News Update :
Powered by Blogger.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டை: 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

Penulis : karthik on Saturday 22 September 2012 | 15:38

Saturday 22 September 2012

லத்தேகர், செப்.23-
ஜார்க்கண்ட் மாநிலம், லத்தேகர் மாவட்டம், குர்டாக் கிராமத்தில் நேற்று
நக்சலைட்டுகள் நடமாட்டம்இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு எல்லை பாதுகாப்பு படை போலீசாரும், உள்ளூர் போலீசாரும்
விரைந்து சென்றனர். அங்கு நக்சலைட்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே
சுமார் ஒரு மணி நேரம் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 4
நக்சலைட்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
comments | | Read More...

பெண்களுக்கு ஆசை அதிகம்

மாதவிலக்கு சுழற்சி காலத்தில் பெண்களுக்கு பாலுணர்வு அதிகம் ஏற்படுமாம்.
இதற்கு காரணம் பெண்ணின் கருப்பையில் சுரக்கும்ஹார்மோன்தான் என்கின்றனர்
மருத்துவர்கள். இந்த நேரத்தில் உறவு கொண்டால் எளிதாக கரு உருவாகும்
என்கின்றனர் நிபுணர்கள்.
ஆண்களுக்கு பாலியல் உணர்வு ஏற்பட அவருடைய மன நிலையும், ஹார்மோன்களும்
காரணமாக உள்ளன. எனவேதான் ஒருவருக்கு விந்து விதைகளில் புற்றுநோய் காண்பது
போன்ற நிலைகளில் அறுவை சிகிச்சையின் மூலம் விந்து விதைகளை, எடுத்து
விட்டால், அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை குறைந்தோ,
அல்லது, அறவே இல்லாமலோ போய்விடுகின்றதாம்.
அதேபோல் பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சுழற்சி சமயத்தில்
தாம்பத்ய உறவு கொள்ள வேண்டும் என்ற நிலை இயல்பாகவே ஏற்படுமாம். ஆணோ,
பெண்ணோ அவர்களின் பாலியல் உணர்வுகளை தூண்டுபவை ஹார்மோன்களே.
டெஸ்ட்டோஸ்டிரன், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள்தான் மனித உடலுக்குள்
ரசாயண மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் உணர்வை தூண்டுகின்றன என்கின்றனர்
நிபுணர்கள். மனிதர்களின் மனதில் பாலியல் எண்ணங்கள் அல்லது காட்சிகள்
அல்லது உறவுகளின் போது டெஸ்ட்டோ ஸ்ட்ரோன் என்னும் ஹார்மோன்கள்
சுரக்கப்பட்டு பாலுணர்வு தூண்டப்படுகிறது.
பெண்களுக்கு மாத விலக்கு காலத்தில் ஏற்படும் ஹார்மோன் செயல்பாடுகளால்
செக்ஸ் உணர்வு மிகுதியாகும். அப்போது தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வது
பெண்களுக்கு மகிழ்ச் சியை தருவதோடு, அந்த நேரத்தில் சுரக்கும்
என்டார்பின் ஹார்மோன்வலி நிவாரணியாக மாறி, மாத விலக்கு காலவலியையும்
குறைக்கும். அதனால் கணவன், மனைவி இருவரும் விரும்பினால், சுகாதாரமான
முறையில் உடலுறவை மேற்கொள்ளலாமாம்.
பெண்ணின் கருப் பையிலிருந்து, மாதம் ஒரு நாள் கரு முட்டை வெளியாகும் கால
கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு தாம்பத்ய உறவு கொள்ள வேண்டும் என்ற உணர்வு
அதிகரிக்குமாம். ஏனெனில் கருமுட்டை வெளியாகும் காலத்தில், அவள் ஓர் ஆணோடு
தாம்பத்ய உறவு கொண்டால், அந்த நேரத்தில், ஆணிடமிருந்து வெளியாகின்ற ஆண்
விந்தில் உள்ள கரு முட்டையும் இணைந்து குழந்தை உருவாகி விடும். உயிரின
உற்பத்திக்காக தாம்பத்ய ஏற்படுத்திய ஆண்டவன், ஒரு பெண்ணிடம் இத்தகைய
நிலையை உருவாக்குகிறான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
பெண்களின் சினை முட்டைப் பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்தான் பெண்
தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது.
மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகம்
இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும். சிலருக்கு
மாதவிடாய் நிற்பதற்குமுன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு
தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். உடல்சூடு இரவில் அதிகம் வியர்த்தல்
தூக்கமின்மை அடிக்கடி கோபம் சலிப்பு மறதி மனஉளைச்சல் உடல் வலி போன்ற
பிரச்னைகள் தாக்கும். அப்பொழுது அவர்களுக்கு தாம்பத்ய உறவு கொள்வதற்கான
ஆசையும் குறைந்து விடுவதற்கு காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
comments | | Read More...

ஈவ் டீசிங் கொடுமையில் இருந்து மகளை காப்பாற்ற முயன்ற தந்தை வெட்டிக் கொலை

ஈவ் டீசிங் கொடுமையில் இருந்து மகளை காப்பாற்ற முயன்ற தந்தை வெட்டிக்
கொலை ஈவ் டீசிங் கொடுமையில் இருந்து மகளை காப்பாற்ற முயன்ற தந்தை
வெட்டிக் கொலை
ஈவ் டீசிங் கொடுமையில் இருந்து மகளை காப்பாற்ற முயன்ற தந்தை வெட்டிக் கொலை
பட்டாலா,செப்.22-
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் கோட் மஜ்லிஸ் கிராமத்தில்
வசித்து வந்தவர் குமார். இவரது மகளை அதே பகுதியில் வசிக்கும் சபி என்ற
வாலிபர் தொடர்ந்து ஈவ் டீசிங் செய்து வந்தார். இதனை குமார் பலமுறை
கண்டித்துள்ளார். ஆனால் எதையும் கேட்கவில்லை. கடந்த 6 மாதத்திற்கு முன்பு
கிராம பஞ்சாயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போதும் சபி
தனது தொந்தரவை நிறுத்தவில்லை. இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் சபி,
குமாரின் வீடு அருகே சென்று அவரது மகளுக்கு தொல்லை கொடுக்க தயாரானார்.
இதனார் ஆத்திரமடைந்த குமார், சபியை கண்டித்து அங்கிருந்து போகும்படி
எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரத்துடன் சென்ற சபி, சிறிதுநேரத்தில்
திரும்பி வந்து குமாரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஒடிவிட்டார்.
இதுபற்றி குமாரின் மனைவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார்
வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஈவ் டீசிங் கொடுமையில் இருந்து
மகளை பாதுகாக்கும் முயற்சியில் தந்தைகொல்லப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியது.
comments | | Read More...

மெக்சிகோவில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின

மெக்சிகோவில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின
மெக்சிகோவில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின
மெக்சிகோசிட்டி,செப்.22-
மெக்சிகோவின் தென்பகுதியில் உள்ள சில இடங்களில் இன்று காலை நிலநடுக்கம்
ஏற்பட்டது. பினோதிபா நசியோனல் நகருக்கு வடக்கே 25 கி.மீ. தொலைவிலும்,
மெக்சிகோவில் இருந்து 340 கி.மீ. தொலைவிலும் பசிபிக் பெருங்கடலில் இந்த
நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.இதனால் கட்டிடங்கள் குலுங்கின. இந்த
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்5.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல்
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் 5.8 ரிக்டராக நிலநடுக்கம்
ஏற்பட்டதாக மெக்சிகோ தேசிய நில அதிர்வியல் மையம் தெரிவித்தது. இந்த
நிலநடுக்கத்தினால் ஏற்பட்டபாதிப்புகள் குறித்து உடனடியாக தெரியவில்லை.
comments | | Read More...

பரபரப்புக்கு பஞ்சமில்லா நித்யாவின் அடுத்த பரபரப்பு!!

பரபரப்புக்கு பஞ்சமில்லா நித்யாவின் அடுத்த பரபரப்பு!!
மதுரை இளைய ஆதீனமான நித்யானந்தா பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவர்.

பிரபல நடிகையுடன் சல்லாப வீடியோ, மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்ற சர்ச்சைக்குப்பின் த ற்போது நித்யானந்தா குறித்த பரபரப்பு சற்று அடங்கியுள்ள நிலையில், வந்தேன் பார் என வந்துள்ளது பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் நித்யானந்தா பங்கேற்கும் செய்தி.

இதுகுறித்து அவரது உதவியாளர் டலே பக்வாகர், நித்யானந்தாவை பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு நிகழ்ச்சி நிர்வாகம் தங்களை அணுகியதாகவும், ஆனால் அவர் கலந்து கொள்வாரா இல்லையா என்பது குறித்து இப்போதைக்கு தெரி� �ிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் பிரபல சமூக சேவகர் அக்னிவேஷ் கலந்து கொண்டு பல்வேறு சமூக அவலங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்., நித்தியின் பலான விடியோவும் இந்நிகழ்ச்சியில் வருமோ.
comments | | Read More...

கெய்ல் சிக்சர் மழை பொழிவாரா? ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கெய்ல் சிக்சர் மழை பொழிவாரா?

கொழும்பு, செப். 22-
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிறிஸ்கெய்ல் சிறந்த
அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். ஐ.பி.எல். போட்டிகளில் அவரது அதிரடியான
ஆட்டத்தை ரசிகர்கள் யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். 20 ஓவர் உலக
கோப்பை போட்டியிலும் கிறிஸ்கெய்ல் முத்திரை பதித்து உள்ளார்.
உலக கோப்பை போட்டியில் அதிக சிக்சர் மற்றும் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர்
அடித்த வீரராக கெய்ல் உள்ளார். அவர் 11 ஆட்டத்தில் 27 சிக்சர் அடித்து
முதலிடத்தில் உள்ளார்.
2007-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 சிக்சர்
அடித்தார். உலக கோப்பையில் ஒரு ஆட்டத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்
இதுவாகும்.
உலக கோப்பையில் அதிரடியாக விளையாடி வரும் கிறிஸ்கெய்ல்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சிக்சர் மழை பொழிவாரா? என்று
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
ஆஸ்திரேலிய அணியில் வாட்சன், வார்னர் சிக்சர் அடிப்பதில் வல்லவர்கள்.
இதனால் இன்று வாணவேடிக்கை நிகழ்த்தப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
comments | | Read More...

பூபதி போபண்ணா மீதான டென்னிஸ் சங்க நடவடிக்கைக்கு கர்நாடக ஐகோர்ட்டு இடைக்கால தடை

பூபதி போபண்ணா மீதான டென்னிஸ் சங்க நடவடிக்கைக்கு கர்நாடக ஐகோர்ட்டு
இடைக்கால தடை பூபதி போபண்ணா மீதான டென்னிஸ் சங்க நடவடிக்கைக்கு கர்நாடக
ஐகோர்ட்டு இடைக்கால தடை
பூபதி போபண்ணா மீதான டென்னிஸ் சங்க நடவடிக்கைக்கு கர்நாடக ஐகோர்ட்டு இடைக்கால தடை
பெங்களூர், செப். 22- லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கானஇந்திய
டென்னிஸ் வீரர்கள் தேர்வின்போது, பயசுடன் விளையாட மகேஷ் பூபதியும், ரோகன்
போபண்ணாவும் மறுத்தனர். இதையடுத்து டேவிஸ் கோப்பை போட்டியில் இருந்து
இருவரும் நீக்கப்பட்டனர். அதன்பின்னர் பூபதி, போபண்ணா இருவருக்கும்
2014-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை சர்வதேச போட்டிகளில் விளையாட
அனைத்திந்திய டென்னிஸ் சங்கம் தடை விதித்தது. இந்த நடவடிக்கையை கடுமையாக
விமர்சித்த பூபதி, தடையை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக கூறியிருந்தார்.
அதன்படி கர்நாடக மாநில ஐகோர்ட்டில் பூபதி, போபண்ணா இருவரும் தங்கள் மீதான
தடையை நீக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதி மோகன்
சந்தானகவுடர், டென்னிஸ் வீரர்கள் மீதான 2 ஆண்டு தடைக்கு இடைக்கால தடை
விதித்தார். மேலும்மத்திய விளையாட்டு அமைச்சகம், அனைத்திந்திய டென்னிஸ்
சங்கம் ஆகியவற்றுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும்
உத்தரவிட்டார்.
comments | | Read More...

மகள் கொலை செய்யப்பட்டதை அறியாத தந்தை பத்திரிகைகளை பார்த்து கதறல்

கோவை: மகள் கொலை செய்யப்பட்டதை அறியாத தந்தை பத்திரிகைகளை பார்த்து கதறல்
கோவை: மகள் கொலை செய்யப்பட்டதை அறியாத தந்தை பத்திரிகைகளை பார்த்து கதறல்
கோவை: மகள் கொலை செய்யப்பட்டதை அறியாத தந்தை பத்திரிகைகளை பார்த்து கதறல்
கோவை, செப்.22-
கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட அபிநயாவின் தந்தை அய்யப்பன்
கோவை சிறையில் தண்டனைக்கைதியாக உள்ளார். இவருக்கு மகள் இறந்தது குறித்து
தகவல் தெரிவிக்கப்பட்டதா என ஜெயில் சூப்பிரண்டு முருகேசனிடம் கேட்ட போது
அவர் கூறியதாவது:-
ஜெயிலுக்குள் உள்ள கைதிகள் படிப்பதற்காக தினமும் 5 பத்திரிக்கைகள்
அனுப்பப்படுகிறது. அந்த பத்திரிக்கைகளில் வெளியாகியிருந்த செய்தியை
பார்த்துதான் மகளின் சாவை அய்யப்பன் தெரிந்து கொண்டார். கதறி அழுத
அவருக்கு சககைதிகள் ஆறுதல் கூறினர். தற்போது அய்யப்பனை பரோலில் எடுக்க
யாரும் வரவில்லை. கைதியை பரோலில்எடுக்க உறவினர்கள் அல்லது அவருடைய மனைவி
யாராவது கோர்ட்டில் மனுதாக்கல் செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
comments | | Read More...

தலை வழுக்கை ஆவது போல இருக்கா?

தலை வழுக்கை ஆவது போல இருக்கா? கவனிங்க... தலை வழுக்கை ஆவது போல இருக்கா?
கவனிங்க...
தலை வழுக்கை ஆவது போல இருக்கா? கவனிங்க...
September 22, 2012, 9:03 am[views: 125]
இன்றைய இளைஞர்களுக்கு விரைவிலேயே தலை கூந்தல் உதிர்ந்து, வழுக்கை
ஆகிவிடுகிறது. அதில் ஆண்கள் தான்பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று
பார்த்தால், பெண்களில் சிலருக்கும் ஏற்படுகிறது.
இதற்காக பல ஆய்வுகள் மேற்கொண்டாலும், சரியான காரணத்தை இன்னும்
கண்டுபிடிக்கவில்லை. கூந்தல் உதிர்தலுக்கான காரணத்தை அறிவதில் எவ்வளவு
கூர்மையாக இருக்கிறீருகளோ, அதேப்போல் தலை வழுக்கை ஆகாமலும் பார்த்துக்
கொள்ள வேண்டும்.
இயற்கையிலேயே அழகாக காணப்படும் ஆண்களின் அழகைக் கெடுப்பதில், வழுக்கை
முக்கிய பங்கை வகிக்கிறது. இதனால் சில ஆண்களுக்கு திருமணம் கூட
நடைபெறுவது கடினமான விஷயமாகிறது. மேலும் வழுக்கைத் தலை மாப்பிள்ளையை எந்த
பெண் தான்விரும்புவாள். ஆகவே ஆண்களே எதற்கும் கவலை படாமல், தலை வழுக்கை
ஆவதற்குள் கவனமாக கூந்தலை பராமரித்து வருவதற்கு சிலகுறிப்புகள்
இருக்கிறது.
* நிறைய ஆண்கள் கூந்தல் ஸ்டைல் செய்கிறேன் என்று கடைகளில் விற்கும்
கெமிக்கல் கலந்த ஜெல், கலர் என்று வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால்
கூந்தல் உதிர்தல் தான் ஏற்படும்.ஏனெனில் அவை தலையில் உள்ள மயிர்கால்களின்
வளர்ச்சியை தடுத்துவிடுகிறது. ஆகவே எப்போதும் ஸ்கால்ப்களை
சுத்தமாகவைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் ஆண்களுக்கு கூந்தல் குறைவாக
இருப்பதால், அவர்கள் தினமும் கூட தலைக்கு மைல்டு ஷாம்பு போட்டு
குளிக்கலாம். இதனால் ஸ்கால்ப் சுத்தமாக இருக்கும். கூந்தலும் வளரும்.
* வைட்டமின் ஈ சத்து ஸ்காப்பிற்கு நல்ல ஆரோக்கியத்தைதருகிறது. ஏனெனில்
இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
இதனால் தலையில் உள்ள மயிர் கால்கள் நன்கு புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு,
கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
* எப்படி உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் அவசியமோ, அதேப்போல்
கூந்தல் வளர்ச்சிக்கும் போதிய ஊட்டசசத்துக்கள் இருக்க வேண்டும்.
மருத்துவர்களிடம் கூந்தல் உதிர்தலுக்கான காரணங்கள் என்னவென்று கேட்டால்,
அவர்களும் ஊட்டச்சத்துக்களான இரும்பு, ஜிங்க், காப்பர் மற்றும்புரோட்டீன்
குறைவாக இருப்பதால், கூந்தல் உதிர்தல் ஏற்படுகிறது என்று கூறுவார்கள்.
ஆகவே டயட்டில் முட்டை, ப்ராக்கோலி, கீரைகள் மற்றும் மீன் போன்றவற்றை
அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* கூந்தலின் அடர்த்தியை பராமரிப்பது என்பது முக்கியமான ஒன்று. அதற்கு
முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் பீர் நல்ல பலனைத் தரும். ஆகவே
வாரத்திற்கு ஒரு முறை கூந்தலுக்கு உபயோகித்து வந்தால், கூந்தல் நன்கு
அடர்த்தியாக வளரும்.ஆகவே மேற்கூறியவாறு கூந்தலை பராமரத்து வந்தால்,
வழுக்கை ஏற்படுவதை தடுப்பதோடு, கூந்தல் நன்கு அடர்த்தியாக,
ஆரோக்கியமானதாக இருக்கும்.
comments | | Read More...

தந்தையை திருமணம் செய்து அவருடன் இல்ல‍ற பந்தத்தில் ஈடுபட்ட‍ மகள் – அதிர்ச்சியான ஆச்சரியமா விநோத செய்தி

அமெரிக்காவில் ஒகியோ மாகாணத்தில் உள்ள டாய் லெஸ் நகரைச் சேர்ந்தவர் வலேரி
ஸ்புரூயில்ஸ். தற்போது இவருக்கு 60 வயதா கிறது. இவர் பெர்சி என்ற நபரை
திருமணம் செய்து இருந்தார்.
அவர் லாரி டிரைவராகவும், வாக னங்களை உரிய இடங்களில் நிறு த்தும்
பணியிலும் ஈடுபட்டு வந்தா ர். இந்த நிலையில் கடந்த 1998-ம் ஆண்டு பெர்சி
இறந்து விட்டார். அதன்பிறகு தன்னுடன் கணவராக வாழ்ந்தவர் தனது தந்தை எனஅ
றிந்து கொண்டார்.
இது வலேரிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர் ந்து அவர்
அறையில் சீப்பில் இருந்த பெர்சியின் தலைமுடியை டி. என்.ஏ. பரிசோதனை
செய்து அவர் தனது தந்தை என்பதை உறுதி செய்தார். வலேரியின் தாய்
கிறிஸ்டினா ஒரு ஜாலி பேர்வழி. பல ஆண்களுடன் தொடர்பு வைத்து கொள்பவர்.
இந்த நிலையில்தான் பெர்சி தனது 15 வயதில் கிறிஸ்டினாவை சந்தித்து
அவருடன்உறவு வைத்துள்ளார். அப்போதுதான் வலேரி பிறந்து இருக்கிறார்.
இவரைஅவரது தாயார் கிறிஸ்டினா வளர்க்கவில்லை. பிறந்த 3 மாதத்தில் இருந்தே
தாத்தா-பாட்டிதான் வளர்த்து வந்தனர்.
இவரை மட்டுமல்ல. கிறிஸ்டினா பெற்ற பல குழந்தைகளையும் அவ ர்கள்தான்
பராமரித்தனர். எனவே, அவர்களைதான் வலேரி தனது பெற்றோராக கருதி வந்தார்.
இதற்கிடையே கிறிஸ்டினா அவ்வப் போது தனது பெற்றோரை பார்க்க வருவார். ஆனால்
அவரை தாய் என அறிமுகப்படுத்தி வைக்கவில்லை. மாறாக குடும்ப நண்பர் என
சொல்லி வைத்தனர்.
வலேரி 9 வயதாக இருந்தபோது கிறிஸ்டினா இறந்து விட்டார். அப்போதுதான் இவர்
அவர் தனது தாயார் என தெரியவந்தது. இதுபோ ன்று பல அதிர்ச்சி சம்பவங்களை
வலேரி தனது வாழ்க்கையில் சந்தித்து வந்தார்.
கணவராவதற்கு முன்பு பெர்சியை தன்னை வளர்த்த குடும்பத்தினரு டனோ,
கிறிஸ்டினாவுடனோ வலேரி பார்த்ததில்லை. எனவே, அவர் தனது தந்தை என்று
தெரியாமலேயே திருமணம் செய்து மனைவி யாக வாழ்ந்து விட்டார். மேல்நாட்டு
கலாச்சார உறவுமுறைகளில் இது போன்ற சீர்கேடுகள் ஏற்படுவது சகஜமாக உள்ளது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger