக இணையதளமான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கூறினார்.
 
அர்னால்டு இரங்கல்: கலிபோர்னியா மக்களின் கனவை நனவாக்கி தனது வாழ்நாளில் வாழ்ந்து காட்டினார்.கம்ப்யூட்டர் உலகின் முன்னோடி ஸ்டீவ் ஜாப்ஸ் என கலிபோர்னியா மாகாண கவர்னரும், பிரபல ஹாலிவுட் நடிகருமான அர்னால்டுஸ்வாஸ்னேக்கர் டுவீட்டர் இணையதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
 


comments | | Read More...

ரூ.200,குவார்ட்டர் போதும்:பிரசாரத்திற்கு நாங்க ரெடி!

 

கட்சி வேட்பாளர்கள்,சுயேச்சைகள் மக்களிடம் ஆதரவு பெறுவது,வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு, பதவி,பணம் என பல்வேறு அடிப்படையில் அமையும்.

இந்த நிலை மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடும். பணம் கொடுத்தால் தான் கூட்டத்தை கூட்ட முடியும் என்ற நிலை கடந்த தேர்தலிலேயே உறுதியாகி விட்டது.ஆகையால் தற்போது உள்ளாட்சி தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் கூட்டத்தை கூட்ட முடியவில்லையே… "ஆதரவு கேட்டு நமது அண்ணன் வர்றார்… வர்றார்' என கோஷமிட ஆள் இல்லையே என வருத்தப்பட வேண்டாம்.

இதையெல்லாம் செய்ய… கொடுக்க வேண்டியதை கொடுத்தா போதும், கட்சி எல்லாம் கிடையாது … யார் கூப்பிட்டாலும் கூப்பிட்ட கட்சிகளின் கொடியை தோளில் போட்டுக் கொண்டு கோஷம் எழுப்ப ஒரு கூட்டமே சிவகங்கையில் தற்போது உள்ளது.

வேட்புமனு தாக்கல், பிரசாரம் என அனைத்திற்கும் செல்வதே இவர்களின் வேலை. காலையில 10 மணிக்கு பிரசாரத்திற்கு செல்வதற்காக ரெடியா இருப்பாங்கா… எந்த கட்சி வந்து… ஆள் வேணும்ணு கேட்டாலும் இவர்கள் சென்று விடுவர்.காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தான் இவர்களுக்கு டூட்டி நேரம். பிரசாரத்தை முடிந்து கிளம்பும் போது கையில 200 ரூபாயும் குவார்ட்டரும் கொடுக்கணும். இது தான் இவர்களது ஒரே "கண்டிஷன்'.

இன்றைக்கு ஒரு கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் இவர்கள் அடுத்த நாள் வேறு ஒரு கட்சி வேட்பாளருடனும் பார்க்கலாம்.

(dm)


Filed under: Hot News Tagged: உள்ளாட்சித் தேர்தல் 2011, தமிழ்நாடு செய்திகள்
comments | | Read More...

மாம்பழச் சின்னத்திற்கு அலர்ஜி: பா.ம.க., புதுத் திட்டம்


உள்ளாட்சி தேர்தலில், வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில், பா.ம.க., வேட்பாளர்கள் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி, மாவட்ட மற்றும் ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மக்கள் அதிருப்தியைத் தவிர்க்க புதிய திட்டம் வகுத்துள்ளனர்.

வட மாவட்டங்களில் பா.ம.க., கோட்டை என அழைக்கப்பட்ட சேலம், தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில், புறநகர் பகுதியில், பா.ம.க., ஆதரவாளர்கள் அதிகமாக வசித்தாலும், நகரப்பகுதியில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க., சார்பில் தனித்துப் போட்டியிட, பல இடங்களில் வேட்பாளர்கள் தயங்கினர்.

வட மாவட்டங்களில், பா.ம.க., ஆதரவாளர்களை விட, பிற சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கும் பேரூராட்சி, ஒன்றியங்களில் பா.ம.க., சார்பில் மாம்பழ சின்னத்தில் போட்டியிட வேட்பாளர்கள் தயக்கம் காட்டினர். மாம்பழ சின்னத்தில் போட்டியிட்டால் ஓட்டு வாங்குவது கடினம் என, நிர்வாகிகள் பலர் தலைமைக்கு தெரிவித்துள்ளனர்.

எனவே, பிற சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பேரூராட்சி மற்றும் ஒன்றியத்தில், அவர்கள் ஓட்டுகளை கவர, பா.ம.க.,வினர் புது யுக்தியை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, பிற சமூகத்தினர் அதிகம் வசிக்கும் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி வார்டுகளில், அப்பகுதியில் மக்கள் செல்வாக்கு மிகுந்த வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து, பா.ம.க., நிர்வாகிகள் அவர்களை சுயேச்சையாக மனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர்.

சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும், பா.ம.க., ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பின், அவர்களை, பா.ம.க., ஆதரவாளர்கள் என வெளியுலகுக்கு தெரியப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
அதற்கேற்ப, உள்ளாட்சி தேர்தலில் பிற சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில், பா.ம.க., ஆதரவாளர்கள் பலர் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். பா.ம.க.,வின் இந்த புதிய யுக்தி வாக்காளர்களிடம் எடுபடுமா, வெற்றிக்கு கைகொடுக்குமா என்பது, தேர்தல் முடிவுக்குப் பின்பே தெரியவரும்.
(dm)


Filed under: Hot News Tagged: உள்ளாட்சித் தேர்தல் 2011, தமிழ்நாடு செய்திகள்
comments | | Read More...

குடிமகன்களுக்கு ஏற்ற சரக்கு இல்லை- திமுக

 
 
டாஸ்மாக் மதுக் கடைகளில் விற்பனை பெருமளவில் குறைய விற்பனையாளர்கள் காரணமல்ல. மாறாக, குடிமக்களுக்கு ஏற்ற சரக்குகளை விற்காமல், மது தயாரிக்கும் நிறுவனங்களின் சரக்குகளை மட்டுமே விற்பதால்தான் விற்பனை சரிந்துள்ளது என்று திமுக தொழிற்சங்கமான தொமுச பேரவை கூறியுள்ளது.
 
டாஸ்மாக் மதுக் கடைகளில் விற்பனை கிடுகிடுவென சரிந்துள்ளது. இதனால் தமிழக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. விற்பனை குறைய என்ன காரணம் என்பது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சரியாக விற்பனை செய்யாத விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இந்த நிலையில் தொமுச பேரவை தலைவர் செ.குப்புசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் விற்பனைக் குறைவுக்கு என்ன காரணம் என்பது குறித்து அவர் புது விளக்கம் அளித்துள்ளார். அந்த அறிக்கை:
 
தமிழக அரசால் நடத்தப்படும் மதுபான கடைகளில், 17 சதவீதம் அதிகரித்த மது விற்பனை 12 சதவீதமாக குறைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விற்பனை குறைவுக்கு காரணம், அரசின் இயலாமை தான்; தொழிலாளர்கள் அல்ல.
 
தமிழகத்தில் 7,434 சில்லரை விற்பனை நிலையங்கள் டாஸ்மாக் நிறுவனத்தால் 31 மாவட்டங்களில் செயல்படுகிறது. தேவையான சரக்குகள் மாவட்ட கிடங்குகள் மூலம் அனுப்பப்படுகிறது. தேவை அடிப்படையில் சரக்குகளை அனுப்பாமல் இருப்புக்கு ஏற்பவும், அரசை ஆட்டிப் படைக்கும் மொத்த வியாபாரிகள் நிர்ப்பந்தத்துக்கு ஏற்பவும் வினியோகம் செய்யப்படுகிறது.
 
பொது மக்கள் விரும்பும் சரக்குகளை அனுப்பாமல், இருப்பு அடிப்படையில் தேவையற்ற விற்பனை ஆகாத மது வகைகள் வினியோகம், வற்புறுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவது தான் விற்பனை குறைவுக்கு அடிப்படை காரணம் ஆகும். இதற்கு விற்பனையாளர்களோ, மேற்பார்வையாளர்களோ காரணம் அல்ல. முழுக்க முழுக்க அரசும் உயர்மட்ட அதிகாரிகளுமே காரணம் ஆகும்.
 
பார்களில் போலி சரக்கு விற்பனை கட்டுப்படுத்த, எந்தவித பாகுபாடும் இன்றி முறையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் குப்புசாமி.

 


comments | | Read More...

நான் காந்தியின் கால் தூசுக்குக் கூட தகுதி பெறாதவன்- அன்னா

 
 
என்னை யாரும் காந்தியுடன் ஒப்பிட வேண்டாம். அவரது காலடியில் அமரக் கூட தகுதி இல்லாதவன் நான். காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்ற மட்டுமே செய்கிறேன். அவருடன் என்னை ஒருபோதும் நான் இணைத்துப் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார் அன்னா ஹஸாரே.
 
அன்னா ஹஸாரே இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
 
என்னை காந்தியுடன் ஒப்பிடுவது நியாயமற்றது. நான் காந்தியடிகளின் காலடியில் அமரக் கூட தகுதி இல்லாதவன். அவரது கொள்கைகளை நான் பின்பற்ற முயற்சிக்கிறேன்.
 
நான் மிரட்டி காரியம் சாதிப்பதாக கூறுவதில் உண்மை. நான் யாரையும் பிளாகமெயில் செய்யவில்லை. நான் என்ன பணமா கேட்கிறேன். அவர்கள் அரசியல்சாசன சட்டத்தை மறந்து விட்டனர். 1950களில் இந்த நாட்டின் உரிமையாளர்களாக மக்கள் இருந்தனர். ஆனால் எல்லோராலும் நாடாளுமன்றத்திற்குள் போக முடியாது என்பதால் அரசியல்வாதிகளை எம்.பிக்களாக தேர்வு செய்து அனுப்பி வைத்தனர். நாட்டைப் பாதுகாப்பார்கள், நாட்டின் சொத்துக்களை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இதைச் செய்தோம். அப்படிப்பட்ட எம்.பிக்கள், நாட்டுக்கு உதவும் வகையிலான நல்ல சட்டங்களை இயற்றாமல் போனால் எப்படி? மக்களுக்குத் தேவையானதைச் செய்யுங்கள் என்று கூறினால் பிளாகமெயில் என்பதா. போராட்டம் நடத்துவது நிச்சயம் பிளாக்மெயில் ஆகாது.
 
நான் காலையில் 5 மணிக்கு எழுந்திருக்கிறேன். ஒன்றரை மணி நேரம் யோகாசனம், பிராணயாமா, தியானம் ஆகியவற்றை செய்கிறேன். எட்டரை மணிக்கு என்னைப் பார்க்க மக்கள் வருகிறார்கள். மாலை வரை இப்படியே ஓடி விடும். இடையில் கடிதம் எழுத நேரம் எடுத்துக் கொள்கிறேன். இரவு 10 மணிக்குத் தூங்கப் போகிறேன்.
 
நான் ரொட்டியும் காய்கறியும்தான் சாப்பிடுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பிடுவேன். காலையில் பால் சாப்பிடுவேன். மாலையில் ஜூஸ் ஏதாவது சாப்பிடுவேன்.
 
எனக்கென்று எந்த இலக்கும், கொள்கையும் இல்லை. சுயநலமற்ற வகையில் கடைசி வரை செயல்படவே விரும்புகிறேன்.
 
நான் பிரதமர் பதவிக்கெல்லாம் சற்றும் பொருந்த மாட்டேன். அரசியலில் புகும் ஆர்வமும் இல்லை. அது எனக்கு ஒத்துவராது.
 
எனது குழுவில் உள்ள சிலருக்குள் ஈகோ பிரச்சினை இருப்பது உண்மைதான். அவர்களை மாற்ற நான் முயற்சித்து வருகிறேன். இது சாதாரணமானதுதான். எங்களிடம் உள்ள இதே குறைகளைப் போல அரசிடமும் உள்ளது. கபில் சிபலும், .சிதம்பரத்தையும் உதாரணமாக கூறலாம். எல்லா இடங்களிலும் இது உள்ளதுதான். எனது குழுவில் உள்ள அனைவருமே நல்லவர்கள் என்பதுதான் முக்கியமாக பார்க்கப்பட வேண்டும். அவர்களிடம் உள்ள குறைகளை நான் களைந்து வருகிறேன். அவர்கள் மாறுவார்கள் என்றார் அன்னா.

 


comments | | Read More...

Fw: இன்னும் 5 ஆண்டுகளில் தாஜ் மஹால் இடியும் அபாயம்-ஆய்வாளர்கள்

 
 
 
 
 
நாசம் அடைந்து கொண்டிருக்கும் அடித்தளத்தை சீர்செய்யவில்லை என்றால் இன்னும் 5 ஆண்டுகளில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் இடிந்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
உலக அதிசயங்களில் ஒன்று காதல் சின்னமான தாஜ் மஹால். 358 ஆண்டுகளுக்கு முன்பு ஷாஜகான் தன் மனைவி மும்தாஜ் மஹால் நினைவாகக் கட்டிய பளிங்கு மாளிகை தான் தாஜ் மஹால். உத்தர பிரதேச மாநிலத்தி்ல் உள்ள ஆக்ராவில் யமுனா நதிக்கரையோரம் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைதியாகக் காட்சித் தரும் தாஜ் மஹாலைப் பார்க்க ஆண்டு ஒன்றுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் ஆக்ரா வருகின்றனர்.
 
தாஜ் மஹால் அமைந்திருக்கும் யமுனா நதி, நிறுவனக் கழிவுகளால் மாசுபட்டுள்ளது. இதனால் தாஜ் மஹாலின் அடித்தளம் அரிக்கப்பட்டு வருகிறது. இப்படியே விட்டுவிட்டால் அடித்தளம் முழுவதுமாக அரிக்கப்பட்டு தாஜ் மஹால் விழுந்துவிடும்.
 
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் 2 முதல் 5 ஆண்டுகளில் தாஜ்மஹால் இடிந்துவிடும் என்று ஆக்ரா எம்.பி. ராம்சங்கர் கதேரியா டெய்லி மெயிலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
கட்டிடக் கலையின் அதிசயமாகத் திகழும் தாஜ் மஹால் ஏற்கனவே பொலிவிழந்து வருகிறது. யமுனா நதியில் தண்ணீர் இல்லாததால் மரத்தால் ஆன அடித்தளம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக அதன் அடித்தளத்தைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. அடித்தளம் நன்றாக இருக்கின்றது என்றால் எதை மறைக்கிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
இது குறித்து பேராசிரியர் ராம் நாத் கூறுகையில், தாஜ் மஹால் யமுனா நதியின் கரையோரம் அமைந்துள்ளது. ஆனால் தற்போது யமுனா நதி வற்றிவிட்டது. இதை தாஜ் மஹாலைக் கட்டியவர்கள் எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்கள். யமுனா இல்லை என்றால் தாஜ் மஹாலும் இல்லை என்றார்.

 


comments | | Read More...

வடிவேலு இல்ல... - மறுக்கும் சுந்தர் சி

 
 
அப்பாடா... ஒரு வழியா வந்துட்டார்யா வைகைப் புயல் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், 'என் படத்தில் வடிவேலுவா.... இல்லவே இல்லை,' என்று மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் சுந்தர் சி.
 
கடந்த சட்டமன்ற தேர்தலில் வடிவேல் தி.மு..வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். விஜயகாந்தை காய்ச்சி எடுத்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் அதிமுகவை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகிவிட்டார்.
 
அவரை யாரும் புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்யக் கூடாது என வாய்மொழி உத்தரவு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் வடிவேலுவோ நானாகத்தான் சினிமாவை ஒதுக்கி வைத்துள்ளேன் என்று கூறிவந்தார். எனவே வடிவேலு மீண்டும் நடிப்பாரா? என சினிமா ரசிகர்களின் மனதில் தொடர்ந்து கேள்வி எழுந்து வந்தது. வடிவேலு இல்லாத தமிழ் படங்கள் படு வறட்சியாகவே காணப்படுகின்றன.
 
இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை வடிவேலு ஆரம்பித்துவிட்டார் என்றும் சுந்தர்.சி இயக்கும் படத்தில் வடிவேலு நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் பரவின.
 
ஆனால் இதனை மறுத்துள்ளார் சுந்தர் சி. இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு நடிப்பதாக வெளிவந்த செய்திகள் தவறானவை. எதுவுமே இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அனைத்துமே வதந்திதான்," என்று கூறியுள்ளார்.
 
 


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger