News Update :
Powered by Blogger.

பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக கருணாநிதி ஆதரவு!

Penulis : karthik on Sunday 29 April 2012 | 23:53

Sunday 29 April 2012




முஸ்லீம் ஒருவரை அடுத்த ஜனாதிபதியாக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிடம் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளதா கத் தெரிகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பெண் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை வைத்தார் கருணாநிதி. அவரது கருத்துக்கு ஆதரவு கூடியதையடுத்து பிரதீபா பாட்டீலை களமிறக்கியது காங்கிரஸ்.

இந் நிலையில் கருணாநிதியை நேற்று சென்னையில் சந்தித்துப் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி, அவரிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் திட்டம் குறித்து விவா தித்தார்.

அப்போது இப்போதைய துணை ஜனாதிபதி அன்சாரி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, மக்களவ� �� சபாநாயகர் மீரா குமார் ஆகியோரில் ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தலாம் என சோனியா கருதுவதாக கருணாநிதியிடம் ஆண்டனி கூறினார்.

இதையடுத்து அடுத்த ஜனாதிபதியாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வர வேண்டும், அந்த வகையில் அன்சாரியை நிறுத்தலாம் என்று கூறிய கருணாநிதி, அதே நேரத்தில் மற்ற கட்சிகளிடையே ஒருமித்த கருத்து உருவானால் பிரணாப் முகர்ஜியையும் ஆதரிக்கத் தயார் என்று கூறியதாகத் தெரிகிறது.

பிரணாப் முகர்ஜியை நிறுத்தினால் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவும் கிடைத்துவிடும் என சோனியா கருதுகிறார். கடந்த ஜனாதிபதி தேர்தலிலேயே முகர்ஜியின் பெயரை இடதுசாரிகள் முன் வைத்தது நினைவுகூறத்தக்கது.

அதே நேரத்தில் அரசியல் சாராத ஒருவரையே ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற தேசியவாதி காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் கருத்தை சோனியா ஏற்கவில்லை என்று தெரிகிறது. இது குறித்து சரத் பவாரிடம் சோனியா ஏற்கனவே பேச்சு நடத்தியுள்ளார். அப்போது முஸ்லீம் அல்லது பிரணாப் என காங்க� �ரஸ் நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்கத் தயார் என பவார் கூறிவிட்டதாகத் தெரிகிறது.

அதே போல மம்தாவிடமும் சோனியா ஒரு சுற்று பேச்சு நடத்திவிட்டார். அவர் பெங்காலியான பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தரத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார்,

மேலும் பிரணாப் முகர்ஜியையோ அல்லது ஒரு முஸ்லீமையோ நிறுத்தினால் பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், எந்தக் கூட்டணியிலும் இல்லாத முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேவ கெளடாவின் மதசார்பற்� �� ஜனதா தளம், ஒரிஸ்ஸா முதல்வரும் பிஜூ ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவைப் பெறுவதும் எளிதாகிவிடும் என்று சோனியா கருதுகிறார்.

இதன்மூலம் பாஜகவையும் அதிமுகவையும் தனிமைப்படுத்தி தனது வேட்பாளரை வெல்லச் செய்வது சாத்தியம் என்று சோனியா கருதுகிறார். இதற்கு கருணாநிதியையின் ஆதரவை காங்கிரஸ் பெற்றுவிட்டதாகவே தெரிகிறது.

காங்கிரசுக்கு தனிப்பட்ட மெஜாரிட்டி இல்லாததால் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்ய கூட்டணிக் கட்சிகள் மற்றும் நடுநிலைக் கட்சிகளின் ஆதரவு அந்தக் கட்சிக்கு நிச்சயம் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

"அக்னி-5'ஐ அடுத்து கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணை: டி.ஆர்.டி.எல்., தீவிரம்




"அக்னி-5' ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக முடிவடை� ��்ததை அடுத்து, கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணையை (ஆன்டி ரேடியேசன் மிசைல்) வடிவமைக்கும் பணியில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (டி.ஆர்.டி.எல்.,) ஈடுபட்டுள்ளது.

இந்த ஏவுகணை எதிரியின் நவீன எச்சரிக்கை முறையை தாக்கிய அழிக்க வல்லது.
ஐந்தாயிரம் கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கைச் சென்று தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட, "அக்னி-5' ஏவுகணை சோதனை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதில், பெரு மகிழ்ச்சி அடைந்துள்ள, ஏவுகணை தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் , அடுத்த கட்டமாக, எதிரிகளின் நவீன எச்சரிக்கை முறையையும் தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட, மிக நவீன ஏவுக� �ையைத் தயாரிக்க உள்ளது.இந்த ஏவுகணையானது தன்னிடம் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேசன் மூலம், ரேடார்களையும், ரேடார் ஆன்டனாக்களையும், டிரான்ஸ்மிட்டர்களையும் எளிதில் கண்டறிந்து அழிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். அமெரிக்கா போன்ற நாடுகளிடம் மட்டுமே, இந்த அதி நவீன ஏவுகணை தற்போது உள்ளது. இந்த கதிர்வீச்சு தடுப்பு ஏவுகணையை, சுகோய் ரக போர் விமானங்களில் பொருத்த முடியும். இந்த வகை விமானங்கள், 140ஐ ரஷ்யாவிடம் இருந்து ஏற்கனவே இந்திய அரசு வாங்கியுள்ளது. மேலும், 100 விமானங்களை விரைவி ல் ரஷ்யா வழங்கவுள்ளது.

படையில் சேர்கிறது தேஜஸ் : 

இதற்கிடையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இலகு ரக தேஜஸ் போர் விமானம், விரைவில் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும். இத்தகவலை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக (டி.ஆர்.டி.ஓ.,) தலைவர் சரஸ்வத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

இலகு ரக தேஜஸ் போர் விமானம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.டி.ஓ.,வின் விமான கட்டுமான மேம்பாட்டு ஏஜென்சியும், பெங்களூரை மையமாக கொண்டு செயல்படும் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிட்., நிறுவனமும் இணைந்து, இந்த விமானத்தை தயாரித்துள்ளன. இந்த விமானத்தின், அனைத்து பரிசோதனைகளும் முடிந்து விட்டன. சோதனை ஓட்டமாக, இதுவரை, 1,855 மணி நேரம், வானில் பறக்க விடப்பட்டு, பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதிலிருந்த ஒரு சில குறைபாடுகளும் நீக்கப்பட்டு விட்டன. இதைத் தொடர� ��ந்து, இந்தாண்டுக்குள், இந்த விமானம், இந்திய விமானப் படையில் சேர்க்கப்படவுள்ளது.இவ்வாறு சரஸ்வத் கூறினார்.





comments | | Read More...

காதல் என்பது மென்னையானது ;அதை கஷ்டப்படுத்துறாங்க : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்




காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மதுரையில், சிவாஜி நடித்த, "கர்ணன்' பட விழாவில், கலந்துகொண்டு ப� �சினார்.

அப்போது அவர்,   '' சிவாஜியால் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன். என்றுமே, அவர் தான் என் தலைவன். தற்போதுள்ள தலைமுறைக்கு, நீதி, தர்மத்தை பற்றி கவலையில்லை.


சுதந்திரம் பெற்றதே பலருக்குத் தெரியாது. அதனால் தான், தற்போது வரும் மோசமான படங்களை ரசிக்கின்றனர்.

காதல் என்பது மென்னையானது. சினிமாவில் அதை வெளிப்படையாக்கி விட்டனர். மென்மையான காதல் உணர்வை, வன்முறையாக சித்திரிக்கின்றனர். புதிய சினிமாக்களை பார்த்து, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன... பாடலில், காதலர்களின் முகபாவனையைப் பார்த்தால், அதிலுள்ள கண்ணியம் தெரியும். "இருவர் உள்ளம், பார்த்தால் பசி தீரும்' படங்களை, ஆங்கில, "சப்-டைட்டில்' போட்டு, வெளிநாடுகளில் திரையிட வேண்டும். அதில் வரும் காதல் காட்சிகள், உலகம் முழுவதுமுள்ள சினிமா ரசிகர்களை கவரும்''என்று தெரிவித்தார்.



comments | | Read More...

நடிகையை பார்த்து ஜொள்ளு விட்ட கிறிஸ் கெய்ல் !!




ஐ.பி.எல்., கிரிக்கெட் � �ோட்டிகளில், பெங்களூரு அணிக்காக விளையாடி கொண்டு சிக்ஸர் மழை பொழிந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், ஐ.பி.எல்., போட்டி இல்லாத நாட்களில், சினிமா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அசத்தியிருக்கிறார். சமீபத்தில் கன்னட சினிமாவில் உருவாகி இருக்கும் கில்லாடி கிட்டி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பெங்களூருவில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கிற� �ஸ் கெய்ல் பங்கேற்றார். இந்த விழாவின் ஆடியோ சி.டி.யை வெளியிட்டது மட்டும் இல்லாமல் படத்தின் நாயகி ஹரிப்ரியாவை பார்த்து நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க என்று கூறி ஜொள்ளு விட்டு இருக்கிறார்.

இதுகுறித்து ஹரிப்ரியா மகிழ்ச்சி பொங்க கூறியிருப்பதாவது, கிறிஸ் கெய்ல் ரொம்ப நல்ல மனிதர். அவர் என்னிடம் வந்து நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க...! என்று கூறினார். அவர் இப்பட� � கூறியது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது. பிறகு அவருக்கு என் நன்றியை தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.

படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது நடன நிகழ்ச்சியும் நடந்தது. அதில் ஹரிப்ரியாவுடன் சேர்ந்தது கிறிஸ் கெய்லும் நடனம் ஆடி விழாவிற்கு வந்த அனைவரையும் உற்சாக வெள்ளத்தில் திகைக்க வைத்தார்.



comments | | Read More...

பேருந்து பயணம் !





கூட்டத்தோடு .
சேர்த்துக்கொள்ளும் 
காலை நேர 
அரசு பேருந்து !


வேர்வை நாற்றம்
அழுக்கு உடல்
வாராத தலை
திருப்பித் தராத 
சில்லறை பாக்கி ....


காமுகனின் சிற்றின்பம் 
திருடர்களின் கைவரிசை
குழந்தையின் அழுகை


குமரியின் அழகு
கொடுக்க வந்தும் 
கொடுக்கப்படாத 
காதல் கடிதம்...


வேலைக்காக சிலர்
வேதனையோடு சிலர்
வேடிக்கைப்பார்த்தவண்ணம் சிலர்
காதல் வாகனமாய் சிலரும்..


பேருந்து பயணம் 
நமக்கு தொடர்கதை..
எல்லாவற்றையும்
மறந்த பயணம்
வாழ்கையின் ஒரு அங்கம் !


வெற்றியின் இலக்கையடைய
மனதுக்குள் ஆயிரம் 
வந்து போனாலும்...


நம்மோடு கடந்து போனாலும்
நினைக்கும் தூரத்தை கடக்க 
வாழ்ந்து பார்க்க 
பல நிலைகளை கடக்க 
நீ நடக்க வேண்டும் ...


வாழ்க்கை உனக்குள்ளிருக்க
தடைகளை கடந்து
தேடலை மறந்து...


இருப்பதைக்கொண்டு 
வாழ்ந்துபார் !
வாழ்க்கை உனது கையில்!




http://naamnanbargal.blogspot.com




comments | | Read More...

நண்பன் 100-வது நாள் விழாவில் உறவுகளை கொச்சைப்படுத்திய சத்தியராஜ்(வீடியோ)





தமிழகத்தை பொறுத்தவரையில் சில அதிமேதாவிகள் உண்டு ...அதில் திரையுலகத்தை பொறுத்தவரை அதிமேதாவிகள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது செந்தமிழன் ....புரட்சி தமிழன்...சத்தியராஜ் தான் எப்போதும் முதலிடத்தில் இருப்பார்.

இவர் பங்கு பெறும் பொது நிகழ்சிகளில் இவர் பேசாமல் திரும்பியதில்லை மைக் கொடுக்கல்லன்னா கூட புடிங்கியாச்சும் பேசுவதில் வல்லவர். இவர் பேச்சுகள் எப்போதுமே சர்ச்சைகளை உண்டு பண்ணுவது உண்டு.

குறிப்பாக இவர் குறிவைத்து தாக்குவது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தான். ரஜினி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால் சிறிது கூட அவை நாகரீங்கம் இல்லாமல் பேசுவதில் வல்லவர். அதற்கு பல எடுத்துக்காட்டுகளை கூறலாம். 


அதில் ஒன்று...






அடுத்ததாக பேச்சுக்கு முன்னூறு தடவை தமிழன் தமிழன் என்று கூறி மக்களை ஏமாற்றுவதிலும் அரசியல் வாதிகளுக்கு சளைத்தவர் அல்ல என்பதை பல நேரங்களில் புரியவைத்திருக்கிறார்.

இப்படி பட்ட புரட்சி தமிழன் அண்மையில் விஜய் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் பேசியது தான் இன்று தமிழக மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. தமிழக கலாச்சாரத்தை அல்ல இந்திய கலாச்சாரத்தை அல்ல மனிதனை மிருகங்களிடமிருந்து பிரித்து காட்டும் மனித உறவுகளின் புனிதத்தையே கொச்சை பட� �த்தும் விதத்தில் பேசி இருக்கிறார்.

ஆம், அப்பா, மகள் உறவின் மேன்மையை கொச்சை படுத்தும் விதமாக பேசி இருக்கிறார்...இதிலிருந்து அவரின் சுயரூபம் வெளிப்பட்டிருக்கிறது....

அந்த வீடியோ....




-சிந்து 




comments | | Read More...

‘யோஹன்’ தலைப்புக்கு கவுதம் விளக்கம்




தமிழில் 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'விண்ணைத் தாண்டி வருவாயா' படங்களை இயக்கிய கவுதம் மேனன், விஜய்-ஐ வைத்து இயக்கவிருக்கும் படத்திற்கு யோஹன் அத்தியாயம் ஒன்று என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு யோஹன் என்ற தலைப்பை தேர்வு செய்ததன் மூலம் பல விமர்சனங்களை எதிர்கொண்டார் இயக்குனர் கவுதம் மேனன். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் யோஹன் என்ற சொல்லுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதன்படி, யோஹன் என்பது உலகம் முழுவதும் தெரிந்த பெயர். சர்வதேச அளவில் இப்படத்தை கொண்டு செல்வதற்காகவே இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது என தெளிவாக விளக்கியுள்ளார்.< o:p>

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'துப்பாக்கி' பட வேலைகளில் பிஸியாக இரு� ��்கிறார். இப்படம் முடிந்த பிறகு 'யோஹன் அத்தியாயம் ஒன்று' படத்தில் இணைவார் என சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.



comments | | Read More...

சிறுமி நரபலிக்காக 6 லட்சம் ரூபாய் கொடுத்தேன்: தி.மு.க. பிரமுகர் பரபரப்பு வாக்குமூலம்




மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்� �� கச்சைக்கட்டியை சேர்ந்தவர் தொத்தன் என்ற தொத்தல், விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கிளி. இந்த தம்பதிக்கு ராஜலட்சுமி (வயது5) என்ற மகள் இருந்தாள். அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.  
 
கடந்த 1.1.2011 அன்று வீட்டு அருகில் விளையாடி கொண்டு இருந்த ராஜலட்சுமி திடீர் என மாயமானாள். பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கும் அவளை காண� �ில்லை. மறுநாள் அதே பகுதியை சேர்ந்த வீரணன் என்பவரின் மாட்டு தொழுவத்தில் ராஜலட்சுமி பிணமாக கிடந்தார்.
 
சிறுமி ராஜலட்சுமி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.   இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் அதே பகுதியை சேர்ந்த மலபார் என்ற கருப்பு மற்றும் அவரது தந்தை மகாமுனி (61) ஆகியோரை கைது செய்தனர். அவர்க� ��் இருவரும் சில மாதங்களில் இறந்துவிட்டனர்.
 
பின்னர் இந்த வழக்கில் தொய்வு ஏற்பட்டது. அதன் பின்னர் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி ராஜலட்சுமி நரபலிக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
 
இதுதொடர� ��பாக கச்சக்கட்டியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரும், மதுரை மாவட்ட ஊராட்சி குழுவின் முன்னாள் துணை தலைவருமான அயூப்கான் (50), முருகேசன் (54), பொன்னுசாமி (22) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.  
 
சிறுமியை நரபலி கொடுத்தது ஏன்? என்பது குறித்து கைதான அயூப்கான் வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:-
 
நான் தனிச்சிய ம் கிராமத்தில் ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரி கட்டிடத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கட்டி கொண்டு இருக்கின்றேன். அதில் தடை ஏற்பட்டது. இதனால் குழந்தையை நரபலி கொடுத்து அதன் ரத்தத்தை கட்டிட பகுதியில் தெளித்தால் கட்டிடம் வேகமாக கட்டி விடலாம் என நினைத்தேன்.
 
கச்சகட்டி கிராமத்தை சேர்ந்த மலபார் என்ற கருப்பு, பொன்னுச்சாமி, முருகேசன் ஆகிய� ��ரை தொடர்பு கொண்டேன்.   அவர்களிடம் நரபலிக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினேன். அதற்காக பல லட்சம் ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறினேன்.
 
அதனை தொடர்ந்து பொன்னுசாமி, மலபார் ஆகியோர் சிறுமி ராஜலட்சுமியை கடத்தி கொண்டு மலபார் வீட்டில் அடைத்து வைத்தனர். சிறுமி காலில் கிடந்த கொலுசை மலபாரின் மனைவி லட்சுமி கழற்றி பொன்னுச்சாமியிடம் கொடுத்தார்.   ;
 
அதிகாலை 2 மணி அளவில் சிறுமியை மகாமுனி, பொன்னுசாமி, லட்சுமி ஆகியோர் பிடித்து கொண்டனர். மலபார் கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்து ரத்தத்தை ஒரு வாளியில் பிடித்தார். சிறிது நேரத்தில் சிறுமி இறந்து விட்டாள். அதன் பின்னர் ரத்தத்தை கல்லூரி கட்டிடத்தை சுற்றி தெளித்தேன்.
 
சிறுமியை கொலை செய்ததற்காக மகாமுன ிக்கு ரூ.4 லட்சமும், பொன்னுச்சாமிக்கு ரூ.2 லட்சமும் கொடுத்தேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.  
 
கைது செய்யப்பட்டுள்ள அயூப்கான் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரி அருகே உள்ள இடத்தை போலி ஆவணம் மூலம் கைப்பற்றி நிலத்தை அபகரித்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
 
தற்போது சிறுமியை நரபலி கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறுமி கொலை தொடர்பாக மலபாரின் மனைவி லட்சுமியை போலீசார் தேடி வருகிறார்கள்.



comments | | Read More...

சச்சினுக்கு எம்.பி. பதவி: காங்கிரஸ் மீது பால் தாக்கரே பாய்ச்சல்




சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரிலிருந ்து வெளிவரும் 'கார்ட்டூன் வாச்' என்னும் இதழ் சார்பில் விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
 
விருது பெற்ற பின்னர் பேசிய பால்தாக்கரே,
 
ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் பெயரை பரிந்துரை செய்தது காங்கிரஸ் கட்சியின் 'இழிவான நாடகம்' எனவும், இதுதான் உண்மையான 'டர்ட்டி பிக்சர்' எனவும் விமர்சனம் செய்துள்ளார்.
 
மேலும், சிவசேனா ஆ� ��ரவு இதழான 'சாமனா'வில் ராஜ்ய சபா எம்..பி பதவிக்கு சச்சின் பெயரை காங்கிரஸ் கட்சி பரிந்துரை செய்ததில் நிச்சயம் ஏதோ உள்நோக்கம் இருக்க வேண்டும் என பால் தாக்கரே நேற்று கருத்து கூறியிருந்தார்.
 
சச்சினை 'பாரத ரத்னா சச்சின்' என அழைப்பதையே அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் விரும்புவார்கள் எனவும், காங்கிரசின் இந்த நாடகத்தால் இப்போது அவர் வெறும் 'சச்சின் எம்.பி' ஆகிவிட்டார் எனவும் தாக்கரே கூறியுள்ளார். 



comments | | Read More...

எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...?




சத்தம் போடாமல் ராஜ்யசபா எம்.பியாகி விட்ட சச்சின் டெண்டுல்கருக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் தெரியுமா... தெரிஞ்சுக்குங்க...

ஒரு ராஜ்யசபா உறுப்பினரின் மாதச் சம்பளம் ரூ. 50,000 ஆகும். இது போக கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களில் கூட்டத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ரூ. 2000 தினசரிப் படி கிடைக்கும்.

எந்தவிதக் கட்டணமும் இல்லாமல், வாடகையும் இல்லாமல் 3 தொலைபேசி இணைப்புகளை ராஜ்யசபா எம்.பி பெற முடியும். மேலும் பதவியில் இருக்கும்போது வீடு கிடைக்கும்.

வருடத்திற்கு 50,000 யூனிட் மின்சாரம், 4000 கிலோ லிட்டர் குடிநீர் ஆகியவை இலவசமாக கிடைக்கும்.

ரூ. 500 மட்டும் கொடுத்தால் போதும் எம்.பிக்கும், அவரது மனைவி, குழந்தைகளுக்கும் அனைத்து விதமான மருத்துவ வசதிகளும் கிடைக்கும்.

ஒவ்வொரு எம்.பிக்கும் மாதா மாதம் ரூ. 45,000 படி வழங்கப்படும். இதில் ரூ. 15,000த்தை புக் வாங்க, தினசரி நாளிதழ்கள் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம். மீதமுள்ள ரூ. 30,000 பணத்தை செயலாளர், பி.ஏ. ஆகியோரை வைத்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒருவர் ஒருமுறை ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாலே அவர் பென்ஷன் பெறத் தகுதியுடையவர் ஆகிறார். ஓய்வுக்குப் பின்னர் மாதம் ரூ. 20,000 பென்ஷன் கிடைக்கும். இதுவே ஒருவரே ஒருமுறைக்கு மேல் எம்.பியானால், இந்த தொகையுடன் கூடுதலாக ரூ. 1500 கிடைக்கும்.

ஆண்டுக்கு 34 முறை மனைவி அல்லது உறவினருடன் இலவசமாக விமானத்தில் பறக்க சலுகை தரப்படும்.

எம்.பியாக இருப்பவரைப் பார்க்க அவரது மனைவி அல்லது கணவர் வருடத்திற்கு 8 முறை இலவசமாக டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்யலாம்.

ராஜ்யசபா எம்.பியாக இருப்பவர்கள், தங்களது ஐடி கார்டை மட்டும் காண்பித்து விட்டு இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும், ரயிலில் குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்பி்ல் பயணிக்க முடியும்.

இப்படி சச்சின் டெண்டுல்கருக்குப் புதிய சலுகைகள் கிடைக்கவுள்ளன. இது போக வழக்கமாக அவர் கிரிக்கெட் ஆடும்போது பல லட்சம் சம்பளமாகவும் கிடைக்கும்.

தனது எம்.பி. பதவியை வைத்துக் கொண்டு சச்சின் என்ன மாதிரியான சாதனைகளைப் படைக்கப் போகிறார் என்பதே தற்போது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



comments | | Read More...

நம்ம மதுரை ஆதீனமா?...ஆச்சரியத்தில் மதுரை மக்கள்!




மதுரை மக்கள் பெரும் வியப்பிலும், குழப்பத்திலும், ஆச்சரியத்திலும் மூழ்கியுள்ளனர். மதுரை ஆதீனத்தின் சமீபத்திய முடிவுதான் இந்த ஆச்சரியத்திற்குக் காரணம்.

மதம் சார்ந்த மடங்கள் எத்தனையோ தமிழகத்தில் இருந்தாலும் அதையும் தாண்டி மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தவர் குன்றக்குடி அடிகளாரும், அவரது மடமும் மட்டுமே. மதம் சார்ந்த ஒ� ��ு அதிபதியாக இருந்தாலும் கூட தமிழார்வலராக, தமிழ் ஊழியராக, தமிழுக்காகவும், சமுதாயத்திற்காகவும் த ொண்டாற்றிய பெருமை படைத்தவர் குன்றக்குடி அடிகளார்.

தனக்காக, தான் சார்ந்த மதத்திற்காக என்றில்லாமல், தமிழுக்காகவும், தமிழ்ச் சமுதாயத்திற்காகவும் தனது இறுதி மூச்சு வரை பாடுபட்டவர் குன்றக்குடி அடிகளார். குன்றக்குடி மக்கள் இன்றளவும் அடிகளாரை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். மத மாச்சரியமின்றி, அரசியல் பாகுபாடின்றி அ� �்தனை பேராலும் பாராட்டப்பட்டவர், மதிக்கப்பட்டவர் குன்றக்குடி அடிகளார். அவருக்குப் பக்கத்தில் கூட யாரும் வர முடியாது என்பதுதான் உண்மை.

குன்றக்குடி அடிகளாரைப் போல இல்லாவிட்டாலும் கூட சமுதாயம் சார்ந்த ஒரு மனிதராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் மதுரை ஆதீனம். ஈழத் தமிழர் போராட்டம், முல்லைப் பெரியாறு � �ணை போராட்டம் என பல போராட்டங்களில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டவர். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் முன்பு இயங்கிய டெசோ அமைப்பில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டவர்.

சமூக பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து அக்கறை காட்டி வந்தவர். அரசியல்வாதிகளுடன் நல்ல தொடர்பில் இருந்து வந்தவர். இவர் மீதும் சலசலப்புகள், சர்ச்சைகள் இருந்தபோதும் கூட ப� �ரிய அளவில் மக்களிடையே களங்கப்படாதவராகவே இருந்து வந்தார்.

ஆனால் மதுரை ஆதீனத்தின் சமீபத்திய முடிவு மதுரை மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நம்ம ஆதீனமா இப்படி முடிவெடுத்தார் என்பதை மதுரை � ��ுழுக்கப் பேச்சாக உள்ளது.

ஆதீனம் இப்படிச் செய்வார்னு யாருமே எதிர்பார்க்கலைங்க, ரொம்ப ஆச்சரியமா இருக்கு என்கிறார்கள் மதுரைக்காரர்கள். மதுரை ஆதீனம் என்பது மதுரையின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமா� � மாறிப் போன ஒன்று, மதுரையின் அடையாளங்களில் ஒன்று, மதுரையின் வரலாற்றில் ஒன்று. எப்போது தோற்றுவிக்கப்பட்டது என்பது கூட சரியாக தெரியாத அளவுக்கு மிக மிகப் பழையான ஒரு மடம்.

சைவக் குறவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் 1500 ஆண்டுகளுக்கு முன்பே தோற்றுவித்த மடம் இது. சைவ நெறி பரப்பி வந்த இந்த மடத்தில் இதுவரை இந்த அளவுக்கு பரபரப்பான சம்பவம் எதுவும் நடந்ததில்லை. ஆனால் தற்போது மதுரை ஆதீனம் அகில இந்திய அளவில் ஆச்சரியக் குறியாக எழுந்து � �ிற்கிறது.

மதுரையைச் சேர்ந்த ஆசிரியரான சுப்பிரமணியம் என்பவர் ஆதீனத்தின் முடிவு குறித்துக் கூறுகையில், ஏதோ 'ஏ படம்' பார்த்தது போல இருக்கிறது ஆதீனத்தின் இந்த முடிவு. இதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.இது மோசமாக கனவாக இருக்க வேண்டும் என்று இப்போது கூட நான் வேண்டுகிறேன். அன்னை மீனாட்சியை தரிசித்து விட்டு ஆதீனம் மடம் வழியாகத்தான் நான் வீட்டுக்குப் போவேன். இனி� ��ேல் நான் இந்த மடத்தைப் பார்க்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. பார்க்கவும் பிடிக்கவில்லை. ரொமபக் கஷ்டமா இருக்கு சார் என்றார்.

மதுரையைச் சேர்ந்தவரான கதிரேசன் என்ற பேராசிரியர் கூறுகையில், மதுரை ஆதீம் என்பது மாபெரும் தலைவர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்ட ஒரு மடம். பசும்பொன் முத்துராமலிங்கத் த� ��வர் போன்றோர் அரவணைத்திருந்த மடம் இது. இதன் வரலாறு 1500 ஆண்டுகளுக்கும் மேலானது. இதற்கு மதுரை ஆதீனம் நியமித்துள்ள புதிய ஆதீனத்தை எங்களால் நிச்சயம் ஏற்க முடியாது என்றார்.

எழுத்தாளர் பிரியதர்ஷனி என்பவர்க கூறுகையில், எனக்கு இந்த நியமனம், அதன் விதிகள� �� உள்பட எதுவுமே தெரியாது. ஆனால் மதுரை மக்களும், மதுரை நகரமும், மற்றவர்கள் முன்பு கேலிப் பொருளாகி விட்டதை மட்டும் உணர்கிறேன். மதுரையின் பெயர் நிச்சயம் மாசுபட்டு விட்டது என்பதில் யாருக்கு� ��் சந்தேகம் தேவையில்லை என்றார்.

மதுரை மக்களுக்கு ஆதீனம் என்ன விளக்கம் அளிக்கப் போகிறாரோ...?




comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger