News Update :
Powered by Blogger.

விளம்பரப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி

Penulis : karthik on Sunday 6 November 2011 | 23:31

Sunday 6 November 2011

 
 
 
குழந்தைகள் சத்துக் குறைபாடு தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் விளம்பரப் படத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
 
இந்தியா முழுவதும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நோய்களிலும் அவர்கள் சிக்கியுள்ளார்கள். எனவே மக்கள் மத்தியில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசின் சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
 
இதற்காக விளம்பரபடங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த விளம்பரப் படத்தில் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் நடித்தால் சரியாக இருக்கும் என்று கருதி சூப்பர் ஸ்டார் ரஜினியை அணுகினர். விஷயத்தைக் கேட்டதும் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார் ரஜினி.
 
இந்தப் படம் தொடர்பான ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
மேலும் இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடவும் ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்துள்ளார். ரஜினியுடன் அமீர்கானும் இந்த விளம்பரம் மற்றும் பிரச்சாரத்தில் பங்கேற்கிறார்.
 
வரும் நாட்களில் நாடு முழுவதும் ரஜினி, அமீர்கான் உருவப் படங்களுடன் ஊட்டச்சத்து விழிப்புணர்வு விளம்பர பேனர்கள் வைக்கப்பட உள்ளன.
 
இது சம்பந்தமாக பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் கருத்தரங்குகள் பிரசாரக் கூட்டங்களிலும் இருவரும் பங்கேற்றுப் பேச உள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
 
கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் வணிக விளம்பரங்களில் நடிக்காதவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. ஆனால் சமூக நலனுக்காக ஏற்கனவே போலியோ தடுப்பு விழிப்புணர்வு பிரசார விளம்பர படத்தில் நடித்தார். அந்தப் படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
உடல் நலம் பெற்று புதுப்பிறவி எடுத்து வந்துள்ள ரஜினி, பெரிய அளவில் சமூகப் பணிகளில் இறங்கத் திட்டமிட்டுள்ளதாக பேசப்பட்டு வருகிறது. அதன் முதல் கட்டமாக குழந்தைகள் நலன் தொடர்பான இந்த விளம்பரம் மற்றும் பிரச்சாரத்தில் இறங்குகிறார் என்று ரஜினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



comments | | Read More...

ஸ்ரேயாவின் கார் மீது கற்களை வீசித் தாக்குதல்

 
 
 
ஜெய் தெலுங்கானா என்று கோஷம் போட மறுத்ததால் தன் காரை தெலுங்கானா ஆதரவாளர்கள் கல்வீசித் தாக்கியதாக ஸ்ரேயா குற்றம்சாட்டியுள்ளார்.
 
அல்லரி நரேஷுடன் புதிய தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. ஹைதராபாத்தில் உள்ள ரங்கா பல்கலைக்கழகத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.
 
அப்போது அங்கு வந்த தெலுங்கானா ஆதரவாளர்கள் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்று கூச்சலிட்டனர். தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றால், 'ஜெய் தெலுங்கானா' என்று முழக்கம் இட வேண்டும் என்று மிரட்டினர்.
 
இதற்கு ஸ்ரேயா மறுத்துவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த தெலுங்கானா ஆதரவாளர்கள் ஸ்ரேயாவின் கார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
 
இந்த தாக்குதலில் ஸ்ரேயாவின் கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
 
இது குறித்து ஸ்ரேயா கூறுகையில், "போராட்டக்காரர்கள் என்னிடம் நடந்துகொண்டது எந்தவிதத்தில் நியாயம்? ஜெய் தெலுங்கானா என்று கூறச்சொல்கிறார்கள். கற்களை வீசி தாக்குகிறார்கள்.
 
ஆனால் இந்த சம்பவங்களை போலீசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். சுதந்திர நாட்டில் இதுதான் பாதுகாப்பா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



comments | | Read More...

எனது தந்தை பற்றி கூறுவதை பொறுத்துக் கொள்ள முடியாது: ராம்தேவ் மீது திக்விஜய் சிங் பாய்ச்சல்

 
 
 
ஊழலுக்கு எதிராக போராடும் பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே, ரவிசங்கர் பிரசாத் போன்றவர்கள் மீது காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் அடுத்தடுத்து மலிவான புகார்களை கூறி வருகிறார்.
 
இதனால் ஆத்திரமடைந்த பாபா ராம்தேவ், "இது போன்ற பேய்களின் மகன்கள் பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. பழங்கால இந்திய முனிவர்கள் பற்றி அறியாத ராட்சன் மகன். அவர் ஒரு முட்டாள்'' என கூறினார்.
 
இதற்கு திக்விஜய் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று அவர் கூறுகையில்,
 
"இது, அதிகப்பட்ச அவதூறு. என் மீது அவர் எந்த குற்றச்சாட்டுகளை வேண்டுமானாலும் கூறட்டும். ஆனால், எனது தந்தை பற்றி அவர் கூறுவது மிகவும் கண்டனத்துக்குரியது. அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது'' என்றார்.



comments | | Read More...

காரைக்குடியில் ஆர்யாவுடன் அமலாபால்

 
 
 
வேட்டை படத்தின் சூட்டிங் காரைக்குடியில் நடந்து வருகிறது. நாயகன் ஆர்யாவும், நாயகி அமலாபாலும் காரைக்குடியில் முகாமிட்டு சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்கள். `பையா படத்தை தயாரித்து, இயக்கிய டைரக்டர் லிங்குசாமி அடுத்து, `வேட்டை என்ற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். ஆர்யா, மாதவன், சமீராரெட்டி, அமலாபால் நடிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட சூட்டிங் காரைக்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரபட்டினம், மணப்பாடு ஆகிய இடங்களில் நடந்தது. இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் காரைக்குடியில் படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். ஆர்யா - அமலா பால் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டு வருகிறது.



comments | | Read More...

பில்லா-2 - பனிப்புயல் !

 
 
 
அஜீத், பார்வதி ஒமணக்குட்டன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'பில்லா 2' . சக்ரி இயக்க, யுவன்சங்கர்ராஜா இசையமைத்து வருகிறார்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 23 நாட்களாக கோவாவில் நடைபெற்று வந்தது. கோவாவில் நடைபெற்ற இறுதி நாள் படப்பிடிப்பு அன்று நாயகி பார்வதி ஒமணக்குட்டன் பெரிய கேக் ஒன்றை கொண்டுவந்து படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தினாராம்.
 
அஜீத்தை கேக் வெட்ட சொல்ல, அஜீத்தோ 'நான் எதற்கு இயக்குனர் சக்ரி தான் இப்படத்தின் நாயகன்' என்று கூற, இயக்குனர் கேக் வெட்டி இருக்கிறார்.
 
அஜீத் கேக்கை அனைத்து படக்குழுவினருக்கும் கொடுக்க, படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பி இருக்கிறார்கள்.
 
'பில்லா 2' படத்திற்காக பனிப்புயல் காட்சி ஒன்றை எடுக்க தீர்மானித்து இருக்கிறாராம் சக்ரி. அஜீத் மற்றும் வில்லன்கள் மோதும் காட்சியையும் பனி படர்ந்த மழைகளில் எடுக்க தீர்மானித்து இருக்கிறாராம்.
 
3ம் கட்ட படப்பிடிப்பு தெற்கு ஐரோப்பாவில் உள்ள Georgia என்ற இடத்தில் நடைபெற உள்ளது



comments | | Read More...

நயன்தாராவுடன் சேர்ந்து கொண்ட பிரபுதேவாவின் அப்பா; திண்டாட்டத்தில் பிரபுதேவா

 
 
 
எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. விரைவில் திருமண தேதியை அறிவிப்போம் என்று நயன்தாரா கொடுத்த அறிக்கை, இன்னும் அறிக்கை லெவலிலேயே இருக்கிறது. அடுத்த ஸ்டெப்பை பற்றி யோசிக்கவே இல்லை மாஸ்டர்.
 
ஆனால் அடுத்தடுத்த அம்புகளால் மனம் நோக வைக்கிறார்களாம் இவரை. எப்படி? இதுவரை நயன்தாராதான் பிரபுதேவாவுக்கு கடிவாளம் போட்டு வந்தார். என்னை கேட்காமல் மட்டுமல்ல, கேட்டு கூட பழைய வீட்டு பக்கம் போகக் கூடாது என்று கட்டளை போடுகிறார் அவர். ஆனால் நயன்தாராவுடன் சேர்ந்து கொண்டு பிரபுதேவாவின் அப்பாவும் வார்த்தைகளை வீச, நிலைகுலைந்து போயிருக்கிறாராம் மாஸ்டர்.
 
வெட்டி விட்டாச்சு. அப்புறம் எதுக்கு அந்த வீட்டு சகவாசம்? இனிமேலாவது புது வாழ்க்கையை பற்றி யோசி என்கிறாராம் மகனிடம். கண்ணுக்கு தெரியாத கம்பி வலையாக சுற்றிக் கொண்டிருக்கிறது பழைய பாசம். அவ்வளவு சீக்கிரம் அறுத்தெறிய முடியுமா என்ன?
 
சமையல் குறிப்பை படித்தே பசியாறுவது போலதான் சட்டத்தை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துவதும்!



comments | | Read More...

விடுதலைப்புலி போலவே என்னை நடத்தினர் : அமெரிக்காவில் இருந்து திரும்பிய சீமான் பேட்டி

 
 
 
அமெரிக்காவுக்குள் நுழைய எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது தமிழர் விரோத செயலாகும். மத்திய அரசின் தலையீட்டால்தான் என்னை அமெரிக்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். என்னை விடுதலைப் புலி போலவே அவர்கள் நடத்தினர் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் தலைவர் சீமான்.
 
நியூயார்க்கில் நடைபெறும் உலகத் தமிழர் பேரமைப்பின் மாநாட்டில் பங்கேற்க சீமான் அங்கு சென்றார். ஆனால் அவரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய அதிகாரிகள் உள்ளே நுழைய விடாமல் திருப்பி அனுப்பி விட்டனர்.
 
நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர், விடுதலைப் புலிகளுக்காகவே நீங்கள் கட்சி ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உங்களது விசாவும் முடிந்து விட்டது. எனவே உள்ளே அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் சீமானிடம் கூறினராம். இதனால் அதிர்ச்சி அடைந்த சீமான், அனைத்து அனுமதிகளையும் முறையாகப் பெற்றும் ஏன் என்னை அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு உரிய காரணத்தை அமெரிக்க அதிகாரிகள் கூறவில்லை. மாறாக திருப்பி அனுப்புவதிலேயே குறியாக இருந்துள்ளனர். இதையடுத்து சீமான் சென்னை திரும்பினார்.
 
நேற்று நள்ளிரவு சென்னை திரும்பிய சீமானை நூற்றுக்கணக்கான தொண்டர்கள், கட்சிகள் கொடிகளுடன் திரண்டு வந்து வரவேற்றனர். பின்னர் சீ்மான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
 
விசா உள்ளிட்ட உரிய பயண சீட்டுகளுடன் அமெரிக்காவுக்கு சென்ற என்னை அங்குள்ள விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்பதாலேயே எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் தூண்டுதலே காரணம்.
 
அமெரிக்க விமான நிலையத்தில் அதிகாரிகள் கேட்ட கேள்விகள் என்னை அதிர்ச்சி அடையச் செய்தது. விடுதலைப்புலி போலவே அவர்கள் என்னை நடத்தினர்.
 
உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் சென்னை விமான நிலையத்தில் இறங்குவதற்கு இங்குள்ள அதிகாரிகள் அனுமதி மறுத்ததுபோல, அமெரிக்காவில் எனக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இது தமிழர் விரோத செயலாகும் என்றார்.
 
மத்திய அரசுக்கு இதில் பொறுப்புண்டு என்று குற்றம் சாட்டிய சீமான் மத்திய அரசின் வெளியுறவது்துறையையும் கண்டித்தா




comments | | Read More...

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த ஆபத்தும் இல்லை: அப்துல்கலாம் பேட்டி

 
 
 
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுஉலை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 வித பாதுகாப்பு அம்சங்கள் உயர் தரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மின்சாரம் தடைபட்டால் அணு உலைகளை குளிர் விக்க தெர்மோசெட் மூலம் நீரை செலுத்தும் முறை பயன்படுத்தப்படுகிறது. எரிபொருள் சூடு அதிகமாக இருந்தால் அதை குளிர்விக்க ரேடியேசன் சேப்டி செய்யப்பட்டுள்ளது. கோர் உருகும் போது கதிர்வீச்சு ஏற்படாமல் இருக்க கோர் கேச்சர் பயன்படுத்தப்படுகிறது.
 
மொத்தத்தில் கதிர்வீச்சு வெளிவராமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த ஆபத்தும் இல்லை என எனக்கு நம்பிக்கை உள்ளது.
 
இவ்வாறு அப்துல் கலாம் கூறினார்.ர்.



comments | | Read More...

ஆஸ்கர் விருதுக்கு 18 அனிமேஷன் படங்கள் பரிந்துரை!

 
 
 
84வது ஆஸ்கர் விருதுக்கு "தி அட்வென்சர் டின்டின்", "குங்குபூ பாண்டா 2" உள்ளிட்ட 18 அனிமேஷன் படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. சினிமாவில் மிக உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் இருந்து பல்வேறு மொழி படங்கள், இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்படும். அ‌தேபோல் இந்தாண்டும், 2012ம் ஆண்டு பிப்.,26ம் தேதி நடக்க இருக்கும் 84வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை இப்போதே ஆரம்பமாகிவிட்டன. முதற்கட்டமாக அனிமேஷன் படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
 
இதில் ஸ்டீவன் ஸ்பெல்பர்க்கின் தி அட்வென்சர் டின்டின், குங்குபூ பாண்டா 2, ரியோ அண்ட் ரேங்கோ, புஷ் இன் பூட்ஸ், கார்ஸ்-2, ஹப்பி பீட் உள்ளிட்ட 18 படங்கள் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில் எந்த படம் ஆஸ்கர் விருது வாங்கபோகிறது என்பது 2012ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி தான் தெரியும்.



comments | | Read More...

அவார்டுக்கு அனுப்ப போறோம் !

 
 
 
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க 'வழக்கு எண் 18/9' என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலாஜி சக்திவேல். முழுக்க முழுக்க ஸ்டில் கேமரா மூலம் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து இருக்கிறார்கள். இயக்குனர் லிங்குசாமியின் 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.
 
இப்படத்தின் புகைப்படங்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவற்றை பார்த்தவர்கள் " பாலாஜி சக்திவேல் ஒரு வித்தியாசமான முயற்சி செய்து இருக்கிறார் " என்று பாராட்டி வருகிறார்கள்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. யு.டிவி நிறுவனம் இப்படத்தினை வெளியிட முடிவு செய்துள்ளது.
 
இந்நிலையில், 'வழக்கு எண் 18/9' படத்திற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட 'வேட்டை' திரைப்படம் டிசம்பர் 23ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
'வழக்கு எண் 18/9' வெளியீடு ஏன் தாமதமாகிறது என்று விசாரித்தால் " வழக்கு எண் 18/9 படத்தினை திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப தீர்மானித்து இருக்கிறோம். இதனால் படத்திற்கு ஆங்கில சப்-டைட்டில் போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அப்பணி முடிவடைந்த உடன் அனைத்து திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப இருக்கிறோம். அனைத்து விழாக்களிலும் இப்படம் விருது பெறும் " என்கிறது படக்குழு.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger