News Update :
Powered by Blogger.

சசிகலா மீது ஏன் ஜெயலலிதா விசாரணைக் கமிசன் வைக்க வில்லை

Penulis : karthik on Saturday 31 December 2011 | 21:12

Saturday 31 December 2011

 
 
 
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அந்நகரில் ம.தி.மு.க வின் இளைஞரணி பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் கொள்கை விளக்க அணித் தலைவர் நாஞ்சில் சம்பத்தின் பேச்சில் அனல் வீச்சு வெப்பத்தைக் கிளப்பியது
 
அவர், '' 100சதவிகிதம் பஸ் கட்டண உயர்வு சுமை தாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். பிரச்சிணைகளைத் திசைதிருப்பவே சசிகலா விவகாரம் நடந்து வருகிறது. அப்படி என்றால் அவர்கள் மீது ஜெயலலிதா ஏன் விசாரணைக கமிசன் வைக்க வில்லை.
 
 
ஆய்ந்து அறிந்த பின்பு சமச்சீர் கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்தார் கலைஞர் ஆட்சிக்கு வந்த உடனேயே சமச்சீர்கல்விக்கு சமாதிகட்டிவிட்டீர்கள். ஓதாமல் ஓரு நாளும் இருக்க வேண்டாம் என்று சொன்ன தமிழ் நாட்டில், நீங்கள் இரண்டரை மாதம் ஓதவிடவில்லை.
 
சமச்சீர் பாட புத்தகத்தில் வள்ளுவர் படத்தை பச்சை அட்டை ஒட்டி மறைத்தீர்களே வள்ளுவர் என்ன தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளரா? அவர் என்ன குற்றம் செய்தார் உங்களுக்கு.
 
கலைஞர் ஆட்சியின் மகத்தான சாதனை செம்மொழி நூலகம் . அந்த நூலகத்தை மூட நினைப்பது 4 சிறைச்சாலைகளை திறப்பதற்குச்சமம்.
 
 
 
தமிழ் நாட்டு நிதி நிலைமை பற்றாக்குறை என்கிறார். ஒருபற்றாக்குறை நாடு என்றால் அந்தப் பற்றாக்குறைக்கு என்ன காரணம் என்று ஒரு முதலமைச்சர் யோசிக்க வேண்டும். பற்றாக்குறை இருந்தால் ஒரு நாடு வளம்பெறாது நான் யாசித்துக் கேட்கிறேன்.
 
இந்த இடைத் தேர்தலில் ம.தி.மு.க.வை வேற்றி பெறச்செய்யுங்கள். சங்கரன்கோவில் தொகுதிக்கு ஒரு மரியாதை கிடைக்கும். இந்த அரசாங்கத்தை உரசிப்பார்ப்பதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்புத்தாருங்கள்'' என்று பேசினார்.
 

 


comments | | Read More...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2012


உலகெங்கிலும் வசிக்கும் நம் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் , நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இந்த ஆண்டு நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அளிக்கும் ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறோம்.

படத்தை சொடுக்கி பெரியதாக்கி பார்க்கலாம். வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளூங்கள்.




இந்த புத்தாண்டு ஈழத்தின் எழுச்சி ஆண்டாக!
உரிமைகளை மீட்டிடும் ஆண்டாக!
அமைதி நிலவும் ஆண்டாக!
வெள்ளைப் பூக்களாக!
மலரட்டும்!
       
2012_eelam
 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



நண்பர்கள் அனைவருக்கும் இனிய உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த 2012 ம் ஆண்டில் அனைவரும் அனைத்து நன்மைகளும் கிடைக்கப்பெற்று சுபீட்சமாய் வாழ ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

நம்மால் இயன்ற வரை பிறர்க்கு நனமைகள் செய்வோம். முடியாது போனால் துன்பம் செய்யாது இருப்போம்.

comments | | Read More...

நீண்ட காலம் வாழ்வதற்கான ரகசியங்கள்

இந்த உலகத்தில் பிறந்த அனைவருமே நீண்ட காலம் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றனர்.
ஆனால் அதற்கான வழி தெரியாமல் யாரெல்லாம் நீண்ட ஆயுளுக்கு வழி கூறுகிறார்களோ அதைத் தேடி அலைகின்றனர் அல்லது அவர்கள் கூறும் வழிகளைப் பின்பற்றுகின்றனர்.
ஆனால் நீண்ட ஆயுளுக்கான வழி அவரவர்களிடம் தான் உள்ளது என்ற ரகசியம் பலருக்கும் புரிவதில்லை. இதைத்தான் லண்டனைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்டெப்டோ ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்.
அவரது ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா? மகிழ்ச்சியாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம் என்பதுதான் அது. அட இது தெரியாதா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதை ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளார் ஸ்டெப்டோ.
தனது ஆராய்ச்சிக்கு அவர் தேர்ந்தெடுத்தவர்கள் அனைவருமே 52 வயது முதல் 79 வயதுக்குள்பட்டவர்கள். சுமார் 4 ஆயிரம் பேரிடம் ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்ட தொடர் ஆராய்ச்சியின் முடிவை கட்டுரையாக வெளியிட்டுள்ளார் ஸ்டெப்டோ.
இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் எல்லாம் நல்ல சிந்தனை உள்ளவர்களுக்கு மன இறுக்கம் குறைவதற்கான ஹோர்மோன் சுரப்பை கட்டுப்படுத்துவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதாகவும் தெரிவித்தன.
ஆனால் பேராசிரியர் ஸ்டெப்டோவின் ஆராய்ச்சி முடிவுகள் எப்பவும் மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருப்பது நிரூபணமாகியுள்ளது. ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட 4 ஆயிரம் பேரிடமும் தினசரி நான்கு முறை அவர்களது மனோ நிலை எப்படி என்று கேட்கப்பட்டு அதற்கான விடை பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக ஆராய்ச்சிக்கு உள்படுத்தப்பட்டனர். ஆராய்ச்சியின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டு அவர்களது மனோ நிலையும் ஆராய்ச்சிக்குள்படுத்தப்பட்டது.
ஒவ்வொருவரின் வயது, பாலினம், மன இறுக்கம், அவர்களுக்கு இருந்த நோய்கள், உடலியல் சார்ந்த நடவடிக்கைகள் ஆகியன ஆராயப்பட்டன. இதில் மகிழ்ச்சியாக இருந்தவர்களுக்கு எவ்வித நோயும் அண்டவில்லை. மேலும் இத்தகையோர் குறைந்த வயதில் உயிரிழப்பதும் இல்லை என்பது அறியப்பட்டது.
இதிலிருந்து உடலியல் ரீதியிலான மாற்றம் சந்தோஷமாக இருப்பவர்களிடையே இருப்பது புலனாகியுள்ளது. இதனால் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது புரிந்தது என்று ஸ்டெப்டோ தனது ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
மன இறுக்கத்துக்குக் காரணமான கார்டிசால் எனும் ஹார்மோன் சுரப்பு இவர்களுக்குக் குறைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போதும் என்ற மனதுடன் இருப்பவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
comments | | Read More...

மஞ்சள் காமாலை தடுப்பது எப்படி?

இது எப்படி ஒருவரிடம் தொற்றுகிறது?

கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் இந்த நோய் ஏற்பட காரணம். இந்த வைரஸ் கல்லீரலை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எளிதில் தாக்கும்.

சுகாதாரமற்ற குடிநீர், உணவின் வழியாக இந்த வைரஸ் ஒருவரது உடலுக்குள் நுழைந்து விடுகிறது. இரத்தம் செலுத்தும்போது அல்லது உடலுறவின் போதுகூட இது பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த ஒன்று அல்லது இரண்டாவது வாரத்தில் மஞ்சள் காமாலை தோன்றுகிறது.

நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் அசதி, பசியின்மை, உடல் வலி, சோர்வு, மூட்டுவலி போன்ற அறிகுறிகள் தென்படும். கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சளாக காட்சியளிக்கும். சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் வெளியாகும். மேலும், சிறுநீர் வெளியேற்றுவதிலும் சிரமங்கள் தோன்றும். கல்லீரல் அழற்சியின் அடுத்தகட்டமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீங்கி பெரிதாகும். இத்துடன் நிணநீர்க் கட்டிகளிலும் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மஞ்சள் காமாலையை உறுதி செய்வது எப்படி?

இரத்தப் பரிசோதனையின் மூலமே மஞ்சள் காமாலை நோயை உண்டாக்கும் வைரஸ் பற்றி கண்டறிய முடியும். இந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல், புரதத்தின் அளவு இரத்தத்தில் அதிகரித்திருப்பதை வைத்து மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை அறியலாம்.

மேலும், கல்லீரலில் முக்கிய என்சைமின் அளவும் அதிகரித்து காணப்படும். இரத்தம், சிறுநீர் பரிசோதனைக்கு அடுத்தபடியாக வயிற்றுப் பகுதியில் 'ஸ்கான்' செய்து பார்ப்பார்கள். அப்போது இந்த நோய் பாதிப்பினால் ஏற்பட்ட கல்லீரல் வீக்கம் மற்றும் மண்ணீரல் பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம்.

மஞ்சள் காமாலை உறுதியான பிறகு என்ன செய்ய வேண்டும்?

உடனடியாக முறையான சிகிச்சை எடுப்பதோடு பத்தியமும் இருக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை நோய் முழுமையாக குணமடையும் வரை கடைபிடிக்க வேண்டும். கல்லீரல் அழற்சி நீண்ட காலம் இருந்தால் அது கல்லீரல் புற்றுநோயாக மாறவும் வாய்ப்புள்ளது.

மேலும், கல்லீரல் செயல் இழப்பும் ஏற்படலாம். கர்ப்பிணிகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும்போது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. கர்ப்பிணிகளுக்கு 'கல்லீரல் அழற்சி பி வைரசால்' பாதிப்பு இருக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தைக்கும் தடுப்பூசி போட வேண்டியது முக்கியம்.

இதற்காக, வைரசுக்கு எதிரான தடுப்பாற்றல் புரதமும் குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் மட்டுமே, பிறக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
comments | | Read More...

முல்லைப்பெரியாறு விவகாரத்தில் இளங்கோவனுக்கு பா.ஜ., ஆதரவு

Penulis : karthik on Friday 30 December 2011 | 20:49

Friday 30 December 2011



முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன்சாண்டியை மாற்ற வேண்டும் என்ற இளங்கோவன் நிலைபாட்டுக்கு, மாநில பா.ஜ., தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சுசீந்திரம் அருகே வனத்துறை ஊழியர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மாதங்கள் கடந்தும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. முதல்வர் ஜெ., இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுத்து உண்மையான குற்றவாளியை அடையாளம் காட்ட வேண்டும். கூடங்குளத்தில் மின் உற்பத்தி காலதாமதம் ஆனால் பல விளைவுகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எனவே உடனடியாக மின் உற்பத்தியை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் முதல்வர் பதவி ஏற்றதும் எடுத்திருந்த நிலைபாட்டை உறுதியாக செயல்படுத்த வேண்டும்.


முல்லைப்பெரியாறு பிரச்னையால் இருமாநில மக்களுக்கிடையே இருந்து வரும் உறவு முறிந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தின் உரிமையை இழக்கவும் முடியாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு செயல்இழந்து நிற்கிறது. முல்லைப்பெரியாறு பிரச்னையில் முரண்டு பிடிக்கும் முதல்வர் உம்மன்சாண்டியை மாற்ற வேண்டும் என்று இளங்கோவன் கூறியிருப்பதை பா.ஜ., ஆதரிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger