News Update :
Powered by Blogger.

வெள்ளைக்காரன் காலத்துல நல்லா இருந்தோமே..ஆர்.எஸ்.எஸ்.புலம்பல்!

Penulis : karthik on Thursday 23 February 2012 | 22:41

Thursday 23 February 2012

 
 
ஆங்கிலேயர் ஆட்சியல் இந்தியா தற்போதைவிட நன்றாக இருந்ததாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக்வத் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக்வத் தெரிவித்ததாக முன்னணி செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது,
 
பணபலமும், ஆள்பலமும் உள்ளவர்கள் தான் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். விண்ணைத் தொடும் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகின்றனர். கடந்த 64 ஆண்டுகளில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் ஆட்சியில் இருந்துள்ளன. இருப்பினும் நாட்டின் நிலைமையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எது தவறாகப் போனது என்பதை மக்கள் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.
 
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசையும் தாக்கியுள்ளதாக அமைந்துள்ளது பக்வத்தின் பேச்சு. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முகம்தான் பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆர்.எஸ்.எஸ். பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ், இடதுசாரிகள் குற்றம்சாட்டி வரும் நேரத்தில் இந்தியா ஆங்கிலேயர்கள் காலத்தில் சிறப்பாக இருந்ததாக பக்வத் தெரிவித்துள்ளார்.
 
2007ம் ஆண்டு நடந்த ரயில் தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள். இந்த தாக்குதல் வழக்கில் இந்தூரைச் சேர்ந்த ஆர். எஸ். எஸ். ஆதரவாளர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




comments | | Read More...

ஓரினச்சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது: மத்திய உள்துறை அமைச்சகம்

 
 
உலகில் ஏனைய நாடுகளை ஒப்பிடுகையில் பாரம்பரியத்திலும், கலாச்சாரத்திலும் வித்தியாசப்பட்டது. மேலை நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரின சேர்க்கையை இந்தியாவில் நாம் அனுமதிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த 2009 ல் ஒரின சேர்க்கைக்கு அனுமதி வேண்டும் என கோரி டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட் ஒத்திசைவு கொண்ட ஒரினத்தவர்கள் சேர அனுமதி மறுக்க வேண்டியது அவசியமில்லை என் தீர்ப்பளித்தது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அபிடவிட்டில் : ஒரின சேர்க்கை இயற்கைக்கு எதிரானது. இது சமூக சூழலை கெடுத்து விடும். மேலும் எய்ட்சை பரப்பும் தன்மை கொண்டது. பிற நாடுகளில் இருந்து இந்தியா வேறுபட்டது. மேலை நாட்வர்களை நாம் பின்பற்ற முடியாது. நமது நாட்டிற்கென தனிச்சிறப்பு உண்டு இதனால் இதனை அனுமதிக்க முடியாது. குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை சட்டங்களை பதம் பார்க்கும் அளவில் இருப்பதால் இது பெரும் சட்ட சவால்கள் மாற்றத்தை கொண்டு வரவேண்டியது வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
சுகாதார அமைச்சகம் தனது கருத்தில முரண்பட்டிருந்தது. இதன் மூலம் எய்ட்ஸ் பரவாது என்று கூறியிருந்தது. இதனால் எய்ட்ஸ் பரவுமா இல்லையா என தீவிரமாக கண்டுபிடிக்குமாறு சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது. மேலும் இது போன்ற ஒரின சேர்க்கையை எத்தø நாடுகள் அங்கீகரிக்கிறது? எத்தனை நாடுகளில் குற்றச்செயல்களாக பார்க்கப்டுகிறது என்ற விவரத்தை தருமாறும் நீதிபதிகள் அரசு தரப்பு வக்கீலிடம் கேட்டு கொண்டனர்.



comments | | Read More...

தோனி Vs சேவக் நிறுத்துவார்களா சண்டையை?

 

கேப்டன் தோனி, சேவக் இடையிலான மோதல் முற்றுகிறது. சுழற்சி முறை "பார்முலா' தொடர்பாக இருவரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதால், இந்திய அணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையில் பி.சி.சி.ஐ., தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டுமென கபில் தேவ் வலியுறுத்தியுள்ளார்.
 
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் சொதப்புகிறது.
 
இந்தச் சூழலில், "டாப்-ஆர்டரில்' சச்சின், சேவக், காம்பிர் ஆகியோர் "பீல்டிங்கில்' மந்தமாக செயல்படுவதால், சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவர் என்று தோனி அதிரடியாக அறிவித்தார். இதற்கேற்ப யாராவது ஒருவருக்கு வாய்ப்பு மறுத்தார்.
 
தவிர, முத்தரப்பு தொடரின் அனைத்து போட்டிகளிலும் ரோகித் சர்மா இடம் பெறுவார் என குறிப்பிட்டார். இதனை கேட்டு காம்பிர் ஆத்திரமடைந்தார். தோனிக்கு எதிரான கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட்டார். சேவக்கும் போர்க்கொடி உயர்த்தினார்.


தோனிக்கு எதிர்ப்பு:
 
இவர்களுக்கு, இலங்கைக்கு எதிரான கடந்த போட்டி சரியான சந்தர்ப்பமாக அமைந்தது. இதில், தடை காரணமாக தோனி பங்கேற்கவில்லை. கேப்டன் பொறுப்பை சேவக் ஏற்றார். தோனி சொன்னதற்கு நேர்மாறாக "டாப்-ஆர்டரில்' சச்சின், சேவக், காம்பிர் ஆகிய மூவரும் இடம் பெற்றனர். அடுத்து தோனிக்கு மிகவும் பிடித்த ரோகித் சர்மாவை தடாலடியாக நீக்கினர்.
 
இது குறித்து சேவக் கூறிய கருத்துக்கள் அணிக்குள் நிலவும் சண்டையை உறுதி செய்தது. இவர் கூறுகையில்,""ஆஸ்திரேலியாவில் அடுத்த உலக கோப்பை தொடர் நடப்பதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தான் தோனி சொன்னார். எங்களது "பீல்டிங்' பற்றி என்ன சொன்னார் என்று தெரியவில்லை.
 
கடந்த 10 ஆண்டுகளாக ஒரே மாதிரி தான் "பீல்டிங்' செய்கிறோம். இலங்கைக்கு எதிரான போட்டியில் ஜெயவர்தனா அடித்த பந்தை பறந்து சென்று நான் "கேட்ச்' பிடித்ததை பார்த்தீர்கள் அல்லவா? இப்பிரச்னை பற்றி தோனியிடம் நான் பேச வேண்டிய அவசியமில்லை. அவர் தான் அணியின் தலைவர்.
 
அவரும் பயிற்சியாளரும் சேர்ந்து "டாப்-ஆர்டர்' வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்பினால், எனக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. என்னை பொறுத்தவரை அனைத்து போட்டிகளிலும் விளையாட தயாராக இருக்கிறேன்,''என்றார்.


அணியில் பிளவு:
 
முன்னணி வீரர்களான தோனி, சேவக் இடையே ஏற்பட்டுள்ள மோதல், அணியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் "மீடியா'வில் வெளிப்படையாக பேசுவது, கோஷ்டி மோதலை வளர்த்தது. இது அணியின் ஆட்டத்திறனை பாதித்ததால், தோல்வி தொடர்கதையாகிறது. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, பி.சி.சி.ஐ., உடனடியாக தலையிட வேண்டும் என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து கபில் தேவ் கூறியது:
 
தற்போதைய பிரச்னை ஆஸ்திரேலிய மண்ணில் அரங்கேறியுள்ளது. அங்கே என்ன நடக்கிறது என்று நமக்கு தெளிவாக தெரியாது. அணியில் பிளவு என்று கூற மாட்டேன். வீரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவு தான். கேப்டன் என்ற முறையில் தோனியின் கருத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும். அணி மற்றும் தேசத்தின் நலன் கருதி, இப்பிரச்னையில் பி.சி.சி.ஐ., தலையிட்டு வீரர்களுடன் பேசி, சுமூக தீர்வு காண வேண்டும்.
 
பெற்றோர்களுக்கு இடையே கூட கருத்து வேறுபாடு உள்ளது. எனவே, பிரச்னையை பெரிதாக்க தேவையில்லை. நாட்டின் பெருமையை காக்க வேண்டும் என்பதை வீரர்கள் உணர வேண்டும். ஏதாவது தவறாக புரிந்து கொண்டிருந்தால், அதனை சரி செய்ய வேண்டும்.
 
உலக சாம்பியன் என்பதற்கேற்ப சிறப்பாக விளையாடும்படி இந்திய வீரர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். களத்தில் கடினமாக போராடி வெற்றியை வசப்படுத்துவது அவசியம். ஆஸ்திரேலிய தொடர் முடித்து தாயகம் திரும்பிய பின், அணியின் தவறுகள் பற்றி பி.சி.சி.ஐ., மற்றும் தேர்வாளர்கள் விவாதிக்கலாம்.
 
இந்திய அணியின் எதிர்காலம் பற்றி உறுதியான முடிவு எடுக்க வேண்டும். "சீனியர்' வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தால் நல்லது. ஒருவேளை நீக்கப்பட்டால், அதற்கான காரணத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


சச்சின் ஓய்வு:
 
சச்சினை பொறுத்தவரை உலக கோப்பை வென்ற கையுடன் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து தான். அவர் தான் ஓய்வு பற்றி முடிவு எடுக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் பாண்டிங்கை நீக்குகிறார்கள். அதே பாணியை இங்கே பின்பற்ற முடியாது. இரு நாடுகளிலும் வெவ்வேறு வகையான அணுகுமுறை உள்ளது.
 
இவ்வாறு கபில் தேவ் கூறினார்.
comments | | Read More...

பசங்க பாண்டியராஜின் அடுத்த படத்தில் சீயான்

 


'மெரினா' படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார் பசங்க பாண்டிராஜ்.

சமீபத்தில் வெளியான பாண்டிராஜின் 'மெரினா' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை 'பசங்க புரடக்‌ஷன்ஸ்' தயாரிப்பில் வந்தது. மெரினாவில் 'வணக்கம், வாழவைக்கும் சென்னை..' என்று தொடங்கும் இந்தப் பாடலில் விக்ரம், பிரகாஷ் ராஜ், இயக்குனர்கள் அமீர், சசிகுமார், சினேகா, விமல் ஆகியோர் நடித்துள்ளனர். இச்சமயத்தில் விக்ரமுக்கும், இயக்குனர் பாண்டிராஜீக்கும் ஒரு நல்ல நட்பு உருவானது. இதைதொடர்ந்து பாண்டிராஜ், விக்ரமை வைத்து புது படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

தற்போது விக்ரம் டைரக்டர் விஜயின் "தாண்டவம்" படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷீட்டிங் டெல்லி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் படமாக்கப்படுகிறது. இதன் வேலைகள் முடிவடையும் நிலையில், விக்ரம் அடுத்த கட்ட படத்திற்கு தயாராகுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
comments | | Read More...

மூன்று நாள்களுக்குள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கருணை மனு விளக்கம் கோரல்

 

தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களின் நிலவரம் குறித்த விவரங்களை மூன்று நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் மறு ஆய்வு மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கோ, உச்ச நீதிமன்றத்துக்கோ மாற்றக் கோரும் மனு மீது பின்னர் விசாரணை நடத்தப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தேவேந்திரநாத் புல்லரின் மறுஆய்வு வழக்கு, நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, சுதான்ஷு ஜோதி முகோபாத்யாய ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் விவரங்களை மத்திய அரசு இதுவரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இதற்குப் பதில் அளித்த மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் சித்தார்த் தவே, ""கருணை மனுக்களின் விவரங்களை அளிக்கக் கோரி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் அதற்கு இன்னும் பதில் வரவில்லை´´ என்று கூறினார்.

கருணை மனுக்கள் தாக்கல் செய்து 8 ஆண்டுகள் முதல் 11 ஆண்டுகள் வரை கடந்த பிறகு அவற்றின் மீது இன்னும் முடிவு செய்யாமல் இருக்கும் நடவடிக்கை ஏற்புடையதாக இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி கருணை மனு தாக்கல் செய்தவர்கள் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளன. அதனாலும் காலதாமதம் ஏற்படுவதாக கூடுதல் தலைமை வழக்குரைஞர் தெரிவித்தார். ஆனால், அவரது விளக்கத்தை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.

கருணை மனுக்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் அனைத்து மாநில உள்துறைச் செயலர்கள் மூன்று நாள்களுக்குள் தபால், தொலைபேசி அல்லது பிரதிநிதிகள் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

இதைத் தொடர்ந்து, புல்லர் தொடர்பான மறு ஆய்வு வழக்கில் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 1ம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் மறுஆய்வு மனு:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் கடந்த ஆண்டு நிராகரித்தார். இதையடுத்து, தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகிறது.

"இந்த வழக்கில், நீதிபதி, வழக்குரைஞர்கள், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரும் தமிழ் மொழி பேசுபவர்கள். அதனால், வழக்கை வேறு மாநில உயர் நீதிமன்றத்துக்கோ, உச்ச நீதிமன்றத்துக்கோ மாற்ற வேண்டும்´´ என்று கோரி மூப்பனார் பேரவைத் தலைவர் எல்.கே. வெங்கட் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

எல்.கே. வெங்கட் தாக்கல் செய்த மனு தொடர்பாக, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் ராம் ஜேட்மலானி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் ஆஜராகி வருகிறார்கள்.

வெங்கட் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நந்தகுமார், புல்லர் வழக்குடன் தமது கட்சிக்காரரின் மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால், புல்லர் வழக்கில் முடிவு செய்த பிறகே, வெங்கட் மனு மீது வேறு திகதியில் விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

comments | | Read More...

அடுத்த நமீதா ஆவதற்கான அனைத்து சிறப்பம்சங்களையும், கொண்ட சஞ்சானா!


ரேணிகுண்டா புகழ் சஞ்சனாவுக்கு சென்னையில் உள்ள தனது வீட்டிலேயே தங்கிவிட விருப்பம்தான்… ! ஆனால் தான் வளர்க்கும் பாசமான முயல்கள் என்னாவது.. ?அதனால் வாரத்துக்கொருமுறை மும்பை ஓடிவிடுகிறார்.வளர்ப்பு பிராணியாக அதாவது வீட்டிலேயே அதற்கென அறை ஒதுக்கி மெத்தை போட்டு அழகாக வளர்கிறார். என்ன முயல் மீது வித்தியாச பாசமென்றால்… மென்மையான மனதுடையவை அவை. நாய்களுக்கு கூட அதற்கென ஒரு குணம் உண்டு.. ஆனால் முயல் அற்புதமான பிராணி..

ரொம்ப அமைதியாக இருக்கும்..எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் அதைப்பார்த்த நொடியில் யோகா செய்ததுபோல் ஒரு நிம்மதி பரவும்.. என்ன கவனித்துக்கொள்வது கொஞ்சம் கஷ்டம்.. எனக்கு அவைகளை கவனிப்பதில் தான் சந்தோசமே .. இப்போது நான்கு குட்டிகள் வேறு போட்டிருக்கிறது என்று துள்ளிக் குதிக்கிறார்.. சரி என்ன படங்கள் கைவசம் என்றால்..

ரேணிகுண்டாவில் அவ்வளவு அழுத்தமான ரோல் கிடைத்தது.. இயக்குனர் பன்னீர் செல்வம் என்னை அவ்வளவு மெனக்கிட்டு மாற்றினார். அதேபோல் அழுத்தமான பாத்திரங்களில் நடிக்கவே காத்திருந்தேன். இடையில் கேட்டுக்கொண்ட நண்பர்களுக்காக கோ மறுபடியும் ஒரு காதல், மயங்கினேன் தயங்கினேன், வெயிலோடு விளையாடு போன்ற படங்களில் எல்லாம் ஒரு பாட்டுக்கு ஆடிக் கொடுத்திருக்கிறேன்.

சினிமாவில் நண்பர்கள் முக்கியம். அதன்பிறகு கிடைத்தார் இயக்குனர் கணேசன் காமராஜ். யாருக்குத் தெரியும் படத்தில் ஹீரோயினாக அதிர்ந்து பயந்து பயப்படவைக்கிற நடிப்பைக் கொட்டியிருக்கேன். அடுத்து அதியமான் சார் இயக்கும் தப்புத் தாளங்கள் படத்தில் ஒரு கிளாமர் ஹீரோயின்… சி எஸ் அமுதன் சார் இயக்கும் இரண்டாவது படம் படத்திலும் நடிக்கிறேன்.

இப்போதான் ஸ்டார்ட் பண்ணியிருக்கேன்.. இருந்தாலும் அவார்டுக்குரிய படங்களில் நடிக்க பெரிய ஆசை இருக்கு.. பணம் பற்றி கவலையில்லை.. ஒரு சிலருக்கு உதவியாக இருக்கவும், என் தேவைக்கு பணம் இருந்தால் போதும்.. மற்றபடி நல்ல கதாபாத்திரங்கள்… நல்ல நடிகை என்ற பெயர், புகழ் தான் வேண்டும்.. ஹோம்லி, கிளாமர் எது உங்க ரூட்? ரெண்டுமே பண்ணனும்.

எதையும் விட்டு வைக்கக்கூடாது. சவாலா எடுத்து நடிக்கணும். ஷோ கேஸ் மாதிரி இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒண்ணு கைத்தட்டல் வாங்கணும்.. இல்லைன்னா, கிரங்கடிக்கணும் பாஸ்.. நமக்கு ரெண்டு ரூட்டுமே ஓகே தான் என்கிறார். உங்களை அடுத்த நமீதா என்கிறார்களே கோடம்பாகத்தில்..

சிம்ரன், நமீதா இந்த இரண்டு பேருமே கவர்ச்சியில் தங்களுகென்று தனி முத்திரை பதித்து விட்டார்கள். அதேபோல நானும் தரமான கவச்சியில் கலக்கவே விரும்புகிறேன். தரமான கவர்ச்சியென்றால் என கதாபாத்திரம் கவர்ச்சியாக இருக்கலாம் ஆனால் அது ரசிகர்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

தப்பாக அவர்களை தூண்டக்கூடாது. என்னை உதாரணமாக வைத்து நாளை வரும் புதிய நடிகையிடம் நீங்கள் அடுத்த சஞ்சனாவா என்று நீங்கள் கேட்க வேண்டும். குறைந்த பட்சம் அதற்காகவாவது நான் உழைக்க வேண்டும் அல்லவா? சஞ்சானாவிடமிருந்து அசத்தலான பதில் வருகிறது.

comments | | Read More...

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் பொலீசாரிடம் சிக்கினர்

 


சென்னை மாநகரில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் ஆணையாளர் அபய் குமார்சிங், விபசார தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் கிங்ஸ்லின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சாண்டி யாகோவுக்கு சினிமா படப் பிடிப்பு இல்லாத நாட்களில் துணை நடிகைகளை ஆசை வார்த்தை கூறி விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக தகவல் கிடைத்தது.

ஒரு பெண்ணிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். வாடிக்கையாளர் போல் பேசினர். மறுமுனையில் பேசிய பெண் தன்னிடம் அழகான இளம் துணை நடிகைள் இருவர் இருப்பதாகவும் துணை நடிகைக்கு ரூ. 25 ஆயிரம், அவரது தங்கைக்கு ரூ. 15 ஆயிரம் என ரூ. 40 ஆயிரம் பணத்துடன் குறிப்பிட இடத்திற்கு வந்தால் அழகான துணை நடிகைகளை அழைத்து சென்று உல்லாசமாக இருக்கலாம் என கூறினார்.

இதற்கு சம்மதம் தெரிவித்து வாடிக்கையாளர் போல் பேசிய விபசார தடுப்பு பிரிவு போலீசாரை கிண்டி ரெயில் நிலையம் அருகில் பணத்துடன் வருமாறு கூறி வரவழைத்தார்.

மாறு வேடத்தில் இருந்த போலீசாரிடம் மாடர்ன் உடையில் இருந்த பெண்களை காட்டி பணம் வாங்க முற்பட்டபோது அப்பெண் விபசாரம் செய்வதை உறுதி செய்த விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அப் பெண்ணை கைது செய்து அங்கு அவருடன் விபசாரத்தில் ஈடுபட வைத்திருந்த 2 இளம்பெண்களை மீட்டனர்.

விசாரணையில் விபசாரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சோபனா (46) என்றும் இவர் சில திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாகவும் தற்போது வெளிவர இருக்கும் ஒரு சினிமாவில் நடித்திருப்பதாகவும் மறைந்த பழம் பெரும் நடிகர் ராமதாசின் நெருங்கிய உறவினர் என்பதையும் தெரிவித்தார்.

மேலும் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்த சகோதரிகள் இருவரை வைத்து படப்பிடிப்பு இல்லாத நாட்களில் விபசார தொழில் செய்து வந்தது தெரிய வந்தது.மீட்கப்பட்ட அப்பெண்கள் சில படங்களில் துணை நடிகைகளாக நடித்து இருக்கிறார்கள்.

இதே போன்று சென்னை சூளைமேடு பகுதியில் சினிமா துறையில் வாய்ப்பு தருவதாக கூறி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஜெயராஜ், மோசஸ் என்பவரையும், சாந்தி என்ற பெண்ணையும் கைது செய்தனர். அவர்களுடன் 4 இளம்பெண்களையும் போலீசார் மீட்டனர். சாந்தி சில திரைப்படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருப்பது விசாரணையில் தெரிந்தது.
comments | | Read More...

வித்யா பாலனின் ஆபாச குலியல் வீடீயோ - இணைய பரபரப்பு



நடிகை வித்யாபாலனின் கவர்ச்சி வீடியோ ஒன்று You Tube இல் வெளியாகியுள்ளது. இவரைப் புகைப்படம் எடுக்கச் சென்ற புகைப்படக்காரர்கள் இவரை எவ்வாறு புகைப்படம் எடுக்கிறார்கள் என்பதனையே ஒரு வீடியோவாக எடுத்துவிட்டார்கள். இந்த வீடியோ இப்பொழுது You Tube இல் வெளியாகியுள்ளது. You Tube இல் வெளியிட்டால் சொல்லவா வேண்டும்..? செக்கனில் இணையப்பரப்பில் இவர் வீடியோ பிரபல்யமாகிவிட்டது
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger