News Update :
Powered by Blogger.

மெருகேறிய அஜீத் !

Penulis : karthik on Tuesday 20 December 2011 | 23:17

Tuesday 20 December 2011

 
 
 
அஜித், பார்வதி ஒமணக்குட்டன் நடிப்பில் தயாராகும் படம் ' பில்லா-2'. சக்ரி டொலெட்டி இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை இந்துஜா குழுமத்தின் IN Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.
 
இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. 'பில்லா' மற்றும் 'மங்காத்தா' படத்திற்கு கிடைத்த வரவேற்பால், இப்படத்திற்கு அஜித் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
 
'பில்லா-2' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடித்து படக்குழு ஊர் திரும்பிவிட்டது. இறுதிக் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. அங்கு பனிமலையில் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.
 
இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள ராஜசேகர் " அஜித்துடன் நான் 'ரெட்' படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். மிக நல்ல மனிதர். அப்போது எப்படி பழகினாரோ இப்போதும் அப்படியே தான் பழகுகிறார். நடிப்பைப் பொருத்தவரை 'ரெட்' படத்தை விட இப்போது நன்றாக மெருகேறி இருக்கிறார். இப்படத்தின் மொத்த காட்சிகளையும் சக்ரி முன்னரே தெளிவாக, தயாராக வைத்திருந்ததால், பட படப்பிடிப்பு வேலைகள் எளிதாக சீக்கிரம் முடிந்தது. " என்று கூறியுள்ளார்.
 
படத்தின் படத்தொகுப்பு மற்றும் பிற பணிகள் முடித்து, பொங்கலுக்கு டிரெய்லர் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். 'பில்லா-2' 2012 கோடை விடுமுறையின் போது வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



comments | | Read More...

நீங்கள் யாருடைய ரசிகன் / ரசிகை ?

நீங்கள் யாருடைய ரசிகன் / ரசிகை  ?
Please Vote in the Below Link

Vote for Favourite Actor நீங்கள் யாருடைய ரசிகன் / ரசிகை ?
comments | | Read More...

விபத்தில் முன்னாள் மந்திரி மகன் உள்பட 3 பேர் பலி

 
 
ஆந்திரா மாநில முன்னாள் மந்திரி கோமத்ரெட்டி வெங்கட் ரெட்டி. தனி தெலுங்கானா மாநிலத்துக்காக மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர். தற்போது எம்.எல்.ஏ.வாக மட்டும் உள்ளார்.
 
இவரது மகன் பிரதீக் ரெட்டி. தனது நண்பர்கள் சுனீத்ரெட்டி, சந்திரா ரெட்டி, அரவ ரெட்டி ஆகியோருடன் இன்று ஒரு காரில் சென்றார். ஐதராபாத் நகர வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் கூட்டமாக வந்த ஆட்டு மந்தை மீது மோதாமல் இருக்க பிரதீக் ரெட்டி காரை திருப்பினார்.
 
அப்போது கார் நிலைதடுமாறி, சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அரவ ரெட்டி தவிர மற்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்



comments | | Read More...

கார்டன் அதிரடிக்கு காரணம் குஜராத் சியெம் மோடியாம்...ஒரு பகீர் ரிப்போர்ட்.

 
 
 
 
 
சியெம்மின் அதிரடிக்கு காரணம், குஜராத் சியெம் மோடி என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பலமாக ஒலிக்க துவங்கியுள்ளது. நம்ம சியெம்முக்கு மருத்துவ உதவிக்காக மோடி அனுப்பிய நர்ஸ், கார்டன்ல நடக்கிற விஷயத்தை மோடி தரப்புக்கு கொண்டு போயிட்டாராம்... இதனால, சியெம்முக்கு மோடி அட்வைஸ் பண்ணினாராம்...
 
 
அதுல சுதாரிச்சுக்கிட்டவங்க, எல்லாருக்கும் கல்தா கொடுக்க, வாய்ப்பை எதிர்பார்த்திட்டு இருந்தாராம்... வாய்ப்பு கிடைச்சதுமே கழற்றி விட்டுட்டார்னு கார்டனுக்கு நெருக்கமானவங்க, பேச ஆரம்பிச்சிருக்காங்களாம்... சியெம்மோட அண்ணன் மகள்தான், இப்போ அவருக்கு உதவியா கார்டன்ல தங்கியிருக்காராம்.
 
இந்த நடவடிக்கையால, அரசு லாயர்ஸ் ஒரு பகுதியினர் ஆடிப்போயி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் சசிகலா ரெகமண்ட்ல வந்தவங்களாம். உயிர் தோழி நீக்கப்பட்ட விஷயம் தெரிஞ்சதும் சில வக்கீல்கள் ராஜினாமா செய்யற முடிவுக்குக் கூட வந்துட்டாங்களாம்... கலங்கிப் போனவங்க லிஸ்ட்ல சில அமைச்சர்களும், பல அரசு வக்கீல்களும்தான் முன்னணி இடத்துல இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
முதல்வர் ஜெயலலிதாவை சுத்தி இருந்த மன்னார்குடி கூட்டம் துரத்தப்பட்டதால் இனி அடிக்கடி எந்த மாற்றமும் நடக்காது என்று கட்சிக்காரங்க நம்புறாங்களாம்...' 'கட்சி வேலைகளை ஒழுங்கா செய்யலாம்... காங்கிரீட்டான நம்பிக்கையில பொறுப்பை வகிக்கலாம்'னு முக்கிய நிர்வாகிகள் பேசிக்கிறாங்களாம்... இந்த அதிரடி நீக்கத்தால ரொம்ப சந்தோசமானது சியெம் குடும்பம்தானாம்...
 
அப்படி என்றால் தோழி ஆட்சி போயி இன்னும் ஜெ.யின் குடும்ப ஆட்சி ஆரம்பமாக போகுதோ...! இன்னும் தமிழக மக்கள் இதுவரை தெரியாத முதல்வர் ஜெயலலிதாவின் பல உறவுகளை, சொந்தங்களை தெரிந்து கொள்ளலாம்...!! என்ன தவம் செய்தாயோ தமிழா...!!! நீ விலக நினைத்தாலும் உறவுகள்...சொந்தங்கள்...(குடும்ப ஆட்சி) உன்னை விலக மறுக்கிறதே...!!!!



comments | | Read More...

ஏன் இந்த கொல வெறி?

 
 
 
'வொய் திஸ் கொல வெறி' என்ற ஒரே பாடலின் மூலம் பிரபலத்தின் உச்சம் தொட்டிருக்கும் அறிமுக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். அமிதாப் பச்சன், ஆனந்த் மஹிந்திரா தொடங்கி சர்வதேசப் பிரபலங்கள் வரை பலரும் இந்தப் பாட்டுக்குப் பாராட்டுத் தெரிவிக்க, இணையத்தில் காட்டுத் தீயாகப் பற்றி எரிகிறது பாடல்.
அனிருத்துக்கு வயசு 21. ஆளே ஜீன்ஸ் மாட்டிய கிடார் மாதிரிதான் இருக்கிறார். செம குறும்புப் பையன் என்பது பேசும்போது புரிகிறது. ஜஸ்ட் லைக் தட் ஜெனரேஷன்!
''ம்ம்ம்... என் அம்மாகிட்ட கேட்டா, மூணு வயசுலயே ஏதாவது பாட்டு கேட்டா பொம்மை கீ-போர்டில் நானே டியூன் போடுவேன்னு சொல்வாங்க. நாலு வயசுலயே பியானோ கத்துக்கிட்டேனாம். சென்னையில் டிரினிட்டி காலேஜ் ஆஃப் லண்டன் நடத்தும் இசைத் தேர்வுகளில் எல்லா கிரேடும் முடிச்சிட்டேன். பத்ம சேஷாத்ரியில் படிச்சப்போ, கர்னாடிக் மியூஸிக் கத்துக்கிட்டேன். லயோலா கல்லூரியில் பி.காம். படிச்சப்ப, ராக் பேண் டில் இருந்தேன். அதனால், 20 வயசுக்குள்ளேயே ஒரு மாதிரி எல்லாவிதமான இசையிலும் நல்ல அனுபவங்கள் கிடைச்சது. சன் டி.வி. நடத்திய 'ஊலல்லா' மியூஸிக் ஷோவில் ஏ.ஆர்.ரஹ்மான் சார் கையால் 'சிறந்த இசையமைப்பாளர்' விருது வாங்கினேன். அதுதான் செம ஓப்பனிங். ஐஸ்வர்யா மேடத்தோட மாமா பையன் நான். காலேஜ் சமயமே ஐஸ்வர்யா மேடம் எடுத்த 12 குறும்படங்களுக்கும் நான்தான் மியூஸிக் பண்ணேன். அந்த நம்பிக்கையில்தான் '3' படத்துக்கு என்னை மியூஸிக் பண்ணச் சொல்லிட்டாங்க!''
 
''ஓ.கே. மேக்கிங் ஆஃப் 'வொய் திஸ் கொல வெறி' சொல்லுங்க?''

''அது வந்து... காதல் தோல்வியில் ஒரு பையன் புலம்புறதுதான் சிச்சுவேஷன்னு ஐஸ்வர்யா மேடம் சொன் னாங்க. 100 பசங்கள்ல 90 பசங்க இதை அனுபவிச்சு இருப்போம். ரெண்டு, மூணு நிமிஷத்துக்குள்ளேயே மனசுக்குள்ள ஒரு டியூன் ஓட ஆரம்பிச்சது... சும்மா அப்ப டியே கீ-போர்டில் வாசிச்சேன். ஐஸ்வர்யா மேடத்துக்கு அது ரொம்பப் பிடிச்சுப் போச்சு. உடனே, தனுஷ் சாருக்கு போன்ல சொல்லவும்... அவர் 10 நிமிஷத்துல ஸ்டுடியோ வந்துட்டார். டியூனைக் கேட்டுட்டு, 'வொய் திஸ் கொல வெறிடி'னு பாட ஆரம்பிச்சார். தமிழும் இங்கிலீஷ§ம் கலந்து சிம்பிள் அண்ட் ஸ்வீட்டா இருந்தது. உடனே, வரிகளை அப்படியே டெவலப் பண்ணச் சொன்னோம். 'லவ்வு லவ்வு ஓ மை லவ்வு'னு ஆரம்பிச்சு கடைசி யில 'ஃப்ளாப் ஸாங்'னு முழுப் பாட்டையும் 25 நிமிஷத்துக்குள் முடிச்சிட்டோம். ஜஸ்ட் லைக் தட் பாட ஆரம்பிச்சதால், இப்போ வரை இந்தப் பாட்டுக்குனு லிரிக்ஸ் ஷீட்னு ஒண்ணு இல்லவே இல்லை!''


''அது என்ன சூப் ஸாங்?''

''லவ்ல மொக்கை வாங்கின பசங்களுக்கு ஏதாவது பேர் வைக்கலாம்னு யோசிச்சப்ப, 'சூப் பாய்ஸ்'னு தனுஷ் சார் வெச்ச பேர் அது!''

''தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் யாராவது பாராட்டினாங்களா?''
''இல்லை... இதுவரை இல்லை!''

''உங்க ரோல் மாடல் யார்?''

''நைன்டீஸ் ஜெனரேஷன் என்பதால், ஏ.ஆர்.ரஹ்மான் சார்தான் என் ரோல் மாடல். இளையராஜா சார் மியூஸிக்கும் ரொம்பப் பிடிக்கும்!''
''முதல் பாட்டே செம ஹிட். மத்த பாடல்களுக்கு இந்த எதிர்பார்ப்பே நெகட்டிவ்வா இருக்குமே...''

''அந்தப் பதற்றம் கொஞ்சம் இருக்குதான். ஆனா, 'கொல வெறி' மாதிரி இன்னொரு பாட்டு '3' படத்தில் இல்லை. அதனால், நிச்சயம் எல்லாப் பாடல்களுமே ஹிட் ஆகும். படத்தில் அஞ்சு பாடல்களை தனுஷ் எழுதியிருக்கார். ஒரு பாட்டு ஐஸ்வர்யா எழுதி இருக்காங்க. எப்பவும் ஃபாஸ்ட் நம்பர்ஸ் மட்டுமே பாடிட்டு இருந்த ஸ்ருதி மேடம், இதில் ஒரு ஸ்லோ டியூன் பாடி இருக்காங்க. நான் ஒரு பாட்டு பாடி இருக் கேன். டூயட், கிளப் ஸாங், குத்துனு எல்லாப் பாட்டுமே வேற வேற ஸ்டைல். '3' படத்தின் மியூஸிக் தமிழ் மியூஸிக்ல இது வரைக்கும் வராதவை. அது வொர்க்-அவுட் ஆனா, பயங்கர ஹிட் ஆகும். எனக்குனு ஒரு தனி இடம் கிடைக்கும்!''

நன்றி - விகடன்


 


comments | | Read More...

மெருகேறிய அஜீத் !

 
 
அஜித், பார்வதி ஒமணக்குட்டன் நடிப்பில் தயாராகும் படம் ' பில்லா-2'. சக்ரி டொலெட்டி இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை இந்துஜா குழுமத்தின் IN Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.
 
இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. 'பில்லா' மற்றும் 'மங்காத்தா' படத்திற்கு கிடைத்த வரவேற்பால், இப்படத்திற்கு அஜித் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
 
'பில்லா-2' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடித்து படக்குழு ஊர் திரும்பிவிட்டது. இறுதிக் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. அங்கு பனிமலையில் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.
 
இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள ராஜசேகர் " அஜித்துடன் நான் 'ரெட்' படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். மிக நல்ல மனிதர். அப்போது எப்படி பழகினாரோ இப்போதும் அப்படியே தான் பழகுகிறார். நடிப்பைப் பொருத்தவரை 'ரெட்' படத்தை விட இப்போது நன்றாக மெருகேறி இருக்கிறார். இப்படத்தின் மொத்த காட்சிகளையும் சக்ரி முன்னரே தெளிவாக, தயாராக வைத்திருந்ததால், பட படப்பிடிப்பு வேலைகள் எளிதாக சீக்கிரம் முடிந்தது. " என்று கூறியுள்ளார்.
 
படத்தின் படத்தொகுப்பு மற்றும் பிற பணிகள் முடித்து, பொங்கலுக்கு டிரெய்லர் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். 'பில்லா-2' 2012 கோடை விடுமுறையின் போது வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



comments | | Read More...

வடிவேலு சொன்ன குட்டி கதை !

 


மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது பிரச்சினை வரத்தான் செய்யும். பிரச்சினை இல்லாத மனிதன் யாராவது உண்டா? உங்களை எல்லாம் சிரிக்க வைக்கும் எனக்கு சில பிரச்சினைகள் இருக்கு. எந்த நேரமும் சிரிச்சுக்கிட்டே இருந்தா சரியாகுமா? சில நேரம் பிரச்சினையும் வரத்தான் செய்யும். அப்படித்தான் எனக்கும் பிரச்சினை வந்துள்ளது. எனக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வரவில்லை என்று செய்தி வெளியிடுகிறார்கள். நிறைய வாய்ப்புகள் இப்பவும் வரத்தான் செய்கிறது. நான்தான் அந்த வாய்ப்புகளை மறுத்து வருகிறேன்.
அவர் சொன்ன குட்டி கதை கீழே...

ஒருத்தர் மருத்துவர்கிட்ட போய், ஐயா எனக்கு தூக்கம் வரல. ரொம்ப மன உளச்சலா இருக்கு மருந்து கொடுங்கன்னு கேட்டாராம். அதுக்கு மருத்துவரோ, சனி, ஞாயிற்றுக்கிழமைன்னா எனக்கும் அப்படித்தான் வருது. இன்னிக்கு சனிக்கிழமை, அதனால நீங்க போயிட்டு திங்கட்கிழமை வாங்க. உங்களுக்கு வைத்தியம் பார்க்கிறேன்னு சொன்னாராம்.

அவரோ, ஐயா எனக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைலதான் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். மற்ற நாட்களில் எனக்கு வேலை அதிகம். எனக்கு இன்னிக்கு ஏதாவது வைத்தியம் பாருங்கண்ணு சொன்னாராம்.

சிறிது நேரம் யோசிச்ச மருத்துவர் ஐயா, நான் சனி, ஞாயிற்றுக்கிழமைகள்ல தூக்கம் வராம மன உளைச்சலில் அவதிப்படுகிறதால பக்கத்தில் வாராவாரம் நடக்கிற 'பபுன்' நிகழ்ச்சிக்கு போயி மனம் விட்டு சிரிச்சிட்டு வந்துடுவேன். அப்பத்தான் நிம்மதியாக தூங்க முடியும். இந்த வாரமும் அந்த நிகழ்ச்சிக்குத்தான் கிளம்பிட்டு இருக்கிறேன். எனக்கும், எனது மனைவிக்கும் நுழைவு சீட்டு வாங்கி இருக்கேன். வேணும்னா இன்னிக்கு மனைவியை விட்டு விடுகிறேன். உங்களுக்கு ஒரு சீட்டை தருகிறேன். வாங்க அந்த 'பபுன்' பார்த்துட்டு வந்தாலே கவலை எல்லாம் பறந்து போயிடும்னு சொன்னாராம்.

அப்போ இடைமறித்த அவரோ, ஐயா நான் தாங்க அந்த 'பபுன்' என்றாராம். மருத்துவர் அதிர்ந்து போய் பார்த்தாராம். அந்த 'பபுன்' நிலைதாங்க என்னோட நிலையும் என்றார் வடிவேலு.
பாவம் யாரு பெத்த புள்ளையோ தனியா புலம்பிகிட்டு இருக்கு :-)

comments | | Read More...

சென்னை திரைபடவிழா - A Separation

 


அந்த தாத்தாவிற்கு எப்போதும் வீட்டில் ஒரு மரியாதை உண்டு. டைட்டில் போட்டு முடிக்கும் போது அவர் இறந்து விட குடும்பத்தில் கடுமையான குழப்பம் ஏற்படுகிறது. அந்த வீட்டில் இருக்கும் ஹீரோயின் கடுமையாக பாதிக்கப்படுகிறார். அப்போது இவருக்கு துணையாக ஒரு பெண்மணி தோழியாக படத்தில் நுழைகிறார்.


இந்த இடத்தில் இசையோடு வரும் "நீங்கள் நல்லா இருக்கோணும் நாடு முன்னேற..." என்ற பாட்டு தாளம் போட வைக்கிறது.

கொலைவெறியுடன் அடித்துக் கொண்ட குடும்பமும் கொஞ்ச நாளில் முன்பு போல ஒன்று சேர, குடும்பத்தில் தோழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறர் ஹீரோயின். இதனால் குடும்பத்தில் உள்ள சின்ன பசங்க கடும் கோபத்தில் இருக்க அதை எல்லாம் கவலை படாமல் ஹீரோயின் தோழியுடன் இருக்க பலர் விமர்சிக்கவும், கிண்டலுக்கும் பயப்படாமல் தன்னுடைய பிடிவாதத்தைக் காட்டுகிறார். கோவில் கோர்ட் குளம் என்று எங்கே போனாலும் சின்ன பசங்களை விட்டுவிட்டு தோழியுடனேயே போகிறார்.

ஒரு கட்சியில் பிடிவாதத்தைக் காட்டுவதற்கு தோழியின் உறவினரை தன்னுடைய பிள்ளையாகப் பாவித்துத் தத்து எடுக்கிறார். இந்த இடத்தில் இந்த தீடீர் திருப்பம் யாரும் எதிர்பார்க்காத போது வைத்தது இயக்குனரின் சாமர்த்தியம். இந்த திருமணத்தை காட்டியவிதம் பலரை ஆச்சரியப்பட வைக்கிறது. ஷங்கர் படம் போல பிரமாண்டமாக இந்த திருமணத்தை எடுத்துள்ளார். திருமணத்துக்கு போடப்பட்டிருக்கும் செட் பிரமாதமாக இருக்கிறது - ஆர்ட் டைரக்டருக்கு சபாஷ்!.
விதவிதமான நகை, செருப்பு என்று கம்பியூட்டர் கிராபிக்ஸில் காண்பித்துள்ளார்கள்.

சில வருடங்களுக்குப் பிறகு சின்ன சண்டை வர சில பல சின்னப் பசங்க எல்லாம் பக்கத்துவீட்டு மஞ்சள் துண்டு தாத்தாவை சப்போர்ட் செய்ய குடும்ப சொத்து அவருக்கு போகிறது. பிறகு அந்த வீடு அலங்கோலமாகிறது. வீட்டை காண்பித்துவிட்டு அப்படியே கூவத்தை காட்டியது பல வசங்களுக்குச் சமானம்.

சில மாதங்களில் தாத்தாவின் பசங்கள் வீட்டை மூன்றாக பிரிக்க, சின்ன பசங்க விளையாடும் இடம், அவர்களுடைய பொம்மை செல்போன் ஆகியவற்றை இவர்கள் அபகரிக்க, மீண்டும் சண்டை வர குடும்பத்தில் ஹீரோயின் தலைவர் ஆகிறார். சுபம் என்று போடும் இடத்தில் இயக்குனர் யாரும் எதிர்ப்பாக்காத திருப்பதை வைக்கிறார். ஹீரோயின் தோழியை வீட்டை விட்டு விரட்டுகிறார்

குணசித்திர நடிகராக வரும் நம்பர் ஓபி சில காட்சியிலே வந்தாலும் தன் பார்த்திரம் உணர்ந்து அடக்கமாக நன்றாக நடித்துள்ளார். இவருக்கு தமிழ் திரைப்பட உலகத்தில் நல்ல எதிர்காலம் இருக்கு. டென்ஷனான வில்லன் போல எப்போதும் நட நட என்று நடக்கும் ராஜனுக்கு சரியான ரோல் கொடுக்காமல் படத்தில் அவரை வீண் செய்துள்ளார்கள்.

வீடியோ கடை வைத்திருப்பது போல ஹீரோயினுடைய தோழியை காண்பித்தது லாஜிக்கில் பெரிய ஓட்டை. இந்த காலத்தில் எல்லோரும் டவுன்லேட் செய்து தான் படம் பார்க்கிறார்கள், அப்படி இருக்க வீடியோ கடை எல்லாம் வைத்திருப்பது என்ன லாஜிக் ?

காமெடி டிராக் என்று தனியாக படத்தில் இல்லை என்றாலும், அடிக்கடி எல்லோரும் எங்கோ இருக்கும் ஒரு சிங்கிற்கு தந்தியும், கடிதமும் எழுதுவது நல்ல தமாஷ்! படம் ஆரம்பிக்கும் போது சிங் வீட்டில் இருக்கும் குப்பை தொட்டி இங்கிருந்து போகும் கடிததிற்கு பிறகு பெரிதாவதாக காண்பிப்பது வயிறு குலுங்க வைக்கிறது.

பாலிவுட் கிழவர் 6 விக்கெட் எடுத்தால் கோலிவுட் அம்மா 12 விக்கெட்டை எடுக்க முடியும் என்ற வசனத்துக்கு தியேட்டரில் பலத்த கைத்தட்டல் !


இட்லிவடை மார்க் - (-)/(:>)
A separation - விரைவில் கூடல் :-)
comments | | Read More...

ஜெ.வும், கருணாநிதியும் வரலாற்று சிறப்புவாய்ந்த ஊழல்வாதிகள்: விஜயகாந்த் 'பாராட்டு'!

 
 
ஜெயலலிதாவும், கருணாநிதியும் வரலாற்று சிறப்புமிக்க ஊழல்வாதிகள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு,
 
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக உள்ளது. அதற்கு கேரளாவில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் பற்றி தான் கவலை. பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி அல்ல. மத்திய அரசுக்கும், கேரள அரசுக்கும் இரு மாநில மக்களைப் பற்றி கவலையில்லை, தேர்தல் பற்றிய கவலை தான் பெரிதாக உள்ளது.
 
கேரளாவுக்கு சென்ற தமிழக ஐயப்ப பக்தர்களையும், அங்கு வசித்த தமிழர்களையும் பாதுகாக்க தேரள அரசு தவறிவிட்டது. கேரளாவில் வாழும் தமிழர்களை சமூக விரோதிகள் தாக்குவதை அம்மாநில அரசு வேடிக்கைப் பார்க்கிறது.
 
எந்த அரசியல் கட்சியின் தூண்டுதலும் இல்லாமல் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் முல்லைப் பெரியாறு பிரச்சனைக்காக போராடுகின்றனர். திமுக, அதிமுக அரசுகள் இந்த பிரச்சனையை பல ஆண்டுகளாக தீர்க்கமால் உள்ளன என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
 
மக்களின் போராட்டம் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டில் நம்பிக்கை இல்லை என்பதையே உணர்த்துகிறது. முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து நமது சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு மதிக்கவில்லை. அணையை பாதுகாக்க ராணுவத்தை கொண்டு வர வேண்டும்.
 
அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக் கோரிய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. தமிழக அரசின் தீர்மானங்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த லட்சணத்தில் சும்மா தீர்மானம் மற்றும் நிறைவேற்றி என்ன பயன்? ஜெயலலிதாவும், கருணாநிதியும் வரலாற்று சிறப்புமிக்க ஊழல்வாதிகள்.
 
கூடங்குளம் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து பிரதமர் அந்த மக்களை சந்தித்து அவர்கள் அச்சத்தைப் போக்காமல் ரஷ்யாவில் இருந்து கொண்டு இன்னும் ஓரிரு வாரங்களில் அணுமின் நிலையத்தில் உற்பத்தி துவங்கும் என்று கூறியிருப்பது முறையன்று. கூடங்குளம் அணுமின் நிலையத்தை ராணுவத்தின் பாதுகாப்பில் விடுமாறு முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் கூறியதை அமல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது. ஆனால் அதே கலாம் முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்கும் பொறுப்பை ராணுவத்திடம் விடுமாறு கூறியதை மத்திய அரசு ஏற்காமல் இரட்டை வேடம் போடுகிறது.
 
தமிழக அரசு எதிர்கட்சிகள் கூறுவதை காது கொடுத்து கேட்பதே இல்லை. தேர்தல் மூலம் ஆட்சி மட்டும் தான் மாறியுள்ளது, ஆள் மாறவில்லை. முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக நடந்த சிறப்பு சட்டசபை கூட்டத்திற்கு நான் தாமதமாக வந்ததற்கு சென்னையின் போக்குவரத்து நெரிசல் மட்டுமே காரணம். வேறு ஒன்றும் கிடையாது என்றார்.




comments | | Read More...

ஜெ.வின் அடுத்த 'டார்கெட்' ?

 
 
 
அதிமுகவின் எந்த ஒரு மூலையிலும் சசி குடும்பத்தாரின் நிழல் கூட இருக்கக் கூடாது என்ற முடிவில் ஒட்டுமொத்தமாக குடும்பத்தோடு அவர்களை துரத்தி விட்டு விட்ட ஜெயலலிதா, அடுத்த இந்தக் கும்பலிடமிருந்து ஜெயா டிவியை மீட்டு அதை சுத்தப்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக அவர் பல அதிரடி நடவடிக்கைகளில் அடுத்தடுத்து இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஜெயலலிதா லைம்லைட்டுக்கு வந்து முதல் முறையாக முதல்வரான போது அப்போது திமுகவுக்கு பெரும் பக்கபலமாக இருந்தது சன் டிவிதான். இதை உணர்ந்த ஜெயலலிதா அதிமுகவுக்கும் ஒரு டிவி வேண்டும் என்பதற்காக சசி குடும்பத்தார் மூலம் தொடங்கிய டிவிதான் ஜெஜெ டிவி. பின்னர் இது ஜெயா டிவியாக உருமாறியது.
 
ஜெயா டிவியின் நிர்வாகத்தை ஆரம்பத்திலிருந்தே சசிகலா குடும்பத்தினர்தான் கவனித்து வருகின்றனர். ஜெயா டிவியின் அனைத்து நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றிருப்பவர் அனுராதா. இவர் டிடிவி தினகரனின் மனைவி ஆவார்.
 
இந்த டிவியின் கணக்கு வழக்கு, நிர்வாகம், என்ன செய்கிறார்கள் என்பது ஜெயலலிதாவுக்கு எதுவுமே தெரியாது என்கிறார்கள். தனது பெயரில் டிவி வருகிறது, அதில் அதிமுக செய்திகளையும் காட்டுகிறார்கள் என்ற அளவுக்குத்தான் ஜெயலலிதாவுக்கும், இந்த டிவிக்குமான தொடர்பு என்றும் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு சசி குடும்பத்தாரின் நாட்டாமை ஜெயா டிவியில் அதிகம் என்பது அதிமுகவினரின் கருத்தாக உள்ளது.
 
தொடங்கி 14 ஆண்டுகளாகியும் இதுவரை மக்கள் மத்தியில் ஜெயா டிவிக்கு என்றொரு நல்ல பாப்புலாரிட்டி இல்லை. மேலும் அதிமுகவினர் மத்தியிலும் கூட இந்த டிவியால் பெரிய அளவில் லாபம் இல்லை என்றும் கூறப்படுகிறது. காரணம், அந்த அளவுக்கு கோக்குமாக்கான நிர்வாகம், சரியில்லாத நிகழச்சிகள், நடுநிலையுடன் கூடிய நிகழ்ச்சிகள் அதிகம் இல்லாதது, ஒளிபரப்பில் தரமில்லாதது என ஏகப்பட்ட குறைகள் ஜெயா டிவியில் உள்ளன.
 
சன் டிவிக்கு இதுவரை ஒரு நொடி கூட கடுமையான போட்டியையோ, பீதியையோ எழுப்பியதில்லை ஜெயா டிவி என்பதிலிருந்தே அந்த டிவியின் தொழில்துறை தரத்தைப் புரிந்து கொள்ளலாம். ஜெயா டிவி இப்படி பொலிவிழந்து கிடக்க முக்கியக் காரணமே சசி கலா குடும்பத்தார் அதை தங்களுக்கு சாதகமான ஒரு பணம் கறக்கும் கருவியாக மட்டுமே பார்த்து நடத்தி வந்ததுதான் என்கிறார்கள் அதிமுகவினர்.
 
மேலும் ஜெயா டிவியின் மூத்த நிர்வாகிகள் சிலரும் சசி குடும்பத்துடன் கை கோர்த்துக் கொண்டு பெருமளவில் விளையாடியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அனுராதவும், ஜெயா டிவியின் முக்கிய நிர்வாகி ஒருவரும் இணைந்து தனியாக விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் கூறுகிறார்கள்.
 
இதேபோல அதன் செய்திப் பிரிவிலும் கூட ஜெயலலிதா குறித்த செய்திகளை பெருமளவில் குழப்பவே ஒரு தரப்பு எப்போதும் ஆயத்தமாக இருக்குமாம். அதாவது ஜெயலலிதா தொடர்பான செய்திகளை குழப்பமாகவே காட்டி மக்களைக் குழப்பி, ஜெயலலிதாவுக்கு மோசமான இமேஜை உருவாக்குவது என்ற சசி குருப்பீன் அஜென்டாவை இவர்கள் நீக்கமற நிறைவேற்றி வருகிறார்களாம்.
 
இப்படி ஏகப்பட்ட குழப்பங்களுடன் நடந்து வரும் ஜெயா டிவி நிர்வாகத்தை முற்றிலும் மாற்றியமைத்து, தரமான டிவியாக மாற்ற ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறப்படுகிறது.



comments | | Read More...

'ஜஸ்ட் மிஸ்'... சிம்ரனின் ஏக்கப் பெருமூச்சு!

 
 
 
ஒரு நடிகையின் வாக்குமூலம் படம் குறித்து பெரும் பெருமூச்சு விட்டுள்ளார் கடந்த கால கனவுக் கன்னியான சிம்ரன். இப்படத்தில் நான் நடிக்காமல் போய் விட்டேனே என்ற ஏக்கப் பெருமூச்சுதான் அது.
 
சோனியா அகர்வாலின் இரண்டாவது இன்னிங்ஸாக கருதப்படுகிறது ஒரு நடிகையின் வாக்குமூலம் படம். இப்படத்தில் அவர் நடிகையாக நடித்துள்ளார். ஒரு நடிகையின் உண்மைக் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
 
இயக்குநர் செல்வராகவனை விட்டுப் பிரிந்த பின்னர் மீண்டும் நடிக்க ஆரம்பித்த சோனியாவுக்கு நல்ல ரோல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் வந்து அமைந்தது ஒரு நடிகையின் வாக்குமூலம் படம். கதையைக் கேட்டவுடன் கால்ஷீட் கொடுத்து விட்டார் சோனியா.
 
இந்த நிலையில் ராஜ்கிருஷ்ணாவை சமீபத்தில் சந்திக்க நேர்ந்த சிம்ரனுக்கு, ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் தான் நடிக்க முடியாமல் போனதை வெளிப்படையாகவே தெரிவித்தாராம். இந்தக் கதையை என்னிடம் சொல்லியிருந்தால் நிச்சயம் நான் நடித்திருப்பேன் என்று ஏக்கத்துடன் கூறினாராம் சிம்ரன். இதனால் தனது அடுத்த படத்தில் சிம்ரனை நடிக்க வைக்கிறாராம் ராஜ் கிருஷ்ணா.
 
இது என்ன முன்னாள் கனவுக் கன்னியின் கதையா...?

 


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger