News Update :
Powered by Blogger.

அழியப் போகிறது ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பேசும் அழகிய ஆலயம்!

Penulis : karthik on Thursday 3 November 2011 | 10:40

Thursday 3 November 2011

 
 
கோட்டூர்புரத்தில் 200 கோடி செலவில், கட்டப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக தரைத் தளம் உள்பட 9 தளங்களில் கட்டப்பட்டது. இதில் 8 தளங்களில் புத்தகப் பிரிவும், ஒரு தளத்தில் நிர்வாகப் பிரிவும் இயங்கி வருகின்றன. இந்த நூலகத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளின் போது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
 
ரூ.40 முதல் ரூ.1 லட்சம் வரை மதிப்புள்ள புத்தகங்கள் இங்குள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு தயார் செய்பவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், துறை வல்லுநர்கள், நல்ல சூழலில் படிப்பதற்காக புத்தகங்களுடன் வருபவர்கள், பார்வையற்றவர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினர் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அருகில் இருப்பதால் இந்த நூலகத்துக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.
 

5 லட்சம் புத்தகங்கள்
 
இந் நூலகத்திற்காக 24075 தலைப்புகளில் 92440 தமிழ் நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. அச்சிட்ட நூல்கள் தவிர 50000 மின் நூல்கள், 11000 மின் இதழ்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ள இந் நூலகத்தில் ஒரே நேரத்தில் 1250 பேர் அமர்ந்து படிக்க முடியும். இந்த நூலகம் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் தினமும் 2000 பேருக்கு மேல் வந்து செல்கின்றனர். வார நாட்களில் 3ஆயிரம் பேர் வரை இங்கு வந்து இங்குள்ள நூல்களை வாசித்து இங்கு வீசும் அறிவுக்காற்றினை சுவாசித்து செல்கின்றனர்.
 

அதிநவீன வசதி கொண்ட நூலகம்
 
தரமிக்க நூலகங்களில் காணப்படும் அனைத்து தொழில் நுட்பங்களும் இணைந்த மின் நூலகம்,இதனுடன் யுனெஸ்கோவும் இணைந்துள்ளது. முழுவதும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நூலகம் பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டது.
 
இந்த நூலகத்தில் திரையரங்கு, கூட்ட அரங்கு, கண்காட்சி அரங்குகள் உள்ளன. மிகப்பெரிய முகப்பு கூடம், வரவேற்பு அறை, இண்டர்நெட் மையம் ஆகியவை உள்ளன. பார்வை இல்லாதவர்கள் பிரெய்லி முறையில் படிக்கும் நூலக அரங்கும் இருக்கிறது.
 
பார்வையற்றோருக்கான பிரெய்லி பிரிவு, புத்தகம் கொண்டு வந்து படிக்கும் பிரிவு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளுக்கானப் புத்தகங்கள் தரைத்தளத்தில் உள்ளன. முதல் தளத்தில் சிறுவர்-சிறுமிகளுக்கான புத்தகங்கள், இயற்கை எழில் கொண்ட வாசிப்பு அறை உள்ளது. 2-வது தளத்தில் தமிழ் நூல்களும், 3-வது தளத்தில் ஆங்கில நூல்களும், 4-வது தளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல்வேறு மொழி நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.
 
டிஜிட்டல் நூலகம்
 
5-வது தளத்தில் பத்திரிகைகளின் பழைய பதிப்புகள், 6-வது தளத்தில் அரசு ஆவணங்கள், 7-வது தளத்தில் நன்கொடையாளர்கள் கொடுத்த நூல்கள் மற்றும் ஆடியோ-வீடியோ தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன. டிஜிட்டல் நூலகமும், புகைப்பட தொகுப்புகளும் 8-வது மாடியில் இருக்கிறது.
 
இங்கு 70 ஆயிரம் ஓலைச்சுவடிகள், அரிய புத்தகங்கள், டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நூல்கள் குழந்தைகளுக்காக வைக்கப்பட்டுள்ளன. 20 ஆயிரத்துக்கும் அதிகமான பல்வேறு ஊடக சி.டி.க்கள் உள்ளன.
 
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழங்கிய அரிய நூல்கள் மற்றும் பொதுமக்களிடம் பெறப்பட்ட நூல்கள் உலக முன்னணி பதிப்பாளர்களிடம் இருந்து வாங்கப்பட்ட ஆங்கில மற்றும் பிறமொழி நூல்கள் அனைத்தும் இந்த நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. ஸ்மார்ட் கார்டு மூலம் இந்த நூலகத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.
 
இந்த டிஜிட்டல் நூலகம் மூலம் உலகின் புகழ்பெற்ற எந்த நூலகத்தில் இருந்தும் தகவல்களை பெற முடியும். இங்கு 500-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் உள்ளன. இந்த நூலகத்துக்கு உலக டிஜிட்டல் நூலகத்தின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.
 

நூலகத்திற்கான தர நிர்ணயம்
 
நூலகத்துக்கு என்று இந்தியத் தர நிர்ணய அமைப்பின் வழிகாட்டுதல்கள் உள்ளன. சுவரின் அகலம், கட்டட உயரம், ஸ்திரத்தன்மை என்று அனைத்தும் அதைப் பின்பற்றியே கட்டப்பட்டுள்ளன. சூரியனின் ஒளிக்கதிர்கள் அனைத்து அறைகளுக்கும் வந்து செல்லும் வகையில் கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளன. முற்றிலும் பசுமைக் கட்டடமாக இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது. கருணாநிதி ஆட்சியில் உருவான ஒரே காரணத்திற்காக இந் நூலகம் மூடப்பெற்று..அங்கு குழந்தைகள் நல மருத்துவமனை இயங்கும் என முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
 
இது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நூல்களை இடம் மாற்றித்தானே வைக்கிறோம் என்று அரசு தெரிவித்துள்ளது. ஆனால்..நூல் நிலையத்திற்காகவே உருவாக்கப் பட்ட இடத்திலிருந்து ஏன் மாற்ற வேண்டும் என்பதே லட்சக்கணக்கான நூல் ஆர்வலர்களின் கேள்வியாகும்.



comments | | Read More...

சிங்கம் 2: சூர்யா ஜோடி ?

 
 
 
சூர்யா, அனுஷ்கா நடித்த சிங்கம் படம் வெற்றி பெற்றதையடுத்து இயக்குனர் ஹரி அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார். இதில் அனுஷ்காவுக்கு பதில் அமலா பால் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
 
வேட்டைப் படத்தில் நடித்து வரும் அமலா பால் ஒரே குஷியாகக் காணப்படுகிறார். காரணம் இயக்குனர் ஹரி சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறாராம். அதில் அனுஷ்காவை தூக்கிவிட்டு அவருக்கு பதில் அமலா பாலை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளாராம்.
 
ஆனால் சிங்கம் படத்தில் நடித்த அனைவரும் இரண்டாம் பாகத்தில் இருப்பார்களா என்று தெரியவில்லை. ஹீரோ சொல்லத் தேவையில்லை சூர்யா தான்.
 
லிங்குசாமியை சந்தித்த ஹரி அமலா பாலின் வேட்டை படத்தின் புகைப்படங்களைப் பார்த்துள்ளார். உடனே என் சிங்கம் 2 பட நாயகி இவர் தான் என்று முடிவு செய்துவிட்டாராம்.
 
அமலா பாலும், அனுஷ்காவும் நெருக்கமான தோழிகள். தனது கதாபாத்திரத்தில் தோழி அமலா நடிப்பது பற்றி அனுஷ்கா என்ன நினைக்கிறாரோ?

 


comments | | Read More...

மகளிருக்கு இலவச நாப்கின் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

 
 
 
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துவதற்கு இலவச நாப்கின் வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் அறிவிக்கப்படுவதாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,
 
18 பைகள் இலவச நாப்கின்
 
மாநிலம் முழுவதும் வயது பூர்த்தியான பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பெண்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், அவர்களுக்கு உதவும் வகையிலும் மாதவிடாய் இலவச பஞ்சு ( நாப்கின்) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தமிழக அரசு மூலம் பெண்கள், மாணவிகள் என அனைவருக்கும் மாதம்தோறும் வழங்கப்படும். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த பள்ளி நிர்வாகம் மூலமும், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சுகாதார துறை அலுவலகர்கள் மற்றும் கிராமப்புற செவிலியர், அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் வழங்கப்படும்.
 
2 மாதத்திற்கொரு முறை 6 எண்ணம் கொண்ட 3 பைகள் வழங்கப்படும். ஆண்டுக்கு 18 பைகள் வழங்கப்படும். இந்த பேக்கேஜ் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கும் வழங்கப்படும். இரும்புச்சத்து மாத்திரை, குடல் புழு நீக்கல் மாத்திரை மற்றும் வளர் இளம்பெண் குறிப்பேடு ஆகியனவும் வழங்கப்படும்.
 
சுற்றுப்புற சுகாதாரம்
 
மேலும் இந்த கழிவு பொருட்கள் மூலம் உருவாகும் சுற்றுப்புற சூழல் தூய்மையை காக்கும் விழிப்புணர்வும், இதனை கருத்தில் கொண்டு குழி தோண்டி புதைக்கவும், எரிக்கவும் உத்தரவிடப்படுகிறது. அரசின் இந்த உத்தரவு மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயன்பெறுவர்.
 
நாட்டிலேயே முதன்முதலாக கொண்டு வரப்படும் இந்த திட்டத்திற்கு ஆண்டுக்குரூ. 44 கோடியே 21 லட்சம் செலவாகும். சுகாதாரம் மற்றும் தொற்று‌நோய் பரவும் விதம் குறைக்கப்படும். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு ‌தெரிவிக்கப்பட்டுள்ளது.



comments | | Read More...

இண்டர்நெட்டில் “7 ஆம் அறிவு”,“வேலாயுதம்” படங்களை வெளியிட்டது யார்? சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

 
 
 
விஜய்யின் வேலாயுதம், சூர்யா நடித்த 7 ஆம் அறிவு படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கின்றன. இவ்விருபடங்களும் மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளன. வேலாயுதம் படமும் சுமார் ரூ.45 கோடி செலவில் தயாராகியுள்ளது. இதை விட அதிகமாக 7 ஆம் அறிவு படத்துக்கு செலவிட்டு உள்ளனர். இந்த இரு படங்களும் தற்போது இண்டர்நெட்டில் வெளியாகி தயாரிப்பாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தினமும் இப்படங்கள் வெளியாகும் இண்டர்நெட் வெப்சைட்கள் எண்ணிக்கை கூடிய வண்ணம் உள்ளன. வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட பிரிண்ட்களில் இருந்து திருடி இண்டர்நெட்டில் வெளியீட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சிலர் இது தற்காலிக பிரிண்ட்தான். விரைவில் தரமான பிரிண்ட்கள் திரையிடப்படும் என்ற தகவலையும் சேர்த்து படங்களை இண்டர்நெட்டில் வெளியிட்டு உள்ளனர். இவைகளை ஆயிரக்கணக்கான திருட்டு வி.சி.டி.க்களில் பதிவு செய்து விற்பனை செய்கின்றனர்.
இது குறித்து "வேலாயுதம்" பட தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறும்போது, நிறைய செலவு செய்து படத்தை எடுத்துள்ளோம். அதை இண்டர்நெட்டில் வெளியிட்டு இருப்பது மன வேதனை அளித்து உள்ளது. எங்களுக்கு வரவேண்டிய பணம் திருட்டு வி.சி.டி.க்களில் போகிறது. இதனால் இதயத்தில் ரத்தம் கசிகிறது என்றார். நடிகர் விஜய்யும் அதிர்ச்சியாகி உள்ளார். அவர் கூறும் போது, "வேலாயுதம்" படம் ரிலீசான உடனேயே இண்டர்நெட்டிலும் திருட்டு வி.சி.டி.யிலும் வெளியான தகவல் அறிந்தோம்.
ஆனாலும் எனது ரசிகர்கள் தியேட்டர்களில்தான் படம் பார்க்கின்றனர் என்றார். 7 ஆம் அறிவு தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, "இண்டர்நெட்டில் வெளியான படத்தை தடுக்க பல வகைகளில் முயற்சி எடுத்துள்ளோம்" என்றார். சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
 
comments | | Read More...

அழகுப் பெண்ணுக்கு அமைந்த வக்கிர தோழி

 
 
ஒவ்வொரு முறை கிராமத்துக்குப் போகும்போதும் புதியதாக ஏதேனும் சொல்வார்கள்.சில சுவையாகவும் இருக்கும்.தீபாவளிக்கு போன போது "உனக்கு தெரியுமா? அந்தப் பெண்ணின் கல்யாணம் நின்று போய் விட்டது!" எந்தப் பெண் என்று எனக்கு தெரியாது.அப்புறம் விளக்கமாக சொல்ல ஆரம்பித்தார்கள்.

கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த பெண் அவர்.அதே கிராமத்தில் உள்ள சுயமாகத் தொழில் செய்து கொண்டிருக்கும் பையனுக்கு காதல் வந்து விட்டது.பெண் இருக்கும் திசையிலேயே சுற்றிக்கொண்டு இருந்திருக்கிறார்.பெண்ணுக்கும் ஆர்வம் என்றாலும் பேச ஆரம்பிக்கவில்லை.


ஒரு நாள் பக்கத்து தெருவில் இருக்கும் அக்கா அழகுப் பெண்ணிடம் வந்து பேச ஆரம்பித்தார்." உனக்கு விருப்பமா? " என்று கேட்டு விஷயத்துக்கு வர இவருக்கு அக்காவை ரொம்பவே பிடித்துப் போய்விட்டது.இருவரும் நெருக்கமாகி தோழமை கொண்டு விட்டார்கள்.அடிக்கடி வீட்டிலிருந்து சிக்கன்,மட்டன்,பலகாரம் என்று விஷேசமான சமையல் அனைத்தும் கொண்டு வந்து கொடுத்து விடுவார்.


அழகுப் பெண்ணும் அக்காவின் அன்பை நினைத்து உருகிப் போய்விட்டார்.காதலும் அவர் மூலமாகவே வளர்ந்து கொண்டிருந்தது.காதலனிடம் பேசும் ஆசை இருந்தாலும் அக்கா அறிவுரை சொன்னார்."நீ பேசாதே! அப்புறம் மதிக்க மாட்டார்கள்.ஆண்களிடம் அவ்வளவு சீக்கிரம் பிடி கொடுத்து விடக் கூடாது!" அக்காவே அவருக்கு போன் செய்து கொடுப்பார்.ஓரிரு வார்த்தைகள் பேசியதும் போதும் என்று கையாட்டி விடுவார்.


பையன் நண்பர்கள் யாருடனோ சொல்ல அவர்கள் மூலமாக அவனது பெற்றோருக்கு விஷயம் போய் விட்டது.ஓரளவுக்கு சம அந்தஸ்துள்ள குடும்பங்கள்தான்.ஒரு வழியாக இரண்டு வீட்டிலும் பேசி நான்கு மாதம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவாகி விட்டது.


ஒரு நாள் அழகுப் பெண்ணின் அண்ணன் வீட்டுக்கு வந்து ஒரே சத்தம்."அவன் யோக்கியன் இல்லை.அவளுடன் சினிமா தியேட்டரில் பார்த்தேன்" அவள் என்று குறிப்பிடப்பட்டவர்,அழகுப் பெண்ணிடம் தோழமை கொண்ட அக்காதான்.அந்த திருமணம் நின்று போய்விட்டது என்று சொன்னார்கள்.இரண்டு பேருக்கு காதல் மலர்வதை எப்படியோ கவனித்த அக்கா அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்.தன் மீது அபாண்டமாக பழி போடுவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.


எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் நம் மீது அன்பைக் காட்டுகிறார்கள் என்பதை எப்படி கண்டு பிடிப்பது.உயர் அதிகாரி ஒருவருடன் பேசிகொண்டிருந்தோம்.உடன் வந்தவர் எதையோ பேச ஆரம்பிக்க சில வார்த்தைகளிலேயே அவர் கேட்டார்! " இதை எதற்காக என்னிடம் சொல்கிறீர்கள்? பேச ஆரம்பித்தவர் திணறினார்.


ஒருவர் பேசும் வார்த்தைகளை பிரித்துப் போட்டு பார்த்தால் நோக்கம் தெரிந்துவிட வாய்ப்புண்டு." சார் அவன் சரியில்லை சார் ! " என்று சொல்பவரை கவனித்து பாருங்கள்.இன்னொருவரை மட்டம் தட்டி தன்னை உயர்த்திக்காட்டவா? நம்மை எச்சரிக்கவா என்பது புரியும்.ஆதாயத்திற்காக உறவாடுபவர்களே அதிகம்.கொஞ்சம் யோசிக்க முடிந்தால் சிக்கல்கள் நேராமல் தடுத்துக் கொள்ளலாம்.
comments | | Read More...

இனி கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காது?

 
 
 
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நவம்பர் 11ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட் அறிவித்திருப்பதால் இனி கனிமொழி உள்ளிட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட யாருக்குமே ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
 
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கனிமொழி. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ராசாவைத் தவிர மற்ற அத்தனை பேருமே ஜாமீன் கோரி கோர்ட்டுகளை நாடி விட்டனர்.யாருக்குமே இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.
 
இந்த நிலையில் மேலும் துயரமாக, ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது நம்பிக்கை துரோக குற்றச்சாட்டை சுமத்தியது சிபிஐ. இதனால் இவர்களுக்கு ஜாமீன் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் கனிமொழி ஜாமீன் கோரினால் அதை ஆட்சேபிக்க மாட்டோம் என்று சிபிஐ திடீரென அறிவித்தது.
 
திமுக தலைவர் கருணாநிதி டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசிய பின்னர் இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து உச்சநீதிமன்றத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டது சிபிஐ. ஏன் இந்த இரட்டை நிலை என்று உச்சநீதிமன்றம் சிபிஐக்கு கிடுக்கிப் பிடி போட்டது.
 
இந்த நிலையில்தான் இன்று கனிமொழி உள்ளிட்டோரின் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்து விட்டது டெல்லி சிபிஐ கோர்ட். மேலும், இன்று ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி ஷைனி, நவமபர் 11ம் தேதி முதல் வழக்கின் விசாரணை தொடங்கும் என அறிவித்து விட்டார்.
 
விசாரணை தொடங்கவுள்ளதால் கனிமொழி உள்ளிட்டோருக்கு ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள். ஒரு வேளை கனிமொழி உள்ளிட்டோர் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினால், இதைக் காரணம் காட்டியே, அங்கும் மனு நிராகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
 
இதனால்தான் கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு தொடர்பாக திமுக கடும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.



comments | | Read More...

அழகாக உடை அணிபவர் விருது: கேத் மிடில்டன் முதலிடம்

 
 

இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் திருமணம் இங்கிலாந்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெகு விமரிசையாக நடந்தது.

புதுமண தம்பதிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து பேஷன் பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் சிறப்பான அலங்காரம் மற்றும் உடை அணிவதில் கேத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஓன்லைன் மற்றும் நேரடியாக ஏராளமானவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் இந்த விருதுக்கு ஆட்கள் தெரிவு செய்யப்படுவது வழக்கம்.

சமீபத்தில் நடந்த இந்த ஆண்டுக்கான போட்டியில் ஏராளமானவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதில் கேத் உடையணியும் விதம் மிகவும் அசத்தலாக இருப்பதாக பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் இந்த ஆண்டின் "பெஸ்ட் டிரெஸ் லேடி" விருதுக்கு கேத் முதலிடத்தில் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

comments | | Read More...

சிறையில் 9 மாதங்களைக் கடந்த ராசா- இதுவரை ஜாமீன் கோரவில்லை!

 
 

டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா 9 மாதத்தை நிறைவு செய்துள்ளார். இதே வழக்கில் கைதான கனிமொழி தொடர்ந்து ஜாமீன் கோரி வந்த நிலையில், இதுவரை ஒருமுறை கூட விடுதலை கோரி அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி அத்துறையின் அமைச்சராக இருந்த அ.ராசா கடந்த பிப்ரவரி 2ம் தேதி கைது செய்யப்பட்டார். நவம்பர் 2-ம் தேதியோடு அவர் 9 மாதங்களை சிறையில் கழித்துவிட்டார். இந்த வழக்கில் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு கனிமொழி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்டோபர் 22ம் தேதி இவர்கள் அனைவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கலானது.

இவர்களில் ராசா இதுவரை ஜாமீன் கோரி ஒரு முறை கூட மனு செய்யவில்லை. மாறாக, கனிமொழி, ராசாவின் முன்னாள் தனி உதவியாளர் ஆர். கே. சண்டோலியா, தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா, ஸ்வான் டெலிகாம் ஊக்குநர் ஷாகித் உஸ்மான் பல்வா, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத் குமார், குசேகாவோன் காய்கறி, பழங்கள் விற்பனை நிறுவன இயக்குநர்கள் ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கறீம் மொரானி, யூனிடெக் நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, டி.பி. ரியால்டி நிர்வாக இயக்குநர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் அடாக் நிர்வாகிகள் கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஜாமீன் கோரி மனுச் செய்தனர்.

டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று அனைத்திலுமே ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தும் யாரும் இதுவரை விடுதலை பெற முடியவில்லை. ஆனால் ராசா இதுவரை ஒருமுறை கூட ஜாமீன் மனு தாக்கல் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராசா சிறையில் 9 மாதங்களைப் பூர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

comments | | Read More...

கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ‘கிளர்ச்சிப்’புயல் அனுஷ்கா!

 
 

நடிகை அனுஷ்கா தற்போது கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மறுக்கிறாராம். காரணம் அவரது ரகசிய சினேகிதராம்.

அனுஷ்கா தமிழிலும் சரி, தெலுங்கும் சரி கவர்ச்சி காட்ட தயங்கியதில்லை. அவர் சும்மா வந்தாலே 'சுரீர்'னுதான் இருக்கும். அவர் கவர்ச்சியாக நடிக்காத ஒரே படம் அநேகமாக தெய்வத் திருமகளாகத் தான் இருக்கும். அரை குறையாக வந்தாலும் சரி, முழுசா உடை அணிந்து வந்தாலும் அழகாகத் தான் இருக்கிறார். இதனால் அனுஷ்காவுக்கு ரசிகர்கள் ஜாஸ்திதான்.

சகட்டுமேனிக்கு கவர்ச்சியாக நடிக்க அனுஷ்கா தயங்குவதில்லை என்பதால் தயாரிப்பாளர்கள் செக்ஸியான கதாபாத்திரங்களுக்கு அவரைத் தான் அணுகுகின்றனர். அப்படி ஒரு படத்திற்கு பிகினியில் நடிக்க அனுஷ்காவை கேட்டுள்ளனராம். கவர்ச்சியான கதாபாத்திரமா அதுவும் பிகினியா நான் மாட்டேன்பா என்று ஒரேயடியாக மறுத்துவிட்டாராம்.

ஏன் இந்த திடீர் பதற்றம் என்று வந்தவர் குழம்பிப் போய் திரும்பி விட்டாராம். பிறகு ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்த பிறகுதான் தெரியவந்ததாம் – அனுஷ்காவின் ரகசிய சினேகிதர் போட்ட தடாவால்தான் கவர்ச்சி காட்ட மறுத்து விட்டார் என்று.

அன்புக் கட்டளைக்கு அடி பணியாவிட்டால் பிறகெப்படி!

comments | | Read More...

விஜய் அம்மாவுக்கு ஜெயலலிதா தந்த புதிய பதவி!

 

சென்னை: நடிகர் விஜய்யின் அம்மாவும் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரனின் மனைவியுமான ஷோபாவுக்கு புதிய பதவி ஒன்றை அளித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

தமிழகம் முழுவதும் இயங்கும் அரசு இசைப் பள்ளிகளின் கலை இயல் அறிவுரைஞராக ஷோபா சந்திரசேகரனை நியமித்துள்ளார் ஜெயலலிதா.

கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் திருச்சி, நெல்லை, திருவாரூர், காஞ்சிபுரம், சேலம், புதுக்கோட்டை, கரூர், விழுப்புரம், பெரம்பலூர், தூத்துக்குடி, கடலூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, சீர்காழி, ஈரோடு மற்றும் ராமநாதபுரத்தில் இயங்கும் 17 அரசு இசைப்பள்ளிகளுக்கும் இனி ஷோபா சந்திரசோகரன் அறிவுரைஞராக செயல்படுவார் என தமிழக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இந்தப் பதவியை அளித்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஷோபா சந்திரசேகரன் மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடந்த தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மற்றும் தேர்தல் பணியாற்றியது விஜய்யின் மக்கள் இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

comments | | Read More...

நீதிமன்றம் வைத்த ஆப்பு! கனிமொழி ஜாமீன் நிராகரிப்பு!! அதிர்ச்சியில் கருணாநிதி!!!

 
 
 
2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் 2ஜி ஊழல் வழக்கில் வரும் 11-ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னதாக கனிமொழி உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனுவுக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காததால் அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது. அவரது ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். இதனால் கனிமொழி விடுதலையாகக்கூடும் என்று திமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் தில்லி வந்தனர். கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தால் அவரை அழைத்துச் செல்வதற்காக அவர்கள் தில்லி வந்ததாகக் கூறப்பட்டது.
எனினும் அவரது ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்த தீர்ப்பைக் கேட்டதும் நீதிமன்றத்துக்கு வந்திருந்த திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வெளியாவதால் இன்று காலை சிபிஐ நீதிமன்றத்துக்கு கனிமொழி அழைத்து வரப்பட்டார்.
சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தில்லி உயர்நீதிமன்றத்தை நாடக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



comments | | Read More...

ஓட்டல் சர்ச்சையில் த்ரிஷா

 
 
 
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் த்ரிஷா. த்ரிஷா ஹைதராபாத்தில் ஐந்து நட்சத்திர ஒட்டல் ஒன்றை கட்டி வருவதாகவும், தெலுங்கானா பிரச்னையால் அவரால் அப்பணிகளை தொடர முடியாமல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
 
இத்தகவல் குறித்து த்ரிஷா " ஒட்டல் கட்டுவதாக வந்துள்ள செய்தி வெறும் வதந்தி மட்டுமே. ஓட்டல் கட்டுவது நல்ல விஷயம்தான். அப்படி உண்மையிலேயே நான் கட்டினால், அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வேன். எப்போதுமே ஓட்டல் கட்டும் எண்ணம் எனக்கு இல்லை." என்று கூறியுள்ளார்.
 
மேலும் அவர் " தற்போது தமிழில் விஷால் ஜோடியாக 'சமரன்', தெலுங்கில் வெங்கடேஷுடன் ஒரு படம் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறேன். தமிழ், தெலுங்கில் மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாக இருக்கிறேன். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருவதால், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. " என்று தெரிவித்துள்ளார்.



comments | | Read More...

கனிமொழிக்கு அனுதாபமோ, பரிவோ காட்டக் கூடாது- சிபிஐ நீதிபதி

 
 
 
மக்கள் பணத்தை தங்களது சொந்த காரியங்களுக்காக பயன்படுத்தியவர்களுக்கு, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி கடுமையாக கூறியுள்ளார்.
 
கனிமொழி உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்களை டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து விட்டது. ஜாமீன் கோரிக்கை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை நீதிபதி ஷைனி தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவின்போது மிகக் கடுமையாக கனிமொழி உள்ளிட்டோர் குறித்து கருத்து தெரிவித்தார் நீதிபதி ஷைனி.
 
நீதிபதியின் உத்தரவில் குறிப்பிடப்பட்ட வாசகங்கள்:
 
- குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார். எம்.பியாக இருக்கிறார்.
 
- அவர் ஒரு பெண் என்றும்,அவர் கஷ்டப்படுகிறார் என்றும் கூறுவது கற்பனையாகும்.
 
- வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சாட்சிகளுக்கு பாதுகாப்பு உணர்வும், பயமின்மையும் இருக்க வேண்டும். அதற்குகுற்றம் சாட்டப்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கப்பட வேண்டியது முக்கியமாகும்.
 
- குற்றம் சாட்டப்பட்டவர்களின் முக்கிய நோக்கமே, பொதுமக்களின் பணத்தை எடுத்து தங்களது சுய லாபத்திற்குப் பயன்படுத்துவதாகவே இருந்துள்ளது. அதைச் செய்ய அவர்களுக்கு உரிமை கிடையாது.
 
- வழக்கின் உண்மை நிலவரம், சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. சிறந்த நீதியை கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
 
- இவர்களுக்கு ஜாமீன் தர சிபிஐ ஆட்சேபனை கூறவில்லை. அதற்காக ஜாமீன் தர வேண்டும் என்று அர்த்தமோ, கட்டாயமோ இல்லை.
 
- குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் மீதான குற்றச்சாட்டுக்கள் மிகவும் கடுமையானவை, தீவிரமானவை. நாட்டின் பொருளாதாரத்தில் இவர்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
 
- இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எந்தவித சலுகையும், பரிவும் காட்ட வேண்டியதில்லை. எந்தவிதமான அனுதாபத்திற்கும் இவர்கள் தகுதியவற்றவர்கள் ஆவர். மிகவும் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் இவர்கள் தங்களது குற்றங்களைச் செய்துள்ளனர்.
 
- பெருமளவில் மக்கள் பணத்தை சூறையாடி விட்டு, சிறைக்குப் போய் சில காலம் இருந்து விட்டு பிறகு ஜாமீனில் வெளியே வந்து விடலாம் என்ற நினைப்பில் ஜாமீன் கோருபவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். இவர்களைப் போல மேலும் பலர் பெருமளவில் கிளம்ப காரணமாகி விடும். எனவே இதுபோன்ற ஒயிட்காலர் குற்றங்களைச் செய்வோருக்கு ஜாமீன் தரவே கூடாது என்பதே நீதிமன்றத்தின் கருத்தாகும். அதுதான் இதுபோன்ற குற்றங்களைச் செய்ய நினைப்போருக்கு சரியான பாடமாக இருக்கும் என்றார் நீதிபதி ஷைனி.



comments | | Read More...

7 ஆம் அறிவு: சந்தேகங்களுக்கு உதயநிதியின் காட்டமான பதில்

 
 
 
இணையதளங்களில் 7 ஆம் அறிவையும் வேலாயுதத்தையும் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் ரசிகர்களும் எழுத்தாளர்களும். இதில் 7 ஆம் அறிவு பற்றி அவர்கள் எழுப்பி வரும் வினாக்களுக்கு சில வரிகளில் விடையளித்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.
 
இப்படத்தை தெலுங்கில் டப்பிங் செய்திருக்கிறார்கள். அதில் போதிதர்மரை கடப்பாவில் பிறந்தவராகவோ, ராயலசீமாவில் வளர்ந்தவராகவோ காட்டுவார்களோ என்று அவர்கள் சந்தேகத்தை எழுப்பியிருந்தார்கள். இதற்கெல்லாம்தான் சுருக்கென்று பதில் சொல்லி, லொட லொடக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் உதயநிதி.
 
என்னவாம்? சிலர் வதந்திகளை கிளப்புவது போல, தெலுங்கு டப்பிங்கில் அவரை தெலுங்கராக நாங்கள் காட்டவில்லை. அதிலும் அவர் காஞ்சிபுரத்தில் பிறந்த தமிழர் என்றே சித்தரித்திருக்கிறோம். இனிமேலாவது இதுபற்றி வதந்திகள் எழாமலிருக்கட்டும் என்று கூறியிருக்கிறார்.
 
சொல்லியாச்சுல்ல? உடைஞ்சா முருங்கை, வளைஞ்சா நாணல்னு போயிகிட்டே இருக்க வேண்டியதுதான்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger