News Update :
Powered by Blogger.

புயல் நிவாரணத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி: மத்தியக் குழுவிடம் கோருகிறது தமிழகம்

Penulis : karthik on Saturday 7 January 2012 | 19:58

Saturday 7 January 2012

"தானே" புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர் செய்யவும், மீட்பு
மற்றும் நிவாரணப் பணிகளைநிரந்தரமாக மேற்கொள்ளவும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு
மேல் தேவை என மத்திய குழுவிடம் தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் உருவான `தானே' புயல் கடந்த டிசம்பர் 30-ந் தேதி கரையை
கடந்தபோது கடலூர் மாவட்டத்திலும், புதுச்சேரியிலும் வரலாறு காணாத சேதத்தை
ஏற்படுத்தியது.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுவதற்காக உள்துறை இணைச்
செயலாளர் லோகேஷ் ஜா தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது.
மத்திய வேளாண்மைத் துறை இயக்குநர் கே.மனோகரன், மத்திய நீர்வள ஆதாரத்துறை
கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, மத்திய தரைவழிப் போக்குவரத்துத்
துறை பொறியாளர் திக்விஜய் மிஸ்ரா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப
நலத்துறை முதுநிலை மண்டல இயக்குநர் பழனிவேலு, மத்திய மின்துறை இயக்குநர்
விவேக் கோயல், மத்திய திட்டக்குழு முதுநிலை ஆராய்ச்சி அலுவலர் முரளிதரன்,
மத்திய குடிநீர் மற்றும் பொதுசுகாதாரத் துறை துணை ஆலோசகர் ஆர்.ஜெ.தத்தா
சௌத்ரி, மத்திய கால்நடை மற்றும் மீன்வளத் துறை நிர்வாக இயக்குநர்
பி.பால்பாண்டியன் ஆகியோர் அடங்கிய இந்த குழு `தானே' புயலால்
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக நேற்று சென்னை வந்தது.
மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகம் வந்த இந்த குழுவினர் தமிழக அரசு தலைமைச்
செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியை சந்தித்து 2 மணி நேரம் ஆலோசனை
நடத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து புயல் பாதிப்பு மற்றும் சேத விவரங்கள்
குறித்துசம்பந்தப்பட்ட துறையின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களின் ஆய்வுக்
கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், நிதித்துறை, வருவாய்த் துறை,
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பொதுப்பணித் துறை,
வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, உணவுத் துறை, எரிசக்தி
துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை, உணவு வழங்கல் துறை,
தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜீவ் ரஞ்சன், வருவாய் நிர்வாக ஆணையர்
ஞானதேசிகன், சென்னை மாநகராட்சி கமிஷனர் பி.டபிள்ï.சி.டேவிதார் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், புயல் சேத விவரங்கள் கொண்ட விரிவான அறிக்கையை மத்திய
குழு தலைவர் லோகேஷ் ஜாவிடம் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி
வழங்கினார். புயல் சேத விவரங்கள் பற்றிய வீடியோ படக் காட்சிகளும் மத்திய
குழு உறுப்பினர்களுக்கு காண்பிக்கப்பட்டு, புயல் பாதிப்பு குறித்து
விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியேவந்த மத்திய குழுவின் தலைவர் லோகேஷ் ஜா
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக வந்துள்ளோம்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளரை சந்தித்து புயல் சேத விவரங்களை கேட்டு
அறிந்தோம். துறை வாரியாக ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி அந்தந்த துறையைச்
சேர்ந்த செயலாளர்கள் விரிவாக எடுத்துரைத்தார்கள். புயல் பாதிப்பு குறித்த
விரிவான அறிக்கை ஒன்றையும் தமிழக அரசு சார்பில் அளித்து உள்ளனர். புயல்
பாதிப்பு குறித்த வீடியோ படக் காட்சிகளையும் பார்த்தோம்.
புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை (இன்று) முதல்
பார்வையிட இருக்கிறோம். 3 நாட்கள் வரை இந்தப் பணிகளை மேற்கொள்வோம். அரசு
அதிகாரிகளும், மாவட்ட அதிகாரிகளும் எங்களுடன் வந்து சேத விவரங்களை
எடுத்து கூறுவார்கள். புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பிறகு,
சென்னைக்கு மீண்டும் செவ்வாய்க்கிழமை வந்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை
நடத்துவோம். அதன்பிறகு டெல்லி சென்று புயல் சேத விவரங்கள் குறித்த
அறிக்கையினை மத்திய அரசிடம் அளிப்போம்.
இவ்வாறு லோகேஷ் ஜா கூறினார்.
தானே புயலால் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டிருப்பதால் ரூ.5 ஆயிரம் கோடிக்கு
மேல் நிவாரண நிதியுதவி வழங்க வேண்டும் என்றுகோரி மத்திய குழுவிடம் தமிழக
அரசின் சார்பில் கோரிக்கை விடப்பட்டிருப்பதாக உயர் அதிகாரி ஒருவர்
கூறினார்.
மத்திய குழுவினர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரியில் புயலால்
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சேத விவரங்களைச் சேகரிக்கின்றனர்.
நாளை (9-ந் தேதி) கடலூர் மாவட்டத்திற்கு செல்லும் மத்திய குழுவினர்,
அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர் அன்றைய தினம்
கடலூரிலேயே தங்குகிறார்கள்.
10-ந் தேதி மத்திய குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று புயல்
பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார்கள். ஒரு குழுவினர், தஞ்சாவூர்,
திருவாரூர், நாகப்பட்டினம் ஆகியடெல்டா மாவட்டங்களிலும், மற்றொரு
குழுவினர் விழுப்புரம்,காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் புயல் பாதித்த
பகுதிகளை பார்வையிடுகின்றனர். பின்னர் சென்னை வந்து தமிழக அரசின் உயர்
அதிகாரிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்திவிட்டு டெல்லி திரும்புகிறார்கள்.
இந்த குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதும், தமிழ்நாட்டுக்கும்
புதுச்சேரிக்கும் எவ்வளவு புயல் நிவாரண உதவி வழங்கலாம் என்பது பற்றி
மத்திய அரசு முடிவு செய்யும்.
comments | | Read More...

கதவு திறந்தே இருக்கிறது, காங்கிரஸ் வெளியேறலாம்: மம்தா அதிரடி

கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற விரும்பினால் தாராளமாக
வெளியேறிக் கொள்ளலாம்.கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்று மேற்கு
வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி
அதிரடியாகத் தெரிவித்தார்.
கொல்கத்தா தலைமை செயலகத்தில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி
அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை திரிணாமுல் காங்கிரஸ்
எதிர்த்து வருகிறது. அதேபோல் வலுவான லோக்பால் சட்டம்கொண்டுவரப்பட
வேண்டும், அதில் லோக் அயுக்தாவையும் சேர்க்க வேண்டும் என்று
வலியுறுத்தினோம். எங்கள் வற்புறுத்தலால் லோக் அயுக்தா சேர்க்கப்பட்டது.
ஆனால், எங்கள் கருத்தை அவர்கள் கேட்கவில்லை. லோக்பால் மசோதாவை நாங்கள்
கேட்டபடி ஓட்டெடுப்புக்கு விடவில்லை.
அதேபோல், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலையை
உயர்த்தக்கூடாது என்றும் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.
இந்த காரணங்களால் காங்கிரஸ் கட்சி எங்கள் மீது வீணான புரளிகளை, வதந்திகளை
பரப்பி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ்பற்றி அவதூறு பிரசாரம் செய்து
வருகிறது.
உத்தரபிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி
தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி
கலங்கிப்போய், பயந்துபோய் உள்ளது.
மே.வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து கொண்டு திரிணாமுல்
காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் கட்சி, தூற்றி வருகிறது. தொடர்ந்து
அவமானப்படுத்தி வருகிறது. அவர்கள் இஷ்டம்போல் தொடர்ந்து மார்க்சிஸ்ட்
கட்சியுடன் சேர்ந்து செயல்படட்டும்.
விரும்பினால் எங்களுடனான கூட்டணியை காங்கிரஸ் கட்சி முறித்து
கொள்ளட்டும். அவர்கள் வெளியேற எங்களின் கதவுகள் திறந்தே இருக்கின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு
தெரிவித்து உள்ளது.
மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா
இதுகுறித்து கூறுகையில், "மம்தா பானர்ஜியின் கருத்தை நாங்கள் தெளிவாகப்
புரிந்து கொண்டுள்ளோம். ஆனால் யாருடைய விருப்பத்தையும் பூர்த்தி
செய்வதற்காக நாங்கள் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. எங்களுக்கு
ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவே
இடம்பெற்றுள்ளோம். எனவே மக்கள் விரும்பும் வரை அமைச்சரவையில் நீடிப்போம்"
என்று தெரிவித்தார்.
comments | | Read More...

கமலின் 'காக்கி சட்டை'யில் நரேன்!

முகமூடி படத்தில் வில்லன் பாத்திரம் ஏற்று நடித்து வரும் நரேன் , அடுத்து
கமல்ஹாசனின் முத்திரைப் படங்களில் ஒன்றான காக்கிச் சட்டையின்
ரீமேக்கில்நடிக்கவுள்ளாராம்.
ஜீவா கதாநாயகனாக நடிக்கும் முகமூடி படத்தை தற்போது மிஸ்கின் இயக்கிவ
ருகிறார். இந்த படத்தில் புதுமையாக நரேனை வில்லானாக நடிக்க
வைத்துள்ளார்மிஸ்கின். இவர்தான் மலையாளத்து நரேனை தமிழுக்கு சித்திரம்
பேசுதடி மூலம் கூட்டி வந்தவர். தொடர்ந்து அஞ்சாதே படத்திலும்
வித்தியாசமான வேடத்தில் நரேனை நடிக்க வைத்திருந்தார். இதில் பிரசன்னா
வில்லனாக நடித்தார்.
மலையாளத்திலேயே உழன்று கொண்டிருந்த தனக்கு தமிழில் நல்ல அறிமுகத்தை
ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதால் முகமூடி படத்தில் வில்லனாக நடிக்க உடனே
ஒப்புக் கொண்டாராம் நரேன்.
இந்தப் படத்திற்கு அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி
பெற்ற காக்கிசட்டை படத்தின் ரீமேக்கில் நடிக்கப் போகிறாராம் நரேன்.
கமல் சார் நடித்த கதாபத்திரத்தில் நடிக்கப் போகிறேன். இதை எந்தவித
குறையில்லாமல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் நரேன்.
காக்கி சட்டை படத்திற்காக இப்போதே பயிற்சிகளை எடுத்து வருகிறாராம்.
முகமூடி படத்திற்கும் சேர்த்தே இந்தப் பயிற்சியாம்.
கமல்ஹாசன் , மாதவி , அம்பிகா ஆகியோரது நடிப்பிலும் சத்யராஜின்
வித்தியாசமான வில்லத்தனத்திலும் உருவாகி வெற்றி பெற்ற படம் காக்கி சட்டை.
இப்படத்தில்தான் வில்லத்தனத்தில் புது முத்திரைபதித்தார் சத்யராஜ்.
அப்படத்தில் அவர் பேசிய தகடு தகடு வசனம் இன்றளவும் பிரபலமானது என்பது
நினைவிருக்கலாம்.
கமலுக்கு கன கச்சிதமாக பொருந்திய காக்கிசட்டை நரேனுக்கு எப்படி இருக்கும்
என்பது படத்தைப் பார்த்தால்தான் தெரியும்.
தொடர் இடுக்கைகள் :
comments | | Read More...

தமிழனுக்கு எதிரான விஜயின் முள்ளமாரித்தனம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம்
துப்பாக்கி. படத்தில் விஜய்யின் உழைப்பை பற்றி தன் நட்பு வட்டாரத்தில்
புகழ்ந்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இந்நிலையில் படத்தில் நடிக்கும் ஒரு கதாபாத்திரத்தை பற்றி வெளியே
சொல்லாமல் ரகசியமாக வைத்துள்ளார்களாம். விஜய்யுடன் மலையாள நடிகர் ஜெயராம்
முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதே அந்த ரகசியமாம்.
முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமாவதை அடுத்து
படத்தில் ஜெயராம் நடிக்கும் விஷயத்தை இப்போதைக்கு வெளியே சொன்னால் ,
பிரச்சினை கிளம்பிவிடுமோ என்றுபதறிப்போய் உள்ளார்களாம் படத்தின்
இயக்குனரும் நடிகரும்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையின் சூடு தனிந்ததும்விஷயத்தை வெளியே
சொல்லலாம் என்று திட்டமிட்டுள்ளார்களாம்.
அப்படிப் பார்த்தால் இப்போது வெளிவர இருக்கும் பல தமிழ் படங்களில் மலையாள
சேச்சிகளே ஹீரோயின்களாக இருக்கிறார்கள். அதைப் பற்றி சினிமா ரசிகர்கள்
உட்பட யாருமே கவலைப்படவில்லை. நடிகருக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு ஒரு
நியாயமா ? என்ற கேள்வியே எழுகிறது.
அதே சமயத்தில் தன் படத்தில் நடிக்கும் இரண்டு மலையாள நடிகைகளையும்
போயிட்டு வாங்க , பிரச்சனை முடிந்ததும் பார்த்துக்கொள்ளளாம் என்று
வீட்டுக்கு அனுப்பிவைத்த இயக்குனர் பாரதிராஜா போன்ற உணர்வுப்பூர்வமான
இயக்குனர்களும் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்.
இதே விஜய் தேர்தல் நெருங்கிய வேளையில் பரப்பரப்புக்காகவும்,தனது
ரசிகர்களின் பலத்தை காட்டுவதற்காகவும் இலங்கை அரசைஎதிர்த்து
ராமேஸ்வரத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினார். அதன் விளைவு விஜயின்
'காவலன்' படத்தை இலங்கையில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்ட போது 'எங்கள்
தேழி அசின் நடித்திருப்பதால் காவலனை இலங்கையில் திரையிட அனுமதிக்கிறோம்'
( எப்படி தேழி, எந்த முறையில் தோழி, எந்த நட்பு கோப்பெருஞ்சோழன் -
பிசுரத்திரயார் நட்போ ! கேவலம்டா சாமி....) என்று ராஜபக்சே அறிவித்து
படத்துக்குஅனுமதி அளித்தார். அத்தோடு விஜயின் இலங்கை எதிர்ப்பு காணாமல்
போனது...
இலங்கை அரசுக்கு எதிராக கையெழுத்து கேட்க போனவர்களையே துரத்தி அடித்து
தனது சிங்கள விசுவாசத்தை காட்டி தனது வேலாயுதம் படத்தை எந்த வித
சிக்கலும் இல்லாமல் இலங்கையில்திரையிட வைத்தார்.
இப்போது முல்லை பெரியாறு அணை பிரச்சனை பத்திக்கொண்டு எரியும் இந்த
வேளையில் தனது படங்களை கேரளாவில் திரையிடுவதில் எந்தவிதமான சிக்கலும்
வந்துவிட கூடாது என்பதற்காகவே வாய் மூடி மௌனம் காத்தவர் சிக்கலே இல்லாமல்
இருக்க இப்போது மலையாள நடிகரையே தனது படத்தில் நடிக்கவைகிறார் என்றால்
விஜய் செய்திருக்கும் இந்த முள்ளமாரித்தனமான காரியம் அவரது சுயரூபத்தை
,மக்கள் நலனில் அவருக்குள்ள அக்கறையை மிக தெளிவாக எடுத்துக்காடுகிறது.
திரைப்படங்களில் தொடையை தட்டி வீரவசனம் பேசுவது அல்ல வீரம் இதுபேன்ற
நேரங்களில் துணிந்து குரல் கொடுப்பது தான் வீரம் .
இவர் போன்ற நடிகர்களுக்கு பிரச்னை என்றால் ரசிகன் என்ற பெயரில் உயிரையே
கொடுக்க முன் வரும் தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் இந்த ஹீரோக்கள்
எல்லாம் பொட்டைத்தனமாக வாய் மூடி ஒளிந்துகொள்வது தான் வாடிக்கையாக
உள்ளது....
அது சரி முருகதாஸ் ....முருகதாஸ் என்று ஒரு மானமுள்ள தமிழன் இருந்தாரே
தனது இலட்சிய படத்தை (ஆம் அறிவு ) தமிழனுக்காக அற்பநிகிறேன்
என்றாரே...படத்தில மூச்சுக்கு மூச்சு தமிழன் தமிழன்னு சொன்னாரே அந்த அந்த
மானமுள்ள முருகதாஸா தமிழனுக்கு தன்னித்தர மருப்பவனோடு கைகோர்கிறார்...
அட போங்கடா... நீங்க எல்லாவருமே தெளிவா தான் இருக்கீங்க உங்க உங்க
விசயங்களில் இளிச்சவாயன் தமிழன் தான் இன்னும் தெளிவாகல்ல...தெளிவாகவும்
மாட்டான்..
comments | | Read More...

நடிகை சுஹாசினியுடன்இயக்குனர் சேரன் மோதல்

நட்டி குமார் இயக்கத்தில் கணேஷ் வெங்கட்ராம் கதாநாயகனாக நடிக்கும் படம்
பனித்துளி. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம்
திரையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சுஹாசினி மணிரத்னம் , தயாரிப்பாளர் டி. சிவா , இயக்குனர்
சேரன் உள்ளிட்டபலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் தயாரிப்பாளர் டி. சிவாபேசியதாவது ;-
'' சிறிய பட்ஜெட் படங்கள் திரையிடுவதற்கு தியேட்டர்கள் இல்லாததால் நிறைய
தயாரிப்பாளர்கள் நஷ்டத்திற்கு ஆளாகிறார்கள். ஆதலால் தயாரிப்பாளர்கள்
சங்கத்தில் ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறோம்.
அதன்படி பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் இனிமேல் ஜனவரி 14 , ஏப்ரல் 14 ,
மே 1 , ஆகஸ்ட் 15 , தீபாவளி என வருடத்தில் இந்த ஐந்து நாட்களில் மட்டுமே
வெளியாக வேண்டும்.
மற்ற நாட்களில் குறைந்த பட்ஜெட் படங்களை வெளியிட்டுக் கொள்ள வழிவகை
செய்யப்பட்டுள்ளது '' என்றார்.
நடிகை சுஹாசினி பேசியதாவது:-
"நான் ஒரு நடிகையாகவோ , சினிமா சார்ந்தவராகவோ இல்லாமல் சாதரண பெண் ரசிகை
என்ற அளவில் ஒரு கோரிக்கையை இங்கே வைக்கிறேன். ஹீரோக்களில் எம்.ஜி.ஆர் ,
கமல் , அரவிந்த் சாமி , அஜித் போன்ற ஹேண்ட்சம் ஹீரோக்களை தமிழ்
ரசிகைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுகிறேன். நடிகைகளை மட்டும் அழகழகாக
அறிமுகப்படுத்துகிறீர்களே... ரசிகைகளுக்கும் அழகான ஹீரோக்களை
அறிமுகப்படுத்த வேண்டுகிறேன்" என்றார்.
இயக்குனர் சேரன் பேசியதாவது:-
'' சுஹாசினி பேசிய ஹேண்ட்சம் ஹீரோக்கள் எல்லோருமே வெள்ளை நிறமுடையவர்கள்
என்பதால் அப்படி சொல்லி இருக்கிறார். கறுப்பாக இருப்பவர்களிலும்
ஹேண்ட்சம் ஹீரோக்கள் இருக்கிறார்கள் மேடம். அவர்களையும் ரசியுங்கள் ''
என்றார்.
இருவருக்குமிடையேயான இந்த ' ஹேண்ட்சம் ' குறித்த மோதல் , எல்லோரிடமும்
புன்னகை கலந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்படின்னா இந்த அம்மணி மணிரத்தினத்தை (அதாங்க இவங்க புருஷன்) ரசிக்கிறதே
இலையோ ...!!
கொஞ்ச நாளாவே இந்த அம்மணி ஓவரா தான் போய்கிடு இருக்கு மணிரத்தினம் சார்
பார்த்துங்கோ.....
comments | | Read More...

எங்கே போகிறது இந்தியா ! கலாசாரத்தை'?' ஆக்கிய வீடியோ பார்க்கத்தவறாதீர்கள்

For video click here
[img]https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheqmuUVOgtBH-bD2YSUR8HoQlUwkmPd6nmWqyI-UvjH163XxF_UPEuEMgCQ91yYclKsqcI8UmYkIQhNV14jBEBQNdTV8N62iM2cIj8UVY4-YPnzKnETG6UA93uGGfnfqGuPsZ6L1D4zUw/s1600/0.jpg[/img]
இப்படியும் உலகில் ஒரு நாடா என்று உலகையே ஆச்சரியப்பட வைக்கும்
கலாச்சாரத்தை கொண்டதுதான் நமது இந்திய கலாசாரம்! இன்று கொஞ்சம் கொஞ்சமாக
மேலை நாட்டு மோகத்தால் நமது கலாசாரம் மறைந்து வருகிறது என்பதை விட
அழிந்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. அதற்கு எடுத்துக்காட்டு தான்
இந்த வீடியோ!! இதை பார்க்கும் போது நாம் மேலை நாட்டு கலாசாரத்தையே தூக்கி
சாப்பிட்டு ஏப்பம் விடும் அளவுக்கு கலாசார சீரழிவில் மூழ்கும் காலம் மிக
விரைவில் இருப்பதாகவே எண்ண தோன்றுகிறது!!!
comments | | Read More...

நக்கீரன் அலுவலகம் மீது அதிமுகவினர் கொடூரத் தாக்குதல்

ஜெயலலிதாவின் அட்டைப்படம் தாங்கி வந்துள்ள நக்கீரன் இதழைக் கொளுத்திய
அதிமுகவினர், சென்னையில் உள்ள அந்த பத்திரிகையின் அலுவலகம் மீது கடும்
தாக்குதல் நடத்தினர். மேலும் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில்
அந்த பத்திரிகையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.க., தொண்டர்கள் பலர் கல்
மற்றும் உருட்டுக்கட்டையால் வீசி அங்கிருந்த பொருட்களை அடித்து
நொறுக்கினர். இதனையடுத்து அங்குபரபரப்பு ஏற்பட்டது.
வேளச்சேரி எம்எல்ஏ அசோக் நக்கீரன் அலுவலக வாசலில் உள்ள கதவுக்கு
வெளிபக்கமாக பூட்டு போட்டு, கதவின் மேல் தாக்குதல் நடத்தினார்.
அண்ணாசாலை அருகே அதிமுகவினர் சுமார் 50 பேர் நக்கீரன் ஆசிரியர் கோபாலின்
உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் மதுரை, ஈரோடு, கரூர், நாமக்கல், ராசிபுரம், விருதுநகர்மாவட்டம்
சாத்தூர், சிவகாசி, வால்பாறை, திருநெல்வேலி, உள்ளிட்ட பகுதிகளில் இந்த
கட்சியின் எம்.எல்.ஏ., மற்றும் கவுன்சிலர்கள் இந்த பத்திரிகையை தீ வைத்து
எரித்தனர். சில கடைகளில் அதிமுகவினர் புகுந்து புத்தகங்களை அள்ளி
சென்றனர்.
இது குறித்து நக்கீரன் கோபால் கூறுகையில், போலீசாருக்கு பல முறை தொடர்பு
கொண்டும் பாதுகாப்புக்கு யாரும் வரவில்லை. காலதாமதமாக வந்த
போலீஸ்காரர்கள் முன்னிலையிலேயேதாக்குதல் நடந்தது என்றார்.
இந்த சம்பவம் குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம்
தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக நாட்டில் இது
போன்று பத்திரிகை அலுவலகத்தை தாக்குவது ஏற்புடையது அல்ல. ஒரு தலைவர்
குறித்து அவதூறாக செய்திவெளியானால் நீதிமன்றத்தில் முறையிட்டு வழக்கு
தொடர வாய்ப்பு இருக்கிறது. அதனை விட்டு இவ்வாறு வன்முறை செயல்கள் ஏவி
விடப்படுவது ஜனநாயகத்தில் ஏற்புடையது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
comments | | Read More...

பொங்கல் ரிலீஸ் ரேஸில் சேர்ந்த 'கொள்ளைக்காரன்!'

இந்த பொங்கலுக்கு இரண்டு படங்கள்தான் என்று கூறப்பட்டு வந்த நிலையில்,
அந்த ரேஸில் புதிதாக சேர்ந்துள்ளது விதார்த் நடித்துள்ள 'கொள்ளைக்காரன்'
படம்.
இந்தப் பொங்கலுக்கு விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த நண்பன், ஆர்யா -
மாதவன் நடித்த வேட்டை ஆகிய படங்கள்மட்டும் வெளியாகவிருப்பதாக
அறிவிக்கப்பட்டிருந்தது. தியேட்டர்களும் அறிவிக்கப்பட்ட நிலையில்,
இப்போது புதிதாக இணைந்துள்ளது கொள்ளைக்காரன் படம்.
For free News videos
இந்தப் படத்தில் விதார்த் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக
சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். முவுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில்,
கலகலப்பாக எடுக்கப்பட்டுள்ள படம் இது என்பதால், பொங்கல் ரிலீஸில் இந்தப்
படத்துக்கு உரிய கவுரவம் கிடைக்கும் என நம்புகிறார் இயக்குநர் தமிழ்ச்
செல்வன்.
வைரமுத்து பாடல்களை எழுத, ஷோகன் என்பவர் இசையமைத்துள்ளார்.
பொங்கலுக்கு ஒரு நாள் முன்பு 250 திரையரங்குகளில் தமிழகமெங்கும்
வெளியாகிறது கொள்ளைக்காரன்.
Tags: பொங்கல்
comments | | Read More...

'பீஃப் உண்பவரா அம்மா?'- பொன்னையன் கொதிப்பு... நக்கீரன் மீது வழக்கு!

உண்மைக்கு மாறாக செய்தி வெளியிட்ட நக்கீரன் மீதும் அதன் உரிமையாளர்,
வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் குழு பொறுப்பாளர்கள் மீதும் உரிய சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன்
அறிவித்துள்ளார்.
மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான் என்ற தலைப்பில்முதல்வர் ஜெயலலிதா பற்றி
நக்கீரன் இதழ்வெளியிட்ட கட்டுரையைக் கண்டித்து இன்று முழுவதும்
அதிமுகவினர் தமிழகம் முழுக்க நக்கீரன் இதழ்களை எரித்தனர். சென்னையில்
அந்த பத்திரிகை அலுவலகமும் தாக்குதலுக்குள்ளானது.
இந்த நிலையில், இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும், எம்.ஜி.ஆர். அவர்களுடைய புகழுக்கும்
களங்கம் உருவாக்க வேண்டும் எனும் தீய எண்ணத்துடன், இன்று வெளியான
நக்கீரன் ஏட்டிலும், கடைகளில்தொங்கவிடப்பட்ட நக்கீரன்
வால்போஸ்டர்களிலும்,ஜெயலலிதாவின் புகழைக் கெடுக்கும் வண்ணம், 'அம்மா
பீஃப்உண்பவர்' என்று முற்றிலும் உண்மைக்கு மாறான, ஒருகாலும் நடைபெறாத
செய்தியை திட்டமிட்டு கெட்ட நோக்குடன் வெளியிட்டு உள்ளார்கள்.
ஜெயலலிதாவை, எம்.ஜி.ஆர். கொள்கை பரப்புச் செயலாளராக நியமிப்பதற்கு எடுத்த
முடிவிற்கு கே.ஏ.கே., எஸ்.டி.எஸ். மற்றும் நானும் எதிர்ப்பு தெரிவித்தோம்
என்று முற்றிலும் உண்மைக்கு மாறான செய்தியினையும், எங்கள் முன்னிலையில்
'அம்மாபீஃப் உண்பவர்' என்று எம்.ஜி.ஆர். கூறினார் என்ற பொய்ச்
செய்தியினையும் அவதூறாக வெளியிட்டுள்ளார்கள்.
கே.ஏ.கே., எஸ்.டி.எஸ்., நான் உள்ளிட்டோர், ஜெயலலிதாவை கொள்கை பரப்புச்
செயலாளராக நியமிப்பதற்கு எந்தவித எதிர்ப்பையும் எக்காலத்திலும்
எம்.ஜி.ஆர். அவர்களிடம் தெரிவித்ததே இல்லை.
எம்ஜிஆரும், ஜெயலலிதா பீஃப் உண்பவர் என்று ஒரு காலத்திலும் கூறியதுமில்லை.
கே.ஏ.கே., எஸ்.டி.எஸ்., நான் மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோர் கலந்து
கொண்டதாக அவதூறாகவும், பொய்யாகவும் நக்கீரன் ஏட்டில் கூறப்பட்டுள்ள
அப்படிப்பட்ட நிகழ்வு ஒரு போதும் நடந்ததே இல்லை.
எம்ஜிஆர் ஒருபோதும் பீஃப் உண்ணமாட்டார்.ஜெயலலிதாவும் ஒரு போதும் பீஃப்
உண்ணமாட்டார். முதல்வர் ஜெயலலிதா சமையலில் ஈடுபடுவதே இல்லை என்பதுதான்
உண்மை. அப்படி இருக்க, ஜெயலலிதா சமைத்துப் போட்டார் என்ற செய்தி வெளியீடு
விஷத்தன்மையும், அவதூறும் நிறைந்தது.ஜெயலலிதா, அவரது வீட்டிலேயே கொள்கை
ரீதியாக ஒருகாலத்திலும் இதை அனுமதிப்பதே இல்லை. இவைதான் உண்மை நிலை.
இப்படிப்பட்ட நிலையில், தீய நோக்கத்தோடு முற்றிலும் உண்மைக்கு மாறான
செய்தியினை திட்டமிட்டே அவதூறு பரப்ப வேண்டும் என்றஉணர்வுடன் வெளியிட்ட
நக்கீரன் ஏட்டின் மீதும், அதன் உரிமையாளர், பப்ளிஷர்ஸ் மற்றும்
எடிட்டோரியல் பொறுப்பாளர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்."
இவ்வாறு பொன்னையன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Tags: attack , jayalalitha , nakkheeran , நக்கீரன் , பொன்னையன் , அதிமுக
Other articles published on January 7, 2012
Also read » நக்கீரன் மீது தாக்குதல்- கருணாநிதி கண்டனம்
» ஜெ குறித்த கட்டுரை: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் நாள்
முழுக்க தாக்குதல்!
» நிர்மா குழும தலைவர் பங்களாவுக்குள் புகுந்த மர்ம கும்பல்:
பாதுகாவலர்கள் மீது தாக்குதல்
» லக்ஷர் இ தொய்பா இயக்கத்தில் பெண் தீவிரவாதிகளுக்கு பயிற்சி-தகவல்
comments | | Read More...

கள்ளக்காதல் விவகாரம் கழுத்தை அறுத்து மனைவி கொலை; கணவர் கைது

கள்ளக்காதல் விவகாரத்தில், கழுத்தை அறுத்து மனைவியை கொன்றதாக கணவர் கைது
செய்யப்பட்டார்.
சென்னை கொளத்தூர் உமாமகேஸ்வரி நகர் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச்
சேர்ந்தவர் மூர்த்தி (வயது 38). இவர் பாடியில் உள்ள தனியார் கம்பெனியில்
ஒன்றில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர், கொளத்தூர்
மக்கார தோட்டத்தைச் சேர்ந்த ரமணி (32) என்பவரை 16 ஆண்டுகளுக்கு முன்பு
காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு கணேஷ் (16), லோகேஷ் (8) என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும்
அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
5 வருடங்களுக்கு முன் மூர்த்திக்கு பக்கவாதம் ஏற்பட்டதால் அவரது கை,கால்
பாதிக்கப்பட்டது. இந்த நிலையில்கடந்த ஒரு வருடமாக ரமணிக்கும், அதே
பகுதியைச் சேர்ந்த கொத்தனார் ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து
வந்ததாககூறப்படுகிறது.
மூர்த்தி வேலைக்கும், பிள்ளைகள்பள்ளிக்கூடத்துக்கும் சென்றவுடன், ரமணி
கொத்தனாருடன் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை மூர்த்தி பார்த்துவிட்டு மனைவி ரமணியை கண்டித்து உள்ளார். ஆனால்
ரமணி அதை பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மூர்த்தியை
சரிவர கவனிக்காமல் அடிக்கடி தகராறு செய்தும் வந்துள்ளார்.
இதனால் மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தில் மூர்த்தி ஆத்திரம் அடைந்தார்.
நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு, பிள்ளைகளுடன் வீட்டில் படுத்து
தூங்கினார். ரமணியும் அயர்ந்து தூங்கிவிட்டார்.
இந்த நிலையில் மனைவியை கொலை செய்ய முடிவெடுத்த மூர்த்தி, அதிகாலை 2
மணியளவில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ரமணியின் கழுத்தில்
குத்தியதாகவும் அப்போது ரமணி சுதாரித்துக் கொண்டு எழுந்த போது கழுத்தை
அறுத்தாகவும் கூறப்படுகிறது. இதனால் இரத்த வெள்ளத்தில் ரமணி அந்த
இடத்திலேயே துடிதுடித்து செத்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் மற்றும்
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூர்த்தியை கைது செய்தனர். ரமணியின்
உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு
ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகிறார்கள்.
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger