News Update :
Powered by Blogger.

போதையில் இருந்த ப்ரியாமணியின் கையை பிடித்து இழுத்து, கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நடிகர் ?

Penulis : karthik on Saturday 11 February 2012 | 18:33

Saturday 11 February 2012

 
நள்ளிரவு பார்ட்டியில் நடிகை ப்ரியாமணியிடம் இந்தி நடிகர் ஒருவர் அத்துமீறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
ஆனால் அதனை ப்ரியாமணி மறுத்துள்ளார். சி.சி.எல் எனப்படும் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது.கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு அங்குள்ள ஸ்டார் ஹோட்டலில் விடிய விடிய உற்சாக பான விருந்து நடைபெற்றுள்ளது.
 
பார்ட்டியில் பங்கேற்ற ப்ரியாமணி, போதையில் அதிகாலையில் தனது அறைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது போதையில் இருந்த இந்தி நடிகர் சச்சின் ஜோஷி, ப்ரியாமணியின் கையை பிடித்து இழுத்து, கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றதாகவும், ப்ரியாமணி அவரை தள்ளி விட்டு விட்டு தப்பியதாகவும் கேரள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனை ப்ரியாமணி மறுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கொச்சியில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை.யாரோ வேண்டுமன்று வதந்தி கிளப்பி விட்டிருக்கிறார்கள், என்று கூறி மறுத்திருக்கிறார் முத்தழகி ப்ரியாமணி.
comments | | Read More...

உதைபந்து விளையாடும் கவர்ச்சிக்கன்னிகள்! கிளிகிளுப்பான காணொளி இணைப்பு

 
 
உதைபந்து விளையாடுகின்ற கவர்ச்சிக் கன்னிகளைத் தான் காணொளியில் பார்க்கின்றீர்கள்...

இப்படியான அழகிய பெண்கள் விளையாடினால் நிச்சயம் மைதானத்துக்கு இராணுவப் பாதுகாப்பு தான் போட வேண்டி வரும்...

ஆனால் இந்தக் காணொளியின் முடிவில் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது....

பொறுத்திருந்து பாருங்களேன் நீங்களும்...

comments | | Read More...

டாக்டர் ஆகவேண்டுமேன்பது பெற்றோர்களின் ஆசையாம் , மேடையில் உணர்ச்சி வசப்பட்டு பொங்கியெழுந்த விஜய்!

 
 
என்னை டாக்டராக்கணும்னு எங்க அப்பா அம்மா ஆசைப்பட்டாங்க. பெரிய போராட்டத்துக்குப் பிறகுதான் இந்த நிலைக்கு வந்திருக்கேன், என்றார் நடிகர் விஜய்.

தான் நடித்த நண்பன் படத்தின் விளம்பரத்துக்காக ரசிகர்களை திரையரங்குகளில் சந்தித்துப் பேசி வருகிறார் விஜய்.

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகிலுள்ள ஒரு திரையரங்கில் நடிகர் விஜய் நேற்றைய நண்பன் காலைக் காட்சியின் இடையில் விஜய் தோன்றிப் பேசினார்.

அவர் கூறுகையில், "ரசிகர்கள் என்றைக்கும் எனது நண்பர்கள்தான். எல்லோருக்கும் அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அக்கா, அண்ணன் போன்ற பல உறவுகள் இருக்கும். ஆனால், நண்பன் ஒருவன் கண்டிப்பாக இருப்பான். எல்லா விஷயங்களையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளமாட்டோம். ஆனால், அனைத்து விஷயங்களையும் நண்பனிடம்தான் பகிர்ந்து கொள்வோம்.

எனக்கு ப்ரண்ட்ஸ் என்றாலே ஒருவித சந்தோஷம் வந்துவிடும். ப்ரண்ட்ஸுக்குதான் ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பேன்.

இந்தப் படத்தை மட்டுமல்ல, என்னுடைய எல்லா திரைப்படத்தையும் வெற்றிப் படமாக்குவதற்கு இரவு, பகல் பாராது சுவரொட்டி ஒட்டியும், தோரணம் கட்டியும், பட்டாசு வெடித்தும் எனக்காக ரசிகர்களாகிய நீங்கள் அன்பு செலுத்துகிறீர்கள். எனக்கு ஒரேயொரு சின்ன ஆசை. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

என் மீது அன்பு செலுத்தும் உங்களுக்காக நண்பன் படத்தில் சில யோசனைகளை கூறியுள்ளேன். என்னுடைய மத்த படங்கள் மாதிரியில்லாமல், இந்தப் படத்தின் வசனங்களை நானே உங்களுக்காக பேசியுள்ளேன்.

என்னைப் பொருத்தவரை நீங்கள் எல்லோரும் என் நண்பர்கள். உங்கள் துறைகளில் முயற்சி செய்யுங்கள். அந்த துறையில் உங்களால் நம்பர் 1 ஆக வரமுடியும். நாம் வராவிட்டால் வேறு யார் வரப்போகிறார்கள்?

டாக்டராகணும்னு ஆசைப்பட்டாங்க...

என் வாழ்க்கையில் போராட்டங்களை அனுபவித்திருக்கிறேன். என்னை டாக்டராக்கிப் பார்க்க வேண்டும் எங்கப்பா அம்மா ஆசை. எனது இளமைக் காலம் ஒரு போராட்டம்தான். பெரும் போராட்டத்துக்கு பிறகு எனக்குப் பிடித்த இத் துறையில் முயன்று இந் நிலைக்கு வந்துள்ளேன்," என்றார்.
comments | | Read More...

தில்... தில்தில்தில்தில்.....காதல் தில்தில்...... கன்னத்தில் கடித்து விட்டால்..

 

துபாயில் 6 வயதுச் சிறுமியின் கன்னத்தில், கழுத்தில் மற்றும், தொடையில் கடித்து பாலியல் சில்மிஷம் செய்ததாக இலங்கை வாகன ஓட்டுனர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர் 21 வயதுடைய சிங்கள இளைஞர் என்றும் அறியப்படுகிறது. தூபாய் சிறுமியோடு தாகாத முறையில் நடந்துகொண்டார் என சிறுமியின் பொற்றோர் தெரிவித்துள்ளனர். இவரைப் பொலிசார் கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளனர். ஆனால் குற்றஞ்சுமத்தப்பட்ட நபர் சொல்லும் கருத்து மிகவும் வேடிகையாக உள்ளது ! இவ்வழக்கு நேற்றைய தினம்(09) விசாரணைக்கு வந்தபோது தான் வம்பயர் விளையாட்டையே சிறுமியுடன் விளையாடியதாக வாகன ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.

புரியவில்லையா ? வம்பயர் என்னும் மனித ரகுல்லா விளையாட்டாம். படங்களில் வருவதுபோல ரகுல்லா வந்து மனித ரத்தத்தை உரிஞ்சிக் குடிக்குமே அதுபோல தான் விளையாடியதாகவும், இந்த விளையாட்டை அச் சிறுமி தன்னோடு விளையாடுமாறு கூறியதாவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் அவர் கன்னத்தில், கழுத்தில் மற்றும் துடையில் செல்லமாகக் கடித்துள்ளாரம். ஆனால் முத்தம் இடவில்லை என அவர் வதிடுகிறார். அவளை நான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யவே இல்லை ! அவளது கன்னத்தைக் கடித்த போதும் அவளுக்கு முத்தம் கொடுக்க நான் முயற்சிக்கவில்லை என்று சொல்கிறார் அவர்.

அது சரி, எல்லாம் போகட்டும் ரகுல்லாவுக்கும் ஒரு வரை முறை இருக்குது தெரியுமோ ? அது கழுத்தில் மட்டும் தான் கடித்து மனித ரத்தத்தை உறுஞ்சிக் குடிக்கும்.(காலாதி காலமா இப்படி தான் அது செய்யுது:) ஆனால் இங்கே இந்த இலங்கையர் கன்னத்தில் மற்றும் தொடையில் எல்லாம் உறுஞ்சியுள்ளார். இந்த விடையம் நீதிபதி ஐயாவுக்கு தெரியுமோ தெரியாது. எதுக்கும் அவர் வீட்டில் ஒரு ரகுல்லா படத்தை போட்டுப் பார்ப்பது தீர்ப்புச் சொல்வது நல்லது !
comments | | Read More...

மாணவி திருமணம் நிறுத்தம்!!

 


உத்தமபாளையம் ஒன்றியம், ராமசாமி நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் லாவண்யா ,15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தந்தை இல்லை. தாய் பராமரிப்பில் உள்ளார். அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வடமலைராஜ், 45 (விவாகரத்து பெற்றவர்) லாவண்யாவை, அவரது தாய் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தார்.
இன்று ரகசிய திருமணம் நடத்த ஏற்பாடானது.நிறுத்தம்: தன்னை சந்தித்த தோழியிடம், விவரங்களை லாவண்யா கூறினார். ஆசிரியர்கள், சின்னமனூர் கிரீன் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் தந்தனர்.
தொண்டு நிறுவன செயலர் போஸ், மகளிர் போலீசிடம் புகார் கொடுத்தார்.இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா நடவடிக்கையால் கட்டாய திருமணம் நிறுத்தப்பட்டது. மாணவியைத் தொடர்ந்து படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
comments | | Read More...

நாமும் ஆயுதம் கொடுத்தோம்! இலங்கை போர்க் குற்றம் புரிந்தது!! அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட பாகிஸ்தான்!!!

 

நான் தமிழரிடம் மன்னிப்புக் கேட்கிறேன், ஒரு நாட்பு நாடு என்ற முறையில் நாம் அவர்களுக்கு ஆயுதத்தைக் கொடுத்தோம். எனினும் இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றமை உண்மைதான்.

இனிமேலாவது எஞ்சிய தமிழர்கள் சிங்களவர்களுடன் நிம்மதியாக வாழுவார்கள் என நம்புகிறேன். நான் தமிழரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.

நோர்வே பாராளுமன்றத்தில் தமிழ் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார் முன்னாள் இலங்கைக்கான பிரதி பாகிஸ்தான் தூதுவராக இருந்து தற்போது நோர்வேக்கு தூதுவராக பதவி உயர்த்தப்பட்டுள்ள பாகிஸ்தான் தூதுவர்.

இவர் பாகிஸ்தான் தூதுவராக இருந்த காலத்தில் பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை பணிப்பாளர் இலங்கையில் நிலை கொண்டிருந்தமையும் கொழும்பில் நடந்த தற்கொலை தாக்குதலில் குறித்த தூதுவர் உயிர் தப்பியும் இருந்தார்.

அல்கொய்தா இயக்க பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் கொல்லபட முதலே பாகிஸ்தான் நோர்வேயின் சமாதான முயற்சிகளுக்கு தென்கிழக்கு ஆசியாவில் நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்து விட்டது.

இன்று அமெரிக்காவால் கைவிடப்பட்ட நிலையில் சீனாவின் சலுகைகளுக்கு மட்டும் கை ஏந்தும் நிலையில் இருக்கும் பாகிஸ்தான் தூதுவராக இருக்கும் நீங்கள் காஷ்மீரில் இந்திய படைகள் செய்யும் அவலத்திற்கு இங்கு 300 பேர் மத்தியில் உரையாற்றுகிறீர்கள்.

காஷ்மீரில் அழிக்கபட்ட இனத்தில் இருந்து வந்ததாக கூறும் நீங்கள் தூதுவராக இருக்கும்போதுதான் தமிழர்கள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் உங்கள் ராஜதந்திர அறிவுப்படி இலங்கையில் கொல்லப்பட்டார்கள்.

இது தமிழருக்கு மட்டும் அல்ல நோர்வேயின் சமாதான முகத்திரைக்கு நீங்கள் வைத்த தீயே. இவ்வாறு இருக்கும்போது நோர்வேயின் உதவியை காஷ்மீருக்கு எந்த நிலையில் கேட்கிறீர்கள் என கேட்டபோது?

இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றது உண்மைதான் என ஒப்புக்கொண்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

ஆனால் நான் தமிழரிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் தமிழரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன் அவர்களுக்கு இலங்கையில் நடந்தவற்றிக்கு.

இனிமேலாவது எஞ்சிய தமிழர்கள் சிங்களவர்களுடன் நிம்மதியாக வாழுவார்கள் என நம்புகிறேன்.

பாகிஸ்தான் எந்தவித முன்னணிச் செயற்பாடுகளிலும் இலங்கை யுத்த விடயத்தில் ஈடுபடவில்லை. இராணுவ போர் குற்றம் மனிதஉரிமை விடயங்களை கவனித்தால் நான் அதைப்பற்றி விரிவாக போகவிரும்பவில்லை.

நான் இலங்கையில் அண்ணளவாக ஒரு வருடமும் 6 மாதங்களும் தங்கி இருந்தேன். எனக்கு தெரியும் இரண்டு பக்கமும் முறைப்பாடுகள் உள்ளது.

இலங்கை வெளிநாட்டு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் எனது வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். (கதிர்காமரும் பாகிஸ்தான் உளவுத்துறையும் வாழ்ந்தவீடுகள் அருகில்) ஒரு அமைதியான நல்ல முதியவர். அவர் கொல்லபட்ட விதம் அவ்வாறு நடந்திருக்க கூடாது.

எனது நண்பரே! யுத்தம் மிகவும் வலியானது. இலங்கைக்குப் பாகிஸ்தான் ஒரு நட்பு நாடு என்ற முறையில் தனது உதவியை செய்தது. இலங்கை அரசு ஜனநாயகப்படி தெரிவு செய்யபட்ட ஒரு அரசு என்பதால் பாகிஸ்தானின் உதவியை நாடியது. ஆயுதங்களை தருமாறு கோரியது.

ஐ.நா. சட்டப்படி நாம் அவர்களுக்கு ஆயுதங்களை கொடுத்தோம். எனக்கு தெரியும் புலிகள் சில விடயங்களுடன் முரண்பட்டனர். அவை மிகவும் சிறியவை.

பின்னர் சுனாமி வந்தது. சுனாமியே புலிகளை பலவீனபடுத்தியது. ஆனால் பாகிஸ்தான் அரசு புலிகளை பலவீனபடுத்தவில்லை. நான் இலங்கையில் தங்கி இருந்தபோது சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் தங்கள் உயிர்களை சுனாமியில் பரிதாபமாக பறிகொடுத்தனர்.

பின்னர் நான் வெளியேறும்போது இலங்கை இராணுவம் யுத்தத்தை ஆரம்பித்தது. நான் வெளிக்கிட்ட பின்னரே யுத்தம் ஆரம்பமானது. நான் நேரடியாக சம்மந்தபடவில்லை.

யுத்தில் மேலும் இலங்கை இராணுவம் எங்களிடம் அனுமதியோ ஆலோசனையோ கேட்கவில்லை. அவர்கள் அனுபவம் வாய்ந்த படைகள். அவர்களின் அனுபவத்தில் செய்தனர். நான் ஏற்றுக்கொள்கிறேன். நானும் உணர்கிறேன். அங்கு சில மனித உரிமை மீறல்கள் கொலைகள் நடந்துள்ளது.

எனது நண்பரே! யுத்தம் என்பது மிகவும் கொடிய ஒரு பாதை. எவர் எந்த பக்கத்தால் வருபவர் என்று தெரியாது. நான் தமிழரிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் தமிழரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன் அவர்களுக்கு இலங்கையில் நடந்தவற்றிக்கு. இரண்டு பக்கமும் இந்த கொடிய இன மோதலில் துன்பப்பட்டுள்ளார்கள்.

தற்போது நான் நினைக்கிறேன் அந்த நிலமை மாறிவிட்டது. புதிய ஒரு அத்தியாயம் இலங்கையில் உருவாகி உள்ளது. அங்கு எல்லோரும் நிம்மதியாக வாழலாம் என்று நான் உணருகிறேன்.

comments | | Read More...

ஜெர்மனிய அழகி மீதான பாலியல் வல்லுறவு: நாட்டை விட்டு வெளியேறும் சுற்றுலா பயணிகள்

 

இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க கடும் முயற்சிகள் மேற்கொண்டு வரும் இந்த நிலையில் இதனை மறுப்பக்கம் மாற்றும் வகையில் தற்போது இந்த சம்பவம் வெளியாகியுள்ளது.கடந்த தினங்களில் தங்கல்லையில் வெள்ளைக்கார பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற வேளையில்,வெள்ளைக்காரர் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.இந்த நிலையில் மற்றுமொறு வெள்ளைக்கார யுவதி நித்திரையில் இருந்து சமயம், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மாத்தறை திக்வெலையில் பதிவாகியுள்ளது.மாத்தறை திக்வலை பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அழகிய யுவதி ஒருவர் ஹேட்டல் அறையில் இனந்தொரியாத நபரினால் பாலியல் வன்புணர்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் திக்வெல்ல காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (06) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.குறித்த யுவதி,தமது காதலனுடன் 2.30 மணிவரைக்கும் மது அருந்திவிட்டு, பின்னர் தமது காதலனுடன் நித்திரைக்குச் சென்றுள்ளார்.அதிக மது போதையில் இருந்த அவரும், அவரது காதலனும் ஆழ்ந்த நித்திரையில் இருந்துள்ளனர்.அதிகாலை 3 மணியளவில் அந்த யுவதி திடீரென விழித்தெழுந்த நிலையில், யாரோ ஒருவர் அவருடன் உடலுறவு கொண்டிருந்துள்ளார்.முதலில் அந்த பெண் தன் காதலனே தன்னுடன் உறவு கொண்டிருக்கிறார் என்று நினைத்துள்ளார்.எனினும் தன்னுடன் இருந்த நபர் வேறொருவர் என சற்று நேரத்திற்கு பின்னரே தெரியவந்துள்ளது.

அந்த கட்டிலிலேயே அடுத்த பக்கத்தில் தமது காதலன் கடும் நித்திரையில் இருந்துள்ளார்.இந்தநிலையில்,அவர் கூக்குரலிட்டுள்ளார்.இந்த நிலையில் குறித்த நபர் நிர்வாணமாக அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.இச் சம்பவத்தை தொடர்ந்து எழுந்துள்ள நிலைமைகளை தொடர்ந்து இலங்கை வந்திருந்து சுற்றுலா பயணிகள் நாட்டிலிருந்து வெளியேறினர்.இந்த சம்பவத்தை தொடந்து குறித்த பிரதேசத்தில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு வேண்டாம் என்று போய்விட்டது.

comments | | Read More...

தாய்மொழிபால் கொண்ட அன்பால் அமலாபாலின் ஆசை!!

 

 


தமிழ், தெலுங்கு படங்களில் படு பிஸியாக இருந்தாலும் தனது தாய்மொழியான Amala Paulமலையாளத்தில் சொல்லிக் கொள்ளும்படி ஒரு நல்ல படம் வரவில்லையே என்ற ஏக்கம் அமலாபாலுக்கு எப்போதுமே உண்டு.

ஏனெனில் 'மைனா' ஹிட் ஆவதற்கு முன்பு 'நீலத்தாமர' போன்ற ஒரு சில படங்களில் குட்டி குட்டி கேரக்டர்களில் மட்டுமே நடித்திருந்தார் அமலா.

இப்போது அவரது வாட்டத்தைப் போக்கும் வகையில், பிரபல இயக்குனர் லால்ஜோஷ் இயக்கும் 'டைமண்ட் நெக்லஸ் படத்தில் பகத் ஃபாசிலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அமலா. இந்தப் படம் ஒப்பந்தமானதை ஒட்டி தனது கல்லூரி நண்பர்கள் சிலபேரை துபாய் வரை அழைத்துப்போய் பார்ட்டி கொடுத்து அசத்திவிட்டு வந்தாராம் அமலா.

முரண்பாடான இந்த சமூகத்தில், ஒரு இளைஞனுக்கும், மூன்று பெண்களுக்கும் இடையில் நடக்கும் காதல் போராட்டத்தை அலசுகிறதாம் 'டைமண்ட் நெக்லஸ்'..
comments | | Read More...

பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் படுக்கையைப் பகிர்ந்துகொண்டவர்களே அதனால் நீயும் படுக்க வா

 
 
பொதுவாக பாலிவுட்டில் 'கேஸ்டிங் கவுச்' – casting couch – எனப்படும் பட வாய்ப்புக்காக நடிகைகள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலருடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் சமாச்சாரம் சர்வசாதாரணம்தான்.

என்றாலும், பட வாய்ப்பு கேட்டு அலைந்த ஆண் மாடலான கிருஷ்ணா மோனாலா இப்படி ஒரு சமாச்சாரத்தை
போட்டுடைத்திருப்பதுதான் அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியத்தில் பாலிவுட்டில் பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

20 வயதான ஹைதராபாத் ஆண் மாடலான கிருஷ்ணா மோனாலா, அமெரிக்காவில் வளர்ந்தவர்.மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். .

மாடலிங் மற்றும் பட வாய்ப்புக்காக 88 கிலோ ஆக இருந்த தனது உடல் எடையை,தினமும் மூன்று மணி நேர கடுமையான உடற்பயிற்சி மூலம் முறைத்து கட்டுமஸ்தான தோற்றமுடையவராக மாற்றினார்.

எதிர்பார்த்த தோற்ற பொலிவு வந்த நிலையில் மாடலிங் வாய்ப்பு வந்த அதே நேரத்தில், பாலிவுட் தயாரிப்பாளர்களிடமிருந்து படத்தில் நடிக்க அழைப்பு வந்தவுடன் உற்சாகமாக அவர்களை அணுகினார் கிருஷ்ணா.

ஆனால் அந்த உற்சாகம், தயாரிப்பாளர்களை சந்தித்ததுமே திகிலாக மாறிப்போனதாகவும், பாலிவுட்டின் திரை மறைவு சம்பவத்தைக் கண்டு அதிர்ந்துபோனதாகவும் பேட்டி ஒன்றில் புலம்பியுள்ளார் கிருஷ்ணா!


அப்படி என்ன நடந்தது?

அழைத்த தயாரிப்பாளர்கள் அனைவரும் அவர்களுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளச் சொன்னதாகவும், அதற்கு அவர் மறுக்கவே, பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் அ அது ஞக்கு சம்மதித்தவர்களே என்று தயாரிப்பாளர்கள் சொல்லியதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதெல்லாம் கூட மேட்டரில்லை. 'அது' க்கு அழைத்த பாலிவுட் தயாரிப்பாளர்கள் ஆணா? பெண்ணா? என்ற ரகசியத்தை மட்டும் சொல்லமாட்டேங்றார் கிருஷ்ணா மோனாலா.

ஆனால் அப்படி அழைத்தவர் ஆண் தயாரிப்பாளர் என்றால் அது நிச்சயம் ஓரின சேர்க்கை சமாசாரம்தான்!

அதே சமயம் பெண் தயாரிப்பாளர் அழைத்தால் அது நிச்சயம் 'ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல!' என்று சமத்துவமும், சம உரிமையும் (அட கஷ்ட காலமே! போயும்ஸ போயும் இந்த மேட்டரிலா?! ) உலாவும் இடம் பாலிவுட் என்று ஆறுதல்(?!) பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!
comments | | Read More...

விரைவில் மீண்டு வருவேன் - யுவராஜ்

 

நான் விரைவில் குணமடைய வேண்டுமென நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர். கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஆயிரக்கணக்கில் வாழ்த்துக்கள் அனுப்புகின்றனர்.

இவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. கேன்சரில் இருந்து மீண்டு, இந்திய அணிக்காக விளையாட காத்திருக்கிறேன்,என, யுவராஜ் தெரிவித்துள்ளார்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ். இவரது நுரையீரலுக்கு இடையில் "கோல்ப் பந்து அளவுக்கு சிறிய கேன்சர் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் கேன்சர் ஆய்வு மையத்தில் "கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.
 
யுவராஜுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக, அவரது தந்தை யோகராஜ் ஆதங்கம் தெரிவித்திருந்தார். இது குறித்து தனது "டுöவிட்டர் இணையதளத்தில் யுவராஜ் வெளியிட்ட செய்தி:
சிகிச்சை தாமதமானதற்கு எனது குரு சந்த் அஜித் சிங் ஹன்சாலிவாலா, பி.சி.சி.ஐ., மீது சிலர் பழி சுமத்துகின்றனர்.
 
இது மிகவும் தவறு. பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன், அதன் நிர்வாகிகள் எனக்கு மிகப் பெரும் ஆதரவு அளிக்கின்றனர். இவர்களால் தான் சிறந்த சிகிச்சை பெற்று வருகிறேன். சிகிச்சை தாமதமானதற்கு நான் தான் காரணம்.
 
எனது "பிசியோதெரபிஸ்ட்ஜதின் சவுத்ரி மீதும் சிலர் புகார் கூறுகின்றனர். இவர் மீது தவறு எதுவும் இல்லை. எனக்கு உதவி தான் செய்தார். நான் தான் மாற்று மருத்துவ முறையில் சில காலம் சிகிச்சை எடுத்தேன்.
 
தற்போது விரைவாக குணமடைந்து வருகிறேன். இந்த கடினமான காலக்கட்டத்தில் மிகவும் துணிச்சலாக போராடி, வலிமையான வீரராக மீண்டு வருவேன். நாடு முழுவதும் <உள்ள ரசிகர்கள் எனக்காக பிரார்த்திக்கின்றனர்.
 
கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஆயிரக்கணக்கில் வாழ்த்துக்கள் அனுப்புகின்றனர். இவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.
 
கேன்சர் நோயில் இருந்து மீண்ட அமெரிக்க சைக்கிள் பந்தய வீரர் லான்ஸ் ஆம்ஸ்டிராங்கை விரைவில் சந்தித்து ஊக்கம் பெற உள்ளேன். மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகன், காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, "மீடியாவுக்கும் எனது நன்றி.
 
விரைவில் இந்திய கிரிக்கெட் அணியின் உடை, தொப்பி அணிந்து நாட்டுக்காக மீண்டும் விளையாட காத்திருக்கிறேன். ஜெய்ஹிந்த்.
 
இவ்வாறு யுவராஜ் தெரிவித்துள்ளார்.
comments | | Read More...

சச்சின் இல்லாமல் சாதிக்க முடியுமா?

 

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் வெற்றியில் சச்சின் பங்கு அதிகம். இவருக்கு, முத்தரப்பு தொடரின் அடுத்த போட்டியில் ஓய்வு கொடுத்தால், வெற்றி வசப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
ஆஸ்திரேலியாவில் நடக்கும் முத்தரப்பு தொடரில், ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு தருவதில், இந்திய கேப்டன் தோனி உறுதியாக உள்ளார். இவருக்காக "டாப்-ஆர்டரில்' சுழற்சி முறையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 
இதன்படி முதலிரண்டு போட்டிகளில் சேவக், காம்பிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை நடக்க உள்ள போட்டியில் சச்சினுக்கு ஓய்வு அளிக்கப்படும் என தெரிகிறது.
 
புள்ளிவிவரப்படி பார்த்தால், கடந்த 22 ஆண்டுகளில் இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 ஒருநாள் போட்டிகளில் தான் வென்றுள்ளது. இதில் சச்சின் பங்கு தான் அதிகம்.
 
 
முதல் வெற்றி:
 
1991-92ல் பெர்த் போட்டியில் இந்திய அணி, 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது. இதில் சச்சின் தான் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் (36 ரன்கள், 65 பந்து). அடுத்து 12 ஆண்டுகளாக 11 போட்டிகளில் தொடர் தோல்வி. 2003-04ல் 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இப்போட்டியில் சச்சின் 86 ரன்கள் எடுத்தார்.
 
 
பைனல் அசத்தல்:
 
பின் வந்த மூன்று வெற்றிகளும் கடந்த 2007-08 தொடரில் கிடைத்தது. மெல்போர்னில் நடந்த லீக் போட்டியில் 159 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு, 54 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார் சச்சின்.
 
பின் நடந்த முதல் பைனலில் ஆஸ்திரேலியாவின் 240 ரன்கள் என்ற இலக்கை அடைய, சச்சின் சதம் அடித்து (117 ரன்கள்) உதவினார். தொடர்ந்து இரண்டாவது பைனலில், 91 ரன்கள் எடுத்து அசத்தினார்.
 
 
சேவக் மோசம்:
 
சேவக்கை எடுத்துக் கொண்டால், மூன்று தொடர்களில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 10 போட்டிகளில், 180 ரன்கள் மட்டுமே எடுத்தார். காம்பிர் பரவாயில்லை ரகத்தில் உள்ளார். இவர் கடந்த தொடரில் சிட்னியில் அடித்த சதம் (113) உட்பட, 7 போட்டியில் 230 ரன்கள் எடுத்துள்ளார்.
 
விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, ரெய்னா, மனோஜ் திவாரி ஆகியோர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 10 போட்டிகளில் கூட பங்கேற்றதில்லை. கடந்த 2008 தொடரின் முதல் பைனலில் ரோகித் சர்மா, அரைசதம் அடித்தது தான் அதிகம்.
 
இதன் பின் இந்த அணிக்கு எதிரான 7 போட்டிகளில் மொத்தமே 37 ரன்கள் தான் எடுத்தார். எனவே, சுழற்சி முறை வீரர்கள் தேர்வு பற்றி தோனி நன்கு சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.

 
எது முக்கியம்
 
வரும் 2015ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதனை மனதில் கொண்டு, இப்போதே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், இங்குள்ள ஆடுகளத்தை பற்றி நன்கு அறிந்து கொள்வர்.
 
சுழற்சி முறையில் சீனியர்களுக்கு ஓய்வு அளிக்கும் போது, சச்சினுக்கு சலுகை காட்ட தேவையில்லை. இவர் 100வது சதம் அடிக்க வேண்டும் என்பதைவிட அணியின் நலன் தான் மிகவும் முக்கியம்.
comments | | Read More...

கடலுக்கு அடியில் விசித்திர உலகம்: தமிழில் வரும் ஹாலிவுட் படம்

 


 

ஹாலிவுட்டில் 2008-ல் வெளியாகி வெற்றி பெற்ற ஜர்னி டூ சென்டர் ஆப் இயர் படத்தின் இரண்டாம் பாகமான ஜெர்னி-2 படம் தமிழில் ருத்ரபூமி என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.

பதினேழு வயது சிறுவன் ஜான் ஆண்டர்சன் உலகில் பெரிய மர்ம தீவு இருப்பதுபோல் உணர்கிறான். அதை காண தனது சித்தப்பா ராக்கை துணைக்கு அழைத்துக் கொண்டு விமானத்தில் செல்கிறான். வழியில் விமானம் வெடித்து சிதற தேடிச்சென்ற மர்மத் தீவு அருகே விழுகின்றனர்.

அங்கு பெரிய ருத்ரபூமி தெரிகிறது. இயற்கைக்கு மாறான விலங்குகள், எரிமலைகள், தங்க மலைகள், கொட்டும் தங்க மழை, அசுரப் பறவைகள், ராட்சத தேனீக்களை கண்டு மிரள்கின்றனர். அவற்றிடம் இருந்து தப்பி கடலுக்கடியில் உள்ள மர்ம தீவில் வசிக்கும் ஜான் ஆண்டர்சன் தாத்தாவை சந்திக்கின்றனர்.

அந்த தாத்தா விசித்திர உலகம் நான்கு நாளில் ருத்ர பூமியாக மாறி உலகை அழித்து விடும் என்ற அதிர்ச்சி தகவலை சொல்கிறார். அந்த ஆபத்தில் இருந்து மூவரும் எப்படி தப்புகிறார்கள் என்பது கிளைமாக்ஸ்.

ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தை ராம நாராயணனின் அழகர் பிலிம்சும், வார்னர் பிரதர்சும் இணைந்து வருகிற 10-ந் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கின்றனர்.
comments | | Read More...

15 Feb ஜூவி, ரிப்போர்ட்டர், நக்கீரன் டவுன்லோட் செய்ய

 
 

இந்த வார ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன் aஆகியவற்றை விளம்பர பிரச்சனை இல்லாமல் வேகமாக டவுன்லோட் செய்ய கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.


15-2-2012 ஜூனியர் விகடன்

12-2-2012 குமுதம் ரிப்போர்ட்டர்

11-2-2012 நக்கீரன்

எனது தளத்தில் வெளியிடப்படும் இதழ்கள் அனைத்தும் என்னால் நேரடியாக பதிவேற்ற பட்டவை கிடையாது. நீங்கள் தேடினாலும் கிடைக்கக்கூடியது தான். இதன் மூலமாக எந்தவிதமான வருவாயும் நான் பெறவில்லை. வெளிநாட்டில் வாழும் நண்பர்களுக்காக இணையத்தில் கிடைப்பவற்றை எனது தளத்தில் பதிவிடுகிறேன். சம்பந்தபட்ட இதழ்கள் எதிர்ப்பு தெரிவித்தால் எந்த நேரமும் நீக்கியும் விடுவேன். மறக்காமல் கருத்துக்களை பதிவு செய்யவும். அன்புடன் தாரிக்
 


comments | | Read More...

தோனி நாட் அவுட் - மேட்ச் டிரா ...

 
 
 
தரமான படங்களை தயாரித்து வந்த பிரகாஷ்ராஜ் முதன் முதலாக இயக்கிருக்கும் படம் தோனி ... படத்திற்கு இசைஞானியின் இசை மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது ... இன்றைய சூழலில் படிப்பு பிள்ளைகளுக்கு வரமாக இல்லாமல் சாபமாக மாறிவிட்டதே என ஒரு மிடில் க்ளாஸ் தகப்பன் படும் ஆதங்கமே " தோனி " ...
 
சுப்ரமணியம் ( பிரகாஷ்ராஜ் ) பத்திர பதிவாளர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருந்து கொண்டே ஊறுகாயும் விற்றுக்கொண்டு தாயில்லாத தன் இரண்டு பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்க்கிறார் ... மகள் காவேரி ( ஸ்ரிதேஜா ) நன்றாக படித்தாலும் மகன் கார்த்திக் ( ஆகாஷ் பூரி ) படிப்பில் கவனம் செலுத்தாமல் கிரிக்கெட் மட்டுமே ஆடிக்கொண்டிருக்கிறான் ... மகனின் மார்க்குகளை காரணம் காட்டி பள்ளி நிர்வாகம் அவனை பள்ளியை விட்டு நீக்க சொல்லவே மகனிடம் கிரிக்கெட்டை தூர போட்டு விட்டு படிக்க சொல்கிறார் பிரகாஷ்ராஜ் ...
 
ஒரு கட்டத்தில் படிப்பில் கவனம் செலுத்தாத மகனை தகப்பன் கோபத்தில் அடிக்க அவன் தலையில் அடிபட்டு கோமா ஸ்டேஜுக்கு சென்று விடுகிறான். இதன் பிறகு தன் தவறை உணரும் பிரகாஷ்ராஜ் மகனை கோமாவில் இருந்து மீட்டெடுப்பதோடு , கல்வி என்ற பெயரில் மாணவர்கள் மேல் அநியாயத்திற்கு சுமத்தப்படும் சுமையை வெளிச்சம் போட்டு காட்டுவதே கதை ...
 
தானே இயக்குனராக இருப்பதால் தன்னிடம் இருந்து அபரிபிதமான நடிப்பை பிரகாஷ்ராஜ் வாங்கியிக்கும் படம் தோனி ... ராதிகா ஆப்தேவிடம் தன் தவறை உணர்ந்து வருந்தும் போதும் , மகனின் படிப்பிற்காக பள்ளி நிர்வாகத்திடம் கெஞ்சும் போதும் , கூனி குறுகி கடன் வாங்கும் போதும் , மகனை அடித்து விட்டோமே என அழும் போதும் ஒரு மிடில் கிளாஸ் தகப்பனாக நடிக்காமல் வாழ்ந்திருக்கிறார் ... குறிப்பாக நீயா நானா நிகழ்ச்சியில் இவர் அழுது கொண்டே பேசும் காட்சி உருக வைக்கிறது ... சிறந்த நடிகருக்கான மற்றொரு விருது கிடைக்குமென நம்பலாம் ...
 
மகனாக ஆகாஷும் , மகளாக ஸ்ரிதேஜாவும் நல்ல பொருத்தம் ... அப்பாவுடன் வாக்குவாதம் செய்யும் காட்சியில் ஆகாசின் நடிப்பு நன்று ... காலனியில் குடியிருக்கும் நளினியாக வரும் ராதிகா ஆப்தே அழகாக இருப்பதோடு நன்றாகவும் நடித்திருக்கிறார் ... அவர் கால் கேர்ளாக மாறியதன் பின்னணியை எளிமையாக விளக்கிய விதமும் , அந்த காட்சியில் இவரின் நடிப்பும் அருமை ...
 
நாசர் , சாம்ஸ் , தலைவாசல் விஜய் , பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பு இயல்பாக இருந்தாலும் கந்துவட்டி கனி பாயாக நடித்திருக்கும் முரளி ஷர்மா கவனிக்க வைக்கிறார் ... இவருக்கு சமுத்திரக்கனியின் பின்னணி குரலும் பொருத்தமாக இருக்கிறது ... படத்தின் வசனங்கள் நல்ல சார்ப் ... படிப்பை மட்டுமே வைத்து ஒருவனை மதிப்பிடும் அவலத்தை சாடுவதோடு மட்டுமல்லாமல் , விலைவாசி ஏறிக்கொண்டேயிருக்கிறது ஆனால் சம்பளம் ஏறவில்லையே என்ற நடுத்தர வர்க்கத்தினரின் ஆதங்கத்தையும் வசனங்களில் பதிவு செய்திருக்கிறார் த.சே.ஞானவேல் ...
 

இசைஞானி இசையில் " வாங்கும் பணத்துக்கும் " , " தாவி தாவி போகும் " பாடல்களும் அதற்கு நா.முத்துகுமாரின் வரிகளும் அருமை ... படம் முழுவதும் வசனங்களால் நிரம்பியிருந்தாலும் தேவைப்படும் இடங்களில் தன் இசையால் முத்திரை பதித்திருக்கிறார் இசைஞானி ... குறிப்பாக ஆஸ்பத்திரியிலிருந்து மகனை வீட்டுக்கு அழைத்து வரும் காட்சியிலும் , ஆபரேஷன் முடிந்து ஆகாஷ் கண் விழிக்கும் கட்சியிலும் பின்னணி இசை அருமை ...
 
பள்ளியிலிருந்து மகனின் பொருட்களை எடுக்கும் போது அவன் வாங்கிய பதக்கங்களை பார்த்து உருகும் காட்சியிலும் , ராதிகா ஆப்தே - பிரகாஷ் ராஜ் சமபந்தப்பட்ட காட்சிகளிலும் , தோனி , சச்சின் போன்றவர்கள் கிரிக்கெட் ஆட தடை செய்ய வேண்டும் என மற்ற பிளாட் காரர்களிடம் புலம்பும் இடத்திலும் நல்ல நடிகர் என்பதையும் தாண்டி இயக்குனர் பிரகாஷ் ராஜ் ஜொலிக்கிறார் ...
 
படத்தின் முக்கிய ஆதாரமே ஆகாஷ் கிரிக்கெட் ஆடுவதில் திறமைசாலி என்பதே , ஆனால் அவரின் திறமையை கோச் , ஸ்கூல் ப்யூன் என்று ஒவ்வொருவராக பாராட்டிக்கொண்டிருக்கிறார்களே தவிர அவர் கிரிக்கெட் ஆடுவதாக ஒரு சீன் கூட இல்லை ... அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் ஆடும் ஒரே சீனில் கூட ஒரு பயிற்சி பெற்ற கிரிக்கெட் ஆட்டக்காரனின் உடல்மொழி ஆகாஷிடம் சுத்தமாக இல்லாதது படத்தின் பெரிய குறை ...
 
 
தன் பிள்ளைகளின் திறமையையும் ,ஆசையையும் கருத்தில் கொள்ளாமல் பள்ளிகளின் முன் தவம் கிடக்கும் பெற்றோர்களின் போக்கை பற்றி கொஞ்சம் கூட சொல்லாமல் எல்லாவற்றிற்கும் ஆசிரியர்களும் , பள்ளிகளும் மட்டுமே காரணம் என்பது போல அவர்களை மட்டுமே சாடியிருப்பது ஒருதலைப்பட்சமாக இருக்கிறது ... பள்ளிகள் வியாபாரத்தளங்களாக மாறியிருப்பினும் , குருவாக வணங்க வேண்டிய ஆசிரியரையே கொலை செய்யும் அளவிற்கு இன்றைய மாணவர் சமுதாயம் மாறிப்போனதற்கு படிப்பு பற்றிய பிரஷர் மட்டும் தான் காரணமா ? என்பதை சமூக ரீதியாக ஆராய வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் இருப்பதையும் யாரும் மறுக்க முடியாது ...
 
இது போன்ற சில குறைகள் , மராத்திய படத்தின் ரீமேக் என்பதோடு ஏற்கனவே த்ரீ இடியட்சில் பார்த்த கரு என்ற போதிலும் பிரகாஷ்ராஜ் ஒரு இயக்குனராக தகப்பனின் பார்வையிலிருந்து இதை அழுத்தமாக சொல்லியிருக்கும் விதத்தை சற்றே நாடகத்தனமாக இருந்தாலும் பாராட்டலாம் ...
 
ஸ்கோர் கார்ட் - 42
comments | | Read More...

டுவிட்டரில் வம்பிலுக்கும் சிம்பு - தனுஷ்!

 
 
தனுஷும் சிம்புவும் வெளியில் சிரித்துப் பேசி கட்டிப் பிடித்து போஸ் கொடுத்தாலும், உள்ளுக்குள் அப்படி இல்லை என்பது கோலிவுட் அறிந்த சமாச்சாரம்.

கொஞ்ச நாள் அடங்கியிருந்த இவர்களின் பகை, மீண்டும் புகைய ஆரம்பித்துள்ளது, ட்விட்டர் வழியாக.

சமீபத்தில் சச்சின் டெண்டுல்கருக்காக ஒரு பாடலை

உருவாக்கியிருந்தார் தனுஷ். இந்தப் பாடல் யு ட்யூபில் வெளியானது. ஆனால் சில மணி நேரங்களில் அந்தப் பாடலை யுட்யூப் நீக்கிவிட்டது. அதற்குள் 4.5 லட்சம் பேர் அந்த வீடியோவைப் பார்த்துவிட்டிருந்தனர்.

உடனே தனுஷ், "அடுத்தவர் துன்பத்தைப் பார்த்து சிலர் சிரித்து மகிழ்கிறார்கள். மனித இனம் அன்பு செலுத்த படைக்கப்பட்டது என்ற உண்மை புரியாத அவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்," என்று ட்வீட் செய்திருந்தார்.

உடனே சிம்பு தனது ட்விட்டரில், "காப்பி அடிக்கிறதுல சீனாவை விட பயங்கரமா இருக்காங்களே," என்று ட்வீட் பண்ணியிருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் தனுஷ்: "பிரதர், அந்தப் பாட்டை சச்சினுக்காக இலவசமாதான் செய்து கொடுத்தேன். பாடல் உருவாக்கத்துக்கான செலவு மட்டும் பூஸ்ட் நிறுவனம் கொடுத்திருக்கு," என்று கூறியிருந்தார்.

உடனே பதிலுக்கு சிம்பு, "உலகில் யாரும் யாருக்கும் எதிரியில்லை. வெற்றிதான் ஒருவரை உலகுக்கு காட்டுகிறது. தோல்வியோ உலகை உனக்குக் காட்டுகிறது," என தத்துவமழை பொழிந்திருந்தார்.

"போங்கப்பா... பொழப்பை சரியா பாருங்க... இல்லன்னா உங்களை ஒருத்தனும் பார்க்க மாட்டான்" - இது குறுக்கில் புகுந்த ஒரு ரசிகரின் கமெண்ட்!
comments | | Read More...

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிப்பதில் பெருமை! - சரத்குமார்

 
 
 
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையானில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சரத் குமார்.
 
கோச்சடையானில் தனக்கு அடுத்த முக்கியத்துவம் மிக்க வேடத்தை சரத்துக்கு கொடுத்திருக்கிறார்.
 
நேற்று நடந்த பிரஸ் மீட்டில் இதுபற்றி சரத்குமார் கூறுகையில், "சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையானில் நான் நடிப்பது பெருமையாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி என்னிடம் ஒரு கதை பற்றி விவாதித்தார். மிக அருமையான கதை அது. ஆனால் அந்தப் படம் எடுக்கப்படவில்லை. ஆனால் கதை இன்னும் என் மனசில் அப்படியே இருக்கிறது.
 
இப்போது மீண்டும் கோச்சடையான் மூலம் அவருடன் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அவர் இந்த நாட்டின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். அவருடன் நடிப்பது மகிழ்ச்சியான விஷயம்," என்றார்.



comments | | Read More...

11 மணிநேர மின்வெட்டு: கோவையில் பல்லாயிரம்பேர் ஆர்ப்பாட்டம் - போலீஸ் தடியடி!

 
 
 
கோவையில் 8 மணி நேர மின்வெட்டைக் கண்டித்து 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன. 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
 
11 மணிநேர மின்வெட்டு
 
கோவையில் தினசரி குறைந்த பட்சம் 8 மணி நேரம் முதல், அதிக பட்சமாக 11 மணிநேரம் வரை மின் தடைநீடிப்பதால் தொழில் துறையினர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த நெருக்கடியில் உள்ளனர். மின் தடையைக் கண்டித்து கோவையில் உள்ள 36 தொழில் அமைப்பினர் கூட்டாக இணைந்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து நேற்று கோவையில் உள்ள சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
 
இதனால் கோவையில் உள்ள வேலாண்டிபாளையம், ஆவாரம்பாளையம் பீளமேடு, சிங்காநல்லூர், கணபதி, சின்ன வேடம்பட்டி, சிகோ, அரசூர், மலுமிச்சம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் என்ஜினீயரிங், குறுந்தொழில் கூடங்கள், வார்ப்பட தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. சில தொழிற்சாலைகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது.
 
இது தவிர கோவையில் உள்ள காட்டூர், பழையூர், இடையர்பாளையம், ஒண்டிப்புதூர், உள்ளிட்ட பல பகுதிகளில் மோட்டார் பம்பு, உதிரிபாகங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டு கிடந்தன.
 
ஆர்ப்பாட்டம்- கஞ்சித்தொட்டி
 
இந்த நிலையில் அறிவிக்கப்பட்டபடி நேற்று காலை 10.30 மணிக்கு கோவை தமிழ்நாடு ஓட்டல் முன்பு தொழில் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கொடிசியா தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தொழில் அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தபடி, பலர் கைகளில் கறுப்பு கொடிகள், சிம்னி விளக்குகளை பிடித்தபடி கலந்து கொண்டனர்.
 
அப்போது அவர்கள் தடையில்லாமல் மின்சாரம் வழங்கு, பாரபட்சம் இல்லாமல் மின்சாரம் வழங்கு, உடலுக்கு தேவை உயிரோட்டம், தொழிலுக்கு தேவை மின்னூட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கஞ்சி தொட்டிகளை திறந்து, தொழிலாளர்களுக்கு இலவச கஞ்சி வழங்கினர்.
 
ரூ.250 கோடி உற்பத்தி இழப்பு
 
இது குறித்து போராட்டக்குழுவினர் சிலர் கூறுகையில், கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கொடிசியா, சிமா, இந்திய தொழில் வர்த்தக சபை, தமிழ்நாடு பம்பு உற்பத்தியாளர் சங்கம், சிஸ்பா, காட்மா, டேக்ட் ஆகிய குறுந்தொழில் சங்கங்கள், கோவை சிறுமின் விசை பம்பு உற்பத்தியாளர் சங்கம், கோவை மாவட்ட வார்ப்பட சங்கம், சிறு வார்ப்பட ஆலை உரிமையாளர் சங்கம், கோப்மா, உள்ளிட்ட 36 தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உரிமையாளர்கள், தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர்.
 
கோவையில் ஒரு நாள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு, 3 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் ரூ.250 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது என்றனர்.
 
மறியல்- தடியடி
 
சில அமைப்பை சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் இருந்து கிளம்பி, கோவை டவுன் பஸ் நிலையம் எதிரே உள்ள சிக்னல் பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிடவில்லை.
 
ஆவேசத்துடன் அவர்கள் கோஷம் போட்டவாறு அங்கிருந்து செல்லாமல் அடம் பிடித்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். இதனால் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நாலா புறமும் கலைந்து ஓடினர்.
 
வாகனங்களில் வந்த பலரும் பீதியடைந்து ஓடினார்கள். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண், மற்றும் ஓட்டல் தொழிலாளியான முருகன் ஆகியோர் கூட்டத்தில் சிக்கிக் கொண்டனர். இதில் காயம் அடைந்த முருகனை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லேசான காயத்துடன் அந்த பெண், அங்கிருந்து ஆட்டோவில் கிளம்பினார்.
 
இதைத் தொடர்ந்து போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பிய சில தொழிலாளர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.



comments | | Read More...

தனுஷின் சச்சின் பாடல் YOUTUBE-இல் இருந்து நீக்கப்பட்டது

 
 
 
தனுஷ், மனைவி ஐஸ்வர்யாவுடன் நேற்று முன்தினம் ( பிப்ரவரி 08 ) திருப்பதிக்கு சென்றார். அவர்களுடன் இசையமைப்பாளர் அனிருத் சென்று இருந்தார்.
 
தனுஷ் தனது தலைமுடியை காணிக்கையாக செலுத்திய பின்னர், முக்கிய பிரமுகர்களுக்கான தரிசன நேரத்தில் தரிசனம் செய்தார்கள்.
 
தரிசனம் முடிந்து கோவிலை விட்டு வெளியே வந்த நடிகர் தனுஷ் நிருபர்களிடம் " எனது மாமனார் நடிகர் ரஜினிகாந்த், ஏழுமலையான் அருளால் பூரண நலத்துடன் இருக்கிறார்.
 
விரைவில் திரைக்கு வர இருக்கும் '3' படத்திற்காக நான் சொந்தக் குரலில் பாடிய 'WHY THIS KOLAVERI' பாடல் தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் கூட புகழ் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தானில் இந்த பாடலுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதாக அங்குள்ள எனது ரசிகர்கள் தெரிவித்தனர். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பற்றி பாடியுள்ள பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன்.
 
எனவே, ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் நான் தொடர்ந்து சினிமாவில் சொந்த குரலில் பாடுவேன். " என்று தெரிவித்து இருக்கிறார்.
 
இந்நிலையில் தனுஷ் உருவாக்கிய சச்சின் பாடலை YOUTUBE இணையத்தில் இருந்து நீக்கி விட்டார்கள். இதற்கு தனுஷ் தனது டிவிட்டர் இணையத்தில் " யாரோர் சச்சின் பாடலை இணையத்திலிருந்து நீக்கச் செய்திருக்கிறார்கள். ஒரு வாரமாக இரவு பகல் பாராமல் அப்பாடலுக்காக உழைத்திருக்கிறோம். அதை நீக்கிக் செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. சீக்கிரமே மீண்டும் இணையத்தில் அப்பாடலை வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகிறோம். சட்டப்படி இதனை எதிர்கொள்வோம்." என்று தெரிவித்தார்.
 
தற்போது சச்சின் பாடல் மீண்டும் YOUTUBE இணையத்தில் மீண்டும் இணைக்கப்பட்டுவிட்டது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger