News Update :
Powered by Blogger.

சுய இன்பம் காண்பதன் மூலம் மட்டுமே உச்சக்கட்டம் காணும் பெண்கள் !!

Penulis : karthik on Monday 30 January 2012 | 19:25

Monday 30 January 2012

திருமணமான பெண்களிடம் அவர்களது செக்ஸ் வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்து
சமீபத்தில் ரகசிய ஆய்வு நடத்தப்பட்டிருக் கிறது. அதன்படி நூற்றுக்கு
தொண்ணுறு பெண்களுக்கு செக்ஸ் உறவு தொடர்பான ஏதோ ஒரு பிரச்சினை இருப்பது
கண்டறியப் பட்டுள்ளது.
திருமணமான பெண்களை அதிகம் பாதிக்கும் சில செக்ஸ் பிரச்சினைகளும்,
அவற்றுக்கான காரணங்களும், தீர்வு முறைகளும் அலசப்பட்டன. அதன்படி....
மிகக் குறைவான செக்ஸ் ஆர்வம்„
குழந்தைப் பருவத்தில் பெரும்பாலான பெண்களுக்கு ஏதோ ஒரு வகையில் மோசமான
செக்ஸ் அனுபவம் கிடைக்கிறது.
செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் அவர்கள் சந்திக்கும் இந்த
அனுபவம், அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் செக்ஸ் குறித்த
தவறானஎண்ணத்தை உருவாக்கி விடுகிறது.
இதனால் பல பெண்களுக்குத் திருமணத்திற்குப் பிறகும் செக்ஸ் அத்தனை
ரசிப்பிற்குதியதாக இல்லை.
சாப்பிடுவது, தூங்குவது என்பது மாதிரி செக்ஸ் உறவும்ஏதோ மாமூலான ஒன்று
என்கிற ரிதியில் செல்லும் போதும் பெண்களுக்கு அதன் மீதான ஆர்வம்
குறைகிறது.
திருமணமான புதிதில் தம்பதியர் இருவரும் சேர்ந்திருந்த சந்தோஷ தருணங்கள்,
இருவரையும் கிளர்ச் சியூட்டிய விஷயங்கள் ஆகியவற்றை நினைவு கூர்வது
இப்பிரச் சினைக்குத் தீர்வாக அமையலாம்.
தம்பதியர் இருவரும் சேர்ந்து குளிப்பது, புதிய இடத்தில், சூழ்நிலையில்
உறவு வைத்துக் கொள்வதும் இதற்குத் தீர்வாகும்.
இன்னும் சில பெண்களுக்கு பிரசவம்,களைப்பு, கோபம், மாத விலக்கு
சுழற்சியில் ஏற்படும் கோளாறுகள், டென்ஷன் ஆகிய வற்றின்காரணமாகக் கூட
செக்ஸில் ஆர்வம் குறைகிறதாம்.
மனரிதியான பாதிப்புகளாக இருந்தால் செக்ஸ் தெரபி மற்றும் கவுன்சலிங்
மூலமும், உடல் ரிதியான பாதிப்புகளுக்கு ஹhர்மோன் ரிப்ளேஸ்மென்ட் தெரபி
மூலமும் சிகிச்சை அளித்து இதைக் குணப்படுத்தலாம்.
பிறப்புறுப்பு வறட்சி:
இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. ஈஸ்ட்ரோஜன் ஹர் மோன் அளவு குறையும்
போது வறட்சி ஏற்படலாம். தாய்ப் பாலூட்டும் பெண்களுக்கும், மெனோபாஸ் காலக்
கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் இது சகஜம். இதற்கும் ஹhர்மோன்
ரிப்ளேஸ்மென்ட் தெரபி பலனளிக்கும்.
குடிப் பழக்கம் இருக்கும் பெண்களுக்கும் பிறப்புறுப்பு வறட்சி
ஏற்படுகிறது. ஆல்கஹலே அந்த வறட்சிக்குக் காரணம்.குடியை நிறுத்தவதன்
மூலமும், வழுவழுப்புத் திரவங்களை உபயோகிப்ப தன் மூலமும் இதைக்
குணப்படுத்தலாம்.
உறவின் போது வல:
உறவின் போது சில பெண்களுக்குத் தாங்கவே முடியாத அளவுக்கு வலி ஏற்படலாம்.
பிறப்புறுப்புப் பாதையில் இரு புறங்களிலும் பட்டாணி அளவுக்குப்
பெண்களுக்கு பார்த்தோலின் சுரப்பிகள் என்று உண்டு.
இவற்றின் வேலையே உறவின்போது வழுவழுப்புத் திரவத்தைக் கசியச் செய்வதுதான்.
இவை பாதிக்கப் படும் போதுபிறப்புறுப்பில் வீக்கம், எரிச்சல் ஏற்படுவதோடு
சில சமயங்களில் நடக்கவே முடியாத அளவுக்குக் கூட வலி தீவிரமாகலாம்.
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை ஆன்டிபயாடிக் மருந்துகளின் மூலமோ,
தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை மூலமோ சரி செய்து விட முடியும்.
வலி ஏற்படுகிற சரியானஇடத்தையும், சரியான நேரத்தையும் (உறவு தொடங்கிய
உடனேயா, உறவின் இடையிலா, உச்சக் கட்டம் அடைகிறபோதா) சொன்னால்
மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.
உறவே கொள்ள முடியாத நிலை:
ஆர்வமும், ஆரோக்கியமும் இருந்தும் கூட சில பெண்களால் உறவில் ஈடுபட
முடியாத நிலை ஒன்று உண்டு. அதற்கு வாஜனிஸ்மஸ் என்று பெயர். செக்ஸைப்
பற்றிய பயம், கடந்த காலக் கசப்பான செக்ஸ்அனுபவங்கள், பிரசவம் போன்றவை
இதற்குக் காரணமாக இருக்கலாம்.
மெனோபாஸை அடைந்து விட்ட பெண்களுக்கு பிறப்புறுப்புத் திசுக்கள்
சுருங்கியதன் விளைவாக கசிவு குறைவாக இருக்கும். இவர்களுக்கும் இந்தப்
பிரச்சினை ஏற்படலாம்.
செக்ஸ் தெரபியின் மூலம் இந்தப் பெண்களுக்கு இடுப்புச் சுவர் தசைகளை
எப்படி hpலாக்ஸ் செய்வது என்று கற்றுக் கொடுக்கப்படும். மேலும் பெண்
மேலிருந்த நிலையில் உறவு கொள்வதும் இதற்குத் தீர்வாக அமையும்.
உச்சக் கட்டத்தை அடையமுடியாமை:
சில பெண்களுக்கு உறவின் ஏதேனும் ஒரு கட்டத்தில் உச்சக் கட்டம்
சாத்தியமாகிறது. இன்னும் சிலருக்கு செக்ஸின் போது குறிப்பிட்ட சில
நிலைகளைக் கையாளும் போது உச்சக் கட்டம் கிடைக்கிறது.
இன்னும் சிலர் சுய இன்பம் காண்பதன் மூலம் மட்டுமே உச்சக்கட்டம்
அடைகிறார்கள்.குறிப்பிட்ட சிலருக்கு உச்சக் கட்டம் என்பது எப்போதுமே
சாத்தியமாவதில்லை.
உச்சக் கட்டம் அடைய முடியாத பெண்கள் செக்ஸை அனுபவிக்கத் தகுதியற்றவர்கள்
என்றோ, அவர்கள் உடலளவிலோ, மனத்தளவிலோபாதிக்கப்பட்டவர்கள்என்றோ
அர்த்தமில்லை.
உறவின் போது பெரும்பாலான பெண்களது கவனம் தன் கணவன் மீதே இருக்கிறது.
கணவன் தேவைகளை முழுமையாக நிறை வேற்றுகிறோமா என்பதிலேயே அவர்கள் கவனம்
போய் விடுவதால்தன்னை எது உச்சக் கட்டம் அடையச் செய்யும் என்பதைப் பற்றி
நினைக்கத் தவறிவிடுகிறார்கள்.
இந்த மாதிரிப் பெண்கள் உறவு இல்லாத நேரங்களில் தன் உடலைத் தொட்டுப்
பார்த்து அதில் எந்த இடம் அல்லது எந்த மாதிhpயான ஸ்பரிசம் தனக்குக்
கிளர்ச்சியைத் தருகிறது என்று கண்டறிய வேண்டும்.
அதைத் தன் கணவனிடம் சொல்லத் தயங்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக
உறவின் போது அவசரம் இருக்கக் கூடாது. உச்சக் கட்டம் அடையவும் பெண்கள்
மேல் நிலையில் இருந்து உறவு கொள்வது பலனளிக்கும் என்கிறார்கள்
மருத்துவர்கள்.
comments | | Read More...

என்னைப்பற்றி அவதூறாக வதந்திகள் பரப்புவது வேதனை அளிக்கிறது! - அமலா பால்

திரைப்பட விழாக்களில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக வந்த வதந்திகளுக்கு
நடிகை அமலா பால் பதிலளித்துள்ளார். நடிகை அமலாபால், சித்தார்த் ஜோடியாக
நடித்த காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா
வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடந்தது. நடிகர் சித்தார்த் உள்ளிட்ட
பலர் கலந்து கொண்ட இவ்விழாவில் அமலாபால் கலந்து கொள்ளவில்லை. திட்டமிட்டு
இவ்விழாவை புறக்கணித்ததாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து
அமலாபால் கூறியதாவது, என் மீது அடிப்படையில்லாத குற்றச்சாட்டுகளும்,
வதந்திகளும் பரப்பப்படுகின்றன. காதலில் சொதப்புவது எப்படி? பட விழாவை
புறக்கணித்ததாக குறை சொல்கிறார்கள். கடந்த சில வருடங்களாக எவ்வளவோ பட
விழாக்களில் பங்கேற்றிருக்கிறேன். நான் நடித்த படங்களை
விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டுள்ளேன். எந்த
கதாநாயகியும் என்னைப் போல் விழாக்களில் கலந்து கொண்டிருக்கமாட்டார்கள்.
தெய்வத்திருமகள் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில்தான் நடித்தேன்
என்றாலும் அப்படத்தை விளம்பரப்படுத்த பல ஊர்களுக்கு சென்றுள்ளேன். வேட்டை
படத்தை விளம்பரம் செய்வதிலும் எனது பங்களிப்பு அதிகமாக இருந்ததுள்ளது. பல
மாநிலங்கள் சென்று எனது படங்களை விளம்பரப்படுத்தியுள்ளேன். அதனால்
என்னைப்பற்றி இதுபோல் அவதூறாக வதந்திகள் பரப்புவது வேதனை அளிக்கிறது
என்று கூறியுள்ளார்.
comments | | Read More...

அதிசயமான உண்மை: காதலியின் முன்னால் பத்து தலைகளுடன் தோன்றும் இராவணன்!!

பகவான் கிருஷ்ணரை எத்தனையோ பெண்கள் காதலித்தனர் என்று நாம்அறிகின்றோம்.
புராணங்கள், இதிகாஷங்கள் உட்பட இந்து சமய நூல்கள் பலவும் இதை சொல்லி
நிற்கின்றன. ஆனால் இன்றைய கலியுகத்தில் அதுவும் இருபதாம் நூற்றாண்டில்
இராவணனை காதலிக்கின்ற பெண் ஒருவரை அறிய முடிகின்றது. இது கட்டுக்
கதையோ,கற்பனையோ அல்ல. உளவியல் அறிஞர்கள் பலரையும் திக்குமுக்காட
வைத்திருக்கின்றஅதிசயமான உண்மை. இராவணன் மீது காதல் வசப்பட்டு உள்ளார்
வங்காளப் பெண் ஒருவர். இவரது கனவில் காலை, மாலை எப்பொழுதும் இராவணன்
பத்துத் தலைகளுடன் தோன்றுகின்றார் என்று காதல் மயக்கத்தோடு கூறுகின்றார்.
இராவணனைப் பற்றி ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்தால் போதும் இராவணன்
அழகிய பத்துத் தலைகளுடன் கண் முன் தோன்றி விடுகின்றார் என்கிறார். இவரது
கண்களுக்கு ரோமியோவாக இராவணன் தெரிகின்றான். உளவியல் அறிஞர்கள் குழம்பிப்
போய் உள்ளார்கள். மனிதர்கள் புரிந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல.
comments | | Read More...

பேரனால் கற்பழிக்கப்பட்ட பேத்தி! அதிர்ச்சியில் உறைந்தது யாழ்.மீசாலை!!

மீசாலைப் பகுதியில் பதின்ம வயதுடைய தனது பேர்த்தியை பாலியல்
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 65 வயதுடைய
முதியவர் ஒருவர் சாவகச்சேரிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட பதின்ம வயது மாணவியை சம்பவ தினத்தன்று மதுபோதையில் வந்த
தாத்தா துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், மறுநாள் இச் சம்பவம்
தொடர்பில் மாணவி தனது ஆசிரியை ஒருவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி சாவகச்சேரி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டார். இச் சம்பவம் தொடர்பில் அம் மாணவியின் சிறியதாயர்
ஒருவரைப் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியதுடன், இதனை அறிந்த சந்தேக
நபரான தாத்தா நஞ்சருந்திய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டிருந்தார். எனவே இவர் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் இந்த
65 வயதுத் தாத்தாவைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர். இதேவேளை, முல்லைத்தீவில் தாயை இழந்த இந்தமாணவியின் தந்தை
வேறு திருமணம் செய்ததால் இவர் 65 வயதுடைய பேரனுடன் தங்கிப் படித்து
வருகிறார் என்றும் இந்த நிலையிலேயே பேரன் கையடக்கத் தொலைபேசியில் பதிவு
செய்யப்பட்டிருந்த ஆபாசப் படங்களைக் காட்டி வன்புணர்வு புரிந்தார்
என்றும் கூறப்படுகின்றது
comments | | Read More...

'1.5 நயன்' - டோலிவுட்டில் ஒரே புகைச்சல்!

நயன்தாரா தான் நடிக்கவிருக்கும் புதிய தெலுங்குப் படத்திற்கு வாங்கியுள்ள
சம்பளத்தைக் கேட்டு டோலிவுட்டில் ஒரே புகைச்சலாய் இருக்கிறதாம்.
நயன்தாரா பிரவுதேவாவை திருமணம்செய்து கொள்வதாக இருந்தது. அதனால் அவர்
சினிமாவுக்கு குட்பை சொன்னார். தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீ ராம ராஜ்யம்
தான் தன்னுடைய கடைசி படம் என்றுஅறிவித்த நயன் கண்ணில் அருவி கொட்டியது.
இந்நிலையில் பிரவுதேவா-நயன் இடையே லடாய் ஏற்பட்டு அவர்கள் பிரிந்து
விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் , தெலுங்கில் தசரத் இயக்கத்தில் நாகர்ஜுனா நடிக்கும் படம்
ஒன்றில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதற்காக அவருக்கு
கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா ? ஒன்றரை கோடி ரூபாய்.
நடிக்க மாட்டேன்னு சொல்லிவிட்டு போன நடிகையை வலியக்க அழைத்து வந்து
இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்கிறார்களே என்று தெலுங்கு பட உலகில் உள்ள
பலருக்கும் வயிற்றெச்சலாம்.
தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் நடிகைகளுக்குக் கூட இந்த சம்பளம்
கொடுக்கப்படவில்லை என்பது தான்பலரையும் கடுப்பாக்கியுள்ளது.
இப்பவே ஒன்றரை கோடி என்றால் இனிமேல் எவ்வளவு வாங்குவாரோ ?
comments | | Read More...

கோட்சேவை மடக்கி பிடித்த வீரரின் குடும்பம் வறுமையில்தவிப்பு!

நாட்டின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை இதே நாளில் சுட்டுக்கொன்ற நாதுராம்
கோட்சேவை தீரமுடன் மடக்கிப் பிடித்த ஒரு வீரரின் குடும்பம் இன்று வரை
வறுமையால் தீரா சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது.
1948 ஆம் ஆண்டு ஜனவரி 30- ந் தேதி மகாத்மா காந்தியை டெல்லி பிர்லா
மாளிகையில் நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். காந்தியை படுகொலை
செய்துவிட்டுதப்பியோட முயன்ற கோட்சேவை தீரமுடன் மடக்கிப் பிடித்த வீரரின்
பெயர் தேவ் ராஜ் சிங் தாகூர்.
1952- ம் ஆண்டு நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத்
கையால் வீரதீர செயலுக்கான விருதைப் பெற்றவர்.
இமாசலப்பிரதேசத்தின் நகான் நகரில் தாகூரின் குடும்பம் வசித்து வருகிறது.
இந்திய விமானப் படையில் பணியாற்றி வந்த தாகூருக்கு மனநிலை பாதிக்கப்பட
கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது. 14 ஆண்டுகாலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசர்
மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் 1987- ல் தாகூர்காலமானார்.
தாகூர் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பம் வறுமையோடு போராடி வருகிறது.
நாட்டின் தேசப்பிதாவை சுட்டுக்கொன்ற கோட்சேவை பிடித்துக் கொடுத்த வீரர்
என்ற அடிப்படையில் அரசுப் பணிக்காக இமாசலப்பிரதேச அரசிடம் அவரது
குடும்பம் நீண்டகாலமா கோரிக்கைவிடுத்தாலும் நிறைவேறியபாடில்லை. இதுபோன்ற
அடிப்படையில் எல்லாம் அரசுப் பணி வழங்க முடியாது என்பதில் இமாசலப்பிரதேச
அரசு அதிகாரிகள்பிடிவாதம் காட்டுகின்றனர்.
ஆண்டுதோறும் ஜனவரி 30- ந் தேதி மகாத்மாவை நினைவுகூறும் நமக்குகோட்சேவின்
நினைவும் வராமல் போவது இல்லை... இருவரது பெயரும் வரலாற்றின் பக்கங்களில்
பதிவு செய்யப்பட்டிருப்பதை போல தேவ்ராஜ்சிங் தாகூரின் பெயரும்இடம்பெற
வேண்டும்.
comments | | Read More...

ஷாருக் மனைவி ரொம்ப ஹாட்!...'ஜொள்'கிறார் ரித்திக் ரோஷன்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மனைவி கௌரி ரொம்பஹாட் என்று
நடிகர் ரித்திக் ரோஷன் தெரிவி்ததுள்ளார்.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானின் மனைவி கௌரி 2 குழந்தைகளுக்கு தாயான
பிறகும் சிக்கென்று இருக்கிறார். அப்படி கட்டுக்கோப்பாக உடம்பை
வைத்திருக்கும்போதே ஷாருக் பிரியங்கா சோப்ரா இடையே தொடர்பு இருப்பதாக
செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையில் கௌரி கான் ரொம்ப ஹாட் என்று
நடனத்தாலும் , பார்வையாலும் வசீகரிக்கும் ரித்திக் ரோஷன் சொல்லியுள்ளார்.
ரித்திக் சொல்வது உண்மை தான். நடிக்காவிட்டாலும் பாலிவுட் நடிகை போன்று
உடல்வாகு உள்ளவர் கௌரி. கடந்த 2008ம் ஆண்டு ஜனவரிமாதம் பிரபல வோக்
பத்திரிக்கையின் அட்டையில் கௌரியின் படம் வந்தது என்பது
குறிப்பிடத்தக்கது. அதில் கௌரியை பாலிவுட்டின் முதல் பெண்மணி என்று
குறிப்பிட்டிருந்தனர்.
கடந்த 2009ம் ஆண்டில் அவர் தனது கணவர் ஷாருக்குடன் சேர்ந்து இயக்குனர் ,
பேஷன் டிசைனர் கரண் ஜோஹாரின் பேஷன் ஷோவில் கேட் வாக் செய்தார். தற்போது
ஷாருக் பிரியங்கா சோப்ராவுடன் அதிக நேரம் செலவழிப்பதால் கௌரி டென்ஷனில்
உள்ளார். இது குறித்து கணவரிடம்கேட்டால் தகராறு தான் என்று பாலிவுட்டில்
பரவலாகப் பேசப்படுகிறது. இது குறித்து ஷாருக்கும் வாய்திறக்கவில்லை ,
பிரியங்காவும் அமைதி காத்து வருகிறார்.
இப்படி இருக்கையில் ஏன் ரித்திக் ரோஷன் அப்படிச் சொன்னார் என்பது தெரியவில்லை..!
comments | | Read More...

ரீச்சரை கர்ப்பமாக்கிய 16 வயது மாணவன்: ஆசையை தூண்டிய ரீச்சர் கைது (Pictures)

43 வயதாகிய பெண் ஆசிரியர், தனது 16 வயது மாணவனுடன் பாலியல் ரீதியில் உறவு
கொண்டு அவன் மூலம் கர்ப்பமாகியதால் ஒஸ்ரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரனையின் போது மாணவனின் 13 வயதிலிருந்து ஆசிரியர் அவனுடன் பாலியல்
ரீதியான உறவு வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
ஒஸ்ரியா வில் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ள தயாரான வயது14 என
நடைமுறையில் உள்ளது. உறவு ஆரம்பித்தபோது சிறுவனுக்கு 13 வயது என்பதால்
ரீச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் கருத்து தெரிவிக்கையில், ரீச்சரை தான் நேசிப்பதாகவும்,
அவரை மணம் முடித்துக் கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆசிரியருக்கு 15 வயதில்மகள் ஒருத்தி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
comments | | Read More...

ஆண் நண்பர்கள் அழைத்தும் போகாதமல்லிகா

என்னை சில நண்பர்கள் டேட்டிங் செய்ய அழைத்தார்கள். ஆனால் எனக்கு
காதலில்தான் விரும்பம். முத்தம் கொடுப்பதில் நடிகர்களைவிட பாம்புதான்
எக்ஸ்பர்ட் என்றார் மல்லிகா ஷெராவத்.
இதுபற்றி அவர் கூறியதாவது: ஹாலிவுட் படத்தில் நடிக்க சமீபத்தில் லாஸ்
ஏஞ்சல்ஸ் சென்று திரும்பினேன். பாலிவுட்டில் நடிகர், நடிகைகள் பாரபட்சம்
பார்க்கிறார்கள். ஹாலிவுட்டில் அந்த வித்தியாசம் கிடையாது. இங்கு
குத்தாட்டம் ஆடுவதற்கு மட்டுமே வாய்ப்பு வருகிறதா? என்கிறார்கள். ஆரம்ப
காலத்தில் அப்படி இருந்தது. இப்போது அந்த நிலை மாறி இருக்கிறது.
இளம் இயக்குனர்கள் மிகவும் துணிச்சல்காரர்களாக இருக்கிறார்கள். முக்கிய
வேடங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பளிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் எனது
சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டதாக சிலர் கூறினார்கள். அவர்கள் வாக்கு
பொய்யாகிவிட்டது.
சமீபத்தில் பேட்டி அளித்த பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மிஎன்னைபற்றி
கமென்ட் அடித்திருக்கிறார். மல்லிகாவுடன் முத்தக்காட்சியில் நடிப்பது
ஆர்வத்தை தூண்டவில்லை என்று கூறி இருக்கிறார். அது அவரது கருத்து. ஆனால்
என்னைப் பொறுத்தவரை பாம்புக்கு முத்தம் கொடுத்து நடிப்பதுதான் ஆர்வத்தை
தூண்டுவதாக உள்ளது. ஹிஸ்ஸ் என்ற படத்தில் பாம்புடன்நடித்தேன். அப்போது
பாம்புக்கு நிறைய முத்தம் கொடுத்திருக்கிறேன். அதுவும் முத்தம்
கொடுத்திருக்கிறது. உண்மையில் நடிகர்களைவிட பாம்புதான் முத்தம்
கொடுப்பதில் எக்ஸ்பர்ட்.
என்னை சில நண்பர்கள் டேட்டிங் செய்ய அழைத்தார்கள். ஆனால் எனக்கு
காதலில்தான் விரும்பம். அதுபோன்ற வாய்ப்பு படங்கள் மூலமும், நல்ல
ஸ்கிரிப்ட் மூலம் கிடைக்கிறது. ஒரு ஆண்மகனை காதலிப்பதைவிட ஸ்கிரிப்டை
காதலிப்பதில்தான் எனக்கு பரவசம் அதிகம். இவ்வாறு மல்லிகா ஷெராவத்
கூறினார்.
comments | | Read More...

எங்களுக்குள்ளிருக்கும் நட்பை தவறாக நினைக்க வேண்டாம் , திரிஷாவேண்டுகோள்!

கொலிவுட்டில் நட்சத்திர நாயகிகள் மத்தியில் பிரபலமான ஆடை வடிவமைப்பாளராக
ஷிட்னி ஸ்லேடன் இருந்து வருகிறார். இவரின் கலை வண்ணத்தில் உருவான ஆடைகளே
முன்னணி நடிகைகளின் வரவேற்பை பெரும் என்பதில் சந்தேகமில்லை.
இதனால் கொலிவுட்டில் ஷிட்னியை தெரியாத நடிகைகளே இருக்க மாட்டார்கள்.
குறிப்பாக நடிகை திரிஷாவின் சிறந்த நண்பராக இருந்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஷிட்னி
கூறியதாவது,நடிகை த்ரிஷா மிஸ் சென்னை அழகியானதிலிருந்து எனக்கு நன்றாக
தெரியும்.
எங்களின் எட்டு வருட கால நெருக்கமான நட்பை திரையுலகம் நன்கு அறியும்.
சமீபத்தில் கோவாவில் இந்த வருடப் புத்தாண்டை கொண்டாடினோம்.
த்ரிஷாவின் தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளர் நான் தான். நான் வடிவமைக்கும்
உடைகளை படங்களில் நடிக்கும் போது திரிஷா பயன்படுத்துவார்கள்.
இந்த வருஷம் த்ரிஷாவின் புத்தாண்டு உடையை நான் தான் வடிவமைத்தேன். ஆனால்
எங்கள் நட்பை பற்றி ஆயிரம் பேர் பல விதமாக பேசுவது வருத்தமாக உள்ளது.
எங்களுடைய நல்ல நட்பை பார்த்து பொறாமைப்படும் சிலர் இவ்வாறு
கலங்கப்படுத்துகிறார்கள் என்றுகவலையுடன் கூறியுள்ளார்.
comments | | Read More...

கேரளாவுக்கு கடுப்பாகி ஓடிப்போன நயனை தேடிப்போன பிரபு அவமானப்பட்ட கதை!

பிரபுதேவாவுடன் சண்டை போட்டு சொந்த ஊரான கேரளாவுக்குப் போய் விட்ட
நயன்தாரா தன்னை தேடி ஓடி வந்தபிரபுதேவாவை வீட்டுக்குள்ளேயே நயனதாரா
சேர்க்கவில்லை. இதனால் தெருவில்நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக செய்திகள்
வெளியாகின. எந்த வேகத்தில் பிரபுதேவா மீது காதலில் விழுந்தாரோ அதே
வேகத்தில் அவரை விட்டுப் பிரிந்தும் விட்டார் நயனதாரா. இதனால்
பிரபுதேவாவின் கதி என்ன என்பது திரையுலகினர் மத்தியில் பெரும் விவாதமாக
மாறியுள்ளது.
பிரபுதேவாவின் திருமண வாழ்க்கையே பெரும் மர்மக் கதையாகவே இருந்து
வருகிறது. ரம்லத்தை அவர் திருமணம் செய்த ஸ்டைலும், அதை மறைத்து பல
ஆண்டுகளாக வாழ்ந்த விதமும் அனைவராலும் மறக்க முடியாதது.
ரம்லத்துடன் அவர் கிட்டத்தட்ட ரகசிய வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தார்.
இவர்தான் எனது மனைவி என்று அவர் வெகு காலமாகவே அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கவில்லை. காரணம், பிரபுதேவாவின் குடும்பத்தார் இந்தத் திருமணத்தை
அங்கீகரிக்கவில்லை என்பதால். இதனால் 3 குழந்தைகள் பிறந்து அவர்கள்
ஓரளவுக்குப் பெரியவர்களாக ஆன பிறகும் கூட ரகசிய வாழ்ககைதான் வாழ்ந்து
வந்தார் பிரபுதேவா.
இந்த நிலையில் பிரபுதேவா-ரம்லத்தம்பதியின் குழந்தை இறந்தபோது பெரும்
சோகமடைந்தார் பிரபுதேவா.அந்த சோகத்தில் பங்கெடுக்க வந்தவர்தான் நயனதாரா.
அப்போது அவரும் கூட சோகத்தில்தான் இருந்து வந்தார். சிம்புவிடமிருந்து
பிரிந்த சோகம். இரண்டு சோகங்களும் ஒன்று கலக்கவே, அது அவர்களுக்கு சுகமாக
தெரிந்தது- புதிய காதல் கதை பிறந்தது.
கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர் பிரபு தேவாவும்
நயன்தாராவும். இந்தக் காதலுக்காக தனது மனைவியைகடுமையாக பிடிவாதம்
பிடித்து விவாகரத்தும் செய்தார் பிரபுதேவா. தனது கணவரை தக்க வைக்க
எப்படியெல்லாமோ முயற்சித்தார் ரம்லத். ஆனால் பாவம், அந்தப் பெண்ணின்
முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கவில்லை. அவரும் கூட தனது மனதை தேற்றிக்
கொண்டு கணவரை இன்னொரு பெண்ணுக்கு தாரை வார்த்துக் கொடுக்க நேரிட்டு
விட்டது. இதனால் விவாகரத்து நடந்தது, பாகப்பிரிவினையும் நடந்து
முடிந்தது.
அதன் பிறகு நடந்த அத்தனையுமே படு சுவாரஸ்யமானவை. பிரபுதேவாவைகல்யாணம்
செய்வதற்காக மதம் மாறினார் நயனாரா. சினிமாவுக்கும் கூட முழுக்குப்
போட்டார். சிம்பு மீண்டும் ஒருமுறை தனது படத்தில் ஆட வேண்டும் என்று
வைத்த வேண்டுகோளையும் கூட நிராகரித்தார்.
தமிழில அவர் கடைசியாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்திருந்தார்.
அதேபோல தெலுங்கில், ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நடித்தார்.
இத்தனையும் செய்து விட்டு பிரபுதேவாவிடம் கல்யாணம் என்று பேச்சை
ஆரம்பித்த போதெல்லாம் அவர் பிடி கொடுக்கவே இல்லை. என்னஎன்று ஆராய்ந்து
பார்த்தபோதுதான், ரம்லத் மறறும்பிள்ளைகள் மீது இருந்த பாசத்தை
பிரபுதேவாவால் விட முடியவில்லை என்பது.
நயனதாராவுக்கு தெரியாமல் ரகசியமாக தனது பிள்ளைகளைப் பார்த்து கொஞ்சி
வந்தார் பிரபுதேவா. ரம்லத்தையும் கூட அவர் சந்தித்ததாக கூறப்படுகிறது.
இதெல்லாம் நயனதாராவுக்குத் தெரிய வர ஷாக் ஆகி விட்டார். இதனால் இடையில்
பிரபுதேவாவுடன் சண்டை போட்டு சொந்த ஊரான கேரளாவுக்குப் போய் விட்டார்.
இதையடுத்து அங்கு ஓடிய பிரபுதேவாவை வீட்டுக்குள்ளேயே நயனதாரா
சேர்க்கவில்லை. இதனால் தெருவில்நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக செய்திகள்
வெளியாகின.
இருப்பினும் இதெல்லாம் கப்சா, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, திருமண
ஏற்பாடுகள் தீவிரமாகநடந்து வருவதாக பிரபுதேவா, நயனதாரா தரப்பில்
கூறப்பட்டது.
ஆனால் தற்போது இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இருவருக்கும் இடையிலான பிளவு மிகப் பெரிதாகி விட்டதாகவும், இனிமேல் சேர
முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பிளவுக்கு நடிகை ஹன்சிகா
மோத்வானியுடன் பிரபுதேவா நெருக்கம் காட்டியதும் ஒரு முக்கியக் காரணமாக
கூறப்படுகிறது.
ஆனால் ரம்லத் மற்றும் பிள்ளைகள்மீதான பாசத்தை பிரபுதேவாவால் கைவிட
முடியாமல் தவிப்பதால்தான் நயனதாரா பிரிந்து போய் விட்டதாக கூறப்படுகிறது.
இப்போது மீண்டும் ஒரு சோகப் புள்ளியில் பிரபுதேவாவும், நயனதாராவும் வந்து
நிற்கின்றனர். இந்த சோகத்தைப் பங்கு போடப் போவது யாரோ...
comments | | Read More...

18 வயதிலேயே திருமணத்திற்கு தயாரானபோதும் இன்னமும் மாப்பிளை கிடைக்காத வருத்தத்தில் பத்மபிரியா!

நான் காதலித்து திருமணம் செய்துகொள்ள வாய்ப்பில்லை. ஆனால் நான் நிச்சயம்
திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்வேன். 18 வயதிலேயே
திருமணத்திற்கு தயாராகிவிட்டேன். ஆனால் இன்று வரை நல்ல மாப்பிள்ளை தான்
கிடைக்கவில்லை.
முதன் முதலாக என்னை பெண் பார்க்க வந்தவர் எனது வங்கிக் கணக்கில் எவ்வளவு
பணம் இருக்கிறது என்று கேட்டார். அடுத்து வந்தவர் தனது 2
குழந்தைகளுக்கும் தாயாக இருக்க வேண்டும் என்றார். அதனால் அவர்கள்
இருவரையும் நிராகரித்துவிட்டேன்.
திருமணம் என்பது ஒரு அற்புதமான வரம். திருமணம் செய்து அதை
அனுபவிக்காவிட்டால் பெண்ணாய் பிறந்து என்ன பயன் என்றார்.
எம்.பி.ஏ. படித்திருக்கும் பத்மபிரியா தற்போது நியூயார்க்
பல்கலைக்கழகத்தில் பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன் படிக்கவிருக்கிறார் என்பது
குறிப்பிடத்தக்கது. அவருக்கு 50வயது வரை நடிக்க ஆசை உள்ளதாம்.
comments | | Read More...

சூப்பர் ஸ்டாரை தெரியாதவர்கள் இருக்கலாம் ஆனால் பவர் ஸ்டாரை தெரியாதவர்கள் இருக்க முடியாது

லத்திகா என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, தமிழ்த் திரையுலகுக்குப்
பெருமை சேர்க்கக் கூடிய, வரலாற்றுக் காவியத்தைப் படைத்து அதை
ரசிகர்களுக்காக நல்லமுறையில் சமைத்து, படையலிட்டு தொடர்ந்து அதை ஓட்டிக்
கொண்டிருக்கும் உலகசாதனையாளர்தான் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன். தற்போது
ஆனந்த்த தொல்லை உள்பட ஏகப்பட்ட படங்களைக ஏக காலத்தி்ல தயாரித்து
பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் பவர் ஸ்டார். அதிலெல்லாம் அவருக்கு
அட்டகாசமான வேடங்களாம்- அதை அவரே அவரது வாயால் சொல்லிக்
கொண்டிருக்கிறார்.
கடந்த சில நாட்களாக ஒரு புகைப்படத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஒரே
சந்தோஷமாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம் நம்ம பவர் ஸ்டார். (பவர் ஸ்டார்
யார் என்று தெரியாதவர்கள், தமிழ்த் திரையுலக ரசிகர்களாகவே இருக்க
லாயக்கற்றவர்கள்!. காரணம், அந்தளவுக்கு எந்த ஒரு ஸ்டாரும் கொடுக்காத மகா
மெகா ஜிகா சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே நடிகரும், கடைசி நடிகரும்
இவர்தான்!!)
அந்தப் போட்டோவை காட்டுங்க பவர்ஸ்டார் என்று வேண்டி விரும்பிக்கேட்டுக்
கொண்டால் வெட்கப் புன்னகையுடன் எடுத்துக் காட்டுகிறார். அதில் உலக நாயகன்
கமல்ஹாசனுடன் பளீர் சிரிப்புடன், அடக்கம் ஒடுக்கமாகஅருள் பாலிக்கிறார்
நம்ம பவர் ஸ்டார். எங்கங்க இதைப் புடிச்சீங்க, மெரீனா பீச் பக்கமா!!
என்று கேட்டால் டென்ஷனாகி விடுகிறார்.
சமீபத்தில் நாரதகான சபாவில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மகள் நடன
நிகழ்ச்சிநடந்ததல்லவா. அதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அந்த
நிகழ்ச்சியில் நம்ம பவர் ஸ்டாரும் பங்கேற்று ஒரு ஓரமாக உட்கார்ந்து
நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்துள்ளார். பின்னர் கமல்ஹாசன் நிகழ்ச்சி
முடிந்து விட்டுக் கிளம்பியபோது, வேகமாக ஓடிச் சென்று தன்னை
அறிமுகப்படுத்திக் கொண்டு போய் ஒரு ஸ்டில் எடுத்து விட்டாராம்.
அந்தப் புகைப்படத்தைத்தான் தற்போது பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறாம் நம்ம
பவர் ஸ்டார். இந்தப் புகைப்படம் எனது வாழ்க்கையின் மிகப் பெரிய விஷயம்
என்று புளகாங்கிதத்தோடு கூறி வருகிறார் பவர் ஸ்டார்.
comments | | Read More...

நண்பன்

மஹாராஷ்டிரா சேட்டு ஃபிகரை, மைலாப்பூர் மாட்டுப் பெண்ணாக்கியிருக்கிறார்
ஷங்கர். அப்படியொரு கனக்கச்சிதமான ஃபிட்டிங்! ஜெயம்ராஜா போன்ற 'ரீமேக்
வைத்தியர்களுக்கு' மட்டுமே சாத்தியப்பட்ட இந்த கலையில் ஷங்கரும்
டாக்டரேட் வாங்கியிருக்கிறார் என்பதுதான்'நண்பன்' வட்டாரத்தின்
நற்செய்தி. ஒரிஜனலான த்ரி இடியட்ஸ்சை நம்மில் பலரும் பார்த்து
தொலைத்ததால் வந்த விளைவுதான் இந்த ஒப்பீடு. இல்லையென்றால் அதற்கும்
அவசியம் இல்லையே!
பத்தாம்ப்பு பாஸ் பண்ணுவதற்கு பாண்டிச்சேரி கல்வி மந்திரி என்னவெல்லாம்
பாடு பட்டு, எப்படியெல்லாம் கம்பி எண்ணினார் என்பதை படம் முடிந்துவெளியே
வரும்போது மீண்டும் நினைவு கூர வைக்கிறார் ஷங்கர். படமும் இக்கால கல்வி
முறை குறித்து நிறைய கேள்வி எழுப்புகிறது. (ஷங்கரின் ஊறுகாய், எந்த
காலத்தில் சப்பென்று இருந்ததாம்?)
நண்பன் விஜய்யை தேடி கல்லு£ரியின் பழைய நண்பர்களான ஜீவா, ஸ்ரீகாந்த்,
சத்யன் மூவரும் போகிறார்கள். கூடவே விஜய்யின் காதலி இலியானாவும் ஒட்டிக்
கொள்கிறார். அவரது முகவரியில் போய் பார்த்தால் அங்கு விஜய் பெயரில்
இருப்பது எஸ்.ஜே.சூர்யா. இவருக்காக அவர் பரீட்சை எழுதியிருக்கிறார்
என்பதும், பணக்கார சூர்யாவுடைய வேலைக்காரர் மகன்தான் விஜய் என்பதும்
தெரியவர, விஜய்யை தேடுகிறது நண்பன் வட்டாரம். அவர் என்னவானார் என்பதுதான்
முடிவு.
ஒரு மரத்தையே பிடுங்கி அடிக்கும் மாஸ் ஹீரோக்கள், இதுபோன்ற யதார்த்த
படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வதே பெரிய ஆச்சர்யம். அதிலும் பஞ்ச் டயலாக்
இல்லாத விஜய் எந்த இடத்திலும் நம்மை அலுக்க விடவில்லை. கதை மேலிருக்கும்
இவரது நம்பிக்கைக்கு முதல் சபாஷ். இந்த படத்திற்கு பிறகு விஜய்யை
பிடிக்காதவர்களுக்கும்அவர் மீது ஒரு ஈர்ப்பு வரும்.
'மச்சி, ஒரு குவார்ட்டர் சொல்லேன்' என்கிற பார்வையோடு ஜீவாவை பார்க்க
வருகிற ரசிகர்களுக்கு அதிர்ச்சி நிச்சயம். டோட்டலாக
மாற்றியிருக்கிறார்கள் இவரை. ஸ்ரீகாந்துக்கு மீண்டும் ஒரு ஏறுமுகத்தை
தரப்போகிற படமாக கருதலாம். ஷங்கர் கொடுத்த இந்த வாய்ப்பை தவற விடாமல்
பிடித்துக் கொண்டிருக்கிறார் அவரும்.
முரட்டு வாத்தியாராக வருகிற சத்யராஜ் மாணவர்களை படுத்துகிற சம்பவங்களும்,
போடுகிற தில்லாலங்கடி ரூட்டுகளும் அதிர்ச்சி ரகம். இதற்குப்பின் இதுபோன்ற
பல நு£று வாத்தியார்களை 'நண்பன்' திருத்தினாலும் ஆச்சர்யமில்லை.
நடிகைகளை பிடித்தாட்டும் 'ஒல்லிமேனியா' இலியானாவையும் விட்டு
வைக்கவில்லை. ஐயோ பாவம் விஜய். டூயட் காட்சிகளில் இலியானாவின் எலும்பு
இவரை குத்தாமல் விட்டிருக்காது.
நண்பனின் ஆகப்பெரிய பலம் மதன் கார்க்கியின் வசனங்களே. 'ஏ.ஆர்.ரகுமானோட
அப்பா அவரை கிரிக்கெட் கத்துக்க சொல்லி கட்டாயப்படுத்தி,... டென்டுல்கரோட
அப்பா அவரை மியூசிக் டைரக்டரா ஆகச்சொல்லி கட்டாயப்படுத்தி இருந்தா என்ன
ஆகியிருக்கும்...?' இதுபோல படம் நெடுக கொட்டிக் கிடக்கின்றன வைரஊசிகள்.
பட்டத்து யானையை பர்மா பஜாரில் திரியவிட்ட கதையாக அவ்வப்போது சில
படங்களில் மாட்டிக் கொள்ளும் ஹாரிசுக்கு, இந்த படம் அரண்மனை பூந்தோட்டம்.
பின்னணி இசைதான் யானை புகுந்த வாழைக் கொல்லையாகியிருக்கிறது.
படம் முழுக்க ஜட்டியை காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள், யாராவது,
யாரிடமாவது! பேசாமல் 'டேன்டக்ஸ்' கம்பெனியிடம் பிராண்டிங்
வாங்கியிருந்தால், பட்ஜெட்டில் பாதியை ரிலீசுக்கு முன்பே
கைப்பற்றியிருக்கலாம்.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு நம்மையும் திரைக்குள் இழுத்துக் கொள்கிறது.
தமிழ்சினிமாவின் மிகப்பெரிய 'குக்'கெல்லாம் சேர்ந்து சமைத்த இனிப்பு.
ருசிக்காமல் இருக்குமா? நண்பன்- மனசுக்கு பக்கத்தில்!
comments | | Read More...

இதெல்லாம் ஒரு பொழப்பு - கிரிகெட் ஜோக்..!

"என்னப்பா ராகுல் டிராவிட் அங்கேயிருந்து மறுபடியும் PAD கேக்கறார்,
அதான் கட்டிட்டு போனாரே?
அவர் ஒருவேளை ஸ்டம்ப்களுக்கு கேக்கறாரோ என்னவோ?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
"யாரும் ஓய்வு பெற வேண்டியத் தேவையில்லை - சேவாக்"
என்னப்பா இவ்வளவு நடந்திருக்கு யாரும் ரிட்டையர் ஆக வேண்டாம்னுசொல்றாரு?
அவங்கள்லாம் ஏதாவதொரு கம்பெனில வேல பாத்திட்டுருப்பாங்கள்ல அதுலேர்ந்து
ரிட்டையர் ஆயிட வேண்டாம்னு சொல்லியிருப்பார் போல.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
"நாங்களும் இந்தியாவில் 2- 0 என்று வெற்றி பெற்றோம்- சேவாக்"
"அவர் தூக்கத்துல பொலம்பினத அப்படியே போட்டிருக்காங்க! இப்பல்லாம் மீடியா
ரொம்ப முன்னேறிடுச்சு சேவாக் தூங்கும் போது கூட மைக்கை வாய் கிட்ட
வைக்கிறாங்க!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
" இந்திய மூத்த வீரர்கள் மீண்டும் எழுச்சியுறுவார்கள் - மைக்கேல் கிளார்க் "
என்ன கொழுப்பு பார்த்தியா இவருக்கு! அடுத்த தடவை இந்தியாவுக்கும் வந்து
நம்மள உதை கொடுக்க இப்பவே திட்டம் போடறாரு போல"
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நிருபர்கள்: என்ன ஸ்ரீகாந்த் சார் 8 மேட்ச் உதை வாங்கியிருக்கோமே உங்களோட
கருத்து என்ன?
ஸ்ரீகாந்த்: ஒண்ணும் பெரிசா நடந்துடல! உங்க எல்லாரோட ஒத்துழைப்பும் தேவை.
அவங்க நல்ல விளையாடினாங்க நாம அத ஒத்துக்கணும்! எப்பவுமே நம்ம பசங்க
வெளிநாடுன்னா ஊத்திக்குவாங்க! அதனாலதான் அடுத்த 2 வருஷத்துக்கு ஃபாரின்
டூரே இல்லைன்னு ஐ.சி.சி. சொல்லிடுச்சு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
comments | | Read More...

நர்சிங் மாணவியுடன் உல்லாசமாக இருந்த அரசு டாக்டர் டிஸ்மிஸ்

மராட்டிய மாநிலம், பீட் மாவட்ட அரசு சிவில் மருத்துவமனையில் மருத்துவ
அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் டாக்டர் சச்சின் தேஷ்முக். அதே
பகுதியில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில் படித்து வந்தவர் மாணவி ஸ்வப்னா
(வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர்கள் இருவரும் பீட்டில் உள்ளதனியார் லாட்ஜ் ஒன்றில் இரவில் தங்கி
உல்லாசமாக இருந்தனர்.
போலீஸ் நடத்திய திடீர் சோதனையில் இவர்கள் இருவரும் கைது ஆனார்கள்.
இதற்கிடையே செக்ஸ் ஊழலில் சிக்கியுள்ள டாக்டர் சச்சினை டிஸ்மிஸ் செய்து
விட்டதாக மாவட்ட சிவில் மருத்துவ அதிகாரிடாக்டர் கவுரி ரத்தோட்
அறிவித்தார். மேலும் அந்த நர்சிங் மாணவியும் கல்லூரியில் இருந்து
தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger