News Update :
Powered by Blogger.

பாட்னா குண்டுவெடிப்பு: டெல்லி விமான நிலையத்தில் இன்று தீவிரவாதி பிடிபட்டான் patna bomb blast terrorist arrested delhi airport

Penulis : Tamil on Thursday 31 October 2013 | 03:30

Thursday 31 October 2013

பாட்னா குண்டுவெடிப்பு: டெல்லி விமான நிலையத்தில் இன்று தீவிரவாதி பிடிபட்டான் patna bomb blast terrorist arrested delhi airport

பாட்னா, அக். 31–

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் பலியானார்கள். 82 பேர் காயம் அடைந்தனர். பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசார கூட்டத்தை சீர்குலைக்க இந்த குண்டுவெடிப்புகளை இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் திட்டமிட்டு நடத்தி இருப்பது தெரியவந்தது.

தெக்சீன் அக்தர் என்ற தீவிரவாதி உத்தரவின் பேரில் நடந்த இந்த நாசவேலையில் 6 தீவிரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்தது. குண்டு வெடிப்பு நடந்த உடனே இம்தியாஸ் அன்சாரி, தவ்சீம், தாரிக் அன்சாரி ஆகிய 3 பேர் பிடிப்பட்டனர்.

இதில் அன்சாரி குண்டு காயம் காரணமாக உயிரிழந்தான். இதற்கிடையே இம்தி யாஸ் கொடுத்த தகவலின் பேரில் 4–வது குற்றவாளி உஜ்ஜர் அகமது நேற்று கைது செய்யப்பட்டான்.

இந்த நிலையில் இன்று டெல்லி விமான நிலையத்தில் முகம்மது அப்சல் என்பவனை போலீசார் கைது செய்தனர். இவன் நேற்று கைதான உஜ்ஜர் அகமதுவின் உறவினர் ஆவார்.

விமான நிலையத்தில் தன் மனைவியை பார்க்க வந்த போது முகம்மது அப்சல் சிக்கியது தெரிய வந்துள்ளது. இவனுக்கும் பாட்னா குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

முகம்மது அப்சலை தேசிய விசாரணைக் குழுவினர் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள். முகம்மது அப்சல் பிடிபட்டதன் மூலம் பாட்னா நாசவேலை தொடர்பாக சிக்கி இருக்கும் தீவிரவாதிகள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

முக்கிய குற்றவாளியான தெசீன் அக்தரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

...

shared via

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger