News Update :
Powered by Blogger.

ஒரு கோடி ரூபாய் செலவு செய்து மதுரை ஆதீனமானார் நித்யானந்தா

Penulis : karthik on Friday 27 April 2012 | 11:30

Friday 27 April 2012



width="200"


 
மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டார்.
 
சமீபத்தில் மதுரை ஆதீனம் மடத்துக்கு நித்தியானந்தா தனது சீடர்களுடன் வந்து ஆதீனத்தை சந்த ித்து ஆசிபெற்றார். அப்போது 6 அடி உயரமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட செங்கோலை மதுரை ஆதீனத்துக்கு நித்தியானந்தா வழங்கினார்.
 
அப்போதே மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்படுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. மதுரை ஆதீனமாவதற்கு நித்தியானந்தா ரூ 1 கோடி வரை செலவுசெய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
 
தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனம ான மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டிருக்கிறார். பெங்களூர் அருகே உள்ள பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் தியான பீட தலைமை அலுவலக வளாகத்தில் வைத்து முடிசூடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
 
மதுரை ஆதீனமாக தற்போது உள்ள அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர், நித்தியானந்தாவுக்கு கிரீடம் சூட்டி தனது அடுத்த வாரிசாக அறிவித்தார்.
 
பின� ��னர் மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
 
மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகாசன்னிதானமாக நித்தியானந்தாவை நாங்கள் இன்று அறிவித்து பிரகடனம் செய்கிறோம். அவர்தான் மதுரை ஆதீனத்தின் சட்டப்பூர்வமான அடுத்த மகா குரு. அவர் இனி ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா ஸ்வாமிகள் என்று அழைக்கப்படுவார்.
 
மதுரை ஆதீன மடத்தி� ��் வழிபாடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தை அவர் இனி முழுமையாக செயல்படுத்துவார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான 1250 ஏக்கர் நிலம், கோவில்கள் மற்றும் அனைத்து அசையும், அசைய சொத்துக்களையும் இனிமேல் நித்தியானந்தரே நிர்வகிப்பார்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இவ்விழாவில் நடிகை ரஞ்ச� �தா உள்பட பலரும் கல்ந்து கொண்டார்கள் என்றும் கூறப்படுகிறது.






http://stillsshow.blogspot.in




comments | | Read More...

மீண்டும் நடிக்க கதை தேடுகிறேன் -வடிவேலு



width="200"

காமெடி நடிகர் வடிவேலு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு படங்கள் எதிலும் நடிக்கவில்லை. சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார். தற்போது அவருக்கு மீண்டும் பட வாய்ப்பு கள் வருகின்றன. கதாநாயகனாக நடிக்கவும், மற்ற ஹீரோக்களுடன் காமெடி வேடங்களில் நடிக்கவும் பல இயக்குனர்கள் அவரை அணுகியுள்ளனர்.

சிம்புத்தேவன் இம்சை அரசன் 23-ம் புலிகேசி யின் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடிக்கவும் வடிவேலுவிடம் கதை சொல்லியுள்ளார். இப்படத்தின் முதல் பாகம் ரூ. 4 கோடிக்கு எடுக்கப்பட்டு ரூ. 20 கோடி வரை வசூல் ஈட்டியதாக செய்தி பரவியுள்ளது.

மீண்டும் நடிக்க தயாராவது குறித்து வடிவேலு கூறியதாவது:-

சினிமாவில் சில காலம் இடைவெளி விட்டு விட்டேன். இதனால் நிறைய படங்களில் நடிக்க இயலாமல் போனது. இதற்காக நான் வருத்தப்படவில்லை. சினிமாவில் பல வருடங்களாக பிசியாக நடித்து வந்தேன். இதனால் எனது குடும்பத்தினருடன் செலவிட நேரம் இல்லாமல் போனது. இப்போது குடும்பத்தினருடன் இருந்து நேரத்தை செலவிடுகிறேன்.

இந்த வாய்ப்பு கிட்டியமைக்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். மீண்டும் சினிமாவில் நடிக்க கதை தேடுகிறேன். சிலர் கதை சொல்லி உள்ளனர். சிம்புத்தேவனும் பிரமாதமான கதையொன்று சொல்லி இருக்கிறார். புதுப்படத்தில் நடிப்பது பற்றி விரைவில் முடிவு செய்வேன்.

இவ்வாறு வடிவேலு கூறினார்.






http://stillsshow.blogspot.in




comments | | Read More...

ஒரு கோடி ரூபாய் செலவு செய்து மதுரை ஆதீனமானார் நித்யானந்தா




மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக � ��ித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டார்.
 
சமீபத்தில் மதுரை ஆதீனம் மடத்துக்கு நித்தியானந்தா தனது சீடர்களுடன் வந்து ஆதீனத்தை சந்தித்து ஆசிபெற்றார். அப்போது 6 அடி உயரமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட செங்கோலை மதுரை ஆதீனத்துக்கு நித்தியானந்தா வழங்கின� �ர்.
 
அப்போதே மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்படுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. மதுரை ஆதீனமாவதற்கு நித்தியானந்தா ரூ 1 கோடி வரை செலவுசெய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
 
தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டிரு� �்கிறார். பெங்களூர் அருகே உள்ள பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் தியான பீட தலைமை அலுவலக வளாகத்தில் வைத்து முடிசூடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
 
மதுரை ஆதீனமாக தற்போது உள்ள அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர், நித்தியானந்தாவுக்கு கிரீடம் சூட்டி தனது அடுத்த வாரிசாக அறிவித்தார்.
 
பின்னர் மதுரை ஆதீனம் செய் தியாளர்களிடம் பேசியதாவது:
 
மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகாசன்னிதானமாக நித்தியானந்தாவை நாங்கள் இன்று அறிவித்து பிரகடனம் செய்கிறோம். அவர்தான் மதுரை ஆதீனத்தின் சட்டப்பூர்வமான அடுத்த மகா குரு. அவர் இனி ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா ஸ்வாமிகள் என்று அழைக்கப்படுவார்.
 
மதுரை ஆதீன மடத்தின் வழிபாடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தை அவர் இனி முழுமையாக செயல்படுத்துவார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான 1250 ஏக்கர் நிலம், கோவில்கள் மற்றும் அனைத்து அசையும், அசைய சொத்துக்களையும் இனிமேல் நித்தியானந்தரே நிர்வகிப்பார்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இவ்விழாவில் நடிகை ரஞ்சிதா உள்பட பலரும் கல்ந்து கொண்டார்கள் என்றும் கூறப்படுகிறது.



comments | | Read More...

மதுரை ஆதீனமாக முடிசூட்டப்பட்டார் நித்தியானந்தா!!!




தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூ ரில் நடந்த நிகழ்ச்சியில் நித்தியானந்தாவுக்கு முடி சூட்டப்பட்டுள்ளது.

மதுரைக்கு சமீபத்தில் நித்தியானந்தா வந்தார். அங்கு மதுரை ஆதீனகர்த்தரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவரிடம் 6 அடி உயரம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், நித்தியானந்தாவை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.

நித்தியானந்தாவின் மதுரை ஆதீன மட வருகை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில்தான் மதுரை ஆதீனகர்த்தராக அவருக்கு முடி சூட்டப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூர் அருகே உள்ள பிடாதியில் உள்ள நித்தியானந்தாவின் தியான பீட தலைமை அலுவலக வளாகத்தில் வைத்து முடிசூட்டல் நிகழ்ச்சி நடந்துள்ளது. மதுரை ஆதீனமாக தற்போது உள்ள அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர், நித்தியானந்தாவுக்கு கிரீடம் சூட்டி தனது அடுத்த வாரிசாக நித்தியானந்தாவை அறிவித்தார்.

பின்னர் மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகாசன்னிதானமாக நித்தியானந்தாவை நாங்கள் இன்று அறிவித்து பிரகடனம் செய்கிறோம். அவர்தான் � ��துரை ஆதீனத்தின் சட்டப்பூர்வமான அடுத்த மகா குரு சன்னிதானம். அவர் இனி ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா ஸ்வாமிகள் என்று அழைக்கப்படுவார்.

மதுரை ஆதீன மடத்தின் வழிபாடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தை அவர் இனி முழுமையாக செயல்படுத்துவார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான 1250 ஏக்கர் நிலம், கோவில்கள் மற்றும் அனைத்து அசையும், அசைய சொத்துக்களையும் இனிமேல் நித்தியானந்தரே நிர்வகிப்பார் என்றார் அவர்.

இந்தியாவின் மிகப் பழமையான ஆதீன மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். இது எப்போது தோன்றியது என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தம் இந்த ஆதீனத்தை உயிர்ப்பித்து புதுப்பித்தார். முத்தமிழுக்குச் சங்கம் வைத்த மதுரையில் இந்த ஆதீனத்த ை திருஞான சம்பந்தர் நிறுவினார்.

இப்படிப்பட்ட ஆதீனத்தின் அடுத்த தலைவராக நித்தியானந்தரைத் தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

என் வாழ்க்கை கதையை நானே டைரக்டு செய்கிறேன்: நடிகை சோனா பேட்டி




பிரபல கவர்ச்சி நடிகை சோனா. இவர் ரஜினியுடன் குசேலன், பத்து பத்து, கோ, மிருகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கனிமொழி என்ற படத்தையும் தயாரித்தார்.

சமீபத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில்ஏற்பட்ட தகராறில் போலீஸ், கோர்ட் என்றெல்லாம் சென்று வந்தார். சினிமாவில் பட்ட கஷ்டங்களை படமாக்கப் போவதாக சோனா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

என் வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் நடந்து விட்டன. அவற்றை சினிமா படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன். அந்த படத்தை நானே டைரக்டு செய்யப் போகிறேன்.

சில மாதங்களாக சினிமா பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தேன். மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளேன். இதற்காக உடல் எடையை குறைத்துள்ளேன். யுனிக் என்ற நிறுவனத்தை துவங்கி வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்து வருகிறேன்.

இந்த நிறுவனம் பேஷன் டிசைனர் சிட்னி ஷெல்டனுடன் இணைந்து ஆஸ்திரேலியாவில் கண்காட்சி மற்றும் பேஷன் ஷோ நடத்த உள்ளது. இதற்காக மாடல் அழகிகளுடன் விரைவில் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறேன்.

இவ்வாறு சோனா கூறினார்.

பின்னர் பேஷன் ஷோவில் பங்கேற்கும் அழகிகளை சோனா அறிமுகப்படுத்தினார். நடிகை சோனியா அகர்வால், சிட்னி ஷெல்டன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.



comments | | Read More...

ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு




நகைச்சுவைப் புயல் தன் ஓய்வு காலத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அடுத்த படத்துக்கான வேலைகளில் பரப� �ப்பாகிவிட்டார்.

அவரது அடுத்த படம், இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் 2-ம் பாகம்தான் என நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இப்போது சிம்பு தேவனுடன் கதை விவாதம் நடத்தியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள வடிவேலு, புதிய பொலிவுடன், அசத்தலான திரைக்கதையுடன் கூடிய படத்தில் நாயகனாக நடிக்கவிருப்பதாகக் கூறியுள்ளார்.

தனது அடுத்த படம் குறித்து வடிவேலு கூறுகையில், "சினிமாவில் சில காலம் இடைவெளி விட்டு விட்டேன். இதனால் நிறைய படங்களில் நடிக்க இயலாமல் போனது. இதற்காக நான் வருத்தப்படவில்ல� �. சினிமாவில் பல வருடங்களாக பிசியாக நடித்து வந்தேன். இதனால் எனது குடும்பத்தினருடன் செலவிட நேரம் இல்லாமல் போனது. இப்போது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறேன்.

இந்த வாய்ப்புக்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.

ரெஸ்ட் போதும்னு முடிவு பண்ணி, மீண்டும் சினிமாவில் நடிக்க கதை தேடுகிறேன். சிலர் பல கதைகள் சொல்லி உள்ளனர். சிம்புத்தேவன் பிரமாதமான கதையொன்று சொல்லி இருக்கிறார். விரைவில ் அறிவிப்பை வெளியிடுவேன்," என்றார்.

இந்த ஓய்வு நேரத்தில் வடிவேலு இணையதளங்களின் பயன்பாடு, அதில் வரும் செய்திகள் பார்ப்பது போன்றவற்றை முழுமையாகத் தெரிந்து கொண்டுவிட்டாராம்.

பேஸ்புக், ட்விட்டர்ல எப்போ அப்டேட் பண்ணப் போறீங்க?



comments | | Read More...

அன்புமணி ராமதாஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்




பாட்டாளி மக்கள் கட்சிய� �ன் நிறுவனர் டாக்டர் ராமதாசின் மகனான அன்புமணி ராமதாஸ், கடந்த 2004 -ல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சாராக பதவி வகித்து வந்தார். 2009- ல் நடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு சற்று முன் அவரது கட்சி செல்வி ஜெயலலிதா தலைமையில் அமைந்த எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர்ந்து, ஆளுங்கட்சியான காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிடத் தீர்மானி� �்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.
 
அவர் பதவியில் இருந்த காலத்தில் ம. பிரதேசம் இந்தூர் மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட அடிப்படை தகுதிகள் இல்லாத நிலையிலும் தனது பதவியை பயன்படுத்தி அங்கீகாரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தூர் மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அன்� �ுமணி ராமதாஸ் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
 
இதுகுறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ. சார்பில் அவர் மீதும் மேலும் 9 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
சுகாதாரத ்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் இரண்டு பேர் மற்றும் அங்குள்ள சப்தர்ஜங் என்கிற மருத்துவமனையின் மூத்த மருத்துவர்களான டி.கே.குப்தா, ஜே.எஸ்.தூபியா ஆகிய இரண்டு பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 



comments | | Read More...

ஆயுத முனையில் சிரிய ஆயுதக் குழுவால் உயிருடன் புதைக்கப்படும் நபர்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு




ஆயுதம் தாங்கிய சிலர் சூழ்ந்து நிற்க உயிருடன் புதைக்கப்படுகிறார் ஒருவர். இந்தக் கொடூரம் சிரியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சங்களைப் பதைபதைக்க வைக்கின்றது. புதைக்கப்படும் நபரை ஒரு மிருகத்துக்கு இணையாகத் தான் ஆயுதக் குழுவினர்
மேலும் வாசிக்க »

http://youtube-tamil.blogspot.com




comments | | Read More...

அலெக்ஸ்பால் மேனனை குறிவைத்து கடத்தியது ஏன்? மாவோயிஸ்டுகள் விளக்கம்!




சத்தீஸ்கரின் சுக்மா மாவட்ட ஆட்சியரான தமிழ்நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ்பால் மேனனை குறிவைத்து கடத்தியது ஏன் என்பத ு குறித்து மாவோயிஸ்டுகள் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மாவோயிஸ்டு அமைப்பதின் தென் பஸ்தான் பிராந்திய கமிட்டியின் செயலாளர் கணேஸ் உகியின் பெயரில் வெளியாகியுள்ள அந்த அறிக்கையில் பஸ்தார் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரால் பழங்குடி மக்கள் எதிர்கொண்ட சித்தரவதைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அலெக்ஸ்பால் மேனன் ஆட்சியராகப் பொறுப்பேற்ற காலத்தில் காவல்துறையால் சித்ரவதை செய்யப்பட்டோரின் பட்டியலையும் படுகொலை செய்யப்பட்டோர் விவரமும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழங்குடி மக்களை சித்ரவதை செய்த முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் அங்கித் க� �ர்க்கு குடியரசுத் தலைவரின் விருது வழங்கப்பட்ட போதும்கூட அலெக்ஸ்பால் அமைதியாகவே இருந்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் அந்த காவல்துறை கண்காணிப்பாளர் எத்தனை அப்பாவிகளை சித்தரவதைக்குள்ளாக்கினார் என்பது அலெக்ஸ்பால் மேனனுக்குத் தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலக வங்கியின் ஆலோசனையின் பேரில் தொடங்கப்பட்டுள்ள கிராம் சுராஜ் திட்டத்தைக் கைவிடுமாறு ஏற்கெனவே தாங்கள் எச்சரித்திருந்த போதும் மாவட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசாங்க நிர்வாகமானது அதை புறக்கணித்ததுடன் பஸ்தார் பிராந்தியத்தின் பெருமளவு இயற்கை கனிமவளத்தை ப ன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கவும் முயற்சித்தனர் என்றும் மாவோயிஸ்டுகள் குறிப்பிட்டுள்ளனர்.

தண்டேவாடா சிறையில் 150 பேரைத்தான் அடைத்து வைக்க முடியும்... ஆனால் 700க்கும் மேற்பட்டோரை அடைத்து வைத்துள்ளனர். இதேபோல் மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பழங்குடி மக்களை சிறையில் அடைத்துள்ளனர் என்றும் மாவோயிஸ்டுகள் அதில் தெரிவித் துள்ளனர்.

மாவோயிஸ்டுகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கடத்தல் சம்பவங்களை மேற்கொள்வது வழக்கம். ஆனால் தற்போது தங்களது கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகக் கூறி ஆட்சியரைக் கடத்தியிருப்பதற்கு மாவோயிஸ்டுகள் விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்காலை நிர்மூலமாக்கினோம்- ராணுவ தளபதி




முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான் ஈழப் போரில் வெல்ல முடிந்தது அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரியா தெரிவி்ததுள்ளார்.

ஜெயசூரியாவின் இந்தப் பேச்சு, ராஜபக்சேவுக்கு எதிரான போர்க்குற்றசாட்டுக்கு தேவையான வலுவான ஆதாரமாக பின்னர் உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஈழத்தில் நடந்த இறுதிகட்டப்போரின்போது முள்ளிவாய்க்காலில் விஷ கொத்துக்குண்டுகள் வீசி 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் இலங்கை அரசு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இலங்கையின் குருநாகல் பகுதியில் நடந்த ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரியா ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்கால் பகுதியை ராணுவம் நிர்மூலமாக்கியதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

கடந்த 2009ம் ஆண்டு இலங்கையின் வடக்கு பகுதியில் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளின் உதவியோடு போர் நடத்தினோம். கடைசியாக முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் நடத்துவதா வேண்டாமா என்று தோன்றியது. ஏனென்றால் அந்த பகுதியில் 45,000க்கும் அதிகமான தம ிழர்கள் வசித்து வந்தனர். அங்கு குண்டு போட்டால் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்களே என்று நினைத்தோம். மேலும் இறுதிகட்டப் போரை நடத்தக் கூடாது என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின.

இதையடுத்து அதிபர் ராஜபக்சேவிடம் ஆலோசனை நடத்தினோம். அப்போது அவர் எக்காரணம் கொண்டும் போரை நிறுத்த வேண்டாம் என்றும் சர்வதேச மிரட்டல்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்து திட்டமிட்டபடி தாக்குதல் நடத்துங்கள் என்று என்னிடம் தொலைபேசி மூலம் உத்தரவிட்டார்.

அவர் கொடுத்த தைரியத்தில் தான் போரை வெற்றிகரமாக நடத்த முடிந்தது. மேலும் போர்காலத்தில் அவர் தான் எங்களுக்கு பலமாக இருந்தார். அவர் மட்டும் மனிதாபிமான அடிப்படையில் இரக்கம் காட்டியிருந்தால் நம்மால் இறுதிகட்டப்போரில் வென்றிருக்க முடியாது. இறுதிகட்டப் போரில் நாம் வெல்ல உறுதுணையாக இருந்த நாடுகளையும், � �வர்கள் செய்த உதவிகளையும் மறக்கவே முடியாது என்றார் ஜெயசூர்யா.

ஜெயசூர்யாவின் இந்தப் பேச்சு மூலம் கடைசிக் கட்ட போரின்போது மிகக் கொடூரமாக தமிழர்கள் கொலை செய்யப்பட்டது உண்மைதான் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் ராஜபக்சே சொல்லித்தான் தாங்கள் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்றோம் என்பதையும் இந்த ஜெயசூர்யா கூறியுள்ளதால் இது ராஜபக்சேவின் போர்க்குற்ற செயல்பாடுகளுக்கான வலுவான ஆதாரமாக, வாக்குமூலமாக உருவெடுக்கும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger