News Update :
Powered by Blogger.

நான் 24 மணித்தியாலமும் செக்ஸ் பற்றியே யோசிப்பேன் – செக்ஸ்சில் பைத்தியமான பெண்..!

Penulis : karthik on Sunday 29 January 2012 | 22:45

Sunday 29 January 2012

1000 காதலர்களைக் கொண்டு உலக சாதனை படைத்துள்ளார் ஒரு பெண். ஆம், Crystal
Warren என்ற பெயர் கொண்ட இந்தப் பெண்ணுக்கு தற்போது 42 வயது தான்
ஆகின்றது.
17 வயதிலிருந்து தனது காதல் வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறார். பதினேழு
வயதில் அவளுக்கு 40 காதலர்கள் இருந்திருக்கிறார்கள். செக்ஸ் இல்
பைத்தியம் போல் இருக்கும் இந்தப் பெண் ஒரு சில்லறை விற்பனை நிலையத்தின்
மேலாளர் ஆவார்.
குறித்த பெண் Daily Mirror பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில்…
மனிதர்கள் வழமையாக இரவானதும் அதுவும் மின் விளக்கை அணைத்த பின்னர் தான்
செக்ஸ் பற்றி யோசிப்பார்கள். ஆனால் நான் 24 மணித்தியாலமும் அதாவது நாள்
முழுவதும் செக்ஸ் பற்றியே யோசிப்பேன் என்றார்.
வார இறுதி நாட்களில் கோப்பி சொப், பப்ஸ் போன்றவற்றுக்குச் சென்று அங்கு
தகுந்த ஆண் நண்பர்களை வீட்டுக்கு கூட்டி வருவேன்.
சிலநேரங்களில் 24 மணிநேரங்களில் ஏழு ஆண்களுடனும் உடலுறவு கொண்டு
இருக்கிறேன். நான் பாலியலில் வெறியனாகி இருந்தேன் என்கிறார் அவர்.
comments | | Read More...

இந்திய அணியின் படுதோல்வியைகொண்டாடும் பாக்கிஸ்தான்

அவுஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி படு தோல்வியடைந்ததை பாகிஸ்தான்
ஊடகங்களும் , ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான்
வெற்றி பெற்றுள்ளதற்கு அந்த அணி வீரர்களையும் , அணித்தலைவர் மிஸ்பா உல்
ஹக்கையும் இந்திய ஊடகங்கள் பாராட்டியுள்ளன.
ஆனால் பாகிஸ்தான் ஊடகங்களோ , இந்தியா தோல்விக்கு அதிக முக்கியத்துவம்
கொடுத்து செய்திகளை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கட் ரசிகரும் , டாக்டருமான அம்பிரீன்
என்பவர் கூறுகையில் , அவுஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வி கண்டுள்ளதும்
, பாகிஸ்தான் , இங்கிலாந்தை வீழ்த்தியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.
பாகிஸ்தானிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு
அந்நாட்டுஊடகங்கள் அறிவுரை கூறியிருப்பது எங்களுக்கு மிகுந்த மனநிறைவை
அளிக்கிறது என்றார்.
முன்னாள் அணித்தலைவர் மொயின் கூறுகையில் , ஐ.பி.எல் போட்டியில் எங்கள்
வீரர்களை சேர்த்துக் கொள்ள இந்தியா மறுக்கும் நிலையில் , பாகிஸ்தான்
சிறப்பாக ஆடி வெற்றிபெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
ஐ.பி.எல் போட்டியில் எங்களை புறக்கணிப்பது கோபத்தை ஏற்படுத்துகிறது.
இப்போது எங்கள் அணியில் சிறந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்
கொண்டிருக்கிறது என்றார்.
comments | | Read More...

18 வயதிலேயே திருமணத்திற்கு தயாராகி விட்டேன் - பத்மபிரியா

தான் 18 வயதிலேயே திருமணத்திற்கு தயாராகி விட்டதாக நடிகை பத்மபிரியா
தெரிவித்துள்ளார். கொலிவுட்டில் பொக்கிஷம் , பட்டியல் , தவமாய்
தவமிருந்து ஆகிய திரைப்படங்களில் பத்மபிரியா நடித்துள்ளார்.
தற்போது கொலிவுட்டில் இருந்து விலகி அமெரிக்காவில் படிக்க பத்மபிரியா
தயாராகி வருகிறார்.
தனது திருமணம் குறித்து நடிகை பத்மபிரியா கூறியதாவது , நான் காதலித்து
திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பில்லை.
ஆனால் நிச்சயம் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்வேன். 18
வயதிலேயே திருமணத்திற்கு தயாராகிவிட்டேன். ஆனால் இன்று வரை நல்ல
மாப்பிள்ளை தான் கிடைக்கவில்லை.
முதன் முதலாக என்னை பெண் பார்க்க வந்தவர் எனது வங்கிக் கணக்கில் எவ்வளவு
பணம் இருக்கிறது என்று கேட்டார். அடுத்து வந்தவர் தனது 2
குழந்தைகளுக்கும் தாயாக இருக்கவேண்டும் என்றார். அதனால் அவர்கள்
இருவரையும் நிராகரித்துவிட்டேன்.
திருமணம் என்பது ஒரு அற்புதமான வரமாகும். எனவே கண்டிப்பாக திருமணம்
செய்து கொள்வேன் என்று நடிகை பத்மபிரியா தெரிவித்துள்ளார்.
எம்.பி.ஏ. படித்திருக்கும் பத்மபிரியா தற்போது நியூயார்க்
பல்கலைக்கழகத்தில் பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன் படிக்க உள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
comments | | Read More...

திரிஷாவுக்கு குவியும் பாராட்டுக்கள்

தெலுங்கில் திரிஷா நடித்த பாடிகார்ட் திரைப்படத்தின் வெற்றியைத்
தொடர்ந்து அவருக்குபாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கொலிவுட் , டோலிவுட்
, பாலிவுட் என்று மூன்று மொழிகளிலும் நாயகி திரிஷா பரபரப்பாக நடித்துக்
கொண்டிருக்கிறார்.
கொலிவுட்டில் தல அஜீத்துடன் நடித்த மங்காத்தா திரைப்படம் ரசிகர்கள்
மத்தியில் பெரிய வெற்றி அடைந்துள்ளது. இதையடுத்து நடிகை திரிஷா
தெலுங்கில் நடித்த பாடிகார்ட் வெற்றி அடைந்துள்ளது.
பாடிகார்ட்டில் திரிஷாவின் நடிப்பைப் பார்த்து திரையுலகத்தினர்
பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். இதனால் நாயகி திரிஷா மகிழ்ச்சியில்
இருக்கிறார். தற்போது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடனும் , தமிழில்
விஷாலுடனும் சமரன் திரைப்படத்திலும் திரிஷா நடிக்கிறார்.
இரு படங்களும் இன்னொரு நிலைக்கு தன்னை கொண்டு செல்லும் என்று நாயகி
திரிஷா எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்
comments | | Read More...

யாழ் மக்களிடம் சொல்ல முடியாத ஏதோ ஒரு துன்பம் இருப்பதை உணர்ந்தேன்

யாழ்ப்பாணத்தில் எல்லோர் முகத்திலும் புன்னகை இருந்தாலும் , அவர்களது
புன்னகைக்குப் பின் சொல்ல முடியாத ஏதோ ஒரு துன்பரேகை இழையோடுவதை
உணர்ந்தேன் என இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்
தெரிவித்துள்ளார். நான் கண்ட அந்த காட்சி மனதை உருக்கும் விதத்தில்
இருந்தது.
இலங்கைத் தமிழ் மக்கள் ஒரு ஜனநாயக நாட்டில் , மதிப்புடனும் ,
சுயமரியாதையுடனும் வாழ தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுக்க தன்னுடைய
இலங்கைப் பயணமானது ஒரு முன்னோடியாக இருக்கும் என்று நம்புகிறார் எனவும்
13+ அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை விரைவில் நடைமுறைப்படுத்த இலங்கை
ஜனாதிபதியை வலியுறுத்தினார் எனவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அவர் , தனது அமைதிப்பயணம் குறித்து
தமிழக நாளேடு ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தோல்வியில்லாமல் வெற்றியில்லை.கண்ணீர் எப்போதும் கரிப்பாகவே இருக்கும்.
ஆனாலும் , ஓரு சில சமயங்களில் அது இன்பமாகவும் இருக்கும். அந்த இன்பம்
பெறவேண்டுமானால் பல புயல்களைக் கடக்கும் மன உறுதியைப் பெறவேண்டும்.கடந்த
21 ஆம் திகதிஇரவு இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்தபோது இரண்டு முக்கியமான
விடயங்களைப் பற்றி அவரிடம் பேசினேன்.
அதாவது , மும்மொழித் திட்டத்தை முழுமையாக இலங்கையின் அனைத்து
பகுதிகளுக்கும் செயற்படுத்துவதில் இந்தியாவின் ஆதரவைத் தெரிவித்து விட்டு
, இலங்கையின் 13 ஆவது அரசமைப்புத் திருத்த சட்டத்தை மேம்படுத்தி , 13
பிளஸ் என்ற அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை விரைவில் இலங்கையில்
நடைமுறைப்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதியை வலியுறுத்தினேன்.
இலங்கையில் உள்ள எல்லா மாகாணங்களையும் , அதாவது , வடக்குக் கிழக்கு ,
தெற்கு , மத்திய , மேல் மாகாணங்களையும் மற்ற மாகாணங்களையும் ஜனநாயக
முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுயநிர்ணய அதிகாரம் கொண்ட மாகாணங்களாக
மாற்றியமைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினேன் என்றார் .
comments | | Read More...

வைரமுத்துவின் பாடல்கள் ஓய்வதில்லை..அன்று கார்த்திக், ராதாவுக்கு, இன்று மகன், மகளுக்கு!

அன்று கார்த்திக், ராதா இணைந்துநடித்த அலைகள் ஓய்வதில்லை படத்திற்கும்,
அதன் பிறகு அவர்கள் நடித்த பல படங்களுக்கும் பாடல்கள்
எழுதியவைரமுத்துவின் கைகள் இன்று அவர்களது மகன், மகளுக்கும் பாடல்கள்
எழுதியுள்ளது.
தமிழ் சினிமாவில் இது ஒரு அரிய நிகழ்வு. இரு தலைமுறையினருக்கு அதுவும்,
ஒரே நடிகர், நடிகைக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் ஒரே கவிஞர் பாடல்கள்
எழுதுவது என்பது மிகவும் அரியதாகும். அந்த சாதனையை வைரமுத்து இப்போது
நிகழ்த்தியிருக்கிறார்.
பாரதிராஜாவின் இயக்கம், இசைஞானி இளையராஜாவின் இசை மழை ஆகியவற்றுடன்
இணைந்து வைரமுத்துவின் பாடல் வரிகளும் புகழ் குடையி்ல அன்று அலைகள்
ஓய்வதில்லை மூலம் இளைப்பாறியது. அப்படத்தில் ஜோடியாக அறிமுகமானவர்கள்தான்
கார்த்திக் மற்றும் ராதா.
அன்று விடலைகளாக இருந்த இருவரும் இன்று தங்களது விடலைப் பருவ வாரிசுகளை
களம் இறக்கி நடிக்க விட்டுள்ளனர். 1982ம் ஆண்டு வெளியான அலைகள்
ஓய்வதில்லை படத்தில் இடம் பெற்ற ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடலை
வைரமுத்து எழுதினார். இசைஞானியின் இசை மெட்டுக்களில் இந்த ஆயிரம் தாமரை
மொட்டுக்கள் தொட்ட உச்சத்தை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இன்று காலம் திரும்பியுள்ளது. கார்த்திக்கின் மகன் கெளதம் முத்துராமன்
மணிரத்தினம் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தில் கெளதமுக்காக
வைரமுத்து பாடல் எழுதியுள்ளார்.
அதேபோல பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடி வீரனும் படத்தில் ராதாவின்
மகள் கார்த்திகா நடிக்கிறார். அதற்கும் வைரமுத்து வரிகள் சூட்டியுள்ளார்.
comments | | Read More...

அரவாணிகள்!!!

திரு நங்கைகள் என்பவர்கள் யார் என்பதைப்பற்றிய சிறு அலசலையே இங்கு
வாசிக்கப்போகிறீர்கள்.
சமூகத்தில் 9, அலி, அரவாணி என பல பெயர்களால் அழைக்கப்பட்டுக்கொண்டு
இருக்கும் இவர்களை ஆணா, பெண்ணா என்று வகைக்குறிப்பது கடினம் அல்லது
முடியாது. அவர்காளின் சமூக நடத்தைகளை விடுத்து ஆரம்பத்தில் விஞ்ஞான
மருத்துவ ரீதியில் ஆராய்வோம்.
23 ஜோடிகுறோமோசோம்களில் ( தாயிடம் இருந்து 23 தந்தையிடம் இருந்து 23)
இருந்து உருவாகும் ஒரு குழைந்தையின் உடலில் பல்வேறு ஹோர்மோன்கள்
தொழிற்படுகின்றன.
அவற்றில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் என்பவை ஆண்
பெண்தன்மையைத்தீர்மானிக்கும் ஹோர்மோன்களாக இருக்கின்றன.
ஒரு ஆணிற்கு டெஸ்டோஸ்டிரோன் ஹோர்மோன் அதிக அளவில் சுரக்கும்அதேவேளை சிறிய
அளவில் ஈஸ்ட்ரோஜனும் இருக்கும்.
பெண்ணாக இருப்பின் ஈஸ்ட்ரோஜன் ஹோர்மோன் அதிகமாகவும் குறைந்த அளவில்
டெஸ்டோஸ்டிரோனும் இருக்கும்.
( சிசு உருவாகி 6-7 வாரங்களின் பின்னரே ஆண் பெண் ஹோர்மோன்கள்
உற்பத்தியாகின்றன, எனவே ஆணிற்குபெண்ணின் அடையால உறுப்புக்களும்
பெண்ணிற்கு ஆணின் அடையால உறுப்புக்களும் வழர்ச்சியடையாத நிலையில்
மைந்திருக்கும். )
குழந்தை பிறந்ததும் பிறப்புறுப்புக்களைக்கொண்டு ஆண்,பெண் என
தீர்மானித்துவிடுகிறார்கள். எனினும் 4-5 வயதிலேயே அந்த குழந்தை எந்த
வகுப்பை சார்ந்ததுஎன்பதை தீர்மானிக்க முடியும்.
உடல் ரீதியாக ஆணாக இருக்கும் ஒரு குழந்தை மனரீதியாகவும் நடத்தையிலும்
பெண்ணாக நடக்கும் பட்சத்திலும் அதற்கு அறிவு எட்டி தான் ஆண் அல்ல பெண்
தான் என்பதை உணரும் பட்சத்திலும் அந்த பிள்ளை பெண்ணாகவே கருதப்படவேண்டும்
என சமீபத்திய மருத்துவசட்டங்கள் கூறுகின்றன. ( ஆணாக உணரும் பெண் பிள்ளை;
ஆணாக கருதப்படவேண்டும் என்பதும் உள்ளடங்குகிறது. )ஒரு குழந்தை "அரவாணி/
திரு நங்கை"யாக வளர்கிறதா என்பதை ஆரம்பத்திலேயே அறிந்து அந்த
குறையைப்போக்ககூடிய சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.
* ஆண் பிள்ளையொன்று எந்நேரமும் பெண்பிள்ளைகள் விளையாடும் பொம்மைகளுடன்
(பார்பி உள்ளடங்களான பொம்மைகள்.) விளையாடுமாயின் சற்று கவணமாக
இருக்கவேண்டும். அந்த பிள்ளைக்கு அதே வயது ஆண் பிள்ளைகள் விளையாடும்
மொம்மைகளை ( உதாரணமாக, ஸ்பைடர்மான் (அக்ஷன் பொம்மைகள்)
கொடுத்துப்பழக்கவேண்டும்.
அதுக்கு அக்குழந்தை பழகமறுக்கும் பட்சத்தில் (6 மாதங்களுக்கு மேலும்)
உடனடியாக மருத்துவரிடம் அழைத்துசென்று ஹோர்மோன் ரெஸ்ட்
செய்யவேண்டும்.பிறகு மருத்துவர் குறையிருப்பின் ஹொர்மோன்
சிகிச்சையளிப்பார்.
( இந்த நடத்தை விதி, பெண் குழைந்தைகளுக்கும் பொருந்தும்.)
* பெண்பிள்ளையொன்று எந் நேரமும்ஆண் பிள்ளைகளுடன் மட்டும்
விளையாடிக்கொண்டு தன் வயது பெண்பிள்ளைகளுடன் சேராமல் இருந்தால் அதுவும்
கவணத்திற்குரியது, பிற்காலத்தில் திரு நங்கையாக அல்லது லேஸ்பியனாக
வாய்ப்புண்டு. ( இத்தகவல் இன்னமும் விஞ்ஞான ரீதியில் உறிதியானதல்ல,
கருத்துக்கணிப்பு ரீதியில் மாத்திரமே உறுதியாகியது.)
( இவ் நடத்தை விதி, ஆண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.)
----
நம்ப கடினமானதாக இருப்பினும் இன்னொரு உண்மை, உலகில் உள்ள சில ஆண்களுக்கு
XX குறோமோசோம்களும்,சில பெண்களுக்கு XY குறோமோசோம்களும் மாறுதலாக
இருக்கும். உலகின் 4% ஆனவர்கள் இப்படியுள்ளார்கள்.
( சாதாரணமாக ஆண்களுக்கு XY உம் பெண்களுக்கு XX என்றும் குறோமோசோம்
அமைந்திருக்கும்.)
----
இந்த தகவல் பலரை சென்றடைய உதவுங்கள். ( திரு நங்கைகள் பற்றிய
விழிப்புணர்வும், அடிப்படையும் சமுதாயத்திற்கு தேவையாக உள்ளது.)
comments | | Read More...

சுய இன்பம் காண்பதன் மூலம் மட்டுமே உச்சக் கட்டம் காணும் பெண்கள் !! …

திருமணமான பெண்களிடம் அவர்களதுசெக்ஸ் வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்து
சமீபத்தில் ரகசிய ஆய்வு நடத்தப்பட்டிருக் கிறது. அதன்படி நூற்றுக்கு
தொண்ணுறு
பெண்களுக்கு செக்ஸ் உறவு தொடர்பான ஏதோ ஒரு பிரச்சினை இருப்பது கண்டறியப்
பட்டுள்ளது.
திருமணமான பெண்களை அதிகம் பாதிக்கும் சில செக்ஸ் பிரச்சினைகளும்,
அவற்றுக்கான காரணங்களும், தீர்வு முறைகளும் அலசப்பட்டன. அதன்படி....
மிகக் குறைவான செக்ஸ் ஆர்வம்„
குழந்தைப் பருவத்தில் பெரும்பாலான பெண்களுக்கு ஏதோ ஒரு வகையில் மோசமான
செக்ஸ் அனுபவம் கிடைக்கிறது.
செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் அவர்கள் சந்திக்கும் இந்த
அனுபவம், அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் செக்ஸ் குறித்த தவறான
எண்ணத்தை உருவாக்கி விடுகிறது.
இதனால் பல பெண்களுக்குத் திருமணத்திற்குப் பிறகும் செக்ஸ் அத்தனை
ரசிப்பிற்குதியதாக இல்லை.
சாப்பிடுவது, தூங்குவது என்பது மாதிரி செக்ஸ் உறவும் ஏதோ மாமூலான ஒன்று
என்கிற ரிதியில் செல்லும் போதும் பெண்களுக்கு அதன் மீதான ஆர்வம்
குறைகிறது.
திருமணமான புதிதில் தம்பதியர் இருவரும் சேர்ந்திருந்த சந்தோஷதருணங்கள்,
இருவரையும் கிளர்ச் சியூட்டிய விஷயங்கள் ஆகியவற்றைநினைவு கூர்வது
இப்பிரச் சினைக்குத் தீர்வாக அமையலாம்.
தம்பதியர் இருவரும் சேர்ந்து குளிப்பது, புதிய இடத்தில், சூழ்நிலையில்
உறவு வைத்துக் கொள்வதும் இதற்குத் தீர்வாகும்.
இன்னும் சில பெண்களுக்கு பிரசவம், களைப்பு, கோபம், மாத விலக்கு
சுழற்சியில் ஏற்படும் கோளாறுகள், டென்ஷன் ஆகிய வற்றின் காரணமாகக் கூட
செக்ஸில் ஆர்வம் குறைகிறதாம்.
மனரிதியான பாதிப்புகளாக இருந்தால் செக்ஸ் தெரபி மற்றும் கவுன்சலிங்
மூலமும், உடல் ரிதியான பாதிப்புகளுக்கு ஹhர்மோன் ரிப்ளேஸ்மென்ட் தெரபி
மூலமும் சிகிச்சை அளித்து இதைக் குணப்படுத்தலாம்.
பிறப்புறுப்பு வறட்சி:
இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. ஈஸ்ட்ரோஜன் ஹர் மோன் அளவு குறையும்
போது வறட்சி ஏற்படலாம். தாய்ப் பாலூட்டும் பெண்களுக்கும், மெனோபாஸ் காலக்
கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் இது சகஜம். இதற்கும் ஹhர்மோன்
ரிப்ளேஸ்மென்ட் தெரபி பலனளிக்கும்.
குடிப் பழக்கம் இருக்கும் பெண்களுக்கும் பிறப்புறுப்பு வறட்சி
ஏற்படுகிறது. ஆல்கஹலே அந்த வறட்சிக்குக் காரணம். குடியை நிறுத்தவதன்
மூலமும், வழுவழுப்புத் திரவங்களை உபயோகிப்ப தன் மூலமும் இதைக்
குணப்படுத்தலாம்.
உறவின் போது வல:
உறவின் போது சில பெண்களுக்குத் தாங்கவே முடியாத அளவுக்கு வலி ஏற்படலாம்.
பிறப்புறுப்புப் பாதையில் இரு புறங்களிலும் பட்டாணி அளவுக்குப்
பெண்களுக்கு பார்த்தோலின் சுரப்பிகள் என்று உண்டு.
இவற்றின் வேலையே உறவின்போது வழுவழுப்புத் திரவத்தைக் கசியச் செய்வதுதான்.
இவை பாதிக்கப் படும் போது பிறப்புறுப்பில் வீக்கம், எரிச்சல் ஏற்படுவதோடு
சில சமயங்களில் நடக்கவே முடியாத அளவுக்குக் கூட வலி தீவிரமாகலாம்.
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை ஆன்டிபயாடிக் மருந்துகளின் மூலமோ,
தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை மூலமோ சரி செய்து விட முடியும்.
வலி ஏற்படுகிற சரியான இடத்தையும், சரியான நேரத்தையும் (உறவு தொடங்கிய
உடனேயா, உறவின் இடையிலா, உச்சக் கட்டம் அடைகிற போதா) சொன்னால்
மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.
உறவே கொள்ள முடியாத நிலை:
ஆர்வமும், ஆரோக்கியமும் இருந்தும் கூட சில பெண்களால் உறவில் ஈடுபட
முடியாத நிலை ஒன்று உண்டு. அதற்கு வாஜனிஸ்மஸ்என்று பெயர். செக்ஸைப்
பற்றிய பயம், கடந்த காலக் கசப்பான செக்ஸ் அனுபவங்கள், பிரசவம் போன்றவை
இதற்குக் காரணமாக இருக்கலாம்.
மெனோபாஸை அடைந்து விட்ட பெண்களுக்கு பிறப்புறுப்புத் திசுக்கள்
சுருங்கியதன் விளைவாக கசிவு குறைவாக இருக்கும். இவர்களுக்கும் இந்தப்
பிரச்சினை ஏற்படலாம்.
செக்ஸ் தெரபியின் மூலம் இந்தப் பெண்களுக்கு இடுப்புச் சுவர் தசைகளை
எப்படி hpலாக்ஸ் செய்வது என்று கற்றுக் கொடுக்கப்படும். மேலும் பெண்
மேலிருந்த நிலையில் உறவு கொள்வதும் இதற்குத் தீர்வாக அமையும்.
உச்சக் கட்டத்தை அடைய முடியாமை:
சில பெண்களுக்கு உறவின் ஏதேனும் ஒரு கட்டத்தில் உச்சக் கட்டம்
சாத்தியமாகிறது. இன்னும் சிலருக்கு செக்ஸின் போது குறிப்பிட்ட சில
நிலைகளைக் கையாளும் போது உச்சக் கட்டம் கிடைக்கிறது.
இன்னும் சிலர் சுய இன்பம் காண்பதன் மூலம் மட்டுமே உச்சக் கட்டம்
அடைகிறார்கள். குறிப்பிட்ட சிலருக்கு உச்சக் கட்டம் என்பது எப்போதுமே
சாத்தியமாவதில்லை.
உச்சக் கட்டம் அடைய முடியாத பெண்கள் செக்ஸை அனுபவிக்கத் தகுதியற்றவர்கள்
என்றோ, அவர்கள் உடலளவிலோ, மனத்தளவிலோ பாதிக்கப்பட்டவர்கள் என்றோ
அர்த்தமில்லை.
உறவின் போது பெரும்பாலான பெண்களது கவனம் தன் கணவன் மீதே இருக்கிறது.
கணவன் தேவைகளை முழுமையாக நிறை வேற்றுகிறோமா என்பதிலேயே அவர்கள் கவனம்
போய் விடுவதால் தன்னை எது உச்சக் கட்டம் அடையச் செய்யும் என்பதைப் பற்றி
நினைக்கத் தவறி விடுகிறார்கள்.
இந்த மாதிரிப் பெண்கள் உறவு இல்லாத நேரங்களில் தன் உடலைத் தொட்டுப்
பார்த்து அதில் எந்த இடம் அல்லது எந்த மாதிhpயான ஸ்பரிசம் தனக்குக்
கிளர்ச்சியைத் தருகிறது என்று கண்டறிய வேண்டும்.
அதைத் தன் கணவனிடம் சொல்லத் தயங்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக
உறவின்போது அவசரம் இருக்கக் கூடாது. உச்சக் கட்டம் அடையவும் பெண்கள் மேல்
நிலையில் இருந்து உறவு கொள்வது பலனளிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
comments | | Read More...

அமலா, அனுஷ்கா அப்படியொரு நெருக்கம்?!

அனுஷ்காவுக்கும், அமலாபாலுக்கும் இடையில் அப்படிஒரு நெருக்கம்! அதுவும்
தெய்வத் திருமகள் படத்திற்குப்பின் அந்த ஆந்திர ஆவக்காயும் இந்த கேரள
நேந்திரங்காயும் செம நெருக்கமாகி விட இன்னும் இரண்டு வருடங்களுக்கு
கால்ஷீட்டை ஃபுல்லாக வைத்திருக்கும் அனுஷ்கா தனக்குவரும் தமிழ், தெலுங்கு
பட வாய்ப்புகளை எல்லாம் அப்படியே அமலாவிற்கு அனுப்பி வைக்கிறார்.
அமலாவோ., தனது ஃபுல்ஷீட்டான கால்ஷீட்டை அவ்வப்போது ஓவர் ஷிஃப்ட் போட்டு
துட்டை வாரிசுருட்டி வருகிறார்!
நட்பு கால்ஷீட் விஷயத்தில் மட்டுமல்ல, காதலர் கதாநாயகர்கள் விஷயத்திலும்
கண்டினியூ ஆவதாக சொல்கிறது ஒரு காண்ட்ரவர்ஸி செய்தி!
comments | | Read More...

‘முழுக்கு’ப் போட்ட நயனதாரா- பிரபுதேவாவின் கதி என்ன?!

எந்த வேகத்தில் பிரபுதேவா மீது காதலில் விழுந்தாரோ அதே வேகத்தில் அவரை
விட்டுப் பிரிந்தும் விட்டார் நயனதாரா. இதனால் பிரபுதேவாவின் கதி என்ன
என்பது திரையுலகினர் மத்தியில்பெரும் விவாதமாக மாறியுள்ளது.
பிரபுதேவாவின் திருமண வாழ்க்கையே பெரும் மர்மக் கதையாகவே இருந்து
வருகிறது. ரம்லத்தை அவர் திருமணம் செய்த ஸ்டைலும், அதை மறைத்து பல
ஆண்டுகளாக வாழ்ந்த விதமும் அனைவராலும் மறக்க முடியாதது.
ரம்லத்துடன் அவர் கிட்டத்தட்ட ரகசிய வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தார்.
இவர்தான் எனது மனைவி என்று அவர் வெகு காலமாகவே அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கவில்லை. காரணம், பிரபுதேவாவின் குடும்பத்தார் இந்தத் திருமணத்தை
அங்கீகரிக்கவில்லை என்பதால். இதனால் 3 குழந்தைகள் பிறந்து அவர்கள்
ஓரளவுக்குப் பெரியவர்களாக ஆன பிறகும் கூட ரகசிய வாழ்ககைதான் வாழ்ந்து
வந்தார் பிரபுதேவா.
இந்த நிலையில் பிரபுதேவா-ரம்லத் தம்பதியின் குழந்தை இறந்தபோது பெரும்
சோகமடைந்தார்பிரபுதேவா. அந்த சோகத்தில் பங்கெடுக்க வந்தவர்தான் நயனதாரா.
அப்போது அவரும் கூட சோகத்தில்தான் இருந்து வந்தார். சிம்புவிடமிருந்து
பிரிந்த சோகம். இரண்டு சோகங்களும் ஒன்று கலக்கவே, அது அவர்களுக்கு சுகமாக
தெரிந்தது-புதிய காதல் கதை பிறந்தது.
கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர் பிரபு தேவாவும்
நயன்தாராவும். இந்தக் காதலுக்காக தனது மனைவியை கடுமையாக பிடிவாதம்
பிடித்து விவாகரத்தும் செய்தார் பிரபுதேவா. தனது கணவரைதக்க வைக்க
எப்படியெல்லாமோ முயற்சித்தார் ரம்லத். ஆனால் பாவம், அந்தப் பெண்ணின்
முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கவில்லை. அவரும் கூட தனதுமனதை தேற்றிக்
கொண்டு கணவரை இன்னொரு பெண்ணுக்கு தாரை வார்த்துக் கொடுக்க நேரிட்டு
விட்டது. இதனால் விவாகரத்து நடந்தது, பாகப்பிரிவினையும் நடந்து
முடிந்தது.
அதன் பிறகு நடந்த அத்தனையுமே படு சுவாரஸ்யமானவை. பிரபுதேவாவை கல்யாணம்
செய்வதற்காக மதம் மாறினார் நயனாரா. சினிமாவுக்கும் கூட முழுக்குப்
போட்டார். சிம்பு மீண்டும் ஒருமுறை தனது படத்தில் ஆட வேண்டும் என்று
வைத்த வேண்டுகோளையும் கூட நிராகரித்தார்.
தமிழில அவர் கடைசியாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்திருந்தார்.
அதேபோல தெலுங்கில், ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நடித்தார்.
இத்தனையும் செய்து விட்டு பிரபுதேவாவிடம் கல்யாணம் என்றுபேச்சை ஆரம்பித்த
போதெல்லாம் அவர் பிடி கொடுக்கவே இல்லை. என்ன என்று ஆராய்ந்து
பார்த்தபோதுதான், ரம்லத் மறறும் பிள்ளைகள் மீது இருந்த பாசத்தை
பிரபுதேவாவால் விட முடியவில்லை என்பது.
நயனதாராவுக்கு தெரியாமல் ரகசியமாக தனது பிள்ளைகளைப் பார்த்து கொஞ்சி
வந்தார் பிரபுதேவா. ரம்லத்தையும் கூட அவர் சந்தித்ததாக கூறப்படுகிறது.
இதெல்லாம் நயனதாராவுக்குத் தெரிய வர ஷாக் ஆகி விட்டார். இதனால் இடையில்
பிரபுதேவாவுடன் சண்டை போட்டு சொந்த ஊரான கேரளாவுக்குப் போய் விட்டார்.
இதையடுத்து அங்கு ஓடிய பிரபுதேவாவை வீட்டுக்குள்ளேயே நயனதாரா
சேர்க்கவில்லை. இதனால் தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக செய்திகள்
வெளியாகின.
இருப்பினும் இதெல்லாம் கப்சா, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, திருமண
ஏற்பாடுகள் தீவிரமாகநடந்து வருவதாக பிரபுதேவா, நயனதாரா தரப்பில்
கூறப்பட்டது.
ஆனால் தற்போது இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இருவருக்கும் இடையிலான பிளவு மிகப் பெரிதாகி விட்டதாகவும், இனிமேல் சேர
முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பிளவுக்கு நடிகை ஹன்சிகா
மோத்வானியுடன் பிரபுதேவா நெருக்கம் காட்டியதும் ஒரு முக்கியக் காரணமாக
கூறப்படுகிறது.
ஆனால் ரம்லத் மற்றும் பிள்ளைகள் மீதான பாசத்தை பிரபுதேவாவால் கைவிட
முடியாமல்தவிப்பதால்தான் நயனதாரா பிரிந்து போய் விட்டதாக கூறப்படுகிறது.
இப்போது மீண்டும் ஒரு சோகப் புள்ளியில் பிரபுதேவாவும், நயனதாராவும் வந்து
நிற்கின்றனர். இந்த சோகத்தைப் பங்கு போடப் போவது யாரோ…
comments | | Read More...

‘தம்’ அடித்தபோது திடீரென வலிப்பு வந்து மயங்கிய ஹாலிவுட் நடிகை டெமி மூர்!

லாஸ் ஏஞ்சலெஸ்: ஹாலிவுட் நடிகை டெமி மூர் தனது வீட்டில் திடீரென வலிப்பு
வந்து மயங்கி விழுந்ததால் அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு
சென்றனர்.
அவர் புகை பிடித்துக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்ததால் கஞ்சா
உள்ளிட்டவற்றை சேர்த்து பிடித்தாரோ என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் அவர்
போதைப் பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்றும் நைட்ரஸ் ஆக்ஸைடை
நுகர்ந்ததால்தான் மயக்கமும், வலிப்பும் வந்ததாக கூறப்படுகிறது.
49 வயதாகும் டெமி மூர் தனது லாஸ் ஏஞ்சலெஸ் வீட்டில் புகை பிடித்துக்
கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பும், மயக்கமும்
வந்துள்ளது. இதனால் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவசர
போலீஸாருக்குப் போன் போனது.அவர்கள் மருத்துவப் படையினருடன் விரைந்து
வந்து டெமியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.அங்கு அவருக்கு
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர் புகை பிடித்ததால் மயங்கி விழவில்லை என்றும் அருகில் இருந்த ஒரு
கேனிலிருந்து வெளியான சிரிப்பூட்டும் வாயு எனப்படும் நைட்ரஸ் ஆக்ஸைடு
கசிந்து அதை நுகர்ந்தாதல்தான் இந்த நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்தபோது டெமியுடன் அவரது தோழி ஒருவரும் உடன் இருந்தார்.
comments | | Read More...

நல்ல குடும்பத்தைச் சேர்ந்த படித்த பெண்களும் விபசாரத்தில் ஈடுபடுகிறார்கள் - சுப்ரீம் கோர்ட்டு

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, நல்ல குடும்பத்தைச்சேர்ந்த, அதிகம்
படித்த பெண்களும் விபசார தொழிலில் குதித்துள்ளனர் என்று சுப்ரீம்
கோர்ட்டு கவலை தெரிவித்துள்ளது.
விபசார தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக நடவடிக்கை
எடுப்பது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அல்டமஸ்
கபீர், கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நிலுவையில்
உள்ளது.
நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விபசார
பெண்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மத்திய அரசால்
அமைக்கப்பட்ட சிறப்பு குழுவைச் சேர்ந்த வக்கீல்கள் பிரதீப் கோஷ், ஜெயந்த்
பூஷண் ஆகியோரைப் பார்த்து நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் கேட்டனர்.
நீதிபதிகள் கூறியதாவது:-
இன்றைய தினம், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, பல்கலைக்கழகத்தில் பயிலும்
பெண்கள் கூட ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விபசார தொழிலில் ஈடுபட்டு
வருவதை காண்கிறோம். அவர்கள் தாங்களாக விருப்பப்பட்டு இந்த தொழிலில்
ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்களின் மறுவாழ்வுக்கு நீங்கள் (மத்திய அரசு)
என்ன செய்து இருக்கிறீர்கள்?
விபசார தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக, நாம்எத்தனையோ
கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துகிறோம். ஆனால் அத்துடன் அந்த
பிரச்சினையை முடித்துக்கொள்கிறோம். உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை.
ஏதாவது நடவடிக்கைஎடுப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அது நமது
மனசாட்சிக்கு திருப்தியாக அமைய வேண்டும். வெறும் கண்துடைப்பாக
அமைந்துவிடக்கூடாது.
எனவே, மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் மறுவாழ்வு நடவடிக்கைகளை
சுப்ரீம் கோர்ட்டு தொடர்ந்து கண்காணித்து வரும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
மேலும், வக்கீல்கள் பிரதீப் கோஷ், ஜெயந்த் பூஷண் ஆகியோரைக் கொண்ட சிறப்பு
கமிட்டி செயல்பட சட்ட கமிஷன் அலுவலகத்தில் 3 வாரங்களுக்குள் இடம்
ஒதுக்குமாறு கூடுதல் அட்டர்னி ஜெனரல் பி.பி.மல்கோத்ராவுக்கு நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.
comments | | Read More...

த்ரிஷா கூட படுத்தேனா? மறுக்கிறார் புதிய ஆண் நண்பர்

எனக்கும் திரிஷாவுக்கும் உள்ள நட்பை தவறாக நினைக்கிறார்கள் என்று ஆடை
வடிவமைப்பாளர் ஷிட்னி கூறியுள்ளார்.
கொலிவுட்டில் நட்சத்திர நாயகிகள் மத்தியில் பிரபலமான ஆடை வடிவமைப்பாளராக
ஷிட்னி ஸ்லேடன் இருந்து வருகிறார்.
இவரின் கலை வண்ணத்தில் உருவான ஆடைகளே முன்னணி நடிகைகளின் வரவேற்பை பெரும்
என்பதில் சந்தேகமில்லை.
இதனால் கொலிவுட்டில் ஷிட்னியை தெரியாத நடிகைகளே இருக்க மாட்டார்கள்.
குறிப்பாக நடிகை திரிஷாவின் சிறந்த நண்பராக இருந்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஷிட்னி கூறியதாவது,
நடிகை த்ரிஷா மிஸ் சென்னை அழகியானதிலிருந்து எனக்கு நன்றாக தெரியும்.
எங்களின் எட்டு வருட கால நெருக்கமான நட்பை திரையுலகம் நன்கு அறியும்.
சமீபத்தில் கோவாவில் இந்த வருடப் புத்தாண்டை கொண்டாடினோம்.
த்ரிஷாவின் தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளர் நான் தான். நான் வடிவமைக்கும்
உடைகளை படங்களில்நடிக்கும் போது திரிஷா பயன்படுத்துவார்கள்.
இந்த வருஷம் த்ரிஷாவின் புத்தாண்டு உடையை நான் தான் வடிவமைத்தேன். ஆனால்
எங்கள் நட்பை பற்றி ஆயிரம் பேர் பல விதமாக பேசுவது வருத்தமாக உள்ளது.
எங்களுடைய நல்ல நட்பை பார்த்து பொறாமைப்படும் சிலர் இவ்வாறு
கலங்கப்படுத்துகிறார்கள் என்று கவலையுடன் கூறியுள்ளார்.
comments | | Read More...

அமலா பால் இடம் அப்படி என்ன பெரிதாக இருக்கிறது? கடுப்பில்ஓவியா

ஓவியா?' - ஒற்றை வார்த்தை கவிதை தோன்றுகிறது ஓவியாவை பார்க்கும்போது.
உறுத்தாத அழகு,வசீகரப் புன்னகை, அளவான உடல்வாகு... "களவாணி' வெற்றிக்குப்
பின் தமிழ் சினிமாவில் முதலிடம் ஓவியாவுக்குதான் எனப் பேசப்பட்டவர்.
இடைவெளிக்குப் பின் "பசங்க' புகழ் பாண்டிராஜின் "மெரினா' படத்தில்
நடித்து வருகிறார்.
எப்படி இருக்கீங்க?
இப்போ நல்லா இருக்கேன். மலையாளம், தமிழ், தெலுங்குன்னு மூணு
இண்டஸ்ட்ரியிலும் படங்கள்நடிச்சுக்கிட்டு இருக்கேன். எப்பவும் சினிமாவைப்
பத்திதான்யோசிக்கிறேன். தமிழில் எனக்கு சினிமா வாய்ப்புகளே இல்லைன்னு
சொல்லுகிறவர்களுக்கு இப்ப என்னிடம் பதில் இருக்கு.
பாண்டிராஜின் "மெரினா' படத்தில் நடிக்கிறேன். சினிமாவில் இருப்பதை நான்
சுதந்திரமாக உணர்கிறேன். என்னைக்கும் நான் சினிமாவில் மட்டுமேதான்
இருப்பேன். மார்க்கெட் தக்க வைக்க என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம்.
ஆனா இப்போதும் நான் அந்த எண்ணத்துல வரலை. எனக்கான சினிமா எனக்கு மட்டுமே
வந்து தீரும்ங்கிற நம்பிக்கை இருக்கு.
இருந்தாலும், கமலின் "மன்மதன் அம்பு' பரபரப்புக்குப் பின் ஆளையே காணுமே?
உண்மைதான். "மன்மதன் அம்பு' பிரச்னையை மறுபடியும் கொண்டு வராதீங்க.
அந்தப் படத்தில் என்னநடந்ததுன்னு அப்பவே மீடியாக்களிடம் சொல்லிட்டேன்.
படத்தில் எனக்கான ஸ்கோப் என்னன்னு தெரிந்துதான் நடிக்கப் போனேன். ஆனா
அப்படியே ஏமாத்திட்டாங்க. நிறைய காட்சிகளை கட் பண்ணிட்டாங்க. சினிமாவில்
இதெல்லாம் சகஜம்னு நானே அமைதியாகிட்டேன்.
"களவாணி' நல்ல ஒப்பனிங் கொடுத்தபடம்தான். அதை ஏன் நீங்கள் தக்க வைத்துக்
கொள்ளவில்லை?
என்னைப் பார்க்கிற எல்லோரும் இதைத்தான் கேட்கிறார்கள்."களவாணி' ரொம்பப்
பிடிச்சு நடிச்ச படம். மனசுக்கு நெருக்கமான ஒரு படம் இருக்குனா அது நான்
நடிச்ச "களவாணி'தான்.
இப்பவும் நான் அந்த பாதிப்பில்தான் இருக்கேன். நல்லா நடிச்சிருக்கேன்னு
பாராட்டதவர்களே இல்லை. முதல் படத்திலேயே நடிக்கத் தெரிந்த பொண்ணுன்னு
எத்தனை பேர் பெயர் வாங்கி இருக்காங்க. அந்தப் படத்துக்குப் பின் மலையாள
சினிமாவில் நல்ல ரெஸ்பான்ஸ்.
நல்ல நல்ல படங்கள், பெரிய இயக்குநர்கள், மாஸ் ஹீரோக்கள்னு வாய்ப்புகள்
குவிந்தது. திரும்பிப் பார்க்கக் கூட நேரம் இல்லாமல் ஓடிட்டு இருந்தேன்.
அந்த சமயத்தில் தமிழ் சினிமா வாய்ப்புகளும் நிறைய வந்தன. மலையாள
சினிமாக்களில் ரொம்பவே கவனம் செலுத்தியதால் தமிழ் சினிமா பத்தி
யோசிக்கலை.
அதெல்லாம் முடித்து விட்டு திரும்பினால் தமிழில் வாய்ப்புகளே இல்லை.
இடையில் நான் இருக்கேன்னு சொல்ல"மன்மதன் அம்பு' உள்ளிட்ட சில படங்களில்
தலை காட்டினேன். இப்பமீண்டும் "மெரினா' முலம் வந்திருக்கேன்.
நல்லா நடிக்கத் தெரிந்த பொண்ணுக்கு, வாய்ப்பு கொடுக்க தமிழ் சினிமா தவறி
விட்டதுன்னு சொல்லுறீங்க, அப்படித்தானே?
ஏங்க... வம்புல மாட்டி விடுறீங்க? சில பிரச்னைகளை முடித்து விட்டு
இப்பதான் வந்திருக்கேன். அதுக்குள்ளேயே இப்படியா? தமிழ் சினிமாவைப் பத்தி
என்னைக்கும் நான் தப்பா பேச மாட்டேன்.
ஏன்னா என் திறமையை வெளிக்கொண்டு வந்தவங்க தமிழ் சினிமாக்காரங்கதான்.
சற்குணம் சார் என்னை நல்லா தயார் பண்ணினார். என்னிடம் இருந்து இப்படி ஒரு
நடிப்பு வந்திருக்கான்னு நானே ஆச்சரியப்படுறேன். அதுக்குப் பின் வந்த சில
வாய்ப்புகளை நான்தான் சரியாக பயன்படுத்திக்கலை. இனி எல்லாம் நல்லதே
நடக்கும்.
உங்களுக்கு பின்னாடி வந்த அமலாபால், தமிழ் சினிமாவில் எந்த இடத்துல
இருக்காங்கன்னு தெரியுமா?
தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒரு
ஸ்டைல்இருக்கும். அந்த வகையில் அமலாபாலுக்குன்னு ஒரு ஸ்டைல் இருந்தா
தப்பில்லையே? நான் என்னை மட்டும்தான் பார்க்கிறேன். இது ஓவியாவோட
பேட்டிதானே.. அப்பறம் அமலாபாலைப் பத்தி ஏன் கேட்கிறீங்க? நமக்குத்
தேவையானதை கடவுள் கொடுத்திருக்கான்னு எதையும் நிறைவோடு பார்த்தாலே மனசு
லேசா மாறிடும். போதும்கிற வார்த்தைதான் நிம்மதியின் முதல் புள்ளி.
தத்துவ மழை பொழிறீங்களே, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகமோ?
கண்டிப்பா இருக்கு. கேரளத்தில் சர்ச், கோயில்னு எதையும் விட்டுவைக்க
மாட்டேன். எல்லா இடத்துக்கும் போயிருக்கேன். ஆலப்புழாவில் இருக்குறப்ப
வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற பாபா மடத்துல தினமும் ஆஜராகிடுவேன்.
தமிழ்நாட்டிலும் நிறைய கோயில்களுக்குப் போயிருக்கேன்.மதுரை மீனாட்சி
அம்மன் கோயில் பார்க்க ஆசை. என் ஃப்ரெண்ட் வரச் சொல்லிக்கிட்டே இருக்கா.
தஞ்சாவூர் டெம்பிளுக்கும் போகணும்னு ஆசை.
ரொம்ப நாள் கழித்து தமிழில் நடிக்க வர்றீங்க... எப்படி இருக்கு அனுபவம்?
வெரி சூப்பர்! "களவாணி'க்குப் பின் பெரிதாக பிரேக் இல்லை. நிறைய
யோசிச்சேன். நிறைய கதைகள்கேட்டேன். எதுவும் என் கவனம் ஈர்க்கலை. அப்பதான்
பாண்டிராஜ் சார் பட வாய்ப்பு வந்தது. அவரோட"பசங்க' படம் எனக்கு ரொம்பப்
பிடிக்கும்.
அந்த நம்பிக்கையில பாண்டிராஜ் படம்னதும் கதையை கேட்காமலேயே
ஓ.கே.சொல்லிட்டேன். மெரினா பீச்சில் இருக்கும் லைஃப்தான் படம். நிறைய
சிறுவர்கள், கஷ்டப்படும் மக்கள், மீனவர்களின் வாழ்க்கைன்னு படம்முழுக்க
நிறைய விஷயங்கள் இருக்கு.
இது மாதிரி படத்தில் எனக்கு என்ன வேலைன்னு கேட்கிறீங்களா? எனக்கு காதல்
எபிசோடு. டி.வி. காம்பியர் சிவகார்த்திக்கேயனும் நானும் காதல் ஜோடி. மழை,
காற்று, வெயில்ன்னு எது வந்தாலும் பீச்சில் காதலிப்பாங்களே? அந்தகாதல்
ஜோடிகளில் இப்ப நாங்களும் சேர்ந்துட்டோம். அப்ப படத்துல என்ன இருக்கும்னு
நீங்களே யோசிங்க.
comments | | Read More...

பிட்டு படங்கள் மூலம் பிச்சையெடுத்து வீஐபீ ஆனவர்கள்- ஒரு கிளு கிளு அலசல்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கால கட்டத்திலேயும் "பிட்" படங்கள்என்று
அழைக்கப்படும் "சாப்ட் ஃபோர்ன்" வகையறா படங்களுக்கு பெரிய மவுசு
இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இம்மாதிரியான
படங்களுக்கான தியேட்டர்கள் ஊரோரத்திலோ, அல்லது நகரின் முக்கிய தெருவிலோ,
இருக்கத்தான் செய்கிறது.
என்பதுகளில் தான் இம்மாதிரியானபடங்களுக்கு ஒரு மவுசு வர ஆரம்பித்தது.
அதுவும் மலையாள படங்கள் தான் இம்மாதிரியான சாப்ட் ஃபோர்ன் படங்களுக்கான
சப்ளையர்களாக இருந்த்து. "அவளோட ராவுகள்" படம் என்னவோ நல்ல படம் தான்
ஆனால் பெயரும், படத்தின் கருவும் கொஞ்சம் செக்ஸியாக இருந்தததினால்,
சென்னையின் முக்கிய தியேட்டரானஆனந்த் தியேட்டரில் நூறு நாள் ஓடியது என்று
நினைக்கிறேன்.
அதன் பிறகு அஞ்சரைக்குள்ள வண்டி, மாமனாரின் இன்ப வெறி, சாரவலையம்,
என்றெல்லாம் மலையாள படங்கள், வீடியோவின் வரவால் டல்லடித்துக் கொண்டிருந்த
திரைஉலகை காப்பாற்றி கொண்டிருந்ததுஇம்மாதிரியான படங்கள் தான். பல
தியேட்டர்களை மூடி விழாவிலிருந்து காப்பாற்றியதும் இம்மாதிரியான படங்கள்
தான.
சாதாரணமாகவே செக்ஸ் கதை களன்களை மட்டுமே அடிப்படையாய் கொண்டு
தயாரிக்கப்படும் இம்மாதிரியான படங்களுக்கு மொழிஒரு பிரச்சனையாக இருந்தது
கிடையாது. மிக குறைந்த செலவில் ஒரு வீட்டிற்குள்ளோ, அல்லது ஒருமலை
வீட்டிலோ, லோ லைட்டில் வயதான கணவன், இளம் மனைவி, பக்கத்துவீட்டு இளைஞன்,
அல்லது விடலை வேலைக்காரப் பையன் என்ற டெம்ப்ளேட் கதைகளை புது புது
நடிகைகளை வைத்து தோலுறித்து காட்டி வந்தார்கள். மலையாள திரைப்படங்களின்
வரவேற்பை பார்த்த ஹிந்தி பட உலகமும் அதன்ப்ங்குக்கு "ஜவானி, திவானி"
போன்ற படங்களை அள்ளி விட, ஒரு கட்டத்தில் இம்மாதிரி படஙக்ளுக்கான
தியேட்டர்கள் தான் அதிகமோ என்று தோன்றுமளவுக்கு எங்கெங்கு காணினும் பிட்
படமாகவே காட்சியளித்தது.
இம்மாதிரி படங்களில் நேரடியாய்உடலுறவு காட்சிகள் இல்லாவிட்டாலும்,
சென்சார் செய்து வந்த பிறகு கட் செய்யப்பட்ட காட்சிகளை மீண்டும் இணைத்து
வெற்றி பெற்றார்கள் விநியோகஸ்தர்கள். பின்பு அது போதாமல், ஸ்மால் டைம்
நடிகைகளை வைத்து ஃபோர்னோ படங்களையே எடுத்து, அதை தனியாக படத்துக்கு
சம்பந்தமேயிலலாத் இடத்தில் இடைவேளைக்கு முன் ஒன்று, பின்பு ஒன்று என்று
ஒளிபரப்பி, "அதை" காட்டி முடிந்ததும், படத்தை முடித்து, கல்லா கட்டி
கொண்டிருந்தார்கள். சென்னையில்இதற்காகவே திருவெற்றியூர், போரூர்,
பரங்கிமலை, ஆலந்தூர், என்று ஏகப்பட்ட இடங்களில் பிரபலமான தியேட்டர்கள்
உண்டு. இம்மாதிரியான தியேட்டர்கள் ஒவ்வொரு நகரங்களிலும், நிச்சயம்
இருக்கும்.
வீடியோவின் ஆக்டோபஸ் வளர்ச்சியால் இரண்டு மணி நேர போர்னோ படங்களே
மக்களுக்கு முப்பது, நாற்பது ரூபாய்க்கு கிடைக்கவே, இம்மாதிரியான
படங்களுக்கு மவுசு குறைய ஆரம்பித்தது. 90களில் குறைய ஆரம்பித்த மவுசு..
நடுவில் ஒன்றுமேயில்லாமல் போய் கூட இருந்தது, கடந்த ரெண்டு வருடங்களாய்
மீண்டும், தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது.
எப்போதெல்லாம் திரையுலகம் டல்லடிக்கிறதோ.. அப்போதெல்லாம் இப்படங்கள் வலைய
வரும். அது மட்டுமில்லாமல் டிஜிட்டல் சினிமாவின் வளர்ச்சி ஓரு பக்கம்
நல்ல சின்ன திரைப்படங்கள் வருவதற்கான அறிகுறியை காட்டினாலும், பெரிதும்
உதவுவது இம்மாதிரியானதயாரிப்பாளர்களுக்குதான்.
சென்ற வருடம் சத்தமேயில்லாமல் சென்னையில் மட்டுமில்லாமல் தமிழ்
நாடெங்கும் போட்ட காசுக்கு மேல் வசூலான படம் வேலுபிரபாகரனின் "காதல் கதை"
அதற்கு பிறகு வெறும் போஸ்டரை மட்டுமே வைத்து சரியான ஓப்பனிங் கலக்‌ஷனை
பெற்ற படம் "மாதவி". இவர்கள் எல்லாம் அடுத்த படத்தை தயாரிக்க
ஆரம்பித்துவிட்டார்கள். வேலு பிரபாகரன் இப்போது டிஜிட்டல் கேமராவில் மிக
குறைந்த பொருட் செலவில் படப்பிடிப்பில் இருக்கிறார். ஏற்கனவே காதல்
கதையில் பெற்ற வெற்றி. இவரின் அடுத்த படத்துக்கு டிமாண்டை ஏற்படுத்தி
விட்டது.
இப்போது அந்த வரிசையில் "துரோகம்" நடந்த்து என்ன?, மிக அருமையாய்,
டெம்ப்ட் செய்யும் வகையில் டிசைன் செய்யப்பட்ட போஸ்டர்கள், ப்ளாக் அண்ட்
ரெட்டில் கண்ணில் "குத்தும்" போஸ்டர்கள், பேப்பர் விளம்பரங்கள். போன 11ம்
தேதி ரிலீஸ் ஆகியிருக்கிறது. அதே பதினோராம் தேதி ஓர் இரவு என்கிறபடமும்
ரிலீஸாகியிருக்க, இவர்களுக்கு ரெண்டே தியேட்டரில் காலே அரைககால் ஷோ
டைம்மிங்கே கிடைக்க, துரோகத்துக்கு, சென்னை மற்றும் செங்கல்பட்டு
ஏரியாவில் சுமார்18 பிரிண்டுகள் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.
ன் நண்பர் ஒருவரிடம் கேட்டேன் முதல் ரெண்டு ஷோ செம ஓப்பனிங்காம்.
தியேட்டர்காரர்களே இம்மாதிரியான படஙக்ளுக்குதான் முக்யத்துவம்
தருகிறார்கள். ஏனென்றால் பெரும்பாலான தியேட்டர்களில் ஷேர் முறை மட்டுமே
இருப்பதால், நல்ல ஓப்பனிங் உள்ள திரைபடங்களை வெளீயிட்டாலே அன்றி
அவர்களுக்கு கல்லா கட்டாது. புதிதாய் வரும் சின்ன திரைப்படங்களுக்கு
மவுத் டாக் போய் படம் பார்க்க வருவதற்குள் தியேட்டரிலிருந்து படம்
போய்விட்டிருக்கும் பரிதாப நிலை வந்திருக்கும். இந்த வியாபார முறை பற்றி
நான் ஏற்கனவே "சினிமா வியாபரத்தில் எழுதியிருக்கிறேன்.
சவுத்ரி, குஞ்சுமோன், குட்நைட் மோகன், ஆஸ்கார் ரவிசந்திரன் போன்றவர்கள்
ஒரு காலத்தில், இம்மாதிரி படஙக்ளை தயாரித்தோ, விநியோகம் செய்து
சம்பாதித்துதான் இந்நிலைக்கு வந்திருக்கிறார்கள். பல நேரங்களில்
திரையுலகில் பல பேருடைய வாழ்க்கையை காப்பாற்றி, காலம் தள்ளியதே "பிட்"
படங்களினால் தான் என்றே சொல்லலாம்.எப்போதெல்லாம் இம்மாதிரி படங்கள்
ஆக்கிரமிக்கஆரம்பிக்கிறதோ அப்போதெல்லாம் திரையுலகம் தள்ளாட்டமிடுகிறது
என்பதை சொல்லும் அறிகுறியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
comments | | Read More...

பிறந்தநாளை கொண்டாட காதலியுடன் கொடைக்கானலுக்கு வந்த என்ஜினீயர் பலி

பெங்களூர் தி.நகர் சுல்தானியா பகுதியை சேர்ந்தவர் பூவையா. இவரது மனைவி
கங்கா. இவர்களது மகன் சுதன் (வயது 32). இவர் தொலைத்தொடர்பு என்ஜினீயராக
பணியாற்றி வந்தார். சுதன் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த
வினிதா (28) என்ற பெண்ணைகாதலித்து வந்தார்.
சுதனுக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் ஆகும். இதனால் தனது பிறந்தநாளை
காதலியுடன் கொண்டாட எண்ணிய சுதன், தனது காதலியை அழைத்துக்கொண்டு
கொடைக்கானல் சென்றார்.
காதலர்கள் இருவரும் கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியில் ஆட்கள் நடமாட்டம்
குறைந்த இடத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்கள்.
அங்கு சுதன் தனது காதலியுடன் நேற்று முன்தினம் காலையில் பிறந்தநாளை
கொண்டாடினார்.
பின்னர் ஓட்டல் அருகே செல்லும் காட்டாற்று வெள்ளத்தில் காதலர்கள்
இருவரும் குளித்தபோது, சுதன் ஆற்றுநீரில்இழுத்துச் செல்லப்பட்டார்.
அப்போது அவரை காப்பாற்ற முயற்சிசெய்த வினிதாவின் அலறல் சத்தம் கேட்டு
ஓட்டல் ஊழியர்கள் ஓடி வந்தனர்.
அவர்கள் சுதனின் உடலை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குகொண்டு
சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சுதனின் காதலி வினிதாவை சம்பவ இடத்திற்கு
அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையின் போது
வினிதாகூறியதாவது:-
சுதனின் பிறந்தநாளை கொண்டாட நாங்கள் கொடைக்கானல் வந்தோம். அங்குள்ள
லாட்ஜில் காலையில் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு இருவரும் மது அருந்தினோம்.
பின்னர் மாலையிலும் இருவரும் மது அருந்தினோம். அப்போது அருகில் உள்ள
ஆற்றில் நாங்கள் இருவரும் குளிக்கச் சென்றோம்.
ஆற்றில் குளித்து விளையாடிக்கொண்டு இருந்தோம். அப்போது ஆற்றில் இருந்த
பாறை வழுக்கியதில், சுதன் ஆற்றின் ஆழமான பகுதிக்கு இழுத்துச்
செல்லப்பட்டார். நான் அவரை காப்பாற்ற முயற்சி செய்தேன். ஆனால் நான்
எவ்வளவோ முயற்சித்தும் என்னால் அவரை காப்பாற்ற முடியவில்லை. என்னால்இந்த
அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
comments | | Read More...

திருச்சி நகைக்கடையில் 40 கிலோ தங்கநகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள் கைது

திருச்சியில் 40 கிலோ தங்க நகைகள் கொள்ளை வழக்கில், வடமாநில கொள்ளை
கும்பலை சேர்ந்தமேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி என்.எஸ்.பி. ரோட்டில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலுக்கு
எதிரே அமர்ஜுவல்லர்ஸ் நகைக்கடை உள்ளது. இந்த கடையில் கடந்த நவம்பர் மாதம்
4-ந் தேதி ரூ.10 கோடி மதிப்புள்ள 40 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது.
தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவத்தில், தனிப்படை
போலீசார்நடத்திய விசாரணையில், வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் இந்த
கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் ஒரு மாதத்துக்கு முன்பு
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்த மோகன்சிங் (வயது 60) என்பவர்
பிடிபட்டார்.
அவரிடம் இருந்து 11/2 கிலோ நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். புலன்
விசாரணையில், 14பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டது
தெரியவந்தது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் சட்டீஸ்கர் மாநிலத்தை
சேர்ந்த பசந்து (30) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலத்தில் கல்யாண்பூரை சேர்ந்தவர் மோகன்சிங். மும்பையை
அடுத்த பன்வேலியை சேர்ந்தவர் பூல்சிங் (44). இவர்கள் 2 பேரும் ஆரம்ப
காலத்தில் கள்ளசாராயம் காய்ச்சி திருட்டு தொழில் செய்து வந்தனர்.
அதன்பிறகு தனித்தனியாக கும்பல்களை சேர்த்து டெல்லி, உள்பட பல்வேறு
வடமாநில பகுதிகளில் கொள்ளையடித்து வந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு பூல்சிங் தலைமையிலான கும்பல் தமிழகம் வந்தனர்.
சென்னை, திருத்தணி, தஞ்சை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு
சுற்றுப்பயணம் செய்து, பெரிய அளவில் கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டனர்.
இறுதியாக திருச்சி வந்த அந்த கும்பல், பெரியகடைவீதி பகுதியை
நோட்டமிட்டனர். அதன்பிறகு அமர்ஜுவல்லர்ஸ் கடையில் வாட்சுமேன் இல்லாததை
தெரிந்து கொண்டு அந்த கடையை குறிவைத்தனர்.
உடனே மோகன்சிங் தலைமையிலான 7 பேர் கும்பல் திருச்சிக்கு
வரவழைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருச்சி ஜங்ஷன் பகுதியில் ஒரு
லாட்ஜில் பக்தர்கள் என கூறி அறை எடுத்து தங்கினார்கள். கொள்ளை
திட்டத்தைநிறைவேற்றுவதற்காக 3 மாதமாக திருச்சியில் பல்வேறு லாட்ஜ×களில்
அவர்கள் தங்கி நோட்டமிட்டு வந்தனர்.
கொள்ளையடிக்க நாள் குறித்ததும் கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி அதிகாலை 3
மணிக்கு அறைகளை காலிசெய்துவிட்டு, பூ, பழம் வாங்கி கொண்டு ஆட்டோவில்
மெயின்கார்டுகேட் பகுதிக்கு சென்றனர்.
பூல்சிங் மகன் தாராசிங், அவருடைய நண்பர் ரோஹித் ஆகிய 2 பேரும் மோட்டார்
சைக்கிளில் வந்துள்ளனர். மற்ற 12 பேரும் ஆட்டோவில் வந்தனர். பக்தர்கள்
போல் பஜனை பாடல்களை பாடிக்கொண்டு என்.எஸ்.பி.ரோட்டில் நடந்து சென்று
மலைக்கோட்டை கோவில் வாசலில் அமர்ஜ×வல்லர்ஸ் நகை கடைமுன்பு ஒன்றாக கூடி
நின்று சாமி கும்பிட்டனர்.
இவர்களில் ராகேஷ், சஞ்சய் என்ற 2பேர் மட்டும் அமர்ஜுவல்லர்ஸ்
நகைக்கடையின் பூட்டை கட்டர் வைத்து வெட்டி எடுத்து ஷட்டரை திறந்து உள்ளே
நுழைந்தனர். பூட்டை வெட்டும் போது சத்தம் வெளியே கேட்காமல் இருக்க
வெளியேநின்ற 12 பேரும் "கணேசா'',"கணேசா'' என்று பலத்த கோஷம் போட்டனர்.
அப்போது அங்கு தூங்கி கொண்டு இருந்த மற்ற கடையின் காவலாளிகள்எழுந்து
பார்த்தனர். யாரோ? பக்தர்கள் என்று நினைத்து மீண்டும் தூங்கிவிட்டனர்.
இதையடுத்து 15 நிமிடத்துக்குள் கடையில் இருந்த நகைகளை அள்ளி பைகளில்
போட்டு கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் பஸ் நிலையம் சென்றனர். அதன்பிறகு
திருச்சியில் இருந்து பஸ் ஏறி, விழுப்புரம் சென்று உள்ளனர். போகும் போது
மோட்டார் சைக்கிளையும் எடுத்து சென்று திருச்சியை தாண்டி ஒரு
இடத்தில்போட்டு விட்டு சென்றுள்ளனர்.
விழுப்புரத்தில் இருந்து மீண்டும் பஸ் ஏறி திருப்பதி சென்றனர்.
திருப்பதியில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கிய அந்த கும்பல் ஒரு தராசை
விலைக்கு வாங்கி கொள்ளையடித்த நகைகளை எடைபோட்டு பங்கு பிரித்தனர். ஒரு
நபருக்கு 11/2 கிலோ நகைகள் கிடைத்ததாகவும் மொத்தம் 21 கிலோ நகைகள்தான்
இருந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். பின்னர் அந்த கும்பல்
லாட்ஜை காலி செய்து விட்டு அவரவர் சொந்த ஊருக்கு சென்று தலைமறைவாகி
விட்டனர்.
இதையடுத்து தனிப்படை போலீசார் டெல்லி, உத்தரபிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட
பல இடங்களுக்கு சென்று கொள்ளை கும்பலை தேடி வந்தனர். மோகன்சிங் தங்கி
இருந்த இடம் தெரிந்தும், இந்த வழக்கில் துப்பு துலங்கியது.
அவரை 5 நாட்கள் ரகசியமாக கண்காணித்தனர். மோகன்சிங் எப்போதும் கையில்
துப்பாகியுடன் சுற்றி திரிந்ததும், இவர் பல்வேறு மாநிலங்களில் மிகப்பெரிய
கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
திருச்சி நகைகடை கொள்ளை சதித்திட்டத்தை மும்பையை சேர்ந்த பூல்சிங் தான்
மூளையாக செயல்பட்டு இருக்கிறார். ஒற்றைகண் உடைய இவர் பூட்டை உடைத்தல்,
கொள்ளைக்கு சதித்திட்டம் தீட்டுதல், கார் டிக்கியில் உள்ள பொருட்களை
திருடுவதில் கில்லாடி.
மேற்கண்டவை கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இந்த கொள்ளையில் மொத்தம் 14 பேர் ஈடுபட்டனர். இதுவரை 2 பேர் மட்டுமே கைது
செய்யப்பட்டு 11/2கிலோ தங்க நகைகள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளன.
மற்றவர்களை கைது செய்ய போலீசார்தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
comments | | Read More...

பெற்ற மகளை வைத்து விபசாரத் தொழில் செய்த தாய் கைது

பெற்ற மகளை வைத்து விபசாரத் தொழில் செய்த தாய் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னையில், தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் விபசார தொழில்
நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து, விபசார
கும்பலை பிடிக்க, விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் எஸ்.சாண்டியாகோ
தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர், சென்னையில்சந்தேகத்திற்கு இடமான வகையில் இருக்கும்,
தங்கும் விடுதிகள், வீடுகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த
நிலையில், கொளத்தூர் விநாயகபுரம் பகுதியில் ஒரு வீட்டில், சில பெண்களை
வைத்து ரகசியமாக விபசாரதொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அதனைத் தொடர்ந்து, விபசார கும்பலிடம் உள்ள ஒரு செல்போன் எண்ணை கைப்பற்றி,
போலீசார் பேச்சு கொடுத்தனர். மறுமுனையில்பேசியவர், "அழகான இளம்பெண்கள் 4
பேர் இங்கு உள்ளனர். ரூ.5 ஆயிரத்துடன் வந்தால், பெண்ணை நீங்களே
தேர்ந்தெடுத்து உல்லாசமாக இருக்கலாம்'' என்று ஆசை வார்த்தை கூறினார்.
உடனே, சம்பந்தப்பட்ட வீட்டிற்குபோலீசார் மாறுவேடத்தில் சென்றனர். அங்கு
பெண்களை வரிசையாக நிற்கவைத்து, பணம் கேட்டபோது, போலீசார் விபசாரம்
நடப்பதை உறுதி செய்தனர். உடனே, அங்கு விபசாரம் நடத்தி வந்த உஷா ஜெயின்
(வயது 47), ஜெகதீஸ்வரி (48) ஆகியோரை போலீசார் கைது செய்ததுடன், அங்கு
விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்களையும் மீட்டனர்.
பின்னர், அந்த பெண்களிடம் விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சியான
செய்தி ஒன்று கிடைத்தது. அதாவது, விபசாரத்தில்ஈடுபடுத்தப்பட்ட பெண்களில்
ஒருவர், விபசார தொழில் நடத்திய உஷா ஜெயினின் மகள் என்பது தெரியவந்தது.
மேலும், இருவருமே கணவனால் கைவிடப்பட்டவர்கள் என்றும்,
வயிற்றுப்பிழைப்புக்காக விபசாரதொழிலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதே போல கொருக்குப்பேட்டையில் விபசார விடுதி நடத்திய வேளாங்கண்ணி என்ற
பெண் கைது செய்யப்பட்டார்.
கைதான உஷா ஜெயின், ஜெகதீஸ்வரி, வேளாங்கண்ணி ஆகியோர் சைதாப்பேட்டை மெட்ரோ
பாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில்
அடைக்கப்பட்டனர்.
comments | | Read More...

71 வயது அமெரிக்க ஆண் எம்.பி. ஓரினச்சேர்க்கை திருமணம்

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பகுதியை சேர்ந்த எம்.பி. பார்னி பிராங்க்.
வயது 71. பதவியை ராஜினாமா செய்ய போவதாக கடந்த ஆண்டு அறிவித் தார்.
இந்நிலையில், தனது பார்ட்னர் ஜிம் ரெடியை திருமணம் செய்து கொள்வதாக
அறிவித்துள்ளார். ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த பிராங்க், தான் ஒரு
ஓரினச் சேர்க்கையாளர் என்று பகிரங்கமாகவே அறிவித்தவர்.
மாசாசூசெட்சில் நடக்கும் விழாவில், ஜிம்மை திருமணம் செய்ய போகி றார்
பிராங்க் என்று அவரது செய்தித் தொடர் பாளர் ஹாரி குரால் தெரிவித் தார்.
ஆனால், எந்த தேதி யில் எந்த இடத்தில் திருமணம் நடக்கும் என்ற தகவல்
வெளியிடப்படவில்லை. மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் ஓரின சேர்க்கை திருமணம்
கடந்த 2004ம் ஆண்டு சட்டப்பூர்வமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
comments | | Read More...

15 நாள் உண்ணாவிரதம் இருந்து அமெரிக்க சிறையில் இந்திய பெண் மரணம்

அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய பெண், கடந்த 15 நாட்களாக
உண்ணாவிரதம் மேற்கொண்டதால் சுருண்டு விழுந்து பலியானார். கோவாவை
சேர்ந்தவர் லைவிடா கோம்ஸ். 2004ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார்
அவர். அட்லான்டாவில் உள்ள டெல்டா ஏர்லைன்ஸ் தலைமை அலுவலகத்தில்
பயிற்சியாளராக பணியில் சேர்ந்தார். அங்குள்ள வெர்னான் ஹில்ஸ் ஓட்டலில்
கடந்த2 ஆண்டுகளாக தங்கியிருந்தார் கோம்ஸ். டெல்டா ஏர்லைன்ஸ் தொடர்பான ஒரு
வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆஜராகாமல் கோம்ஸ் தவிர்த்தார்.
அடுத்தடுத்து பல சம்மன்கள் அனுப்பியும் வராததால் அவரை கைதுசெய்ய
போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, டிசம்பர் 14ம் தேதி
கோம்ஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது கைதை கண்டித்து
அன்று முதலே 15 நாட்களாக கோம்ஸ் உண்ணாவிரதம் இருந்தார். ஜனவரி 3ம் தேதி
பசியால் துடிதுடித்து சிறைக்குள் கோம்ஸ் சுருண்டு விழுந்து பலியானார்.
இங்கிலாந்தில் இருக்கும் அவரது உறவினர்கள் அமெரிக்கா வருவதில் ஏற்பட்ட
தாமதத்தால் கோம்சின் இறுதிச் சடங்கு தள்ளிப் போனதாகவும், அவரது மரணம்
பற்றி தகவல் இப்போதுதான் தெரிய வந்ததாகவும் சிகாகோ டைம்ஸ் நாளேடு செய்தி
வெளியிட்டது.
comments | | Read More...

டெஸ்ட் போட்டி: டோனி கேப்டன் பதவி பறிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகுந்த ஏமாற்றத்தை
ஏற்படுத்தியது. இந்திய அணி தான் விளையாடிய 4 டெஸ்டிலும் தோற்று மிகுந்த
அவமானம் அடைந்தது. மெல்போர்ன் டெஸ்டில் 122 ரன்னிலும் , சிட்னி டெஸ்டில்
இன்னிங்ஸ் மற்றும் 68 ரன்னிலும் , பெர்த் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 37
ரன்னிலும் , அடிலெய்ட்டு டெஸ்டில் 298 ரன்னிலும் மோசமாகதோற்றது.
இந்திய அணி 4 டெஸ்டிலும் தோற்றுஒயிட் வாஷ் ( 0-4) செய்யப்பட்டது.
தொடர்ச்சியாக இப்படி நடந்துள்ளதால் வீரர்கள்மீது கடும் அதிருப்தி
ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்டிலும் தோற்று
ஒயிட்வாஷ் ஆனது.
வெளிநாட்டில் இந்திய அணி தொடர்ந்து 8 தோல்வியை சந்தித்து உள்ளது. இதன்
காரணமாகஇந்திய அணியை அதிரடியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை
எழுந்துள்ளது.
டோனி தற்போது 3 நிலைக்கும் (டெஸ்ட் , ஒருநாள் போட்டி , 20 ஓவர் போட்டி)
கேப்டனாக இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக
அவரது டெஸ்ட் கேப்டன் பதவி பிறக்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம்
இந்த நடவடிக்கையை எடுக்கிறது.
இந்திய டெஸ்ட் அணியின் மாற்றத்தின் ஒரு பகுதியாக அவர் கேப்டன் பதவியை
இழக்கிறார். ஆனால் ஒருநாள் போட்டி , 20 ஓவர் போட்டியில் டோனி கேப்டனாக
நீடிப்பார். டெஸ்ட் தொடர் நடை பெற்றுக் கொண்டு இருக்கும் போதே 2013- ம்
ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக டோனி அறிவித்திருந்த
முடிவால் அவர் மீது கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்துள்ளது. அந்த
நேரத்தில் 2013- ம் ஆண்டை பற்றி டோனி பேச தேவையில்லை என்று கிரிக்கெட்
வாரிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அவரது இந்த அறிவிப்பு அணிக்குள் பிளவு இருப்பதை வெளிப்படுத்தும்
வகையில் இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மோசமான தோல்வி ,
அவரழ நடவடிக்கை ஆகியவற்றின் எதிரொலியாக டோனி டெஸ்ட் கேப்டன் பதவி
பறிக்கப்படுகிறது.
டோனிக்கு பதிலாக டெஸ்ட் அணிக்கு ஷேவாக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று
தெரிகிறது. ஷேவாக்கை பொறுத்தவரை அவர் தனது வழியில் செயல்படுவார்.
டோனியின் வழியை பின்பற்ற மாட்டார் என்று தெரிகிறது. 11 பேர் கொண்ட
வீரர்களை தேர்வு செய்யும் முறை , பீல்டிங் அமைக்கும் முறை ஆகியவை பற்றி
தானே முடிவு செய்துக் கொள்வார்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் ஷேவாக் முன்னுரிமை கொடுப்பார்.
சீனியர் வீரர்களான தெண்டுல்கர் , டிராவிட் , லட்சுமண் ஆகியோருக்கு
டோனியின்கேப்டன் பதவியில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. ஆனால்
ஷேவாக் தலைமையில் விளையாடுவதில் பிரச்சினை இருக்கலாம்.
இதற்கிடையே சீனியர் வீரர்கள் யாரும் ஓய்வு பெற மாட்டார்கள் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் டெஸ்டில் தொடர்ந்து தேர்வு
செய்யப்படுவர்கள் என்றுதெரிகிறது. சீனியர் வீரர்களுக்கு பதிலாக இளம்
வீரர்களான ரோகித்சர்மா , ரெய்னா , புஜாரா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க
வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger