News Update :
Powered by Blogger.

ரஜினி, கமல் நடித்த 'நினைத்தாலே இனிக்கும்' மீண்டும் ரிலீஸ்

Penulis : karthik on Monday 16 April 2012 | 22:58

Monday 16 April 2012




ரஜினி, கமல் இணைந்து ந� ��ித்த படம் 'நினைத்தாலே இனிக்கும்'. நாயகியாக ஜெயப்பிரதா நடித்தார். கே.பாலச்சந்தர் இயக்கினார். 1979-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது.

இப்படத்தில் இடம் பெற்ற 'நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தா ளாம்', 'நினைத்தாலே இனிக்கும்', 'ஆனந்த தாண்டவமோ', 'பாரதி கண்ணம்மா', 'இனிமை நிறைந்த உலகம் இருக்கு', 'சம்போ சிவசம்போ', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'எங்கேயும் எப்போதும்' போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.

இப்படத்திற்குப் பிறகு கமலையும், ரஜினியையும் ஒன்றாக நடிக்க தொடர்ந்து முயற்சிகள் நடந்ததும் பலிக்கவில்லை. எனவே 'நினைத்தாலே இனிக்கும்' படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.

சிவாஜி நடித்த 'கர்ணன்' படம் சமீபத்தில் மறுரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓட� ��கிறது. எம்.ஜி.ஆர். படங்களும் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகின்றன. அந்த வகையில் 'நினைத்தாலே இனிக்கும்' படத்தையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரிய தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.



comments | | Read More...

கட்சி பதவியில் இருந்து ராஜினாமாவா?: வீரபாண்டி ஆறுமுகம் பரபரப்பு பேட்டி




சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்து வருபவர் வீரபாண்டி ஆறுமுகம். முன்னாள் அமைச்சரான இவருக்கு சில நாட்களுக்க� �� முன்பு வாலிபர் ஒருவர் செல்போனில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.

அப்போது அவர் ராமஜெயத்திற்கு ஏற்பட்ட கதித்தான் உனக்கு ஏற்படும் என்றும், அடுத்த டார்கெட் நீதான் என்றும் கூறி போனை வைத்து விட்டார். இதுபற்றி முன்னாள் அமைச்சர் வீரபாண்ட� � ஆறுமுகம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

கடந்த வாரம் சேலம் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணிக்கு புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பரிந்துரை செய்த பலரது பெயர் இல்லை என பரபரப்பாக பேசிக்கொண்டனர்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தி.மு.க.வில் இருந்தும் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்துவிட்டார் என சேலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. 

இதுபற்றி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்ட தி.மு.க. இளைஞரணிக்கு புதியதாக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் என்னிடம் வந்து வாழ்த்து பெற்று சென்றனர். மேலும் பலர் தினமும் வந்து வாழ்த்து பெற்று செல்கிறார்கள். இந்த நிலையில் யாரோ சிலர் வேண்டும் என்றே நான் ராஜினாமா செய்து விட� �டதாக புரளி கிளப்புகிறார்கள். நான் எதற்கு ராஜினாமா செய்யப்போகிறேன். புரளி யார் யார் பரப்புகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.



comments | | Read More...

விஜய் நடிக்கும் படம் மட்டும் தடை இல்லாமல் நடைபெறுகிறது: எஸ்ஏசி நீக்கம் சரியே: ராவுத்தர்




தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், பொருளாளர ் தாணு, செயலாளர் தேனப்பன் ஆகியோரை சங்க விதிகளின் சட்டப்படிதான் நீக்கியிருக்கிறோம் என பொறுப்புத் தலைவர் இப்ராஹிம் ராவுத்தர் தெரிவித்தார்.


ஊதிய உயர்வு தொடர்பாக ஃபெப்ஸி அமைப்பினருக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே நடைபெற்ற பிரச்னையை அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கூடியது. இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், பொருளாளர் தாணு, செயலாளர் தேனப்பன் ஆகியோரை 6 மாத காலத்துக்கு நீக்கியும் அடுத்த நான்கு மாதத்துக்குள் தேர்தல் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுவரை இப்ராஹிம் ராவுத்தர் பொறுப்புத் தலைவராக பதவி வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.


தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு கூடிய அவசரக் கூட்டத்தில் இப்ராஹிம் ராவுத்தர், தயாரிப்பாளர்கள் கேயார், கே. ராஜன், முரளிதரன், சத்யஜோதி தியாகராஜன், எடிட்டர் மோகன் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,


தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்ட எஸ்.ஏ. சந்திரசேகரன் தரப்பினரை சிறப்புப் பொதுக்குழு நீக்கியது முற்றிலும் சட்டப்பூர்வமானதே. பொதுக்குழுவில் நாங்கள் மேற்கொண்ட தீர்மானங்களை சட்டப்படி முறையாக பதிவுத்துறைக்கு அனுப்பிவிட்டோம்.


தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஒரு சார்பாக நடந்துகொண்டார். அவர் பேசியது தயாரிப்பாளர்கள் மத்தியில் பிரிவை உருவாக்கும் நோக்கத்திலேயே இருந்தது.

பல படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறாத சூழ்நிலையில் அவருடைய மகன் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு மட்டும் தடையில்லாமல் நடைபெற்று வருவதில் இருந்தே இதை புரிந்துகொள்ளலாம்.


மேலும் பதவியேற்ற ஆறு மாத காலத்தில் மூன்று மாதங்களை விடுமுறையிலேயே கழித்துள்ளார் எஸ்.ஏ.சி. அதோடு சக நிர்வாகிகளிடமும் சங்க ஊழியர்களிடமும் கடுமையாக நடந்து கொண்டார். ஒரே அணியில் உள்ள எங்களிடமே இப்படி நடந்துகொண்டால் ஃபெப்ஸி அமைப்பினரிடம் இவர் எப்படி பேச்சுவா ர்த்தையை சுமுகமாக நடத்துவார்?


 அதனால்தான் அவரையும் அவருக்கு ஆதரவாக செயல்படுபவர்களையும் பொதுக்குழுவைக் கூட்டி நீக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். எஸ்.ஏ. சந்திரசேகரன் தரப்பினரை நீக்கியது பொதுக்குழுவில் கூடிய 292 தயாரிப்பாளர்களின் ஒட்டுமொத்த முடிவு. அதை மாற்ற முடியாது.


 இனி நாங்கள் சார்ந்த அணியினர் சார்பாக ஃபெப்ஸி அமைப்பினருடன் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி பிரச்னையை விரைவில் தீர்ப்போம் என்று தெரிவித்தனர்.



comments | | Read More...

ராஜபக்சேவுடனான விருந்தை ரத்து செய்தது இந்தியா!




இந்திய நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் சிலரின் கோரிக்கையை ஏற்று ராஜபக்சேவுடனான காலை விருந்து நிகழ்ச்சியை மத ்திய வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளது. இதையடுத்து ராஜபக்சேவுடன் உட்கார்ந்து சாப்பிடும் அபாயத்திலிருந்து இந்திய எம்.பிக்கள் தப்பியுள்ளனர்.

இந்திய எம்.பிக்கள் குழு நேற்று இரவு டெல்லியிலிருந்து தனி வி்மானம் மூலம் கொழும்பு புறப்பட்டுச் சென்றது. இக்குழுவின் தலைவராக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் சென்றுள்ளர்.

முன்னதாக இக்குழுவினரிடம் பயணத் திட்டம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விளக்கிப் பேசினார். அப்போது ராஜபக்சேவுடன் 21ம் தேதி காலை விருந்து சாப்பிடுவதாக உள்ள திட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் சிபிஎம் உறுப்பினர்கள் ஆட்சேபித்தனர். இத� � தாங்கள் விரும்பவில்லை என்றும் ரத்து செய்து விடுமாறும் அவர்கள் கோரினர். சுஷ்மா சுவராஜும் கூட இதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து தற்போது அந்த விருந்து நிகழ்ச்சியை மத்திய அரசு ரத்து செய்து விட்டது. அதன்படி 21ம் தேதிக்குப் பதில் 20ம் தேதி மாலையே ராஜபக்சேவை இந்திய எம்.பிக்கள் குழு சந்தித்துப் பேசுகிறது. ஆனால் எதுவும் சாப்பிட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய பயணத் திட்டத்துடன் இன்று முதல் 6 நாட்களுக்கு தங்களது இலங்கை பயணத்தை ஆரம்பிக்கின்றனர் இந்திய எம்.பிக்கள்.



comments | | Read More...

பள்ளி மாணவ- மாணவிகளின் சீருடைஜெயலலிதாவின் புடவை நிறத்துக்கு மாறுகிறது : ஜெ. உத்தரவு




பள்ளிக்கூடங்களில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு இலவச சீருடைகள் வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கூடங்கள் தொடங்கிய சில நாட்களில் இந்த சீருடைகள் வழங்கப்பட் டு வந்தன. இலவச சீருடையாக மாணவர்களுக்கு காக்கி நிற அரைக்கால் சட்டையும், வெள்ளை சட்டையும் வழங்கப்பட்டு வந்தது.

மாணவிகளுக்கு இளம் நீல நிறத்தில் பாவாடையும், வெள்ளை நிறத்தில் சட்டையும் வழங்கப்பட்டன. மேல்நிலை வகுப்புகளில் படித்த மாணவிகளுக்கு நீல நிற பாவாடை தாவணியும், வெள்ளை ரவிக்கையும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும� �� அரசு அறிவித்து வழங்கும் சீருடைகளின் நிறம் பின்பற்றப்படவில்லை.

பச்சை, நீலம், காக்கி என்று ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் ஒவ்வொரு நிறம் என்ற அடிப்படையில் மாணவ-மாணவிகள் சீருடைகள் அணிந்து வந்தனர். இதனால், அரசு வழங்கும் சீருடைகள் பெரும்பாலான மாணவர்களுக்கு வெறும் பெயரளவில் மட்டும்தான் வழங்கப்பட்டது. எனவே அனைத்து அரசு ப� �்ளிக்கூடங்களுக்கும் ஒரே மாதிரியான சீருடைகள் வழங்கவும், சீருடையின் நிறத்தை மாற்றவும் தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி வரும் கல்வி ஆண்டில் இருந்து அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் சீருடை நிறம் மாறுகிறது. அதுமட்டுமின்றி மாணவ-மாணவிகளுக்கு ஒரு ஜோடி சீருடை மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாட்டுக்கு பதிலாக, ஒரு மாணவருக்கு ஒரு கல்வி ஆண்டிற்கு 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படும் என்று முதல்&அ� �ைச்சர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.

மேலும், அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும் தனியார் பள்ளிக்கூட மாணவ-மாணவர்களைப்போல புதிய ஆடைகளை அணியும் வகையில் இலவச சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது. 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரைக்கால் சட்டை மற்றும் மேல் சட்டையும், 5-ம் வகுப்புவரை படிக்கும் மாணவிகளுக்கு பாவாடையும், சட்டையும் வழங்கப்படுகிறது.

6-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டை இனிமேல் கிடையாது. அதற்கு பதிலாக அனைத்து மாணவர்களுக்கும் முழுக்கால் சட்டை (பேண்ட்) வழங்கப்படும். அதுபோல் 6-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் சுடிதார் மற்றும் துப்பட்டா வழங்கப்படுகிறது.

பாவாடை-தாவணியை விட சுடிதார் உடைதான் மாணவிகளுக்கு வசதியாக உள்ளது என்பதால் இந்த புதிய ஆடை தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கான பேண்ட் மற்றும் அரைக்கால் சட்டைகள் மெரூன் நிறத்தில் தயார் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மேல் சட்டை இளம் பிரவுன் நிறத்தில் உற்பத்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சீருடை நிறத்தை மாற்ற அரசு முடிவு செய்ததும், பல்வேறு நிறங்களில் மாதிரி துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பார்வைக்கு அனுப்பப்பட்டன. இதில் மெரூன் நிற துணிகள் எத்தனை முறை துவைத்தாலும் சாயம் போகாத அளவுக்கு தரமானவையாக இருந்தன. அதுமட்டுமின்றி சாய வகைகளில் கிலோவுக்கு ரூ.3 ஆயிரத்� ��ுக்கும் அதிகம் விலை கொண்ட ஒரே சாயம் மெரூனாக உள்ளது.

எனவே மாணவ-மாணவிகளுக்கு தரமான துணிகளை வழங்கும் வகையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மெரூன் நிறத்தை தேர்வு செய்ததுடன், அதற்கு மேட்ச்சாக இளம் பிரவுன் நிறத்தையும் தேர்ந்து எடுத்து உள்ளார். மாணவிகளுக்கு சுடிதார் பேண்ட் மற்றும் டாப்ஸ் மெரூன் நிறத்திலும், துப்பட்டா இளம் பிரவுன் நிறத்த ிலும் உற்பத்தி செய்ய முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக தமிழக அரசு ரூ.368 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. வரும் ஜூன் மாதம் பள்ளிக்கூடங்கள் திறக்கும் போது மாணவ-மாணவிகளுக்கு முதல் கட்டமாக இலவச சீருடைகளை வழங்க தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனவே இலவச சீருடை உற்பத்தி பணியை முடுக்கி விட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் துணி நூல் பதனிடும் ஆலை தற்போது ஈரோட்டில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. எனவே குறிப்பிட்ட காலத்தில் சீருடைக்கான துணிகள் உற்பத்தி செய்வது என்பது இயலாது என்பதால், ஈரோடு தவிர ஐதராபாத், மாராட்டிய மாநிலம் இச்சல் கரன்ஜி மற்றும் மும்பையில் உள்ள சில தனியார் துணி நூல் பதனிடும் ஆலைகளிலும் சீருடை துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

ஈரோடு துணி நூல் பதனிடும் ஆலைக்கு கோ&ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் சீருடைக்கு தேவையான காடா துணிகள் பெறப்படுகின்றன. பின்னர் காடா துணிகள் சலவை (பிளீச்சிங்) செய்யப்பட்டு புதிய சீருடைக்கான நிறமேற்றம் (டையிங்) செய்யப்படுகின்றன. துணிகளுக்கு நிறமேற்றும் பணிகள் முடிவடைந்ததும் மாவட்ட வாரியாக பேக்கிங் செய்து மீண்டும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு சீருடை துணிகள் அனுப்பி வைக்கப்படும்.

ஈரோட்டில் ஒரு நாளைக்கு 45 ஆயிரம் மீட்டர் வீதம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நிறுவனத்துக்கு விடுமுறை இன்றி மாதத்தில் அனைத்து நாட்களும் பணி நடந்து வருகிறது. பதனிடும் ஆலையின் மேலாளர் குருசாமி தலைமையில் உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அரசின் தற்போதைய இலக்கான 120 லட்சம் மீட்டர் துணிகளை மே மாதம் 2-வது வாரத்துக்குள் உற்பத்தி செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையின் நிர்வாக இயக்குநர் எம்.பழனிச்சாமி கூறும்போது, அரசு அறிவித்தபடி துணிகளை உற்பத்தி செய்து கொடுக்கும் வகையில் நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். குறிப்பிட்ட நேரத்தில் தரமான துணிகளை உற்பத்தி செய்து கொடுத்து விடுவோம் என்றார்.

துணிகள் அனைத்தும் சமூக நலத்துறை மூலம் மாவட்ட வாரியாக சென்றதும், ஆடைகளாக தைக்கப்படுகின்றன. இதற்காக தேசிய ஆடை வடிவமைப்பு மையத்தின் மூலம் மாதிரிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு ஆடையை முதல்&அமைச்சர் ஜெயலலிதா தேர்வு செய்ததும் சீருடைகள் மாணவர்களின் உடல் அமைப்புக்கு ஏ� �்ப அந்த அந்த மாவட்டங்களில் தைக்கும் பணி தொடங்கும்.

தமிழக அரசின் முடிவால், அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும் தனியார் பள்ளிக்கூடம் மாணவ-மாணவிகள் போல தரமான ஆடைகள் அணியும் வாய்ப்பினை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கி இருக்கிறார்.




comments | | Read More...

நெஞ்சை உறைய வைத்த அஜித்!




அஜித் நடித்துக் கொண்டிருக்கும் பில்லா-2 படத்தின் ஒரு நிமிட டிரெய்லர் கடந்த வெள்ளிக்கிழமை(13.04.12) அன்று மாலை 7 மணிக் கு வெளியிடப்பட்டது. அந்த டிரெய்லரில் அஜித் பறக்கும் ஹெலிகாப்டரில் ஒரு கையால் தொங்கிக்கொண்டிருப்பது போல் ஒரு காட்சி இருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டனர்.

இதை பற்றி பில்லா-2 படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டீபன் ரிச்டர் " நான் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த இத்தனை காலத்தில் எவ்வளவோ சாகசம் செய்திருக்கிறேன். ஆனால் என்றும் ஹெல ிகாப்டரில் இருந்து தொங்கும் அளவிற்கு எனக்கு தைரியம் இருந்ததில்லை. ஆனால் அஜித் அதை செய்யும் போது என் ரத்தம் உறைநிலைக்கு போய்விட்டது" என்று கூறினார்.


படத்தின் இயக்குனர் சக்ரி டொலட்டி " இந்த படத்தில் அஜித் செய்திருக்கும் சண்டைக் காட்சிகளும், சாகசங்களும் டூப் போடாமல் செய்யப்பட்டவை. அஜித்தின் இந்த கடின உழைப்பினால் ரசிகர்கள் கண்டிப்பாக பெருமைப்படுவார்கள்" என்று கூறியுள்ளார்.

மேலும் இப்படத்தின் துணை இயக்குனர் ஷரத் மந்தவா பேசுகையில் " அஜித் அந்தக் காட்சியில் நடிக்கும் போது மிகவும் பயமாக இருந்தது. ஹெலிகாப்டரிலிருந்து தொங்குவது ஸ்டண்ட் செய் பவர்களுக்கு சுலபமாக இருக்கலாம். ஆனால் அதை அஜித் செய்திருப்பது பாராட்டத்தக்க விஷயம்" என்று கூறினார்.

படக்குழுவினர் அப்படித்தான் பேசுவார்கள் என்ற பேச்சுக்கு இடம் கொடுக்காமல் யூ-டியூபில் பில்லா-2 டிரெய்லர் ஐந்தரை லட்சம் பார்வையாளர்களை தாண்டிக்கொண்டிருக்கிறது.



comments | | Read More...

கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு இல்லை: இலங்கை திடீர் பல்டி




கூடங்குளத்தில் அணு உலை செயல்பட இருப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை எனவும், தங்கள் மின் தேவைக்காக அணுசக்தியை பயன்படுத்த இந்தியாவுக்கு உரிமை உள்ளது எனவும் இலங்கை கூறியுள்ளது.

ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டுவந்த மனித உரிமை மீறல் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததால்,கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்த பிரச்சினையை நாங்கள� �� எழுப்ப மாட்டோம் எனவும் இலங்கை அணுசக்திக் கழகம் கூறியுள்ளது.

மேலும் அண்டை நாடான இந்தியாவில் அணு உலை இருப்பதால், இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அணு உலை மற்றும் அவசர திட்டங்கள் குறித்த தகவல்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம ் எனவும் இலங்கை கூறியுள்ளது.

கூடங்குளம் அணு உலையால் கதிர்வீச்சு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அது தங்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறி கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு இலங்கை மு� ��லில் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இலங்கை திடீரென தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது.



comments | | Read More...

ஹன்ஸிகாவிடமிருந்து விஷாலைப் பறித்த கார்த்திகா!




முழுவேகத்தோடு இயக்குநராக களம் இறங்கியிருக்கிறார் சுந்தர் சி. பெரிய பட்ஜெட். பரபரப்பான நடிகர்கள் என வைத்து த� �் மனைவி குஷ்புவின் பேனரில் படங்களை உருவாக்குகிறார்.

இப்போது கலாட்டா @ மசாலா கபே என்ற நகைச்சுவைப் படத்தை எடுத்து வரகும் சுந்தர், அட� ��த்ததாக அதிரடி ஹீரோ விஷாலை வைத்து ஒரு நகைச்சுவைப் படத்தை எடுக்கிறார்.

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் கார்த்திகா. கோ படத்துக்குப் பிறகு அவர் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு அவர் ஒப்புக் கொண்டுள்ள படம் இது.

சமரன் படம் முடிந்ததும், இந்தப் புதிய படத்தில் நடிக்க ஆரம்பித்துவிடுவார் விஷால் என்கிறார்கள்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்ஸிகாவைத்தான் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால் விஷாலின் உயரத்தை மனதில் கொண்டு, கார்த்திகாவை இறுதி செய்துள்ளனர்.



comments | | Read More...

நடிகைகளின் புது சம்பள பட்டியல்:




கதாநாயகிகள் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தி நடிகைகளின் சம்பளப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பிரியங்கா சோப்ராவை சமீபத்தில் ஒரு படத்துக்க� �� ரூ.9 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளனர். இதுதான் பெரிய சம்பளம் என்று கூறப்படுகிறது.


ஐஸ்வர்யாராய் எந்திரன் படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க ரூ.6 கோடி வாங்கினார் என செய்தி வெளியானது. தமிழ், தெலுங்கு பட கதாநாயகிகள் புதிய சம்பளத்தை நிர்ணயம் செய்துள்ளனர். நயன்தாரா காதல் சர்ச்சைகளுக்கு முன் ரூ.1 கோடி வரை சம்பளம் வாங்கினார். தற்போது பிரபுதேவா வுடனான காதலை முறித்து மீண்டும் நடிக்க வந்துள்ள நிலையில் சம்பளத்தை ரூ.1 1/2 கோடியாக உயர்த்தி உள்ளார்.

நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த இலியானாவும் ரூ.1 1/2 கோடி சம்பளம் வாங்குகிறார். இதுவரை ரூ.90 லட்சம், ரூ.1 கோடி என சம்பளம் வாங்கிய திரிஷா தனது சம்பளத்தை ரூ.1 கோடியே 20 லட்சம் என உயர்த்தி உள்ளார்.

பிரியாமணி ரூ.30 லட்சம் வாங்குகிறார். அனுஷ்கா, காஜல்அகர்வால், தமன்னா, டாப்சி ஆகியோரின் சம்பளமும் ரூ.1 கோடியை தாண்டி உள்ளது.

இந்தியில் கரீனாகபூர் ரூ.6 கோடியும், கத்ரீனாகைப் ரூ.3 கோடியும், தீபிகா படுகோனே ரூ.2 1/2 கோடியும், வித்யாபாலன் ரூ.1 1/2 கோடியும் சம்பளம் பெறுகின்றனர்.



comments | | Read More...

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் சஸ்பெண்டு




தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர், செயலர் மற்றும் பொருளாளரை, "சஸ்பெண்ட் செய்து போட்டி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள� �ளது. விதிமுறைகளுக்கு மாறாக கூட்டப்பட்ட இந்த கூட்ட முடிவுகள் செல்லாது என்றும், இதை, சட்டப்படி சந்திக்கவுள்ளதாகவும், தலைவர் சந்திரசேகர் தரப்பு தெரிவித்துள்ளது.
அமைச்சர் செல்லபாண்டியன் தலைமையில், தமிழ்த் திரைப்படத் தயாரி ப்பாளர் சங்கத்திற்கும், தொழிலாளர் அமைப்பான, "பெப்சிக்கும் இடையேயான பேச்சுவார்த்தையின் முடிவில், தயாரிப்பாளர் சங்கத்தில் அதிருப்தி குரல் எழுந்தது. அதிருப்தியாளர்கள் நேற்று போட்டி பொதுக்குழுவை கூட்டினர். இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் என்பதால், போலீஸ் பாதுகாப்புடன் ப ோட்டி பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், சங்கத் தலைவர், எஸ்.ஏ., சந்திரசேகர், செயலர் பிஎல். தேனப்பன், பொருளாளர் தாணு ஆகியோரை, தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து ஆறு மாதம், "சஸ்பெண்ட் செய்வதாகவும்< /span>, தொழிலாளர் சம்பளப் பிரச்னை குறித்து பேசுவதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு, இப்ராஹிம் ராவுத்தரை தலைவராக நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வெளியேற்றத்தால் பரபரப்பு

போட்டி பொதுக்குழு கூட்டத்தில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சந்திரசேகருக்கு ஆதரவாகப் பேச முயன்ற தயாரிப்பாளர்கள் தமிழரசன், ரிஷிராஜ், ராஜசிம்மன் ஆகியோர் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அவர்கள் கூறியதாவது: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சந்திரசேகர், செயலர் தேனப்பன், பொருளாளர் தாணு ஆகியோர் இல்லாமல் பொதுக்குழுவை நடத்துகின்றனர். செயற்குழு உறுப்பினர்களை ஏமாற்றி கடிதம் எழுதியுள்ளனர். தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினரல்லாத பலர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும், எங்களது கருத்துக்களை தெரிவிக்க அனுமதி மறுத்து, எங்களை வெளியேற்றியுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சட்டப்படி சந்திப்போம்

தலைவர் உள்ளிட்டவர்கள் நீக்கம், போட்டி பொதுக்குழுவால் நடத்தப்பட்டுள்ளதால், தயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் முற்றியுள்ளது. போட்டி பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, சந்திரசேகர் ஆதரவாளர்கள் தரப்பில் கூறியதாவது: தலைவர் உத்தரவில்லாமல் இந்தக் க� �ட்டம் நடந்துள்ளது. பொதுக்குழுக் கூட்டம் நடத்த 21 நாட்கள் கால அவகாசம் கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளை மீறி, கூட்டத்தை நடத்தியுள்ளனர். எனவே, இந்தக் கூட்டத்தில் எடுத்த முடிவுகள் செல்லாது. இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



comments | | Read More...

இரண்டாம் இடத்தில் இளையராஜா!




தற்போது தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படங்களின் ஆடியோ உரிமம் தான் அதிக விலைக்கு செல்கிறது. இவருக்கு அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது � ��ளையராஜா இரண்டாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். அவர் இப்போது இசையமைத்து வரும் நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் ஆடியோ உரிமம், ஒரு கோடி ரூபாய்க்கு சென்றுள்ளது. இது ஹாரிஸ் இசையமைக்கும் படங்களின் உரிமையை விட அதிக தொகையாகும். இதனால் ரஹ்மானுக்கு அடுத்த இடத்திற்கு இளையராஜா வந்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் 3ம் ‌இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.



comments | | Read More...

கௌதம் மேனன் படத்திலிருந்து சமந்தா விலகல்!




இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகிக்கொண்டிருக்கும் நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிகிற நிலையில் உள்ள து. லண்டனில் இளையராஜாவுடன் கம்போஸிங்கில் இருக்கிறார் கௌதம் மேனன்.

இந்நிலையில் நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் ஹீரோயின் சமந்தா படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.  வழக்கமாக கௌதம் மேனன் தனது படங்களை மற்ற மொழிகளுக்கு டப்பிங் செய்யமாட்டார்.


அதேபோல் ஜீவா, சாமந்தா நடிக்கும் இந்த படத்தையும் தெலுங்கு மற்றும் மளையாலத்தில் ரீமேக் செய்ய திட்டமிட்டு அந்த மொழிகளிலும் சமந்தாவையே நடிக்க சொல்லியிருக்கிறார். ஆனால் நடிகை சமந்தா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.

இதை பற்றி பேசிய சமந்தா " அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். எனக்குள் நிறைய திறமைகள் இருப்பது உண்மைதான். ஆனால் என்னால் கௌதம் சாரின் மற்ற படத்தில் நடிக்கமுடியவில்லை" என்று கூறியுள்ளார்.

சமந்தாவை நடிக்கக் கேட்ட கௌதம் மேனன் ஜீவாவை கேட்கவில்லை. காரணம் ஜீவாவிற்கு மற்ற மொழிகளில் மார்கெட் இல்லை. சமந்தா நடித்து வெளிவரும் "ஈகா' படம் வெற்றியடைந்தால் சமந்தா வீட்டு வாசலில் தெலுங்கு இயக்குனர்களின் கார்கள் வரிசையில் நிற்கும்.



comments | | Read More...

கையை விட்டு விலகாத துப்பாக்கி!




துப்பாக்கி' படத்தினை அடுத்து விஜய் கால்ஷீட் யாருக்கு என்பது கோலிவுட்டின் விடைதெரியாத கேள்வியாக இருந்தது.

'துப்பாக்கி' படத்தினை முடித்து விட்டு கெளதம் மேனன் இயக்கத்தில் யோஹன் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.

' யோஹன் ' படம் குறித்து இயக்குனர் கெளதம் மேனன்  " ' யோஹன் ' ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு. முருகதாஸ் கூட விஜய் 'துப்பாக்கி' முடிச்சிட்டா, 'யோஹன்' ஆரம்பிச்சிடலாம். இந்த� �் படத்துல விஜய் மட்டும்தான் தமிழ் முகம்.

ஹீரோயின் ஒரு இந்தியனா இருப்பாங்க. மத்த நடிகர், நடிகை எல்லாருமே வெளிநாட்டினர்தான். தமிழ் படம்தான். ஆனா, இங்கிலீஷ் சப்-டைட்டிலோட உலகம் முழுக்க எங்கேயும் வெளியிடும் தரம் இருக்கும். ரஹ்மான் இசை. 'யோஹன்'ங்கிற இந்த கேரக்டரை எஸ்டாபிளிஷ் � ��ண்ணிட்டா ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி அத்யாயம் 1, 2னு அடுத்தடுத்து பண்ணலாம். " என்று தெரிவித்து இருக்கிறார்.



comments | | Read More...

இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழு புதிய கோரிக்கை: பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்திக்க அனுமதி வேண்டும்



width="200"


 
இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது, இலட்சக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். போரின் போதும், போருக்கு பிறகும் ஈழத் தமிழர்களிடம் ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடந்தன. இதில் அவர்களது வாழ்வாதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.
 
முகாம்களில் அடைக்� ��ப்பட்ட ஈழத் தமிழர்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். போர் முடிந்ததும் ஈழத்தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான உரிமைகள் பெற்றுத் தருவோம் என்று கூறிய மத்திய காங்கிரஸ் அரசு தற்போது மவுனமாக உள்ளது.
 
இந்தியா உள்பட பல நாடுகளிடம் உதவி பெறும் இலங்கை அரசு அதை தமிழர் பகுதியில் சிங்கள மயமாக்கலுக்கே பயன்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள� � எழுந்ததால், இலங்கையில் நடந்து வரும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி ஆய்வு செய்ய முடிவு செய்தது.
 
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 16 எம்.பி.க்கள் இந்த குழுவுக்காக தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் இருந்து அ.தி. மு.க. சார்பில் ரபிபெர்னாட், தி.மு.க. சார்பில் இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் என� �.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்கம் தாகூர், கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
 
இந்த நிலையில் எம்.பி.க்கள் குழு பயணம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்று புகார்கள் எழுந்தன. இதையடுத்து இலங்கை செல்லும் குழுவில் இருந்து அ.தி. மு.க. விலகியது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பாக வெளியிட்ட அறிக்க� ��யில், ராஜபக்சேயுடன் எம்.பி.க்கள் விருந்து சாப்பிட மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருடன் எந்த விவாதத்துக்கும் ஏற்பாடு செய்யாததால் அ.தி.மு.க. குழுவில் இடம் பெறாது என்று கூறியிருந்தார்.
 
தற்போது தி.மு.க.வும் எம்.பி.க்கள் குழுவில் இருந்து விலகிவிட்டது. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் முதன்மையாக உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் விலகிவிட்ட நிலையில், அந்த குழுவில் 14 எம்.பி.க்களே உள்ளனர்.
 
இவர்கள் இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு இலங்கை செல்கிறார்கள். அவர்களிடம் நேற்று மத்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் பயணத் திட்டம் பற்றிய நிகழ்ச்சி நிரல்களை விளக்கி கூறினார்.
 
எம்.பி.க்கள் குழுவினர் ராஜபக்சே, பசில் ராஜபக்சே, பிரீஸ், ரணில் விக்கிரமசிங்கே பிள்ளையான் உள்பட சிலரை சந்தித்து பேசுவது பற ்றி தெரிவிக்கப்பட்டது. 21-ந் தேதி ராஜபக்சேயுடன் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பற்றியும் கூட்டத்தில் கூறப்பட்டது. இதற்கு எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
 
தி.மு.க., அ.தி.மு.க. விலகிவிட்ட நிலையில், ராஜபக்சேயுடன் சிற்றுண்டி சாப்பிடும் விருந்து நிகழ்ச்சியை மாற்றவேண்டும் என்று குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கூறினார்கள்.
&nb sp;
ராஜபக்சேயுடன் 21-ந் தேதி காலை சாப்பிடுவதற்கு பதில் 20-ந் தேதி மாலை அவரை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுபோல 18-ந் தேதி இலங்கை ரெயில்வே திட்டப்பணிகளை பார்வையிட பயணத் திட்டத்தில் நிகழ்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு மாணிக்கன் தோட்ட முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை சந்தித்துபேச அனுமதிக்க வேண்டு� �் என்றும் எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்.
 
பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் இதுபற்றி கூறுகையில், இலங்கையில் இந்தியா உதவியுடன் நடக்கும் சீரமைப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை பார்வையிடுவது முக்கியம் அல்ல. முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை சந்திப்பதே முக்கியம். அதற்காக வற்புறுத்தியுள்ளோம் என்றார்.
 
எம்.பி.க்கள் குழு நாளை முதல் 4 நாட்கள் இலங்க ையில் பல்வேறு இடங்களுக்கு செல்லவுள்ளனர். நாளை (17-ந் தேதி) காலை இலங்கை வெளியுறவு மந்திரி பிரீஸ், பொருளாதார வளர்ச்சி மந்திரி பசில் ராஜபக்சேயை சந்தித்து பேசுகிறார்கள்.
 
பசில் ராஜபக்சேயுடன் பேசி முடித்த பிறகு இந்திய எம்.பி.க்கள் இலங்கை பாராளுமன்றத்துக்கு செல்ல உள்ளனர். அங்கு அவர்களுக்கு சபாநாயகர் சாமல் ராஜபக்சே மதிய விருந்து கொடுக்கிறார்.
 
நாளை பிற ்பகல் முதல் மாலை வரை தமிழ் தேசிய கூட்டணி பிரதிநிதிகளை எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து பேசுகிறார்கள். இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகிகளையும் எம்.பி.க்கள் சந்தித்து பேச உள்ளனர்.
 
நாளை மறுநாள் (புதன்) காலை இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு கொழும்பில் உள்ள இந்திய தூதர் அசோக் கே.காந்தா காலை விருந்து கொடுக்கிறார். பிறக� � எம்.பி.க்கள் இலங்கை வடக்கு பகுதிக்கு செல்கிறார்கள். அங்கு ஈழத்தமிழ் எம்.பி.க்களை சந்தித்து பேசுகிறார்கள். மனித உரிமை சங்கத்தினரையும் சந்திக்கிறார்கள்.
 
அன்றிரவு யாழ்ப்பாணத்தில் தங்குகிறார்கள். 19-ந் தேதி காங்கேசன் துறைமுகம் சென்று சீரமைப்பு பணிகளை பார்வையிடுகிறார்கள். அன்று எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கேயை சந்தித்து பேசுகிறார்கள்.
 
20-ந் தேதி இலங்கை கிழக்கு பகுதிகளை பார்வையிடுகிறார்கள். அங்கு மாகாண முதல்-மந்திரி பிள்ளையானை சந்தித்து பேசுகிறார்கள். 21-ந் தேதி சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சேயை சந்தித்து விட்டு எம்.பி.க்கள் குழு இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளது.
 
இந்திய எம்.பி.க்கள் குழுவினர், போர் குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் ராஜபக்சேயின் தம்பி கோதபயாவை சந்தித்து பேசமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் ஈழத் தமிழர்கள் முகாம்களை பார்வையிட எம்.பி.க்கள் குழு விடுத்துள்ள கோரிக்கை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். எம்.பி.க்களின் கோரிக்கை ஏற்கப்படுமா? என்பது இன்று மாலை தெரிய வரும்.






http://video-news-tamil.blogspot.com


comments | | Read More...

இலங்கையில் உடைக்கப்பட்ட காந்தி சிலை மீண்டும் அமைப்பு



width="200"


 
இலங்கையில் தமிழர் பகுதியான கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தேச பிதா மாகாத்மா காந்தி சிலை சிங்கள வெறியர்களால் உடைத்து நொறுக்கப்பட்டது. மேலும் சாரணீய இயக்க நிறுவனர் பேடன்பவுல், தமிழ் அறிஞர்கள் சுவாமி விபுலானந்தா, பெரிய தம்பிபிள்ளை ஆகியோர் சிலைகளும் உடைக்கப்பட்டன.
 
ஆனால் இந்த நாச செயலில் ஈடுபட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் காந்தி சிலை உடைக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் அங்கு மீண்டும் காந்தி சிலையை நிறுவும்படி இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் கே. கந்தா அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி அமுங்கமாவிடம் வலியுறுத்தினார். � �தை தொடர்ந்து கிழக்கு மாகாண முதல்- மந்திரி சிவசேனாதுரை சந்திரகாந்தனுடன் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
 
அதை தொடர்ந்து மட்டக்களப்பில் மீண்டும் காந்தி சிலை அமைக்க முடிவு செய்யப் பட்டது. இதற்கான அறிவிப்பை முதல்-மந்திரி சந்திரகாந்தன் வெளியிட்டார். மட்டக்களப்பில் உடைக்கப்பட்ட இடத்திலும், மற்றொரு இடத்திலும் காந்தி சிலை அமைக்கப்படும் என்றார். அது போன்று � ��டைக்கப்பட்ட தமிழ் அறிஞர்களின் சிலைகளும் மீண்டும் நிறுவப்படும் என்றும் அவர் கூறினார். 






http://video-news-tamil.blogspot.com


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger