News Update :
Powered by Blogger.

2 வது வெற்றி யாருக்கு?: இந்தியா இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை

Penulis : karthik on Friday 21 September 2012 | 23:47

Friday 21 September 2012

கொழும்பு, செப். 22-
20 ஓவர்உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் கடந்த 18-ந்தேதி
தொடங்கியது. நேற்றுடன்6 லீக் ஆட்டம் முடிந்துவிட்டது. இந்தப்போட்டியில்
பங்கேற்றுள்ள 12 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு
பிரிவிலும் 3 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில்
உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொருபிரிவிலும் முதல் இரண்டு இடங்களை
பிடிக்கும் அணிகள் "சூப்பர் 8" சுற்றுக்கு தகுதி பெறும். இதுவரை இந்தியா,
இங்கிலாந்து ("ஏ"பிரிவு), இலங்கை, தென்ஆப்பிரிக்கா ("சி" பிரிவு) ஆகிய 4
அணிகள் "சூப்பர் 8" சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இன்றைய ஆட்டத்தில் "சி" பிரிவில்உள்ள இலங்கை- தென்ஆப்பிரிக்கா, "பி"
பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. 2007-ம்
ஆண்டு சாம்பியனான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வென்றது.
2-வது "லீக்" ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை நாளை
(23-ந்தேதி) சந்திக்கிறது.
கொழும்பில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு
தொடங்குகிறது. இரு அணிகளுமே "சூப்பர் 8" சுற்றுக்கு நுழைந்து விட்டதால்
இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்திய அணி
வெற்றி பெற்றாலும் "ஏ" பிரிவில் 2-வது இடத்தில் தான் இருக்கும்.
ஏனென்றால் இங்கிலாந்து அணி தரவரிசைப்படி அந்த பிரிவில் முதல் இடத்தில்
உள்ளது. இந்திய அணி பலவீனமான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடுமையாக போராடியே
வெற்றி பெற்றது.
அதே நேரத்தில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானை எளிதில் நசுக்கி தள்ளியது.
இதனால் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்துவது எனபது சவாலானது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷேவாக், காம்பீர் ஆகியோர் சிறப்பான
தொடக்கத்தை கொடுக்கவில்லை. இதனால் இந்த இருவரும் அதிரடியாக ஆட வேண்டிய
நெருக்கடியில் உள்ளன.
வீராட் கோலி, ரெய்னா, யுவராஜ்சிங்ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில்
உள்ளனர். அவர்கள் இதே அதிரடி ஆட்டத்தை தொடர வேண்டும். நமது பந்துவீச்சில்
பலவீனம் உள்ளது. இதை சரி செய்வது அவசியம். முன்னணி வேகப்பந்து வீரரான
ஜாகீர்கானின் பந்துவீச்சு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஏமாற்றம் அளிப்பதாக
இருந்தது. இதனால் அவர் சிறப்பாக பந்துவீச வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இங்கிலாந்து அணி பேட்டிங் பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளது. லுகேரைட்
ஹால்ஸ், பட்லா, பேர்ஸ்டோவ், கீவ்ஸ் வெட்டர், மார்கன் போன்ற சிறந்த
பேட்ஸ்மேன்களும், கேப்டன் ஸ்டூவர்ட் பிராட், சுவான், பிரேஸ்னென் போன்ற
சிறந்த பவுலர்களும் உள்ளனர். உலக கோப்பைபோட்டியிலும் இரு அணிகளும் 2முறை
மோதியுள்ளன. இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. "சூப்பர் 8"
சுற்றில் சிறப்பாக விளையாட இந்த ஆட்டத்தை இந்திய அணி சரியாக
பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
முன்னதாக நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் "டி" பிரிவில்
உள்ள பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நியூசிலாந்து அணி
தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை எளிதில் தோற்கடித்தது.
comments | | Read More...

நாமக்கல்லில் விநாயகர் சிலையை கரைத்த 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி

பள்ளிப்பாளையம், செப்.22-
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை அடுத்து வெப்படையை சேர்ந்தவர்கள்
சீனிவாசன் (வயது 27), பிரகாஷ் (22). இவர்களும் மற்றும் சிலரும் சேர்ந்து
விநாயகர் சிலையை கரைக்க வெப்படையில் இருந்து பள்ளிபாளையம் அக்ரஹாரம்
ஓம்காளியம்மன் கோவிலுக்கு பின்புறமுள்ள காவிரி ஆற்றுக்கு நேற்று கொண்டு
வந்தனர்.
விநாயகர் சிலையை ஆற்றில் கரைத்தபோது சீனிவாசன், பிரகாஷ் ஆகிய 2 பேரும்
தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இறந்த சீனிவாசனுக்கு திருமணம் ஆகி 15 நாட்களே
ஆகி உள்ளது. புதுமாப்பிள்ளையான அவரது உடலை பார்த்து மனைவி மற்றும்
உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. பிரகாசத்துக்கு
இன்னும் திருமணம் ஆகிவில்லை.
comments | | Read More...

கோவையில் ஒரு தலைக்காதல் விபரீதம்: 9-ம் வகுப்பு மாணவி கழுத்தை அறுத்து கொலை

கோவை கணபதி கணேஷ் லே-அவுட் 5-வது வீதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது
மனைவி அஜிதா. இவர்களது மகள் அபிநயா (வயது 14). இவர் அதே பகுதியில் உள்ள
அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அபிநயா வீட்டிற்கு எதிர்
வீட்டில் வசிப்பவர் வேணுகோபால் (21). லேத் ஒர்க்ஷாப்பில் கேஸ் வெல்டிங்
தொழிலாளியாக உள்ளார். வேணுகோபால் ஒருதலையாக அபிநயாவை காதலித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அபிநயா பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வீட்டில் தனியாக
இருந்தார். இதையறிந்த வேணுகோபால் யாருக்கும் தெரியாமல் அபிநயா வீட்டுக்கு
சென்று அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். அதிர்ச்சியடைந்த அபிநயா
மறுப்புதெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த வேணுகோபால் தான் வைத்திருந்த
கத்தியால் மாணவி அபிநயாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
பின்னர்தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். வேலைக்கு
சென்றுவிட்டு வீடு திரும்பிய அபிநயாவின் தாய் அஜிதா வீடு உள்புறமாக
பூட்டப்பட்டிருந்ததால் கதவை தட்டிப்பார்த்தார். நீண்ட நேரமாகியும் கதவு
திறக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே
சென்று பார்த்தார். அங்கு மாணவி அபிநயா ரத்த வெள்ளத்தில் இறந்து
கிடந்தார். அருகில் வேணுகோபால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த
சரவணம்பட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி
வைத்தனர். வேணுகோபாலை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில்
சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிர
சிகிச்சையளிக்கப்படுகிறது.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
comments | | Read More...

முஸ்லிம்கள் பற்றிய சினிமாவுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: டெலிவிஷனில் ஒபாமா ஹிலாரி பிரசாரம்

முஸ்லிம்கள் பற்றிய சினிமாவுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும்
இல்லை: டெலிவிஷனில் ஒபாமா ஹிலாரி பிரசாரம்
முஸ்லிம்கள் பற்றிய சினிமாவுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும்
இல்லை: டெலிவிஷனில் ஒபாமா ஹிலாரி பிரசாரம்
வாஷிங்டன், செப்.22-
நபிகள் நாயகத்தை இழிவு படுத்தும் வகையில் தயாரான சினிமாவைத் தொடர்ந்து
உலகம் முழுவதும் முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில்
குதித்தனர். இந்த போராட்டத்தின் போது அமெரிக்க தூதரகங்கள் மற்றும்
அலுவலகங்களைஅவர்கள் தாக்கினார்கள். இதில் லிபியாவில் உள்ள தூதரக அதிகாரி
கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் உள்பட பலர் கொல்லப்பட்டனர். இந்த பிரச்சினைக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒபாமா தலைமையிலான அமெரிக்க நிர்வாகம்
அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. பிரச்சினைக்குரிய சினிமாவை
வெளியிட்ட யூ டியூப் நிறுவனத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து
உள்ளது. இந்தநிலையில் உலகம் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக பரவியுள்ள
பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் ஒபாமா அரசு டெலிவிஷன், எப்.எம்.ரேடியோ
மற்றும் சமூக வலைத்தளங்களில் தங்களுக்கும், இந்த சினிமாவுக்கும் எந்த
தொடர்பும் இல்லை என்ற பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள
அமெரிக்க தூதரகத்தில் நேற்று இந்த பிரசார விளம்பரம்
தொடங்கிவைக்கப்பட்டது. இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும்
வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரிகிளிண்டன் ஆகியோர் தோன்றி அந்த சினிமா
படத்திற்கும், அமெரிக்காவுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்பதை இந்த
பிரசார படத்தில் விளக்கி கூறுகிறார்கள். சுமார் 30 வினாடிகள் டெலிவிஷனில்
வரும் இந்த பிரசார விளம்பர படம் 7 சேனல்களில் ஒளிபரப்பாகிறது. இதற்காக
பாகிஸ்தானில் உள்ள டெலிவிஷன் சானல் நிறுவனத்துக்கு70 ஆயிரம் டாலர் பணம்
வழங்கப்பட்டதாக செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலாந்துகூறினார். பிரசார
விளம்பர படத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், அமெரிக்கா எல்லா
மதத்தையும் மதிக்கிறது. மதத்துக்கு எதிரான எந்த இழிவு செயல்களையும்
அமெரிக்கா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று குறிப்பிட்டு உள்ளார். ஹிலாரி
கிளிண்டன் அதில் கூறுகையில், நாங்கள் மிகத்தெளிவாக இருக்கிறோம். இந்த
வீடியோ காட்சிக்கும், அமெரிக்க அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள்
அதை உறுதியாக எதிர்க்கிறோம். நாங்கள் மதசகிப்பு தன்மைகொண்டவர்கள்
என்றார். அமெரிக்காவின் இந்த பிரசார விளம்பரம் உருது மொழியில் வெளியானது.
மேலும் பல எப்.எம். ரேடியோவிலும் இந்த விளம்பரம் ஒலிபரப்பப்பட்டது.
comments | | Read More...

முஸ்லிம்கள் பற்றிய சினிமாவுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: டெலிவிஷனில் ஒபாமா ஹிலாரி பிரசாரம்

முஸ்லிம்கள் பற்றிய சினிமாவுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: டெலிவிஷனில் ஒபாமா ஹிலாரி பிரசாரம் முஸ்லிம்கள் பற்றிய சினிமாவுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: டெலிவிஷனில் ஒபாமா ஹிலாரி பிரசாரம்
முஸ்லிம்கள் பற்றிய சினிமாவுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: டெலிவிஷனில் ஒபாமா ஹிலாரி பிரசாரம்

வாஷிங்டன், செப்.22-
 நபிகள் நாயகத்தை இழிவு படுத்தும் வகையில் தயாரான சினிமாவைத் தொடர்ந்து உலகம் முழுவதும் முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தின் போது அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களை அவர்கள் தாக்கினார்கள். இதில் லிபியாவில் உள்ள தூதரக அதிகாரி கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் உள்பட பலர் கொல்லப்பட்டனர்.  இந்த பிரச்சினை� ��்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒபாமா தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. பிரச்சினைக்குரிய சினிமாவை வெளியிட்ட யூ டியூப் நிறுவனத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக பரவியுள்ள பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் ஒபாமா அரசு டெலிவிஷன், எப்.எம்.ரேடியோ மற்றும் சமூக வலை� ��்தளங்களில் தங்களுக்கும், இந்த சினிமாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.  பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று இந்த பிரசார விளம்பரம் தொடங்கிவைக்கப்பட்டது. இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் தோன்றி அந்த சினிமா படத்திற்கும், அமெரிக்காவுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்ப� ��ை இந்த பிரசார படத்தில் விளக்கி கூறுகிறார்கள். சுமார் 30 வினாடிகள் டெலிவிஷனில் வரும் இந்த பிரசார விளம்பர படம் 7 சேனல்களில் ஒளிபரப்பாகிறது. இதற்காக பாகிஸ்தானில் உள்ள டெலிவிஷன் சானல் நிறுவனத்துக்கு 70 ஆயிரம் டாலர் பணம் வழங்கப்பட்டதாக செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலாந்து கூறினார்.  பிரசார விளம்பர படத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், அமெரிக்கா எல்லா மதத்தையும� � மதிக்கிறது. மதத்துக்கு எதிரான எந்த இழிவு செயல்களையும் அமெரிக்கா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று குறிப்பிட்டு உள்ளார். ஹிலாரி கிளிண்டன் அதில் கூறுகையில், நாங்கள் மிகத்தெளிவாக இருக்கிறோம். இந்த வீடியோ காட்சிக்கும், அமெரிக்க அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அதை உறுதியாக எதிர்க்கிறோம். நாங்கள் மதசகிப்பு தன்மைகொண்டவர்கள் என்றார். அமெரிக்காவின் இந்த பிரச� ��ர விளம்பரம் உருது மொழியில் வெளியானது. மேலும் பல எப்.எம். ரேடியோவிலும் இந்த விளம்பரம் ஒலிபரப்பப்பட்டது.   
comments | | Read More...

மம்தா கட்சி விலகியதால் ஆட்சியில் நீடிக்க காங்.கூட்டணிக்கு தார்மீக உரிமை இல்லை பாரதீய ஜனதா

மம்தா கட்சி விலகியதால் ஆட்சியில் நீடிக்க காங்.கூட்டணிக்கு தார்மீக உரிமை இல்லை பாரதீய ஜனதா மம்தா கட்சி விலகியதால் ஆட்சியில் நீடிக்க காங்.கூட்டணிக்கு தார்மீக உரிமை இல்லை பாரதீய ஜனதா
மம்தா கட்சி விலகியதால் ஆட்சியில் நீடிக்க காங்.கூட்டணிக்கு தார்மீக உரிமை இல்லை பாரதீய ஜனதா

புதுடெல்லி, செப்.22-
 டெல்லியில் பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கிரஸ் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வாபஸ் பெற்றுள்ளது. மற்றொரு கூட்டணி கட்சியான தி.மு.க., முழு அடைப்பில் கலந்து கொண்டுள்ளது. இந்த நிலையில், ஆட்சியில் நீடிக்க காங்கிரஸ் கூட்டணிக்கு தார் மீக உரிமை இல்லை. காங்கிரஸ் கூட்டணி அரசுக்கான கவுண்ட் டவுன் நேற்று தொடங்கி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு மைனாரிட்டி ஆகிவிட்டது. இந்த அரசு மக்களுக்கு சுமையாகிவிட்டது. அது நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிக்காது. இந்த மக்கள் விரோத அரசிடமிருந்து நாட்டு மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுதான் பாரதீய ஜனதாவின் எதிர்பார்ப்பு. மேற்கு வங்காளம் மற்றும் நாட்ட� � மக்களின் நலனையொட்டி, மூழ்கிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கூட்டணி கப்பலில் இருந்து மம்தா பானர்ஜி வெளியேறி இருப்பது பாராட்டுக்குரியது.  வெற்றி கண்டுள்ள நாடளாவிய முழு அடைப்பு போராட்டத்தில் இருந்து மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்வதற்கு பதிலாக சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள் இடையேயும் கர ுத்தொற்றுமை ஏற்படுத்திய பின்னர்தான், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அப்போதைய நிதி மந்திரியும், தற்போதைய ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜி வாக்குறுதி அளித்தார். ஆனால் அதன்படி நடந்துகொள்ளாமல் இப்போது முடிவு எடுத்திருப்பது, மக்களுக்கு செய்த துரோகம் ஆகும். மதவாத சக்திகள் ஆட்சி அதிகாரத்துக்கு வர� ��வதை தடுக்கத்தான் மத்திய அரசுக்கு ஆதரவை தொடர்வதாக முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளாரே என கேட்கிறீர்கள். இதன்மூலம் மக்கள் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியின் இரட்டை வேடம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சமாஜ்வாடி கட்சி ஒருபுறம் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டையும், (டீசல்) விலை உயர்வையும் எதிர்க்கிறது. மற்றொரு புறம் மத்திய அரசுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் சப்ள ை செய்வது போல ஆதரவு அளிக்கிறது.மத்திய அரசு தனது முடிவுகளை வாபஸ் பெறுமாறு சமாஜ்வாடி கட்சி நிர்ப்பந்தம் செய்திருக்க வேண்டும்.  இவ்வாறு ஷா நவாஸ் உசேன் கூறினார். பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி மத்திய அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா வலியுறுத்துமா?என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஷா நவாஸ் உசேன் நேரடியாக பதில் அளிக்க� ��மல், பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற நிலையில், தற்போது நாங்கள் வளர்ச்சி பணிகளில்தான் குறியாக இருக்கிறோம் என பதில் அளித்தார்.   
comments | | Read More...

கடையடைப்பு காரணமாக கோயம்பேட்டில் 50 லாரி வெங்காயம் அழுகியது

கடையடைப்பு காரணமாக கோயம்பேட்டில் 50 லாரி வெங்காயம் அழுகியது கடையடைப்பு காரணமாக கோயம்பேட்டில் 50 லாரி வெங்காயம் அழுகியது
கடையடைப்பு காரணமாக கோயம்பேட்டில் 50 லாரி வெங்காயம் அழுகியது

சென்னை, செப். 21-

கோயம்பேட்டில் வியாபாரிகள் நடத்திய கடையடைப்பு காரணமாக நேற்று மார்க்கெட்டுக்கு வந்த காய்கறிகளை லாரிகளில் இருந்து முழுமையாக இறக்கவில்லை. ஆந்திரா, கர்நாடகா, மகா ராஷ்டிரா மாநிலங்களில் இருந்து நேற்று கோயம்பேடுக்கு 100 லாரிகளில் வெங்காயம் வந்திருந்தது. இதில் 50 லாரிகளில் இருந்த வெங்காயத்தை இறக்கி வைக்க முடியாமல் இன்று அதிகாலையில் தான் இறக்கி வைத்தனர்.

ஆனால் அதற்குள் 50 லாரி வெங்காயம் அழுகி விட்டது. இதனால் கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயத்தை இன்று கிலோ 10 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதே போல் தக்காளி கிலோ ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆக குறைந்துள்ளது. கேரட் கிலோ ரூ.25-ல் இருந்து ரூ.20 ஆக குறைந்துள்ளது. பீட்ரூட் கிலோ ரூ.10-ல் இருந்து ரூ.6 ஆகவும், பீன்ஸ் ரூ.25-ல் இருந்து ரூ.20 அகவும் விலை குறைத்து விற்கப்படுகிறது.

அவரைக்காய் விலை உயர்ந்து கிலோ ரூ.20-ல் இருந்து ரூ.45 ஆக விற்கப்படுகிறது. கத்தரிக்காய் கிலோ ரூ.12க்கு விற்கப்படுகிறது. இன்று அனைத்து கடைகளும் கோயம்பேட்டில் திறந்திருந்ததால் வியாபாரம் விறுவிறுப்புடன் நடந்தது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger