News Update :
Powered by Blogger.

இன்றைய செய்திகள் (16-05-2012)

Penulis : karthik on Wednesday 16 May 2012 | 18:16

Wednesday 16 May 2012





அஜித்தை பின்பற்றிய விஷால்









































comments | | Read More...

ஜாமீனில் விடுதலை: ஆ.ராசா மீண்டும் அரசியலில் ஈடுபடுவாரா?





ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்க� �ல் முன்னாள் தொலை தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
 
இந்த வழக்கில் கைதான கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத்குமார், தொழில் அதிபர் ஷாகித் பல்வா, பட அதிபர் கரீம் மொரானி மற்றும் தனியார் டெலிபோன் நிறுவன உயர் அதிகாரிகள் அனைவரும் குற்றப்பத்த ிரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்பு ஒவ்வொருவராக ஜாமீனில் விடுதலையாகி திகார் ஜெயிலை விட்டு வெளியே வந்தனர்.
 
ஆனால் ஆ.ராசா மட்டும் ஜாமீனில் விடுதலையாக மறுத்து விட்டார். ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யவில்லை. வழக்கு விசாரணைக்காக அவர் தினமும் திகார் ஜெயிலில் இருந்து போலீஸ் வேனில் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப் பட்டு வந்தார்.
 
தற்போது இந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் ஆ.ராசா டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஆ.ராசாவுக்கு நீதிபதி ஓ.பி.சைனி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
 
இதனால் ஆ.ராசா குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். டெல்லி கோர்ட்டுக்கு � �ந்திருந்த ராசா ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். ராசா கோர்ட்டு அறையில் இருந்து வெளியே வந்தபோது ஆதரவாளர்கள் அவருக்கு சால்வை அணிவித்தனர்.
 
கோர்ட்டு மற்றும் ஜெயில் நடைமுறை முடிந்ததும் இரவு 7.15 மணிக்கு ராசா திகார் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார். அவரை தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு வரவேற்று அழ� �த்து வந்தார். அப்போது ஜெயில் முன் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
 
பின்னர் ராசா ஜெயில் வாசலில் இருந்து காரில் ஏறி நேராக டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். வீட்டு வாசலில் அவரை உறவினர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். முன்னதாக ராசா விடுதலையானதால் அவரது மனைவி பரமேஸ்வரி மகிழ்ச்சி தெரிவித்தார்.
 
கோர்ட்ட ுக்கு வந்திருந்த அவர் ஜாமீன் கிடைத்ததும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு சென்றார். ஆ.ராசா ஜாமீனில் விடுதலையானதால் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவாரா? என்று தொண்டர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இதுபற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் கேட்டபோது, ஆ.ராசா விடுதலையானதால் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் எப் தும் தி.மு.க.வில் தீவிரமாக இருப்பவர். கட்சியில் எல்லோரும் அவரை ஆதரிக்கிறோம் � �ன்றார்.எனவே ராசா மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவார் என்று தெரிகிறது.
 
ராசா தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வருகிறார். சிறையில் இருந்த போதும் அவருக்கு பதில் வேறு யாரும் நியமிக்கப்படவில்லை. தொடர்ந்து கொள்கை பரப்பு செயலாளராக இருக்கிறார். ராசா கைதான போது தி.மு.க. நிர்வாக குழு கூட்டம் கூடி அவருக்கு முழு ஆதரவு தெரிவித்தது.தி.மு.க. எ ப்போதும் ராசாவுக்கு ஆதரவாக இருக்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
கோர்ட்டு அனுமதியின்றி ராசா தமிழ்நாட்டுக்கு செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது. இதனால் ராசா டெல்லியிலேயே தங்கி இருக்கிறார். சில நாட்கள் கழித்து அவர் நிபந்தனையை தளர்த்தக் கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்து டெல்லியை விட்டு வெளியே வரலாம்.ஏற்கனவே கன ிமொழி எம்.பி. ஜாமீனில் விடுதலையானதும் மீண்டும் அரசியலில் கவனம் செலுத்தினார். கட்சி கூட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்றார். அவரைப் போல் ஆ.ராசாவும் தீவிர அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.







comments | | Read More...

நடிகை உதயதாரா திருமணம்: கேரளாவில் நடந்தது





தமிழில் தீ.நகர், மலையன் படத்தில் கரண் ஜோடியாக நடித்தவர் உதயதாரா. பிரசன்னாவுடன் கண்ணும் கண்ணும் மற்றும் விலை, பயமறியான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

உதயதாராவுக்கும் துபாயில் விமான பைலட்டாக பணியாற்றும் ஜுபின் ஜோசப்புக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. உதயதாரா-ஜுபின் ஜோசப் திருமணம் இன்று காலை கேரளாவில் உள்ள கொச்சின் அருகே நடந்தது.

திருமணத்தில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்தினார்கள். திருமணத்துக்கு பின் தொடர்ந்து நடிப்பேன் என்று உதயதாரா கூறி இருந்தார்.

தற்போது கைவசம் இருந்த இரண்டு மலையாள படங்களை முடித்து விட்டார். அடுத்த வாரம் இருவரும் தேனிலவுக்காக வெளிநாடு செல்கின்றனர். ஓரிரு மாதங்களுக்கு பின் மீண்டும் சினிமாவில் நடிப்பார் என தெரிகிறது.







comments | | Read More...

டர்ட்டி பிக்சரில் கவர்ச்சியாக நடிக்க ரூ 2.5 கோடி சம்பளமா?- நயன்தாரா





போன வருஷம் முழுவதும் நயன்தாராவுக்கு பெரிதாக படங்கள் இல்லை. அவர் நடித்த ஒரே படம் தெலுங்கு ஸ்ரீராமராஜ்யம்தான்.

ஆனால் இந்த ஆண்டு நயன்தாராதான் டாப் இடத்தில் இருக்கிறார். இந்திப் பட நடிகைகளுக்கு இணையாக கோடிகளில் சம்பளம்.

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற தங்கள் டர்ட்டி பிக்சர் படத்தை தமிழில் ஏக்தா கபூர் ரீமேக் செய்கிறார். இந்தப் படத்தில் நயன்தாராதான் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்தப் படத்தில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்பதால், அதற்காக ரூ 2.5 கோடியை சம்பளமாக நயன்தாராவுக்குத் தர ஏக்தா கபூர் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து நயன்தாரா தரப்பில் இதுவரை எதுவும் கூறப்படவில்லை. இப்போது மறுப்பு தெரிவித்துள்ளார்.

"டர்ட்டி பிக்சர் படத்தை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு ரொம்பப் பிடித்த படம். அதில் நடிக்க எனக்கும் ஆர்வமாக உள்ளது. ஆனால் இதுபற்றி யாரும் என்னிடம் பேசவில்லை என்பதுதான் உண்மை. அதற்குள் எனக்கு எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் செய்தி வெளியானது எப்படி என்றுதான் தெரியவில்லை," என்றார் நயன்தாரா.

பெரிய படங்களில் நடிகைகள் இப்படித்தான் கமிட் ஆகிறார்கள் போலிருக்கிறது!







comments | | Read More...

அஜித்தை பின்பற்றிய விஷால்





அஜித்தை ரசிகர்கள் அல்டிமேட் ஸ்டார் என அழைத்து வந்தனர். அவரது படங்களில் அஜித் பெயருக்கு முன்னால் இப்பட்ட பெயர் பயன்படுத்தப்பட்டது. போஸ்டர்களிலும் அல்டிமேட் ஸ்டார் அ� �ித் என்றே குறிப்பிடப்பட்டன.

ஆனால் அஜித் திடீரென்று அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டப்பெயரை பயன்படுத் தக்கூடாது என தடை விதித்து விட்டார். இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடமும் படங்களில் அதை பயன்படுத்த வேண்டாம் என்று கூறிவிட்டார். இதையடுத்து வெறும் அஜித் என்ற பெயரே இடம் பெற்று வருகிறது.

அவரது வழியில் விஷாலும் புரட்சித் தளபதி என்ற பட்டத்தை திடீரென உதறிவிட்டார். சமீபத்தில் ரிலீசான அவரது படங்களின் டைட்டில்களில் புரட்சித் தளபதி விஷால் என்றே குறிப்பிடப்பட்டன. ரசிகர்களும் புரட்சித்தளபதி என போஸ்டர்கள் ஒட்டினர். ரசிகர்கள் அந்த பட்டத்தை சூட்டியதாக விஷால் கூறினார்.

இந்த நிலையில் திடீரென புரட்சித் தளபதி என்ற பட்டத்தை தனது பெயரில் இருந்து நீக்கிவிட்டார். சமீபத்தில் அவர் நடிக்கும் சமர் படம் பற்றி போஸ்டர்களும் விளம்பரங்களும் வெளியாயின. அவற்றில் புரட்சித் தளபதி இடம் பெறவில்லை. வெறும் விஷால் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது.







comments | | Read More...

அமீர் கான் நிகழ்ச்சி :அமைச்சர் விமர்சனம்(வீடியோ)





பெண் சிசுகொல்லை குறித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் டி.வி., நிகழ்ச்சியில் குறிப்பிட்ட கருத்திற்கு ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ராஜ்குமார் சர்மா கண்டனம் தெரிவித்தார்.

அரசு பெண் சிசு கொலையை தடுக்க ‌ஏற்கனவே பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

ஆனால் நடிகர் அமீர்கானோ தான் தீவிர நடவடிக்கை எடுத்தது மாதிரி கருத்து கூறியுள்ளார். நாங்கள் பெண் சிசு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளோம் அது குறித்து நடவடிக்கைகளும் ‌எடுத்து வருகிறோம் என்றார்.

 அமீர்கான் ஒரு நடிகர். டி.வி., நிகழ்ச்சிக்கு சம்பளம் வாங்கி கொண்டு நடிப்பார். சத்யமேவ் ஜெயதே திட்டமில்‌லை.

அது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி. அவர் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்.   நீண்ட நாள் இதற்காக ‌வேலை செய்யமாட்‌டார். அப்படியே வேலை செய்ய வந்தால் அதை நான் வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.







comments | | Read More...

'இந்தியில் பாஷா? நோ நோ...' - பிரபு தேவா!




வதந்திகளுக்கு ரொம்ப இஷ்டமானவர்களில் பிரபு தேவாவும் ஒருவர். தினசரி அவரைச் சுற்றி ஏதாவது ஒரு வதந்தி வந்து கொண்டே இருக்க� �ம்.

அந்த வகையில் கடந்த இரு தினங்களாக அவர் பாஷா படத்த இந்தியில் இயக்கப் போவதாகவும் அதில் அஜய் தேவ்கன் நடிக்கப் போவதாகவும் தெய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து பிரபு தேவாவிடமே கேட்டபோது, "எங்கிருந்துதான் இந்த மாதிரி செய்திகள் வருகின்றனவோ தெரியவில்லையே... ரஜினி சார் நடித்த பாட்ஷா ஒரு க்ளாசிக் படம். இன்னும் எத்தனை ஆ� ��்டுகள் கழித்துப் பார்த்தாலும் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

அந்தப் படத்தை ரீமேக் செய்வதெல்லாம் முடியாத விஷயம். அந்த அழகு, நம்பகத்தன்மை எதுவுமே ரீமேக்கில் இருக்காது. நான் அஜய் தேவ்கனை வைத்து படம் பண்ணுவது உண்மைதான். ஆனால் அதன் க� ��ை வேறு," என்றார்.

இதற்கிடையே, ஜூன் 7-ம் தேதி சிங்கப்பூரில் நடக்கும் ஐஃபா விழாவின் துவக்க நாளில் பிரபு தேவா நடனமாடப் போகிறாராம். உடன் ஆடப் போகிறவர் சோனாக்ஷி சின்ஹா!



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger