Saturday, 11 February 2012

விறுவிறுப்பு தமிழ்செய்திகள் | Latest Tamil News Online | Tamilnadu News | TamilNadu Politics Latest Tamil Movies Tamil Film news, Tamil Cinema Reviews, Hot Tamil Film Actress, Kollywood Film Actor Actress Specials.
நான் தமிழரிடம் மன்னிப்புக் கேட்கிறேன், ஒரு நாட்பு நாடு என்ற முறையில் நாம் அவர்களுக்கு ஆயுதத்தைக் கொடுத்தோம். எனினும் இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றமை உண்மைதான்.
இனிமேலாவது எஞ்சிய தமிழர்கள் சிங்களவர்களுடன் நிம்மதியாக வாழுவார்கள் என நம்புகிறேன். நான் தமிழரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.
நோர்வே பாராளுமன்றத்தில் தமிழ் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார் முன்னாள் இலங்கைக்கான பிரதி பாகிஸ்தான் தூதுவராக இருந்து தற்போது நோர்வேக்கு தூதுவராக பதவி உயர்த்தப்பட்டுள்ள பாகிஸ்தான் தூதுவர்.
இவர் பாகிஸ்தான் தூதுவராக இருந்த காலத்தில் பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை பணிப்பாளர் இலங்கையில் நிலை கொண்டிருந்தமையும் கொழும்பில் நடந்த தற்கொலை தாக்குதலில் குறித்த தூதுவர் உயிர் தப்பியும் இருந்தார்.
அல்கொய்தா இயக்க பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் கொல்லபட முதலே பாகிஸ்தான் நோர்வேயின் சமாதான முயற்சிகளுக்கு தென்கிழக்கு ஆசியாவில் நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்து விட்டது.
இன்று அமெரிக்காவால் கைவிடப்பட்ட நிலையில் சீனாவின் சலுகைகளுக்கு மட்டும் கை ஏந்தும் நிலையில் இருக்கும் பாகிஸ்தான் தூதுவராக இருக்கும் நீங்கள் காஷ்மீரில் இந்திய படைகள் செய்யும் அவலத்திற்கு இங்கு 300 பேர் மத்தியில் உரையாற்றுகிறீர்கள்.
காஷ்மீரில் அழிக்கபட்ட இனத்தில் இருந்து வந்ததாக கூறும் நீங்கள் தூதுவராக இருக்கும்போதுதான் தமிழர்கள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் உங்கள் ராஜதந்திர அறிவுப்படி இலங்கையில் கொல்லப்பட்டார்கள்.
இது தமிழருக்கு மட்டும் அல்ல நோர்வேயின் சமாதான முகத்திரைக்கு நீங்கள் வைத்த தீயே. இவ்வாறு இருக்கும்போது நோர்வேயின் உதவியை காஷ்மீருக்கு எந்த நிலையில் கேட்கிறீர்கள் என கேட்டபோது?
இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றது உண்மைதான் என ஒப்புக்கொண்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
ஆனால் நான் தமிழரிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் தமிழரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன் அவர்களுக்கு இலங்கையில் நடந்தவற்றிக்கு.
இனிமேலாவது எஞ்சிய தமிழர்கள் சிங்களவர்களுடன் நிம்மதியாக வாழுவார்கள் என நம்புகிறேன்.
பாகிஸ்தான் எந்தவித முன்னணிச் செயற்பாடுகளிலும் இலங்கை யுத்த விடயத்தில் ஈடுபடவில்லை. இராணுவ போர் குற்றம் மனிதஉரிமை விடயங்களை கவனித்தால் நான் அதைப்பற்றி விரிவாக போகவிரும்பவில்லை.
நான் இலங்கையில் அண்ணளவாக ஒரு வருடமும் 6 மாதங்களும் தங்கி இருந்தேன். எனக்கு தெரியும் இரண்டு பக்கமும் முறைப்பாடுகள் உள்ளது.
இலங்கை வெளிநாட்டு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் எனது வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். (கதிர்காமரும் பாகிஸ்தான் உளவுத்துறையும் வாழ்ந்தவீடுகள் அருகில்) ஒரு அமைதியான நல்ல முதியவர். அவர் கொல்லபட்ட விதம் அவ்வாறு நடந்திருக்க கூடாது.
எனது நண்பரே! யுத்தம் மிகவும் வலியானது. இலங்கைக்குப் பாகிஸ்தான் ஒரு நட்பு நாடு என்ற முறையில் தனது உதவியை செய்தது. இலங்கை அரசு ஜனநாயகப்படி தெரிவு செய்யபட்ட ஒரு அரசு என்பதால் பாகிஸ்தானின் உதவியை நாடியது. ஆயுதங்களை தருமாறு கோரியது.
ஐ.நா. சட்டப்படி நாம் அவர்களுக்கு ஆயுதங்களை கொடுத்தோம். எனக்கு தெரியும் புலிகள் சில விடயங்களுடன் முரண்பட்டனர். அவை மிகவும் சிறியவை.
பின்னர் சுனாமி வந்தது. சுனாமியே புலிகளை பலவீனபடுத்தியது. ஆனால் பாகிஸ்தான் அரசு புலிகளை பலவீனபடுத்தவில்லை. நான் இலங்கையில் தங்கி இருந்தபோது சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் தங்கள் உயிர்களை சுனாமியில் பரிதாபமாக பறிகொடுத்தனர்.
பின்னர் நான் வெளியேறும்போது இலங்கை இராணுவம் யுத்தத்தை ஆரம்பித்தது. நான் வெளிக்கிட்ட பின்னரே யுத்தம் ஆரம்பமானது. நான் நேரடியாக சம்மந்தபடவில்லை.
யுத்தில் மேலும் இலங்கை இராணுவம் எங்களிடம் அனுமதியோ ஆலோசனையோ கேட்கவில்லை. அவர்கள் அனுபவம் வாய்ந்த படைகள். அவர்களின் அனுபவத்தில் செய்தனர். நான் ஏற்றுக்கொள்கிறேன். நானும் உணர்கிறேன். அங்கு சில மனித உரிமை மீறல்கள் கொலைகள் நடந்துள்ளது.
எனது நண்பரே! யுத்தம் என்பது மிகவும் கொடிய ஒரு பாதை. எவர் எந்த பக்கத்தால் வருபவர் என்று தெரியாது. நான் தமிழரிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் தமிழரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன் அவர்களுக்கு இலங்கையில் நடந்தவற்றிக்கு. இரண்டு பக்கமும் இந்த கொடிய இன மோதலில் துன்பப்பட்டுள்ளார்கள்.
தற்போது நான் நினைக்கிறேன் அந்த நிலமை மாறிவிட்டது. புதிய ஒரு அத்தியாயம் இலங்கையில் உருவாகி உள்ளது. அங்கு எல்லோரும் நிம்மதியாக வாழலாம் என்று நான் உணருகிறேன்.
இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க கடும் முயற்சிகள் மேற்கொண்டு வரும் இந்த நிலையில் இதனை மறுப்பக்கம் மாற்றும் வகையில் தற்போது இந்த சம்பவம் வெளியாகியுள்ளது.கடந்த தினங்களில் தங்கல்லையில் வெள்ளைக்கார பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற வேளையில்,வெள்ளைக்காரர் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.இந்த நிலையில் மற்றுமொறு வெள்ளைக்கார யுவதி நித்திரையில் இருந்து சமயம், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மாத்தறை திக்வெலையில் பதிவாகியுள்ளது.மாத்தறை திக்வலை பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அழகிய யுவதி ஒருவர் ஹேட்டல் அறையில் இனந்தொரியாத நபரினால் பாலியல் வன்புணர்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் திக்வெல்ல காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (06) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.குறித்த யுவதி,தமது காதலனுடன் 2.30 மணிவரைக்கும் மது அருந்திவிட்டு, பின்னர் தமது காதலனுடன் நித்திரைக்குச் சென்றுள்ளார்.அதிக மது போதையில் இருந்த அவரும், அவரது காதலனும் ஆழ்ந்த நித்திரையில் இருந்துள்ளனர்.அதிகாலை 3 மணியளவில் அந்த யுவதி திடீரென விழித்தெழுந்த நிலையில், யாரோ ஒருவர் அவருடன் உடலுறவு கொண்டிருந்துள்ளார்.முதலில் அந்த பெண் தன் காதலனே தன்னுடன் உறவு கொண்டிருக்கிறார் என்று நினைத்துள்ளார்.எனினும் தன்னுடன் இருந்த நபர் வேறொருவர் என சற்று நேரத்திற்கு பின்னரே தெரியவந்துள்ளது.
அந்த கட்டிலிலேயே அடுத்த பக்கத்தில் தமது காதலன் கடும் நித்திரையில் இருந்துள்ளார்.இந்தநிலையில்,அவர் கூக்குரலிட்டுள்ளார்.இந்த நிலையில் குறித்த நபர் நிர்வாணமாக அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.இச் சம்பவத்தை தொடர்ந்து எழுந்துள்ள நிலைமைகளை தொடர்ந்து இலங்கை வந்திருந்து சுற்றுலா பயணிகள் நாட்டிலிருந்து வெளியேறினர்.இந்த சம்பவத்தை தொடந்து குறித்த பிரதேசத்தில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு வேண்டாம் என்று போய்விட்டது.
தமிழ், தெலுங்கு படங்களில் படு பிஸியாக இருந்தாலும் தனது தாய்மொழியான Amala Paulமலையாளத்தில் சொல்லிக் கொள்ளும்படி ஒரு நல்ல படம் வரவில்லையே என்ற ஏக்கம் அமலாபாலுக்கு எப்போதுமே உண்டு. ஏனெனில் 'மைனா' ஹிட் ஆவதற்கு முன்பு 'நீலத்தாமர' போன்ற ஒரு சில படங்களில் குட்டி குட்டி கேரக்டர்களில் மட்டுமே நடித்திருந்தார் அமலா. இப்போது அவரது வாட்டத்தைப் போக்கும் வகையில், பிரபல இயக்குனர் லால்ஜோஷ் இயக்கும் 'டைமண்ட் நெக்லஸ் படத்தில் பகத் ஃபாசிலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அமலா. இந்தப் படம் ஒப்பந்தமானதை ஒட்டி தனது கல்லூரி நண்பர்கள் சிலபேரை துபாய் வரை அழைத்துப்போய் பார்ட்டி கொடுத்து அசத்திவிட்டு வந்தாராம் அமலா. முரண்பாடான இந்த சமூகத்தில், ஒரு இளைஞனுக்கும், மூன்று பெண்களுக்கும் இடையில் நடக்கும் காதல் போராட்டத்தை அலசுகிறதாம் 'டைமண்ட் நெக்லஸ்'.. |