News Update :
Powered by Blogger.

பாலா, சேரன், லிங்குசாமி காணாமல் போய்விடுவார்கள்! ரேணிகுண்டா இயக்குனர்!

Penulis : karthik on Friday 6 July 2012 | 22:50

Friday 6 July 2012


ராஜமவுலி இயக்கத்தில் தமிழ் - தெலுங்கில் வெளியாகியுள்ள நான் ஈ மற்றும் ஈகா பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்தப் படம் மூலம் தென் இந்தியாவின் ஷோமேன் என்ற புதிய அந்தஸ்தைப் பிடித்துள்ளார் ராஜமவுலி.
இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளிவந� �த 'ரேணிகுண்டா' படம் பெரிய வெற்றியடைந்தது. ரேணிகுண்டாவைத் தொடர்ந்துபன்னீர் செல்வம் இயக்கும் படம் '18 வயசு'. ரேணிகுண்டா படத்தில் நடித்த ஜானி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரிக்கும் இந்த படம், இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் ரிலீஸாகும் எனத் தெரிகிறது.  18 வயசு படம் பற்றி பேசிய இயக்குனர் பன்னீர் செல்வம் " நான் இயக்கிக்கொண்டிருக்கும் 18 வயசு படம் ஒரு ரொமேண்டிக் ஸ்டோரி என்றாலும், அதில் புதுவித யுக்தியை பயன்படுத்தியுள்ளேன்.


படத்தின் பாடல்கள் ஏற்கனவே பிரபலமடைந்துவிட்டன. பல லட்சங்கள் கோடிகள் என பணம் செலவு செய்து உலகத்தின் பல மூளைகளிலும் எடுக்கப்படும் படங்கள் 30 முதல் 40 ரூபாய் வரையில் தெருக்களில் கிடைக்கின்றன. அப்படி கிடைக்கும் மற்ற மொழி படங்களை காப்பி அடித்து தமிழ் சினிமாவில் ப டம் எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

 மற்றவர்களின் கதையை திருடி படம் எடுப்பவர்கள் தமிழ் சினிமாவில் கௌரவப்படுத்தப்படுகிறார்களே தவிர புதுவித படங்களை எடுக்கும் திறமையுள்ள படைப்பாளிகளை கண்ட� �கொள்வதே இல்லை. இந்த நிலை மாறினால் தான் தமிழ் சினிமாவை காப்பாற்ற முடியும்.

மற்ற மொழி படங்களின் கதைகளை திருடி படமெடுப்பவர்களை கண்டிக்காமல் விட்டால், அடுத்த தலைமுறையும் இதையே பின்பற்றி பாலா, சேரன், லிங்குசாமி போன்ற படைப்பாளிகளை காணாமல் போக செய்துவிடுவார்கள். தமிழ் சினிமா ஆபத்தான நிலையில் உள்ளது" என்று கூறினார்.

ரீமேக் என்பது ரீடேக் அளவிற்கு சாதாரணமாக ஆகிவிட்ட நிலையில் தமிழ் சினிமாவின் படைப்பாளிகள் இதுபோன்ற செயல்களை எதிர்த்து ஒவ்வொருவராக கொதித்தெழுந்துகொண்டு இருக்கிறார்கள்.


comments | | Read More...

செக்ஸ் புகார் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி பிரமாண பத்திரம்


மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிதே. இவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது செக்ஸ் புகார் கூறி உத்தரபிரதேச மாநிலத்தின் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஒரு பெண்ணையும், அவளது பெற்றோரையும் ராகுல் காந்தி சட்ட விரோதமாக தனது � �ட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாக அதில் அவர் கூறி இருந்தார். 

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, வழக்கை தள்ளுபடி செய்ததோடு, கிஷோர் சம்ரிதேவுக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது. அத்துடன் கிஷோர் சம்ரிதே மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. 

ஐகோர்ட்டின் இந்� �� தீர்ப்பை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அப்பீல் மனுவில் தனது புகார் மீது ஐகோர்ட்டு உரிய கவனம் செலுத்தவில்லை என்றும், தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கூறி இருந்தார். அவரது அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.எஸ்.சிர்புர்கர், டி.எஸ்.தாகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததோடு � ��ந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு ராகுல் காந்தி, உத்தரபிரதேச அரசு மற்றும் 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. 

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் ராகுல் காந்தியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், தன் மீது மனுதாரர் கூறியுள்ள புகார் முற்றிலும் தவறானது மட்டுமின்றி கெட்ட நோக்கம் கொண்டது என்றும், தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் புகார் கூறப்பட்டு இருப்பதாகவும் கூறி உள்ளார்.



comments | | Read More...

புதிய அணை கட்ட கேரளாவின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது: உம்மன் சாண்டி

முல்லை பெரியாறு அணையின் அருகே புதிய அணை கட்ட கேரள அரசு முயன்று வருகிறது. இந்த முயற்சிக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக போராட்டங்களும் நடத்தப்பட்டன.  

புதிய அணைக்கு அனுமதி மறுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்திலும் தமிழகம் சார்பாக மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது, அணை குறித்த ஆய்வு நடத்த 5 பேர் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு ஆய்வுகளை நடத்திய பிறகு அணை வலுவாகவே இருக்கிறது, புதிய அணை கட்டத் தேவையில்லை என்று கூறியிருந்தது. 

இந்நிலையில், கேரள முதல்வர் உம்மன் சாண்டி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
புதிய அணை கட்டும் முடிவுக்கு உச்ச நீதிமன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது. இத� � நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படும். மேலும் ஐவர் குழு சமர்ப்பித்த அறிக்கையின் சாதகமான அம்சங்களும் எடுத்துக் கூறப்படும் என கூறியுள்ளார். 

இந்த அறிவிப்பினால் தமிழகம் மற்றும் கேரளா இடையேயான அணை பிரச்சினை மேலும் வலுவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.



comments | | Read More...

பரதேசியை முடித்தார் பாலா!


ஆச்சர்யம் ஆனால் உண்மை... என்பது போல, அவன் இவனுக்குப் பிறகு பாலா தொடங்கிய அடுத்த படமான பரதேசி படப்பிடிப்பும் சீக்கிரமே முடிந்துவிட்டது.
அதர்வா நடிக்கும் இந்தப் படத்தில் தன்ஷிகா நாயகியாக நடிக்கிறார். பாலாவுக்கு இது ஆறாவது படம்.

மலையாளத்தில் வெளியான எரியும் பனிக்காடு என்ற நாவலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில் வேதிகா, உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பவர் ஸ்டார் எனப்படும� �� சீனிவாசன் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மொத்தம் 80 நாட்கள் நடந்த படப்பிடிப்பு, சமீபத்தில் குற்றாலத்தில் நிறைவடைந்தது. பாலாவின் படம் என்றால் மாதக் கணக்கில்தான் கெடு சொல்வார்கள். அவன் இவன் படத்திலிருந்துதான் நாள் கணக்குக்கு அது மாறியுள்ளது.

முதல்முறையாக பாலா படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவிருக்கிறது. பாடல் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார்கள்.


comments | | Read More...

ஒட்டிப்பிறந்த இரட்டையரில் குழந்தை ஆராதனா சாவு


மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்யாதவ் (ஏழை விவசாயி). இவரது மனைவிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இரண்டு குழந்தைகளும் உடல் ஒட்டிய நிலையில் இருந்தன. ஆஸ்பத்திரியில் வைத்து � ��ுழந்தைகள் பராமரிக்கப்பட்டன.
 
ஒரு குழந்தைக்கு ஸ்டுட்டி என்றும் மற்றொரு குழந்தைக்கு ஆராதனா என்றும் பெயர் சூட்டப்பட்டது. ஒட்டிபிறந்த இரட்டை குழந்தைகளை ஆபரேஷன் மூலம் தனித்தனியே பிரித்தெடுக்க முடிவு செய்யப்பட்� ��து. கடந்த மாதம் 20-ந்தேதி இதற்கான ஆபரேஷன் நடந்தது. 22 டாக்டர்களை கொண்ட குழு ஆபரேஷன் செய்து, இரண்டு குழந்தைகளையும் தனியே பிரித்து எடுத்தது.
 
இதில் ஆராதனாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் வைத� �து சிகிச்சை அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த 2-ந்தேதி இரண்டு குழந்தைகளும் முதலாவது பிறந்த நாளை கொண்டாடின. மத்திய பிரதேச முதல் - மந்திரியே நேரில் வந்து குழந்தைகளை வாழ்த்தினார். ஸ்டுட்டி மட்டும் கேக் வெட்டினாள். அவளுக்கு கையை பிடித்து கேக் வெட்ட முதல்- மந்திரி உதவினார். அந்த சமயத்தில் ஆராதனாவின் உடல் நிலையில் லேசான முன்னேற� �றம் இருந்தது.
 
ஆனால் நேற்று திடீரென அவளின் உடல்நிலை மோசமடைந்தது. அவளை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். ஆனால், முயற்சி வீணானது. மாலை 3 மணியளவில் இரண்டு முறை நெஞ்சுவலி ஏற்பட்டது. அதன்பிறகு சிறிது நேரத்தில் ஆராதனா மர ணம் அடைந்தாள். அந்த மரணம் ஆஸ்பத்திரியையே சோகத்தில் ஆழ்த்தியது. நர்சுகள் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர்.



comments | | Read More...

மலையாள படவுலகை கலக்கும் வாரிசு நடிகர்கள்


மலையாள பட உலகில் வாரிசு நடிகர்களான பிருதிவிராஜ், வினித் சீனிவாசன், துல்கர் மூவரும் கலக்குகின்றனர்.

பிருதிவிராஜ் பழைய நடிகர் சுகுமாரன் அவர்களின் மகன். துல்கர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன். வினித், பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் மகன். இவர்கள் மூவருக்கும் த� �்போது மலையாளத்தில் படங்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

இவர்களது படங்களுக்கு தந்தைமார்களின் ரசிகர்களும் கட்-அவுட்கள் வைத்து கொண்டாடுகிறார்கள். மூன்று வாரிசு நடிகர்களின் படங்களும் கேரளாவில் சமீபத்தில் ஒன்றாக ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

துல்கர் நடித்த 'உஸ்தட் ஓட்டல்' படம் கடந்த வாரம் ரிலீசாகி வசூலை வாரிக்குவித்� �ு வருகிறது. இதேபோல், வினித் நடித்த இரு படங்கள் ஏற்கனவே ரிலீசாகி வெற்றி பெற்றுள்ளன. தற்போது நடித்துள்ள 'மலர்வதி ஆர்ட்ஸ்' படமும் வசூல் குவிக்கும் என நம்புகிறார்.

பிருதிவிராஜின் 'ஹீரோ' என்ற படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இருந்தாலும் இவர் தற்போது நடித்து முடித்துள்ள 'பேச்சுலர் பார்ட்டி' படம் இவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் என்கிறார்கள்.

வினித் படங்களில் நடிப்பதுடன், டைரக்டும் செய்கிறார். அவர் சமீபத்தில் இயக்கிய 'தட்டத்தின் மரயாது' என்ற படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.


comments | | Read More...

நடிகை ரிச்சா வீட்டு அருகில் வெடிகுண்டு!


தனுஷ் ஜோடியாக 'மயக்கம் என்ன' படத்தின் மூலம் அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். சிம்புவுடன் 'ஒஸ்தி' படத்த ிலும் நடித்தார். தற்போது 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்' மற்றும் கார்த்தியுடன் 'பிரியாணி� �� ஆகிய படங்களில் நடிக்கிறார்.

டெல்லியில் பிறந்த இவர் தற்போது மும்பையில் வசிக்கிறார். சமீபத்தில் மும்பையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக மும்பை போலீசார் வெளியிட்ட செய்தி நாட்டையே உலுக்கச் செய்தது.

நடிகை ரிச்சாவின் வீடு மும்பையில் அந்த வணிக வளாகத்தில் இருந்து சற்று தள்ளிதான் இருக்கிறது. வணிக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் அறிந்ததும் அதிர்ச்சியான ரிச்சா, நல்ல வேளை, கடவுள் அருளால் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை என்று மிரட்சியுடன் கூறியுள்ளார்.

அடிக்கடி வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் இருப்பதால் மும்பையை காலி செய்து விட்டு சென்னை அல்லது ஐதராபாத்தில் குடியேறலாமா என்று ரிச்சா யோசித்து வருகிறார்.


comments | | Read More...

நடிகை லைலா கொலை?: திடுக்கிடும் தகவல்


பிரபல இந்தி நடிகை லைலாகான் மும்பையில் ஒஷிவாராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர், அவரது தாய் சலீனாபடேல், சகோதரி அஸ்மினாபடேல், இரட்டையர்களான ஜாரா, இம்ரோன் மற்றும் உறவினர் ரேஷ்மா க� �ன் ஆகிய 6 பேர் திடீரென மாயமாகி விட்டனர்.

லைலாகானின் தந்தை நாதிர்படேல் இதுதொடர்பாக மும்பை போலீசில் புகார் செய்தார். அவர் தன் மனுவில், என் மனைவி, மகள் உள்பட 6 பேரை 2 பேர் மிரட்டி கடத்திச் சென்று விட்டனர் என்று கூறியிருந்தார் மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தியும், நடிகை லைலாகானை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் லைலாகானின் கதி என்ன ஆனது என்று கடந்த 15 மாதங்களாக மர்மம் நீடித்தது. 

இந்த நிலையில் கடந்த மாதம் 21-ந்தேதி காஷ்மீர் மாநிலம் கிஷ்த்துவாரில் சந்தேகத்தின் அடிப்படையில் பர்வேஸ் இக்பால்தக் என்பவனை போலீசார் பிடித்து விசாரித்தனர். இவன் லஷ்கர்-இ- தொய்பா இயக்கத்தை சேர்ந்தவன் என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர விசாரணை நடத்தியபோது மும்பையில் அவன் நடிகை லை� �ாகான் வீட்டில் தங்கி இருந்தது தெரியவந்தது. 

லைலாகான் 15 மாதங்களாக மாயமாகி உள்ள தகவல் பற்றி போலீசார் அவனிடம் கேட்ட போது, லைலாகானும், அவரது குடும்பத்தினரும் போலி பாஸ்போர்ட்டில் துபாய் சென்று விட்டனர். அங்கு ரகசியமாக வாழ்ந்து வருகின்றனர் என்று கூறினான். 

நடிகை லைலாகான் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந� ��ததால் காஷ்மீர் போலீசார் பர்வேஸ் இக்பால் தக்கை மும்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோதுதான், நடிகை லைலாகானையும், அவரது குடும்பத்தினரையும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே சுட்டுக் கொன்று விட்டதாக தக் கூறினான். 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மும்பை, காஷ்மீர் போலீசார் தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தி வ� �ுகிறார்கள். இந்த நிலையில் நடிகை லைலாகானின் தந்தை நாதிர்படேல் மும்பை போலீசில் நேற்று முன்தினம் புதிய புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் அவர், எனது மகள் லைலா மற்றும் குடும்பத்தினரை கடத்திச் சென்றது பர்வேஸ் இக்பால் தக் மற்றும் அவனது கூட்டாளியான ஆசிப்ஷேக் இருவரும்தான். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். 


இதையடுத்து பர்வேஸ் இக்பால் தக்கிடம் போலீசார் மீண்டும் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது தக் கூறுகையில், லைலாகான் மற்றும் 5 பேரை மும்பையில் இருந்து 120 மைல் தொலைவில் உள்ள காட்டுக்குள் கடத்திச் சென்றதாகவும், அங்கு அவர்களை சுட்டுக் கொலை செய்து உடல்களை புதைத்து விட்டதாகவும் கூறினான். அவன் கொடுத்த இந்த தகவல் உண்மையானதுதானா � ��ன்பதை அறிய போலீசார் அந்த காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். தக் கூறிய இடத்தில் தோண்டி பார்க்க முடிவு செய்துள்ளனர். அங்கு நடிகை லைலாகான் உடல் கிடைத்தால்தான் கொலை பற்றிய ஒரு முடிவுக்கு வர முடியும் என்று போலீசார் கூறியுள்ளனர். 

இதற்கிடையே நடிகை லைலாகானின் கோடிக் கணக்கான சொத்துக்களை பறிக்கவே அவரையும், அவரது குடும்ப� �்தினரையும் தக் தன் கூட்டாளி ஷேக்குடன் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். 

நடிகை லைலாகானுக்கு மும்பையில் ஒஷிவராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு தவிர மீரா ரோட்டில் சொகுசு பங்களா உள்ளது. இவை தவிர நாசிக்கிலும் லைலாகானுக்கு பிரமாண்ட பங்களா உள்ளது. மேலும் லைலாகான் கோடிக்கணக்கி ல் நகைகள், பணம் வைத்திருந்தார். இதை தெரிந்து கொண்ட பர்வேஸ் இக்பால் தக் திட்டமிட்டு லைலாவை குடும்பத்துடன் தீர்த்துக் கட்டியுள்ளதாக கருதப்படுகிறது. 

நடிகை லைலாகான் கடத்தப்பட்டபோது ரூ.2 கோடி நகைகள் மற்றும் பணம் வைத்திருந்தாராம். அவற்றை தக் பறித்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது. லைலாகானின் காரும் தக்கிடம் இருந்து பறி முதல் செய்யப்பட்டுள்ளது. பர்வேஸ் இக்பாலிடம் முதல் கட்ட விசாரணைதான் முடிந்துள்ளது. நேற்று அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்திய மும்பை போலீசார் விசாரணை நடத்துவதற்காக மேலும் 7 நாள் காவலில் எடுத்துள்ளனர். எனவே அடுத்தடுத்த விசாரணைகளில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

லைலாகான� ��ன் தாய் சலீனாவை தீவிரவாதி பர்வேஸ் இக்பால் தக் மற்றும் கூட்டாளி ஆசிப்ஷேக் இருவரும் சேர்ந்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த கள்ளத் தொடர்பால் தான் லைலாகானும், அவரது குடும்பத்தினரும் கூண்டோடு பலியாக காரணமாகி விட்டது.





comments | | Read More...

இந்தியா அணு ஆயுதங்களைத் தயாரித்தது ஏன்?: அப்துல் கலாம்


இந்தியா அணு ஆயுத நாடானது சரியானதே. இந்தியாவைச் சுற்றியுள்ள பெரிய நாடுகள் அனைத்தும் அணு ஆயுதத்தை வைத்திருந்தபோது, இந்தியாவும் அதை உருவாக்க வேண்டியது அவசியம் ஆயிற்று. இதன்மூலம் தான் தெற்காசிய மண்டலத்தில் அதிகாரச் சமநிலையை உருவாக்க முடிந்தது என்று முன்னாள் ஜனாதிபதிபதி அப்துல் கலாம் கூறினார்.

இந்தியாவின் ஏவுகணை, ராக்கெட் மற்றும் அணு ஆயுதத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்ற விஞ்ஞானியான கலாம் 33-வது ஆசிய பசிபிக் ஒருங்கிணைந்த ஊரக மேம்பாடு தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்க வங்கதேசத் தலைநகர் டாக்கா வந்தார்.

அங்கு பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: இப்போது தெற்கு ஆசிய மண்டலத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என வலியுறுத்தி வரும் நீங்கள், இந்தியாவின் அணு ஆயுதம் மற்றும் தொலை தூர ஏவுகணைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகித்தீர்கள். அதற்காக இப்போது வருத்தப்படுகிறீர்களா?

கலாம்: இந்தியாவைச் சுற்றியுள்ள பெரிய நாடுகள் எல்லாம் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இந்நிலையில், அதிகாரச் சமநிலையை எட்டுவதற்கு நாமும் அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் வைத்திருப்பது அவசியமாக உள்ளது.

இந்தியா அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளை முதலில் தாக்குதலுக்குப் பயன்படுத்தாது. பிற நாடுகள் தாக்கினால்தான் அதைப் பயன்படுத்தும்.

கேள்வி: ஏவுகணைத் திட்டங்களுக்கு நாம் ஏராளமான நிதியை செலவிட்டுள்ளோம். அதை வறுமை ஒழிப்புக்காக செலவிட்டிருக்கலாமே?

கலாம்: அக்னி, பிருத்வி உள்ளிட்ட ஏவுகணைத் திட்டங்களில் மிகவும் குறைந்த தொகையைத்தான் இந்தியா செலவிட்டது. அதனால் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்குச் செலவிடப்பட வேண்டிய நி தியை ஆயுதம் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்ற கருத்து தவறானது என்றார்

மேலும் அவர் கூறுகையில், அடுத்த 10 ஆண்டுகளில் தெற்கு ஆசியப் பகுதியில் உள்ள நாடுகள் அனைத்தும் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணையும் என நம்புகிறேன். ஐரோப்பிய யூனியனைப் ப� �ன்று இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்புள்ளது. நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்த விரோதங்களை மறந்து ஐரோப்பிய நாடுகள் இணைந்து செயல்பட முடியும்போது, நம்மால் முடியாதா? என்றார்.

பின்னர் ஊரக மேம்பாட்டுக் கருத்தரங்கில் பேசிய கலாம், இந்தியாவும், வங்கதேசமும� � சணல் உற்பத்தியில் உலக அளவில் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன. செயற்கை இழைகளைக் கொண்டு தயாரிக்கும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக, இயற்கையாக விளையும் சணலைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.

வங்கதேசத்தின் குல்னா பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்த ஏராளமான வசதிகள் உள்ளன என்றார்.


comments | | Read More...

சிங்கள வீரர்களுக்கு பயிற்சி: விமானப்படை மையத்தில் போலீஸ் பாதுகாப்பு

தாம்பரம் இந்திய விமானப்படை தளத்தில் இலங்கையை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு அதிநவீன விமானபயிற்சி மற்றும் தொழில் நுட்பபயிற்சி அளிக்கப்படுகிறது. சார்க் அமைப்பில் � ��ள்ள நாடுகளின் ராணுவ வீரர்களுக்கு ஒப்பந்தப்படி இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தற்போது இலங்கையை சேர்ந்த 9 வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக கடந்த 30-ந்தேதி இங்கு வந்தனர். 

9 மாதங்கள் இவர்கள் பயிற்சி பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இலங்கை தமிழர்களுக்கு எதிராக செ யல்படும் இலங்கை ராணுவ வீரர்களுக்கு, தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சி அளிப்பதற்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். 

தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தே.மு.தி.க. தலைவர ் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இலங்கை வீரர்களை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் தலைவர்கள் கோரிக்கை விடு� ��்துள்ளனர். இலங்கை ராணுவ வீரர்களுக்கு தாம்பரத்தில் பயிற்சி அளிப்பதை கண்டித்து ம.தி.மு.க.வினர் அங்கு நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். 

நாம் தமிழர் கட்சியினர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து கட்சிகளும் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அங்கு பத� �்டமான சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக தாம்பரம் விமானப்படை பயிற்சி நிலையத்தில் தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 200-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இலங்கையில் விடுதலைபுலிகளுடன் போர் நடந்தபோத ும், தாம்பரத்தில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கோவையில் இலங்கை வீரர்கள் பயிற்சி பெற்ற போதும் எதிர்ப்பு காரணமாக வேறு மாநிலத்துக்கு அனுப்பப்பட்டனர். இப்போதும் தாம்பரத்தில் இலங்கை வீரர்கள் பயிற்சி பெற எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் இவர்களும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என் று எதிர்பார்க்கப்படுகிறது.




comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger