News Update :
Powered by Blogger.

மீண்டும் உலக சாம்பியன் ஆவேன்: விஸ்வநாதன் ஆனந்த்

Penulis : karthik on Thursday 12 July 2012 | 22:58

Thursday 12 July 2012





ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தனது 42-வது வயதிலும் தொடர்ந்து செஸ் போட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வமாக உள்ளார். இந்நிலையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அடுத்த சாம்பியன் யார் என ஆனந்திடம் கேட்டதற்கு, 'நான் மீண்டும் உலக சாம்பிய� �் ஆவேன். மீண்டும் சாம்பியன் ஆவதில் நான் ஆர்வமாக உள்ளேன்' என அவர் பதிலளித்தார்.
 
ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை துருக்கியில் நடக்க உள்ள செஸ் சாம்பியன்ஷிப்பில் தான் பங்கேற்க போவதில்லை எனவும் ஆனந்த் த� �ரிவித்துள்ளார். இதுபற்றி பேசிய ஆனந்த், 'இதுபோன்ற வடிவிலான தொடர்களில் நான் பலமுறை விளையாடியுள்ளேன். எனவே வேறு தொடர்களில் கவனம் செலுத்த நான் விரும்புகிறேன். நீங்கள் ஒரு விளையாட்டை நேசித்து, கடினமாக உழைத்தால் அந்த விளையாட்டில் சிறப்பாக செயல்பட முடியும். அப்போது வயது ஒரு தடையாக இருக்காது. அதனால்தான் 42 வயதிலும் என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது' எனக் கூறியுள்ளார்.&nb sp;








comments | | Read More...

நடனப்பள்ளி மாணவிகளிடம் இளைஞர்கள் சில்மிஷம் - ஷோபனா போலீசில் புகார்





தன்னிடம் நடனம் கற்க வரும் மாணவிகளிடம், ரோமியோக்கள் ஈவ்டீசிங் தொல்லை கொடுப்பதாக பிரபல நடிகை ஷோபனா பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

'தளபதி, 'எனக்குள் ஒருவன்', 'இது நம்ம ஆளு' போன்ற பிரபல தமிழ்ப்படங்களிலும், ஏராளமான தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளவர் நடிகை ஷோபனா (வயது 42). மறைந்த பழம்பெரும் நடிகை பத்மினி � ��வரது அத்தை. இவர் சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீமன் சீனிவாசா ரோட்டில் வசிக்கிறார்.

நேற்று நடிகை ஷோபனா தனது நடனப்பள்ளி மாணவி ஒருவருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேனாம்பேட்டை உதவி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டது.
ஷோபனாவிடம், என்ன புகார் மனு கொடுத்தீர்கள் என்று, நிருபர்கள் கேட்டனர். அதற்கு உடனடியாக பதில் ச� ��ல்லாமல், ஷோபனா கண்கலங்கினார்.

பின்னர் அவர் கூறுகையில்,

"நான் எனது வீட்டில் நடனப் பள்ளி நடத்தி வருகிறேன். 200 மாணவிகள் என்னிடம் நடனம் கற்று வருகிறார்கள்.
ஆனால் எனது நடனப் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்� ��ு பெரும் தொல்லை கொடுக்கும் வகையில், எனது வீடு அருகில் இருக்கும் நடமாடும் டீக்கடைக்கு, டீ சாப்பிட வரும் இளைஞர்கள் செயல்படுகிறார்கள்.

இதைக்கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனது வீட்டுக்குள் அடியாட்களை அனுப்பி மிரட்டுகிறார்கள். பொருட்களை திருடிச் செல்கிறார்கள். எனது மாணவி ஒருவர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டின் குடிநீர் குழாயை உடைத்து விடுகிறார்கள்.
பிரச்சினைக்குரிய அந்த டீக்கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொல்லை கொடுக்கும் இளைஞர்கள் மீதும், டீக்கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், " என்றார்.







comments | | Read More...

ரூ.6 1/2 கோடி நஷ்டஈடு: டோனிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி





இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி. விளையாட்டு மூலம் புகழை பெற்ற அவர் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து வருகிறார். டோனி 2006-ம் ஆண்டு கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் நிறுவனத்தில் (கே.எஸ்.டி.எல்) ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். 

டோனியை அந்த நிறுவனம் 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே டோனி அந்த விளம்பர நிறுவனத்தில் இருந்து பாதியில் விலகி கொண்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து டோனி மீது கே.எஸ்.டி.எல். நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. விளம்பர ஒப்பந்த விதி முறைகளை டோனி மீறி வி� ��்டதாகவும், இதனால் அவர் ரூ.6 1/2 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. 

கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குருராஜன் இந்த மனுவை விசாரித்து தள்ளுபடி செய்தார். ரூ.6 1/2 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கோர்ட்டு நிராகரித்தது.





















comments | | Read More...

பெண்கள், சிறுமிகளை கடத்துவதில் தமிழ்நாடு 'நம்பர் ஒன்'!





பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தலில் தென்னகத்திலேயே தமிழ்நாடுதான் முதல் இடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவணப் ப� �ிவகம் தெரிவித்துள்ளது.

2011ம் ஆண்டு பெண்கள் அதிக அளவில் கடத்தப்பட்டது தமிழகத்தில்தானாம். நான்கு தென் மாநிலங்களிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் பெண்கள் கடத்தல் நடந்துள்ளதாம்.

தமிழகத்தில் சிறுமிகள் உள்பட பெண்கள் கடத்தல் சம்பவங்கள் 1743 நடந்துள்ளது. ஆந்திராவில் இது 1612 ஆகவும், கர்நாடகத்தில் 1395 ஆகவும், கேரளாவில் 299 ஆகவும் இருந்தது.

தேசிய அளவில் உ.பிக்குதான் கடத்தலில் முதலிடம் கிடைத்துள்ளது. அங்கு மொத்தம் 7525 வழக்குகள் இதுதொடர்பாக பதிவாகியுள்ளன. இரண்டாவது இடத்தில் மேற்கு வங்கமும், 3வது இடத்தில் பீ� �ாரும் உள்ளன.

தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 187 கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. சேலத்தில் 108, கடலூரில் 100 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தலைநகர் சென்னையில் 41 வழக்குகள் பத ிவாகியுள்ளன. கோவையில் இது 39ஆக இருந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெண்கள், சிறுமிகள் கடத்தல் தவிர மற்ற கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை 241 ஆக இருந்தது. இதையும் சேர்த்தால் மொத்தம் 1984 கடத்தல் சம்பவங்கள் கடந்த ஆண்டு தமிழகத்தில் நடந்துள்ளன.

குடும்பப் பிரச்சினை, கல்யாணம் செய்து தர மறுப்பது, பணம் கேட்டு மிரட்ட என்று பல� �வேறு காரணங்களுக்காக கடத்தல் சம்பவங்கள் பொதுவாக நடக்கின்றன. கள்ளக்காதலில் நடைபெறும் கடத்தல்களும் கணிசமாக உள்ளதாக தேசிய குற்ற ஆவணப் பதிவகம் கூறுகிறது.







comments | | Read More...

லண்டன் இசையமைப்பாளருடன் நிச்சயதார்த்தம்: திருமணத்துக்கு பின் தொடர்ந்து நடிப்பேன்- ராதிகா ஆப்தே





அஜ்மல், ராதிகா ஆப்தே � ��ோடியாக நடிக்கும் படம் வெற்றிச் செல்வன், ருத்ரன் இயக்குகிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு ராயப் பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் தியேட்டரில் நடந்தது. இதில் பங்கேற்று நடித்த ராதிகா ஆப்தே நிருபர்களிடம் கூறியதாவது:-

ரத்த சரித்திரம், டோனி படங்களில் நடித்துள்ளேன். வெற்றிச் செல்வன் தமிழில் எனக்கு மூன்றாவது படம். இதில் வக்கீல் கேரக்டரில் வருகிறேன். தொழிலிலும் வைராக்கியமும் மற்றவர்க� �ிடம் மென்மையாக நடக்கும் குணத்துடனும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறேன்.

நல்ல கதையம்சம் உள்ள படம். சமூகத்துக்கு தேவையான ஒரு விஷயம் படத்தில் உள்ளது. லண்டனை சேர்ந்த இசை அமைப்பாளர் பெனட்டிக் டெய்வருடன் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.திருமணத்துக்கு பிறகும் நடிப்பேன்.

தமிழில் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன். எனது முந்தைய படங்களை போல் அல்லாமல் வெற்றிச் செல்வன் முழு கமர்சியல் படமாக வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் அஜ்மல் கூறும் போது வெற்றிச் செல்வன் படம் சமூக அக்கறையுடனான கதை கருவில் தயாராகியுள்ள கமர்ஷியல் படம். கதை பிடித்ததால் நடித்தேன். பின்னணி பாடகர் மனோவும் என்னுடன் நடித்துள்ளார். ஆகஸ்டில் படம் ரிலீசாகிறது. கோ படம் போன்று வித்தியாசமான கேரக்டர் அமைந்தால் வில்லனாகவும் நடிப்பேன் என்றார்.







comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger