News Update :
Powered by Blogger.

காலனி ஆட்சியின் போது விஷவாயு செலுத்தி இந்தியர்களை கொல்ல நினைத்த விண்ஸ்டன் சர்ச்சில்: திடுக்கிடும் தகவல் Churchil wanted kill Indians using M Gas

Penulis : Tamil on Wednesday 2 October 2013 | 17:48

Wednesday 2 October 2013

காலனி ஆட்சியின் போது விஷவாயு செலுத்தி இந்தியர்களை கொல்ல நினைத்த விண்ஸ்டன் சர்ச்சில்: திடுக்கிடும் தகவல் Churchil wanted kill Indians using M Gas

Tamil NewsYesterday, 05:30

லண்டன், அக்.3-

இந்தியாவில் பிரிட்டிஷாரின் காலனி ஆட்சி நடைபெற்ற போது அதை எதிர்த்து போராடிய வட இந்திய மாலைவாழ் மக்களை இங்கிலாந்து முன்னாள் பிரதமர் விண்ஸ்டன் சர்ச்சில் விஷவாயு செலுத்தி கொல்ல நினைத்த திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அப்போது ஆட்சியை கவனித்து வந்த உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதிய விண்ஸ்டன் சர்ச்சில், வடமேற்கு இந்தியாவில் வாழும் பழங்குடியினர் நமது ஆட்சிக்கு எதிராக மிகவும் வேகத்தோடு போராடி வருகிறார்கள்.

அவர்களால் நமக்கு தொல்லையாகி விட்டது. விஷவாயுவை செலுத்தி அவர்களை அழித்துவிட வேண்டும் என்று குறிப்பிட்டதாக பிரபல வரலாற்று நாவலாசிரியர் கைல்ஸ் மில்டன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் வெளியுறவு துறை செயலாளராக சர்ச்சில் பதவி வகித்த போது 1918ம் ஆண்டு இவ்வகையிலான 50 ஆயிரம் விஷவாயு குண்டுகளை பிரிட்டிஷ் விமானப் படையினர் ரஷ்யாவின் போல்ஷெவிக்ஸ் பகுதியில் செம்படை ராணுவ முகாம்களின் மீது வீசியதாகவும் மில்டன் குறிப்பிடுகிறார்.

இங்கிலாந்தின் பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்னரே சர்ச்சைக்குரிய இந்த கடிதத்தை சர்ச்சில் எழுதியதாக குறிப்பிடும் மில்டன், பிரிட்டைனின் சிறப்புக்குரிய தலைவராக அறியப்படும் விண்ஸ்டன் சர்ச்சில் தொடர்பாக இதுபோன்ற தகவல்களை நீங்கள் வெளியிடுவதால் அவரது இமேஜூக்கு பாதகம் ஏற்படாதா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் விண்ஸ்டன் சர்ச்சில் பெரிய பிரிட்டைன் தலைவர் தான். ஆனால் அவரது நடத்தையின் மற்றொரு பக்கமும் உள்ளது.

பெரிய அளவில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதை அவர் ஆதரித்து வந்தது உண்மை என்று கூறினார்.
...
Show commentsOpen link

comments | | Read More...

கிளிநொச்சி – கொழும்பு ரயிலில் முதலாவது அதிர்ச்சிக் கொள்ளை! Srilanka train news

கிளிநொச்சி – கொழும்பு ரயிலில் முதலாவது அதிர்ச்சிக் கொள்ளை!
by abtamil
Tamil newsToday,

கொழும்பு – கிளிநொச்சி இரு வழிப் போக்குவரத்தில் கடந்த மாதம் முதல் ஈடுபட்டு வருகின்ற இரவு ரயிலில் முதலாவது அதிர்ச்சிக் கொள்ளை நேற்று இடம்பெற்று உள்ளது.

கிளிநொச்சி ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி ரயில் பயணித்துக் கொண்டிருந்தபோது 150000 ரூபாய் ரொக்கப் பணம், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன.

பொகவந்தலாவையை சேர்ந்த நால்வரே பாதிக்கப்பட்டவர்கள். ரயிலில் இவர்களுடன் கதைத்து வேறு இருவர் நெருக்கமாயினர். நால்வருக்கும் குடிக்க மென்பானம் கொடுத்து இருக்கின்றனர். இதை குடித்த பிற்பாடு நால்வரும் மயக்க நிலைக்கு தள்ளப்பட்டு தூங்கிப் போனார்கள்.

இவர்களின் உடைமையில் இருந்த பணம், நகை ஆகியவற்றை கொள்ளை அடித்துக் கொண்டு இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

பொலிஸார் கொள்ளையர்கள் இருவரையும் கண்டு பிடிக்க புலனாய்வுகளை முடுக்கி விட்டு உள்ளார்கள்.

Show commentsOpen link

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger