News Update :
Powered by Blogger.

ட்ரையல் ரூமில் உள்ள பெண்களை ரகசியமாக படம்பிடித்த டெய்லர் tailor shoot video of girl in trail room

Penulis : Tamil on Thursday 26 September 2013 | 22:44

Thursday 26 September 2013

ட்ரையல் ரூமில் உள்ள பெண்களை ரகசியமாக படம்பிடித்த டெய்லர்
by abtamil

ராய்பூரில் டெய்லர் கடை நடத்தும் ஒரு நபர் பெண்களின் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராவை வைத்து ஆபாச படங்களை எடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராய்பூரில் டெய்லராக பணிபுரிபவர் அமித். இவர் பெண்கள் உடையை தைப்பதால், அவர்கள் ஆடை அளவு சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ள இவர் அவரது கடையில் ஒரு ட்ரையல் அறையை வைத்துள்ளார். பெரும்பாலான பெண்கள் ஆடைகளை தைக்க சரியான அளவு துணியை கொடுப்பதால் யாரும் அமித்தின் கடையில் உள்ள ட்ரையல் அறையை பயன்படுத்தமாட்டார்கள்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் ஆடையை வேண்டுமென்றே சிறியதாக தைத்த அமித், அதனை அப்பெண்ணிடம் கொடுத்தார். அமித் தைத்த துணியை பார்த்த அப்பெண் தான் சரியான அளவு துணி கொடுத்தப்போதிலும், ஏன் ஆடையை சிறியதாக தைத்ததாக கேட்டார். இதற்கு பதிலளித்த அமித், ஆடை சரியாக இருக்கும், வேண்டுமென்றால் ட்ரையல் அறையில் சரிபார்த்துக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.

இதனால் அப்பெண் ட்ரையல் அறைக்கு சென்றார். அங்கு ஏற்கனவே பல துணிகள் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த அவர், அதனை பிரித்து பார்த்தப்போது, அதில் கேமரா மொபைலில் இவரும் வேறு சில பெண்களும் ஆடை மாற்றிய காட்சிகள் பதிவாகியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அந்த மொபைலை எடுத்துக்கொண்டு போலீசிடம் சென்ற அப்பெண், டெய்லர் மீது புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், உடனடியாக அமித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Show commentsOpen link

comments | | Read More...

போலி பாஸ்போர்ட்டில் சவூதி அரேபியா சென்ற நாகர்கோவில் வாலிபர் கைது fake passport Saudi Arabia Nagercoil youth arrest

போலி பாஸ்போர்ட்டில் சவூதி அரேபியா சென்ற நாகர்கோவில் வாலிபர் கைது fake passport Saudi Arabia Nagercoil youth arrest
Tamil NewsToday, 05:30

அவனியாபுரம், செப். 26–

நாகர்கோவிலை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் சுயம்பு (வயது35). இவர் போலி பாஸ்போர்ட் எடுத்து சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது சுயம்பு போலி பாஸ்போர்ட் எடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் அவரை திருப்பி அனுப்பினர்.

இன்று காலை விமானத்தில் சுயம்பு மதுரை வந்தார். போலி பாஸ்போர்ட் மூலம் சவூதி அரேபியா சென்ற அவரை அதிகாரிகள் பிடித்து பெருங்குடி போலீசில் ஒப்படைத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பழனி, சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சுயம்புவை கைது செய்தனர்.

...
Show commentsOpen link

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger