News Update :
Powered by Blogger.

ரஜினியின் பிறந்த நாளன்று ‘ கோச்சடையான்’

Penulis : karthik on Tuesday 3 July 2012 | 10:08

Tuesday 3 July 2012

ரஜினி தற்போது நடிக்கும் 'கோச்சடையான்' படத்தின் வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோன், ஜாக்கி ஷெராப், சரத்குமார், நாசர், ஷேபானா, ஆதி மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் படங்களின் கிராபிக்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இப்படத்தில் கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால் தீபாவளிக்கு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோச்சடையான் படத்தினை தயாரித்து வரும் ஈராஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், கோச்சடையான் படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் டிவி உரிமையை ஜெயா டிவி வாங்கி இருக்கிறது. தெலுங்கு உரிமையை கணபதி பிலிம்ஸ் பெற்றிருக்கிறது. மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை டோக்கியோவிலும், பிரிமியர் காட்சிகளை லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் இறுதியில் 'கோச்சடையான்' வெளியாகும் என்பதால், ரஜினியின் பிறந்த நாளான 12-12.2012 அன்று இப்படத்தை வெளியிடக்கூடும் என சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

comments | | Read More...

அரசியலமைப்பின்படி சோனியா பிரதமராகும் தகுதி உடையவர்: அப்துல் கலாம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதி வெளிவந்துள்ள 'டர்னிங் பாயிண்ட்ஸ்' என்ற புத்தகத்தில், 'கடந்த 2004-ம் ஆண்டு சோனியா காந்தியை பிரதமராக்குவதில் எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது அவரை பெரும் சர்ச்சைக்கு ஆளாக்கியுள்ளது. இதற்கு சில அரசியல் தலைவர்கள் தங்களது எதிர்ப்பை காட்டி விமர்சித்து வருகின்றனர். கலாமின் இந்த கருத்து குறித்து சரத்பவார் கூறுகையில்: கலாமுக்கு தாமதமாக சுய உணர்வு வந்துள்ளது. இந்த கருத்தை வெளியிட்டு அவரது செல்வாக்கை வலிமையாக்க நினைக்கிறார். மக்கள் அவரை மிகவும் மதிக்கிறார்கள்; ஆனால் இப்பொழுது இத்தகைய கருத்துக்கள் வெளியிடப்பட்ட பிறகு வருத்தப்பட வைக்கிறது என்றார். இதேபோல், சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே கலாமை சுயநலமிக்கவர், போலி வேஷக்காரர் என்று கூறியுள்ளார். இதுபோன்ற வ ிமர்சனங்களுக்கு அப்துல் கலாம் பதிலளித்ததாவது:2004-ல் சோனியாவை பிரதமராக அறிவிக்க எனக்கு ஆட்சேபனை இல்லை என எனது புத்தகத்தில் எழுதியுள்ளேன். அரசியலமைப்பின்படி அவர் பிரதமராவதற்கு தகுதி உடையவர். உச்ச நீதிமன்றமும் அவரது குடியுரிமையை உறுதி செய்தது. அதனால் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியும் அவர் விருப்பப்பட்டால் அவரை பிரதமராக்கலாம் என கருதினேன். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அவர் தலைமை வகித்து மன்மோகன் சிங்கை பிரதமராக அறிவித்தார் என கூறினார்.

comments | | Read More...

எனது மார்பகங்கள்... 'டைட்டானிக்' நாயகி கேட் வருத்தம்!

எனக்கு அழகான மார்பகங்கள் இல்லை, வளைவு,நெளிவுடன் அவை இல்லை. வெகு சாதாரண மார்பங்கள்தான் அவை என்று கூறியுள்ளார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட். டைட்டானிக் படம் மூலம் உலக திரை ரசிகர்களை குறிப்பாக ஆண்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் இங்கிலாந்து நடிகை கேட் வின்ஸ்லெட். அப்படத்தில் அவரது கம்பீரமான அழகில் மயங்காதவர்களே கிடையாது. ஆனால் தனது அழகு குறித்து கேட் ஒருபோதும் பீற்றிக் கொண்டதே கிடையாது.உலக அளவில் நடத்தப்படும் பல்வேறு கருத்துக் கணிப்புகளில் செக்ஸியான நடிகைகள் பட்டியலில் அவ்வப்போது முதலிடம் அல்லது முக� ��கிய இடத்தைப் பெற்றும் கூட தன்னை பெரிய அழகியாகவோ, செக்ஸியான பெண்ணாகவோ கூறிக் கொண்டதில்லை கேட். தற்போது 36 வயதில் ஓடிக் கொண்டிருக்கும் கேட், தனது வயது குறித்தும், அழகு குறித்தும் அடக்கமாக சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து படியுங்கள்... நான் ஒன்றும் அவ்வளவு செக்ஸியான பெண் கிடையாது. உண்மையில் எனக்கு அழகான மார்பகங்கள் கூட கிடையாது. அழகான வளைவுகளோ, நெளிவுகளோ கிடையாது. சாதாரணமானவைதான் அவை. அதற்காக நான் ஒருபோதும் கவலைப்பட்டதே கிடையாது. செக்ஸியான, ரொமான்டிக்கான காட்சிகளில் நடிக்க தயங்கியதும் கிடையாது. நான் நிர்வாணமாக நடிக்கும்போதும் சரி, செக்ஸியாக நடிக்கும்போதும் சரி, அது மற்ற பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட உதவும் என்பது எனது நம்பிக்கை. எனவேதான் எனது உடல் அழகு குறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது. என்னால் பல பெண்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கிறது என்பதே திருப்தியாக உள்ளது. சாதாரணமாக தெருவில் நடந்து செல்லும் பெண்களைப் போலத்தான் நானும். உடல் அமைப்பும் சரி, எடையும் சரி, அழகும் சரி, எல்லாமே என்னிடம் சாதாரணமானதுதான் என்கிறார் கேட். 2008ல் வெளியான தி ரீடர் படத்தில் ஒரு நிர்வாணக் காட்சியில் நடித்திருந்தார் கேட். அப்படத்திற்காக அவருக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. டைட்டானிக் படம் இன்றளவும் உலக திரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. அதில் அழகான கேட்டை கண்ட ரசிகர்கள் அதே பார்வையுடன்தான் இன்று வரை கேட்டை ரசித்து வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான டைட்டானிக் 3டி ரிலீஸுக்கும் � ��ூட பாக்ஸ் ஆபீஸில் சரியான வரவேற்பு கிடைத்தது.டைட்டானிக் படத்தில் நடித்தபோது அவருக்கு வயது 21 தான். தற்போது 15 வருடங்களைத் தாண்டி வந்து விட்டார் கேட். வயது குறித்தும் அவர் அதிகம் கவலைப்படவில்லை. எனக்கு தன்னம்பிக்கை அதிகம் உள்ளது. வயது ஆவது குறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. அது இயற்கை. வயது ஆக ஆக எனக்குள் மன உறுதிதான் அதிகப்படுகிறதே தவிர குறைவதில்லை. இன்னும் ந� �றைய செய்ய வேண்டும் என்ற உற்சாகம் கூடுகிறது. 21 வயதில் இருந்த நான் இப்போது இல்லை. இன்னும் போகப் போக எனது உடல் சதைகள் தளர்வடைய ஆரம்பிக்கும், மார்பகங்கள் தொங்கிப் போகும், முடி கொட்டலாம், பற்கள் துருத்த ஆரம்பிக்கலாம். இதெல்லாம் சாதாரணமானதுதான். ஆனால் எனது நம்பிக்கை வலுவாகவே உள்ளது என்று கூறும் கேட் இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தும் செய்து கொண்டவர். அவரது முதல் கணவர் இயக்குநர் ஜிம் திரெப்லெடியான். பின்னர் � ��யக்குநர் சாம் மெண்டிஸை 2010ல் மணந்து அவரையும் விவாகரத்து செய்தார். தற்போது மூன்றாவதாக ஒரு காதலில் உள்ளார். தனது முந்தைய இரு திருமணங்கள் மூலம் அவருக்கு தலா ஒரு குழந்தை என இரண்டு பேர் உள்ளனர். அதில் 11 வயது மகள் மியா அடக்கம். இன்னொருவர் ஜோ என்ற பெயர் கொண்ட மகன் ஆவார்.கேட் தற்போது லேபர் டே என்ற படத்தில் மன அழுத்தம் மிக்க, தனித்து வாழும் தாயாரின் கேரக்டரில் நடித்து வருகிறார்.

comments | | Read More...

ஜனாதிபதி தேர்தல்: பிரணாப் முகர்ஜி வேட்புமனு ஏற்பு

 ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக் காலம் முடிவடைவதால் அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க இம்மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சங்மாவும் போட்டியிட மனு செய்துள்ளனர். 100-க்கும் மேற்பட்ட சுயேட்சைகளும் மனு செய்திருந்தனர். வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாளாகும். இந்நிலையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலினை நேற்று தொடங்கியது. வேட்பு மனுக்கள் பரிசீலனையின் 2-வது நாளான இன்று மதியம் எதிர்க்கட்சி வேட்பா ளரான சங்மாவின் வேட்பு மனு முதலில் ஏற்கப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜி ஆதாயம் தரும் பதவியில் இருப்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சங்மா சார்பில் தேர்தல் ஆணையத்திடம் நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த தேர்தல் அதிகாரி அக்னிஹோத்ரி, பிரணாப் மீது கூறப்பட்ட புகார்கள் குறித்து பதில் அளிக்க அவருக்� �ு அவகாசம் அளித்தார். அதன்படி பிரணாப் முகர்ஜி ஆதாயம் தரும் பதவியை கடந்த மாதம் 20-ம் தேதியே ராஜினாமா செய்துவிட்டதாக அவர் சார்பாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பன்சால் இன்று பிற்பகல் தேர்தல் அதிகாரியிடம் பதிலளித்தார். பிரணாப்பின் இந்த பதிலை ஏற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரி அக்னிஹோத்ரி, அவரது வேட்புமனுவை ஏற்றுக்கொண்டதாக பன்சால் அறிவித்துள்ளார்.

comments | | Read More...

இன்டர்நெட்டில் காட்டுத் தீயாக பரவும் பிங்கி மருத்துவப் பரிசோதனை வீடியோ!

சர்ச்சைக்குரிய பிங்கி பிராமனிக்குக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்று இன்டர்நெட்டில் பரவி வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் காட்சியை யார் கசிய விட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் தடை ஓட்டப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றவர் பிங்கி. இவர் மீ்து சமீபத்தில் ஒரு பெண் கொல்கத்தா போலீஸில் புகார் கொடுத்தார். அதில்,பிங்கி ஒரு ஆண் என்றும் தன்னுடன் அவர் வசித்து வந்ததாகவும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்றும் அப்பெண் தனது புகாரில் கூறியிருந்தார்.இதையடுத்து பிங்கி கைது செய்யப்பட்டார். அவருக்கு கொல ்கத்தா மருத்துவமனையில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மேலும் ஒரு முக்கிய சோதனையும் நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு நடந்த மருத்துவப் பாலின பரிசோதனையின் காட்சி அடங்கிய வீடியோ பதிவு ஒன்று இன்டர்நெட்டில் வெளியாகி விட்டது. 29 விநாடிகள் இந்த காட்சி ஓடுகிறது. அந்த சோதனையின்போது பிங்கி உடலில் ஆடைகள் இன்றி காணப்படுகிறார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுவது போல காட்சி உள்ளது. பிங்கி முதல் முறையாக கைது செய்யப்பட்டபோது அவருக்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் போலீஸார் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றிருந்தனர். அங்கு நடந்த மருத்துவப் பரிசோதனை காட்சிதான் தற்போது வெளியாகியுள்ளதாக கருதப்படுகிறது.இந்த வீடியோ வெளியீடு குறித்து பிங்கியின் வக்கீல் துஹின் ராய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அந்த வீடியோ� �ை நான் இதுவரை பார்க்கவில்லை. ஆனால் இதை வெளியிட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இது மிகவும் கேவலமான, கொடூரமான செயல்.பிங்கியின் வழக்கு ஜூலை 12ம் தேதி கோர்ட்டுக்கு வரும்போது இந்தப் பிரச்சினையை நாங்கள் எழுப்புவோம் என்றார்.

comments | | Read More...

பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ ஆட்சி வரலாம்: முஷரப் பேட்டி

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷரப் பதவி விலகிய பிறகு வெளிநாடு சென்றார். பின்னர் அவர் நாடு திரும்பவில்லை. இங்கிலாந்து மற்றும் துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில் முஷரப் அமெரிக்காவில் கொலோராடோ பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.   அப்போது பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் குறித்து முஷரப் கூறியதாவது:- பாகிஸ்தானில் தற்போது நிலவும் சூழ்நிலை சரியில்லை. வீழ்ச்சியில் இருந்து நாட்டையும், அரசியல் அமைப்பு சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டாமா? இந்த சூழ்நிலையில் நாட்டை பாதுகாக்க மீண்டும் ராணுவம் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே அங்கு ராணுவ ஆட்சி மீண்டும் வரலாம். அதை மறுப்பதற்கில்லை.  என்று அவர் கூறினார்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger