News Update :
Powered by Blogger.

தீபாவளி போட்டியிலிருந்து முந்திக் கொண்ட‌ ராஜாராணி raja rani tamil movie

Penulis : Tamil on Saturday 14 September 2013 | 22:44

Saturday 14 September 2013

தீபாவளி போட்டியிலிருந்து முந்திக் கொண்ட‌ ராஜாராணி
by abtamil

ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்து தயாரித்துள்ள படம் ராஜாராணி. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ், சத்யன்னு ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிச்சிருக்கிற இந்தப் படத்தை ஷங்கர் அசிஸ்டெண்ட் அட்லீ டைரக்ட் செய்திருக்கிறார். படம் தொடங்கியதிலிருந்தே படத்துக்கு ஏகப்பட்ட பில்டப்கள் கொடுத்து விளம்பரம் செய்து வருகிறார்கள். ஆர்யா, நயன்தாராவுக்கு கல்யாண பத்திரிக்கை அடிக்கிற அளவுக்கு இருந்தது விளம்பர ஸ்டண்ட். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணத்தான் முதலில் நினைத்திருந்தார்கள். தீபாவளிக்கு ஆர்யா நடித்த இரண்டாம் உலகம் ரிலீசாவது உறுதியாகி இருப்பதால் அதற்கு முன்னதாக அதாவது வருகிற செப்டம்பர் 27ந் தேதி படம் ரிலீசாவதாக அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார்கள்.

படத்தின் டிரைய்லரும், ஜி.வி.பிரகாஷ் இசையில் வந்திருக்கும் பாடல்களும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. "ராஜாராணி மனதை வருடும் ஒரு இனிய காதல் கதை. நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு இனிய பயணம் இந்தப் படத்தில் நிச்சயம் உண்டு. திறமைகளின் சங்கமமாக இருக்கும் இந்தப் படம் நிச்சயம் பெரும் வெற்றி பெறும்" என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

"ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்து நாங்கள் தயாரிக்கும் 3வது படம். எங்கள் பரஸ்பர உறவு இந்தி படங்களிலும் தொடர்கிறது. ராஜாராணி எங்கள் கூட்டுத் தயாரிப்பில் உருவான ஜனரஞ்சக படம். படத்தின் பாடல்களின் வெற்றி படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது" என்கிறார் பாக்ஸ் ஆபீஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி விஜய் சிங்.

Show commentsOpen link

comments | | Read More...

பா.ஜனதாவால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்: நரேந்திர மோடி பேச்சு Narendra Modi says BJP only can save the country

பா.ஜனதாவால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்: நரேந்திர மோடி பேச்சு Narendra Modi says BJP only can save the country

Tamil NewsYesterday,

ஆமதாபாத், செப்.15- பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான ஆட்சிமன்ற குழுவின் கூட்டம் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடந்தது. கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தை மூத்த தலைவரான அத்வானி புறக்கணித்தார். இந்த கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். கட்சியின் மூத்த தலைவர்களின் வாழ்த்துகளுக்கு இடையே, அத்வானியின் இல்லம் சென்று அவரது வாழ்த்தையும் நரேந்திரமோடி பெற்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அவர் விமானம் மூலம் ஆமதாபாத் திரும்பினார். விமான நிலையத்தில் திரளான தலைவர்களும், தொண்டர்களும் திரண்டு வந்து மோடிக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்கள், குஜராத் சிங்கம் வந்து விட்டது என்று மகிழ்ச்சியில் கோஷமிட்டனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு, நரேந்திரமோடி அவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நாட்டில் சாமானிய மக்களின் ஒரே நம்பிக்கை கீற்றாக பாரதீய ஜனதா கட்சி ஆகி உள்ளது. நம்பிக்கையற்ற நிலையில் உள்ள தேசத்தை பாரதீய ஜனதாவால் மட்டுமே காப்பாற்ற முடியும். இன்றைய நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுத்து, முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்கிற ஆற்றல், பாரதீய ஜனதாவுக்கு இருக்கிறது என்று இந்த நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். நாட்டு மக்களின் எதிர்பார்ப்பில் எந்தவொரு குந்தகமும் ஏற்படாது என்று உறுதிப்படுத்துகிற பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. இதே நிலைதான் 1989-90-ல் தொடங்கிய 10 ஆண்டுகளிலும் இருந்தது. அந்த நேரத்தில் வாஜ்பாய்க்கு மக்கள் பொறுப்பை வழங்கினர். பாரதீய ஜனதா கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். 21-ம் நூற்றாண்டுக்காக கண்ட கனவை நனவாக்க முடியும் என மக்கள் நம்பிக்கை வளர்த்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடந்த 10 ஆண்டுகளில் வாஜ்பாய் எடுத்த முயற்சி, உழைத்த உழைப்பு எல்லாம் வீணாக போய்விட்டது. அதுமட்டுமல்ல, மக்கள் நம்பிக்கை வைக்கிற துறை ஒன்று கூட இல்லை என்று சொல்லுகிற அளவுக்கு நாடு கீழான நிலைக்கு போய் விட்டது. நாட்டு மக்கள் தொகையில் 65 சதவீதம் பங்களிப்பு செய்கிற இளைய தலைமுறையினரின் எதிர்காலம் என்ன ஆகும்? எப்படி ஒருவர் தனது எதிர்காலத்துடன் விளையாட முடியும்? நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தலித்துகள், ஆதிவாசி மக்கள், ஏழை எளிய மக்கள் ஆகியோரை மீட்டெடுக்க வேண்டிய மொத்த பொறுப்பு, பாரதீய ஜனதாவுக்கு உள்ளது. நமது இயக்கம் அமைப்பு ரீதியிலானது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நமது கட்சி ஒன்றுபட்ட உணர்வுடன் இயங்குகிற கட்சி. இந்த ஒன்றுபட்ட உணர்வு நமது பலம். இந்திய மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் பாரதீய ஜனதா பூர்த்தி செய்யும். இவ்வாறு நரேந்திரமோடி கூறினார். ...
Show commentsOpen link

comments | | Read More...

“ஆண்ட்ரியா கூட எந்த ‘லிங்க்’கும் இல்லை” : அனிருத் அலறல் andria aniruth love story

"ஆண்ட்ரியா கூட எந்த 'லிங்க்'கும் இல்லை" : அனிருத் அலறல்

by News Admin
Sound Camera Action | Tamil Cinema Latest News | Movie Reviews ...Today,

'முத்த' சர்ச்சையில் சிக்கி அதனால் பிரிந்தனர் ஆண்ட்ரியாவும்-அனிருத்தும். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு ஆண்ட்ரியாவும் – அனிருத்தும் மீண்டும் இணைந்து விட்டார்கள். இனி அனிருத் இசையமைக்கும் எல்லாப்படங்களிலும் ஆண்ட்ரியா பாடுவார் என்றெல்லாம் செய்திகள் கிளம்பின.

ஆனால் அதை தற்போது மறுத்திருக்கிறார் அனிருத்.

'வணக்கம் சென்னை' படத்துக்கு நான் இசையமைக்கிறேன். அந்தப்படத்தில் ஆண்ட்ரியா எங்கடி பொறந்த எங்கடி பொறந்த என்ற பாடலை ஆண்ட்ரியா தான் பாடினார். எல்லோரும் அதை வைத்துக்கொண்டி நானும், ஆண்ட்ரியாவும் மீண்டும் இணைந்து விட்டதாக கிளப்பி விட்டுள்ளனர்.

இந்தபாடலின் ஒரு பகுதியை ரெக்கார்டிங் செய்வதற்காக நான் மும்பையில்  இருந்தேன். ஆனால் ஆண்ட்ரியா இந்தப்பாடலின் மற்றொரு பகுதியை சென்னையில் பாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருடன் எனது உதவியாளார் தான் அவருடன் இருந்து பணியாற்றினார். ஆகையால் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றவில்லை, இனி பணியாற்றப்போவதுமில்லை"

இவ்வாறு அனிருத் அலறியிருக்கிறார்.

47 total views, 47 views today

The post "ஆண்ட்ரியா கூட எந்த 'லிங்க்'கும் இல்லை" : அனிருத் அலறல் appeared first on Sound Camera Action.

Show commentsOpen link

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger