News Update :
Powered by Blogger.

ஜெயலலிதாவின் 'கோபப் பார்வையில்' மேலும் 2 அமைச்சர்கள்!

Penulis : karthik on Wednesday 18 July 2012 | 22:19

Wednesday 18 July 2012





தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் மூன்று பேரின் செயல்பாடுகளில் முதல்வர் ஜெயலலிதா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகத� �� தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்தபடியாக முக்கிய நிர்வாகியாக இருந்து வந்தவர் வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். மேலும் அதிமுகவின் மிக முக்கியப் பதவியான தலைமை நிலைய செயலாளராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் அவரை வருவாய்த்துறை அமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார். மேலும் செங்கோட்டையன் வகித்து வந்த தலைமை நிலையச் செயலாளர் பதவியையும் முதல்வர் ஜெயலலிதா பறித்துள்ளார்.

இந்தச் சம்பவங்கள் குறித்து அதிமுக மூத்த நிர்வாகியிடம் விசாரித்த போது, செங்கோட்டையனை போல் இன்னும் இரண்டு அமைச்சர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் கோபப் பார்வையில் சிக ்கியுள்ளனர். செங்கோட்டையனை போன்று அவர்கள் இருவரையும் நேற்று மாலை 4.30 மணி அளவில் போயஸ் கார்டன் வரவழைத்த ஜெயலலிதா, அவர்களிடம் சில நிமிடங்கள் விசாரணை நடத்தியுள்ளார். மேலும், அவர்களை கடுமையா க எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளார் என்றார்.

அதில் கொங்கு மண்டலத்தில் உள்ள ஒரு அமைச்சர், மத்திய மண்டலத்தில் உள்ள ஒரு அமைச்சர் என இருவர் சிக்கி தப்பியதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும் அவர்கள் இருவரையும் மி கவும் கவனமாகக் கண்காணிக்க உளவுத்துறை போலீசார் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.







comments | | Read More...

ஐ.பி.எல்.தொடக்க விழாவில் ஆபாச நடனம்: பிரியங்கா சோப்ரா, கரினா கபூருக்கு நோட்டீஸ்




மதுரையை சேர்ந்த வக்கீல் ஜெயக்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார் அதில் கூறியிருப்பதாவது:- 

இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற தொடக்க விழாவில் நடிகைகள் கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான் உள்பட பலர் ஆபாச நடனம் ஆடினர். 

முகம் சுளிக்கும் வகையில் நட ந்த இந்த நடனத்தை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி. மற்றும் தென் மண்டல ஐ.ஜி. உள்பட பல போலீஸ் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி இருந்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். 

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி செல்வம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் ஆஜரானார். அரசு சார்பில் வக்கீல் செல்லபாண்டியன் ஆஜரானார். 

வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் வாதாடுகையில், ஐ.பி.எல். தொட க்க விழாவில் ஆபாச நடனம் ஆடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். வக்கீல் செல்லபாண்டியன் வாதாடுகையில் கோர்ட்டு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசு செயல்பட தயாராக உள்ளதாக கூறினார். 

அதன்பின்பு நீதிபதி செல்வம் உரிய பதில் அளிக்கும்படி போலீஸ் டி.ஜி.பி., ஐ.ஜி. (பொது) ப� �லீஸ் ஐ.ஜி. தென் மண்டலம், ஐ.பி.எல். தலைவர் ராஜேஷ் சுக்லா, நடிகர்கள் அமிதாப்பச்சன், சல்மான்கான், நடிகைகள் கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா உள்பட 12 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை வருகிற 31-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.









comments | | Read More...

கடத்தல்காரர்களிடமிருந்து மீட்டு 16 வயது சிறுமியை சீரழித்த எஸ்.ஐ





உத்தரபிரதேச மாநிலத்தில் கடத்தப்பட்ட 16 வயது சிறுமியை மீட்ட விசாரணை அதிகாரியும், கிராம நிர்வாகியும் சேர்ந்து காவல் நிலையத்தில் வைத்து ஒரு வார காலம் கற்பழித்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்தவர் ராமேஷ்வர்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது மகள் சுனிதா(16)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி அதே ஊரைச் சேர்ந்த ராஜ்னேஷ் என்ற வாலிபர் சுனிதாவை கடத்திச் சென்றுள்ளார். இது குறித்து ராமேஷ்வர் போலீசில் � ��ுகார் கொடுத்தும் அவர்கள் வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதையடுத்து அவர் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவி்த்தார்.

மேலும் தனது புகாரை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் தீக்குளிப்பேன் என்று கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி மிரட்டினார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் வந்ததைப் பார்த்த போலீஸ் உயர் அதிகாரிகள் ராமேஷ்வர் புகாரை உடனே ஏற்றுக்கொள்ளுமாறு உள்ளூர் போலீசாருக்கு உத்தரவிட்டனர ். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்ட 48 மணிநேரத்திற்குள் அதாவது ஜூன் 5ம் தேதி விசாரணை அதிகாரியான எஸ்.ஐ. ராம் பிரசாத் பிரேமி சுனிதாவை மீட்டுவிட்டதாக கிராம நிர்வாகி ராமேஷ்வரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் சுனிதாவை வீட்டுக்கு அனுப்பவில்லை. மாறாக ஒரு வார காலமாக எஸ்.ஐ.யும், கிராம நிர்வாகியும் சேர்ந்து காவல் நிலையத்தில் வைத்து சுனிதாவை மாறி, மாறி கற்பழித்து வந்துள்ளனர். மகள் வீட்டுக்கு வராததையடுத்து அவரை விடுவிக்காவிட்டால் காவல் நிலையம் முன்பு தீக்குளிப்பேன் என்று ராமேஷ்வர் மீண்டும் மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து தான் சுனிதா விடுவிக்கப்பட்டார். வீட்டுக்கு வந்த அவர் தன்னை கடத்திய வாலிபர், எஸ்.ஐ. மற்றும் கிராம நிர்வாகி ஆகியோர் தனக்கு செய்த கொடுமையை விவரித்தார். இது குற� ��த்து ராமஷேவர் போலீஸில் புகார் செய்தும் புண்ணியமில்லாமல் போனது.







comments | | Read More...

'பில்லா 2' : கல்லா நிறையுமா.. கையைக் கடிக்குமா?





தமிழ் சினிமா ஆர்வலர்களின் தற்போதைய டாக் எதுவென்றால் 'பில்லா 2' லாபம் தருமா அல்லது  நஷ்டம் ஏற்படுத்துமா என்பது தான்.

அஜீத் நடிப்பில் வெளியான 'பில்லா  2' படம் முதல் நாள் வரி நீங்கலாக 7.61 கோடி கல்லா க ட்டியது.

லாபமா, நஷ்டமா என்று பார்த்தால் படத்தினை வெளியிட்டு இருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு நஷ்டம் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

எப்போதுமே ஒரு படத்தினை தயாரித்தாலோ, விநியோகித்தாலோ லாபமும் எனக்குத் தான், நஷ� ��டம் வந்தாலும் எனக்குத் தான் என்கிற பாணியில் படங்களை வெளியிடுவது ஆஸ்கர் ரவிச்சந்திரன் வழக்கம்.

'அந்நியன்', 'தசாவதாரம்' போன்ற மெகா பட்ஜெட் படங்களை இவ்வாறு வெளியிட்டு லாபமும் அ டைந்தார். ஆனால் தற்போது பில்லா 2 இவருக்கு 1 முதல் 5 கோடி வரை நஷ்டம் ஏற்படுத்தும் என்கிறது கோலிவுட்.

காரணம், 'பில்லா 2' படத்தின் முதல் நாள் 7.61 கோடி, இரண்டாம் நாள் 5.23 கோடி, மூன்றாம் நாள் 4.92 கோடி என்று சரிவதாலும், படத்தினைப் பற்றி இருவேறு விமர்சனங்கள் உலா வருவதாலும் படம்  நஷ்டம் ஏற� ��படுத்தவும் வாய்ப்பு இருக்கிறதாம்.

மேலும், படத்தின் வசூல்  வரும் வாரங்களில் கடுமையாக சரியும் என்ற பேச்சு நிலவி வருகிறது.

 "கைய கடிச்சாலும் சரி.. கல்லா நிறைஞ்சாலும் சரி.. அடுத்த படத்துக்கும் ஓப்பனிங் இப்படியே தான் இருக்கும் பாஸ்! "







comments | | Read More...

இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார் ராஜேஷ் கன்னா மரணம்





இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ராஜேஷ் கன்னா இன்று பிற்பகல் மும்பையில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.
இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ராஜேஷ் கன்னா(69) கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேது உடல்நலக்குறைவு காரணாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 4 நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். பின்னர் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த மாதம் 23ம் தேதி மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கேயே 2 வாரங்கள் இருந்தார். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த 14ம் தேதி ம� �ன்றாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருடன் அவரது மனைவி டிம்பிள் கபாடியா, இளைய மகள் ரிங்கி ஆகியோர் துணையாக இருந்தனர். கர்ப்பமாக இருக்� ��ும் மூத்த மகள் டிவிங்கிள் தனது கணவரும் , பாலிவுட் நடிகருமான அக்ஷய் குமாருடன் அவ்வப்போது வந்து பார்த்துச் சென்றார். நேற்று ராஜேஷ் கண்ணா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மோசமானது. உடனே உறவினர்கள் அனைவரும் மும்பையில் உள்ள அவரது � ��ீட்டிற்கு வந்தனர்.
இதற்கிடையே அவரது உடல்நிலை மேலும் மோசமாகி பிற்பகலில் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று மாலை 4.30 மணிக்கு தகனம் செய்யப்படுகிறுத. அவரது மறைவிற் கு பாலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
ஆளாளுக்கு ஒரு ஹிட் கொடுக்கவே போராடுகின்றனர். ஆனால் கடந்த 1969ம் ஆண்டு முதல் 1972ம் ஆண்டு வரை அவர் தொடர்ந்து 15 ஹிட் படங்கள் கொடுத்துள்ளார் என்பது குறி்ப்பிடத்தக்கது. மேலும் அவர் கடந்த 1992ம் ஆ� �்டு முதல் 1996ம் ஆண்டு வரை லோக் சபா உறுப்பினராக இருந்துள்ளார்.







comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger