News Update :
Powered by Blogger.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு: தாம்பரத்தில் ரெயில் மறியல் பள்ளி மாணவர்கள் கைது commonwealth conference india participate oppose tambaram train siege student arrested

Penulis : Tamil on Monday 4 November 2013 | 02:38

Monday 4 November 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு: தாம்பரத்தில் ரெயில் மறியல் பள்ளி மாணவர்கள் கைது commonwealth conference india participate oppose tambaram train siege student arrested

சென்னை, நவ 4–

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்ற எதிர்ப்பு வலுத்து வருகிறது. தாங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் கூட்டமைப்பினர் சேப்பாக்கத்தில் இருந்து பிரசாரம் செய்தபடி தஞ்சை செல்ல முடிவு செய்தனர். இதனை நடிகர் சத்யராஜ் தொடங்கி வைப்பதாக இருந்தது.

இதற்காக சேப்பாக்கத்தில் மாணவர் கூட்டமைப்பினர் கார்த்திக் தலைமையில் திரண்டனர். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 14 பேரை கைது செய்தனர்.

இதில் பங்கேற்ற ராஜீவ் கொலை குற்றவாளி பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளும் கைது செய்யப்பட்டார்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் பல்லாவரம் மறைமலை அடிகள் பள்ளி மாணவர்கள் 30 பேர் தாம்பரம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அவர்களை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரில் விடுதலைப் புலிகளின் ஊடகப்பிரிவு நிகழ்ச்சி தொகுப்பாளர் இசைப்பிரியா மிக கொடூரமான முறையில் பாலியல் சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொடூர காட்சியை சேனல்–4 தொலைக்காட்சி வெளியிட்டது. இது அனைத்து தரப்பினரிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தமிழக முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் அடையாறில் இன்று திடீர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

ஆனாலும் தடையை மீறி தென்சென்னை மாவட்ட தலைவர் வேல்ராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கட்சி நிர்வாகிகள் குமார், பழனி உள்பட 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

...

shared via

comments | | Read More...

காங்கிரஸ் எம்.பி. மன்னிப்பு கேட்டதால் செக்ஸ் புகாரை திரும்பப் பெற்றார் நடிகை சுவேதா மேனன் Swetha Menon withdraws molestation complaint

Penulis : Tamil on Sunday 3 November 2013 | 16:33

Sunday 3 November 2013

காங்கிரஸ் எம்.பி. மன்னிப்பு கேட்டதால் செக்ஸ் புகாரை திரும்பப் பெற்றார் நடிகை சுவேதா மேனன் Swetha Menon withdraws molestation complaint

திருவனந்தபுரம், நவ.4-

நடிகை சுவேதா மேனன், கேரள மாநிலம் கொல்லம் தொகுதி எம்.பி. பீதாம்பர குரூப் மீது செக்ஸ் புகார் கூறினார். இதனைத்தொடர்ந்து கொல்லம் போலீசார் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழில் அரவான் மற்றும் ஏராளமான மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளவர் நடிகை சுவேதா மேனன். சமீபத்தில் இவர் தனது பிரசவத்தை மலையாள படம் ஒன்றுக்காக நேரடியாக படமாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கொல்லத்தில் நடந்த ஒரு படகு விழாவின் போது கொல்லம் தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான பீதாம்பர குரூப்(71) தன்னிடம் அத்துமீறி செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சுவேதா மேனன் பரபரப்பு புகார் கூறினார்.

இதுபற்றி சுவேதா மேனன் கூறுகையில், விழாவில் கலந்து கொண்ட என்னிடம் காங்கிரஸ் மூத்த அரசியல்வாதி அத்துமீறி நடந்து கொண்டார். என்னை தொட்டு தொட்டு பேசினார். அதை நான் தவிர்க்க முயன்றபோதும் தொடர்ந்து என்னை துன்புறுத்தி என் நிம்மதியை கெடுத்து விட்டார் என்றார்.

மேலும் தனக்கு செக்ஸ் சில்மிஷம் செய்த அரசியல்வாதி பற்றி தான் கொல்லம் கலெக்டரிடம் புகார் தெரிவித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காதது தனக்கு வேதனை அளிப்பதாகவும் சுவேதா மேனன் கூறினார். நடிகை சுவேதா மேனனுக்கு நடந்த செக்ஸ் டார்ச்சர் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு ஆதரவாக மலையாள திரைப்பட துறையினரும் பெண்கள் அமைப்பினரும் போர்க்கொடி உயர்த்தினார்.

இதனைத்தொடர்ந்து நடிகை சுவேதா மேனனின் செக்ஸ் புகார் முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அவர் கொல்லம் உயர்அதிகாரிகளுக்கு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, கொல்லம் எம்.பி. பீதாம்பர குரூப் மீது கொல்லம் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், நடந்த சம்பவத்துக்கு பீதாம்பர குரூப் தன்னிடம் தனிப்பட்ட முறையிலும், பகிரங்கமாகவும் மன்னிப்பு கேட்டதால் போலீசாரிடம் அளித்த புகாரை திரும்ப பெற்றுக் கொண்டதாக சுவேதா மேனன் இ-மெயில் மூலம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்த முடிவு எனது குரு, தந்தை மற்றும் கணவர் ஆகியோருடன் கலந்தாலோசித்த பின்னர் எடுக்கப்பட்டது. எனது மனமாற்றத்தின் பின்னணியில் வேறெந்த நிர்பந்தமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

...

shared via

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger