News Update :
Powered by Blogger.

இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும்! தா.பாண்டியன் மீது கலைஞர் பாய்ச்சல்!

Penulis : karthik on Thursday 7 June 2012 | 21:01

Thursday 7 June 2012


அதிமுகவை திருப்தி செய்ய வேண்டும் என்பதற்காக திமுக மீது தேவையில்லாமல் குறை சொல்வதை தா.பாண்டியன் இனியாவது நிறுத்திக் கொள்ளட� ��டும் என்று திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் வெளியிடுட்டுள்ள அறிக்கையில்,

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரனின் மரணத்தின் காரணமாகவே அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. அப்போது தோழமைக் கட்சியாக போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட்டுக்குத்தான் அரசியல் நாகரீகப்படி அத் தொகுதியில் போட்டியிட அதிமுக வாய்ப்பளித்திருக்க வேண்டும்.

ஆனால் அதிமுக தோழமைக் கட்சிகளையெல்லாம் தூசுக்கு கூட மதிப்பதில்லை. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவரை பொது வேட்பாளராக கருதி ஆதரிக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறியும் அதை அவர்கள் ஏற்கவில்லை.

அந்த அளவிற்கு சுயமரியாதையை பெருந்தன்மையோடு ஆளும் கட்சிக்கு விட்டுக்கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியனும், நல்லக் கண்ணுவும் மரியாதை நிமித்தமாக ஜெயலலி தாவை சந்தித்துப் பேசியுள்ளனர். புதுக்கோட்டை தொகுதியில் வெற்றிù பற்று துர்மரணம் அடைந்த முத்துக்குமரனின் மனைவி, குழந்தைகளையும் சந்திக்க வைத்திருக்கின்றனர்.

இதெல்லாம் அவர்கள் கட்சிப் பிரச்சனை. ஆனால் தா.பாண்டியன் தேவையில்லாமல் ஈழத் தமிழர் சாவோடு என்னைத் தொடர்பு படுத்து ஏன் பேச வேண்டும்? (ஈழத் தமிழருக்கு திமுக செய்துள்ள செய� �்களை எல்லாம் பட்டியலிட்டுள்ளார்).

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் போது, அதைத்தடுத்து நிறுத்த திமுக மேற்கொண்ட முயற்சிகளால் பிரதமர் மன்மோகன் சிங், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் போன்றவர்கள் ராஜபக்சேவிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார்கள். திமுகவின் அழுத்தத்தின் விளைவாக ராஜபக்சே அரசு 48 மணி நேர போர் நிறுத்தம் அறிவித்தது.

இதையெல்லாம் மறந்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக ஒப்புக்கொண்டுள்ளதாக பத்திரிகை ஒன்று  செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அதிமுகவை திருப்தி செய்ய வேண்டுமென்பதற்காகவே திமுக மீது தேவையில்லாமல் குறை சொல்வதை தா.பாண்டியன் இனியாவது நிறுத்திக் கொள ்ளட்டும். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.


http://tamil-cinema1.blogspot.com
comments | | Read More...

பொன்சேகா, சேனக ஹரப்பிரியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Thursday, June 07, 2012
இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் அவரின் செயலாளரான ஓய்வுபெற்ற கெப்டன் சேனக ஹரப்பிரிய டி சில்வா ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைப்பத� �்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கின் இரண்டாம் பிரதிவாதியான சேனக ஹரப்பிரிய டி சில்வா இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் நீதிமன்றம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

சுகயீனம் காரணமாக தமது கட்சிக்காரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி உபுல் ஜயசூரிய குறிப்பிட்ட� �ர்.

இராணுவத்தை விட்டுச்சென்றவர்களுக்கு அடைக்கலம் வழங்கியமை, அரசாங்கத்தின் மீதான அவர்களின் விசுவாசத்தை சீர் குலைப்பதற்கு சதிசெய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சரத் பொன்சேகா மற்றும் சேனக ஹரப்பிரிய டி சில்வா ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை நீதிமன்றத்தில் ஆஜராகி, வாக்குமூலம் அளிக்குமாறு இந்த வழக்கின் முதலாவதும் , மூன்றாவதும் சாட்சியாளர்களுக்கு அறிவித்தல் விடுக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார்.
http://naamnanbargal.blogspot.com
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger