News Update :
Powered by Blogger.

இளவரசன் திவ்யாவுக்கு எழுதிய உருக்கமான கடிதம்

Penulis : Tamil on Monday 8 July 2013 | 02:47

Monday 8 July 2013

தர்மபுரியில் ரெயில்வே தண்டவாளம் அருகே கடந்த 4–ந் தேதி காதல் கலப்பு திருமணம் செய்த கல்லூரி மாணவர் இளவரசன் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டார் என்று அவரது தந்தை இளங்கோ, தாயார் கிருஷ்ணவேணி, மற்றும் அவரது வக்கீல் ரஜினிகாந்த், விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தினர் ஆகியோர் கூறி வந்தனர். அவரது மரணம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்த சூழ்நிலையில் இந்த வழக்கில் நேற்று இரவு திடீர் திருப்பம் ஏற்பட்டது.
அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இளவரசன் இறப்பதற்கு முன்பு எழுதிய 4 பக்க கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தை அவரது உறவினர் ஒருவரிடம் இருந்து போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தை இளவரசன் தனது பெற்றோருக்கும், காதல் மனைவி திவ்யாவுக்கும் எழுதி இருந்தார். அதில் இரண்டு பகுதியாக கடிதம் எழுதப்பட்டு இருந்தது. ஒரு பகுதி திவ்யாவுக்கும், இன்னொரு பகுதி தந்தை இளங்கோவுக்கும் எழுதப்பட்டு இருந்தது.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger