News Update :
Powered by Blogger.

குழந்தையைப் போன்றவர் ரஜினி - தீபிகா படுகோன்

Penulis : karthik on Wednesday 11 July 2012 | 23:22

Wednesday 11 July 2012





ரஜினி சார் ஒரு குழந்தையைப் போன்ற உற்சாகம் மிகுந்தவர். இந்திய சினிமாவில் அமிதாப்பும் ரஜினியும்தான் நான் பார்த� ��த மிகச் சிறந்த கலைஞர்கள் என்கிறார் தீபிகா படுகோன்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "ரஜினி சாருடன் நடிக்கிறோமே என்ற பயம் காரணமாக ஆரம்பத்தில் மன அழுத்தம் இருந்தது போல உணர்ந்தேன். ஆனால் செட்டுக்குள் போனதும் எல்லாவற்ற� ��யும் மறந்துவிட்டு, என் பாத்திரத்தில் மட்டும் கவனம் செலுத்தினேன். ஓம் சாந்தி ஓம் படத்தின் போதும் இப்படித்தான் நடித்தேன்.
கோச்சடையானைப் பொறுத்தவரை என்னை வியக ்கவைத்தது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் எளிமையும், மாறாத உற்சாகமும்தான்.

ஒரு குழந்தையைப் போல கள்ளங்கபடமற்ற, துள்ளலை அவரிடம் பார்க்கலாம். திரையுலகில் இப்படி ஒரு உற்சாக மனிதரை நான் பார்த்ததில்லை.

எல்லா காட்சிகளும் மிக்ச சரியாக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் நடித்துத் தரத் தயாராக இருப்பார்.

ரஜினி, அமிதாப் ஆகிய இரு மேதைகளிடம்தான் இந்த அர்ப்பணிப்பை, தொழில் ஒழுங்கை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் கண்களைப் பாருங்கள்.. இந்த சினிமாவை அவர்கள் எந்த அளவு நேசிக்கிறார்கள் என்பது தெரியும்...," என்றார்.







comments | | Read More...

செங்கல்பட்டு சிறப்பு முகாம் முன் முற்றுகை: இயக்குநர் சீமான் கைது





செங்கல்பட்டு சிறப்பு முகாம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீச ார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் அகதிகள் தங்களை திறந்த வெளி முகாம்களுக்கு மாற்றக்கோரி நீண்ட நாட்களாகவே போராடி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இக்கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இரு ந்த அகதிகளிடம் கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சம்பத்குமார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் புதன்கிழமையன்று செங்கல்பட்டுசிறப்பு முகாம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்திருந்தது. இதன்படி இன்று காலையில் சிறப்பு முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான ் தலைமையில் சுமார் 500 பேர் அங்கு திரண்டனர்.

செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை மூடக்கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அப்போது அங்கிருந்த போலீசார் சீமான் உள்பட அனைவரையும் கைது செய்தனர். இவர்கள� � அனைவரும் அங்குள்ள வேலு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







comments | | Read More...

பில்லா 2 புக்கிங்... ஒரு வாரம் ஃபுல்.. முதல் ஷோ டிக்கெட் விலை ரூ 650!!





ரஜினி - கமல் என்ற வரிசைக்கு அடுத்த நடிகர்களில் நல்ல ஓபனிங் என்றால் அது அஜீத் படத்துக்குதான்.
ப்ளாப் படமாக இருந்தாலும் அஜீத் படத்துக்கு முதல் 5 நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடுவது வழக்கம்.

மங்காத்தா என்ற வெற்றிக்குப் பிறகு அஜீத் நடிப்பில் வரும் படம் பில்லா 2. இந்தப் படத்தில் அஜீத், யுவன் சங்கர் ராஜா தவிர, வேறு தெரிந்த முகங்கள் இல்லை.

இயக்குநர் சக்ரிக்கு ஒரு வகையில் இதுதான் முதல் படம். இதற்கு முன் அவர் உன்னைப் போல் ஒருவனை இயக்கினாலும், அதில் கமலின் பங்களிப்பு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

நாயகிகள் பார்வதி ஓமனக்குட்டன், ப்ருனா அப்துல்லா இருவருக்குமே இது முதல் படம். எனவே அவர்களால் படத்துக்கு பெரிய பலன் கிடையாது.

இருந்தும் அஜீத் படம் என்ற ஒரே காரணத்துக்காக சென்னை திரையரங்குகளில் பில்லா 2 க்கு ஒரு வாரத்துக்கான புக்கிங் முடிந்துவிட்டது.

பல இடங்களில் ப்ளாக்கில் ரூ 500 வரை இந்தப் படத்துக்கு டிக்கெட் விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு அரங்கில் கவுன்டரிலேயே 650 ரூபாய்க்கு முதல் காட்சிக்கான டிக்கெட் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.







comments | | Read More...

ஆசிரியர் தகுதி தேர்வில் எளிதாக வெற்றி பெற வேண்டுமா?: கல்வி அதிகாரிகள் யோசனை





தமிழகம் முழுவதும் நாளை (12-ந்தேதி) ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளியில் பணியாற்ற கல்வி தகுதி உள்ளவர்களுக்கு (ஆசிரியர் பட்டயப் பயிற்சி) முதல்தாள் தேர்வும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்ற கல்வி தகுதி உள்ள பட்டதாரிகளுக்கு 2-ம்தா� �் தேர்வும் நடக்கிறது. 

இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 56 ஆயிரத்து 88 பேர் எழுதுகிறார்கள். 1027 மையங்களில் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முதன்முதலாக இப்போதுதான் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 78 மையங்களில் ஆசிரியர்கள் தேர்வு எழுத இருக்கிறார்கள். 

தேர்வர்களை கண்காணிக்கும் பணியில் 55,339 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலையில் முதல்தாள் தேர்வும், பிற்பகல் 2-ம் தாள் தேர்வும் நடக்கிறது. ஒவ்வொரு தேர்வும் 90 நிமிடங்கள் நடக்கின்றன. 150 வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும். 

ஆசிரியர் தகுதி தேர்வை ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் எழுதுகிறார்கள். 6 1/2 லட்சத்தில் 4 லட்சத்து 75 ஆயி� ��ம் பேர் பெண் தேர்வர்கள் ஆவர். ஆண்கள் ஒரு லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்ற விரும்புவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். எனவே ஆசிரியர்கள் பணியை நிர்ணயிக்கும் இந்த தேர்வு இன்றியமையாதவையாக கருதப்படுகிறது. 

கடந்த 3 மாதமாக இத்தேர்வுக்கு தயாராகி வந்த தேர்வர்களுக்கு நாளை நடக்கும் தேர்வு தங்களது தகுதியை மட்டுமல்ல வாழ்க்கையையும் நிலை நிறுத்துவதாக அமைய உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறவேண்டும். அதிக மதிப்பெண் பெற்று விரைவில் பணிக்கு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கானவர் காத்து இருக்கிறார்கள். 

தேர� �வில் எப்படி பங்கேற்க வேண்டும், குறிப்பிட்ட நேரத்திற்குள் சரியான விடையளித்து வெற்றி காண்பது எப்படி? அதற்கான அறிவுரைகளை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவற்றை பின்பற்றி னால் வெற்றி நிச்சயம். 

முக்கிய டிப்ஸ் வருமாறு:- 
1) தேர்வு மையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வர்க ள் செல்ல வேண்டும். 

2) 30 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வு எழுதும் அறைகளுக்கு சென்று அமர வேண்டும். 

3) காலையில் நடக்கும் தேர்விற்கு ஓ.எம்.ஆர். தாளை 10.25 மணிக்குள்ளும், பிற்பகல் நடக்கும் தேர்விற்கு 2.25 மணிக்குள்ளும் பூர்த்தி செய்ய வேண்டும். 

4) விடைத்தாளை பிழைகள் இல்லாமல் சரியாக ப� ��ர்த்தி செய்ய வேண்டும். 

5) 10.30 மணிக்கு தொடங்கும் தேர்வு 12 மணிக்கு முடிகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் தேர்வு 4 மணிக்கு முடிகிறது. 

6) ஒவ்வொரு தேர்விலும் 150 வினாக்கள் கேட்கப்படும். அவற்றிற்கு 90 வினாக்களுக்கு சரியான விடை எழுதி இருந்தால் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும். 

7) 150 � ��ேள்விகளுக்கு 90 நிமிடங்களில் விடையளிக்க வேண்டும். அதாவது ஒரு கேள்விக்கு 36 வினாடியில் விடையளித்தால்தான் அனைத்து வினாக்களுக்கும் விடை எழுத முடியும். 

8) தேர்வர்கள் ஒரு வினாடியையும் வீணடிக்காமல் முழுமையாக பயன்படுத்தினால்தான் அதிக மதிப்பெண் பெறமுடியும். 

9) தேர்வர்கள் பின்னால் திரும்பி பார்த்தோ அருகி� ��் உள்ளவர்களை பார்த்தோ நேரத்தை வீணடிக்க வேண்டாம். 

10) வினாக்களை நன்கு புரிந்து கொண்டு விடையளிக்க வேண்டும். 

11) ஓ.எம்.ஆர். விடைத்தாளில் கறுப்பு அல்லது நீலநிற பால்பாயிண்ட் பேனாவை பயன்படுத்த வேண்டும். 

12) பென்சில், கால்குலேட்டர், செல்போன் தேர்வுகளுக்கு எடுத்து செல்ல அனுமதி இல்லை. 

13) தேர்வு நடைபெறும் போது தேர்வறையை விட்டு வெளியேற அனுமதி இல்லை. 

14) விண்ணப்பத்தில் தங்களது பெயரை தவறாக குறிப்பிட்டுள்ளவர்கள், தேர்வு நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக சென்று முதன்மை கண்காணிப்பாளரை சந்திக்க வேண்டும். அரசிடம் தங்களது சரியான பெயருக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.








comments | | Read More...

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் பதுக்கியோருக்கு பொது மன்னிப்பு?-அரசு பரிசீலனை!!





சுவிஸ் வங்கியில் கறுப்பு பணத்தை பதுக்கியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து வருமானவரித்துறை பரிசீ� ��த்து வருவதாகக் கூறப்படுகிறது.

சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பது பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நீண்டகால கோரிக்கை.

இதைத் தொடர்ந்து வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியோர் விவரத்தை மத்திய அரசு சேகரித்தது. இதன் அடிப்படையில் பணம் பதுக்கியோர் மீது வழக்குத் தொடரவும் திட்டமிட்டிருந்தது.

இருப்பினும் வெளிநாடுகளுடனான இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தம் இதில் சிக்கலை ஏற்படுத்தியது. ஆனாலும் சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்திருந்த 700 இந்தியர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. இவர்கள் ரூ12 ஆயிரத்து 740 கோடி பணத்தைப் பதுக்கி வைத்திருந்தனர்.

பணத்தை மீட்பதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியோரே அதை ஒப்படைத்தால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு கொடுக்கலாம் என்ற அடிப்படையில் வருமானவரித்துறை பரிசீலித்து வருகிறது. மேலும் அவர்கள் மீது வழக்கு எதுவும் தொடராமல் இருப்பது பற்ற� � பரிசீலித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.







comments | | Read More...

பீகாரில் லாலு பிரசாத் உறவினர் சுட்டுக் கொலை





முன்னாள் மத்திய மந்திரியும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மருமகன் சுபாஷ் யாதவ். முன்னாள் எம்.பி. இவரது மருமகன் பப்பு யா� �வ் என்கிற பங்கஜ். இவர் பாட்னாவில் உள்ள டிகா போலீஸ் நிலையத்தின் பின்புறம், ஒரு வயலில் பிணமாகக் கிடந்தார்.
 
அவரது உடலை துப்பாக்கி குண்டுகள் துளைத்து இருந்தன. அவரது உதவியாளர் பப்லு என்பவர், பப்பு யாதவின் வீட்டில் சுட் டுக் கொல்லப்பட்டு பிணமாகக் கிடந்தார். ஆகவே மர்ம ஆசாமிகள் பப்பு யாதவின் வீட்டுக்குள் புகுந்து, அவரது வேலைக்காரரை முதலில் சுட்டுக் கொன்று விட்டு, பின்னர் பப்பு யாதவை கடத்திச் சென்று, சுட்டுக் கொன்று, பிணத்தை போலீஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள வயலில் போட்டுவிட்டு சென்று இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.







comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger