News Update :
Powered by Blogger.

அமெரிக்காவில் டி.டி.ஹெச்சில் விஸ்வரூபம் 2 vishvaroopam 2 in america

Penulis : Tamil on Monday 30 September 2013 | 18:45

Monday 30 September 2013

அமெரிக்காவில் டி.டி.ஹெச்சில் விஸ்வரூபம் 2

by admin
TamilSpyToday,

விஸ்வரூபம் 2 படத்தை இந்தியாவில் வெளியிட எதிர்த்தால் அமெரிக்காவில் டி.டி.ஹெச்சில் வெளியிடப் போவதாக கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படமே டிடிஹெச்சில் வெளியிடுவதாக இருந்தது.

அதன் பிறகு பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு ஒரு வழியாக தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் கமல் விஸ்வரூபம் 2 படத்தை டிடிஹெச்சில் வெளியிட முடிவு செய்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடந்த இந்திய திரைப்பட தொழில் வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய கமல் கூறுகையில்,

படங்களை டிடிஹெச் மூலம் டிவிகளில் வெளியிடுவது அதை எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கை ஆகும்.

டிவியில் ஒளிபரப்புகையில் உரிய கட்டணம் வசூலிக்கப்படும்.

மக்கள் படத்தை டிவியில் மட்டுமே பார்க்க முடியும் என்று இல்லை.
தியேட்டர்களிலும் படம் ரிலீஸ் செய்யப்படும்.

இருப்பினும் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

அனைத்து வீடுகளிலும் சமையல் அறைகள் உள்ளது.

இருப்பினும் எதற்காக ஏராளமான ஹோட்டல்கள் உள்ளன.

விஸ்வரூபம் 2 படத்தை டிடிஹெச்சில் வெளியிட திட்டமிட்டிருக்கிறேன்.

இதற்கு இந்தியாவில் அனுமதி கிடைக்காவிட்டால் அமெரிக்காவில் ஒளிபரப்புவேன் என்றார்.

அதிசயமான மனிதர்கள் – வீடியோ…

Show commentsOpen link

comments | | Read More...

லல்லுவை காப்பாற்றவே அவசர சட்டம்: வெங்கய்யா நாயுடு குற்றச்சாட்டு BJP says ordinance aimed to save Lalu

Penulis : Tamil on Saturday 28 September 2013 | 19:01

Saturday 28 September 2013

லல்லுவை காப்பாற்றவே அவசர சட்டம்: வெங்கய்யா நாயுடு குற்றச்சாட்டு BJP says ordinance aimed to save Lalu

Tamil NewsYesterday,

பெங்களூர், செப்.29-

கால்நடை தீவன ஊழல் வழக்கின் தீர்ப்பையொட்டி பீகார் முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவை காப்பாற்றவே தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளின் பதவியை பறிக்கும் சுப்ரீம் கோர்ட்டின் அறிவுரையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி அவசர சட்டத்தை இயற்றியுள்ளது என வெங்கய்யா நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு கூறியதாவது:-

லல்லு பிரசாத் யாதவ் மீதான கால்நடை தீவன ஊழல் வழக்கில் வரும் 30ம் தேதி (நாளை) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

30ம் தேதிக்குள் அவசர சட்டத்தை தாக்கல் செய்யாவிட்டால், ஒருவேளை தீர்ப்பு லல்லுவுக்கு பாதகமாக அமைந்து விட்டால், அவர் எம்.பி. பதவியை இழக்க நேரிடும்.

பதவி இழப்பில் இருந்து அவரை காப்பாற்றவே காங்கிரஸ் இந்த அவசர சட்டத்தை தாக்கல் செய்துள்ளது. மேலும், சமீபத்தில் தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூத் போல் மேலும் பலர் தொடர்பான வழக்குகளிலும் தீர்ப்பு பாதகமாக மாறலாம் என்பதையும் உணர்ந்தே காங்கிரஸ் கட்சி அவசர சட்டம் என்ற அயுதத்தை எடுத்துள்ளது.

இந்த அவசர சட்டத்தை கிழித்து தூர எறிய வேண்டும் என்று ராகுல் காந்தி பேட்டியளித்தது, காங்கிரஸ் கட்சியின் இமேஜை சரியவிடாமல் தற்காத்துக்கொள்ள செய்யப்பட்ட முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அரசியல் ஸ்டண்ட் ஆகும்.

இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் உண்மையான முதலாளி யார்? என்பதை ராகுல் காந்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு உணர்த்தியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட் கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் பதவியை பறிக்கும்படி தீர்ப்பளித்தது.

85 நாட்கள் வரை காங்கிரஸ் கட்சியோ, ராகுல் காந்தியோ இதுதொடர்பாக வாயை திறக்கவில்லை. அவர்கள் கொண்டுவந்த அவசர சட்டம் ஒரே நாளில் எடுக்கப்பட்ட முடிவல்ல.

இதனை எதிர்த்து அனைத்து தரப்பிலும் இருந்து கண்டன குரல்கள் எழுந்த பின்னர், இந்த அவசர சட்டத்தின் நோக்கம் என்ன என்பது தொடர்பாக ஜனாதிபதி கேள்வி எழுப்பிய பின்னர் தான் ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.
...
Show commentsOpen link

comments | | Read More...

விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது! – ரஜினி வருத்தம் rajini feeling

விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது! – ரஜினி வருத்தம்

by abtamil

சென்னை: இந்திய சினிமா நூற்றாண்டு விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது. பிலிம்சேம்பர் அழைப்பை நம்பி போனது தவறாகிவிட்டது, என சூப்பர் ஸ்டார் ரஜினி வருத்தப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. நான்கு நாட்கள் நடந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழா கிளப்பியுள்ள சர்ச்சைகள், கசப்புணர்வுகள், அடுத்த ஆட்சி மாற்றம் நிகழும் வரை நீடிக்கும் போலிருக்கிறது.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், இளையராஜா போன்றவர்களை அழைத்து அவமானப்படுத்தியதும், கருணாநிதி, ரஹ்மான் போன்றவர்களை அழைக்காமல் அவமதித்ததும் தமிழ் சினிமா உலகம் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. ரஜினியை கடைசி வரிசையில் கடைசி நாற்காலியில் உட்கார வைத்தது குறித்து திமுக தலைவர் கருணாநிதி பெரும் வருத்தமும் கண்டனமும் தெரிவித்திருந்தார். இந்த விழாவில் கலந்து கொண்டபோது ஏற்பட்ட அவமரியாதை குறித்து, தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிடம், 'விழாவிற்கு நான் சென்றிருக்கக் கூடாது. ஃபிலிம் சேம்பர் அழைத்ததே என்பதற்காகத்தான் போயிருந்தேன். அது தவறாகிவிட்டது. ரொம்ப ரொம்ப அவமானப்படுத்தி விட்டார்கள். ஒவ்வொரு கலைஞனும் இந்த விழாவில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறான்', என்று தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

மற்ற கலைஞர்கள் தங்கள் வேதனையைக் கூட வெளிப்படுத்த முடியாத சங்கடத்தில் உள்ளனர்.

Show commentsOpen link

comments | | Read More...

இந்தியா அமெரிக்கா இடையே அணுசக்தி துறையில் முதல் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து US India Signed the first trade agreement

Penulis : Tamil on Friday 27 September 2013 | 18:44

Friday 27 September 2013

இந்தியா அமெரிக்கா இடையே அணுசக்தி துறையில் முதல் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து US India Signed the first trade agreement

Tamil NewsYesterday,

வாஷிங்க்டன், செப். 28-

இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி துறையில் முதல் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பிறகு முதன் முறையாக இந்த துறையில் வர்த்தக ரீதியிலான முதல் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஒபாமாவை நேற்று சந்தித்து பேசினார். பின்னர் அவர்கள் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது, கடந்த சில நாட்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இந்திய அணுசக்தி கழகத்திற்கும், அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கும் இடையே இந்தியாவில் அணுசக்தி மின் திட்டம் அமைப்பது தொடர்பாக முதல் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதாக ஒபாமா தெரிவித்தார். அதே நேரத்தில், இந்தியா நிறைவேற்றியுள்ள அணுமின் திட்ட விபத்து இழப்பீடு சட்டத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து, ஒபாமா தனது பேட்டியில் எதுவும் குறிப்பிடவில்லை.

மேலும் இந்தியாவுடனான நல்லுறவை வலுப்படுத்த தான் உறுதி பூண்டு இருப்பதை மீண்டும் வலியுறுத்திய அவர், இந்தியா ஆசிய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் பெரிய சக்தியாக விளங்கி வருவதாக கூறினார். பிரதமர் மன்மோகன் சிங்கும் இரு நாட்டு நல்லுறவு மேம்பாட்டில் ஒபாமாவின் கருத்தை பிரதிபலித்தார்.

பிரதமர் மன்மோகன்சிங், தனது பேட்டியின்போது பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையப்பகுதியாக தொடர்ந்து திகழ்ந்து வருவதாக தாக்குதல் தொடுத்தார். இருப்பினும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடனான சந்திப்பை எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்தார். முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அளித்த பேட்டியிலும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தார்.

...
Show commentsOpen link

comments | | Read More...

நிலநடுக்கத்திற்குப் பின் பாகிஸ்தான் அருகில் தோன்றியுள்ள 3 புதிய தீவுகள் Pakistan gets 3 new islands following earthquake

நிலநடுக்கத்திற்குப் பின் பாகிஸ்தான் அருகில் தோன்றியுள்ள 3 புதிய தீவுகள் Pakistan gets 3 new islands following earthquake
Tamil NewsYesterday, 05:30

புதுடெல்லி, செப். 27-

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலுசிஸ்தான் மாகாணத்தையே அந்த நிலநடுக்கம் புரட்டிப் போட்டது. இதன் தாக்கம் டெல்லி வரை உணரப்பட்டது.

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அடங்கியபோது க்வாடர் நகரத்தின் கடற்கரைப் பகுதியில் வாழும் மக்கள் ஒரு புதிய தீவு ஒன்று கடற்பரப்பில் தோன்றியுள்ளதைப் பார்க்க நேர்ந்தது. இந்தப் புதிய தீவு 600 அடி விட்டமும் 30 அடி உயரமும் உள்ளது என்று இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (டபிள்யூடபிள்யூஎப்) அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகரான முகமது மோசம் கான் தெரிவித்தார். கற்களும், மென்மையான மண்ணும் நிரம்பியுள்ள இந்தத் தீவின் மேற்பரப்பில் வாயு வெளியேறிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தவிர பலுசிஸ்தான் கடற்பகுதியிலும் இரண்டு புதிய தீவுகள் தோன்றியுள்ளன. ஒமாரா நகரின் அருகேயுள்ள இந்தத் தீவுகள் சிறியவை என்றும், 30-40 அடி விட்டமும், 2-3 அடி உயரமும் கொண்டவை இவை என்றும் கான் தெரிவித்தார். இந்தத் தீவுகளில் இருந்தும் வாயு வெளிவந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

இதுபோன்று தோன்றும் தீவுகளில் சில தீவுகள் அப்படியே நிலைத்து இருக்கும் என்றும் சில தீவுகள் காலப்போக்கில் மறைந்துவிடும் என்று கான் தெரிவித்தார். கடந்த 1945 ஆம் ஆண்டு அரை கி.மீ நீளத்தில் ஒன்றும், இரண்டு கி.மீ நீளத்தில் ஒன்றுமாக இரண்டு தீவுகள் தோன்றியதாகவும் அவர் கூறினார்.
...
Show commentsOpen link

comments | | Read More...

அவசர சட்டம் முட்டாள்தனமானது; கிழித்து எறியவேண்டும் ராகுல் காந்தி கருத்தால் பரபரப்பு Nonsense Ordinance Rahul Gandhi concept

அவசர சட்டம் முட்டாள்தனமானது; கிழித்து எறியவேண்டும் ராகுல் காந்தி கருத்தால் பரபரப்பு Nonsense Ordinance Rahul Gandhi concept

Tamil NewsToday, 05:30

புதுடெல்லி, செப். 27-

தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதில் இருந்து பாதுகாக்க வகைசெய்யும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இச்சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று பா.ஜனதா வலியுறுத்தியது. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியிலும் எதிர்ப்பு உள்ளது. "எங்களில் பலர் இந்த அவசரச் சட்டத்தை எதிர்க்கிறோம். ஏன் இந்த அவசரம்?"  என்று கேள்வி எழுப்புகிறர் காங்கிரஸ் எம்.பி. சந்தீப் தீக்சித். இதேபோல் மிலிந்த் தியோரா, திக்விஜய் சிங், பிரியா தத், அனில் சாஸ்திரி ஆகியோரும் அவசரமாக இந்த சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, இந்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் அவர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வரும் அவசரச் சட்டம் முற்றிலும் தவறானது என்பது எனது தனிப்பட்ட கருத்து.  அவசரச் சட்டத்தை கிழித்து எறிய வேண்டும். இது அரசியல் முடிவாகும். ஒவ்வொரு கட்சியும் இதைத்தான் செய்கிறது. இந்த முட்டாள்தனமான காரியத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஒவ்வொரு கட்சியும் தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு கட்சியிலும் தவறு இழைக்கப்படுகிறது. இந்த தவறை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய தருணம் இது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவசரச் சட்டத்தை நியாயப்படுத்தி மத்திய சட்ட மந்திரி கபில் சிபல் பேட்டி அளித்த பிறகு ராகுல் காந்தி இவ்வாறு கூறியிருப்பது அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசுக்கும் தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது.

கட்சியின் நிலைப்பாட்டை ராகுல் காந்தி தெளிவுபடுத்தியிருப்பதாகவும், அவசர சட்டத்தை ராகுல் எதிர்த்தால் காங்கிரசும் எதிர்க்கும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் எம்.பி. கூறினார்.

அவசர சட்டம் தொடர்பாக உள்துறை மந்திரி ஷிண்டே, சட்டத்துறை மந்திரி கபில் சிபல் உள்ளிட்ட மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆளுங்கட்சியின் மூத்த தலைவர்கள் இதில் அக்கறை காட்டாத நிலையில், அவசர சட்டம் வாபஸ் பெறப்படலாம் எனத் தெரிகிறது.
...
Show commentsOpen link

comments | | Read More...

போலியான பிறப்புறுப்பில் சிறுநீரை நிரப்பி பரிசோதனைக்கு வழங்கிய ஓட்ட வீரர் sports news

போலியான பிறப்புறுப்பில் சிறுநீரை நிரப்பி பரிசோதனைக்கு வழங்கிய ஓட்ட வீரர்
by Marikumar

விளை­யாட்டில் ஈடு­ப­டு­ப­வர்கள் போதை மருந்­து­களை உப­யோ­கித்­துள்­ளார்­களா என்­பதைக் கண்­ட­றி­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­படும் சிறுநீர் பரி­சோ­த­னைக்­காக போலி பிறப்­பு­றுப்­பொன்றில் நிரப்­பப்­பட்ட சிறு­நீரை வழங்­கிய இத்­தா­லிய நெடுந்­தூர ஓட்ட வீரர் ஒருவர் ஒழுங்­கீன நடத்­தையில் ஈடு­பட்­ட­தாக குற்­றச்­சாட்டை எதிர்­கொண்­டுள்ளார்.

டேவிஸ் லிக்­சி­யார்டி (27 வயது) என்ற மேற்­படி நபர், நிஜ பிறப்­பு­றுப்பைப் போன்ற தோற்­றத்தைக் கொண்ட போலி பிறப்­பு­றுப்பில் குழந்­தை­யொன்றின் சிறு­நீரை நிரப்பி தனது சொந்த சிறுநீர் போன்று பரிசோதனையின் போது வழங்கி யுள்ளார்.

மேற்படி 10 கிலோமீற்றர் ஓட்டப்போட்­டியில் பங்­கேற்ற இத்­தா­லிய விமா­னப்­ப­டைக்­ கு­ழுவில் அங்கம் வகித்த டேவிஸின் ஏமாற்று நட­வ­டிக்­கையை அவ­ரது அதி­கா­ரிகள் கண்­ட­றிந்­த­தை­ய­டுத்து அவர் தீவிர விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

செயற்கை பிறப்­பு­றுப்­புடன் இணைக்­கப்­பட்ட விசேட பையில் சிறுநீரை நிரப்பி அதனை சிறிய கரு­வியின் மூலம் லேசாக வெப்­ப­மூட்டி செயற்கை பிறப்­பு­றுப்­பி­னூ­டாக வெளியேற்றி புதிதாக சிறுநீர் கழிப்பதை போன்ற தோற்றப்பாட்டை அவர் ஏற்படுத்தியிருந்தார்.
Share |

Show commentsOpen link

comments | | Read More...

ட்ரையல் ரூமில் உள்ள பெண்களை ரகசியமாக படம்பிடித்த டெய்லர் tailor shoot video of girl in trail room

Penulis : Tamil on Thursday 26 September 2013 | 22:44

Thursday 26 September 2013

ட்ரையல் ரூமில் உள்ள பெண்களை ரகசியமாக படம்பிடித்த டெய்லர்
by abtamil

ராய்பூரில் டெய்லர் கடை நடத்தும் ஒரு நபர் பெண்களின் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராவை வைத்து ஆபாச படங்களை எடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராய்பூரில் டெய்லராக பணிபுரிபவர் அமித். இவர் பெண்கள் உடையை தைப்பதால், அவர்கள் ஆடை அளவு சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ள இவர் அவரது கடையில் ஒரு ட்ரையல் அறையை வைத்துள்ளார். பெரும்பாலான பெண்கள் ஆடைகளை தைக்க சரியான அளவு துணியை கொடுப்பதால் யாரும் அமித்தின் கடையில் உள்ள ட்ரையல் அறையை பயன்படுத்தமாட்டார்கள்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் ஆடையை வேண்டுமென்றே சிறியதாக தைத்த அமித், அதனை அப்பெண்ணிடம் கொடுத்தார். அமித் தைத்த துணியை பார்த்த அப்பெண் தான் சரியான அளவு துணி கொடுத்தப்போதிலும், ஏன் ஆடையை சிறியதாக தைத்ததாக கேட்டார். இதற்கு பதிலளித்த அமித், ஆடை சரியாக இருக்கும், வேண்டுமென்றால் ட்ரையல் அறையில் சரிபார்த்துக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.

இதனால் அப்பெண் ட்ரையல் அறைக்கு சென்றார். அங்கு ஏற்கனவே பல துணிகள் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த அவர், அதனை பிரித்து பார்த்தப்போது, அதில் கேமரா மொபைலில் இவரும் வேறு சில பெண்களும் ஆடை மாற்றிய காட்சிகள் பதிவாகியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அந்த மொபைலை எடுத்துக்கொண்டு போலீசிடம் சென்ற அப்பெண், டெய்லர் மீது புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், உடனடியாக அமித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Show commentsOpen link

comments | | Read More...

போலி பாஸ்போர்ட்டில் சவூதி அரேபியா சென்ற நாகர்கோவில் வாலிபர் கைது fake passport Saudi Arabia Nagercoil youth arrest

போலி பாஸ்போர்ட்டில் சவூதி அரேபியா சென்ற நாகர்கோவில் வாலிபர் கைது fake passport Saudi Arabia Nagercoil youth arrest
Tamil NewsToday, 05:30

அவனியாபுரம், செப். 26–

நாகர்கோவிலை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் சுயம்பு (வயது35). இவர் போலி பாஸ்போர்ட் எடுத்து சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது சுயம்பு போலி பாஸ்போர்ட் எடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் அவரை திருப்பி அனுப்பினர்.

இன்று காலை விமானத்தில் சுயம்பு மதுரை வந்தார். போலி பாஸ்போர்ட் மூலம் சவூதி அரேபியா சென்ற அவரை அதிகாரிகள் பிடித்து பெருங்குடி போலீசில் ஒப்படைத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பழனி, சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சுயம்புவை கைது செய்தனர்.

...
Show commentsOpen link

comments | | Read More...

ஆணாக நடித்து 15 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவித்த 21 வயது பெண்! Tamil sex news

Penulis : Tamil on Wednesday 25 September 2013 | 07:45

Wednesday 25 September 2013

ஆணாக நடித்து 15 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவித்த 21 வயது பெண்! (படம் இணைப்பு)

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

ஆணாக நடித்து 15 வயது சிறுமியுடன் பாலியல் தொடர்பை பேணிவந்த 21 வயது இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் அமெரிக்காவின் York-Poquoson பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அப் பகுதியில் உள்ள அடர்ந்த புதர் வழியே பாதசாரி ஒருவர் பயணித்த வேளை, அப் புதரினுள் சிறுமியின் அனுங்கல் சத்தம் கேட்டதால் அது தொடர்பில் பொலீசாருக்கு தகவல் அளித்தார்.

பொலீசார் விரைந்து, அப் புதர் பகுதியை ஆராய்ந்தபோது, அங்கே சிறுமி ஒருவருடன் இளைஞன் ஒருவர் உல்லாசம் அனுபவித்துக்கொண்டு இருந்தமை ஆதாரத்துடன் பிடிக்கப்பட்டது.

குறித்த இளைஞனை கைது செய்து விசாரணை நடத்திய போது, அது ஆண் இல்லை, பெண் என்பது தெரிய வந்தது.

மைனர் சிறுமியை பலாத்காரம் செய்தமை தொடர்பில் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Show commentsOpen link

comments | | Read More...

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த பூகம்பம்: வீடுகள் இடிந்து விழுந்து 50 பேர் பலி Powerful earthquake strikes Balochistan

Penulis : Tamil on Tuesday 24 September 2013 | 09:53

Tuesday 24 September 2013

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த பூகம்பம்: வீடுகள் இடிந்து விழுந்து 50 பேர் பலி Powerful earthquake strikes Balochistan
Tamil NewsToday, 05:30

பலூசிஸ்தான், செப். 24-

பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதியிலுள்ள பலூசிஸ்தான் மாகாணம் பூகம்பத்தினால் அடிக்கடி பாதிக்கப்படும் பகுதியாகும். இப்பகுதியில் இந்தியன் தட்டும், யுரேசிய தட்டும் சந்திக்கிறது. இந்த இரண்டு தட்டுகளில் ஒன்று நகர்கிற போது அதன் தாக்கம் பாகிஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கமாக வெளிப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

இந்நிலையில் பலூசிஸ்தான் மாகாணத்தின் குஸ்தர் மற்றும் அவாரன் பகுதியில் இன்று மாலை கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆகப் பதிவான இந்த பூகம்பத்திற்கு அப்பகுதிகளில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இரவு 8 மணி நிலவரப்படி சுமார் 50 பேர் இறந்ததாக தகவல் வெளியானது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மிகப்பெரிய பலூசிஸ்தான் மாகாணத்தில் குறைந்த அளவே மக்கள் தொகை உள்ளது குறிப்பிடத்தக்கது.  இங்குள்ள தல்பாண்டியன் பகுதியிலிருந்து 145 கிலோ மீட்டர் தென்கிழக்கே 23 கிலோ மீட்டர் ஆழத்தில் இதன் பூகம்ப மையம் கொண்டிருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடுமையான இந்த பூகம்பத்திற்கு மிகப்பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்த பூகம்பத்தால் கராச்சி மற்றும் ஐதராபாத் பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலுவலகங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

மேலும் இப்பூகம்பத்தின் தாக்கம் டெல்லி, அரியானா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் உணரப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் பலூசிஸ்தான் எல்லையோரமாக ஈரானில் 7.8 அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. இதில் பலூசிஸ்தான் மாகாணத்தில் 41 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link

comments | | Read More...

16 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜெகன் மோகன் ரெட்டி இன்று ஜாமினில் விடுதலை Jagan Mohan Reddy freed on bail

Penulis : Tamil on Monday 23 September 2013 | 06:22

Monday 23 September 2013

16 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜெகன் மோகன் ரெட்டி இன்று ஜாமினில் விடுதலை Jagan Mohan Reddy freed on bail
Tamil NewsToday, 05:30

ஐதராபாத், செப். 23-

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் வைத்திருப்பதாக ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் சிலருக்கு எதிராக 10 குற்றப்பத்திரிக்கைகள் சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இதில் 5 வழக்குகள் இந்த மாதத்தில் பதிவு செய்யப்பட்டவையாகும்.

முன்பு ஒய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டி முதல் அமைச்சராக இருந்தபோது, ஆட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி ஜெகன் மோகனின் கம்பெனி மற்றும் தனியார் நிறுவனங்களில் அவர் முதலீடுகள் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

ஜெகன் மோகன் ரெட்டியின் மீதான குற்றப்பத்திரிக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட பின் அவர் ஜாமின் கோரி விண்ணபிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது.

இந்நிலையில் குற்றப்பத்திரிக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஜாமின் மனுவை சி.பி.ஐ. சிறப்பு கோர்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவரது மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, 2 லட்சம் ரூபாய் ரொக்க ஜாமீனில் ஜாமின் வழங்குவதாக தீர்ப்பளித்தார். மேலும், அவர் ஐதராபாத்தை விட்டு வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

இதனால், ஐதராபாத் சஞ்சல்குடா சிறையில் 16 மாத சிறைவாசத்துக்குப் பிறகு ஜெகன் மோகன் ரெட்டி இன்று ஜாமினில் விடுதலையானர். 
...
Show commentsOpen link

comments | | Read More...

கோலிவுட்டில் வலம் வரும் நஸ்ரியா ஜெய் காதல் கிசு கிசுக்கள்! Actress nasriya love news

Penulis : Tamil on Sunday 22 September 2013 | 08:57

Sunday 22 September 2013

கோலிவுட்டில் வலம் வரும் நஸ்ரியா ஜெய் காதல் கிசு கிசுக்கள்!

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

ஜெய்-நஸ்ரியா காதலிப்பதாக கோலிவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. சிம்பு, ஹன்சிகாவை தொடர்ந்து ஜெய்-நஸ்ரியா புதிய காதல் ஜோடிகளாக உலா வருவதாக கோலிவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. 'திருமணம் என்னும் நிக்ஹா' என்ற படத்தில் ஜெய்-நஸ்ரியா ஜோடியாக நடித்து வருகின்றனர்.

அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அது காதலாக மலர்ந்திருப்பதாக யூனிட்டில் உள்ளவர்கள் முணுமுணுக்கின்றனர். நஸ்ரியாவும், ஜெய்யும் எந்நேரமும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசிய வண்ணம் இருக்கின்றனர். ஷூட்டிங் முடிந்தபிறகும் மணிக்கணக்கில் செல்போனில் பேசுகிறார்களாம்.

ஏற்கனவே 'ராஜா ராணி' படத்தில் இணைந்து நடித்தாலும் இவர்கள் இருவருக்கும் பொது நண்பர் மூலம் நட்பு மலர்ந்தது. அன்று முதலே நஸ்ரியா மீது அதிக அக்கறை எடுத்துக்கொண்ட ஜெய், 'எந்த ஹீரோவுடனும் நெருக்கமான காட்சிகளில் நடிக்காதிங்க' என்று தடை விதித்திருப்பதாக கோலிவுட் பச்சி கிசுகிசுக்கிறது.

இது இயக்குனர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் சமீபத்தில் டாப் ஹீரோ ஒருவருடன் முதலிரவு காட்சியில் நடிக்க கேட்டபோது நஸ்ரியா மறுத்ததுடன் ஷூட்டிங்கிலிருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறிவிட்டாராம்.

பிறகு அவரை யூனிட்டில் உள்ளவர்கள் தொடர்புகொண்டபோது, 'நெருக்கமான காட்சிகளில் நடிக்க வற்புறுத்தமாட்டோம் என்று எழுதி தந்தால்தான் வருவேன்' என தெரிவித்தாராம். நஸ்ரியா-ஜெய் நெருக்கம் பற்றித்தான் இப்போது கோலிவுட் ஹாட் பேச்சாக உள்ளது.

Show commentsOpen link

comments | | Read More...

வாக்காளர் அடையாள அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தேர்தல் அதிகாரி தகவல் Apply online for voter identity card Election Officer Information

Penulis : Tamil on Saturday 21 September 2013 | 08:14

Saturday 21 September 2013

வாக்காளர் அடையாள அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தேர்தல் அதிகாரி தகவல் Apply online for voter identity card Election Officer Information
Tamil NewsToday,

சென்னை, செப்.21-

வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 944 பிரவுசிங் சென்டர்களுடன் தேர்தல் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. பொதுமக்கள் தங்கள் பெயரை சேர்க்கவே, முகவரியை மாற்றம் செய்யவோ பிரவுசிங் சென்டர்களில் சென்று மாற்றம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

மேலும், ஏற்காடு இடைத் தேர்தலை வரும் அக்.16-ந் தேதிக்குள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
...
Show commentsOpen link

comments | | Read More...

பாகிஸ்தானில் 4 சகோதரிகள் தற்கொலை: வரதட்சணை கொடுக்க வழியில்லாததால் உயிரை மாய்த்தனர் 4 Pakistani sisters kill themselves over dowry

Penulis : Tamil on Friday 20 September 2013 | 18:13

Friday 20 September 2013

பாகிஸ்தானில் 4 சகோதரிகள் தற்கொலை: வரதட்சணை கொடுக்க வழியில்லாததால் உயிரை மாய்த்தனர் 4 Pakistani sisters kill themselves over dowry
Tamil NewsYesterday,

முல்தான், செப். 20-

'ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்' என்று சொல்வார்கள். உண்மையில் இது ஐந்து விஷயங்களைப் பற்றியது என்றாலும், ஐந்து பெண் பிள்ளைகளை பெற்றவன் ஆண்டி ஆவான் என்று பேசுவது வழக்கமாக உள்ளது. இது சில நேரங்களில் உண்மையாகவும் ஆகிவிடுகிறது.

ஐந்து பெண்களை பெற்ற தந்தை, அவர்களை திருமணம் செய்து கொடுக்க படும் சிரமங்கள் அதிகம். அதுவும் ஏழையாக பிறந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். ஏழையாகப் பிறந்த அந்தப் பெண்களின் மனத்துயரங்களையும் சொல்லி மாளாது.

அந்த வகையில், வரதட்சணை கொடுக்க தந்தைக்கு வழியில்லாமல் போனதால், முதிர்கன்னியாக கண்ணீர் வடித்த சகோதரிகள் கால்வாயில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் நடந்துள்ளது.

பஞ்சாப் மாகாணத்தின் மெயில்சி நகரில் வசித்து வருபவர் பஷிர் அகமது ராஜ்புத். ஏழை விவசாயியான இவருக்கு 5 பெண் பிள்ளைகள். போதிய வருமானம் இல்லாததால், சீர்வரிசை, வரதட்சணை கொடுத்து மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை.

காலம் கடந்து முதிர்கன்னிகளாக மாறிவிட்ட அந்த பெண்களில் மூத்தவருக்கு வயது 45. அடுத்து 43, 38, 35 மற்றும் 31 வயதுடையவர்கள்.

இந்நிலையில், சகோதரிகள் 5 பேரும் தங்களின் திருமணம் தொடர்பாக தந்தையிடம் பேசினர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த 5 பேரும் கால்வாயில் விழுந்தனர். இதில் 4 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். கடைசி பெண்ணான பாத்திமாவை போலீசார் உயிருடன் மீட்டனர்.

...
Show commentsOpen link

comments | | Read More...

காதல் பிரச்சினையில் அண்ணா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளம்பெண் yong lady love matter

Penulis : Tamil on Thursday 19 September 2013 | 14:50

Thursday 19 September 2013

காதல் பிரச்சினையில் அண்ணா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!
by abtamil

ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,

சென்னை அண்ணா மேம்பாலத்தில் நேற்று மாலை 4 மணியளவில் இளஞ்சிவப்பு நிறத்தில் டி-சர்ட்டும், கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்த இளம்பெண் ஒருவர் ஆவேசமாகவும், கண்ணீருடனும் செல்போனில் பேசியபடி அங்கும், இங்குமாக நடந்து கொண்டிருந்தார்.

திடீரென்று அந்த பெண் மேம்பாலத்தின் கைப்பிடி சுவர் மீது ஏறி உட்கார்ந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை கீழே இறங்கும்படி கூறினார்கள்.

ஆனால் அந்தப்பெண் பாலத்தின் 20 அடி உயரத்தில் இருந்து தலைகுப்புற கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த பெண் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

அப்போது வேகமாக ஓடிவந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து கதறி அழுதார். பின்னர் உயிருக்கு போராடிய அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனையில் பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகின.

அண்ணா மேம்பாலத்தில் இருந்து குதித்து இறந்தவர் பெயர் அஞ்சலி(வயது 26). மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த இவர் சென்னை கோடம்பாக்கம் காமராஜர் கிழக்கு தெருவில் தனது 2 சகோதரர்கள்-சகோதரிகளுடன் தங்கியிருந்து, அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அஞ்சலி திருமணமாகி, விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருப்பது தெரியவந்தது.

அஞ்சலியை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தார்கள். விசாரணையில் அவர் அஞ்சலியின் காதலர் என்று தெரியவந்தது. அவரது பெயர் ஆல்.புவனேஸ்வர் (வயது 30) ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.

இவர் சென்னை கொரட்டூர் கிருஷ்ணசாமி நாயுடு தெருவில் தங்கியிருந்து, அஞ்சலி வேலை பார்த்த அழகு நிலையம் உள்ள கட்டிடத்தில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது அஞ்சலிக்கும், ஆல்.புவனேஸ்வருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்தனர். இந்தநிலையில் ஆல்.புவனேஸ்வருக்கு அவருடைய குடும்பத்தினர் பெண் பார்த்துள்ளனர். கடந்த 2 மாதமாக ஆல்.புவனேஸ்வர், அஞ்சலியிடம் பேசுவதை தவிர்த்து வந்தார்.

இதனால் மனமுடைந்த அஞ்சலி நேற்று மதியம் ஆல்.புவனேஸ்வரை சந்தித்து எதற்காக என்னை சந்திப்பதை தவிர்த்து வருகிறாய்? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது குடிபோதையில் இருந்த ஆல்.புவனேஸ்வர், அஞ்சலியை கடுமையான வார்த்தைகளால் திட்டினார்.

இதனால் வாழ்கையில் விரக்தியடைந்த அஞ்சலி அண்ணா மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

அஞ்சலி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக செல்போனில் தான் தற்கொலை செய்யும் முடிவை ஆல்.புவனேஸ்வருக்கு தெரிவித்துள்ளார். இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், அஞ்சலி அண்ணா மேம்பாலத்தில் இருந்து குதித்த பிறகே பதறியடித்து சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து, ஆல்.புவனேஸ்வரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அஞ்சலியை தற்கொலைக்கு தூண்டியது ஆல்.புவனேஸ்வர் என்று நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர்.

அஞ்சலி இறந்த தகவலறிந்த அவரது சகோதரர்-சகோதரிகள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அஞ்சலியின் பிணத்தை பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

பரபரப்பாக இயங்கக்கூடிய அண்ணா மேம்பாலத்திலிருந்து, மேற்கு வங்க பெண் அஞ்சலி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் நேற்று மாலை அண்ணா சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

Show commentsOpen link

comments | | Read More...

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ருசிகர சம்பவம்: மாரடைப்பால் இறந்ததாக கருதப்பட்ட ராணுவ வீரர் உயிரோடு வந்தார் soldier came alive thought to have died of heart attack

Penulis : Tamil on Wednesday 18 September 2013 | 18:31

Wednesday 18 September 2013

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ருசிகர சம்பவம்: மாரடைப்பால் இறந்ததாக கருதப்பட்ட ராணுவ வீரர் உயிரோடு வந்தார் soldier came alive thought to have died of heart attack
Tamil NewsYesterday, 05:30

சென்னை, செப்.19-

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணி ஒருவர் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். பஸ் நிலையத்திலேயே சுருண்டு விழுந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் 108 ஆம்புலன்ஸ் வேனை வரவழைத்தனர்.

மாரடைப்பால் சுருண்டு விழுந்த வரை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அந்த பயணி மரணம் அடைந்து விட்டார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

அவரது உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சவகிடங்கில் வைக்கப்பட்டது. கோயம்பேடு பஸ் நிலைய போலீசார், அவர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்தார். மாரடைப்பில் பயணி சுருண்டு விழுந்த இடத்தில் செல்போன் ஒன்று கிடந்தது என்று கூறி அந்த செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

அந்த செல்போன் மாரடைப்பில் இறந்த பயணியின் செல்போனாக இருக்கலாம் என்று போலீசார் கருதினர். அந்த செல்போனை வைத்து, இறந்தவரை அடையாளம் காண முயற்சி மேற்கொண்டனர். அந்த செல்போனில் கடைசியாக 3 எண்களில் தொடர்பு கொண்டு பேசியிருப்பது தெரியவந்தது.

அந்த 3 எண்களிலும் போலீசார் தொடர்பு கொண்டு பேசியபோது 3 பெண்கள் போனை எடுத்து பேசினார்கள். அந்த செல்போனின் சொந்தகாரரின் பெயர் ஜெமினி, அவர் திருவண்ணாமலை மாவட்டம் சீலனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

போலீசாரிடம் பேசிய 3 பெண்களும் ஜெமினியின் மனைவிகள் என்றும் கண்டறியப்பட்டது. ஜெமினி முன்னாள் ராணுவவீரர் என்றும் அவர் சென்னைக்கு வந்தார் என்றும், அவருடைய 3 மனைவிகளும் தெரிவித்தனர்.

மாரடைப்பில் இறந்தது ஜெமினி தான் என்று முடிவு செய்த போலீசார், உங்கள் கணவர் இறந்துவிட்டார் என்று அவர்களிடம் தெரிவித்தார்கள்.

இதைத்தொடர்ந்து அந்த 3 பெண்களும் தங்களது கணவர் ஜெமினி இறந்துவிட்டார் என்று கூறி கதறி அழுதபடி திருவண்ணாமலையிலிருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.

போலீஸ் நிலையத்திற்கு வந்து நடந்த சம்பவத்தை கேட்டு, நெஞ்சில் அடித்து போட்டி போட்டு அழுதார்கள். போலீசார் அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். பின்னர் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு சென்று கணவரின் உடலை பார்க்கலாம் என்று அந்த 3 பெண்களும் புறப்பட்டனர்.

அந்த நேரத்தில் தான் அந்த இன்ப அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இறந்ததாக கருதப்பட்ட ஜெமினி, போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தன்னுடைய செல்போன் தொலைந்துவிட்டதாகவும், அதை கண்டுபிடித்து தரும்படியாக மனுகொடுக்க வந்ததாக கூறினார். போலீஸ் நிலையத்தில் அவருடைய 3 மனைவிகளும் கண்ணீர் கோலத்தில் நிற்பதை பார்த்து அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

இறந்து போனதாக கருதிய தங்கள் கணவர் உயிரோடு வந்ததை பார்த்து 3 மனைவிகளும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இந்த காட்சிகளை பார்த்த போலீசாருக்கோ, நடந்த சம்பவம் கனவா? நனவா? என்று புரியவில்லை. என்றாலும் ஜெமினி உயிரோடு வந்தது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது. ஜெமினி சந்தோஷமாக தன்னுடைய மனைவிகளோடு போலீஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.

போலீசாருக்கு அடுத்த தலைவலி ஆரம்பமானது. பஸ் நிலையத்தில் மாரடைப்பில் இறந்தவர் யார்? என்று கண்டுபிடிக்கும் வேலையை தொடங்கிவிட்டனர்.
...
Show commentsOpen link

comments | | Read More...

சிறுமிகளை, அம்மனாக வழிபடும் புரட்டாசி திருவிழா sexy kovil thiruvizha

சிறுமிகளை, அம்மனாக வழிபடும் புரட்டாசி தி
by tnkesaven

New Tamil Jokes - Penmai.comToday, 1
மேலூர் அருகே, வெள்ளலூர் ஏழைகாத்தம்மன் கோவிலில், சிறுமிகளை, அம்மனாக வழிபடும் புரட்டாசி திருவிழா, நேற்று துவங்கியது.

மதுரை மாவட்டம், வெள்ளலூர், 60 கிராமங்களை உள்ளடக்கிய பகுதி. இதை ஐந்து மாகாணங்களாக பிரித்து, "வெள்ளலூர் நாடு என, அழைக்கின்றனர்.

இங்குள்ள ஏழைகாத்தம்மன் கோவில் திருவிழா, புரட்டாசிதோறும் கொண்டாடப்படும்.விழாவில் ஏழு சிறுமிகளை தேர்வு செய்து, அம்மனாக கருதி கொண்டாடுவர்.

நேற்று காலை, மூண்டவாசி, வேங்கபுலி உட்பட, 11 கரைகளை சேர்ந்த, 22 அம்பலகாரர்கள், 22 இளங்கச்சிகள் முன்னிலையில், அம்மனாக வழிப்பட கூடிய ஏழு சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். 11 கரையை சேர்ந்த, 100 சிறுமிகள் இதற்காக கோவில் முன் பெற்றோருடன் கூடினர்.

அம்மனின் குழந்தைகளாக தேர்வு பெற்ற ஏழு சிறுமிகளும், 15 நாட்கள் இரவில் கோவிலில் தங்கி, பகலில், 60 கிராமத்தினருக்கும் ஆசிர்வாதம் வழங்குவர்.

இதை தொடர்ந்து, 15வது நாளில், பெண்கள், மது கலயம் மற்றும் சிலைகளை சுமந்தும், ஆண்கள், தங்கள் உடலில் வைக்கோல் பிரியை சுற்றியும், நேர்த்திக் கடன் செலுத்துவர்.விழா நடக்கும்,

15 நாட்களிலும், 60 கிராமங்கள் மற்றும் இங்கிருந்து வெளியூர், வெளிநாடு சென்றவர்கள் விரதம் இருப்பர்.

மாமிச உணவு, தாளித்த உணவு வகை சாப்பிடுவதில்லை.

விரத நாட்களில் இப்பகுதி ஓட்டல்களிலும் இவ்வகை உணவுகள் சமைப்பதில்லை.

பச்சை மரங்கள் வெட்டுதல், கட்டடம் கட்டுதல், மண்ணை தோண்டுதல் போன்ற பணிகளும் நடப்பதில்லை.

Show commentsOpen link

comments | | Read More...

வக்கீலை கைது செய்ய முயன்ற சப்–இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு try to high court campus lawyer arrest sub inspector seal in jail

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் வக்கீலை கைது செய்ய முயன்ற சப்–இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு try to high court campus lawyer arrest sub inspector seal in jail
Tamil NewsToday,

சென்னை, செப். 18–

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் வசித்து வரும் நரம்பியல் டாக்டர் சுப்பையா என்பவருக்கும், பொன்சாமி என்ற ஆசிரியருக்கும் இடையே குமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 14–ந்தேதி ராஜா அண்ணாமலை புரத்தில் தனது ஆஸ்பத்திரி முன்பு நின்று கொண்டிருந்த டாக்டர் சுப்பையா இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கப்பட்டார்.

இது தொடர்பாக ஆசிரியர் பொன்சாமி, அவரது தாயார் அன்னப்பழம், மனைவி மேரி புஷ்பா, மகன் வக்கீல் பெய்சில், உறவினரான வக்கீல் வில்லியம் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

இவர்களை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையில் செம்மஞ்சேரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் இடம் பெற்றுள்ளார். இவர் நேற்று மாலை வக்கீல் பெய்சிலை கைது செய்வதற்காக ஐகோர்ட்டுக்கு காரில் சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த பெய்சிலை கைது செய்து காரில் ஏற்றுவதற்கு அவர் முயன்றார். இதற்கு வக்கீல் பெய்சில் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக மற்ற வக்கீல்களும் திரண்டனர்.

அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளால் சப்–இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் தாக்கப்பட்டார். அவரது சட்டை கிழிந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் இணை கமிஷனர் ஸ்ரீதர், துணை கமிஷனர் நிர்மல் குமார், உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர்கள் செல்லப்பா, ராஜேஷ் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.

ஏராளமான போலீசாரும் ஐகோர்ட்டு வளாகத்தில் குவிக்கப்பட்டனர். சப்–இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணனை சுற்றி போலீசார் நின்று கொண்டனர். அப்போது அங்கு திரண்டிருந்த வக்கீல்கள், சப்–இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். இதனால் பதட்டமான சூழல் நிலவியது.

பின்னர் இச்சம்பவம் பற்றி ஐகோர்ட்டு நீதிபதிகள் சுதாகர், சத்தியநாராயணன், கிருபாகரன், அரிபரந்தாமன், ராமநாதன், ரவிசந்திர பாபு ஆகியோர் தங்களது சேம்பரில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் ஐகோர்ட்டு வக்கீல் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், ஐகோர்ட்டு பதிவாளரிடம் ஒரு புகார் செய்தார். அதில் கோர்ட்டு வளாகத்தில் புகுந்து அத்துமீறி நடந்து கொண்ட சப்–இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். அதே நேரத்தில் வக்கீல் பெய்சிலும், ஐகோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் வெளியாட்களுடன் வந்து சப்–இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் தன்னை காரில் கடத்திச் செல்ல முயன்றதாக குறிப்பிட்டிருந்தார்.

இதன் பேரில், கடத்தல் முயற்சி, மிரட்டல் விடுத்தல், அத்துமீறி நுழைதல் ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ் சங்கரநாராயணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.

இன்று காலை 8 மணி அளவில் சைதாப்பேட்டையில் உள்ள ஜார்ஜ் டவுன் 8–வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு வீட்டில் சங்கரநாராயணனை போலீசார் ஆஜர்படுத்தினர். அடுத்த மாதம் 1–ந்தேதி வரை அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதையடுத்து சங்கர நாராயணன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சப்–இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணனின் சொந்த ஊர் தூத்துக்குடி. இவர் கடந்த 2011–ம் ஆண்டு நேரடியாக சப்–இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

...
Show commentsOpen link

comments | | Read More...

இளம் பெண் பாலியல் பலாத்காரம்: ராஜஸ்தான் மந்திரி மீது வழக்கு பதிவு Rajasthan minister accused of rape FIR registered

Penulis : Tamil on Tuesday 17 September 2013 | 14:43

Tuesday 17 September 2013

இளம் பெண் பாலியல் பலாத்காரம்: ராஜஸ்தான் மந்திரி மீது வழக்கு பதிவு Rajasthan minister accused of rape FIR registered

Tamil News

ஜெய்ப்பூர், செப். 17- ராஜஸ்தான் மாநிலம் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசில் பாபு லால் நகர் என்பவர் பண்ணை மற்றும் கிராமப்புற தொழில்துறை மந்திரியாக இருந்து வருகிறார். இவர் மீது ஜெய்ப்பூரை சேர்ந்த 27 வயது இளம் பெண் ஒருவர் தன்னை தாக்கி, கெடுத்துவிட்டதாக போலீசில் புகார் தெரிவித்துள்ளார். கடந்த 11-ம் தேதி மந்திரி பாபுலால் நகரை சந்திக்க சென்றேன். அப்போது என்னை ஒரு அறையில் அடைத்து துன்புறுத்தி என்னை அவர் கெடுத்துவிட்டார் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னரே அப்பகுதி போலீசில் புகார் தெரிவித்தபோது அவர்கள் அதை பதிவு செய்யவில்லை. பிறகு அவர் நேரடியாக நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதையடுத்து நீதித்துறையின் அறிவுரைப்படி மந்திரி பாபுலால் நகர் மீது கற்பழிப்பு மற்றும் துன்புறுத்தல் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்பு நர்சை கொலை செய்தது உள்ளிட்ட இரு வழக்குகளில் அசோக் கெலாட் அரசை சேர்ந்த இருமந்திரிகள்  சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் புதிய பிரச்சினை ஒன்று எழுந்துள்ளது வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஒரு பொதுக்கூட்டத்தின் போது அந்த பெண்ணை சந்தித்தது உண்மை. ஆனால், இதில் அரசியல் சதி நடந்து இருக்கிறது என்று இந்த புகாரை மந்திரி பாபுலால் நகர் மறுத்து இருக்கிறார். அந்த பெண் இதுபோன்று முன்பு ஒருவரை மிராட்டி பணம் பறித்து சென்று இருக்கிறார் என்றும் மந்திரி அப்போது தெரிவித்தார். ...
Show commentsOpen link

comments | | Read More...

18 வயது பெண் கற்பழிப்பு புகார் doctor rape news

Penulis : Tamil on Monday 16 September 2013 | 17:27

Monday 16 September 2013

ல்போர்ன், செப்.17- ஆஸ்திரேலியா நாட்டில் பணி புரியும் இந்திய வம்சாவழி டாக்டர், மனு மைம்பில்லி கோபால் (வயது 39). இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 2 பெண்களிடம் அடி வயிற்றுப்பகுதியை பரிசோதிக்க வேண்டும் என்று கூறி கற்பழித்ததாக கூறப்படுகிறது. 39 மற்றும் 18 வயதுள்ள அந்த இரு பெண்களின் புகாரின் பேரில், கடந்த பிப்ரவரி மாதம் டாக்டர் கோபால் கைது செய்யப்பட்டார். மெல்போர்னில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவில் கேரள மாநிலம் கொச்சிக்கு விமானத்தில் செல்ல முயன்றபோது அவர் போலீசாரிடம் பிடிபட்டார். அவர் மீது ஆஸ்திரேலியா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. தன் மீதுள்ள குற்றச்சாட்டை மறுத்து வரும் டாக்டர் கோபால், இரு பெண்களும் சதித்திட்டம் காரணமாக கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளதாக கூறி இருந்தார். இந்த நிலையில், டாக்டர் கோபால் மீது மற்றொரு 18 வயது பெண்ணும் கற்பழிப்பு புகார் கூறி இருப்பதாக விசாரணை குழுவை சேர்ந்த போலீசார் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையில், கற்பழிப்பு வழக்கில் டாக்டர் கோபாலுக்கு மெல்போர்ன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ...

comments | | Read More...

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு Post graduate teachers Examination results released in 10 days

Penulis : Tamil on Sunday 15 September 2013 | 17:10

Sunday 15 September 2013

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு 10 நாட்களில் வெளியாகும் Post graduate teachers Examination results released in 10 days

Tamil NewsYesterday
சென்னை, செப்.16- முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு முடிவு மிக விரைவில் வெளியிடப்படுகிறது. அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் மிக விரைவில் வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பவும், பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பவும் அரசு முடிவு செய்து அதற்கான ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தியது. இந்த தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். இந்த தேர்வு விடைத்தாள்கள் அனைத்தும், ஸ்கேன் செய்யப்படும் பணி முடிவடைந்தது. மேலும், கம்ப்யூட்டர்களில் நிபுணத்துவம் வாய்ந்த குழு வரவழைக்கப்பட்டு இந்த விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளது. இந்த மதிப்பீடு 3 மணி நேரத்திற்குள் முடிந்து விடும். அதன் பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் யார்? யார்? என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரிக்க உள்ளது. இந்த தேர்வு முடிவு அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபு நய்யார், உறுப்பினர் செயலாளர் வசுந்தரா தேவி, உறுப்பினர் க.அறிவொளி ஆகியோர் மும்முரமாக பணியில் ஈடுபட்டு உள்ளனர். ...
Show commentsOpen link

comments | | Read More...

ஜப்பானின் கடைசி அணுமின் உலையும் மூடப்படுகிறது japan last nuclear plant turn off

ஜப்பானின் கடைசி அணுமின் உலையும் மூடப்படுகிறது japan last nuclear plant turn off

Tamil NewsToday,

டோக்கியோ, செப்.15- ஜப்பான் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி அணுமின் உலை, பராமரிப்பு ஆய்விற்காக இன்றுடன் மூடப்பட உள்ளது. அணுசக்திக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பினால் இது மீண்டும் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படவில்லை. கடந்த 2011-ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவில் தாக்கத்துக்கு உள்ளான புகுஷிமா அணுமின் உலைகள் இன்னமும் பிரச்சினைகளைத் தந்து கொண்டிருக்கின்றன. கடந்த 1986-ல் ரஷ்யாவின் செர்னோபில் நகரில் அணுசக்தியினால் ஏற்பட்ட பேரழிவுபோல் ஜப்பானிலும் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் இதனை முற்றிலும் தவிர்க்க விரும்புகின்றார்கள். இன்று மாலை மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு நாளைக் காலை முதல் இந்த மின்உலையும் செயலற்ற நிலையில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு மே மாதமும் ஜப்பானில் உள்ள 50 வர்த்தக அணுமின்சக்தி நிலையங்களும் பராமரிப்பு ஆய்வுப் பணிக்காக நிறுத்தப்பட்டபோது பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக அவை உடனே செயல்படவில்லை. 40 வருடங்கள் கழித்து முதன்முறையாக ஜப்பானில் அப்போதுதான் அணுசக்தி பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. ஆயினும், ஆகஸ்ட் மாதம் அரசு உத்தரவின்பேரில் மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகள் செயல்படத் துவங்கின. தற்போதும், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே அணுசக்திக்கு ஆதரவாகக் குறிப்பிடும்போதும், பொதுமக்களின் எதிர்ப்பில் தீவிரம் இருக்கவே செய்கிறது. புகுஷிமா சம்பவத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டபோது படிம திரவ எரிபொருளை மின் உற்பத்திக்குப் பயன்படுத்த தொடங்கியதால் மின்சாரக் கட்டணம் உயர்ந்தது. புகுஷிமா கொதிகலங்களிலிருந்து வெளியான கதிரியக்கம் வெளியிலும், நிலங்களிலும் பரவியதாகக் குறிப்பிட்ட போதிலும் இதன் தாக்கத்தினால் எவரும் இறந்ததாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆயினும், அச்சத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற நேர்ந்தது. இந்த முடிவானது, உலகின் மூன்றாவது பொருளாதார சக்தி படைத்த ஜப்பானை இரண்டாவது முறையாக அணுசக்தியின் செயல்பாடு இல்லாத நிலையில் வைக்கிறது. ...
Show commentsOpen link

comments | | Read More...

தீபாவளி போட்டியிலிருந்து முந்திக் கொண்ட‌ ராஜாராணி raja rani tamil movie

Penulis : Tamil on Saturday 14 September 2013 | 22:44

Saturday 14 September 2013

தீபாவளி போட்டியிலிருந்து முந்திக் கொண்ட‌ ராஜாராணி
by abtamil

ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்து தயாரித்துள்ள படம் ராஜாராணி. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ், சத்யன்னு ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிச்சிருக்கிற இந்தப் படத்தை ஷங்கர் அசிஸ்டெண்ட் அட்லீ டைரக்ட் செய்திருக்கிறார். படம் தொடங்கியதிலிருந்தே படத்துக்கு ஏகப்பட்ட பில்டப்கள் கொடுத்து விளம்பரம் செய்து வருகிறார்கள். ஆர்யா, நயன்தாராவுக்கு கல்யாண பத்திரிக்கை அடிக்கிற அளவுக்கு இருந்தது விளம்பர ஸ்டண்ட். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணத்தான் முதலில் நினைத்திருந்தார்கள். தீபாவளிக்கு ஆர்யா நடித்த இரண்டாம் உலகம் ரிலீசாவது உறுதியாகி இருப்பதால் அதற்கு முன்னதாக அதாவது வருகிற செப்டம்பர் 27ந் தேதி படம் ரிலீசாவதாக அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார்கள்.

படத்தின் டிரைய்லரும், ஜி.வி.பிரகாஷ் இசையில் வந்திருக்கும் பாடல்களும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. "ராஜாராணி மனதை வருடும் ஒரு இனிய காதல் கதை. நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு இனிய பயணம் இந்தப் படத்தில் நிச்சயம் உண்டு. திறமைகளின் சங்கமமாக இருக்கும் இந்தப் படம் நிச்சயம் பெரும் வெற்றி பெறும்" என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

"ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்து நாங்கள் தயாரிக்கும் 3வது படம். எங்கள் பரஸ்பர உறவு இந்தி படங்களிலும் தொடர்கிறது. ராஜாராணி எங்கள் கூட்டுத் தயாரிப்பில் உருவான ஜனரஞ்சக படம். படத்தின் பாடல்களின் வெற்றி படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது" என்கிறார் பாக்ஸ் ஆபீஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி விஜய் சிங்.

Show commentsOpen link

comments | | Read More...

பா.ஜனதாவால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்: நரேந்திர மோடி பேச்சு Narendra Modi says BJP only can save the country

பா.ஜனதாவால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்: நரேந்திர மோடி பேச்சு Narendra Modi says BJP only can save the country

Tamil NewsYesterday,

ஆமதாபாத், செப்.15- பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான ஆட்சிமன்ற குழுவின் கூட்டம் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடந்தது. கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தை மூத்த தலைவரான அத்வானி புறக்கணித்தார். இந்த கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். கட்சியின் மூத்த தலைவர்களின் வாழ்த்துகளுக்கு இடையே, அத்வானியின் இல்லம் சென்று அவரது வாழ்த்தையும் நரேந்திரமோடி பெற்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அவர் விமானம் மூலம் ஆமதாபாத் திரும்பினார். விமான நிலையத்தில் திரளான தலைவர்களும், தொண்டர்களும் திரண்டு வந்து மோடிக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்கள், குஜராத் சிங்கம் வந்து விட்டது என்று மகிழ்ச்சியில் கோஷமிட்டனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு, நரேந்திரமோடி அவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நாட்டில் சாமானிய மக்களின் ஒரே நம்பிக்கை கீற்றாக பாரதீய ஜனதா கட்சி ஆகி உள்ளது. நம்பிக்கையற்ற நிலையில் உள்ள தேசத்தை பாரதீய ஜனதாவால் மட்டுமே காப்பாற்ற முடியும். இன்றைய நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுத்து, முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்கிற ஆற்றல், பாரதீய ஜனதாவுக்கு இருக்கிறது என்று இந்த நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். நாட்டு மக்களின் எதிர்பார்ப்பில் எந்தவொரு குந்தகமும் ஏற்படாது என்று உறுதிப்படுத்துகிற பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. இதே நிலைதான் 1989-90-ல் தொடங்கிய 10 ஆண்டுகளிலும் இருந்தது. அந்த நேரத்தில் வாஜ்பாய்க்கு மக்கள் பொறுப்பை வழங்கினர். பாரதீய ஜனதா கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். 21-ம் நூற்றாண்டுக்காக கண்ட கனவை நனவாக்க முடியும் என மக்கள் நம்பிக்கை வளர்த்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடந்த 10 ஆண்டுகளில் வாஜ்பாய் எடுத்த முயற்சி, உழைத்த உழைப்பு எல்லாம் வீணாக போய்விட்டது. அதுமட்டுமல்ல, மக்கள் நம்பிக்கை வைக்கிற துறை ஒன்று கூட இல்லை என்று சொல்லுகிற அளவுக்கு நாடு கீழான நிலைக்கு போய் விட்டது. நாட்டு மக்கள் தொகையில் 65 சதவீதம் பங்களிப்பு செய்கிற இளைய தலைமுறையினரின் எதிர்காலம் என்ன ஆகும்? எப்படி ஒருவர் தனது எதிர்காலத்துடன் விளையாட முடியும்? நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தலித்துகள், ஆதிவாசி மக்கள், ஏழை எளிய மக்கள் ஆகியோரை மீட்டெடுக்க வேண்டிய மொத்த பொறுப்பு, பாரதீய ஜனதாவுக்கு உள்ளது. நமது இயக்கம் அமைப்பு ரீதியிலானது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நமது கட்சி ஒன்றுபட்ட உணர்வுடன் இயங்குகிற கட்சி. இந்த ஒன்றுபட்ட உணர்வு நமது பலம். இந்திய மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் பாரதீய ஜனதா பூர்த்தி செய்யும். இவ்வாறு நரேந்திரமோடி கூறினார். ...
Show commentsOpen link

comments | | Read More...

“ஆண்ட்ரியா கூட எந்த ‘லிங்க்’கும் இல்லை” : அனிருத் அலறல் andria aniruth love story

"ஆண்ட்ரியா கூட எந்த 'லிங்க்'கும் இல்லை" : அனிருத் அலறல்

by News Admin
Sound Camera Action | Tamil Cinema Latest News | Movie Reviews ...Today,

'முத்த' சர்ச்சையில் சிக்கி அதனால் பிரிந்தனர் ஆண்ட்ரியாவும்-அனிருத்தும். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு ஆண்ட்ரியாவும் – அனிருத்தும் மீண்டும் இணைந்து விட்டார்கள். இனி அனிருத் இசையமைக்கும் எல்லாப்படங்களிலும் ஆண்ட்ரியா பாடுவார் என்றெல்லாம் செய்திகள் கிளம்பின.

ஆனால் அதை தற்போது மறுத்திருக்கிறார் அனிருத்.

'வணக்கம் சென்னை' படத்துக்கு நான் இசையமைக்கிறேன். அந்தப்படத்தில் ஆண்ட்ரியா எங்கடி பொறந்த எங்கடி பொறந்த என்ற பாடலை ஆண்ட்ரியா தான் பாடினார். எல்லோரும் அதை வைத்துக்கொண்டி நானும், ஆண்ட்ரியாவும் மீண்டும் இணைந்து விட்டதாக கிளப்பி விட்டுள்ளனர்.

இந்தபாடலின் ஒரு பகுதியை ரெக்கார்டிங் செய்வதற்காக நான் மும்பையில்  இருந்தேன். ஆனால் ஆண்ட்ரியா இந்தப்பாடலின் மற்றொரு பகுதியை சென்னையில் பாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருடன் எனது உதவியாளார் தான் அவருடன் இருந்து பணியாற்றினார். ஆகையால் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றவில்லை, இனி பணியாற்றப்போவதுமில்லை"

இவ்வாறு அனிருத் அலறியிருக்கிறார்.

47 total views, 47 views today

The post "ஆண்ட்ரியா கூட எந்த 'லிங்க்'கும் இல்லை" : அனிருத் அலறல் appeared first on Sound Camera Action.

Show commentsOpen link

comments | | Read More...

விஜய்யின் ‘ஜில்லா’ ஷூட்டிங் ‘திடீர்’ நிறுத்தம், மோகன்லால் உடல்நிலை காரணமாக! Vijay jilla news

Penulis : Tamil on Friday 13 September 2013 | 07:43

Friday 13 September 2013

விஜய்யின் 'ஜில்லா' ஷூட்டிங் 'திடீர்' நிறுத்தம், மோகன்லால் உடல்நிலை காரணமாக!

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாததால் விஜய்யின் ஜில்லா படத்தின் ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட்டுள்ளது.

தலைவா சர்ச்சைகளையெல்லாம் தாண்டி விஜய் குஷி மூடில் நடித்து வரும் படம் தான் ஜில்லா.

இந்தப்படத்தில் விஜய்யுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் ஒரு முக்கியமான கேரக்டரின் இணைந்து நடித்து வருகிறார்.

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து வரும் இந்தப்படத்தை நேசன் டைரக்ட் செய்து வருகிறார்.

விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க அவர்களுடம் ரவி மரியா மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் மற்றும்பலர் நடித்து வருகின்றனர்.

இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இதில் மோகன்லாலும் படத்தின் வில்லனான ரவி மரியாவும் மோதிக்கொள்ளும் காட்சிகள் படமாக்க திட்டமிட்டிருந்தார்கள்.

ஆனால் திடீரென நடிகர் மோகன்லாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் தற்போது ஜில்லா படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் கிடைத்திருக்கும் கால்ஷீட்டுகளை சும்மா விடக்கூடாது என்று அந்த கேப்பில் சென்னையில் விஜய்யின் ஆக்‌ஷன் சீன்களை எடுக்க முடிவெடுத்திருக்கிறாராம் டைரக்டர் நேசன்.

Show commentsOpen link

comments | | Read More...

அஜித்தை ஹாலிவுட்டில் இயக்க ஆசை! Ajith in hollywood

அஜித்தை ஹாலிவுட்டில் இயக்க ஆசை!

- Tamil newsToday

ஹாலிவுட்டில் அஜித்தை வைத்து படம் இயக்க ஆசைப்படுவதாக இயக்குனர் விஷ்னுவர்தன் தெரிவித்துள்ளார்.
ராம்கோபால் வர்மா, சந்தோஷ் சிவன், மணிரத்னம் எனும் மகா மெகா இயக்குநர்களிடம் சினிமா கற்றவர் விஷ்ணுவர்தன்.

மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், டீன் ஏஜ் பருவத்தில் சந்தோஷ் சிவன் இயக்கிய படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

இதன் பின்பு குறும்பு படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, சர்வம் படங்களைத் தொடர்ந்து இப்போது ஆரம்பம் படத்தை இயக்கிவருகிறார்.

எப்போ பாலிவுட்ல படம் பண்ணப் போறீங்க? என்று கேள்விக்கு, ஹாலிவுட்ல கூட படம் பண்ணணும்னு ஆசை இருக்கு என்று சிரிக்கிறார்.

நான் பாலிவுட்லயே செட்டில் ஆகியிருக்க வேண்டிய ஆள் தான். என்னோட ஆரம்பம் சென்னைல இருக்கணும்னுதான் இங்கே வந்தேன்.

திரும்ப பாலிவுட் போறது ஈஸி, ஒரு நல்ல கதை ரெடி பண்ணிட்டுப் போயிடலாம்.

ஆனா பாலிவுட், ஹாலிவுட்ல அஜித்தை வேற மாதிரி காட்ட ஆசைப்படறேன்.

டைம் கிடைச்சா பாலிவுட் மட்டும் இல்லை, ஹாலிவுட் படமே எடுப்பேன்.

அது வேற ஒரு ப்ராசஸ், ஆனால் கண்டிப்பாக நடக்கும் என்கிறார் விஷ்ணுவர்தன்.

Show commentsOpen link

comments | | Read More...

விநாயகர் சிலைகள்: நாளை முதல் 4 நாட்கள் ஊர்வலம் police security ring 1850 Vinayagar statues tomorrow start 4 days

Penulis : Tamil on Thursday 12 September 2013 | 23:21

Thursday 12 September 2013

சென்னையில் போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் 1850 விநாயகர் சிலைகள்: நாளை முதல் 4 நாட்கள் ஊர்வலம் police security ring 1850 Vinayagar statues tomorrow start 4 days

Tamil NewsToday

சென்னை, செப். 13–நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 9–ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி 1705 இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த ஆண்டும் அதே இடங்களில் மட்டுமே சிலைகளை வைப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் போலீஸ் எதிர்ப்பையும் மீறி இந்த ஆண்டு சுமார் 150 இடங்களில் கூடுதலாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1850 இடங்களில் பெரிய சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.இதுதவிர சென்னை மாநகர் முழுவதிலும் சிறிய அளவிலான களிமண் சிலைகளை வீடுகளில் வாங்கி வைத்து பொதுமக்கள் பூஜித்து வருகிறார்கள். இப்படி வீடுகளில் வைக்கப்படும் சிலைகளை 3 நாட்கள் கழித்து நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இதன்படி நேற்று முதல் சிறிய விநாயகர் சிலைகளை பொதுமக்கள் எடுத்துச் சென்று கடலில் கரைத்து வருகிறார்கள்.நாளை முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது. சிவசேனா சார்பில் நாளை ஊர்வலம் நடத்தப்படுகிறது.நாளை மறுநாள் இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் பங்கேற்கும் பிரமாண்டமான விநாயகர் சிலை ஊர்வலம் நடை பெறுகிறது. இதில் ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். இதற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகிறார்கள். 16, 18–ந்தேதிகளிலும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது.சென்னையில் இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு நல சங்கங்கள் சார்பில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் ஷிப்டு முறையில் அப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் போலீசார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.சிலைகளை வைத்துள்ள விழா கமிட்டியினருக்கு போலீசார் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். மத உணர்வுகளை தூண்டும் வகையில் கோஷங்கள் எழுப்பக் கூடாது, ஓலையால் கொட்டகை அமைக்கக்கூடாது, எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை சிலைகளின் அருகில் வைக்கக் கூடாது, என்பது போன்ற கட்டுப்பாடுகளுடன், ஊர்வல பாதையில் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் வகுத்து கொடுத்துள்ளனர்.மாட்டு வண்டிகளில் சிலைகளை எடுத்துச் செல்வதற்கு கடந்த சில ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டும் அதனை கடைபிடிக்க விழா கமிட்டியினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இதனை மீறுவோர் கைது செய்யயப்படுவார்கள் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ...
Show commentsOpen link

comments | | Read More...

திண்டுக்கல் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கல்வீச்சு vinayagar Chaturthi procession near Dindigul fight tahsildar injured

Penulis : Tamil on Tuesday 10 September 2013 | 21:40

Tuesday 10 September 2013

vinayagar Chaturthi procession near Dindigul fight tahsildar injured

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் 56 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்த சிலைகளை கரைப்பதற்காக நேற்று மாலை ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலம் வத்தலக்குண்டு பஸ் நிலையத்தை கடந்து பெரிய பள்ளிவாசல் பகுதி அருகே சென்றகொண்டிருந்த போது, திடீரென ஒரு மர்ம கும்பல் சிலைகளை நோக்கி கல்வீசியது.
comments | | Read More...

பாகிஸ்தான் தினமும் ரூ.300 கோடி சம்பாதிக்கும் ரவுடிகள் pakistan Karachi area daily 300 crore income rowdy

Penulis : Tamil on Thursday 5 September 2013 | 01:10

Thursday 5 September 2013

பாகிஸ்தானில் வர்த்தக நகராக திகழ்வது கராச்சி. இங்கு கிரிமினல் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகம். நூற்றுக்கணக்கான ரவுடி கும்பல்கள் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆள் கடத்தல், வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதன் மூலம் தினமும் அவர்கள் 300 கோடி ரூபாய் வரை சம்பாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் தினமும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு கறுப்பு பணங்களை சம்பாதிப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது.
உலகிலேயே கிரிமினல் குற்றவாளிகள் அதிகம் நிறைந்த நகரங்களில் ஒன்றாகவும் கராச்சி திகழ்கிறது. கராச்சி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் தினமும் 10–க்கும் மேற்பட்டோர் கொல்லப்படுகிறார்கள்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger