News Update :
Powered by Blogger.

தல கையால பிரியாணி சாப்பிட முடியலையே: பில்லா வி்ல்லன் வருத்தம்

Penulis : karthik on Monday 14 May 2012 | 18:24

Monday 14 May 2012




தல அஜீத் குமார் கையால பிரியாணி சாப்பிடும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று பில்லா 2 படத்தில் நடிக்கும் இந்தி � ��டிகர் சுதான்ஷு பாண்டே தெரிவி்த்துள்ளார்.

சக்ரி டோலாட்டியின் பில்லா 2 படம் மூலம் தமிழிழுக்கு வரும் இந்தி வில்லன் சுதான்ஷு பாண்டே. அவர் தனது பில்லா 2 அனுபவங்களைப் பற்றி கூறுகையில்,

பில்லா 2 படத்தில் அப்பாஸி கேரக்டருக்கு சரியான ஆளைத் தேடிக் கொண்டிருந்தார் சக்ரி டோலாட்டி. இணையதளத்தில் எனது புகைப்படத்தை பார்த்த அவர் உடனே என்னை போனில் தொடர்பு கொண்டார். நாங்கள் சந்தித்தபோது நீதான்ய்யா அப்பாஸி என்றார்.

பில்லா 2ல் மது, மாதுவுடன் சொகுசு வாழ்க்கை வாழும் டான் நான். இந்த கதாபாத்திரத்திற்காக நிறைய சாக்லேட், மில்க் ஷேக், காரமான உணவு வகைகள் சாப்பிட்டு எடையைக் கூட்டினேன். அஜீத் குமார் தான் ஒரு பெரிய ஸ்டார் போன்றே நடந்துகொள்ளமாட்டார். அவ்வளவு எளிமையானவர். அனைவருக்கும் உதவக்கூடியவர்.

தல கையால செய்யும் சுவையான பிரியாணி பற்றி பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்னும் சாப்பிட கொடுத்து வைக்கவில்லை. எனக்கும், சென்னைக்கும் உள்ள ஒரே தொடர்பு பில� ��லா 2 தான். மேலும் பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

பில்லா 2 குழுவினருக்கு அஜீத் குமார் தன் கையாலேயே சமைத்து சுவையான பிரியாணி விருந்து வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.



comments | | Read More...

OK OK ராஜேஷுடன் காமெடியில் கலக்கப் போகிறார் விஜய்?




துப்பாக்கி படத்தினை முடித்து விட்டு,அடுத்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்? என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

இக்கேள்விக்கு கெளதம் வாசுதேவ் மேனன் என்ற பரவலாக முன்னர் செய்திகள் வந்தாலும், விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை கூறப்படாமல் இருந்தது.

இந்நிலையில், ஒரு புதிய செய்தி கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. ராஜேஷ் இயக்கத்தில், ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம் விஜய்.

சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹாட்ரிக் வெற்றி கொடுத ்து, தன்னுடைய கலா கலா காமெடிக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கும் ராஜேஷ் இயக்கத்தில், முழுநீள நகைச்சுவை படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறாராம் விஜய்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படத்திற்கான தேதிகள் ஒதுக்கி கொடுத்து இருக்கிறார்.  ராஜேஷ் இயக்கத்தில் வழக்கம்போல் இடம்பெறும் சந்தானமும் இணைவார் என்பதால், இந்த மூவர் � ��ூட்டணியின் படம் கண்டிப்பாக ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்..

முன்னணி இயக்குனர்களான ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் மேனன், விஜய், ராஜேஷ் என விஜய் ஒப்பந்தமாகி இருப்பது விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் த்ள்ளி இருக்கிறது.




comments | | Read More...

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தேமுதிகவுக்கு திமுக ஆதரவு?




புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிகவுக்கு திமுக ஆதரவு வழங்கும் என்று தெரிகிறது.

இந்தத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ முத்துக்குமரன் மறைவையடுத்து இங்கு இடைத் தேர்தல் நடக்கிறது. ஆனால், தா.பாண்டியனுக்கு மட்டுமே தெரிந்த காரணத்தால், அங்கு இந்திய கம்யூனிஸ்ட் போட்யிடவில்லை.

அதே நேரத்தில் இங்கு போட்டியிடப் போவது போல பாவ்லா காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டது.

அதே போல திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் போட்டியிட மாட்டோம் என அறிவித்துவி� �்டன. ஆனால், அதிமுகவை எதிர்த்து நிற்பது என்று முடிவெடுத்து, களத்தில் குதிக்கவுள்ளது தேமுதிக.

அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுகிறார். இவர் தனது பிரச்சாரத்தை தொடங்கி தொகுதியை சுற்றிச் சுற்றி வந்து கொண்டுள்ளார்.

இந் நி்லையில் ஜூன் 12ம் தேதி நடக்கவுள்ள இடைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளர் இன்று அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

முன்னதாக தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்த திமுக தலைவர் கருணாநிதி, பொது வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், கேட்கும் கட்சியை பொறுத்து ஆதரவு அளிப்போம் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் தேமுதிக தலைவர் விஜய்காந்த் தானாகவே சென்று திமுகவின் ஆதரவு கேட்கத் தயங்குவதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் திமுகவே முன் வந்து ஆதரித்தால், அதை வரவேற்று ஏற்றுக் கொள� ��ளத் தயாராகவே இருப்பதாகத் தெரிகிறது.

ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேமுதிகவுக்கு ஆதரவைத் தெரிவித்துவிட்ட நிலையில், கிட்டத்தட்ட பொது வேட்பாளர் அந்தஸ்து தேமுதிகவுக்குக் கிடைத்துள்ளது. இதனால் அ ந்தக் கட்சியின் வேட்பாளரை நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஆதரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

கூடவே காங்கிரஸ் கட்சியின் ஆதரவையும் பெற விஜயகாந்த் தரப்பு முயற்சி எடுத்து வருகிறது.



comments | | Read More...

மாநிலங்களவை உறுப்பினராக வரும் 16-ந் தேதி பதவியேற்கிறார் தெண்டுல்கர்




இந்திய கிரிக்கெட்டின் � �ம்பிக்கை நட்சத்திரமான சச்சின் தெண்டுல்கர் கடந்த 23 ஆண்டுகளாக விளையாட்டு துறைக்கு செய்த சேவையை பாராட்டி, மாநிலங்களவை உறுப்பினராக கடந்த ஏப். 26-ல் பரிந்துரைக்கப்பட்டார். இதன் மூலம் அவர் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.  
 
இதற்கு முன் நடிகர்கள் சிலருக்கு எம்.பி. பதவி கொடுத்து, அவர்களை காங்கிரஸ் தனது கட்சிக்கு இழுத்தத� ��போல், சச்சினையும் அரசியலுக்கு இழுக்க முயற்சிப்பதாகவும், சச்சினின் செல்வாக்கை அரசியலுக்கு பயன்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து இவருக்கு எம்.பி. பதவி வழங்கக்கூடாது என்று கோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடுக்கப்பட்டது.
 
இந்நிலையில் வரும் 16-ந் தேதி மாநிலங்களவை உறுப்பினராக தெண்டுல்கர் பதவி� �ேற்பார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. இதன்மூலம் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்கும் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெறுகிறார்.



comments | | Read More...

ராணுவ தளபதியின் ரகசிய கடிதத்தை லீக் செய்தது பெண் அதிகாரி? மத்திய அரசு விளக்கம்




நாட்டின் ராணுவ தளவாடங்கள் இருப்பு தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தலைமை தளபதி வி.கே.சிங் எழுதிய கடிதம் ஊட கங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதன் பின்னணியில் அமைச்சரவை செயலக மூத்த பெண் அதிகாரி ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசு இதனை நிராகரித்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ராணுவ தளபதி வி.கே.சிங் அண்மையில் எழுதிய கடிதம் ஒன்றில், ராணுவத்தில் பீரங்கிகளுக்கு தேவையான வெடிமருந்துகளும், ஆயுதங்களும் பற்றாக்குறையாக இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த ரகசிய கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் அமளியை ஏற்படுத்தியது.

ரகசியக் கடிதத்தை அம்பலப்படுத்தியது ஒரு தேசத்துரோகச் செயல் என்று ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து ரகசிய கடிதம் வெளியானது எப்படி என்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த விசாரணையில் மத்திய அமைச்சரவை செயலகத்தின் உளவு அமைப்புகளைக் கையாளும் பொறுப்பு வகித்த ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தான் ரகசிய கடிதத்தை ஊடகங்களில் கசியவிட்டவர் எனத் தெரியவந்ததாகக் கூறப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ட� �ு.

ஆனால் இந்தத் தகவல்கள் வெளியான உடனேயே நேற்று இரவே மத்திய அரசு இதனை மறுத்து அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது, இது தொடர்பான வெளியான செய்திகள் ஆதாரமற்றவை என்றும் மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



comments | | Read More...

புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தே.மு.தி.க.வேட்பாளர் இன்று அறிவிப்பு




புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்த� �் ஜூன் மாதம் 12-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. அ.தி.மு.க. சார்பில் கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.
 
இந்த தேர்தலில் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, ம.தி. மு.க. ஆகிய கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்து உள்ளன. ஆனால் தே.மு.தி .க. போட்டியிடப்படுவதாக அறிவித்துள்ளது. சென்னையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தொண்டர்களின் கருத்தை ஏற்று விஜயகாந்த் இந்த முடிவை எடுத்தார்.
 
தே.மு.தி.க. சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். வேட்பாளர் பெயரை விஜயகாந்த் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது. தே.மு.தி.க. மாவட் செயலாளர் ஜாகீர் உசேன், அவைத் தலைவ� ��் சீனிவாசன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மட்டும் தே.மு. தி.க.வை ஆதரிக்க போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஆனால் மற்ற கட்சிகள் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. தி.மு.க. தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் எந்த வேட்பாளருக்கும் ஆதரவு இல்லை என் பதை தெரிவிக்க 49 (ஓ)வை பயன்படுத்த போவதாக முன்னாள் அமைச்ச� �் ரகுபதி கூறினார். இதற்கான அனுமதியை புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.வினர் கட்சி தலைமையிடம் கேட்டுள்ளனர்.




comments | | Read More...

எடியூரப்பாவுக்கு 70 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: சமரச முயற்சி வெற்றி பெறுமா?




சட்ட விரோத சுரங்கத் தொழிலுக்கு உ தவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் 8 மாதங்களுக்கு முன்பு கர்நாடக முதல்- மந்திரி பதவியை எடியூரப்பா இழந்தார். புதிய முதல்- மந்திரியாக சதானந்த கவுடா பதவி ஏற்றார்.
 < /div>
லோக்ஆயுக்தா அமைப்பில் சிறை தண்டனை பெற்ற எடியூரப்பா, ஜாமீனில் வெளிவந்த பிறகு மீண்டும் முதல்-மந்திரியாக பல தடவை முயற்சி செய்தார். பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் யாரும் அவருக்கு � �த்துழைப்பு கொடுக்காததால் எடியூரப்பாவின் எல்லா முயற்சிகளும் தோல்விலேயே முடிந்தன. இதனால் அவர் கட்சியில் அதிருப்தியுடன் இருந்து வந்தார். இந்த நிலையில் எடியூரப்பா மீதான சட்ட விரோத சுரங்கத் தொழில் குற்றச்சாட்டுக்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இது எடியூரப்பாவை ஆவேசப்படுத்தியது.
 
பா.ஜ.க. தலைவர்கள் யா ரும் தன்னை காப்பாற்ற முன்வரவில்லை என்று வேதனைப்பட்டார். பெங்களூரில் நேற்று நடந்த ஒரு விழாவில் பேசிய எடியூரப்பா தன் குமுறல்களை வெளிப்படுத்தினார். அவர் பேசுகையில், காங்கிரசில் மூத்த தலைவர் யாராவது பாதிக்கப்பட்டால் சோனியா நேரயாக உதவுகிறார். கட்சியும் உதவிக்கு முன்வருகிறது. சட்டம் தன் கடமையை செய்யும் என்கிறார்கள். இதற்காக சோனியாவை பாராட்டுகிறேன் என்றார்.
 
எடியூரப்பாவின் இந்த பேச்சு கர்நாடக பா.ஜ.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் அவர் செயல்படுவதாக பா.ஜ.க. மேலிட தலைவர்கள் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து எடியூரப்பாவை சமரசப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பா.ஜ.க. மந்திரிகளையும் எம்.எல்.ஏ.க்களையும் முதல்- மந்திரி சதானந்த கவுடா அவமதித்து வருவதாக எடியூரப்பா ஆதரவா� ��ர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
 
சதானந்தா கவுடா தொடர்ந்து அவமானப்படுத்துவதாக கூறி 9 மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து எடியூரப்பாவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். மேலும் சில மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் எடியூரப்பாவுக்கு ஆதரவாக பதவி விலக முன் வந்துள்ளனர். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் சுமார் 70 பேர் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்� ��ுள்ளதாக தெரிய வந்துள்ளது.
 
எடியூரப்பா இன்று காலை தன் ஆதரவு மந்திரிகள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். அவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். சதானந்த கவுடாவை நீக்க வேண்டும் என்பதில் எடியூரப்பா ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர். இதனால் கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு பல தடவை எடியூரப்பா இது மாதிரி போர்க்கொடி உயர்த்தி விட்டு பிறகு சமரசம் ஆகி உள்ளார்.
 
இந்த தடவையும் அவரை சமரசம் செய்ய கர்நாடக பா.ஜ.க. தலைவர் ஈஸ்வரப்பா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த தடவை எடியூரப்பா சமரசம் ஆவாரா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. அவர் இன்று தன் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பான முடிவை அறிவிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறத� �. 



comments | | Read More...

தாவூத் இப்ராகீமைவிட ஜெகன்மோகன் ரெட்டி ஆபத்தானவர்: சந்திரபாபுநாயுடு



ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

ஆந்திராவில் அடுத்த மாதம் நடைபெறும் இடைத்தேர்தல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும். 

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோக� �் ரெட்டி பிரசாரத்திற்கு அதிக கூட்டம் வருவதாகவும், அவரது கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஆந்திர மக்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் எப்போதும் தெளிவான முடிவையே எடுப்பார்கள். பிரபல தீவிரவாதி தாவூத் இப்ராகீமைவிட ஆபத்தானவர். இடைத்தேர்தலில� � அவரது கட்சி வெற்றி பெறுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. 

ஜெகன்மோகன் ரெட்டியின் மைத்துனர் அனில் கிறிஸ்தவ போதகராக உள்ளார். அவர் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களுக்கு சென்று போதனை செய்து வருகிறார். அப்போது அவர் கிறிஸ்தவர்களிடம் ஆதரவு திரட்டுகிறார். 

தன்னை மதசார்பற்றவர் என்று கூறிக்கொள்ளும் ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்தவர்களிடம் மறைமுகமாக மைத்துனர் மூலம் ஆதரவு திரட்டுகிறார். ஜெகன்மோகன் ரெட்டி கட்சி வெற்றி பெற்றால் ஆந்திராவில் ஜனநாயகத்தை வேரறுத்துவிடுவார். 

இவ்வாறு ச ந்திரபாபு நாயுடு கூறினார்.





comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger