News Update :
Powered by Blogger.

மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது

Penulis : karthik on Wednesday 4 July 2012 | 23:00

Wednesday 4 July 2012

மருத்துவ படிப்பு தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவக்கல்லூரிகளும், 13 தனியார் மருத்துவக்கல்லூரிகளும் உள்ளன. அரசு மருத்துவக்கல்லூரிகளில் 1,653 இடங்கள் ஏற்கனவே உள்ளன. செ� �்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் ஏற்கனவே எம்.பி.பி.எஸ். இடங்கள் 50 மட்டுமே உள்ளன. 

இந்த ஆண்டு மேலும் 50 இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. அதாவது 100 இடங்களாக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக சிவங்கை அரசு மருத்துவக்கல்லூரிக்கு 100 இடங்களுக்கும், கீழ்ப்ப ாக்கம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்களுக்கும் அனுமதி கிடைத்துள்ளது. 

மொத்தத்தில் 200 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 2145 இடங்கள் ஆகும். இதில் அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம். மீதம் உள்ள இடங்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும். எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். பட ிப்பில் சேர பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் 28 ஆயிரத்து 275 பேர் விண்ணப்பித்தனர். 

அவர்களுக்கு ரேண்டம் நம்பர் மற்றும் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று கவுன்சிலிங் ரேங்க் அடிப்படையில் இன்று (வியாழக்கிழமை) சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி கலை அரங்கில் கவுன்சிலிங் தொடங்குகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

பொது கவுன்சிலிங் காலை 11 மணிக்கு தொடங்குகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் கலந்துகொண்டு கவுன்சிலிங்கை தொடங்கிவைக்கிறார். சுகாதாரத்துறை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முன்னில� �யில் நடக்கிறது. கவுன்சிலிங் ஏற்பாடுகளை மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் செய்து உள்ளார்




comments | | Read More...

ஹிக்ஸ் போஸான்.. 'கடவுளை' 99.999% கண்டுபிடித்து விட்டார்கள்!(video)



அணுவுக்கு நிறையைத் தரக்கூடியதாகக் கருதப்படும் கண்ணுக்குத் தட்டுப்படாத ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) எனப்படும் நுண் துகள் உண்மையிலேயே இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகியுள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் இன்று (புதன்கிழமை) முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளனர். இந்த அறிவிப்புக்காக உலகமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.

13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததாகக் கூறப்படும் Big Bang பெரு வெடிப்பின்போது உருவான துகள்கள், வாயுக்களை கிரகங்களாக, நட்சத்திரங்களாக, வான்வெளி மண்டலங்களாக மாற்றியதில் முக்கிய பங்கு வகிக்கும் துகளாகக் கருதப்படுவது ஹிக்ஸ் ப� �ஸான்.

ஹிக்ஸ் போஸான் என்பது எல்லா அணுக்களுக்குள்ளும் இருப்பதாகக் கருதப்படும் ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள். ஆனால், அதை யாரும் பார்த்தும் இல்லை, அது இருப்பதாக நிரூபித்ததும் இல்லை.

ஆனால், இந்த துணைத் துகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் இந்த பிரபஞ்சம் உருவானது தொடர்பாக சொல்லப்படும் தியரிகள் முழுமை பெறுவதும் இல்லை. கிட்டத்தட்ட பிளாக் ஹோல், டார்க் மேட்டர் மாதிரி இது தியரியிலேயே இருக்கிறது.

இப்படி கண்ணுக்குப் புலப்படாத இந்த அதிசயத்தைத் தான் விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். இந்தத் துகள் இருப்பதாக முதலில் சொன்னவரான ஒருவரான (பீட்டர்) ஹிக்ஸ்சின் பெயரையே அதற்கு வைத்துவிட்டார்கள்.

கூடவே போஸான் என்ற பெயரும் இருக்கிறதே. அது நம் நாட்டைச் சேர்ந்த மாபெரும் இயற்பியல் வல்லுனர் சத்யேந்திர நாத் போஸின் பெயரிலிருந்து வந்தது. அதாவது சப் அடாமிக் பார்ட்டிகிள் எனப்படும் அணுவில் உள்ள துணைத் துகள்களில் 2 வகை உண்டு. ஒன்று நமது போஸ் மற்றும் ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளுக்குள் அடங்கும் துகள்கள். அ� ��ற்றுக்குப் பெயர் தான் 'போஸான்'.

(இந்த கோட்பாடுகளுக்குள் அடங்காத துகள்களுக்கு பெர்மியான் (fermions) என்று பெயர். அதைப் பற்றி சமயம் வரும்போது பார்ப்போம். இப்போ வேணாம்!).

இவ்வாறு போஸான் கோட்பாடுகளுக்கு, விதிகளுக்கு உட்பட்ட துணைத் துகள்களில் முக்கியமானவை photons, gluons மற்றும் ஹிக்ஸ் போஸான் ஆகியவை. இதில் போட்டான், குளுயான்கள் இருப்பதை நிரூபித்தாகிவிட்டது. ஆனால், ஹிக்ஸ் போஸான் இன்னும் விஞ்ஞானிகளுக்கு 'விக்கல்' தந்து கொண்டே இருக்கும் ஒரு ரகசியமாகவே உள்ளது.

இந் நிலையில் தான் இதைக் கண்டுப்பிடித்தே தீருவது என்ற முடிவில் களத்தில் குதித்தனர் உலக விஞ்ஞானிகள். பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்கத்தில் இந்த சோதனை நடந்து வருகிறது.

சோதனை என்றால் நாம் சினிமாக்களில் பார்ப்பது மாதிரி ஒரு டெஸ்ட் டியூபில் 2,3 கலர் கலர் திரவங்களைக் கலந்துவிட்டு அதே வேக வைத்து, வடிகட்டி.. ரசம் தயார் செய்வது மாதிரியான சமாச்சாரமல்ல இது.

பூமிக்கு அடியில் சுமார் 27 கி.மீ. வட்டப் பாதைக்குள் (Large Hadron Collider-LHC) புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் ஒளியின் வேகத்தில் பயங்கரமாக மோதவிட்டு அலற வைக்கும் அடாவடியான விஷயம் இது.

1,800 'சூப்பர் கண்டக்டிங்' காந்தங்களின் உதவியோடு வினாடிக்கு 600 மில்லியன் முறை புரோட்டான்- நியூட்ரான் கதிர்கள் எதிரெதிர் திசையில் நேருக்கு நேர் மோதி அவை குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், போட்டான், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என சிதறின.

கூடவே புரோட்டான்களுக்குள் இருந்த ஹிக்ஸ் போஸானும் எட்டிப் பார்த்ததாக சொல்கிறார்கள். அதைத் தான் வரும் புதன்கிழமை விஞ்ஞானிகள் சொல்லப் போகிறார்களாம்.

2008ம் ஆண்டு செப்டம்பரிலேயே இந்த சோதனைகளுக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. விஞ்ஞானிகள் 2 குழுக்களாகப் பிரிந்து இந்த சோதனையை நடத்தினர்.

ஒரு குழுவுக்கு 'அட்லஸ்' (A Toroidal LHC Apparatus) என்று பெயர். இன்னொரு குழுவுக்கு 'சிஎம்எஸ்' (Compact Muon Solenoid) என்று பெயர். ஒரு குழுவுக்குக் கிடைக்கும் ரிசல்டை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவே இந்த இரு குழுவினரும் தனித்தனியே இந்த சோதனைகளை நடத்தினர்.

2008ம் ஆண்டிலேயே ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கினாலும் உண்மையான சோதனைகள் ஆரம்பித்தது 2010ம் ஆண்டு மார்ச் இறுதியில் தான். ஆனால், சோதனைகள் நடக்க ஆரம்பித்தவுடனேயே ஆராய்ச்சிகளுக்கும் 'சோதனை' வந்துவிட்டது.

ஆராய்ச்சிகள் நடக்கும் சுரங்கத்தில் குளிர்விப்பான்கள் செயல்படுவது பாதிக்கப்பட்டதால், அதை சரி செய்து சோதனைகளை ஆரம்பிக்க மேலும் ஓராண்டு தாமதம் ஆகிவிட்டது. குளிர்விப்பான்களை ரிப்பேர் செய்ய ஒரு வருஷமா என்று கேட்கலாம்.

LHCயின் உள் வெப்பநிலை -271.3°C. ஹீலியம் வாயு உதவியோடு கிரையோஜெனிக் சிஸ்டத்தை பயன்படுத்தி இந்த குளிர்ச்சியை ஏற்படுத்தப்பட்டது.

காரணம், புரோட்டான்கள் மோதும்போது சூரியனின் வெப்பத்தை விட 100000 மடங்கு வெப்பம் உருவாகும். அதை குளிர்விக்கவே இத்தனை ஜாக்கிரதை. இவ்வளவு டெக்னிகலான விஷயத்தில் ரிப்பேர் வந்தால் சரி செய்ய ஒரு வருடம் ஆகாதா!.

எப்படியோ இந்த ஆராய்ச்சி மூலமாக ஹிக்ஸ் போஸானை விஞ்ஞானிகள் பார்த்துவிட்டார்கள் என்பது தான் இப்போதைய லேட்டஸ்ட் அறிவியல் கிசுகிசு.



இன்று இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளனர் CERN விஞ்ஞானிகள்.










comments | | Read More...

ராஜினாமா கடித மோசடி புகார்: பிரணாப் முகர்ஜி விளக்கம்


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி, இந்திய புள்ளியியல் நிறுவன தலைவர் என்ற ஆதாயம் தரும் பதவியை வகித்து வருவதாக பி.ஏ.சங்மா தரப்பு சர்ச்சையை எழுப்பியது. ஆனால், ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே, பிரணாப் முகர்ஜி அப்பதவியை ராஜினாமா செய்து விட்டதாக விளக்கம் அளி� ��்கப்பட்டதால், அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த ராஜினாமா கடிதமே மோசடியாக தயாரிக்கப்பட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, கோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு திரட்டுவதற்காக பிரணாப் முகர்ஜி நேற்று கேரளா சென்றார். அங்கு எதிர்க்கட்சிகளின் க� ��ற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, பிரணாப் முகர்ஜி கூறியதாவது:- 

என் கையெழுத்தை யார் மோசடி செய்தது? நானே மோசடி செய்தேனா? ஒருவர் கையெழுத்தை மற்றொருவர் மோசடியாக போடலாம். ஆனால், தனது கையெழுத்தையே ஒருவர் எப்படி மோசடி செய்ய முடியும்? இந்த பிரச்சினை குறித்து தேர்தல் அதிகாரி ஏற்கனவே ஆய்வு செய்துள்ளார். எனவே, இதற்கெல்லாம் பதில் சொல்வதற்கு தே� ��்தல் அதிகாரிதான் சரியான நபர். நான் அல்ல. 

இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார். 

மேலும், எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியும் நிராகரித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறியதாவது: 

இந்திய புள்ளியியல் நிறுவன தலைவர் பதவியில் பிரணாப் முகர்ஜி நீடிப்பதாக சர்ச்சை எழுப்புவது சரியல்ல. நிதி மந்திரி பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பே அப்பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார். 

மேலும், தேர்தல் அதிகாரியும் அவரது வேட்புமனுவை ஏற்றுக்கொண்டு விட்டதால், இந்த பிரச்சினை தீர்ந்து விட்டது. தேர்தலில் வெற்றிபெற முடியாததால், பா.ஜனதா இத்தகைய தந்திரத்தில் ஈடுபடுகிற� ��ு. ஜனாதிபதி பதவியின் கவுரவத்தை மனதில் கொண்டு, இத்தகைய தந்திரங்களில் ஈடுபடுவதை அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger