News Update :
Powered by Blogger.

கொள்ளையர்கள் என நினைத்து 2 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொலை

Penulis : karthik on Wednesday 15 February 2012 | 22:23

Wednesday 15 February 2012

 
 
கடற் கொள்ளையர்கள் என நினைத்து இரண்டு இந்திய மீனவர்களை இத்தாலி நாட்டு சரக்குக் கப்பலைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்று விட்டனர். இதுதொடர்பாக இந்திய அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இரண்டு பேரும் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய இத்தாலிக் கப்பலின் பெயர் என்ரிகா லெக்ஸி என்று தெரிய வந்துள்ளது. இந்தக் கப்பலை விசாரணைக்காக தற்போது கொச்சிக்கு கொண்டு வந்துள்ளனர்.

ஆலப்புழையிலிருந்து 14 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்தது. அப்போது கடலில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் இத்தாலி கப்பல்காரர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர்.

கொல்லத்திலிருந்து இந்த மீ்னவர்கள் மீன்பிடிக்கக கடந்த வாரம் கடலுக்குள் சென்றிருந்தனர். மீன் பிடித்து விட்டு கரைக்குத் திரும்பியபோதுதான் மரணத்தை சந்தித்துள்ளனர்.
comments | | Read More...

அதுவா இது - செல்லம் நடிகர் மறுப்பு

 



செல்லம் நடிகர் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் ஆறு, ஏரி, கடல்களில் பயணிக்க பயன்படும் ஒருவகை படகின் பெயர் கொண்ட படத்தின் கதை மகேஷ் மஞ்ச்ரேக்கர் எனும் மராத்தி இயக்குநர் இயக்கிய ஒரு மராத்திப் படத்தின் ராயல்டி தராத காப்பி., அதாஙங்க, அப்பட்டமான காப்பி என்ற தகவல் கோலிவுட்டில் லேட்டஸ்ட்டாக பரவி வருகிறது! ஏற்கனவே இந்தப்படம் செல்லம் தயாரிப்பில் இயக்குநராக புகழ் பெற்ற ராதாமோகன் டைரக்ஷன் ஸ்டைலில் இருக்கிறது என ஒரு கருத்து நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.
இதை பற்றி எல்லாம் கேட்டால் பதில் என்னவோ அதெல்லாம் "இல்ல செல்லம்" என்பதாகத்தானே இருக்கும்..?!
comments | | Read More...

அடுத்த காதல் மன்னன் தயார்

 


கலை வாரிசுகள் ஜெயிப்பதும் தோற்பதும் அவரவர் திறமையையும் அதிர்ஷ்டத்தையும் பொறுத்தது. ஆனால் இப்படி வருகிற எல்லாருமே தங்களுக்கு பாதை அமைத்துக் கொடுத்த மூத்தவர்களின் பாணியை பின் பற்றுவதே இல்லை. சொந்த சரக்கு மட்டுமே அவர்களின் முன்னேற்றத்திற்கு கை கொடுத்திருக்கிறது.



அப்படி ஒரு சொந்த சரக்காளராக வந்து சேர்ந்திருக்கிறார் அபிநய். இவர் காதல் மன்னன் ஜெமினி கணேசன், சாவித்ரியின் கலை வாரிசு. இவர் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படம்தான் வினை. இவர் ஏற்கனவே ஒரு தெலுங்கு படத்தில் அறிமுகமாகி நடித்திருக்கிறாராம். தமிழில் அவர் நடித்து வெளிவரப்போகும் முதல் படம் இந்த வினைதான்.

அடிப்படையில் இசைக்குழு வைத்திருக்கும் நால்வர் ஒரு பாடகியுடன் மலேசியா செல்கிறார்கள். சில தினங்களில் இந்த நால்வரும் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். கொல்வது யார்? ஏன்? என்ற கேள்வியோடு விறுவிறுப்பாக நகருமாம் படம்.

இந்த படம் முழுக்க மலேசியாவில்தான் படமாக்கப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் இந்தியாவிலும் மலேசியாவிலும் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அபிநய்யை எப்படி தேர்ந்தெடுத்தார் டைரக்டர் பாலசுதன் என்றால் அதுவே பெரிய கதையாக இருக்கிறது.

ஒரு விறுவிறுப்பான கதையை தயார் செய்துவிட்டு சென்னைக்கு வந்திறங்கியவர், இங்குதான் ஹீரோ தேடும் படலத்தையே ஆரம்பித்தார். அப்போதுதான் சினிமா டைரி ஒன்றில் அபிநய்யின் புகைப்படத்தை பார்க்க நேர்ந்தது. பார்த்தவுடன் பிடித்துப் போகிற முகமாக இருந்ததால் உடனே அவரது செல்போனில் தொடர்பு கொண்டு வரவழைத்தாராம்.

வந்த பிறகுதான் தெரிந்ததாம் அவர்தான் காதல் மன்னன் ஜெமினியின் வாரிசு என்று. அப்புறமென்ன? பெருமையோடு அறிமுகப்படுத்தி விட்டார்கள் அவரை. தா‌த்‌தா‌ பா‌ட்‌டி‌யி‌ன்‌ ஆசி‌ பே‌ரனுக்‌கு கி‌டை‌க்‌குமல்‌லவா‌?

அபிநய்க்கு ஜோடியாக பிரதிக்ஷா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். சித்தார்த் யுவராஜ் இசையமைத்திருக்கிறார்கள். உரூஜ் புரடக்ஷன்ஸ் சார்பாக அப்துல் அஜீஸ் தயாரித்திருக்கிறார்.
comments | | Read More...

இந்திய அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளர்

 
 
இந்திய அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக ஜோ டேவ்ஸ் நியமிக்கப்படுகிறார். தற்போதைய பவுலிங் பயிற்சியாளராக தென் ஆப்ரிக்காவின் எரிக் சிம்மன்ஸ் உள்ளார். இவரது இரண்டு ஆண்டுகால பணி, முத்தரப்பு ஒருநாள் தொடருடன் முடிகிறது.

இவரது ஒப்பந்தத்தை பி.சி.சி.ஐ., புதுப்பிக்கவில்லை. இவருக்கு பதில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோ டேவ்ஸ் நியமிக்கப்படுகிறார்.
 
இவர் 1997 முதல் 2005 வரை 76 முதல்தர போட்டிகளில் பங்கேற்றுள்ளார். முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க முடியாமல், பயிற்சியாளராக மாறினார்.
 
தற்போது தெற்கு ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருக்கும் இவர், 2011-12 "பிக்பாஷ்' "டுவென்டி-20' தொடரில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியிலும் பயிற்சியாளராக இருந்தார்.
 
முத்தரப்பு தொடர் முடிந்ததும், இவர் பவுலிங் பயிற்சியாளராக முறைப்படி பொறுப்பேற்க உள்ளார்.
comments | | Read More...

ஹொண்டுராஸ் சிறையில் தீ: 272 பேர் கருகி மாண்டனர்

 

ஹொண்டுராஸ் நாட்டின் பிரதான சிறைச்சாலைகளில் ஒன்றில் இன்று (15) ஏற்பட்ட தீ விபத்தில் 272 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஹொண்டூராஸ்சின் தலைநகரில் இருந்து 75 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.குறித்த சிறைக்கைதிகள் உடல் கருகி அல்லது புகை மூட்டத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அந்த நாட்டுத் தீயணைப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.சிலர் கூரைகளை உடைத்தும், கட்டடத்தில் இருந்து குதித்தும் உயிர் தப்பியுள்ளதாக அவர்களது உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

comments | | Read More...

முத்தமிடுவதில் சிம்பு தான் பெஸ்ட் பிரபுதேவா வேஸ்ட் நயன்தாரா அனுபவ பகிர்வு

 
 
தனக்கு நெருக்கமான கதாநாயகிகள் ரீவி நடன நிகழ்ச்சி நடுவர் நடிகைகள் போன்றவர்களிடம் முத்த காட்சிகளில் சிம்புவே சூடு கிளப்புகிறார். பிரபு தேவாவின் இயக்கத்தில் வரும் படங்களில் காதலுக்கு முக்கியத்துவம் இருந்தாலும் முத்த காட்சிகள் சாதாரணமாகவே இருக்கும்...! எங்கேயும் காதல் எனக்கும் பிரபுதேவாவுக்கும் உண்டான உறவை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. அதில்கூட அவர் முத்தத்தை சாதாரணமாகவே காண்பித்துக்களார் என்றாராம்.

முன்பு பிரபு தேவாவை அடுத்த சிம்பு என கிண்டலடித்தார்களாம் இப்போ நயனுடன் கூட நடிக்கும் நடிகர்களை பார்த்து உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என கேட்கிறார்களாம்!
 
 
 
comments | | Read More...

கேரளாவில் நித்யாமேனனின் 2 படங்களுக்கு தடை

 

பிரபல மலையாள நடிகை நித்யா மேனன். இவர் தமிழில் 'நூற்றி எண்பது', 'வெப்பம்' படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 'தற்சமயம் ஒரு பெண் குட்டி', 'உஸ்தட் ஓட்டல்' என இரு மலையாள படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இவற்றின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. இவ்விரு படங்களையும் திரையிட மாட்டோம் என கேரள தியேட்டர் அதிபர் சங்கம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே கேரள தயாரிப்பாளர் சங்கம் இரு மாதங்களுக்கு முன் நித்யா மேனனுக்கு தடை விதித்தது. தற்சமயம் பெண்குட்டி படத்தில் நித்யா மேனன் நடித்துக் கொண்டிருந்த போது பிரபல மலையாள தயாரிப்பாளர் ஒருவர் தனது புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்வது குறித்து அவரை சந்தித்து பேச விரும்பினார். ஆனால் அந்த தயாரிப்பாளரை சந்திக்க நித்யா மேனன் மறுந்து விட்டார்.

மூத்த தயாரிப்பாளரை அவமதித்து விட்டதாக அவருக்கு மலையாள தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இந்த நிலையில் அவரது இரு படங்களும் ரிலீசாக போகும் நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தின் தடை உத்தரவை ஏற்று நித்யா மேனனின் படங்களை திரையிட மறுத்துள்ளனர்.

நடிகர் சங்கம் இப்பிரச்சினையில் தலையிட்டு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
comments | | Read More...

சினேகா, பிரசன்னாவின் காதலர் தின போஸ்

 
 
சினேகாவும் பிரசன்னாவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். இருவரும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் இணைந்து நடித்தபோது, காதல் வயப்பட்டனர். திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து காதலை பிரசன்னா சமீபத்தில் வெளிப்படையாக அறிவித்தார்.

விரைவில் இருவீட்டினரும் கலந்து பேசி திருமண தேதியை முடிவு செய்வார்கள் என்றும் கூறினார். சினேகா தற்போது முரட்டுக்காளை, விடியல், ஹரிதாஸ் போன்ற தமிழ் படங்களிலும் ஜோஸட்டன்டே ஹீரோ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். இவற்றின் படப்பிடிப்பு ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு சினேகா விரும்பினால் சினிமாவில் தொடர்ந்து நடிக்கலாம். தடைபோடமாட்டேன் என்று பிரசன்னா கூறினார். சினேகாவிடம் இது குறித்து கேட்டபோது, திருமணத்துக்கு பின் சினிமாவில் நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

இந்த நிலையில் சினேகாவும் பிரசன்னாவும் காதலர் தினத்தையொட்டி சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர். கைகோர்த்தும் நெருக்கமாக நின்றும் விதம் விதமாக போட்டோ எடுத்தார்கள். வடக்கில் இருந்து வெளியா கும் பத்திரிகையொன்று இதற்கான ஏற்பாட்டை செய்து இருந்தது. காதலர் தினத்தையொட்டி இப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
comments | | Read More...

தொட்டவுடன் உணர்வுகள் கிளம்பி எழும் உதடுகள்!!

 
 
முத்தம் பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் ஒரு பெரிய பட்டியலே போட்டுள்ளனர் நம்மவர்கள். உணர்ச்சிகரமான நரம்புகள் உதட்டில் அதிகம். அதனால் தான் உதட்டை தொட்டவுடன் உணர்வுகள் கிளம்பி எழுகின்றன.
உதட்டை விரலில் தொடுவதை விட உதட்டால் தொடுவதால் அநேக நன்மைகள் விளைகின்றனவாம். அதாவது முள்ளை முள்ளால் எடுப்பது போல உணர்ச்சிகளை உணர்ச்சிகளால் தூண்டுவது. அதே சமயம் முத்தமிடுவதன் மூலம் நோய்கள் பரவுதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
30 வாட்ஸ் மின்சாரம்
 
ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்டு இதழோடு இதழாக ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளும் முத்தத்தில் இருவர் உடலிலும் 30 வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறதாம். (ஆகா மின்சார உற்பத்திக்கு இப்படி ரொமான்டிக்கான ஒரு வழி இருக்கப்பா..இத விட்டுட்டு எங்கெங்கையோ கரண்ட்டை தேடுறாய்ங்களே..)
 
மனிதர்கள் தங்கள் உடலில் அதிகமாக உள்ள கலோரிகளை குறைப்பதற்கு என்னென்னவோ உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால் ஆணும் பெண்ணும் சேர்ந்து 15 நிமிடம் தொடர்ந்து கொடுத்துகொள்ளும் இதழ் முத்தத்தில் 30 கலோரிகள் குறைகிறது. இது அரைமணி நேராம் மாய்ந்து மாய்ந்து நடக்கும் நடைபயிற்சிக்கு சமமானது. முத்தம்தான் உடலுறவுக்கான முதல் தூண்டுதல். உதடு பிரியாமல் கன்னத்தில் கொடுக்கும் முத்தத்தைவிட, உதடு பிரிந்து உதடுகளில் கொடுக்கும் முத்தத்திற்கு ஆரோக்கியம் அதிகம்.
 
 
முத்தத்தில் சில சிக்கல்களும் உண்டு. உதடுகளை தயார்படுத்துவதற்கு முன்பு அதையும் தெரிந்து கொள்வது நல்லது. மிகவும் ஆழமாக கொடுக்கப்படும் முத்தத்தால், சில நேரங்களில் உயிரிழப்பு கூட ஏற்படும் என்கிறார்கள்.
 
ஜப்பானில் அப்படி ஒரு சம்பவம் அந்தக் காலத்தில் நடந்துள்ளதாம். ஒரு ஜப்பானியப் பெண்ணும், ஆணும் உடலுறவில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பெண் ஆர்கஸத்தை அடைந்தபோது அந்த ஆண், தனது காதலியின் உதடுகளைக் கவ்வி நீண்டநேரம் ஆழமான முத்தத்தைக் கொடுத்துள்ளான். செக்ஸ் உச்சத்தை அடைந்ததால் ஏற்பட்ட ரத்த அழுத்தத்துடன், இந்த ஆழமான முத்தமும் சேர்ந்து, மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டாளாம்.
 
அதேபோல சீனாவில் ஒரு பெண் மிகவும் ஆழமான முத்தத்தை வாங்கியபோது அவளது காது செவிடாகி விட்டதாம்.
 
இது உண்மைதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். வாயோடு வாய் பொருத்தி, உதடுளை இறுக்கமாக கவ்வியபடி ஆழமாக முத்தம் கொடுக்கும்போது வாய்க்குள் காற்று புக முடியாத நிலை ஏற்படுகிறது. இது பிரச்சினையைத் தரும் என்பது உண்மைதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
 
உதடோடு உதடு பொருத்தி முத்தமிடும்போது இருவரது வாய்க்குள்ளும் கிட்டத்தட்ட 10லட்சம் பாக்டீரியாக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன என்பது இன்னொரு எச்சரிக்கைச் செய்தி. முத்தமிடுவதன் மூலம் சில வகை நோய்களும் கூட உடல் விட்டு உடல் மாறும் வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், முத்தமிடுவதால் எச்ஐவி பரவுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.
 
செக்ஸ் உறவில் முத்தம் தவிர்க்க முடியாத ஒன்று. செக்ஸ் 'யுத்தமே', முத்தத்தில் ஆரம்பிப்பதுதான். இப்படிப்பட்ட முத்தத்தை ஹாலிவுட் சினிமாப் படங்கலில் மிக அழகாக சித்தரித்துள்ளதையும் நாம் காண முடியும்.
 
உலகிலேயே முதல் முறையாக முத்தக் காட்சிஇடம்பெற்ற படம் ஹாலிவுட் படம்தான். 1896ம் ஆண்டு முதல் முத்தக் காட்சி ஹாலிவுட் படம் ஒன்றில் இடம் பெற்றது. அதேபோல முதல் முறையாக பிரெஞ்சு முத்தம் இடம் பெற்ற ஆண்டு 1961ம் ஆண்டாகும்.
 
அதேபோல 1926ம்ஆண்டு ஜான் பாரிமோர் என்ற ஹாலிவுட் கலைஞர் நடித்த படத்தில் கிட்டத்தட்ட 127 முத்தக் காட்சிகள் இடம் பெற்றிருந்ததாம். இன்று வரை இதுதான் முத்த ரெக்கார்டாக உள்ளது.
 
மோகம் தரும் முத்தத்தில் சில வகை…
 
ப்ரீஸ் கிஸ்.
 
இது படு வேடிக்கையானது. சின்ன ஐஸ் கியூபை எடுத்து உங்களது வாய்க்குள் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் வாயைத் திறந்து, உங்களது பார்ட்னரை நெருங்கி அந்த ஐஸ் கியூபை அவரது வாய்க்குள் பாஸ் செய்யுங்கள். உங்களது நாவால்தான் பாஸ் செய்ய வேண்டும், அப்படியே துப்பக் கூடாது. பிறகு முத்தமிடுங்கள். ஜில்லென்றிருக்கும்.
 
பிரெஞ்ச் கிஸ்.
 
இது உலகப் புகழ் பெற்றது. சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த முத்தத்திற்கு ஆன்மாவின் முத்தம் என்று பிரெஞ்சுக்காரர்கள் பெயர் வைத்துள்ளனர். இரு நாவுகள் சம்பந்தப்பட்டது இது. இந்த முத்தத்தின் மூலம் இருவரின் ஆன்மாவும் ஒன்றாக சங்கமிப்பதாக பிரெஞ்சுக்காரர்கள் நம்புகிறார்கள். இதற்குப் பிரெஞ்சு முத்தம் என்று பெயர் இருந்தாலும் கூட பிரான்ஸில் இதை 'இங்கிலீஷ் கிஸ்' என்றுதான் அழைக்கிறார்களாம்.
 
ப்ரூட்டி கிஸ்.
 
இதுவும் கிட்டத்த ப்ரீஸ் முத்தம் போன்றதுதான். ஸ்டிராபெர்ரி, திராட்சை அல்லது நறுக்கிய சின்ன மாம்பழத் துண்டு ஒன்றை எடுத்து அதை உதடுகளுக்கு நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உங்களது பார்ட்னரின் உதட்டுடன் வைத்து அழுத்துங்கள். அது நசுங்கி வழியும்போது இருவரும் இணைந்து அதைப் பருகி இந்த ப்ரூட்டி கிஸ்ஸை அனுபவிக்கலாம்.
 
ஹாட் அன்ட் கோல்ட் கிஸ்.
 
முதலில் உங்களது பார்ட்னரின் உதடுகளை சிறிது நேரம் மென்மையாக சுவையுங்கள். அதன் பின்னர் சற்று பலமாக ஊதுங்கள். முதலில் குளிர்ந்து போயிருக்கும் உதடுகள், நீங்கள் ஊதுவதன் திடீர் வெப்பத்தை சந்திப்பார் உங்களது பார்ட்னர். கூடவே இன்னொன்னும் கிடைக்குமா என்று கோரிக்கையும் வைப்பார்.
 
லிக் கிஸ்.
 
முத்தம் கொடுப்பதற்கு முன்பு உங்களது பார்ட்னரின் உதடை, அது மேல் உதடாகவும் இருக்கலாம், கீழுதடாகவும் இருக்கலாம், மெதுவாக உங்களது உதட்டால் தடவிக் கொடுங்கள். உணர்ச்சிகள் தூண்டப்படுவதை அனுபவிப்பீர்கள். பிறகு முத்தத்திற்குப் போகலாம்.
 
நெக் நிப்பிள் கிஸ்.
 
உதடுகளில் முத்தமிடுவதற்கு முன்பு உங்களது பார்ட்னரின் கழுத்தை மென்மையான முத்தத்தால் ஒரு 'சுற்று சுற்றி' விட்டு பின்னர் உதடுகளுக்கு் போங்கள்.
 
டாக்கிங் கிஸ்.
 
இது படு ஜாலியானது, கூடவே உணர்வுகளைத் தூண்டக்கூடியது. இருவரும் நேருக்கு நேர் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள். இருவரது உதடுகளும் நெருக்கமாக இருக்க வேண்டும். உதட்டோடு உதடு உரச, ஆனால் முத்தம் தரக் கூடாது, எதையாவது சிறிதுநேரம் ஜாலியாக பேசிக் கொண்டிருங்கள். உதடுகள் உரசும், உணர்வுகள் தூண்டப்படும், உள்ளங்கள் நெருங்கி வரும், பின் தொடர்ந்து வரும் உறவு வலுப்படும்.
 
சொல்லிக் கொண்டே போகாலம் முத்தத்தின் கதையை. உடல்கள் இணைவது மட்டும் உறவுகள் அல்ல, அன்பும் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு முத்தம் ஒரு நல்ல கருவி என்பதால் முத்தத்தில் ஆரம்பியுங்கள் உங்கள் இனிய உறவுகளை.
comments | | Read More...

2-வது மனைவியாக அனன்யா சம்மதம்

 
 
 
நடிகை அனன்யாவுக்கும் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அனன்யா நாடோடிகள் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தனுஷ் ஜோடியாக "சீடன்" மற்றும் "எங்கேயும் எப்போதும்" படங்களிலும் நடித்துள்ளார்.
 
ஆஞ்சநேயன் அனன்யாவை விட வயது அதிகமானவர். ஆனாலும் கேரளாவில் பெரும் பணக்காரராக உள்ளார். திருமணத்துக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தன. இதற்கிடையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 2008-ல் அவருக்கு திருமணம் நடந்ததாக கூறப்பட்டது.
 
முதல் திருமணத்தை மறைத்து மோசடியாக அனன்னாவை 2-வது திருமணம் செய்ய முயற்சித்ததாக பெற்றோர் ஆவேசமடைந்துள்ளனர். ஆஞ்சநேயன் மீது அனன்யாவின் தந்தை பெரும்பாபவூர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் ஆஞ்சநேயனுக்கு 2-வது மனைவியாக அனன்யா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நிச்சயதார்த்தத்துக்கு முன்பே ஏற்கனவே திருமணம் ஆனதையும் முதல் மனைவியை விவாகரத்து செய்ய கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அனன்யாவிடம் ஆஞ்சநேயன் தெரிவித்து விட்டாராம். அனன்யா பெற்றோரிடம் மட்டும் சொல்லாமல் மறைத்து விட்டாராம்.
 
இதனால் தற்போது எழுந்துள்ள சர்ச்சையை அனன்யா பொருட்டாக மதிக்கவில்லை. ஆனால் பெற்றோர் திருமணத்துக்கு தடை போட்டுள்ளனர். அனன்யா வெளியேறி விடாமல் இருக்க வீட்டில் அடைத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.



comments | | Read More...

சிகிச்சைக்காக மொட்டை புதிய தோற்றத்தில் யுவராஜ் சிங்!(வீடியோ,போட்டோ )

 
 


அமெரிக்காவில் நுரையீரல் கட்டிக்காக சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான யுவராஜ்சிங் தாம் நலமுடன் இருப்பதாக சமூக வலைதளமான டுவிட்டரிப் பதிவு செய்திருக்கிறார்.

மேலும் தலைமுடி இல்லாத தற்போதைய தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் டுவிட்டரில் யுவராஜ்சிங் வெளியிட்டுள்ளார்.

டுவிட்டரில்" கடைசியாக முடிதான் போச்சு! நான் நல்லா இருக்கேன்! யுவ்வலுவாக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் யுவராஜ்சிங் தற்போது பாஸ்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு டுவிட்டரில், தாம் முன்னைவிட வலுவாக திரும்பி களத்துக்கு வருவேன். ஏனெனில் என்னுடைய நாடே எனக்காக பிரார்த்திக்கிறது! என்னுடைய தனிமையை மதித்து ஆதரித்து வரும் ஊடகங்களுக்கும் நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்.

30 வயதாகும் யுவராஜ்சிங் இதுவரை 37 டெஸ்ட் போட்டிகலில் விளையாடி 1775 ரன்களைக் குவித்துள்ளார்.
274 ஒருநாள் போட்டிகளில் ஆடி 8051 ரன்களை எடுத்துள்ளார்.

கடந்த உலகக் கோப்பை போட்டியில் மிக அபாரமாக ஆடியவர் யுவராஜ்சிங்.

யுவராஜுக்கு முதலில் நுரையீரல் புற்றுநோய் என்று சொல்லப்பட்டது. பின்னர் அவரது மருத்துவர்கள் நுரையீரலில் கட்டிதான் அது புற்றுநோய் அல்ல என விளக்கம் அளித்திருந்தனர்.







comments | | Read More...

விழா மேடையில் அமைச்சர் மரணம்

 
 
 
கல்லூரி நிகழ்ச்சியின்போது மேடையில் மயங்கி விழுந்த கர்நாடக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா மரணம் அடைந்தார்.
 
கர்நாடக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா (71). அவர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இன்று காலை மங்களூரில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக நிருபதுங்கா ரோட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சென்றார்.
 
அங்கு ந்டநத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் திடீர் என்று மேடையில் மயங்கி விழுந்தார். உடனே அவரை மல்லிகே மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு சாந்தா என்ற மனைவியும், 4 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர்.
 
நேர்மையானவர் என்று பெயரெடுத்த ஆச்சார்யா கர்நாடக உள்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருக்கையில் அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டபோது பாஜக மூத்த தலைவரான ஆச்சார்யா 19 மாதங்கள் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger