News Update :
Powered by Blogger.

தமிழ்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்

Penulis : karthik on Sunday 8 January 2012 | 21:20

Sunday 8 January 2012



காவிரி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலி காவிரி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலி
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி கதவணை திடீரென திறக்கப்பட்டதால் ஆற்றில்
நடிகர் எம்.என்.நம்பியாரின் மகன் சுகுமாறன் நம்பியார் மாரடைப்பால் மரணம் நடிகர் எம்.என்.நம்பியாரின் மகன் சுகுமாறன் நம்பியார் மாரடைப்பால் மரணம்
மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் மகனும், பா.ஜனதா கட்சி தலைவருமான சுகுமாறன் நம்பியார் நேற்று
பென்னி குவிக்கிற்கு ரூ.1 கோடியில் மணிமண்டபம்: ஜெயலலிதா அறிவிப்பு பென்னி குவிக்கிற்கு ரூ.1 கோடியில் மணிமண்டபம்: ஜெயலலிதா அறிவிப்பு
முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னி குவிக்கிற்கு, தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்
ஜெயலலிதா பற்றி அவதூறு நக்கீரன் கோபால் மீது 6 பிரிவுகளில் வழக்கு ஜெயலலிதா பற்றி அவதூறு நக்கீரன் கோபால் மீது 6 பிரிவுகளில் வழக்கு
முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நக்கீரன்
நக்கீரன் கோபால் மீது மோசடி புகார் நக்கீரன் கோபால் மீது மோசடி புகார்
நக்கீரன் ஆசிரியர் கோபால், தன்னிடம் ரூ. 20 லட்சம் பண மோசடி செய்து
ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி - நக்கீரன் மீது சட்டப்படி நடவடிக்கை ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி - நக்கீரன் மீது சட்டப்படி நடவடிக்கை
முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான செய்தி வெளியிட்ட நக்கீரன் வார இதழ் மீது
நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி
தன் நடத்தையில் சந்தேகப்பட்டு டார்ச்சர் செய்த கணவன் மீது நள்ளிரவில் கொதிக்கும் எண்ணெயை
கைது செய்யாமல் இருக்க லஞ்சமாக "செக்ஸ்"
குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்களின் வழக்கு விவரங்களை அறிந்து, அவர்களை கைது செய்யாமல்
நியூசிலாந்தில் புயலில் சிக்கி சரக்கு கப்பல் 2 துண்டாக உடைந்தது!
கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ரீனா என்ற சரக்கு கப்பல் நியூசிலாந்தின் வடக்கு தீவில்
நியுஸிலாந்து: ராட்சத பலூன் வெடித்து 11 பேர் பலி - வீடியோ
நியுஸிலாந்தில் விண்ணில் பறந்துகொண்டிருந்த ராட்சத பலூன் ஒன்று வெடித்து தீப்பிழம்புகளுடன் கீழே விழுந்ததில்
3 லட்ச ரூபாய்க்கு கார் : நிசான் திட்டம்!
இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில், சிறப்பான அம்சங்களுடன் ரூ.3லட்சத்தில் புதிய காரை அறிமுகப்படுத்த
2012ல் தங்கம் விலை புதிய உச்சம் தொடும்
தங்கம் விலை இந்த ஆண்டிலும் புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைக்கும் என
சர்வதேச செஸ்: இந்திய வீரர் அபாரம்
சர்வதேச சென்னை ஓபன் செஸ் தொடரின் 7வது சுற்றில் இந்திய வீரர் பாண்டியன்
சென்னை ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் லியாண்டர் ஜோடி `சாம்பியன்'
சென்னை ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் கனடா வீரர் மிலோஸ் ரோனிக், டிப்சரேவிச்சை வீழ்த்தி
நடிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறேன் - அசின்
நடிகை அசின் அளித்த பேட்டியொன்றில் இதுபற்றி கூறியதாவது:சினிமாவில் நடிகைகள் நட்புடன் இருக்கமாட்டார்கள் என்று
கண்ட படங்களில் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை - ஸ்ரேயா
சமீப காலமாக ஸ்ரேயா நடித்த படங்கள் ஊத்திக் கொண்டதால் புதிய படங்கள் எதுவும்
அடுத்த மாதம் 'கோச்சடையான்'ஷூட்டிங் ரஜினி பரபரப்பு பேட்டி
அடுத்த மாதம் கோச்சடையான் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினி நடிக்க
காஜலுக்கு 'லிப் கிஸ்' கொடுக்க மனைவியிடம் பர்மிஷன் கேட்ட ஹீரோ
காஜல் அகர்வாலுக்கு 'லிப் கிஸ்' கொடுக்க மனைவியிடம் பர்மிஷன் கேட்டு நடித்தார் மகேஷ்
நடிகை சுஹாசினி - இயக்குனர் சேரன் மோதல்
நட்டி குமார் இயக்கத்தில் கணேஷ் வெங்கட்ராம் கதாநாயகனாக நடிக்கும் படம் "பனித்துளி". இப்படத்தின்





comments | | Read More...

எங்களுக்கு எம்.ஜி.ஆர், கமல், அஜீத் மாதிரி ஹீரோக்கள்தான் வேண்டும்-சுஹாசினி பேச்சு!

நடிகைகளை மட்டும் அழகழகானவர்களாக அறிமுகப்படுத்துகிறீர்களே அதேபோல
எங்களைப் போன்ற பெண்களுக்காக அழகான ஹீரோககளையும் அறிமுகப்படுத்துங்கள்
என்று கூறியுள்ளார் முன்னாள் நாயகி சுஹாசினி.
சென்னையில் பனித்துளி என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில்
சுஹாசினி, இயக்குநர்சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
For free News videos
விழாவில் சுஹாசினி பேசுகையில், தற்போதுகருப்பு ஹீரோக்களையே அதிகம் தமிழ்
சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார்கள் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டி
வெள்ளைத் தோல் கொண்ட நாயகர்கள்தான் பெண்களுக்குத் தேவை என்பதை மறைமுகமாக
வெளிப்படுத்தினார்.
தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் விதமாக அவர் பேசுகையில், நான் ஒரு
நடிகையாகவோ, சினிமா சார்ந்தவராகவோ இல்லாமல் சாதாரண பெண் ரசிகை என்ற
அளவில் ஒரு கோரிக்கையை இங்கே வைக்கிறேன்.
ஹீரோக்களில் எம்.ஜி.ஆர், கமல், அரவிந்த் சாமி, அஜித் போன்ற ஹேண்ட்சம்
ஹீரோக்களை தமிழ் ரசிகைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுகிறேன். நடிகைகளை
மட்டும் அழகழகாக அறிமுகப்படுத்துகிறீர்களே, ரசிகைகளுக்கும் அழகான
ஹீரோக்களை அறிமுகப்படுத்த வேண்டுகிறேன் என்றார்.
இதற்கு கருப்பு நிறம் கொண்ட நாயகனும், இயக்குநருமான சேரன் தனது பாணியில்
பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில்,
சுஹாசினி பேசிய ஹேண்ட்சம் ஹீரோக்கள் எல்லோருமே வெள்ளை நிறமுடையவர்கள்
என்பதால் அப்படி சொல்லி இருக்கிறார்.கறுப்பாக இருப்பவர்களிலும் ஹேண்ட்சம்
ஹீரோக்கள் இருக்கிறார்கள் மேடம். அவர்களையும் ரசியுங்கள் என்றார்.
சபாஷ் சரியான போட்டிதான்...
Tags: suhasini , சுஹாசினி
comments | | Read More...

ஜெயலலிதா பற்றி அவதூறு நக்கீரன் கோபால் மீது 6 பிரிவுகளில் வழக்கு

முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறுசெய்தி வெளியிட்டதாக கொடுக்கப்பட்ட
புகாரின் பேரில் நக்கீரன் கோபால் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ்
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நக்கீரன் வாரம் இரு முறை இதழில் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறுசெய்தி
வெளியிட்டுள்ளதாக புகார் கூறி, அதை கண்டிக்கும் வகையில் நேற்று முன்தினம்
தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள்.
சென்னையிலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடந்தன.
ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் பத்திரிகை அலுவலகம்
முன்பும் ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டு, வேளச்சேரி எம்.எல்.ஏ.அசோக்
தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்வீச்சு சம்பவம் நடந்தது.
போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. அசோக் உள்பட அ.தி.மு.க.வினரை
கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். நக்கீரன் பத்திரிகை
சார்பில் இது தொடர்பாக ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் புகார்
கொடுக்கப்பட்டது. அதன் பேரில் எம்.எல்.ஏ.அசோக் உள்பட அ.தி.மு.க.வினர்
மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே அ.தி.மு.க. பிரமுகர் அன்பு கொடுத்த புகாரின் பேரில், நக்கீரன்
ஆசிரியர் கோபால் மீது, கொலை மிரட்டல்(இ.பி.கோ.506-2) மன உளைச்சலை
ஏற்படுத்துதல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை
உண்டாக்குதல்(505),உயர் பதவியில் இருப்பவர்களுக்கு களங்கம்
உண்டாக்குதல்(504) உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் ஜாம்பஜார் போலீசார்
வழக்குப்பதிவு செய்தனர். கோபால்மட்டும் அல்லாது மற்றும் சிலர் மீதும்
வழக்கு போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று பகலிலும் ஏராளமான அ.தி.மு.க.வினர்
நக்கீரன்பத்திரிக்கை அலுவலகம் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்தினார்கள். நக்கீரன் ஆசிரியர் கோபாலை கைது செய்யக் கோரி அப்போது
கோஷம் எழுப்பினார்கள். நீண்ட நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கிடையில் நக்கீரன்அலுவலகத்தில் நேற்று மாலை போலீசார் சோதனை
நடத்தினர். கோபால், காமராஜ் எங்கே இருக்கிறார்கள் என்று
அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
comments | | Read More...

நடிகர் எம்.என்.நம்பியாரின் மகன்சுகுமாறன் நம்பியார் மாரடைப்பால் மரணம்

மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் மகனும், பா.ஜனதா கட்சி தலைவருமான
சுகுமாறன் நம்பியார் நேற்று சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அவரது உடல் தகனம் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.
மறைந்த வில்லன் நடிகர் எம்.என்.நம்பியாரின் ஒரே மகன் எம்.என்.சுகுமாறன்
நம்பியார் (வயது 64). இவர் சென்னை கோபாலபுரம் 6-வது தெருவில் உள்ள அவரது
வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலையில் வழக்கம்போல் காலை டிபனை
முடித்துவிட்டு வீட்டில் அமர்ந்து உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
காலை 11.30 மணி அளவில், திடீரென்று நெஞ்சு வலிப்பதாக கூறினார். அப்போது
மூச்சுவிடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். அருகில் இருந்த அவருடைய மூத்த
மகன் சித்தார்த், உடனடியாக அருகே உள்ள ஒரு மருத்துவமனையின் அவசர
சிகிச்சைப்பிரிவுக்கு தகவல் தெரிவித்தார். உடனே டாக்டர்கள் இவருடைய
வீட்டுக்கு வந்தனர். உடலை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் மரணம்
அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சுகுமாறன் நம்பியார் மரணம் பற்றி கேள்விப்பட்டதும் பாரதீய ஜனதா கட்சியின்
மூத்த தலைவர் எல்.கே.அத்வானி டெலிபோன் மூலம் அவருடைய மகனிடம் பேசி, தனது
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதா சார்பில், சுகுமாறன் நம்பியார் உடலுக்கு நிதி அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம்மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த சுகுமாறன் நம்பியாரின் இறுதிச்சடங்குகள் சென்னையில் இன்று
(திங்கட்கிழமை) நடக்கிறது.அவரது உடல் சென்னை கோபாலபுரம் இல்லத்தில்
இருந்து ஊர்வலமாக பெசன்ட்நகர் மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு, காலை
10மணிக்கு தகனம் செய்யப்படுகிறது.
மரணம் அடைந்த எம்.என்.சுகுமாறன் நம்பியாரின் மனைவி பெயர் லட்சுமி (வயது
54) இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருக்கு,
சித்தார்த் (26), பாரத் (22) ஆகியஇரு மகன்கள் உள்ளனர்.
சித்தார்த் ஆடிட்டருக்கு படித்து வருகிறார். பாரத் சென்னை
பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
சுகுமாறன் நம்பியார் 1991-ம் ஆண்டில் இருந்து பா.ஜ.க.வில் தன்னை
இணைத்துக்கொண்டு பணியாற்றி வந்தார். ஆரம்ப காலத்தில் சென்னை மாநகர
பா.ஜ.க. தலைவராக பணியாற்றினார். பின்பு, பாரதீய ஜனதா கட்சியின் அகில
இந்திய பொருளாளராக பணியாற்றினார். தற்போது அகில இந்திய செயற்குழு
உறுப்பினராக இருந்தார்.
பாராளுமன்ற தேர்தலின்போது, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி ஏற்பட முக்கிய
பங்குவகித்துள்ளார். திருச்சி, வடசென்னை பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க.
சார்பில் போட்டியிட்டார்.
இவர் 45 ஆண்டுகளாக தீவிர அய்யப்ப பக்தர் ஆவார். கடந்த மாதம் சபரிமலைக்கு
சென்று அய்யப்பனை தரிசித்துவந்தார். அகில இந்திய அய்யப்ப சேவா சங்கத்தின்
தலைவராகவும் பணியாற்றினார்.
கராத்தேயில் கறுப்பு பெல்ட் வாங்கிய சுகுமாறன் நம்பியார், கராத்தே
பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். இவர் கமாண்டோ பயிற்சி அளிப்பதற்கான
தகுதியும் பெற்றுள்ளார். தமிழக போலீசுக்குகமாண்டோ பயிற்சி அளித்தவர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு ரைபிள் கிளப்பிலும் உறுப்பினராக உள்ளார். எல்.கே.அத்வானியின்
நெருங்கிய குடும்ப நண்பராகவும் விளங்கினார்.
comments | | Read More...

தமிழக நதிகளை இணைக்க வேண்டும்: அப்துல்கலாம் பேச்சு

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன்
பள்ளி மைதானத்தில் 35- வது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
கண்காட்சி அரங்கம் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் தினமும்
மாலையில் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று அறிவு சார்ந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்
கலந்து கொண்டு சிறப்புரை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் புத்தக கண்காட்சி நடைபெற்ற வளாகம் முழுவதும் பள்ளி , கல்லூரி
மாணவர்கள் , அவர்களின் பெற்றோர்கள் என கூட்டம் அலைமோதியது. அவர்கள்
மத்தியில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பேசியதாவது:-
முதலில் எல்லோரும் , ` தங்கள் வீட்டில் குறைந்த பட்சம் 20 நல்ல
புத்தகங்களை கொண்ட சிறு நூலகத்தை அமைப்போம் ' என்ற உறுதி மொழியை
எடுத்துக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் படிப்பது அறிவு புரட்சிக்கு
ஆதாரமாக அமையும். நல்ல புத்தகங்கள் அறிவூட்டும். நல்ல வழியில் நடத்தும்.
பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் குழந்தைகளுக்கு நல்ல
புத்தகங்களை பரிசளிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். எனக்கு புத்தகங்களை
படிக்கும் ஆர்வத்தை தூண்டியவர்கள் என்னுடைய அண்ணனும் , அவரது நண்பரும்
தான். எனக்கு 10 வயது இருக்கும் போது என் அண்ணனுடன் , அவரது நண்பரின்
வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு அவர் வீட்டில் ஒரு நூலகத்தை
வைத்திருந்தார்.
அங்கிருந்த புத்தகங்களை படித்து பார்த்தேன். என் அண்ணனின் நண்பர்
என்னிடம் கம்யூனிசம் குறித்த புத்தகங்களை வழங்கினார். அப்போது தான்
என்னுடைய படிக்கும் ஆர்வம் அதிகரித்தது.கற்ற நூலின் அளவிற்கு ஏற்ப அறிவு
வளரும். வளமான வாழ்விற்கு இருப்பது புத்தகம் தான். நான் சமீபத்தில் 2
புத்தகங்களை படித்தேன். ஒன்றுவிவசாயத்தை பற்றியது , மற்றொன்று
செயற்கைகோள் மூலம் நதிகளை ஆராயும் புத்தகம் ஒன்று.
விவசாயம் சார்ந்த அந்த புத்தகத்தில் விவசாயிகளின் தனிநபர் வருமானத்தை
பெருக்குவதற்கான முறைகள் , நவீன விவசாயம் மூலம் உற்பத்தியை பெருக்குவது
என்று விவசாயத்தின் பெருமையை அந்த புத்தகம் விளக்கியிருந்தது.
' செயற்கைகோளின் பார்வையில் தமிழக நதிகள் ' என்ற புத்தகத்தில் நதிகளின்
பிறப்பும் , வாழ்வும் , அவைகள் கடந்து செல்லும் பாதைகள் , சமவெளி
பகுதிகள் , கடலோர பகுதிகள் , கடலுக்குள் நிகழும் மாற்றம் , பூமிக்கடியில்
நிகழும் மாற்றம் , பூமியின் நகரும் தன்மை போன்றவற்றை இந்த புத்தகத்தில்
விளக்கி கூறியிருக்கிறார்கள்.
நதிகளை பற்றி எதிர்கால சந்ததியினர் அவசியம் தெரிந்து கொள்ள இந்த
புத்தகத்தை படிக்க வேண்டும்.நதிகள் நம்மோடு ஒன்றியிருக்கிறது.
தமிழகத்தில்நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம்
நம்பியிருக்க வேண்டியதில்லை. தமிழகத்தில் நீர்வழிச்சாலைகளை
ஏற்படுத்தினால் ஆண்டிற்கு 100 டி.எம்.சி. தண்ணீரை நாம் சேமிக்கமுடியும்.
ஆகவே நதிகள் இணைப்பில் தொலை நோக்கு திட்டத்துடன் செயல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு உலக வங்கியுடன் உதவியுடனும் மற்ற தனியார் நிறுவனத்துடனும்
இணைந்து தமிழகநதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான்
தமிழகம் வளம் கொழிக்கும். வளமானமாநிலமாக தமிழகம் உருவெடுக்கும். நதிகள்
இணைப்பு என்ற அந்த கனவு எனக்கும் இருக்கிறது , அரசுக்கும் இருக்கிறது.
கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல. நம்மைதூங்க விடாமல் வருவது தான்
கனவு.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் , அப்துல் கலாம் பேசி முடித்த பிறகு , ` முல்லைப் பெரியாறு
அணை பிரச்சினை தீர்வுக்கு உங்கள் யோசனை என்ன ?' என்று நிருபர்கள்
கேட்டனர். அதற்கு அப்துல் கலாம் , ` தமிழக-கேரள முதல்-மந்திரிகள்
சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினால் தீர்வு ஏற்படும் ' என்று கூறினார்.
comments | | Read More...

இந்தியா உடனான உறவு:வலுப்படுத்த சீனா ஆர்வம்

இந்தாண்டில் அரசியல் மற்றும் கூட்டுறவு விவகாரங்களில் இந்தியா உடனான உறவை
விரைவாகவும், சீராகவும் வளர்ப்பதற்காக, அந்நாட்டுடன் ஒன்றிணைந்து செயல்பட
வேண்டிய நடவடிக்கைகளை சீனா எடுக்கும்' என சீன வெளியுறவு உதவி
அமைச்சர்தெரிவித்துள்ளார்.
காஷ்மீர், அருணாச்சல பிரதேச குடிமக்களுக்கு, தாளில் விசா அளித்தது,
இந்திய ராணுவத் தளபதிக்கு விசா தர மறுத்தது, தலாய் லாமாவைக் காரணம்
காட்டி எல்லைப் பிரச்னை குறித்த பேச்சு வார்த்தையை தள்ளிப் போட்டது என
இந்திய - சீன உறவில் சில பிரச்னைகள் கடந்தாண்டில் எழுந்தன.இதன் விளைவாக,
ராணுவ மட்டத்திலான அதிகாரிகள் பேச்சுவார்த்தையில், இந்தியா, தனது ராணுவ
பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 30ல் இருந்து 15 ஆக குறைத்தது. இம்மாத
இறுதியில், எல்லைப் பிரச்னை குறித்த பேச்சு வார்த்தை நடக்க உள்ளது.
இந்நிலையில், சீனாவின்"ஷின்ஹூவா' நாளிதழுக்கு அந்நாட்டின் வெளியுறவு உதவி
அமைச்சர் லியு ஜென்மின் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:இரு
நாட்டுத்தலைவர்கள் மத்தியில் முக்கிய பிரச்னைகளில் கருத்தொற்றுமையை
ஏற்படுத்தவும், உயர் மட்ட அளவிலான பேச்சு வார்த்தையை தொடரவும், அரசியல்
தரப்பிலான நம்பிக்கையை அதிகரிக்கவும், இருதரப்பு உறவில் கவலையை
ஏற்படுத்தும் முக்கிய பிரச்னைகளை முறையாகக் கையாளவும் போதுமான
நடவடிக்கைகளை எடுப்பதில் சீனா ஆர்வமாக உள்ளது.இவ்வாறு லியு ஜென்மின்
தெரிவித்துள்ளார்.
comments | | Read More...

வாகன ஓட்டிகளுக்கு வேகமல்ல, நிதானம் தான் முக்கியம்: சரத் குமார் பேச்சு

தென்காசி: கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 80 சதவீதம் இரு சக்கர
வாகனங்களால் தான் நடந்துள்ளது என்று தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார்
தெரிவித்தார்.
சாலை பாதுகாப்பு வாரவிழா தென்காசி ஜெகநாத் அரங்கில் நடந்தது. இந்த
விழாவுக்கு நெல்லை கலெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். தென்காசி
எம்.எல்.ஏ. சரத்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜசேகரன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். நகர்மன்றதலைவர் பானு ஷமீம், துணை தலைவர் சுடலை, அரசு
போக்குவரத்துக் கழக பொது மேலாளர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள்
வெங்கட கிருஷ்ணன், செண்பகவல்லி, ரெட் கிராஸ் சுப்பிரமணியன் ஆகியோர் உரை
நிகழ்த்தினர்.
விழாவில் சரத்குமார் பேசியதாவது,
தமிழகத்தில் அதிகமான வாகனங்கள் செல்லும் அளவுக்கு சாலைகள்
மேம்படுத்தப்பட்டுள்ளன. இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின்
எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இது போன்ற சாலை பாதுகாப்பு
வாரவிழாக்கள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு 64, 986வாகன விபத்துக்கள்
நடந்துள்ளன. இதில் 2,000 பேர் பலியாகியுள்ளனர். இதில் 80 சதவீத
விபத்துகள் இரு சக்கர வாகனங்களால் நடந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில்
நான்கு சக்கர வாகனங்களால் அதிக விபத்துகள் நடக்கிறது.
அதிக வேகத்தால் தான்விபத்துக்கள் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகளுக்கு வேகம்
முக்கியமல்ல, நிதானம்தான் முக்கியம். இருசக்கரவாகனங்களில் செல்பவர்கள்
ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்றார்.
Tags: accidents , விபத்துகள்
comments | | Read More...

உள்துறை அமைச்சக கம்ப்யூட்டரின் 'ஹார்டு டிஸ்க்' காக்கா தூக்கிட்டு போச்சு...!!!

மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்கை
யாரோ திருடிவிட்டனர். அதே கம்ப்யூட்டிரின் மானிட்டர் கடந்த 2
மாதங்களுக்கு முன்பு காணாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் உள்ள மத்திய அமைச்சக அலுவலகத்தின் வடக்கு பிளாக்கில் உள்ள அறை
எண் 203 ல்உள்ள கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸக் மாயமாகியுள்ளது என்பது கடந்த
3 ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதே
கம்ப்யூட்டரின் மானிட்டர் காணாமல் போனது என்று மூத்த போலீஸ் அதிகாரிகள்
தெரிவித்தார்.
கடந்த 3 ம் தேதி மேலும் ஒரு மானிட்டர் மற்றும் ஹார்டு டிஸ்கும் காணாமல்
போகியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் இந்தி துறையில் பணிபுரியும் ஈஸ்வர்
மெஹ்தோ என்பவர் கடந்த 3 ம் தேதி காலை வேலைக்கு வந்தது தனது கம்ப்யூட்டரை
ஆன் செய்தும் அது வேலை செய்யவில்லை. அப்போது தான்ஹார்டு டிஸ்க் மாயமானது
தெரிய வந்தது. உடனே அவர் இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அவர்கள் ஆலோசனைப்படி போலீசில் புகார் கொடுத்தார்.
கடந்த நவம்பர் மாதம் 3 ம் தேதி தனது கம்ப்யூட்டர் மானிட்டரை காணவில்லை
என்று இதே மெஹ்தோ தான் போலீசில் புகார் கொடுத்தார். கடந்த 3 ம் தேதி அந்த
அலுவலக்தில் மேலும் ஒரு மானிட்டரும் , ஹார்டு டிஸ்கும் மாயமாகியுள்ளது.
இது குறித்தும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகத்தில் பணி்புரியும் யாரோ தான் ஹார்டு டிஸ்க் , மானிட்டரை
திருடியிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கருதுவதால் அங்கு
பணிபுரிபவர்களின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்ட பிறகே வெளியேஎடுத்துச் செல்ல
அனுமதிக்கப்படுகின்றன.
முன்பு அலுவலகத்திற்கு உள்ளே வரும்போது மட்டும் தான் எக்ஸ்ரே மெஷின்
மூலம் ஊழியர்களின் உடைமைகள் பரிசோதிக்கப்படும். தற்போது வெளியே
செல்கையிலும் பரிசோதிக்கப்படுகிறது என்று பாதுகாப்பு அதிகாரி
தெரிவித்தார்.
ஒரு ஹார்டு டிஸ்க்கையே பாதுபாப்பா வைத்திருக்க முடியல்ல நாட்டை எப்படி
பாத்குகாக்க போறீங்க...!
அது இருக்கட்டும், இப்போ என்ன சொல்ல வறீங்க 'இந்த ஹார்டு டிஸ்க்ல தானே 2G
spectrum ஊழல் சம்பந்தமான ஆவணங்கள் இருந்திச்சு'ன்னு தானே சொல்ல
வறீங்க...
இப்படிதாங்க முக்கியமான ஆவணங்களை எல்லாம் கொஞ்ச நாளாவே காக்கா தூக்கிட்டு
போகுது முதல்ல இந்த காக்கால்ல காக்கா அத இந்தியாவ விட்டு தொரத்தணும்...
comments | | Read More...

கைது செய்யாமல் இருக்க லஞ்சமாக"செக்ஸ்"

குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்களின் வழக்கு விவரங்களை அறிந்து,
அவர்களை கைது செய்யாமல் இருக்க செக்ஸ் உறவுக்கு நிர்பந்தப்படுத்தியதாக
இந்திய வம்சாவளியை சேர்ந்த போலீஸ்காரர் மீது புகார் எழுந்துள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஜஸ்பிர் சிங் தாண்டா. வயது 52. இவர் போலீஸ்
கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார். டெர்பிஷைர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய
போது, அந்த நகரில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளம்பெண்களின்
விவரங்களை தெரிந்து கொண்டு, அவர்களை தேடி கண்டுபிடித்து, வழக்கில் கைது
செய்யாமல் இருக்க செக்ஸ் உறவுக்கு நிர்பந்தபடுத்தியதாக புகார்
எழுந்துள்ளது. இதையடுத்து ஜஸ்பிர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
போலீஸ் துறை ஆவணங்களில் இருந்த விவரங்களை வைத்து 2 விபசார பெண்களை
கண்டுபிடித்துள்ளார். பணியின் போது அவர்களை கைது செய்யாமல், அவர்களுடன்
செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது. "போலீஸ்
கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஜஸ்பிர் வைத்திருந்த ரேடியோ போனுக்கு
அழைப்பு வந்தது. ஆனால், அவர் பேசவில்லை. ஏனெனில் அப்போது என்னுடன் அவர்
உறவு வைத்துக் கொண்டிருந்தார்" என்றுஒரு விபச்சாரப் பெண் போலீஸ்
விசாரணையில் கூறியுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஜஸ்பிர் சிங்
திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்த வழக்கு விசாரணை நாட்டிங்ஹாம் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது.
அப்போது அரசு தரப்பு வக்கீல் நீல்மூர் வாதிடுகையில், "ஜஸ்பிர் அரசு
விவரங்களை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். மூன்று பெண்களிடம்அவர் செக்ஸ்
வைத்து கொண்டுள்ளார். 3 பெண்களும் குற்ற வழக்குகளில்
சம்பந்தப்பட்டுள்ளதால், போலீசில் புகார் தெரிவிக்க மாட்டார்கள் என்று
ஜஸ்பிர் நினைத்துள்ளார்" என்றார்
comments | | Read More...

நக்கீரன் கோபால் மீது நெல்லை தொழிலதிபர் திடீர் புகார்!

நக்கீரன் ஆசிரியர் கோபால் , தன்னிடம் ரூ. 20 லட்சம் பண மோசடி செய்து
விட்டதாக திடீரென நெல்லையைச் சேர்ந்த தொழிலதிபர்ஒருவர் போலீஸ் கமிஷனர்
கருணாசாகரிடம் புகார் கொடுத்துள்ளார்.
நக்கீரன் இதழில் முதல்வர் ஜெயலலிதா குறித்த செய்தி வெளியாகி அதுதொடர்பாக
அதிமுகவினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் திடீரென இந்தப் புகார்
எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நெல்லை ராஜாஜி நகரை சேர்ந்த ராமன் என்பவர் நெல்லை போலீஸ்
கமிஷனர் கருணாசாகரிடம் கொடுத்த புகாரில் ,
எனது நண்பர் பாளையை சேர்ந்த டாக்டர் சுப்பிரமணிய பாலு லண்டன் மருத்துவமனை
ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவர் மீது லண்டன் போலீசார் பாலியல்
குற்றவழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து
வருகிறது. இதுபற்றிய விவரம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
இதனை பார்த்து தெரிந்து கொண்ட நக்கீரன் கோபால் , எனது நண்பர் டாக்டர்
சுப்பிரமணிய பாலுவை தொடர்பு கொண்டு உங்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு
செய்தியை நக்கீரன் வார இதழில் வெளியிட உள்ளோம். செய்தி வெளியிடாமல்
இருக்க வேண்டும் என்றால் ரூ.20 லட்சம் பணம் தர வேண்டும் என்று
மிரட்டினார். இதனால் பயந்துபோன எனது நண்பர் ரூ.20 லட்சத்தை தர
சம்மதித்தார். இதையடுத்து நானும் அவரது தந்தை சுப்பிரமணியும் சேர்ந்து
அந்த பணத்தை நக்கீரன் கோபாலிடம் கொண்டு கொடுத்தோம்.
நக்கீரன் கோபால் மிரட்டி ரூ.20 லட்சத்தை வாங்கி மோசடி செய்துவிட்டார்.
எனவே அவர் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரிக்க கமிஷனர்உத்தரவிட்டுள்ளாராம்.
எஸ்.பியிடம் அமைச்சர் கொடுத்த புகார்
இதற்கிடையே , செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்
ராஜேந்திரபாலாஜி , விருதுநகர் மாவட்ட எஸ்.பி. நஜ்முல் கோடாவை சந்தித்து
புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதில் ,
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்
செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபால் , செய்தியாளர் உமர் அக்தர் மற்றும்
அந்த பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த பத்திரிகையை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
செருப்புப் போடாமல் அமைச்சராக வலம் வந்த உதயக்குமாரும் புகார்
இதேபோல முதல்வர் ஜெயலலிதா மீது கொண்ட பக்தியால் செருப்பு கூட போடாமல்
அமைச்சராக வலம் வந்து அதற்காகவே பதவியையும் இழந்த ஆர்.பி. உதயக்குமார்
சாத்தூர் டிஎஸ்பி சின்னையாவை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார்.
அதில் ,
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் , இந்திய நாட்டின் வழிகாட்டியுமான தமிழக
முதல்வர் , தமிழக மக்களின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்து பணியாற்றி
வரும் மக்களின் பேராதரவை பெற்ற அம்மா அவர்களின் புகழுக்கும் ,
நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு
7-ந்தேதி வெளிவந்த நக்கீரன் இதழில் முதல்வர் அம்மாவை பற்றி அவதூறான
செய்தியை வெளியிட்டுள்ளனர்.
அந்த வாசகங்களை பார்த்த எனக்கும் எண்ணிலடங்காத சாத்தூர் தொகுதி
நிர்வாகிகளும் , தொண்டர்களுக்கும் , பொதுமக்களுக்கும் மிகுந்த
மனவேதனையும் , மன அமைதியின்மையையும் ஏற்படுத்தி உள்ளது.
தவறான தகவல்களை பொய்யாக பரப்புரை செய்து சமுதாயத்தின் அமைதியையும் ,
சமுதாய நல்லிணக்கத்தையும் சீர்குலைய செய்திட்ட நக்கீரன் கோபால் மீது தக்க
நடவடிக்கை எடுத்தும் , அந்த வார இதழின் விற்பனையை நிறுத்த நடவடிக்கை
எடுக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன் என்று கோரியுள்ளார்.
இதேபோல அமைச்சர்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு தத்தமது எஸ்.பி.
அலுவலகங்களில் புகார் கொடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
comments | | Read More...

'கொழு கொழு'வை கைவிடுகிறார் ஹன்சிகா!

இனிமேல் ஹன்சிகாவை யாரும் கொழு கொழு நடிகை என்று கூறமாட்டார்கள்...! ஆம்
தனது உடம்பை குறைத்து டயட்டில் இருந்து வருகிறார் ஹன்சிகா மோத்வானி.
கடந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு புதுவரவாக வந்தவர் நடிகை ஹன்சிகா
மோத்வானி. மாப்பிள்ளை , எங்கேயும் காதல் , வேலாயுதம் ஆகிய படங்களில்
நடித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் நடித்த வேலாயுதம் படத்தை தவிர மற்ற
இரண்டு படங்கள் சரியா‌க போகவில்லை என்றாலும் அம்மணிக்கு கோலிவுட்டில்
ஏகப்பட்ட வரவேற்பு. தற்போது உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும்
சிம்புவுடன் வேட்டை மன்னன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
அம்சமான முகமும் , அழகான சிரிப்பும் கொண்ட ஹன்சிகாவை பலரும் பப்ளி கேர்ள்
என்று தான்அழைத்து வருகின்றனர். அதற்கு காரணம் அவருடைய கொழு கொழு உடம்பு
தான். அதுமட்டுமல்ல இவருக்கு சின்ன குஷ்பூ என்று பட்டம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்திய சிலகாலத்தில் தனது உடல் பெருத்துவிட்டதால் சற்றே
கவலை அடைந்த ஹன்சிகா , தனது உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்பை அதிநவீன
சிகிச்சை மூலம் குறைத்துள்ளாராம். மேலும் உடம்பு மறுபடியும் ‌அதிகமாகல்
இருக்க அம்மணி பார்த்து , பார்த்து உணவு வகைகளை சாப்பிடுகிறாராம்.
தீவிர டயட்டில் இருக்கும் ஹன்சிகாவை இனி யாரும் பார்த்தால் கொழு கொழு
ஹன்சிகா என்று கூறமாட்டார்கள். அந்தளவிற்கு தனது உடம்பை குறைத்து
ஸ்லிம்மாக்கி வருகிறார் ஹன்சிகா.
comments | | Read More...

2012 தான் பெஸ்ட் : சந்தானம்

2011ல் அதிக படங்களில் காமெடியனாக நடித்தவர் சந்தானம். விஜய்யுடன் '
வேலாயுதம் ', கார்த்தியுடன் ' சிறுத்தை ' ஆகிய இரண்டு படங்களும்
மக்களிடையே வரவேற்பைபெற்றது.
' சந்தானம் நடித்து இருக்கிறார்என்றால் படத்தை கண்டிப்பாக பார்க்கலாம் '
என்கிற அளவுக்கு தன் ரசிகர்களிடையே பெயர் பெற்று இருக்கிறார்.
2012ம் ஆண்டில் என்னென்ன படங்களில் நடிக்க இருக்கிறார் என்று தொடர்பு
கொண்டபோது " 2011ம் ஆண்டை விட 2012ம் ஆண்டுதான் என்னை பொருத்தவரை
சிறந்ததாக அமையப் போகிறது.
பல பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க இருக்கிறேன். கார்த்தியுடன் ' சகுனி
', உதயநிதிஸ்டாலினுடன் ' ஒரு கல் ஒரு கண்ணாடி ', சூர்யாவுடன் ' சிங்கம்-2
', கெளதம் மேனன் இயக்கத்தில் ' நீதானே என் பொன்வசந்தம் ', சேரன் இயக்கும்
படம் , சிம்புவுடன் இணைந்து ' போடா போடி ', ' வேட்டை மன்னன் '
எனவரிசையாக 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறேன்.. நடிக்கவும்
இருக்கிறேன்.
எனது திரையுலக வாழ்வில் 2011ஐ விட 2012ம் ஆண்டு தான் சிறந்தது " என்று
தெரிவித்தார்.
comments | | Read More...

71 புதுமுகங்களின் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி

சிட்டி லைட்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம் , ' ஆயிரம்
முத்தங்களுடன் தேன்மொழி '. சேரன்உதவியாளர் சண்முகராஜ் இயக்குகிறார்.
வெங்கடேஷ் , அக்ஷரா ஜோடியுடன் 71 புதுமுகங்கள் நடித்துள்ளனர். தாஜ்நூர்
இசை. ஜோஷி , சரவணன் ஒளிப்பதிவு. படம் பற்றி இயக்குனர் சண்முகராஜ்
கூறியதாவது: இதுவரை சினிமாவில் சொல்லப்படாத காதல் கதை என்று தைரியமாகச்
சொல்லும் படம் இது. ஒரு பையன் அல்லது பெண் எப்போது , யாரை காதலிப்பார்கள்
, எப்போது சண்டையிடுவார்கள். எப்போது திருமணம் செய்வார்கள் என்பதை படம்
பார்த்து தெரிந்துகொள்ளலாம். இதைப் பார்த்தால் கண்டிப்பாக காதலில்யாரும்
தோற்கமாட்டார்கள். எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள் என்று கேட்டால் ,
அதுதான் படம். இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் நடிப்பு பயிற்சி
அளித்து முழுப்படத்தையும் ஹேண்டிகேமில் படமாக்கி , டிரையல் பார்த்தோம்.
அதில் திருப்தி ஏற்பட்டபின் மீண்டும்படத்தை ஷூட் பண்ணினோம். இப்படி
இதுவரை யாரும் படமாக்கியதில்லை. ஒவ்வொரு சீனும் ஒரே ஷாட்டில்
எடுக்கப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும்.
காமத்துப்பாலில் உள்ள 16 குறள்களுடன் யுகபாரதி வித்தியாசமான பாடலை
எழுதியுள்ளார். இது பேசப்படும் விதமாக இருக்கும். படப்பிடிப்பு
முடிந்துவிட்டது.விரைவில் பாடல் வெளியீடு இருக்கும். இவ்வாறு சண்முகராஜ்
கூறினார்.
Po
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger