News Update :
Powered by Blogger.

பின்லேடனை கொல்லச் சென்ற அமெரிக்க படைக்கு ஒபாமா பிறப்பித்த உத்தரவு என்ன?: புதிய தகவல்

Penulis : karthik on Friday 4 May 2012 | 23:01

Friday 4 May 2012




பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதியான அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த ஆண்டு மே மாத� �் 2-ந் தேதி அமெரிக்க அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வேட்டையை அமெரிக்கா மிகவும் ரகசியமாக திட்டம் தீட்டி வெற்றிகரமாக செயல்படுத்தியது. இந்த வேட்டை முடிந்து அமெரிக்கா அறிவித்த பிறகே இத்தகவல் பாகிஸ்தானுக்கு தெரியவந்து அதிர்ச்சி அடைந்தது.

பின்லேடன் கொல்லப்பட்டு ஓராண்டாகி விட்டது. இதன் பிறகும் பின்லேடனை கொல்ல நடந்த வேட்டை குறித்தும், பின்லேடன் தனது கடைசி கால கட்டத்தில் என்னென்ன திட்டங்களை தீட்டினார் எ� �்ற விவரங்களும் பரபரப்பாக வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

பின்லேடன் தங்கிய வீட்டில் கிடைத்த சில முக்கிய ஆவணங்களும் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் வணிக மைய இரட்டை கோபுரம் கட்டிடம் மீது நடந்த தாக்குதல் முதல் பின்லேடன் கொல்லப்பட்டது வரையில் நடந்த 10 ஆண்டு தேடுதல் வேட்டை குறித்து பீட்டர் எல். பெர்கென் என்பவர் 'மேன்ஹெண்ட்' என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

பின்லேடனின் வேட்டையின் போது அமெரிக்க படைகள் என்ன செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி ஒபாமா பிறப்பித்த உத்தரவு பற்றிய விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பின்லேடனின் வேட்டையில் ஈடுபட்ட அமெரிக்க சிறப்பு படைக்கு கமாண்டராக வில்லியம் மெராவென் இருந்தார். அவருக்கு ஜனாதிபதி ஒபாமா தெளிவான உத்தரவுகளை பிறப்பித்து இருந்தார்.

அதில் ஏதாவது எதிர்ப்பு கிளம்பினால் அமெரிக்க படையினர் தங்களின் பாதுகாப்புக்கு தான் முன்னுரிமை கொடுத்த செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் அபோதாபாத்துக்கு சென்று சேர்ந்ததும் அல்லது பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தான் எத� �ர்த்தால் என்னென்ன செய்ய வேண்டும் என சிறப்பு படையினர் தீவிரமாக ஆலோசனை நடத்தி முடித்து விட்டுதான் புறப்பட்டு சென்றனர்.

மேலும் பின்லேடனை கொல்ல எடுக்கும் நடவடிக்கை குறித்த திட்டத்தை உயர் அதிகாரிகள் மிகவும் ரகசியமாக தீட்டி அது வெளியே கசிந்து விடாமல் பாதுகாத்து வந்தார்கள். அதனாலேயே பாகிஸ்தானுக்கோ, அந்த பங்களா பகுதியில் வசித்த பொதுமக்களுக்கோ தெரிய வரவில்லை.

இந்த நடவடிக்கை மேற்கொண்ட போது சண்டையிடும் சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் ஏற்பாடுகளுடன் தான் அமெரிக்க படை சென்றது. ஒருவேளை பாகிஸ்தான் ராணுவம் எதிர்த்தால் கூட சண்டையிடும் தயார் நிலையிலேயே அமெரிக்கப்படை இருந்தது. ஆனால் அதற்கு அங்கு அவசியம் ஏற்பட� �ில்லை.

இவ்வாறு அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



comments | | Read More...

மதுரை ஆதீனத்தில் வருமானவரித்துறை திடீர் ரெய்டு!!




மதுரை ஆதீனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.

தமிழகத்தில் மொத்தம் 18 ஆதீன மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த மதுரை ஆதீனம் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மதுரை ஆதீனத்திற்கு தமிழகம் முழுக்க பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது.

இந்த ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக நித்யானந்தா-வை 292 வது மதுரை ஆதீனம் அருணகிரி நியமித்துள்ளார். மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பு ஏற்றதற்கு ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளார் நித்யானந்தா. மேலும் ரூ 4 கோடியை மதுரை ஆதீனத்துக்கு காணிக்கையாக தருவதாகவும் அறிவித்துள்ளார்.

பல்வேறு சர்ச்சைகள் மற்றும் வழக்குகளில் சிக்கியுள்ள நித்யானந்தாவை மடாதிபதியாக நியமித்துள்ளதற்கு தமிழகத்தில் உல்ள பல்வேறு ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மற்றும் மதுரை நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், மத்திய அரசின் வருமான வரித்துறை மதுரை ஆதீனத்தில் இன்று காலை முதல் திடீர் ரெய்டு நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

விசாரித்ததில், தெ‌ற்கு ஆவண‌ி மூல ‌வீ‌தி‌யி‌ல் உ‌ள்ள மட‌த்‌தி‌ல் 5 அ‌திகா‌‌ரிக‌ள் இ‌ந்த சோதனையை நட‌த்‌தி வரு‌வது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த ரெய்டால் மதுரை ஆ‌தீன‌ம், ‌நி‌த்யான‌ந்தா ஆ‌கியோ‌‌ர் அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்து‌ள்ளன‌ர். வருமான வ‌ரி‌த்துறை‌யி‌ன் அ‌திரடி சோதனை மதுரை‌யி‌ல் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்ப ‌டு‌த்‌தியு‌ள்ளது.



comments | | Read More...

புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தே.மு.தி.க.வுக்கு தி.மு.க ஆதரவா?




புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க கூட்டனியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு 3101 வாக்குகள் வித� �தியாசத்தில் வெற்றி பெற்ற எஸ்.பி. முத்துக்குமரன் கடந்த ஏப்ரல் 1ந் தேதி அன்னவாசல் அருகே கார் விபத்தில் மரணம் அடைந்தார்.

அந்த இடத்திற்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க தலைமை மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கே வாய்ப்பு தரும் என்று தோழர்கள் நினைத்திருந்தனர். கட்சி தலைமையும் அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்க நேரம் கேட்டிருந்தனர்.

ஆனால் சி.பி.ஐ தலைமையை சந்திக்க விரும்பாத ஜெயலலிதா தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தனது அ.தி.மு.க சார்பில் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தை சேர்ந்த நகர சேர்மன் கார்த்திக் தொண்டமான் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவித்துவிட்டார்.


இதனால் தோழர்களும் தொகுதி மக்களும், முத்துக்குமார் விசுவாசிகளும் மனம் புன்பட்டனர். அ.தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு வந்த நாளில் மாலையில் இடைத் தேர்தல் ஜூன் 12 ந் தேதி நடக்க� �ம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இந்த நிலையில் சென்னையில் மாநில குழுவை கூட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்துக்குமார் மனைவி சுசிலாவை வேட்பாளராக நிறுத்தி அதற்கு அ.தி.மு.க அல்லாத தி.மு.க, தே.மு.தி.க, மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. மற்றும் இதர கட்சிகளை ஆதரவு கேட்பார்கள் என்று தோழர்களும் மற� ��ற கட்சிகளும் நினைத்திருந்தனர்.

ஆனால்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர் தா.பாண்டியன், சி.பி.ஐ இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டார்.


இந்த அறிவிப்பால் மேலும் கொதிப்படைந்தனர் அடிமட்ட தோழர்கள். இந்த நிலையில் முத்துக்குமரன் படத்திறப்பு விழா அவரது சொந்த கிராமமான நெடுவாசலில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம் (தி.மு.க) பேசும்போது, முத்துக்குமார் குடும்பத்தில் அல்லது அவரது மனைவியை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியிருந்தால் தி.மு.க வேட்பாளர் நிறுத்த மாட்டார்கள் என்பதை எங்கள் தலைவர் சொன்னார் அதை தோழர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று பேசினார். இந்த பேச்சு அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது.


அதன் பிறகு 30ந் தேதி மாலை 7 மணிக்கு தி.மு.க புதுக்கோட்டை தொகுதி பொருப்பளர்களுடன் சென்னை அறிவாலயத்தில் கலந்தாலோசணை நடத்திய கலைஞர் தி.மு.க பேட்டியிடாது என்று அப்போது சொன்னவர். அதன் பிறகு 3 ந் தேதி அறிவிப்பாகவும் வெளியிட்டார்.


கலைஞரின் இந்த அறிவிப்பு தி.மு.க தொண்டர்களையும் கவலையடைய செய்துள்ளது. தோல்வி பயத்தில் தி.மு.க போட்டிக்கு வரவில்லை என்று அ.தி.மு.க வினர் பேசுவார்களே என்றும் கவலைப்பட்டனர். தலைவர் கலைஞர் ஏன் இந்த முடிவை அறிவித்தார். இதுவரை எந்த இடைத் தேர்தலையும் புறக்கணித்தது � �ல்லையே புதுக்கோட்டையில் மட்டும் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்கின்றனர்.


அப்படியானால் தி.மு.க புதுக்கோட்டை இடைத்தேர்தலில் யாரை ஆதரிப்பது? கட்சி தலைமை யாரை ஆதரிக்க சொல்கிறது? என  இன்னும் எதையும் கட்சி தலைமை சொல்லாமல் இருப்பது தி.மு.க தொண்டர்களை கவலைப்பட செய்துள்ளது.


ஆனால் விபரம் அறிந்த பல தி.மு.க புள்ளிகள்.. எங்கள் தலைவர் கலைஞர் ஏதோ பெரிய திட்டம் வைத்துக் கொண்டுதான் இந்த முடிவை அறிவித்தள்ளார். அதாவது இடைத்தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளரை மறைமுகமாக ஆதரிக்க வேண்டும். இந்த மறைமுக ஆதரவு மூலம்  எதிர் வரும் எம்.பி தேர்தலுக்கு த� �.மு.தி.க வை தி.மு.க கூட்டனிக்கு கொண்டு வரும் எண்ணம் இருப்பதாக தான் தெரிகிறது என்று கூறுகின்றனர்.


ஆனால்டெல்லி சி.பி.ஐ தரப்பு தலைமைகலைஞரிடம் பேச்சு நடத்துகிறது. தமிழக சி.� �ி.ஐ முடிவை மாற்றி வேட்பாளர் அறிவித்தால் தி.மு.க ஆதரித்து எங்கள் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பேசி வருவதாகவும் தோழர்கள் மத்தியில் கூறுகின்றனர்.


ஆனாலும் தி.மு.க தலைமை எந்த முடிவை அறிவிக்கப் போகிறது என்பது போக போகத்தான் தெரியும்.



comments | | Read More...

எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் முதலிடம்




இந்தியாவிலேயே எய்ட்ஸ் � �ோயைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக, தமிழ்நாடு எய்ட்ஸ் சங்க திட்ட இயக்குனர் மருத்துவர் மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எய்ட்ஸ் பாதிப்பு விகிதம் 0.25 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 2001ல் 1.31 ஆக இருந்த எய்ட்ஸ் பாதிப்பு விகிதம், 2006ல் 0.38 ஆகக் குறைந்திருந்தது குறிப்பிடத� �தக்கது. 2012ம் ஆண்டு புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் 2 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு, எய்ட்ஸ் நோய்க் கிருமியான எச்.ஐ.வி தொற்றியுள்ளது எனவும் மோகன்தாஸ் கூறியுள்ளார்.
 
எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சார சிவப்பு ரிப்பன் ரெயில், இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
 
இந்த ரெயில் இம்மாதம் 9ம் தேதி முதில் 30ம் தேதி வரை தமிழ்நாட்டில் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ய உள்ளது. மேலும் சென்னை, வேலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இந்த ரெயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.



comments | | Read More...

ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தை சேர்ந்தவருக்கு 38-வது இடம்



மத்திய அரசுப்பணியாளர்கள் தேர்வு மையம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ். மற்றும் இதர தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வுகள் மூன்று நிலைகளாக நடத்தப்படும். சிவில ் சர்வீசஸ் தேர்வு முதல்நிலைத் தேர்வு (பிரிலிம்ஸ்), முதன்மைத் தேர்வு (மெயின்), ஆளுமைத் திறன் எனும் நேர்முகத் தேர்வு (இன்டர்வியூ) என்று மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றது.  

கடந்த ஆண்டு நடந்த இந்த தேர்வின் கடைசி நிலை தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஹரியானா மாநிலத்தை சேர்ந ்த சினேகா அகர்வால் என்பவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். 

தமிழகத்தை சேர்ந்த சுந்தரேஷ் என்பவர் இந்த தேர்வில் 38-வது இடத்தை பிடித்துள்ளார். முதல்நிலை தேர்வில் 4 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களில் இரண்டாம் நிலை தேர்வான முதன்மைத் தேர்வுக்கு 13, 984 பேர் தகுதிபெற்றனர். இதிலிருந்து நேர் முகத்தேர்வுக்கு 2,414 பேர் தகுதிபெற்றார்கள். இறுதி கட்ட தேர்வு முடிவில் இந்தியா முழுவதும் 910 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தேர்வாணைய முடிவுகள் தெரிவிக்கின்றன.





comments | | Read More...

குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடி இனத்தவரை நிறுத்த தீவிரம்




குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதற்கான லாபிகள் தீவிரமாக மே ற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் சபாநாயகருமான பி.ஏ.சங்மா கூறியதாவது:

குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடி இனத்தவர் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதற்காக அனைத்து அரசியல் கட்சிகளின் பழங்குடி பிரிவினரின் ஆலோசனைக் கூட்டம் வரும் 9-ந் தேதி நடைபெற உள்ளது.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக நான் போட்டியிடவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளையும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்த கொள்கை அளவில் ஒப்புக் கொள்ள வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதன் பிறகே வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும்.

இந்த கருத்து நாட்டின் ஒட்டுமொத்த பழங்குடி மக்களின் விருப்பம். இது எந்த ஒரு அரசியல் கட்சியினுடைய கருத்தும் அல்ல. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. பாஜக தலைவர் கட்காரி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் தாழ்த்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவர்களாகிவிட்டனர். நாட்டின் பல கோடி பழங்குடி இன மக்கள் உள்ளனர். ஆனால் எந்த ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரும் இதுவரை குடியரசுத் தலைவரானத ு இல்லை.

இந்த விஷயத்தை தற்போது விவாதிக்கத் தொடங்கியிருக்கிறோம். மே 9-ந் தேதியன்று நடைபெறக் கூடிய கூட்டத்துக்கு முன்பாகவோ அல்லது அதன் பின்போ அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நாங்கள் சந்திக்க உள்ளோம் என்றார் அவர்.

குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் யார் என்ற விவாதம் தொடங்கியபோது பி.ஏ.சங்மாவின் பெயரும் அடிபட்டது. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பின்னர் பிரணாப் பெயரே அதிகளவில் முன் வைக்கப்பட்ட� � வருகிறது. இந்நிலையில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சங்மா தமக்கு ஆதரவாக ஒரு லாபியை உருவாக்கத் தொடங்கி உள்ளார். வெல்லுவாரா சங்மா?



comments | | Read More...

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 20 பேர் பலி




பாகிஸ்தானின், பஜாவுர் நகரில் � ��க்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் பொருள்கள் வாங்குவதற்காக ஒரு கடையில் பாதுகாப்பு அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், தன் உடலில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான்.

இந்த திடீர் தாக்குதலில் பொதுமக்கள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த 60 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தோரில் பெரும்பாலானோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் உடல் பாகங்கள் சிதறிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அவனுக்கு 14 முதல் 17 வயது வரை இருக்கலாம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

பாதுகாப்பு படை அதிகாரிகளை குறிவைத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப� �பேற்கவில்லை.

இதே பஜாவுர் நகரில் நேற்று நடந்த இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உள்பட 5 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

கோச்சடையானுக்காக தீபிகாவுடன் பரத நாட்டியம் ஆடிய ரஜினி!




கோச்சடையான் படத்துக்காக சூப்பர் ஸ்டார் ரஜினியும் தீபிகாவும் பரத நாட்டியம் ஆடியுள்ளனர். இந்தக் காட்சி கேரளா� ��ில் படமாக்கப்பட்டுள்ளது.

கோச்சடையான் படம், சரித்திரக் கதை. இதில் ஒரு பரதநாட்டியப் பாடல் இடம்பெற்றுள்ளது. சிவபெருமானின் ருத்ர தாண்டவத்துக்கு நிகரான ஒரு பாடல் இந்தப் படத்தில் இடம் பெறுகிறது.

இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கியுள்ள இந்த பாடலுக்கான படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது. இதில் ரஜினி, தீபிகா படுகோனே இருவரும் பரத நாட்டியம் ஆடினர்.

இந்தி நடன இயக்குனர் சரோஜ்கான் இதற்கான நடனத்தை அமைத்துள்ளார். ரஜினி, தீபிகா இருவருமே சில தினங்கள் ஒத்திகை செய்து பார்த்த பிறகே இந்த நடனக் காட்சியில் நடித்துள்ளனர்.

இது குறித்து டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான் கூறுகையில், "தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பணி புரிகிறேன். அதுவும் ரஜினி படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. ரஜினி, தீபிகா படுகோனே இருவரும் இந்த நடனத்துக்காக கடுமையாக உழைத்தனர். குறிப்பாக ரஜினி இதற்கா தீவிரமாக ரிகர்சல் செய்து ஆடினார்," என்றார்.

கோச்சடையான் படம் செப்டம்பர் அல்லது தீபாவளிக்கு ரிலீசாகிறது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger